என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "United States"

    • உலகின் மிகப்பெரிய பருப்பு உற்பத்தியாளர் என்பதால், இதற்கு வரி குறைப்பது இந்திய விவசாயிகளை பாதிக்கும் என்ற அச்சம் நிலவியது.
    • இந்தியா தனது டிஜிட்டல் சேவை வரிகளை நீக்கும் என்று அமெரிக்கா முதலில் கூறியிருந்தது.

    கடந்த வாரம் அமெரிக்கா - இந்தியா உடன் வர்த்தக ஒப்பந்தம் ஏற்பட்டது. இந்த ஒப்பந்தத்தின் அதிகாரப்பூர்வத் தகவலறிக்கையை அமெரிக்கா நேற்று வெளியிட்டது. இதில் எட்டப்பட்ட வர்த்தக ஒப்பந்தத்தில் சில திருத்தங்களை அமெரிக்கா செய்துள்ளது.

    முந்தைய அறிக்கையில், குறிப்பிட்ட பருப்பு வகைகளுக்கு இந்தியா இறக்குமதி வரியைக் குறைக்கும் என்று கூறப்பட்டிருந்தது. ஆனால், புதிய அறிக்கையில் இந்தப் பகுதி முழுமையாக நீக்கப்பட்டுள்ளது.

    இந்தியா உலகின் மிகப்பெரிய பருப்பு உற்பத்தியாளர் என்பதால், இதற்கு வரி குறைப்பது இந்திய விவசாயிகளை பாதிக்கும் என்ற அச்சம் நிலவியது. தற்போது திருத்தப்பட்ட அறிக்கை மூலம் அந்த அச்சம் விலகி உள்ளது.

    முந்தைய அறிக்கையில் விவசாயப் பொருட்கள் என்ற சொல் பல இடங்களில் இடம்பெற்றிருந்தது. தற்போது அந்த வார்த்தைகள் நீக்கப்பட்டு, தொழில்துறை பொருட்கள் மற்றும் உணவுப் பொருட்கள் என்று மாற்றப்பட்டுள்ளன.

    இந்தியா 500 பில்லியன் டாலர் மதிப்பிலான அமெரிக்கப் பொருட்களை வாங்க உறுதி அளித்துள்ளது என்று முதலில் கூறப்பட்டிருந்தது. தற்போது அது இந்தியா வாங்க விரும்புகிறது அல்லது உத்தேசித்துள்ளது என மாற்றப்பட்டுள்ளது. இது இந்தியாவின் மீதான கட்டாயத்தை ஓரளவு குறைக்கிறது.

    இந்தியா தனது டிஜிட்டல் சேவை வரிகளை நீக்கும் என்று அமெரிக்கா முதலில் கூறியிருந்தது. ஆனால், புதிய அறிக்கையில் அந்த உறுதிமொழி நீக்கப்பட்டு, டிஜிட்டல் வர்த்தக விதிகள் குறித்து இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தும் என்று மட்டும் மாற்றப்பட்டுள்ளது.

    இந்த இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் வரும் மார்ச் மாத நடுப்பகுதியில் அதிகாரப்பூர்வமாக கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    முன்னதாக பருப்பு வகைகள் மற்றும் விவசாயப் பொருட்களுக்கு வரி குறைப்பது இந்திய விவசாயிகளுக்குச் செய்யப்படும் துரோகம் என்றும் ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்க மாட்டோம் என்று அமெரிக்காவிடம் இந்தியா ஒப்புக்கொண்டது நாட்டின் இறையாண்மையைப் பாதிக்கும் என்றும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி இருந்தன.    

    • வெனிசுலாவில் பணி முடிந்தது போல் ஈரானிலும் விரைவாகச் செயல்பட அமெரிக்க ராணுவம் தயாராக உள்ளது.
    • "ஆபிரகாம் லிங்கன்" என்ற பெயர் கொண்ட பிரம்மாண்ட விமானம் தாங்கிப் போர்க்கப்பல் தலைமையில் நகர்கிறது.

    ஈரான் அரசு அணுசக்தி விவகாரத்தில் புதிய ஒப்பந்தத்திற்கு உடன்படாவிட்டால், மிகக் கடுமையான ராணுவத் தாக்குதலைச் சந்திக்க நேரிடும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.

    இதுதொடர்பாக டிரம்ப் தனது ட்ரூத் சோசியல் வலைதள பதிவில், "வெனிசுலாவில் பணி முடிந்தது போல் ஈரானிலும் விரைவாகச் செயல்பட அமெரிக்க ராணுவம் தயாராக உள்ளது. 

    நேரம் கடந்து கொண்டிருக்கிறது. அணு ஆயுதங்களைத் தவிர்த்து, அனைவருக்கும் நன்மை பயக்கும் நியாயமான ஒப்பந்தத்திற்கு ஈரான் வர வேண்டும். இல்லையெனில் அடுத்த தாக்குதல் மிகவும் மோசமானதாக இருக்கும்" என்று தெரிவித்துள்ளார்.

    வெனிசுலாவில் இந்த மாத தொடக்கத்தில் அந்நாட்டு அதிபர் மதுரோவை கைது செய்ய அமெரிக்கா நடத்திய ராணுவ தாக்குதலில் ஈடுபட்டதை விட பெரிய அளவிலான அமெரிக்க கடற்படை பிரிவான அர்மடா,  தற்போது ஈரான் நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.

