search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mosque"

    • சிபிஐ, அமலாக்கத்துறை போன்ற விசாரணை அமைப்புகளின் உதவியுடன் பாஜக தங்களை குறிவைப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன
    • டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்

    "சிபிஐ, அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, தேர்தல் பத்திரம், இந்து - முஸ்லீம், கோயில் - மசூதி ஆகியவை இல்லையென்றால் பாஜக 100 இடங்களை கூட தாண்டாது" என்று ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார்.

    சிபிஐ, அமலாக்கத்துறை, வருமான வரித்துறை போன்ற விசாரணை அமைப்புகளின் உதவியுடன் பாஜக தங்களை குறிவைப்பதாக எதிர்க்கட்சிகள் தொடர்ச்சியாக குற்றம் சாட்டி வருகின்றன.

    டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் ஆகியோர் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • யாருடைய உணர்வுகளையும் நான் புண்படுத்த வில்லை என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன்.
    • இதுபோன்ற வீடியோவினால் பாதிக்கப்பட்டுள்ளேன், நான் மன்னிப்பு கேட்க விரும்புகிறேன்.

    1984-ம் ஆண்டு முதல், ஹைதராபாத் தொகுதி ஏஐஎம்ஐஎம் வசம் உள்ளது. முதலில் சுல்தான் சலாவுதீன் ஓவைசி பின்னர் 2004 முதல் அவரது மகன் அசாதுதீன் ஒவைசி என 40 வருடங்களாக ஓவைசிகளின் குடும்ப கோட்டையாக ஹைதராபாத் உள்ளது.

    நான்கு முறை எம்.பி-யாக இருந்த அசாதுதீன் ஒவைசி, 2019-ல் பாஜகவின் பகவந்த் ராவை 2.5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். இந்த முறை அவருக்குப் போட்டியாக தொகுதியில் செல்வாக்கான மாதவி லதா நிறுத்தப்பட்டுள்ளார்.




    இந்நிலையில் பாஜக எம்.எல்.ஏ ராஜா சிங்கின் ராம நவமி ஷோபா யாத்திரை நடத்த காவல்துறை அனுமதி மறுத்தது. தடையை மீறி

    பழைய ஹைதராபாத்தில் உள்ள சித்தியம்பர் பஜார் சந்திப்பு அருகே நடைபெற்ற ராமநவமி ஊர்வலத்தில் பாஜக வேட்பாளர் மாதவி லதா பங்கேற்று, திறந்த வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது மாதவி லதா, அங்குள்ள மசூதியை நோக்கி வில்-அம்பு ஏவுவது போன்ற செய்கை செய்தார். இந்த வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.பாஜக வேட்பாளரின் இந்த செயலுக்கு கண்டனங்கள் வலுத்தன. மாதவி லதா மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க பல தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர்.




    இந்நிலையில் பாஜக வேட்பாளர் மாதவி லதா மாதவி லதா கூறியதாவது :-

    'எனது வீடியோ சமூக ஊடகங்களில் பரவுவது எனது கவனத்திற்கு வந்தது. இது முழுமையடையாத வீடியோ மற்றும் யாருடைய உணர்வுகளையும் நான் புண்படுத்த வில்லை என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன். இதுபோன்ற வீடியோவினால் நான் பாதிக்கப்பட்டுள்ளேன், நான் மன்னிப்பு கேட்க விரும்புகிறேன்.

    நேற்று, ராம நவமியின் போது, நான் வானத்தை நோக்கி ஒரு (கற்பனை) அம்பு எய்ததாக சைகை செய்து கொண்டிருந்தேன். அந்த அம்பை ஒரு கட்டிடத்தை நோக்கி எய்தேன், அப்போது மசூதி அங்கிருந்தது தெரியாது" என கூறி உள்ளார்.

    • இந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் இடையில் பிளவை உருவாக்க சதி நடக்கிறது
    • பாஜக வேட்பாளரின் இந்த செயலுக்கு கண்டனங்கள் வலுத்து வருகின்றன.

