search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Intelligence"

    • பிரதமர் மோடி தங்க உள்ள வி.ஐ.பி விருந்தினர் மாளிகை முழுவதும் போலீசாரின் கட்டுப்பாட்டுகள் கொண்டுவரப்பட்டு உள்ளது.
    • ரேணிகுண்டா விமான நிலையத்தில் இருந்து திருமலை வரை 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    திருப்பதி:

    பிரதமர் மோடி நாளை காலை திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய உள்ளார். இதற்காக இன்று மாலை விமானம் மூலம் ரேணிகுண்டா விமான நிலையத்திற்கு வருகிறார்.

    விமான நிலையத்தில் பிரதமர் மோடியை ஆந்திர முதல்-மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி, கவர்னர் அப்துல் நசீர், கலெக்டர் வெங்கட் ரமணா ரெட்டி, போலீஸ் சூப்பிரண்டு பரமேஸ்வர் ரெட்டி மற்றும் முக்கிய அமைச்சர்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளிக்கின்றனர்.

    பின்னர் சாலை மார்க்கமாக பிரதமர் மோடி திருமலைக்கு வருகிறார். திருமலையில் உள்ள வி.ஐ.பி விருந்தினர் மாளிகையில் இரவு தங்குகிறார்.

    நாளை காலை வி.ஐ.பி பிரேக் தரிசனத்தில் ஏழுமலையானை தரிசனம் செய்கிறார். தரிசனம் முடிந்து ரேணிகுண்டா விமான நிலையம் செல்லும் பிரதமர் மோடி விமானம் மூலம் மீண்டும் டெல்லி புறப்பட்டு செல்கிறார்

    பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு மத்திய, மாநில உளவுத்துறை போலீசார், மதிய பாதுகாப்பு படை போலீசார் ரேணிகுண்டா விமான நிலையம் மற்றும் ரேணிகுண்டாவில் இருந்து திருமலை செல்லும் சாலைகள் முழுவதும் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனை செய்தனர்.

    மேலும் பிரதமர் மோடி தங்க உள்ள வி.ஐ.பி விருந்தினர் மாளிகை முழுவதும் போலீசாரின் கட்டுப்பாட்டுகள் கொண்டுவரப்பட்டு உள்ளது.

    ரேணிகுண்டா விமான நிலையத்தில் இருந்து திருமலை வரை 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்நிலையல் ஆந்திர மாநிலம், விஜயவாடா, பொரங்கியை சேர்ந்தவர் கிருபாகர். இவர் மத்திய உளவுத்துறை பாதுகாப்பு பிரிவில் டிஎஸ்பியாக வேலை செய்து வந்தார்.

    பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு திருப்பதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. உடன் இருந்த போலீசார் அவரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இந்த சம்பவம் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள மற்ற போலீசார் இடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    மாணவ மாணவியர்கள் ஒவ்வொருவரும் புத்தகம் வாசி க்கும் பழக்கத்தினை தொடர்ந்து கடைபிடித்திட வேண்டும்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்ட பெருந்திட்ட வளாகத்தில் உள்ள மாவட்ட நூலகத்தின் சார்பில் 56-வது தேசிய நூலக வார விழாவினை முன்னிட்டு நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்களை மாவட்ட கலெக்டர் பழனி வழங்கினார்விழாவில் மாவட்ட கலெக்டர் பழனி பேசுகையில், நூலக வார விழாவில் அதிகப்ப டியான மாணவ, மாணவியர்கள் பங்கேற்று தங்கள் வாசிப்பு திறனும் மேம்படுத்தும் வகையில் பேச்சுப்போட்டி, கட்டுரை போட்டி, கவிதை எழுதுதல் போன்ற பல்வேறு போட்டிகள் விழுப்புரம் மாவட்டத்தினை சேர்ந்த அரசு பள்ளியில் பயிலும் பள்ளி மாணவ மாணவர்க ளிடையே நடத்தப்பட்டது.

