என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இஸ்ரேலிய மொசாட்"

    • மொசாட் மற்றும் இராணுவ உளவுத்துறை மையங்களில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான அதிகாரிகள் மற்றும் தளபதிகள் கொல்லப்பட்டனர்.
    • இதுவரை ஈரானில் குறைந்தது 244 பேரும், இஸ்ரேலில் 24 பேரும் கொல்லப்பட்டுள்ளனர்.

    இஸ்ரேலின் மொசாட் உளவுத்துறை தலைமையகம் மீது தாக்குதல்.. புதிய ஏவுகணையை களமிறக்கிய ஈரான்

    ஈரான் - இஸ்ரேல் இடையே கடந்த ஐந்து நாட்களாக மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், ஈரான் இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படை (IRGC) டெல் அவிவ்வில் உள்ள இஸ்ரேலின் உள்நாட்டு ராணுவ உளவுத்துறை அமன் மற்றும் வெளிநாட்டு உளவுத்துறையான மொசாட் தலைமையகம் உட்பட ராணுவ தளங்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.

    இஸ்ரேலின் அதிநவீன வான் பாதுகாப்பு அமைப்புகளையும் தாண்டி, அதிகாலை வேளையில் IRGC வெற்றிகரமான இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாக ஈரான் அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

    இந்தத் தாக்குதல்கள் இஸ்ரேலிய இராணுவத்தின் அமன் தலைமையகத்தையும், மொசாட்டின் படுகொலை நடவடிக்கைகளை திட்டமிடும் மையத்தையும் குறிப்பாக குறிவைத்ததாக IRGC கூறியுள்ளது.

    இந்தத் தாக்குதல்களில் மொசாட் மற்றும் இராணுவ உளவுத்துறை மையங்களில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான அதிகாரிகள் மற்றும் தளபதிகள் கொல்லப்பட்டதாக ஈரானின் டாஸ்னிம் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

     ஈரான் பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் பிரிகேடியர் ஜெனரல் ரெசா தலாய்-நிக் "இன்றைய(ஜூன் 17) தாக்குதலில், கண்காணிக்கவோ அல்லது இடைமறிக்கவோ முடியாத ஏவுகணைகளை நாங்கள் பயன்படுத்தினோம்" என்று கூறினார்.

    இதற்கு முன்னதாக, இஸ்ரேல், ஈரான் உயர்மட்ட இராணுவத் தளபதி அலி ஷாட்மானியை தெஹ்ரானில் நடத்திய வான்வழித் தாக்குதலில் கொன்றதாக அறிவித்தது. அலி ஷாட்மானி நான்கு நாட்களுக்கு முன்புதான் அப்பதவியை ஏற்றிருந்தார். அவருக்கு முன் கொல்லப்பட்ட கோலம் அலி ரஷீத்துக்குப் பதிலாக இவர் நியமிக்கப்பட்டார்.

    இதற்கிடையில், இஸ்ரேலிய இராணுவம் மேற்கு ஈரானில் தங்கள் விமானப்படை புதிய வான்வழித் தாக்குதல்களை நடத்தியதாக ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

    முன்னதாக, ஈரான் இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியதாகவும், சில ஏவுகணைகள் ஹெர்சிலியா உள்ளிட்ட நாட்டின் மத்திய பகுதிகளில் விழுந்து லேசான காயங்களை ஏற்படுத்தியதாகவும் இஸ்ரேல் தெரிவித்திருந்தது. இந்த ஈரானியத் தாக்குதலில் சுமார் 20 பாலிஸ்டிக் ஏவுகணைகள் இஸ்ரேலை நோக்கி ஏவப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படைகளின் ஆரம்ப மதிப்பீடுகள் தெரிவித்தன.

    இஸ்ரேலின் வெள்ளிக்கிழமை தொடங்கிய திடீர் தாக்குதல்களால் போர் மூலம் அபாயம் ஏற்பட்டது. இந்நிலையில் பரஸ்பர வான்வழி தாக்குதல்கள் ஐந்தாவது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் இதுவரை ஈரானில் குறைந்தது 244 பேரும், இஸ்ரேலில் 24 பேரும் கொல்லப்பட்டுள்ளனர்.

    • ஈரானின் உச்ச நீதிமன்றத்தால் அவரது மரண தண்டனை உறுதி செய்யப்பட்டது.
    • பெத்ராம் மதானி என்ற மற்றொருவரையும் இஸ்ரேலுக்காக உளவு பார்த்ததாக ஈரான் தூக்கிலிட்டது.

    ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், இஸ்ரேலிய உளவு அமைப்பான மொசாட்டுக்காக உளவு பார்த்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட ஒருவரை ஈரான் நேற்று தூக்கிலிட்டது.

    இஸ்மாயில் ஃபெக்ரி என்ற அந்த நபர், ஈரானிய பாதுகாப்பு முகமைகளால் டிசம்பர் 2023 இல் கைது செய்யப்பட்டார். ஈரானின் உச்ச நீதிமன்றத்தால் அவரது மரண தண்டனை உறுதி செய்யப்பட்டது.

    இம்மாதிரியான உளவு வழக்குகளின் விவரங்கள் பொதுவாக வெளியிடப்படுவதில்லை. எனினும், ஃபெக்ரி பணத்திற்காக ஈரானின் ரகசிய தகவல்களை மொசாட்டிற்கு அனுப்ப முயன்றதாக ஈரானிய நீதித்துறை தெரிவித்துள்ளது.