    "ஆபிரகாம் லிங்கன்" என்ற பெயர் கொண்ட பிரம்மாண்ட விமானம் தாங்கிப் போர்க்கப்பல் தலைமையிலான இந்தக் கடற்படை, மிகுந்த வலிமையுடனும் வேகத்துடனும் ஈரானை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாக அவர் கூறியுள்ளார்.

    மேலும், கடந்த மாதம் ஏற்கனவே ஈரான் மீது அமெரிக்கா நடத்திய 'ஆபரேஷன் மிட்நைட் ஹேமர்' (O மூலம் ஏற்பட்ட அழிவையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.  

    • அதிக மக்கள் தொகை கொண்ட மத்திய அட்லாண்டிக் மற்றும் வடகிழக்கு மாகாணங்களுக்கு நகர்ந்து நாடு முழுவதும் ஒரு உறைபனியை ஏற்படுத்தும்.
    • உறைபனி டெக்சாஸ் முதல் நியூ இங்கிலாந்து வரை 3200 கிலோ மீட்டர் தூரத்துக்கு மேல் பரவியிருக்கும்.

    அமெரிக்காவில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. அந்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடுமையான பனிப்புயல் தாக்கி வருகிறது.

    வடமேற்கு டெக்சாஸ் மற்றும் ஓக்லஹோமா நகரில் கடும் பனிப்பொழிவு தொடங்கி உள்ளது. இதற்கிடையே ஓக்லஹோமாவில் இருந்து வடகிழக்கு வரை கடும் பனிப்பொழிவு இருக் கும் என்றும் திங்கட்கிழமை வரை சில இடங்களில் ஒரு அடிக்கு மேல் பனிப்பொழிவு ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

    மேலும் இந்த பனிப்புயல் பல நாட்களுக்கு நீடிக்கும் என்றும், அதிக மக்கள் தொகை கொண்ட மத்திய அட்லாண்டிக் மற்றும் வடகிழக்கு மாகாணங்களுக்கு நகர்ந்து நாடு முழுவதும் ஒரு உறைபனியை ஏற்படுத்தும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இந்தப் பனிப்புயலால் ஏற்படும் பனி மற்றும் உறைபனி டெக்சாஸ் முதல் நியூ இங்கிலாந்து வரை 3200 கிலோ மீட்டர் தூரத்துக்கு மேல் பரவியிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதையடுத்து 18 மாகாணங்களில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டு உள்ளது. பனிப்புயல் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.

    பனிப்புயல் எச்சரிக்கையை அடுத்து மக்கள் உணவு, பால், முட்டை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வாங்கி குவித்தனர். இதனால் பல கடைகளில் பொருட்கள் விற்று தீர்ந்து அலமாரிகள் காலியாக இருந்தன. 

    பனிப்புயலால் நீண்ட நேர மின்வெட்டு, மரங்க ளுக்குப் பரவலான சேதம் மற்றும் மிகவும் ஆபத்தான அல்லது பயணிக்க முடியாத சாலைப் போக்குவரத்து நிலைமைகள் ஏற்பட வாய்ப்புள்ளது என்று மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

    அமெரிக்கா முழுவதும் பனிப்பொழிவால் விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 1800-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

    • அதிபர் மதுரோ கைது செய்யப்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்புதான், சீனாவின் சிறப்புத் தூதரை அவர் சந்தித்துப் பேசினார்.
    • வெனிசுலாவின் எண்ணெய் ஏற்றுமதியில் சீனா தோராயமாக 76–80% வாங்குகிறது.

    அமெரிக்க படைகளால் வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ கைது செய்யப்பட்டதற்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

    சீன வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், வெனிசுலா மீதான அமெரிக்காவின் தாக்குதலைக் கண்டு சீனா மிகவும் அதிர்ச்சியடைந்துள்ளது. இதனை கடுமையாக கண்டிக்கிறோம்.

    ஒரு இறையாண்மை கொண்ட நாட்டின் மீது வெளிப்படையாக ராணுவத்தைப் பயன்படுத்துவதும், அந்த நாட்டு அதிபரை அராஜகமாகப் பிடிப்பதும் சர்வதேச சட்டங்களை படுமோசமாக மீறும் செயல்.

    அமெரிக்காவின் இந்தச் செயல் ஐநா சபையின் அடிப்படை விதிகள் மற்றும் கொள்கைகளை மீறுவதாக உள்ளது.

    மற்ற நாடுகளின் பாதுகாப்பையும், இறையாண்மையையும் அமெரிக்கா மதிப்பதில்லை என்பதையே இது காட்டுகிறது.

    அமெரிக்காவின் இத்தகையநடவடிக்கைகள், லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் பிராந்தியத்தின் அமைதிக்கும் பாதுகாப்புக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது என்று சீனா சாடியுள்ளது.

    அதிபர் மதுரோ கைது செய்யப்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்புதான், சீனாவின் சிறப்புத் தூதரை அவர் சந்தித்துப் பேசினார். அந்தச் சந்திப்பில் சீனா-வெனிசுலா இடையிலான உறவு குறித்து விவாதிக்கப்பட்டது.

    இந்தச் சூழலில் அமெரிக்காவின் இந்த அதிரடித் தாக்குதல் சீனாவிற்குப் பெரும் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.

    எண்ணெய்:

    உலகின் மிகப்பெரிய எண்ணெய் இருப்பு வெனிசுலாவில் உள்ளது. இது தோராயமாக 303 பில்லியன் பீப்பாய்கள் எண்ணெயைக் கொண்டுள்ளது. இது சவுதி அரேபியா மற்றும் அமெரிக்காவை விட அதிகம்.