    மாணவ மாணவியர்கள் ஒவ்வொருவரும் புத்தகம் வாசி க்கும் பழக்கத்தினை தொடர்ந்து கடைபிடித்திட வேண்டும். ஏனென்றால், புத்தகம் ஒன்றே தங்கள் அறிவுத்திறனை மேம்படுத்தும் என்பதால் ஒவ்வொருவரும் கட்டாயம் நூலகத்திற்கு சென்று வாசிப்பு திறனை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். மாவட்ட மைய நூலகத்திற்கு சாலை வசதி, சுகாதாரமான குடிநீர் வசதி அமைக்க விரைந்து நடவ டிக்கை மேற்கொள்ள ப்படும். மேலும், நூலகத்திற்கு மாணவ மாணவி யர்கள் டிஜிட்டல் முறையான கணினி நூலகம் அமைத்திடும் வகையில் தன்னார்வலர்கள் மூலம் அமைத்திட உரிய நட வடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு கலெக்டர் பழனி பேசினார். 2-ம் கருவறை நூலகம், வாசித்தேன் வளர்ந்தேன், மேல்நிலை வாழ்வுக்கு உயர்வு தருவது வாசிப்பு என்ற தலைப்புகளில் நடந்த கட்டுரை போட்டி, பசுமை இந்தியா கனவு இந்தியா என்ற துலைப்பில் நடந்த ஓவிய போட்டியில் வெற்றி பெற்று முதல் 3 இடங்களை பிடித்த மாணவ மாணவியர்களுக்கு பரிசு மற்றும் பாராட்டு சான்றி தழ்கள் வழங்கப்பட்டதுஇதில் கூடுதல் கலெக்டர் ஜெய் நாராயணன், விழுப்புரம் நகர மன்ற தலைவர் தமிழ்ச்செ ல்வி பிரபு, விழுப்புரம் மாவட்ட கல்வி அலுவலர் மகாலட்சுமி, மாவட்ட மைய நூலகர் இளஞ்செழியன், நூலகர் வேல்முருகன் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • நுண்ணறிவு பிரிவு இன்ஸ்பெக்டர் பதவிக்கு கிச்சிபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் நியமிக்கப்பட்டார்.
    • நகர போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி மற்றும் துணை கமிஷனர்கள் மதிவாணன், கவுதம் கோயல், நுண்ணறிவு பிரிவு உதவி கமிஷனர் சரவணன் ஆகியோரிடம் வாழ்த்து பெற்றார்.

    சேலம்:

    சேலம் மாநகர நுண்ணறிவு பிரிவு இன்ஸ்பெக்டர் ஆக இருந்த கற்பகம் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மாறுதல் செய்யப்பட்டார். அதைத்தொடர்ந்து காலியாக இருந்த நுண்ணறிவு பிரிவு இன்ஸ்பெக்டர் பதவிக்கு கிச்சிபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் நியமிக்கப்பட்டார்.அவர் இன்று காலை பொறுப்பேற்றுக்கொண்டு மாநகர போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி மற்றும் துணை கமிஷனர்கள் மதிவாணன், கவுதம் கோயல், நுண்ணறிவு பிரிவு உதவி கமிஷனர் சரவணன் ஆகியோரிடம் வாழ்த்து பெற்றார்.

    • இலங்கை கடற்படை தாக்குதலில் காயமடைந்த மீனவரிடம் உளவுத்துறை போலீசார் விசாரணை நடத்தினர்.
    • ராமேசுவரம் ஓலைக்குடாவை சேர்ந்த மீனவர் செங்கோல் பிராங்கிளின் காலில் காயமடைந்த நிலையில் கரை திரும்பினர்.

    ராமேசுவரம்

    ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் இருந்து நேற்று முன்தினம் 200-க்கும் மேற்பட்ட மீனவர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசை படகுகளில் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

    கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த போது 5 ரோந்து கப்பலில் வந்த இலங்கை கடற்படை யினர் மீனவர்கள் மீது கற்கள் மற்றும் பாட்டில்களை கொண்டு தாக்குதல் நடத்தி விரட்டியடித்தனர்.

    இதில், ராமேசுவரம் ஓலைக்குடாவை சேர்ந்த மீனவர் செங்கோல் பிராங்கி ளின் காலில் காயமடைந்த நிலையில் கரை திரும்பினர். பின்னர் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வீட்டுக்கு திரும்பினர்.

    இந்த நிலையில் காய மடைந்த மீனவர் பிராங்கிளி னிடம் உளவுத்துறை போலீ சார் விசாரணை நடத்தினர். அவரிடம் இந்திய கடல் பகுதியில் இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தி யதா? அல்லது இலங்கை கடல் பகுதியில் நடை பெற்றதா? என விசாரணை மேற்கொண்டனர்.

    • சாதனையாளர்களாக மாற அசாத்திய புத்திக்கூர்மை அவசியமாகிறது.
    • நினைவாற்றல் பயிற்சி குழந்தைகளின் அறிவாற்றலை வளர்க்கும்.

    இந்த காலத்து குழந்தைகள் மிகவும் ஸ்மார்ட்டானவர்கள். கற்றுக்கொடுக்கும் எல்லா விஷயங்களையும் உடனுக்குடன் புரிந்து கொள்கிறார்கள். ஆனால், இப்படிப்பட்ட ஸ்மார்ட்டான குழந்தைகளுக்கும், சில ஸ்மார்ட்டான பயிற்சிகள் தேவை.

    குறிப்பாக, கவனம் சிதறாமல் இருக்கவும், நினைவாற்றலை அதிகரிக்க செய்யவும் ஒருசில மன பயிற்சிகள் தேவைப்படுகிறது'' என்று பக்குவமாக பேச ஆரம்பிக்கிறார், திரேசா.