    1984-ம் ஆண்டு முதல், ஹைதராபாத் தொகுதி ஏஐஎம்ஐஎம் வசம் உள்ளது. முதலில் சுல்தான் சலாவுதீன் ஓவைசி பின்னர் 2004 முதல் அவரது மகன் அசாதுதீன் ஒவைசி என 40 வருடங்களாக ஓவைசிகளின் குடும்ப கோட்டையாக ஹைதராபாத் உள்ளது.

    நான்கு முறை எம்.பி-யாக இருந்த அசாதுதீன் ஒவைசி, 2019-ல் பாஜகவின் பகவந்த் ராவை 2.5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். இந்த முறை அவருக்குப் போட்டியாக தொகுதியில் செல்வாக்கான மாதவி லதா நிறுத்தப்பட்டுள்ளார்.




    இந்நிலையில் பாஜக எம்எல்ஏ ராஜா சிங்கின் ராம நவமி ஷோபா யாத்திரை இன்று நடத்த காவல்துறை அனுமதி மறுத்தது. தடையை மீறி நடநத ராமநவமி கொண்டாட்டத்தின் போது

    ஹைதராபாத் பாஜக வேட்பாளர் மாதவி லதா, மசூதியை நோக்கி வில் அம்புகளை ஏவுவது போன்ற செய்கை செய்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.



    பாஜக வேட்பாளரின் இந்த செயலுக்கு கண்டனங்கள் வலுத்து வருகின்றன. மாதவி லதா மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க கோரி பல தரப்பினரும் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    இந்நிலையில் ராஜா சிங்கின் ராம நவமி ஷோபா யாத்திரைக்கு அனுமதி மறுத்த தெலுங்கானா அரசை மாதவி லதா கடுமையாக கண்டித்து உள்ளார்.

    இது குறித்து மாதவி லதா கூறியதாவது :-



    "சமீபத்தில் ரம்ஜான் கொண்டாட்டங்களுக்கு போலீசார் அனுமதி அளித்தனர். ஆனால் தற்போது தேர்தல் நடத்தை விதிகளை காரணம் காட்டி ஷோபா யாத்திரைக்கு அனுமதி மறுத்துள்ளனர். தேர்தல் நடத்தை விதிகளின் போது தான் ரம்ஜான் கொண்டாட்டம் இருந்தது.

    தற்போது ராஜா சிங்கிற்கு ஏன் அனுமதி வழங்கவில்லை. அவர் நீண்ட காலமாக ராம நவமி ஷோபா யாத்திரை நடத்தி வருகிறார். தற்போது இந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் இடையில் பிளவை உருவாக்க சதி நடக்கிறது " என  அவர் கூறினார்.

    • மசூதிகளில் நேற்று முன்தினம் அடுத்தடுத்து தற்கொலை படை தாக்குதல் நடந்தது.
    • பலியானவர்கள் எண்ணிக்கை 65-ஆக உயர்ந்துள்ளது.

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் பலுசிஸ்கான் மாகாணம் மற்றும் கைபர் பக்துன்சலா மாகாணத்தில் உள்ள மசூதிகளில் நேற்று முன்தினம் அடுத்தடுத்து தற்கொலை படை தாக்குதல் நடந்தது. இந்த 2 சம்பவங்களிலும் பலியானவர்கள் எண்ணிக்கை 65-ஆக உயர்ந்துள்ளது. இந்த சம்பவத்துக்கு இந்தியா தான் காரணம் என பாகிஸ்தான் குற்றம்சாட்டி உள்ளது.

    இது தொடர்பாக அந்நாட்டு உள்துறை மந்திரி சர்பராஸ் புக்டி கூறும் போது பாகிஸ்தானில் அடுத்தடுத்து நடத்தப்பட்ட தற்கொலை படை தாக்குலுக்கு இந்தியாவின் உளவு நிறுவனமே காரணமாகும் என தெரிவித்துள்ளார்.