    வெனிசுலாவின் எண்ணெய் ஏற்றுமதியில் சீனா தோராயமாக 76–80% வாங்குகிறது. நவம்பர் 2025 இல், சீனா ஒரு நாளைக்கு வெனிசுலாவிலிருந்து 613,000 பீப்பாய்கள் கச்சா எண்ணெயை வாங்கியது.

    வெனிசுலாவின் கனரக கச்சா எண்ணெய் சீன சுத்திகரிப்பு நிலையங்களுக்கு மிகவும் மதிப்புமிக்கது மற்றும் குறைந்த விலையில் கிடைக்கிறது.

    வெனிசுலா சீனாவிடம் பல ஆண்டுகளாக வாங்கிய சுமார் 60 பில்லியன் டாலர் கடனை செலுத்த வேண்டியுள்ளது. இந்தக் கடன் எண்ணெய்க்கு ஈடாக திருப்பிச் செலுத்தப்படுகிறது. எனவே வெனிசுலாவின் ஸ்திரத்தன்மை சீனாவிற்கு மிகவும் முக்கியமானது.

    இனி வெனிசுலாவின் எண்ணெய் இருப்பை அமெரிக்காவே நிர்வகிக்கும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளது கவனிக்கத்தக்கது.  

    • இந்த ராணுவ நடவடிக்கையில் ஒரு அமெரிக்க வீரர் கூட கொல்லப்படவில்லை.
    • அவர்கள் எங்களது வலிமையைக் கண்டு பயந்துவிட்டார்கள்.

    வெனிசுலாவில் இருந்து அமெரிக்காவுக்கு போதை பொருள் கடத்தப்படுவதாகவும், இதற்கு வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ உடந்தையாக இருப்பதாகவும் அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம் சாட்டி வந்தார்.

    இந்நிலையில் இன்று (ஜனவரி 3) அமெரிக்க ராணுவத்தினர் வெனிசுலாவின் தலைநகரான கராகஸ் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பெரிய அளவிலான வான்வழித் தாக்குதல் நடத்தினர்.

    கராகஸில் உள்ள முக்கிய ராணுவ தளமான பியூர்டே தியுனா, லா கார்லோட்டா விமான தளம் மற்றும் லா குவைரா துறைமுகம் உள்ளிட்ட பல ராணுவ மற்றும் உள்கட்டமைப்பு இடங்கள் தாக்கப்பட்டன.

    இதன்பின் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வெளியிட்ட அறிக்கையில், மதுரோ மற்றும் அவரின் மனைவி அமெரிக்க படையினரால் சிறைபிடிக்கப்ட்டு நாடுகடத்தப்பட்டதாக அறிவித்தார்.

    அமெரிக்காவில் மதுராவுக்கு எதிராக எதிராக போதை பொருள் பயங்கரவாத சதி திட்ட வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே இருவரும் அமேரிக்காவுக்கு நாடு கடத்தப்பட்டு அங்கு அவர்கள் நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்று தெரிகிறது.

    அமெரிக்காவின் இந்த அடாவடி நடவடிக்கையால் சர்வதேச அரசியலில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. ரஷியா, ஈரான் உள்ளிட்ட நாடுகள் இந்த நடவடிக்கையை கண்டித்துள்ளன.

    இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து டிரம்ப் Fox news சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் இனி வெனிசுலாவின் எதிர்காலத்தை அமெரிக்காவே தீர்மானிக்கும், அங்குள்ள எண்ணெய் இருப்பை அமெரிக்க நிறுவனங்கள் நிர்வகிக்கும், அங்கு அமெரிக்காவுக்கு சாதகமான அரசு அமையும் வரை அமெரிக்க ராணுவம் அங்கு இருக்கும் என்று தெரிவித்தார்.

    மேலும் இந்த தாக்குதல் குறித்து பேசிய அவர், "இந்த ராணுவ நடவடிக்கையில் ஒரு அமெரிக்க வீரர் கூட கொல்லப்படவில்லை. யாரும் காயமடையவில்லை. இது ஒரு மிகப்பெரிய வெற்றி.

    இந்த முழு நடவடிக்கையும் ஒரு டிவி ஷோ போல இருந்தது. அவ்வளவு துல்லியமாக இது நடந்தது.

    நாங்கள் இந்தத் திட்டத்தை மிகச் சிறப்பாகச் செயல்படுத்தினோம். நான் இங்கே அமர்ந்து கொண்டு இவை அனைத்தையும் ஒரு திரையில் பார்த்துக் கொண்டிருந்தேன். மிகவும் அற்புதமாக இருந்தது.

    அங்கே பெரிய அளவில் எதிர்ப்பு எதுவும் இருக்கவில்லை. அவர்கள் எங்களது வலிமையைக் கண்டு பயந்துவிட்டார்கள். எந்த ஒரு உயிரிழப்பும் இன்றி அந்த சர்வாதிகாரியை நாங்கள் பிடித்துவிட்டோம்.

    இது அமெரிக்க ராணுவ வரலாற்றில் ஒரு மிகச்சிறந்த தருணம். நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று நினைத்தோமோ, அதை மிகச் சரியாகச் செய்து முடித்துவிட்டோம்" என்று தெரிவித்தார்.   

    • நாங்கள் எங்களது சொத்துக்களைத் திரும்பப் பெறுகிறோம். மதுரோ தனது குற்றங்களுக்குப் பதில் சொல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது.
    • எங்களது மேற்பார்வையில் அங்கே ஜனநாயகம் நிலைநாட்டப்படும்.

