என் மலர்

    நீங்கள் தேடியது "Mosque"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • உடுமலை ஜாமிஆ மஸ்ஜித் பள்ளிவாசல் முத்தவல்லி யூ.எஸ்.அப்துல் கபூர் தலைமை வகிக்கிறார்.
    • பள்ளிவாசலை வடிவமைத்த பொறியாளர் ஏ.சம்சுதின் ஆகியோர் வாழ்த்தி பேசுகின்றனர்.

    உடுமலை :

    திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை தளி ரோடு தெற்கு குட்டை வீதியில் உள்ள 120 ஆண்டு பழமையான புனரமைக்கப்பட்ட ஜாமிஆ மஸ்ஜித் சுன்னத் ஜமாத் பள்ளிவாசல் திறப்பு விழா நாளை 29-தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.

    இவ்விழாவிற்கு உடுமலை ஜாமிஆ மஸ்ஜித் பள்ளிவாசல் முத்தவல்லி யூ.எஸ்.அப்துல் கபூர் தலைமை வகிக்கிறார். இமாம் எம்.முஹம்மது யூசுப்ஹசனி கிரா அத் செய்கிறார். செயலாளர் சையத் நூருல் ஹமீத் வரவேற்று பேசுகிறார். உடுமலை வட்டார அனைத்து பள்ளிவாசல் ஜமாத் நிர்வாகிகள், உலமா பெருமக்கள், ஜமா அத்தார்கள் முன்னிலை வகிக்கின்றனர்.

    தலைமை இமாம்கள் செய்யிது ஈஸா (பூர்வீக பள்ளிவாசல்) முஹம்மது அப்துல்லாஹ் (ஜாமிஆ மஸ்ஜித் பள்ளிவாசல்) முஹம்மது யூசுப் (பிர்தெளஸ்ஸியா பள்ளிவாசல்) உடுமலை மாரியம்மன் கோவில் பரம்பரை அறங்காவலர் யூ.எஸ்.எஸ்.ஸ்ரீதர், சி.எஸ்.ஐ. இம்மானுவேல் ஆலயம் கே.எல்.லூதர், பள்ளிவாசலை வடிவமைத்த பொறியாளர் ஏ.சம்சுதின் ஆகியோர் வாழ்த்தி பேசுகின்றனர்.

    விழாவில் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். சிறுபான்மை நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி. கே.எஸ்.மஸ்தான், திருச்சி அன்வாருல் உலூம் அரபிக் கல்லூரி முதல்வர் ரூஹூல் ஹக் ஆகியோர் சிறப்புரையாற்றுகின்றனர்.

    விழாவில் பொள்ளாச்சி எம்.பி.சண்முகசுந்தரம், உடுமலை எம்.எல்.ஏ. ராதாகிருஷ்ணன், திருப்பூர் மாநகராட்சி மண்டல குழு தலைவர் பத்மநாபன், உடுமலை நகர மன்ற தலைவர் மத்தீன், துணைத் தலைவர் கலைராஜன், தி.மு.க. உடுமலை நகர செயலாளர் வேலுச்சாமி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கே.எம்.முபாரக் அலி, காந்திநகர் கூட்டுறவு வீட்டு வசதி சங்க தலைவர் ஹக்கீம் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொள்கின்றனர்.

    விழாவிற்கான ஏற்பாடுகளை ஜாமிஆ மஸ்ஜித் நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் சையத் பக்ருதீன், அப்துல் அமீது, முஹம்மது அப்துல்லாஹ், சதாம் உசேன், காதர்உசேன், சையத் யூனூஸ் மற்றும் ஆடிட்டர் ஹக்கீம் ஆகியோர் செய்துள்ளனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    சீர்காழி அருகே வெடிகுண்டு மிரட்டல் கடிதத்தை அனுப்பிய மர்ம நபர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சீர்காழி:

    இலங்கையில் கிறிஸ்தவ தேவாலயங்களில் தீவிரவாதிகள் மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவம் உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் நாகை மாவட்டம் சீர்காழியை அடுத்துள்ள ஒரு பள்ளிவாசலுக்கு வெடிகுண்டு மிரட்டல் கடிதம் வந்துள்ளது. இதுபற்றிய விபரம் வருமாறு:

    நாகை மாவட்டம் சீர்காழியை அடுத்த கொள்ளிடம், தைக்கால் பகுதியில் காதர்ரியா பள்ளிவாசல் உள்ளது. இந்த பள்ளிவாசலுக்கு கடந்த 23-ந்தேதி ஒரு கடிதம் வந்தது. அதனை தபால்காரர் அருகில் உள்ள பிரம்பு விற்பனை கடையில் கொடுத்து விட்டு சென்றுவிட்டார்.

