என் மலர்
நீங்கள் தேடியது "military exercise"
- தாக்குதல்களை முறியடிக்க வான் பாதுகாப்பு அமைப்புகளையும் ஈரான் நவீனப்படுத்தியுள்ளது.
- அணுசக்தி மற்றும் ராணுவக் கட்டமைப்புகளை பாதுகாப்பதில் முழு கவனம் செலுத்தி வருகிறது.
ஈரான் அமெரிக்கா இடையே அணுசக்தி ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தை ஓமன் மத்யஸ்தத்தில் நடந்து வருகிறது.
இதற்கிடையே நிபந்தனைகளை ஏற்காவிட்டால் ஈரான் மீது ராணுவ தாக்குதல் நடத்துவோம் என அமெரிக்க அதிபர் டிரம்ப் மிரட்டி வருகிறார்.
ஈரானை நோக்கி அமெரிக்க கடற்படை கப்பல் பிரிவு அனுப்பப்பட்டுள்ளது மத்திய கிழக்கில் பதற்றத்தை அதிகரித்துள்ளது.
இந்த சூழலில் ஈரான் மற்றும் ரஷியா ஆகிய இரு நாட்டு கடற்படைகளும் இணைந்து ஓமன் கடலில் கூட்டு ராணுவ பயிற்சியை தொடங்கியுள்ளன.

பிராந்திய நாடுகளுக்கு அமைதியின் செய்தியை வழங்குவதே இந்தப் பயிற்சியின் நோக்கம் என்று ஈரானிய அட்மிரல் ஹசன் மக்சூத்லு தெரிவித்துள்ளார்.
எண்ணெய் கப்பல்களின் பாதுகாப்பை உறுதி செய்தல், கடல்சார் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளுதல் மற்றும் ஒருதலைப்பட்சமான ராணுவ நடவடிக்கைகளை தடுத்தல் ஆகியவை இந்தப் பயிற்சியின் முக்கிய நோக்கங்கள் என்று கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையே தாக்குதல்களை எதிர்கொள்ள, ஈரான் தனது அணுசக்தி நிலையங்களின் பாதுகாப்பையும் பலப்படுத்தி வருகிறது.
தலைநகர் தெஹ்ரானில் இருந்து 30 கி.மீ தொலைவில் உள்ள பார்க்கின் ராணுவ மையத்தில், கான்கிரீட் சுவர்கள் எழுப்பப்பட்டும் பணிகள் நடக்கின்றன. நதான்ஸ் அணுமின் நிலையத்திற்கு அருகிலுள்ள மலைப்பாதை நுழைவாயில்கள் பலப்படுத்தப்பட்டு வருகின்றன.
அண்மையில் வெளியான செயற்கை கோள் புகைப்படங்கள் இதை உறுதிப்படுத்தி உள்ளன.

தாக்குதல்களை முறியடிக்க வான் பாதுகாப்பு அமைப்புகளையும் ஈரான் நவீனப்படுத்தியுள்ளது.
பார்க்கின் பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் இருந்த விமான எதிர்ப்புப் பீரங்கிகள் ஜூலை 2025 முதல் மீண்டும் செயல்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளன. கூடுதலாக இரண்டு இடங்களில் புதிய வான் பாதுகாப்புப் பிரிவுகள் நிறுத்தப்பட்டுள்ளன.
மொத்தத்தில் ஈரான் தனது அணுசக்தி மற்றும் ராணுவக் கட்டமைப்புகளை பாதுகாப்பதில் முழு கவனம் செலுத்தி வருகிறது.
- ஹெலிகாப்டரில் பயிற்சியின்போது 4 பேர் பணியில் இருந்தனர்.
- வலுவான நீரோட்டம் மற்றும் மோசமான வானிலையால் தேடல் குழு முயற்சிகள் தடைபட்டுள்ளன.
ஆஸ்திரேலியாவில் ராணுவ பயிற்சியில் ஈடுபட்ட ஹெலிகாப்டர் ஏற்பட்ட விபத்தில் மனிதர்களின் உடல் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
எம்ஆர்எச்-90 தைபான் என்கிற ஹெலிகாப்டரின் கடந்த ஜூலை மாதம் 28ம் தேதி அன்று பன்னாட்டு ராணுவப் பயிற்சியின்போது விட்சன்டே தீவுகளுக்கு அருகில் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது.
இந்த ஹெலிகாப்டரில் விமானக் குழுவை சேர்ந்த 4 பேர் பணியில் இருந்தனர். விபத்தில் சிக்கிய இவர்களை மீட்பு படை தேடி வந்தனர்.
இந்நிலையில், கடலுக்கு அடியில் மனித உடல் பாகங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து ராணுவத்தின் கூட்டு நடவடிக்கைகளின் தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் கிரெக் பில்டன் குயின்ஸ்லாந்தில் செய்தியாளர்களிடம் கூறுகையில்," விபத்தில் சிக்கி காணாமல்போன 4 பேரின் உடல் பாகங்கள் நீருக்கடியில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
தண்ணீர் மேற்பரப்பில் இருந்து சுமார் 40 மீட்டர் (130 அடி) கீழே ஹெலிகாப்டரின் பாகங்கள் உள்பட இருந்தன. ஹெலிகாப்டரின் பாகங்கள் கண்டுபிடிக்கப்படும் வரை மனித உடல் பாகங்கள் அடையாளம் காணப்பட வாய்ப்பில்லை. வலுவான நீரோட்டம் மற்றும் மோசமான வானிலையால் தேடல் குழு முயற்சிகள் தடைபட்டுள்ளன. இது அடுத்த வாரம் வரை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில், விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது, ஆனால் தேடுதல் குழுக்கள் ஹெலிகாப்டரின் கருப்பு பெட்டியை இன்னும் கண்டுபிடிக்கவில்லை" என்றார்.