    வெனிசுலாவில் இருந்து அமெரிக்காவுக்கு போதை பொருள் கடத்தப்படுவதாகவும், இதற்கு வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ உடந்தையாக இருப்பதாகவும் அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம் சாட்டி வந்தார்.

    இந்நிலையில் இன்று (ஜனவரி 3) அமெரிக்க ராணுவத்தினர் வெனிசுலாவின் தலைநகரான கராகஸ் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பெரிய அளவிலான வான்வழித் தாக்குதல் நடத்தினர்.

    கராகஸில் உள்ள முக்கிய ராணுவ தளமான பியூர்டே தியுனா, லா கார்லோட்டா விமான தளம் மற்றும் லா குவைரா துறைமுகம் உள்ளிட்ட பல ராணுவ மற்றும் உள்கட்டமைப்பு இடங்கள் தாக்கப்பட்டன.

    இதன்பின் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வெளியிட்ட அறிக்கையில், மதுரோ மற்றும் அவரின் மனைவி அமெரிக்க படையினரால் சிறைபிடிக்கப்ட்டு நாடுகடத்தப்பட்டதாக அறிவித்தார்.

    அமெரிக்காவில்  மதுராவுக்கு எதிராக எதிராக போதை பொருள் பயங்கரவாத சதி திட்ட வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே இருவரும் அமேரிக்காவுக்கு நாடு கடத்தப்பட்டு அங்கு அவர்கள் நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்று தெரிகிறது. 

    அமெரிக்காவின் இந்த அடாவடி நடவடிக்கையால் சர்வதேச அரசியலில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. ரஷியா, ஈரான் உள்ளிட்ட நாடுகள் இந்த நடவடிக்கையை கண்டித்துள்ளன. 

    இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து டிரம்ப் Fox news சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.

    அதில் அவர் கூறியதாவது,    

    "வெனிசுலா இப்போது சுதந்திரமான நாடு. ஒரு பயங்கரமான சர்வாதிகாரி பிடிபட்டுள்ளார். மதுரோவும் அவருடைய மனைவியும் இப்போது ஒரு கப்பலில் நியூயார்க் நோக்கி வந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் அமெரிக்காவின் பிடியில் உள்ளனர்.  

    வெனிசுலாவில் உள்ள எண்ணெய் விவகாரத்தில் அமெரிக்கா இனி மிகவும் வலுவாக ஈடுபடும். அந்த எண்ணெய் வளங்கள் உண்மையில் எங்களுடையவை. அமெரிக்க நிறுவனங்கள் அவற்றை உருவாக்கின, ஆனால் அந்த நிறுவனங்கள் அங்கிருந்து விரட்டியடிக்கப்பட்டன.

    அவர்கள் எங்களது எண்ணெய் உரிமைகளைப் பறித்தார்கள். நாம் அங்கிருந்து வெளியேறும்போது அந்த எண்ணெயை அப்படியே விட்டு வந்திருக்கக்கூடாது. நாமே அதை எடுத்திருக்க வேண்டும்.

    இப்போது நாம் அந்த எண்ணெயை மீட்கப்போகிறோம். வெனிசுலாவிடம் உலகின் மிகப்பெரிய எண்ணெய் இருப்பு உள்ளது. இனி அதை அமெரிக்க எண்ணெய் நிறுவனங்கள் நிர்வகிக்கும்.

    இதன் மூலம் நமது நாட்டு மக்களுக்குக் குறைந்த விலையில் பெட்ரோல் கிடைக்கும், மேலும் வெனிசுலா மக்களும் வறுமையிலிருந்து மீட்கப்படுவார்கள்.

    இது ஒரு புதிய விடியல். நாங்கள் எங்களது சொத்துக்களைத் திரும்பப் பெறுகிறோம். மதுரோ தனது குற்றங்களுக்குப் பதில் சொல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது. வெனிசுலா மக்கள் இனி நிம்மதியாக வாழலாம்.

    இனி வெனிசுலாவின் எதிர்காலத்தை அமெரிக்காதான் தீர்மானிக்கும். அங்கு யார் அதிகாரத்தில் இருக்க வேண்டும், அந்த நாடு எப்படி இயங்க வேண்டும் என்பதை நாங்களே முடிவு செய்வோம்.

    வெனிசுலாவில் ஒரு இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கான பணிகளை நாங்கள் ஏற்கனவே தொடங்கிவிட்டோம். அது அமெரிக்காவிற்கு உண்மையாக இருக்கும் ஒரு அரசாங்கமாக அமையும்.

    அமெரிக்காவிற்கு எதிரான சக்திகள் அல்லது நமது கொள்கைகளுக்குப் பொருந்தாத நபர்கள் புதிய ஆட்சியில் இருக்க மாட்டார்கள். வெனிசுலா இனி ஒருபோதும் அமெரிக்காவின் எதிரியாக இருக்க முடியாது.

    எங்களது மேற்பார்வையில் அங்கே ஜனநாயகம் நிலைநாட்டப்படும். ஆனால், அதற்கு முன்னதாக அந்த நாட்டின் பொருளாதாரம் மற்றும் எண்ணெய் வளங்களைச் சீரமைக்க வேண்டியது அவசியம். அதை அமெரிக்க நிபுணர்கள் செய்வார்கள்.