    சென்னை தாம்பரம் பகுதியை சேர்ந்தவரான இவர், எம்.எஸ்.சி. சைகாலஜி படித்திருக்கிறார். கூடவே, குழந்தைகளின் நினைவாற்றலை வளர்ப்பது குறித்தும், கவனிப்பு திறனை மேம்படுத்துவது குறித்தும் ஆராய்ந்து வருகிறார். இதுசம்பந்தமான ஆய்வுகளில் கடந்த 10 வருடங்களாக தன்னை ஈடுபடுத்தி கொண்டிருப்பதோடு, இதற்காக தகுந்த வல்லுனர்களிடம் பயிற்சி பெற்றுள்ளார்.

    அந்த அனுபவத்தின் அடிப்படையில், நினைவாற்றல் மேம்பாட்டு சிறப்பு பயிற்சிகளை உருவாக்கி அதை ஏழை எளிய குழந்தைகளுக்கு வழங்கி வருகிறார். குறிப்பாக, அரசுப்பள்ளி மாணவ-மாணவிகள் மீது அதீத அக்கறை காட்டுவதோடு, அவர்களை சாதனையாளர்களாக மாற்ற முயற்சிக்கிறார்.

    ''சாதாரண மனிதர்கள், சாதனையாளர்களாக மாற அசாத்திய புத்திக்கூர்மை அவசியமாகிறது. புத்திக்கூர்மைக்கு, கவனிப்பு திறனும், சிறப்பான நினைவாற்றலும் தேவை. நம் குழந்தைகளிடம் இவை இரண்டையும் மேம்படுத்திவிட்டால், அவர்கள் இயல்பானவர்களைவிட சிறப்பாக செயல்பட்டு ஸ்மார்ட்டானவர்களாக மாறிவிடுவார்கள்'' என்று கூறுபவர், சிறுசிறு பயிற்சி மற்றும் முயற்சிகளினால் குழந்தைகளின் நினைவாற்றலையும், கவனிப்பு திறனையும் மேம்படுத்த முடியும் என நம்பிக்கை கொடுக்கிறார்.

    ''5 முதல் 15 வயதிற்குட்பட்ட குழந்தைகள், தொடர்ச்சியாக ஒருசில பயிற்சிகளை மேற்கொள்ளும்போது, அது அவர்களுடைய நினைவாற்றல் மற்றும் கவனிப்பு திறன் வளர்ச்சியில் மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்குகின்றன. பல வருடங்களாக, குழந்தைகளுடன் பேசி பழகி ஆய்வு மேற்கொண்டதில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில்தான், இதை உறுதிப்படுத்தினோம்.

    நினைவாற்றல் அதிகரிப்பது மட்டுமின்றி குழந்தைகளின் கவனமும் எந்த பக்கமும் சிதறாமல், ஒரே இலக்கில் நிலைநிறுத்தப்பட்டு, கற்றலும்-புரிதலும் அதிகரிக்கிறது. இவ்வளவு நன்மை பயக்கும் பயிற்சிகளைத்தான், நான் சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் இருக்கும் மாணவ-மாணவிகளுக்கு கற்றுக்கொடுத்து வருகிறேன்'' என்பவர், இத்தகைய பயிற்சிகளை குழந்தைகள் விரும்பும் வகையில் மாற்றி, அதை சுலபமான வழிகளில் கொண்டு சேர்க்கிறார்.

    ''கல்வி, வகுப்பு தேர்வுகள்.... என ஏற்கனவே 'ஸ்டிரெஸ்' மனநிலையில் இருக்கும் குழந்தைகளுக்கு, இந்த பயிற்சிகள் சுகமான அனுபவமாக இருக்கவேண்டுமே தவிர, கூடுதல் சுமையாகி விடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன். அதனால்தான், அவர்கள் விரும்பும் வகையிலான பயிற்சி முறைகளை வடிவமைத்திருக்கிறோம்.

    எழுத்து பயிற்சிகள், ரூபிக் கியூப் விளையாட்டுகள், சிந்திக்க தூண்டும் கேள்வி பதில்கள், புதிர் விளையாட்டுகள், யோகா-தியானம்... என பயிற்சி அனுபவத்தை விளையாட்டு அனுபவமாக்கி, குழந்தைகளிடம் கொண்டு சேர்க்கிறேன்.

    என்னுடைய பயிற்சிகளை குழந்தைகளும் விரும்புகிறார்கள்'' என்றவர், இந்த பயிற்சிகள், அவர்களை ஆராய்ச்சியாளர்களாகவும், சிறந்த மனிதர்களாகவும் மாற்றும் என்கிறார்.

    ''நினைவாற்றல் பயிற்சி குழந்தைகளின் அறிவாற்றலை வளர்க்கும். எதையும் விரைவாகப் புரிந்து கொள்வார்கள். தங்களுடைய முழு திறனையும் உணர்ந்திருப்பார்கள். சமூக உறவிலும், குடும்ப உறவிலும் ஈடுபாடு கொண்டவர்களாக வளர்வார்கள்.