    • மக்கள் மிலாடி நபி கொண்டாட்டத்திற்காக ஊர்வலமாக செல்ல கூடியிருந்தனர்
    • குண்டு வெடிப்பில் காவல்துறை துணை கண்காணிப்பாளர் பலியானார்

    இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தானின் தென்மேற்கில் உள்ளது பலுசிஸ்தான் பிராந்தியம். இதற்கு வடமேற்கே உள்ளது மஸ்டங் மாவட்டம்.

    இன்று, உலகெங்கும் இஸ்லாமியர்கள் கொண்டாடும் மிலாது நபி பண்டிகை என்பதால் இங்குள்ள மதினா மசூதிக்கு அருகே இப்பண்டிகையை கொண்டாடவும், பிறகு ஒரு ஊர்வலமாக செல்லவும் மக்கள் திட்டமிட்டிருந்தனர். அப்போது யாரும் எதிர்பாராதவிதமாக திடீரென ஒரு சக்திவாய்ந்த குண்டு வெடித்தது.

    இதில் 52 பேர் கொல்லப்பட்டனர்; 130 பேருக்கும் மேல் காயமடைந்துள்ளனர். இது ஒரு தற்கொலைப்படை தாக்குதல் என தெரிய வந்துள்ளது.

    இந்த குண்டு வெடிப்பில் அங்கு காவல்துறை பணியின் காரணமாக வந்திருந்த மஸ்டங் மாவட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் நவாஸ் கஷ்கோரியும் பலியானார். கஷ்கோரியின் காருக்கு அருகே அந்த தற்கொலை படை தாக்குதல் நடைபெற்றதாக நகர காவல்துறை அதிகாரி மொஹம்மத் ஜாவெத் லெஹ்ரி தெரிவித்துள்ளார்.

    காயமடைந்தவரகள் அனைவரும் அருகிலுள்ள மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். அதில் ஒரு சிலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. பலத்த காயமடைந்துள்ளவர்கள் க்வெட்டா (Quetta) பகுதி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

    பலுசிஸ்தான் மாநிலத்தின் இடைக்கால செய்தித்துறை அமைச்சர ஜன் அசக்சாய், "மத சகிப்புதன்மையையும் அமைதியையும் அன்னிய நாட்டு சக்திகளின் உதவியுடன் அழிக்க எதிரிகள் நினைக்கின்றனர். தாக்குதலுக்கு பின்னணியில் உள்ள அனைவரும் கைது செய்யப்படுவார்கள்" என தெரிவித்துள்ளார்.

    இந்த தற்கொலைப்படை தாக்குதலுக்கு பாகிஸ்தானில் முக்கிய அரசியல் தலைவர்கள் பரவலாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    • உடுமலை ஜாமிஆ மஸ்ஜித் பள்ளிவாசல் முத்தவல்லி யூ.எஸ்.அப்துல் கபூர் தலைமை வகிக்கிறார்.
    • பள்ளிவாசலை வடிவமைத்த பொறியாளர் ஏ.சம்சுதின் ஆகியோர் வாழ்த்தி பேசுகின்றனர்.

    உடுமலை :

    திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை தளி ரோடு தெற்கு குட்டை வீதியில் உள்ள 120 ஆண்டு பழமையான புனரமைக்கப்பட்ட ஜாமிஆ மஸ்ஜித் சுன்னத் ஜமாத் பள்ளிவாசல் திறப்பு விழா நாளை 29-தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.

    இவ்விழாவிற்கு உடுமலை ஜாமிஆ மஸ்ஜித் பள்ளிவாசல் முத்தவல்லி யூ.எஸ்.அப்துல் கபூர் தலைமை வகிக்கிறார். இமாம் எம்.முஹம்மது யூசுப்ஹசனி கிரா அத் செய்கிறார். செயலாளர் சையத் நூருல் ஹமீத் வரவேற்று பேசுகிறார். உடுமலை வட்டார அனைத்து பள்ளிவாசல் ஜமாத் நிர்வாகிகள், உலமா பெருமக்கள், ஜமா அத்தார்கள் முன்னிலை வகிக்கின்றனர்.