    ஒரு நிலையான சூழல் ஏற்படும் வரை அமெரிக்க ராணுவம் அங்கேயே தங்கியிருக்கும். வெனிசுலாவை ஒரு பாதுகாப்பான மற்றும் அமெரிக்காவிற்குச் சாதகமான நாடாக மாற்றுவதே எங்களது இலக்கு" என்று தெரிவித்தார்.   

    20-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்தே, அமெரிக்காவின் பெரிய எண்ணெய் நிறுவனங்கள்தான் வெனிசுலாவின் எண்ணெய் கிணறுகளை உருவாக்கி, சுத்திகரிப்பு நிலையங்களைக் கட்டி, தொழிலை நடத்தி வந்தன.

    2007ல் அப்போதைய அதிபர் ஹியூகோ சாவேஸ், அமெரிக்க நிறுவனங்களின் வசமிருந்த எண்ணெய் கிணறுகளை அரசுடைமை ஆக்கினார்.

    வெனிசுலாவின் எண்ணெய் வெனிசுலாவுக்கே சொந்தம், அமெரிக்காவிற்கு இதில் பங்கு இல்லை என்று கூறி அமெரிக்க நிறுவனங்களை வெளியேற்றினார்.  இந்நிலையில் அமெரிக்கா மீண்டும் தனது வல்லதிகாலத்தை வெனிசுலாவில் நிறுவும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.  

    • வெனிசுலாவின் மீது அமெரிக்கா நடத்தும் அப்பட்டமான ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பு.
    • உலக அமைதிக்கு அச்சுறுத்தல் விடுக்கும் ஏகாதிபத்திய நடவடிக்கைகளை எதிர்த்து உலக சமூகம் நிற்க வேண்டும்.

    வெனிசுலாவில் இருந்து அமெரிக்காவுக்கு போதை பொருள் கடத்தப்படுவதாகவும், இதற்கு வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ உடந்தையாக இருப்பதாகவும் அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம் சாட்டி வந்தார்.

    இதையடுத்து வெனிசுலா படகுகள் மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல் நடத்தி வந்தது. வெனிசுலாவை சுற்றி கரீபியன் கடல்பகுதியில் அமெரிக்கா தனது படைகளை குவித்தது.

    வெனிசுலா அதிபர் பதவியில் இருந்து மதுரோ வெளியேற வேண்டும் என்று டிரம்ப் நேரடியாக எச்சரிக்கை விடுத்தார்.

    இந்நிலையில் இன்று (ஜனவரி 3) அமெரிக்க ராணுவத்தினர் வெனிசுலாவின் தலைநகரான கராகஸ் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பெரிய அளவிலான வான்வழித் தாக்குதல் நடத்தினர்.

    கராகஸில் உள்ள முக்கிய ராணுவ தளமான பியூர்டே தியுனா, லா கார்லோட்டா விமான தளம் மற்றும் லா குவைரா துறைமுகம் உள்ளிட்ட பல ராணுவ மற்றும் உள்கட்டமைப்பு இடங்கள் தாக்கப்பட்டன.

    இதன்பின், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெளியிட்ட அறிவிப்பில், "அமெரிக்கா, வெனிசுலா மற்றும் அதன் தலைவர் அதிபர் நிக்கோலஸ் மதுரோ மீது ஒரு பெரிய அளவிலான தாக்குதலை வெற்றிகரமாக நடத்தியுள்ளது.

    அதிபர் மதுரோவும் அவரது மனைவியும் கைது செய்யப்பட்டு, நாட்டிலிருந்து வெளியே அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கை அமெரிக்க சட்ட அமலாக்கத் துறையுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டது" என்று தெரிவித்தார்.

    மதுரோ மீது அமெரிக்காவில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் குற்றவியல் வழக்குகள் உள்ளதால் அவர் விசாரணைக்கு உட்படுத்தப்படுவார் என்று தெரிகிறது.

    இந்த நிலையில் வெனிசுலா மீதான அமெரிக்காவின் தாக்குதலுக்கு கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    பினராயி விஜயன் தனது எக்ஸ் பக்கத்தில், "வெனிசுலாவின் மீது அமெரிக்கா நடத்தும் அப்பட்டமான ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பை வன்மையாகக் கண்டிக்கிறோம். உலக அமைதிக்கு அச்சுறுத்தல் விடுக்கும் ஏகாதிபத்திய நடவடிக்கைகளை எதிர்த்து உலக சமூகம் நிற்க வேண்டும்.

    இது ஒரு முரட்டு நாட்டின் கொடூரமான செயல்பாட்டை வெளிப்படுத்துகிறது. தனது சூழ்ச்சித் திட்டங்களைத் திணிப்பதற்காக, உலக தென்பகுதியில் வெளிப்படையான விரோதத்தைத் தூண்டிவிடுகிறது. இது ஒரு பயங்கரவாதச் செயலும் கூட. இதுபோன்ற தாக்குதல்களையும் ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டங்களையும் எதிர்த்துப் போராடிய நீண்ட பாரம்பரியம் கொண்ட ஒரு கண்டமான லத்தீன் அமெரிக்காவின் அமைதிக்கு அச்சுறுத்தல் விடுக்கிறது" எனக் குறிப்பிட்டுள்ளார்.

    • எங்களிடம் அங்கே நிறைய எண்ணெய் இருந்தது. அவர்கள் எங்கள் நிறுவனங்களை அங்கிருந்து விரட்டியடித்தார்கள்.
    • இது வெறும் எச்சரிக்கை மட்டுமல்ல, நாங்கள் சொன்னதைச் செய்வோம்.