    பிரச்சினைகளை தன்னம்பிக்கையோடு எதிர்கொள்வார்கள். இப்படிப்பட்ட பயிற்சிகள்தான், இந்த காலத்துக் குழந்தைகளுக்கு அதிகம் தேவைப்படுகிறது'' என்பவர் இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு பயிற்சி அளித்திருப்பதாக கூறினார்.

    • சிலைகளை நிறுவும் இடத்தில் மாற்று மதத்தினர் புண்படும் வகையில் கோஷங்களை எழுப்பக் கூடாது.
    • சிலைகள் அமைக்கப்பட்டுள்ள இடங்களில் கூடுதல் கண்காணிப்புடன் பணிகளில் ஈடுபட வேண்டும் என்றும் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    விநாயகர் சதுர்த்தி விழா ஒவ்வொரு ஆண்டும் இந்து அமைப்புகள் மற்றும் பொதுநல சங்கத்தினரால் சிறப்பாக கொண்டாடப் பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டும் அடுத்த மாதம் (செப்டம்பர்) 18-ந் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.

    தமிழகம் முழுவதும் 1 லட்சத்துக்கும் அதிகமான விநாயகர் சிலைகளை வைத்து வழிபட இந்து அமைப்பினர் திட்டமிட்டு உள்ளனர். இந்து முன்னணி, பாரத் இந்து முன்னணி உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்புகளை சேர்ந்தவர்கள் சென்னை உள்பட அனைத்து மாவட்டங்களிலும் விநாயகர் சிலைகளை வைத்து பூஜை செய்ய திட்டமிட்டுள்ளனர். செப்டம்பர் 18-ந் தேதி பூஜைக்காக வைக்கப்படும் விநாயகர் சிலைகள் ஒரு வாரத்துக்கு பிறகு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கடலில் கரைக்கப்பட உள்ளன.

    விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு இன்னும் ஒரு மாதம் இருக்கும் நிலையில் போலீசார் இப்போதே பாதுகாப்பு ஏற்பாடுகளை தொடங்கி இருக்கிறார்கள்.

    தமிழகம் முழுவதும் விநாயகர் சதுர்த்தியையொட்டி மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்னென்ன என்பது பற்றி மாநிலம் முழுவதும் உளவுப் பிரிவு போலீசார் உஷாராகி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள்.

    விநாயகர் சதுர்த்தி விழாவில் எந்தவித பாதுகாப்பு குறைபாடுகளும் இல்லாத வகையில் தேவையான பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

    விநாயகர் சதுர்த்தி தொடர்பாக போலீசார் பல்வேறு கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளனர். அதன் விவரம் வருமாறு:-

    பிரச்சினைக்குரிய இடங்களில் விநாயகர் சிலைகளை வைப்பதற்கு அனுமதி கேட்கக் கூடாது. சிலைகளை வைப்பதற்கு அனுமதி கேட்கும் போதே பிரச்சினைக்குரிய இடமாக கருதப்பட்டால் அந்த இடத்தில் எக்காரணத்தை கொண்டும் சிலைகளை வைக்கக் கூடாது. இதனை மீறி யாராவது சிலைகளை வைத்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    சிலைகளை நிறுவும் இடத்தில் மாற்று மதத்தினர் புண்படும் வகையில் கோஷங்களை எழுப்பக் கூடாது. போக்குவரத்துக்கு இடையூறாக சிலைகளை வைக்கக் கூடாது.

    சிலைகளை அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் மட்டுமே எடுத்துச் செல்ல வேண்டும். இதற்காக 17 வழித்தடங்கள் கண்டறியப்பட்டுள்ளது. இதனை மீறி மாற்று வழிகளில் செல்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். சிலைகளை கரைப்பதற்கு திருவொற்றியூர், பட்டினப்பாக்கம், நீலாங்கரை, எண்ணூர் உள்ளிட்ட நான்கு இடங்கள் கண்டறியப்பட்டு உள்ளது.

    இந்த இடங்களில் மட்டுமே விநாயகர் சிலைகளை கரைக்க வேண்டும். வேறு பகுதிகளில் குறிப்பாக அனுமதிக்கப்படாத இடங்களில் சிலைகளைக் கரைத்தால் நடவடிக்கை எடுக்கப்படும். விநாயகர் சதுர்த்தி விழா மேடையில் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் விழா ஏற்பாடுகள் பணியில் இருக்க வேண்டும். விநாயகர் சிலைகளை அமைக்கும் இடத்தில் போடப்படும் பந்தல் தீ பிடிக்காத வகையில் அமைக் கப்பட்டிருக்க வேண்டும். பிற மதத்தினர் புண்படும் வகையில் பேசுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்ப டும் என்பது போன்ற 20-க்கு மேற்பட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. விநாயகர் சதுர்த்தி தொடர்பாக 5 கட்டங்களாக ஆலோசனை நடத்த போலீ சார் முடிவு செய்துள்ளனர்.