    தலைமை இமாம்கள் செய்யிது ஈஸா (பூர்வீக பள்ளிவாசல்) முஹம்மது அப்துல்லாஹ் (ஜாமிஆ மஸ்ஜித் பள்ளிவாசல்) முஹம்மது யூசுப் (பிர்தெளஸ்ஸியா பள்ளிவாசல்) உடுமலை மாரியம்மன் கோவில் பரம்பரை அறங்காவலர் யூ.எஸ்.எஸ்.ஸ்ரீதர், சி.எஸ்.ஐ. இம்மானுவேல் ஆலயம் கே.எல்.லூதர், பள்ளிவாசலை வடிவமைத்த பொறியாளர் ஏ.சம்சுதின் ஆகியோர் வாழ்த்தி பேசுகின்றனர்.

    விழாவில் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். சிறுபான்மை நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி. கே.எஸ்.மஸ்தான், திருச்சி அன்வாருல் உலூம் அரபிக் கல்லூரி முதல்வர் ரூஹூல் ஹக் ஆகியோர் சிறப்புரையாற்றுகின்றனர்.

    விழாவில் பொள்ளாச்சி எம்.பி.சண்முகசுந்தரம், உடுமலை எம்.எல்.ஏ. ராதாகிருஷ்ணன், திருப்பூர் மாநகராட்சி மண்டல குழு தலைவர் பத்மநாபன், உடுமலை நகர மன்ற தலைவர் மத்தீன், துணைத் தலைவர் கலைராஜன், தி.மு.க. உடுமலை நகர செயலாளர் வேலுச்சாமி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கே.எம்.முபாரக் அலி, காந்திநகர் கூட்டுறவு வீட்டு வசதி சங்க தலைவர் ஹக்கீம் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொள்கின்றனர்.

    விழாவிற்கான ஏற்பாடுகளை ஜாமிஆ மஸ்ஜித் நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் சையத் பக்ருதீன், அப்துல் அமீது, முஹம்மது அப்துல்லாஹ், சதாம் உசேன், காதர்உசேன், சையத் யூனூஸ் மற்றும் ஆடிட்டர் ஹக்கீம் ஆகியோர் செய்துள்ளனர்.

    சீர்காழி அருகே வெடிகுண்டு மிரட்டல் கடிதத்தை அனுப்பிய மர்ம நபர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சீர்காழி:

    இலங்கையில் கிறிஸ்தவ தேவாலயங்களில் தீவிரவாதிகள் மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவம் உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் நாகை மாவட்டம் சீர்காழியை அடுத்துள்ள ஒரு பள்ளிவாசலுக்கு வெடிகுண்டு மிரட்டல் கடிதம் வந்துள்ளது. இதுபற்றிய விபரம் வருமாறு:

    நாகை மாவட்டம் சீர்காழியை அடுத்த கொள்ளிடம், தைக்கால் பகுதியில் காதர்ரியா பள்ளிவாசல் உள்ளது. இந்த பள்ளிவாசலுக்கு கடந்த 23-ந்தேதி ஒரு கடிதம் வந்தது. அதனை தபால்காரர் அருகில் உள்ள பிரம்பு விற்பனை கடையில் கொடுத்து விட்டு சென்றுவிட்டார்.