    வெனிசுலாவில் இருந்து அமெரிக்காவுக்கு போதை பொருள் கடத்தப்படுவதாகவும், இதற்கு வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ உடந்தையாக இருப்பதாகவும் அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம் சாட்டி வந்தார்.

    இந்நிலையில் இன்று (ஜனவரி 3) அமெரிக்க ராணுவத்தினர் வெனிசுலாவின் தலைநகரான கராகஸ் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பெரிய அளவிலான வான்வழித் தாக்குதல் நடத்தினர்.

    கராகஸில் உள்ள முக்கிய ராணுவ தளமான பியூர்டே தியுனா, லா கார்லோட்டா விமான தளம் மற்றும் லா குவைரா துறைமுகம் உள்ளிட்ட பல ராணுவ மற்றும் உள்கட்டமைப்பு இடங்கள் தாக்கப்பட்டன.

    இதன்பின் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வெளியிட்ட அறிக்கையில், மதுரோ மற்றும் அவரின் மனைவி அமெரிக்க படையினரால் சிறைபிடிக்கப்ட்டு நாடுகடத்தப்பட்டதாக அறிவித்தார்.

    அமெரிக்காவின் இந்த அடாவடி நடவடிக்கையால் சர்வதேச அரசியலில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இது வெனிசுலாவின் எண்ணெய் வளத்தின் மீது ஆதிக்கம் செலுத்த அமெரிக்காவின் நடவடிக்கை என்றும் கருத்து நிலவுகிறது.

    20-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்தே, அமெரிக்காவின் பெரிய எண்ணெய் நிறுவனங்கள்தான் வெனிசுலாவின் எண்ணெய் கிணறுகளை உருவாக்கி, சுத்திகரிப்பு நிலையங்களைக் கட்டி, தொழிலை நடத்தி வந்தன.

    2007ல் அப்போதைய அதிபர் ஹியூகோ சாவேஸ், அமெரிக்க நிறுவனங்களின் வசமிருந்த எண்ணெய் கிணறுகளை அரசுடைமை ஆக்கினார். வெனிசுலாவின் எண்ணெய் வெனிசுலாவுக்கே சொந்தம், அமெரிக்காவிற்கு இதில் பங்கு இல்லை என்று கூறி அமெரிக்க நிறுவனங்களை வெளியேற்றினார்.

    இந்நிலையில் வெனிசுலா எண்ணெய் வளங்கள் குறித்து டிரம்ப்  கடந்த மாதம் பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.

    அந்த வீடியோவில் பேசும் டிரம்ப், " வெனிசுலா ஒரு அழகான நாடு. அது மிகவும் வளமான நாடு. ஆனால், இப்போது அது ஒரு தவறான நபரால் (நிக்கோலஸ் மதுரோவால்) ஆளப்படுகிறது. அவர் அந்த நாட்டைச் சீரழித்துக்கொண்டிருக்கிறார்.

    அவர்கள் எங்கள்(அமெரிக்க நிறுவனங்களின்) எண்ணெய் உரிமைகளைப் பறித்தார்கள். எங்களிடம் அங்கே நிறைய எண்ணெய் இருந்தது. அவர்கள் எங்கள் நிறுவனங்களை அங்கிருந்து விரட்டியடித்தார்கள்.

    நாம் அங்கே எதையும் விட்டு வந்திருக்கக் கூடாது, அந்த எண்ணெயை நாமே எடுத்திருக்க வேண்டும். நாங்கள் அவற்றை இப்போது திரும்பப் பெற விரும்புகிறோம். இது வெறும் எச்சரிக்கை மட்டுமல்ல, நாங்கள் சொன்னதைச் செய்வோம்." என்று டிரம்ப் பேசியுள்ளார். 

    • மதுரோ மற்றும் அவரது மனைவி சிறை பிடிக்கப்பட்டதாக டிரம்ப் அறிவித்தார்.
    • வெனிசுலாவில் தற்போது தேசிய அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

    வெனிசுலாவில் இருந்து அமெரிக்காவுக்கு போதை பொருள் கடத்தப்படுவதாகவும், இதற்கு வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ உடந்தையாக இருப்பதாகவும் அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம் சாட்டி வந்தார்.

    இதையடுத்து வெனிசுலா படகுகள் மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல் நடத்தி வந்தது. வெனிசுலாவை சுற்றி கரீபியன் கடல்பகுதியில் அமெரிக்கா தனது படைகளை குவித்தது.

    வெனிசுலா அதிபர் பதவியில் இருந்து மதுரோ வெளியேற வேண்டும் என்று டிரம்ப் நேரடியாக எச்சரிக்கை விடுத்தார்.

    இந்நிலையில் இன்று (ஜனவரி 3) அமெரிக்க ராணுவத்தினர் வெனிசுலாவின் தலைநகரான கராகஸ் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பெரிய அளவிலான வான்வழித் தாக்குதல் நடத்தினர்.

    கராகஸில் உள்ள முக்கிய ராணுவ தளமான பியூர்டே தியுனா, லா கார்லோட்டா விமான தளம் மற்றும் லா குவைரா துறைமுகம் உள்ளிட்ட பல ராணுவ மற்றும் உள்கட்டமைப்பு இடங்கள் தாக்கப்பட்டன.