    இந்த ஆலோசனைக் கூட்டத்தை அடுத்த மாத தொடக்கத்தில் இருந்து மேற் கொள்ள திட்டமிடப்பட்டு உள்ளது. முதலில் தங்களது பகுதி யில் சிலைகளை அமைப்பவர்களை அழைத்து போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் ஆலோசனை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதன் பிறகு உதவி கமிஷனர் அந்தஸ்திலான அதிகாரிகள் ஆலோசனை நடத்து கிறார்கள்.

    3-வதாக துணை கமிஷனர் தலைமையிலான அதிகாரிகள் குழு சிலை அமைப்பவர்களுடன் ஆலோசனை நடத்துகிறது. இதன் பிறகு இணை கமிஷனர் தலைமையிலான அதிகாரிகள் ஆலோசனை மேற்கொள்ள உள்ளனர்.

    கடைசியாக சென்னை போலீஸ் கமிஷனர் அலுவல கத்தில் சிலைகளை அமைக்கும் அமைப்பினரின் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.

    இந்தக் கூட்டத்தில் கூடுதல் கமிஷனர் அந்தஸ்திலான அதிகாரி ஒருவர் கலந்து கொண்டு சிலைகளை கரைப்பது தொடர்பாக பல்வேறு ஆலோசனைகளையும் வழங்க உள்ளார். விநாயகர் சதுர்த்தியையொட்டி சிலைகள் இருக்கும் இடங்களில் செப்டம்பர் 18-ந் தேதியில் இருந்து ஒரு வார காலத்துக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ளவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இதன்படி சென்னையில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்படுகிறார்கள். தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் காவலர்கள் பாதுகாப்பில் ஈடுபட உள்ளனர். டி.ஜி.பி. சங்கர் ஜிவால் விநாயகர் சதுர்த்தி தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகளுக்கு உரிய அறிவுரைகளை வழங்கி வருகிறார்.

    சென்னையில் போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் அனைத்து துணை கமிஷனர்களுக்கும் உரிய உத்தரவுகளை பிறப்பிக்க உள்ளார்.

    குறிப்பாக விநாயகர் சிலைகளை அமைக்கும் இடங்களில் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளனவா? என்பதை சம்பந்தப்பட்ட இன்ஸ்பெக்டர்கள் நேரில் சென்று அடிக்கடி ஆய்வு செய்ய வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட உள்ளது.

    அதே நேரத்தில் இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசார் சிலைகள் அமைக்கப்பட்டுள்ள இடங்களில் கூடுதல் கண்காணிப்புடன் பணிகளில் ஈடுபட வேண்டும் என்றும் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் விநாயகர் சதுர்த்தி விழாவை அமைதி யான முறையில் நடத்தி முடிக்க சென்னை போலீசா ரும் தமிழக காவல்துறை யினரும் முடிவு செய்து உள்ளனர்.

    • மாநகர காவல்து றையில் நுண்ணறிவு பிரிவு செயல்பட்டு வருகிறது.
    • நுண்ணறிவு பிரிவிற்கு விரை வில் இன்ஸ்பெக்டர் நியமிக்க ப்படுவார்களா என்று பல்வேறு தரப்பினரும் எதிர்பார்த்து உள்ளனர்.

    சேலம்:

    சேலம் மாநகர காவல்து றையில் நுண்ணறிவு பிரிவு செயல்பட்டு வருகிறது.

    சேலம் மாநகரத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலை யங்களுக்கும் நுண்ணறிவு பிரிவு சார்பில் தலா ஒரு சப்- இன்ஸ்பெக்டர் நியமிக் கப்பட்டு, இவர்கள் அந்தந்த போலீஸ் நிலையங்க ளுக்கு உட்பட்ட பகுதிகளில் நடக்கும் சம்பவங்களின் உண்மை தன்மை குறித்த தக வல்களை திரட்டி நுண்ணறிவு பிரிவு இன்ஸ்பெக்டர் அல்லது உதவி கமிஷனர் மூலம் நேரடி யாக போலீஸ் கமிஷனருக்கு தகவல்களை தெரி விப்பார்கள். இந்த நிலையில் சேலம் நுண்ணறிவு பிரிவு இன்ஸ்பெக் டராக இருந்த கற்பகம், ஆட்சி மாற்றத்திற்கு பின் மாறுதல் செய்யப் பட்டார். அதை த்தொடர்ந்து இன்று வரை இன்ஸ்பெக்டர் இல்லாமல் இப்பிரிவு செயல்பட்டு வருவது குறிப்பிடத் தக்கது.

    நுண்ணறிவு பிரிவிற்கு விரை வில் இன்ஸ்பெக்டர் நியமிக்க ப்படுவார்களா என்று பல்வேறு தரப்பினரும் எதிர்பார்த்து உள்ளனர்.