    அதனை கடை உரிமையாளர் ஜமாத் தலைவர் முகமது சுல்தானிடம் நேற்று இரவு கொடுத்தார். அதனை பிரித்துப் பார்த்தபோது தைக்கால் பள்ளிவாசலில் இந்த மாதம் இறுதியில் வெடிகுண்டு வெடிக்கும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த கடிதத்தை அனுப்பியவர் முகவரியில் ஆச்சாள்புரத்தை சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பெயர் உள்ளது. மேலும் இந்த கடிதத்தில் 2 பேரின் பெயர்களும் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இந்த கடிதத்தை ஜமாத் தலைவர் முகமது சுல்தான் கொள்ளிடம் போலீசில் ஒப்படைத்து புகார் செய்தார். இந்த மிரட்டல் கடிதம் வதந்தியை பரப்புவதற்காக எழுதப்பட்டதாக இருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். இந்த கடிதத்தை அனுப்பிய மர்ம நபர்கள் யார்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் சீர்காழி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    நாகை மாவட்டம் உள்ள பிரசித்தி பெற்ற நாகூர் தர்காவில் கந்தூரி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் ஏராளமான முஸ்லீம்கள் கலந்து கொண்டனர்.
    நாகை மாவட்டம் நாகூரில் பிரசித்தி பெற்ற நாகூர் ஆண்டவர் தர்கா உள்ளது. சிறந்த மதநல்லிணக்க வழிபாட்டு தலமாக விளங்கும் இந்த தர்காவில் நாகூர் ஆண்டவரின் மறைந்த தினம் ஆண்டுதோறும் கந்தூரி விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டிற்கான 462-வது கந்தூரி விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    விழாவையொட்டி முன்னதாக நாகையில் இருந்து கொடி ஊர்வலம் நடந்தது. அப்போது சிங்கப்பூரில் இருந்து வரவழைக்கப்பட்ட கொடி அலங்கரிக்கப்பட்ட ரதங்களில் வைத்து நாகையில் இருந்து ஊர்வலமாக நாகூருக்கு கொண்டு செல்லப்பட்டது. அதனை தொடர்ந்து நாகை மீராப்பள்ளி ரதத்தடியில் இருந்து கொடி ஊர்வலம் புறப்பட்டது.

    பின்னர் பெரிய ரதம், சின்ன ரதம், டீஸ்டா கப்பல், செட்டி பல்லக்கு, கப்பல் ஆகிய 5 கொடிகள் எடுத்து செல்லப்பட்டன. இதையடுத்து மினரா, சிறிய கப்பல், நகராமேடை, சாம்பிராணிசட்டி, பிறை, படகு போன்ற அலங்கார வடிவங்கள் கொடி ஊர்வலத்தில் அணிவகுத்து சென்றன.

    நாகை புதுப்பள்ளிதெரு வழியாக நூல்கடை தெரு, வெங்காயகடை தெரு, பெரிய கடை தெரு, நீலா கீழவீதி, தெற்கு, வடக்கு வீதி, தேரடி தெரு, புதுத்தெரு, சர்அகமது தெரு, கொட்டுப்பாளைய தெரு உள்ளிட்ட 40 தெருக்களில் கொடி ஊர்வலம் நடந்தது. பின்னர் அண்ணாசிலை, பப்ளிக் ஆபீஸ் சாலை வழியாக நாகூர் எல்லையை ரதங்கள் சென்றடைந்தன.

    கொடிகள் வைக்கப்பட்டிருந்த ரதங்கள் நாகை வீதிகளில் ஊர்வலமாக வந்தபோது வீட்டு மாடிகளிலும், வீதிகளிலும் ஆங்காங்கே ஏராளமான பொதுமக்கள் திரண்டு நின்று கொடி ஊர்வலத்தில் வந்த அலங்கார பல்லக்குகள் மற்றும் ரதங்களை கண்டு மகிழ்ந்தனர். குட்டிக்கப்பல் போன்ற ரதங்களை சிறுவர்கள் உற்சாகமாக இழுத்து சென்றனர். கொடி ஊர்வலத்தின்போது சாலையின் இருபுறங்களிலும் மக்கள் திரளாக கூடி நின்று பெரிய ரதத்தின் மீது பூக்களை தூவி பிரார்த்தனை செய்தனர்.

    பக்தர்களுக்கு அலங்கார ரதங்களில் இருந்து எலுமிச்சை பழம், இனிப்புகள் பிரசாதமாக வழங்கப்பட்டன. கொடி ஊர்வலம் நாகூர் எல்லையில் இருந்து நாகூர் செய்யது பள்ளி தெரு, குஞ்சாலி மரைக்காயர் தெரு, ரெயிலடி தெரு உள்ளிட்ட 14 தெருக்களின் வழியாக சென்று தர்காவின் அலங்கார வாசலை சென்றடைந்தது. பின்னர் தர்காவில் துவா ஓதப்பட்டு விழா கொடிகள் தர்கா ஊழியர்களால் மினராக்களின் உச்சிகளுக்கு கொண்டு செல்லப்பட்டது.

