என் மலர்
இந்தியா

VIDEO: ஓடுபாதையில் இருந்து ஹேங்கருக்கு மாற்றப்பட்ட இங்கிலாந்தின் F35 போர் விமானம் - அடுத்தது என்ன?
- பொறியாளர்கள் குழு ஏர்பஸ் A400M அட்லஸ் விமானத்தில் பிரிட்டனில் இருந்து வந்துள்ளது.
- எதிரி ரேடார்களுக்குத் தெரியாத மிக ரகசிய ஸ்டெல்த் தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளது.
கேரளாவின் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் மூன்று வாரங்களாக தார் சாலை ஓடுபாதையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பிரிட்டிஷ் ராயல் கடற்படையின் அதிநவீன F-35B ஸ்டெல்த் போர் விமானம், இறுதியாக ஹேங்கருக்கு மாற்றப்பட்டது.
ஒரு டோவிங் வாகனத்தில் விமானம் ஹேங்கருக்கு இழுத்துச் செல்லப்பட்டது. சமீபத்தில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக போர் விமானம் திருவனநாதபுர விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. அப்போதிருந்து, பிரிட்டிஷ் தொழில்நுட்ப வல்லுநர்கள் அதை சரிசெய்ய முயற்சித்து வருகின்றனர்.
சமீபத்தில் மற்றொரு பொறியாளர்கள் குழு ஏர்பஸ் A400M அட்லஸ் விமானத்தில் பிரிட்டனில் இருந்து வந்துள்ளது. விமானத்தை இங்கு பழுதுபார்ப்பது சாத்தியமா அல்லது அதை பிரித்து C-17 குளோப்மாஸ்டர் ராணுவ போக்குவரத்து விமானத்தில் இங்கிலாந்த்து எடுத்துச் செல்ல வேண்டுமா என்பதை குழு முடிவு செய்யும்.
110 மில்லியன் டாலருக்கும் அதிகமான மதிப்புள்ள இந்த ஜெட் விமானம், எதிரி ரேடார்களுக்குத் தெரியாத மிக ரகசிய ஸ்டெல்த் தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளது. இந்த தொழில்நுட்பம் கசிந்தால், இராணுவ ரகசியங்கள் அம்பலமாகும் என்றும் ஆபத்து ஏற்படும் என்றும் நிபுணர்கள் நம்புகின்றனர்.