    • தங்கம் உள்ளிட்ட பொருட்களை சட்ட விரோதமாக கடத்தி வரும் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடந்து வருகிறது.
    • வாலிபர் நசீமிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை:

    மதுரை விமான நிலையத்தில் இருந்து துபாய், சிங்கப்பூர், மலேசியா, லண்டன், இலங்கை உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும், பெங்களூரு, சென்னை, மும்பை, டெல்லி, விஜயவாடா உள்ளிட்ட நகரங்களுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    வெளிநாடுகளில் இருந்து வரக்கூடிய விமானங்களில் சிலர் தங்கம் உள்ளிட்ட பொருட்களை சட்ட விரோதமாக கடத்தி வரும் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடந்து வருகிறது. இதனால் வெளிநாடுகளில் இருந்து வரக்கூடிய விமானங்களில் வரும் பயணிகளின் உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை செய்து வருகிறார்கள்.

    இந்நிலையில் துபாயில் இருந்து வரும் விமானத்தில் தங்கம் கடத்தப்படுவதாக மதுரை விமான நிலைய சுங்க இலாகா நுண்ணறிவு பிரிவினருக்கு தகவல் வந்தது. இதையடுத்து துபாய் விமானத்தில் வந்த பயணிகளை சுங்க இலாகா நுண்ணறிவு பிரிவினர் தீவிர சோதனை நடத்தினர்.

    அப்போது ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையை சேர்ந்த நசீம் என்ற பயணியின் பையை சோதனை செய்தனர். அப்போது அதில் பேஸ்ட் வடிவில் ஒரு கிலோ 565 கிராம் தங்கம் இருந்தது. அவற்றின் மதிப்பு ரூ.96 லட்சத்து 18 ஆயிரம் ஆகும். அதனை கைப்பற்றிய சுங்க இலாகா அதிகாரிகள், அதனை கொண்டு வந்த நசீமிடம் விசாரணை நடத்தினர்.

    அப்போது அவர் சட்ட விரோதமாக தங்கத்தை கொண்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். வாலிபர் நசீமிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    காஷ்மீரில் ஓட்டுப்பதிவு நடக்கும் நாட்களில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது. #ParliamentaryElection
    ஜம்மு:

    பாகிஸ்தானில் உள்ள ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதிகள் கடந்த மாதம் காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் நடத்திய தாக்குதலில் 40 சி.ஆர்.பி.எப். வீரர்கள் உயிரிழந்தனர்.

    இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய விமானப்படை பாகிஸ்தானுக்குள் இருக்கும் அவர்களது பயங்கரவாத முகாம்களை 1000 கிலோ குண்டுகளை வீசி அழித்தது.

    இந்தியாவின் அதிரடி தாக்குதலால் ஆத்திரம் அடைந்துள்ள ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதிகள் காஷ்மீரில் மீண்டும் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளனர். தேர்தல் சமயத்தில் கைவரிசை காட்ட அவர்கள் முயற்சிகளில் ஈடுபட இருப்பதாக உளவு துறை எச்சரித்துள்ளது.

    காஷ்மீர் மாநிலத்தில் மொத்தம் 6 பாராளுமன்ற தொகுதிகள் இருக்கின்றன. இந்த தொகுதிகளுக்கு 5 கட்டமாக தேர்தல் நடக்கிறது. அனந்தநாக் தொகுதியில் ஏப்ரல் 23-ந்தேதியும், குல்காம் தொகுதியில் ஏப்ரல் 29, புல்வாமா, சோபியா தொகுதிகளில் மே 6, பாராமுல்லா தொகுதியில் ஏப்ரல் 11, ஸ்ரீநகரில் ஏப்ரல் 18 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது.



    ஓட்டுப்பதிவு நடக்கும் நாட்களில் ஏதாவது ஒரு பகுதியில் மிகப்பெரிய தாக்குதலுக்கு ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளனர். அவர்களுக்கு ஆதரவாக யஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகளும் உதவி செய்வதாக தெரிய வந்துள்ளது. இந்த தகவல்களை உளவுத்துறை தெரிவித்து எச்சரித்துள்ளது.

    இதையடுத்து காஷ்மீர் மாநிலத்தில் ஓட்டுப்பதிவு நாட்களில் பாதுகாப்பை அதிகரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. #ParliamentaryElection
    குஜராத்தில் பயங்கரவாதிகள் தாக்குதலுக்கு வாய்ப்பு இருப்பதாக அம்மாநில உளவுத்துறை எச்சரித்துள்ளது. இதைத் தொடர்ந்து குஜராத் மாநிலத்தில் உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. #PulwamaAttack
    ஆமதாபாத்:

    காஷ்மீர் மாநிலத்தில் கடந்த வாரம் வியாழக்கிழமை பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலை தாக்குதலில் 40 சி.ஆர்.பி.எப். வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.

    இந்த தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட தீவிரவாதி ரஷித் என்ற கம்ரன் நேற்று காஷ்மீரில் ராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டான்.