    இதையடுத்து தர்காவின் பரம்பரை கலிபா மஸ்தான்சாகிபு பாத்திகா ஓதியதும் மின்விளக்கு அலங்காரத்தில் ஜொலித்து கொண்டிருந்த 5 மினராக்களிலும் கொடிகள் ஏற்றி வைக்கப்பட்டன. அப்போது வாணவேடிக்கை நடைபெற்றது. கொடியேற்றத்தை தர்காவை சுற்றி குழுமியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்டு மகிழ்ந்து பிரார்த்தனை செய்தனர்.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனக்கூடு ஊர்வலம் வருகிற 15-ந் தேதி நடக்கிறது. நாகையில் உள்ள அபிராமி அம்மன் திருவாசலில் இருந்து இரவு 7 மணிக்கு தாபூத்து என்னும் இந்த சந்தனக்கூடு புறப்பட்டு 16-ந் தேதி அதிகாலை 4.30 மணிக்கு நாகூர் தர்காவை வந்தடைகிறது. பின்னர் நாகூர் தர்காவில் பாத்தியா ஓதி நாகூர் ஆண்டவருக்கு சந்தனம் பூசப்படும். முன்னதாக தர்காவில் வாணவேடிக்கை, பீர்வைக்குதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கின்றன. விழாவையொட்டி பாதுகாப்பு பணியில் நூற்றுக்கணக்கான போலீசார் ஈடுபட்டு இருந்தனர். 
    ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அல் குத்பு மகான் செய்யது முகம்மது அப்பா, கீது ஒலியுல்லா பாதுஷா நாயகத்தின் 844-வது ஆண்டு கந்தூரி விழாவை முன்னிட்டு கொடி ஏற்றப்பட்டு மவுலீது (புகழ்மாலை) ஓதப்பட்டு நேர்ச்சி வழங்கப்பட்டது.
    ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அல் குத்பு மகான் செய்யது முகம்மது அப்பா, கீது ஒலியுல்லா பாதுஷா நாயகத்தின் 844-வது ஆண்டு கந்தூரி விழா நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு கொடி ஏற்றப்பட்டு மவுலீது (புகழ்மாலை) ஓதப்பட்டு நேர்ச்சி வழங்கப்பட்டது.

    உலக மக்களின் ஒற்றுமை மற்றும் அமைதிக்காக மாவட்ட அரசு காஜி சலாஹீதீன் ஆலிம் சிறப்பு பிரார்த்தனை செய்தார்.

    தொடர்ந்து 14 நாட்களுக்கு தர்கா மண்ட பத்தில் தினந்தோறும் இரவு மவுலீது ஓதப்பட்டு நேர்ச்சி வழங்கப்படும். வருயீஜீஷ் 19-ந் தேதி இரவு 12 மணிக்கு சந்தனம் பூசும் விழா நடைபெறும். தொடர்ந்து பிப்ரவரி 5-ந் தேதி மாலை 5.30 மணியளவில் கொடி இறக்கப்பட்டு ஆயிரக்கணக் கானவர்களுக்கு நெய் சோறு வழங்கப்படும்.

    தர்ஹா நிர்வாகிகள் சகாப்தீன், ஹபீப் முகமது தம்பி மற்றும் உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர். இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் மக்பூல் சுல்தான், ஜலாலுதீன், ஜகுபர், முத்துவேல், அபூபக்கர் சித்தீக், அடுமை உள்ளிட்டவர்கள் செய்து வருகின்றனர். கொடியேற்று விழாவில் அனைத்து சமுதாயத்தை சேர்ந்த ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர்.
    பொட்டல்புதூர் முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசல் கந்தூரி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.
    நெல்லை மாவட்டம் கடையம் அருகே உள்ள பொட்டல்புதூர் முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசல் கந்தூரி விழா ஆண்டு தோறும் சிறப்பாக கொண்டாடப்படும். இந்த ஆண்டுக்கான கந்தூரி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    இதைமுன்னிட்டு நேற்று முன்தினம் மதியம் 2 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட யானையில் கீழுர் ஜமாஅத்தில் இருந்து நிறைபிறை கொடி ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு பள்ளிவாசல் கொடிமரத்தில் ஏற்றப்பட்டது. பின்னர் சிறப்பு துஆ ஓதப்பட்டது. இதில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