    இதன்பின், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெளியிட்ட அறிவிப்பில், "அமெரிக்கா, வெனிசுலா மற்றும் அதன் தலைவர் அதிபர் நிக்கோலஸ் மதுரோ மீது ஒரு பெரிய அளவிலான தாக்குதலை வெற்றிகரமாக நடத்தியுள்ளது.

    அதிபர் மதுரோவும் அவரது மனைவியும் கைது செய்யப்பட்டு, நாட்டிலிருந்து வெளியே அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கை அமெரிக்க சட்ட அமலாக்கத் துறையுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டது" என்று தெரிவித்தார்.

    மதுரோ மீது அமெரிக்காவில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் குற்றவியல் வழக்குகள் உள்ளதால் அவர் விசாரணைக்கு உட்படுத்தப்படுவார் என்று தெரிகிறது.

    இந்நிலையில் வெனிசுலா மீதான அமெரிக்காவின் தாக்குதலுக்கு ரஷியா, ஈரான், மற்றும் ஐரோப்பிய நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

    ரஷிய வெளியுறவு அமைச்சகம் இந்தத் தாக்குதலை வெனிசுலா மீதான ஆயுதமேந்திய ஆக்கிரமிப்பு என்று கண்டித்துள்ளது. இது சர்வதேச சட்டங்களை மீறும் செயல் என்றும் தங்களின் அரசியல் சித்தாந்தத்திற்காக அமெரிக்கா இத்தகைய செயலில் ஈடுபட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளது.

    வெனிசுலாவின் நெருங்கிய நட்பு நாடான ஈரான் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், இந்தத் தாக்குதல் வெனிசுலாவின் இறையாண்மையையும் அதன் பிராந்திய ஒருமைப்பாட்டையும் அப்பட்டமாக மீறும் செயல் ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்தை அமெரிக்கா மீறியுள்ளது என தெரிவித்துள்ளது.

    இந்தச் சூழலை பெரும் கவலையுடன் கவனித்து வருவதாகவும், நிலைமையை ஆராய அவசரக் குழுவைக் கூட்டியுள்ளதாகவும் ஜெர்மனி வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

     இப்பிரச்சினைக்கு அமைதி வழியில் தீர்வு காண மத்தியஸ்தம் செய்ய தயாராக உள்ளதாக ஸ்பெயின் அரசு ஸ்பெயின் அரசு அறிவித்துள்ளது.

    மேலும் கொலம்பியா, கியூபா உள்ளிட்ட நாடுகளும் கண்டனம் தெரிவித்துள்ளன.

    இதற்கிடையே, வெனிசுலாவில் தற்போது தேசிய அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.   

    • அதிபர் மதுரோவும் அவரது மனைவியும் கைது செய்யப்பட்டு, நாட்டிலிருந்து வெளியே அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
    • இந்த நடவடிக்கை அமெரிக்க சட்ட அமலாக்கத் துறையுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டது.

    வெனிசுலாவில் இருந்து அமெரிக்காவுக்கு போதை பொருள் கடத்தப்படுவதாகவும், இதற்கு வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ உடந்தையாக இருப்பதாகவும் அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம் சாட்டி வந்தார்.

    இதையடுத்து வெனிசுலா படகுகள் மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல் நடத்தி வந்தது. வெனிசுலாவை சுற்றி கரீபியன் கடல்பகுதியில் அமெரிக்கா தனது படைகளை குவித்தது.

    வெனிசுலா அதிபர் பதவியில் இருந்து மதுரோ வெளியேற வேண்டும் என்று டிரம்ப் நேரடியாக எச்சரிக்கை விடுத்தார்.

    மேலும் வெனிசுலாவில் தரைவழித் தாக்குதல் நடத்தப்படலாம் என்று டிரம்ப் கூறி இருந்தார்.

    இந்நிலையில் வெனிசுலா தலைநகர் கராகசின் பல பகுதிகளில் இன்று அதிகாலை பலத்த குண்டுவெடிப்பு நிகழ்ந்தன.

    குண்டுகள் வெடித்ததில் அங்கு தீ பிழம்பு ஏற்பட்டு கரும்புகை எழும்பியது. மேலும் தலைநகரின் பல இடங்களில் விமானங்கள் தாழ்வாக பறந்து சென்றன.

    வெடிப்பு சத்தங்களை கேட்டதும் அதிர்ச்சி அடைந்த மக்கள் வீடுகளில் இருந்து வெளியேறினர். தலைநகர் கராகசில் வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

    இதைத்தொடர்ந்து வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுராவும் அவரது மனைவி சிலியா புளோரஸ்-உம் சிறை பிடிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.

    டிரம்ப் தனக்கு சொந்தமான ட்ரூத் சோஷியல் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், அமெரிக்கா, வெனிசுலா மற்றும் அதன் தலைவர் அதிபர் நிக்கோலஸ் மதுரோ மீது ஒரு பெரிய அளவிலான தாக்குதலை வெற்றிகரமாக நடத்தியுள்ளது.

    அதிபர் மதுரோவும் அவரது மனைவியும் கைது செய்யப்பட்டு, நாட்டிலிருந்து வெளியே அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கை அமெரிக்க சட்ட அமலாக்கத் துறையுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டது.

    கூடுதல் விவரங்கள் பின்னர் வெளியிடப்படும். இன்று காலை 11 மணிக்கு, மார்-ஏ-லாகோவில் ஒரு செய்தியாளர் சந்திப்பு நடைபெறும்" என்று தெரிவித்துள்ளார்.