    இந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம் தீவிரவாதி கம்ரன் தலைமையில் 21 பயங்கரவாதிகள் காஷ்மீருக்குள் ஊடுருவியது தெரிய வந்தது. அவர்கள் 3 குழுக்களாக பிரிந்து சென்றதாக உளவுத்துறை தற்போது கண்டுபிடித்துள்ளது.

    அதில் ஒரு பிரிவினர் குஜராத் மாநிலத்திற்குள் ஊடுருவி இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது. இந்த நிலையில் குஜராத்தில் பயங்கரவாதிகள் தாக்குதலுக்கு வாய்ப்பு இருப்பதாக அந்த மாநில உளவுத்துறையும் எச்சரித்துள்ளது.

    இதைத் தொடர்ந்து குஜராத் மாநிலத்தில் உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. மாநிலத்தின் முக்கிய நகரங்களில் அதிரடிப்படை போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    குறிப்பாக சர்தார் சரோவர் அணைக்கட்டு, சோம நாத் ஆலயம் மற்றும் மார்க்கெட் பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சாதாரண உடைகளில் போலீசாரின் கண்காணிப்புக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

    பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றி குஜராத் முதல்-மந்திரி விஜய்ரூபானி நேற்று ஆய்வு செய்தார். அதிகாரிகளிடம் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கேட்டு அறிந்தார்.

    இதற்கிடையே குஜராத் மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் அதிரடிப்படை போலீசார் தயார் நிலையில் குவிக்கப்பட்டுள்ளனர். #PulwamaAttack
    ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் பாகிஸ்தான் அரசு உதவியுடன் முகாம் அமைத்துள்ள பயங்கரவாதிகள், இந்தியாவுக்குள் ஊடுருவி தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது. #JammuKashmir
    ஸ்ரீநகர்:

    பாகிஸ்தான் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை தூண்டி வருவது இந்தியாவுக்கு மிகப்பெரிய சவாலாக இருந்து வருகிறது.

    பயங்கரவாதிகளை இந்தியாவுக்குள் ஊடுருவ வைத்து நாசவேலை சம்பவங்களில் பாகிஸ்தான் உளவு அமைப்பு ஈடுபட்டு வருகிறது.

    கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் 18-ந்தேதி காஷ்மீரில் உள்ள உரி பகுதியில் பாதுகாப்பு படை மீது பயங்கர ஆயுதங்களுடன் பயங்கரவாதிகள் தாக்கினார்கள். இதில் 19 வீரர்கள் பலியானார்கள்.

    இதற்கு அந்த மாத இறுதியிலேயே இந்திய ராணுவம் துல்லிய தாக்குதல் (சர்ஜிக்கல் அட்டாக்) நடத்தி பதிலடி கொடுத்து எல்லையை ஒட்டி இருந்த பயங்கரவாதிகளின் முகாம்களை அழித்தனர். இதில் 70 பயங்கரவாதிகள் வரை கொல்லப்பட்டனர்.

    இந்த நிலையில் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் உதவியுடன் பயங்கரவாதிகள் முகாம் புதுப்பிக்கப்பட்டு உள்ளது. புதிதாக 8 பயங்கரவாதிகள் முகாம் அமைக்கப்பட்டுள்ளது. இந்திய படை துல்லியமாக தாக்குதல் நடத்திய லிபா பள்ளத்தாக்கில் மீண்டும் பயங்கரவாதிகள் முகாம் அமைக்கப்பட்டுள்ளது.

    லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் லிபா, சகோதி, பராக் கோட், ‌ஷர்டி, ஜுரா ஆகிய பகுதிகளிலும், ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாதிகள் பராக்கோட் மற்றும் கதுவா அருகே உள்ள பகுதிகளிலும் முகாம்கள் அமைத்துள்ளனர்.

    இந்த முகாம்களில் உள்ள 230 பயங்கரவாதிகள் எல்லை கோட்டு வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவ தயார் நிலையில் இருப்பதாக இந்திய உளவுத்துறையின் முக்கிய அதிகார வட்டாரங்கள் தெரிவித்தன. 27 இடங்கள் வழியாக அவர்கள் ஊடுருவ இருப்பதாகவும் உளவுத்துறை எச்சரித்துள்ளது.

    கடந்த ஒரு மாதமாகவே ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் பயங்கரவாதிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அனைத்து விதமான பயிற்சிகளையும் பெற்ற அவர்கள் காஷ்மீருக்குள் ஊடுருவி அதிரடி தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளனர்.

    பாகிஸ்தான் பிரதமராக இம்ரான்கான் கடந்த மாதம் 18-ந்தேதி பதவியேற்றார். அவர் பொறுப்புக்கு வந்த பிறகே ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தீவிரவாத முகாம்கள் மீண்டும் புதுப்பிக்கப்பட்டுள்ளன.