    விழாவில் வருகிற 17-ந் தேதி (திங்கட்கிழமை) இரவு 8 மணிக்கு பச்சைக்களை ஊர்வலம் நடக்கிறது. 18-ந் தேதி காலை 10 மணிக்கு சுவாமி கம்முத்தவல்லி இனாம்தார் எஸ்.பி.ஷா இல்லத்தில் ராத்திபு ஓதும் நிகழ்ச்சியும், மதியம் 12 மணிக்கு அரண்மனை கொடியேற்றமும், 2 மணிக்கு மேலூர் ஜமாஅத்தில் இருந்து 10-ம் இரவு கொடி ஊர்வலம் தொடங்கி மாலை 6 மணிக்கு கொடியேற்றமும் நடைபெறுகிறது. இரவு 10 மணிக்கு ரவணசமுத்திரத்தில் இருந்து சந்தனக்கூடு ஊர்வலம் நடைபெறுகிறது.

    வருகிற 19-ந் தேதி (புதன்கிழமை) அதிகாலை 5 மணிக்கு பள்ளிவாசலில் இனாம்தார் எஸ்.பி.ஷா மூலஸ்தானத்தில் சந்தனம் பூசும் நிகழ்ச்சியும், மாலை 6 மணிக்கு தீப அலங்காரத்திடலில் தீப அலங்காரமும் நடைபெறுகிறது. 21-ந் தேதி மாலையில் ராத்திபு ஓதுதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசல் நிர்வாக கமிட்டி தலைவர் எஸ்.பி.ஷா, கமிட்டி உறுப்பினர்கள் செய்து வருகின்றனர்.
    திசையன்விளை அருகே உள்ள ஆத்தங்கரை பள்ளிவாசல் கந்தூரி விழா கொடியேற்றம் நேற்று நடந்தது. அப்போது அங்கு கூடியிருந்தவர்கள் ‘நாரே தக்குபீர் அல்லாகு அக்பர்‘ என கோஷம் எழுப்பினர்.
    நெல்லை மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற தர்காக்களில் திசையன்விளை அருகே ஆத்தங்கரை பள்ளிவாசலில் உள்ள சேகு முகம்மது (ஒலி), சையதலி பாத்திமா (ரலி) தர்காவும் ஒன்றாகும். இங்கு ஆண்டு தோறும் கந்தூரி விழா வெகு சிறப்பாக நடைபெறும். அதுபோல் இந்த ஆண்டுக்கான கந்தூரி விழா கொடியேற்றம் நேற்று நடந்தது.

    இதையொட்டி நேற்று அதிகாலை கத்முல் குர்ஆனுடன் விழா தொடங்கியது. அதனை தொடர்ந்து பள்ளிவாசல் இமாம் முகம்மது யூசுப் தலைமையில் குர்ஆன் தமாம் செய்யப்பட்டது. காலை 10 மணிக்கு அரண்மனை புலிமான்குளத்தில் இருந்து யானை மீது கொடி, சந்தனகுடம் ஆகியன பரம்பரை டிரஸ்டி ஹபிபுர் ரகுமான் பிஜிலி தலைமையில் ஊர்வலமாக தர்காவுக்கு புறப்பட்டது.

    11.45 மணிக்கு கொடி ஊர்வலம் தர்காவை அடைந்தது. பரம்பரை டிரஸ்டி ஹபிபுர் ரகுமான் பிஜிலி யானையில் இருந்தவாறு பள்ளிவாசல் முன்பு கொடியேற்றினார். அப்போது அங்கு கூடியிருந்தவர்கள் ‘நாரே தக்குபீர் அல்லாகு அக்பர்‘ என கோஷம் எழுப்பினர். அதை தொடர்ந்து தர்காவில் சந்தனம் மெழுகுதல் நடந்தது.