    அமெரிக்காவின் இந்த அடாவடி நடவடிக்கையால் சர்வதேச அரசியலில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. வெனிசுலாவில் எண்ணெய் வளங்கள் அதிகம் உள்ளது. அங்கு எண்ணெய் தேசியமயமாக்கப்பட்டுள்ளது. அதை எடுக்கும் தொழிலை தனியார் மயமாக்காமல் அந்நாட்டு இடதுசாரி அரசே எடுத்து நடத்தி வருகிறது.

    இதனால் போதைப்பொருளை காரணம் காட்டி வெனிசுலா எண்ணெய் வளங்களை தனியாருக்கு திறக்க அமெரிக்கா இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாகவும் ஒரு சாரார் கருதுகின்றனர். 

    வெனிசுலா எதிர்கட்சித் தலைவர் மரியாவுக்கு 2025 ஆம் ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டதும் அதை அவர் டிரம்ப்க்கு சமர்ப்பிப்பதாக கூறியிருந்ததும்  குறிப்பிடத்தக்கது. 

    • அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு, பொருளாதார நெருக்கடியால் ஈரான் கடுமையாக பாதித்துள்ளது.
    • ஈரான் மீது அமெரிக்கா விதித்த கடுமையான பொருளாதார தடைகளால் ஈரான் பல ஆண்டுகளாக நெருக்கடியை சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது.

    ஈரானில் அமைதியான முறையில் போராட்டம் நடத்துபவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டு வன்முறையில் அடக்கப்பட்டால், அவர்களைப் பாதுகாக்க அமெரிக்கா தலையிடும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார்.

    தனது சமூக ஊடக தளமான Truth Social இல் வெளியிடப்பட்ட அவர் வெளியிட்ட பதிவில், ஈரான் அமைதியான முறையில்  போராடுபவர்களை  சுட்டுக் கொன்றால், அது அவர்களின் வழக்கம் என்றாலும், அமெரிக்கா அவர்களின் உதவிக்கு வரும்.நாங்கள் முழுமையாகத் தயாராக இருக்கிறோம்" என்று தெரிவித்துள்ளார்.

    அமெரிக்க டாலருக்கு எதிரான நாணய மதிப்பு வீழ்ச்சி, அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு, பொருளாதார நெருக்கடியால் ஈரான் கடுமையாக பாதித்துள்ளது.

    இதனை எதிர்த்து அரசை கண்டித்து கடந்த 28-ந் தேதி தொடங்கிய மக்கள் போராட்டம் தற்போது தீவிரமடைந்து வருகிறது. முதலில் தலைநகர் தெஹ்ரானில் தொடங்கிய போராட்டம் , நாட்டின் பிற பகுதிகளுக்கும் பரவியது. குறிப்பாக கிராமப்புற மாகாணங்களில் போராட்டங்கள் நடந்தது.

    பல இடங்களில் போராட்டக்காரர்களை போலீசார் தடுத்ததால் மோதல் ஏற்பட்டது. தலைநகர் தெஹ்ரானில் இருந்து 300 கி.மீ தொலைவில் உள்ள அஸ்னா நகரில் மக்கள் சாலைகளில் பொருட்களை போட்டு எரித்தனர்

    ஈரானின் சஹார்மஹால் மற்றும் பக்தியாரி மாகாணத்தில் நடந்த போராட்டங்களில் பாதுகாப்பு படையினர் துப்பாக்கி சூடு நடத்தியதாக தெரிகிறது. போராட்டம்-வன்முறையில் இதுவரை 7 பேர் பலியாகி உள்ளனர். ஏராளமானோர் காயம் அடைந்துள்ளனர்.

    ஈரான் மீது அமெரிக்கா விதித்த கடுமையான பொருளாதார தடைகளால் ஈரான் பல ஆண்டுகளாக நெருக்கடியை சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது.  

    • சர்வதேச கடல் பகுதியில் பயணித்த மூன்று படகுகளை இலக்கு வைத்தது.
    • இதுவரை 20-க்கும் மேற்பட்ட படகுகள் இதேபோல் தாக்கப்பட்டுள்ளன.

    பசிபிக் பெருங்கடலில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் வெளிநாட்டுப் படகுகள் மீது அமெரிக்க ராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில் 8 பேர் கொல்லப்பட்டனர்.

    சர்வதேச கடல் பகுதியில் பயணித்த மூன்று படகுகளை இலக்கு வைத்து அமெரிக்க ராணுவம் நேற்று இந்தத் தாக்குதலை நடத்தியது.

    இந்தப் படகுகள் பசிபிக் பெருங்கடலில் போதைப்பொருள் கடத்தல் பாதையில் சென்றதாகவும், கடத்தல் தொழிலில் ஈடுபட்டிருந்ததாகவும் உளவுத்துறை உறுதிப்படுத்தியதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று ராணுவம் தெரிவித்தது.

    சமீபகாலமாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான நிர்வாகம் போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராக கடுமை காட்டி வரும் நிலையில் இதுவரை 20-க்கும் மேற்பட்ட படகுகள் இதேபோல் தாக்கப்பட்டுள்ளன.

    ஆனால் அவை போதைப்பொருள் படகுகள் இல்லை என்றும் இந்தத் தாக்குதல்கள் சட்டத்திற்குப் புறம்பானவை என்றும் விமர்சனம் எழுந்தது.

    ஆனால், சர்வதேச சட்டங்களின்படியே இந்த நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக பென்டகன் விளக்கம் அளித்துள்ளது. 

    ×