search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "military exercise"

    • ஹெலிகாப்டரில் பயிற்சியின்போது 4 பேர் பணியில் இருந்தனர்.
    • வலுவான நீரோட்டம் மற்றும் மோசமான வானிலையால் தேடல் குழு முயற்சிகள் தடைபட்டுள்ளன.

    ஆஸ்திரேலியாவில் ராணுவ பயிற்சியில் ஈடுபட்ட ஹெலிகாப்டர் ஏற்பட்ட விபத்தில் மனிதர்களின் உடல் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

    எம்ஆர்எச்-90 தைபான் என்கிற ஹெலிகாப்டரின் கடந்த ஜூலை மாதம் 28ம் தேதி அன்று பன்னாட்டு ராணுவப் பயிற்சியின்போது விட்சன்டே தீவுகளுக்கு அருகில் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது.

    இந்த ஹெலிகாப்டரில் விமானக் குழுவை சேர்ந்த 4 பேர் பணியில் இருந்தனர். விபத்தில் சிக்கிய இவர்களை மீட்பு படை தேடி வந்தனர்.

    இந்நிலையில், கடலுக்கு அடியில் மனித உடல் பாகங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

    இதுகுறித்து ராணுவத்தின் கூட்டு நடவடிக்கைகளின் தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் கிரெக் பில்டன் குயின்ஸ்லாந்தில் செய்தியாளர்களிடம் கூறுகையில்," விபத்தில் சிக்கி காணாமல்போன 4 பேரின் உடல் பாகங்கள் நீருக்கடியில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

    தண்ணீர் மேற்பரப்பில் இருந்து சுமார் 40 மீட்டர் (130 அடி) கீழே ஹெலிகாப்டரின் பாகங்கள் உள்பட இருந்தன. ஹெலிகாப்டரின் பாகங்கள் கண்டுபிடிக்கப்படும் வரை மனித உடல் பாகங்கள் அடையாளம் காணப்பட வாய்ப்பில்லை. வலுவான நீரோட்டம் மற்றும் மோசமான வானிலையால் தேடல் குழு முயற்சிகள் தடைபட்டுள்ளன. இது அடுத்த வாரம் வரை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதற்கிடையில், விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது, ஆனால் தேடுதல் குழுக்கள் ஹெலிகாப்டரின் கருப்பு பெட்டியை இன்னும் கண்டுபிடிக்கவில்லை" என்றார்.

    இந்தியா- நேபாளம் ஆகிய நாடுகள் இணைந்து இரண்டு வாரம் ராணுவ பயிற்சியில் ஈடுபட உள்ளதாக இந்திய ராணுவம் இன்று தெரிவித்துள்ளது. #MilitaryExercise
    புது டெல்லி :

    இந்தியா மற்றும் நேபாளம் நாட்டின் ராணுவத்தினர் அடுத்த வாரம் புதன்கிழமை முதல் கூட்டு ராணுவ பயிற்சியில் பங்கேற்க உள்ளனர். பயங்கரவாத தடுப்பு முயற்சியை இருநாடுகளும் தீவிரப்படுத்துவதை நோக்கமாக வைத்து உத்தரகாண்ட் மாநிலம் பிதோரகார் பகுதில் இந்த கூட்டு ராணுவ பயிற்சி நடைபெற உள்ளது.

    “சூர்ய கிரண்” என பெயரிடப்பட்டுள்ள இந்த ராணுவ பயிற்சி மூலம் இருநாடுகளின் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் அதிகரிக்க முடியும். இதனால், மலைப்பிரதேசங்களில் நடைபெறும் பயங்கரவாத செயல்களை கட்டுக்குள் வைக்க முடியும். இரண்டு வாரம் நடைபெற உள்ள இந்த பயங்கரவாத தடுப்பு ராணுவ பயிற்சியின் மூலம் இருநாட்டு ராணுவ வீரர்களும் பெரும் அனுபவங்களை பரஸ்பரம் ஒருவருக்கு ஒருவர் பரிமாறிக்கொள்ள முடியும் என இந்திய ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது

    இந்த ராணுவ பயிற்சியில் இந்தியா மற்றும் நேபாளம் சார்பில் தலா 300 ராணுவ வீரர்கள் பங்கேற்க உள்ளனர் என்பது. குறிப்பிடத்தக்கது. #MilitaryExercise
    ×