    பின்னர் தர்காவில் பச்சை நிற போர்வை போர்த்தப்பட்டு பூ அணிவிக்கப்பட்டு சிறப்பு துவா ஓதப்பட்டது. மாலையில் மவ்லூது ஷரீப் ஓதுதல், ராத்திப்புத்துல் காதிரிய்யா திக்று மஜ்லீஸ் ஓதுதல் நடந்தது. இரவில் இஸ்லாமியர்களின் மார்க்க சொற்பொழிவு, இன்னிசை கச்சேரி நடந்தது. இதில் நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் இருந்து மட்டுமில்லாமல் கேரள மாநிலத்தில் இருந்தும் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

    விழாவில் இன்று (வியாழக்கிழமை) அதிகாலையில் நன்றி நவிலல், சிறப்பு துவா ஓதுதல், நேர்ச்சை வினியோகம் ஆகியன நடக்கிறது. கந்தூரி விழாவை முன்னிட்டு நெல்லை உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

    விழா ஏற்பாடுகளை பள்ளிவாசல் பரம்பரை டிரஸ்டிகள் நயாஸ் அகமது பிஜிலி, ஹபிபுர் ரகுமான் பிஜிலி ஆகியோர் செய்திருந்தனர்.
    பொட்டல்புதூர் முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசல் கந்தூரி விழா வருகிற 8-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
    நெல்லை மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற தர்காக்களில் கடையம் அருகே பொட்டல்புதூரில் உள்ள முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசல் தர்காவும் ஒன்றாகும்.

    இங்கு ஆண்டு தோறும் கந்தூரி விழா சிறப்பாக நடைபெறும். அதுபோல் இந்த ஆண்டுக்கான கந்தூரி விழா வருகிற 8-ந் தேதி (சனிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    அதனை முன்னிட்டு அன்று மதியம் 2 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட யானை மீது கீழுர் ஜமாஅத் நிறைபிறை கொடி, மேள தாளம் முழங்க வான வேடிக்கையுடன் பொட்டல்புதூரின் முக்கிய வீதி வழியாக சென்று பள்ளிவாசலில் உள்ள கொடிமரத்தில் கொடியேற்றம் நடக்கிறது.

    தொடர்ந்து 17-ந் தேதி (திங்கட்கிழமை) இரவு 8 மணிக்கு பச்சைக்கனை ஊர்வலம் நடைபெறும். 18-ந்தேதி காலை 10 மணிக்கு சுவாமி கம்முத்தவல்லி இனாம்தார் எஸ்.பி.ஷா இல்லத்தில் ராத்திபு நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    பகல் 12 மணிக்கு அரண்மனை கொடியேற்றமும், மதியம் 2 மணிக்கு மேலூர் ஜமாஅத் சார்பில் கொடி ஊர்வலம் தொடங்கி, மாலை 6 மணிக்கு கொடியேற்றம் நடைபெறுகிறது.

    தொடர்ந்து இரவு 10 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட யானைகள் முன்வர மேள தாளங்கள் முழங்க ரவணசமுத்திரத்தில் இருந்து சந்தனக்கூடு ஊர்வலம் புறப்பட்டு, அதிகாலை 5 மணிக்கு பள்ளிவாசல் வந்தடையும். 19-ந் தேதி (புதன்கிழமை) அதிகாலை 5 மணிக்கு பள்ளிவாசலில் இனாம்தார் எஸ்.பி.ஷா மூலஸ்தானத்தில் சந்தனம் பூசும் நிகழ்ச்சியும், மாலை 6 மணிக்கு தீப அலங்காரத்திடலில் தீப அலங்காரமும் நடைபெறுகிறது. 21-ந் தேதி இரவு ராத்திபு ஓதுதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. ஏற்பாடுகளை முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசல் நிர்வாக கமிட்டி தலைவர் எஸ்.பி.ஷா மற்றும் கமிட்டி உறுப்பினர்கள் செய்து வருகின்றனர். 
    ×