    இந்தியாவுடன் பேச்சுவார்த்தைக்கு தயார் என்று கூறிவிட்டு மறுபுறம் தீவிரவாததத்தை தூண்டி வருகிறார். கடந்த வாரம் காஷ்மீரில் ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாதிகள் 3 போலீசாரை சுட்டுக் கொன்றனர். இதைத் தொடர்ந்து பாகிஸ்தானுடனான பேச்சுவார்த்தையை இந்தியா கடைசி நேரத்தில் ரத்து செய்தது.

    இதற்கு இம்ரான்கான் கண்டனம் தெரிவித்து இருந்தார். தற்போது அவரது ராணுவத்தின் ஆலோசனைப்படி ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயங்கரவாதிகள் குவிக்கப்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது.

    உளவுத்துறையின் எச்சரிக்கையை தொடர்ந்து ஹாஜிபூர், கதுவா பகுதிகளில் இந்திய ராணுவம் பாதுகாப்பு படைகளை அதிகரித்துள்ளது.  #JammuKashmir #Pakistan
    சுதந்திர தின விழாவில் தாக்குதல் நடத்த 4 பாக்.பயங்கரவாதிகள் டெல்லியில் ஊடுருவி இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. #IndependenceDay

    புதுடெல்லி:

    நாட்டின் 72-வது சுதந்திர தினம் நாளை (புதன் கிழமை) நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது.

    டெல்லியில் பிரதமர் மோடியும், மாநில தலைநகரங்களில் முதல்-மந்திரிகளும் பங்கேற்று தேசியக் கொடியை ஏற்றி வைத்து உரையாற்ற உள்ளனர்.

    இந்தியா தனது சுதந்திர தினத்தை கம்பீரமாக, கோலாகலமாக கொண்டாடுவது பாகிஸ்தான் பயங்கரவாதிகளிடம் எரிச்சலையும் கோபத்தையும் ஏற்படுத்துகிறது. இதனால் ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தின கொண்டாட்டங்களை சீர் குலைக்க முயற்சி செய்வதை வழக்கத்தில் வைத்துள்ளனர்.

    இந்த ஆண்டும் காஷ்மீரில் சுதந்திர தின கொண்டாட்டத்தை சீர்குலைக்க பயங்கரவாதிகள் சதி திட்டம் தீட்டி இருப்பதாக சமீபத்தில் உளவுத்துறை எச்சரித்தது. இதனால் காஷ்மீரிலும், எல்லைப் பகுதியிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் சுதந்திர தினத்தன்று மிகப்பெரிய நாசவேலை செய்யும் திட்டத்துடன் 4 பயங்கரவாதிகள் டெல்லிக்குள் ஊடுருவி இருக்கும் அதிர்ச்சி தகவலை உளவுத்துறையினர் வெளியிட்டுள்ளனர். அந்த 4 பயங்கரவாதிகளும் பாகிஸ்தானில், அந்த நாட்டு ராணுவத்தின் ஆதரவுடன் செயல்படும் ஜெய்ஷ்-இ- முகம்மது எனும் இயக்கத்தை சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்துள்ளது.

    அந்த 4 பயங்கரவாதிகளும் டெல்லியில் நாளை மக்கள் அதிகம் கூடும் இடங்களில் குண்டு வெடிப்புகள் நடத்தவும், தற்கொலை தாக்குதல் நடத்தவும் திட்டமிட்டு இருப்பதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது. டெல்லியில் உள்ள சில ஆதரவாளர்கள் உதவியுடன் 4 பயங்கரவாதிகளும் பதுங்கி இருப்பதாக தெரிகிறது.

    இதற்கிடையே காலிஸ் தான் பயங்கரவாதிகளாலும் சுதந்திர தின கொண்டாட்டத்துக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. நாளை சுதந்திர தின கொண்டாட்டம் நடக்கும் போது, காலிஸ் தான் பயங்கரவாதிகள் பாராளுமன்றம் மீது தாக்குதல் நடத்த சதி திட்டம் தீட்டி இருப்பதாக உளவுத்துறை கண்டுபிடித்துள்ளது.

    இவை தவிர வேறு சிலபயங்கரவாத இயக்கங்களும் டெல்லியில் ஊடுருவ முயற்சி செய்வதையும் உளவுத்துறை கண்டறிந்துள்ளது. இவை பற்றி மத்திய உள்துறையிடம் தகவல் அளித்து உளவுத்துறை எச்சரித்து உஷார்படுத்தியுள்ளது.

    இதையடுத்து டெல்லியில் உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வாகன சோதனை தீவிரமாக நடத்தப்பட்டு வருகிறது.

    டெல்லியில் சுதந்திர தின கொண்டாட்டம் நடக்கும் பகுதியில் 7 அடுக்கு பாதுகாப்பு செய்யப்பட்டு இருக்கிறது. டெல்லிக்குள் ஊடுருவிய 4 பயங்கரவாதிகளும் காஷ்மீர் வழியாக வந்து இருப்பது தெரிய வந்துள்ளது. எனவே அவர்களை பிடிக்க டெல்லி முழுக்க பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டை நடத்தி வருகிறார்கள். #IndependenceDay

    ×