    முன்னதாக, மே மாத இறுதியில், பெத்ராம் மதானி என்ற மற்றொருவரையும் இஸ்ரேலுக்காக உளவு பார்த்ததாக ஈரான் தூக்கிலிட்டது.

    இந்த நிகழ்வுகள், ஈரான் மற்றும் இஸ்ரேலிய உளவு அமைப்புகளுக்கு இடையேயான தீவிரமான மற்றும் இரகசிய மோதல்களை எடுத்துக்காட்டுகின்றன.

    • 2022 ஜனவரி முதல் 4 பேரும் கண்காணிக்கப்பட்டு வந்தனர்
    • பெரிய திட்டத்திற்கு அவர்கள் தயார்படுத்தப்பட்டதாக ஈரான் தெரிவித்தது

    இஸ்ரேல் நாட்டின் மொசாட் (Mossad) உளவு துறையுடன் தொடர்பு கொண்டு உளவு வேலை பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்ட ஒரு பெண் உட்பட 4 பேருக்கு ஈரானில் நேற்று மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

    ஆள் கடத்தல், அச்சுறுத்துதல், வாகனங்கள் மற்றும் வீடுகளை எரித்தல், மொபைல் போன்களை திருடுதல் உட்பட பல குற்றங்களில் இவர்கள் இஸ்ரேலுக்காக ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டு ஈரான் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது.

    "ஈரானுக்கு எதிராக சதி வேலையில் ஈடுபட்ட 4 பேர்களுக்கு சட்ட நடவடிக்கைகளுக்கு உட்பட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. 2022 ஜனவரி மாதம் முதல் நால்வரும் ஈரான் உளவு துறையால் கண்காணிக்கப்பட்டு வந்தனர். மே மாதம் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மிக பெரிய திட்டத்திற்காக இஸ்ரேலால் தயார் செய்யப்பட்டனர்" என ஈரான் நீதிமன்ற செய்திகளை வெளியிடும் மிசான் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தண்டனை பெற்ற நால்வர் - வஃபா ஹனாரெ, அரம் ஒமாரி, ரஹ்மான் பர்ஹாசோ மற்றும் நசிம் நமாசி (பெண்) ஆவர்.

    கடந்த பல மாதங்களாக, தங்கள் நாட்டிற்குள் சதி வேலைகளில் இஸ்ரேல் ஈடுபடுவதாக ஈரான் குற்றம் சாட்டி வந்ததும், அந்த குற்றச்சாட்டுக்களை இஸ்ரேல் ஒப்பு கொள்ளவோ, மறுக்கவோ இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

    • அணு ஆயுத திட்டம் குறித்த விவரங்களை சேகரிக்கவே இந்த முயற்சி.
    • மொசாட் உளவாளிகள் ரகசிய ஆவணங்களை எடுத்துச் சென்றனர்.

    ஈரான் புலனாய்வு அமைப்புகளில் வெளிநாட்டு உளவாளிகள் ஊடுருவியதாக ஈரான் முன்னாள் அதிபர் மகமுத் அகமதிநெஜத் குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பான நேர்காணலில் அவர், "ஈரான் ரகசிய அமைப்பின் தலைவர் உண்மையில் இஸ்ரேலின் தேசிய புலனாய்வு முகமையான மொசாட்-இன் ரகசிய உளவாளி," என்று தெரிவித்தார்.

    இஸ்ரேல் நடவடிக்கைகளை உளவு பார்க்க நிமயகமிக்கப்பட்ட ஈரான் பாதுகாப்பு அமைப்பின் தலைவரை மொசாட் பயன்படுத்திக் கொண்டது என்று ஈரான் முன்னாள் அதிபர் மகமுத் தெரிவித்தார். இதன் மூலம் ஈரானை சேர்ந்த கிட்டத்தட்ட 20 உளவாளிகள் இஸ்ரேலுக்கு மிக முக்கிய தகவல்களை வழங்கியுள்ளனர். ஈரானின் அணு ஆயுத திட்டம் குறித்த விவரங்களை சேகரிக்கவே இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது என்று அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

    ஈரானை இஸ்ரேல் உளவு பார்ப்பதாக குற்றச்சாட்டு எழுந்திருப்பது முதல் முறையில்லை. முன்னதாக 2018 ஆம் ஆண்டு இஸ்ரேல் பிதமர் பெஞ்சமின் நேதன்யாகு ஈரானின் மிக முக்கிய அணு ஆயுத திட்டம் குறித்த விவரங்களை இஸ்ரேல் உளவாளிகள் சேகரித்ததாக பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்தார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்ட ஆவணங்களில், மொசாட் உளவாளிகள் தெஹ்ரானி வேர்ஹவுசுக்குள் நுழைந்து கிட்டத்தட்ட 1 லட்சத்திற்கும் அதிகமான ரகசிய ஆவணங்களை எடுத்துச் சென்றனர். இந்த நடவடிக்கையில், கிட்டத்தட்ட 20-க்கும் மேற்பட்ட உளவாளிகள் சுமார் ஆறு மணி நேரம் ஈடுபட்டனர் என்று கூறப்பட்டது. இந்த ஆவணங்களால் ஈரானின் அணு ஆயுத திட்டம் உலக அரசியலில் புயலை கிளப்பியது. 

    ×