    அதனை கடை உரிமையாளர் ஜமாத் தலைவர் முகமது சுல்தானிடம் நேற்று இரவு கொடுத்தார். அதனை பிரித்துப் பார்த்தபோது தைக்கால் பள்ளிவாசலில் இந்த மாதம் இறுதியில் வெடிகுண்டு வெடிக்கும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த கடிதத்தை அனுப்பியவர் முகவரியில் ஆச்சாள்புரத்தை சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பெயர் உள்ளது. மேலும் இந்த கடிதத்தில் 2 பேரின் பெயர்களும் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இந்த கடிதத்தை ஜமாத் தலைவர் முகமது சுல்தான் கொள்ளிடம் போலீசில் ஒப்படைத்து புகார் செய்தார். இந்த மிரட்டல் கடிதம் வதந்தியை பரப்புவதற்காக எழுதப்பட்டதாக இருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். இந்த கடிதத்தை அனுப்பிய மர்ம நபர்கள் யார்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் சீர்காழி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    நாகை மாவட்டம் உள்ள பிரசித்தி பெற்ற நாகூர் தர்காவில் கந்தூரி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் ஏராளமான முஸ்லீம்கள் கலந்து கொண்டனர்.
    நாகை மாவட்டம் நாகூரில் பிரசித்தி பெற்ற நாகூர் ஆண்டவர் தர்கா உள்ளது. சிறந்த மதநல்லிணக்க வழிபாட்டு தலமாக விளங்கும் இந்த தர்காவில் நாகூர் ஆண்டவரின் மறைந்த தினம் ஆண்டுதோறும் கந்தூரி விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டிற்கான 462-வது கந்தூரி விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    விழாவையொட்டி முன்னதாக நாகையில் இருந்து கொடி ஊர்வலம் நடந்தது. அப்போது சிங்கப்பூரில் இருந்து வரவழைக்கப்பட்ட கொடி அலங்கரிக்கப்பட்ட ரதங்களில் வைத்து நாகையில் இருந்து ஊர்வலமாக நாகூருக்கு கொண்டு செல்லப்பட்டது. அதனை தொடர்ந்து நாகை மீராப்பள்ளி ரதத்தடியில் இருந்து கொடி ஊர்வலம் புறப்பட்டது.

    பின்னர் பெரிய ரதம், சின்ன ரதம், டீஸ்டா கப்பல், செட்டி பல்லக்கு, கப்பல் ஆகிய 5 கொடிகள் எடுத்து செல்லப்பட்டன. இதையடுத்து மினரா, சிறிய கப்பல், நகராமேடை, சாம்பிராணிசட்டி, பிறை, படகு போன்ற அலங்கார வடிவங்கள் கொடி ஊர்வலத்தில் அணிவகுத்து சென்றன.

    நாகை புதுப்பள்ளிதெரு வழியாக நூல்கடை தெரு, வெங்காயகடை தெரு, பெரிய கடை தெரு, நீலா கீழவீதி, தெற்கு, வடக்கு வீதி, தேரடி தெரு, புதுத்தெரு, சர்அகமது தெரு, கொட்டுப்பாளைய தெரு உள்ளிட்ட 40 தெருக்களில் கொடி ஊர்வலம் நடந்தது. பின்னர் அண்ணாசிலை, பப்ளிக் ஆபீஸ் சாலை வழியாக நாகூர் எல்லையை ரதங்கள் சென்றடைந்தன.

    கொடிகள் வைக்கப்பட்டிருந்த ரதங்கள் நாகை வீதிகளில் ஊர்வலமாக வந்தபோது வீட்டு மாடிகளிலும், வீதிகளிலும் ஆங்காங்கே ஏராளமான பொதுமக்கள் திரண்டு நின்று கொடி ஊர்வலத்தில் வந்த அலங்கார பல்லக்குகள் மற்றும் ரதங்களை கண்டு மகிழ்ந்தனர். குட்டிக்கப்பல் போன்ற ரதங்களை சிறுவர்கள் உற்சாகமாக இழுத்து சென்றனர். கொடி ஊர்வலத்தின்போது சாலையின் இருபுறங்களிலும் மக்கள் திரளாக கூடி நின்று பெரிய ரதத்தின் மீது பூக்களை தூவி பிரார்த்தனை செய்தனர்.

    பக்தர்களுக்கு அலங்கார ரதங்களில் இருந்து எலுமிச்சை பழம், இனிப்புகள் பிரசாதமாக வழங்கப்பட்டன. கொடி ஊர்வலம் நாகூர் எல்லையில் இருந்து நாகூர் செய்யது பள்ளி தெரு, குஞ்சாலி மரைக்காயர் தெரு, ரெயிலடி தெரு உள்ளிட்ட 14 தெருக்களின் வழியாக சென்று தர்காவின் அலங்கார வாசலை சென்றடைந்தது. பின்னர் தர்காவில் துவா ஓதப்பட்டு விழா கொடிகள் தர்கா ஊழியர்களால் மினராக்களின் உச்சிகளுக்கு கொண்டு செல்லப்பட்டது.

    இதையடுத்து தர்காவின் பரம்பரை கலிபா மஸ்தான்சாகிபு பாத்திகா ஓதியதும் மின்விளக்கு அலங்காரத்தில் ஜொலித்து கொண்டிருந்த 5 மினராக்களிலும் கொடிகள் ஏற்றி வைக்கப்பட்டன. அப்போது வாணவேடிக்கை நடைபெற்றது. கொடியேற்றத்தை தர்காவை சுற்றி குழுமியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்டு மகிழ்ந்து பிரார்த்தனை செய்தனர்.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனக்கூடு ஊர்வலம் வருகிற 15-ந் தேதி நடக்கிறது. நாகையில் உள்ள அபிராமி அம்மன் திருவாசலில் இருந்து இரவு 7 மணிக்கு தாபூத்து என்னும் இந்த சந்தனக்கூடு புறப்பட்டு 16-ந் தேதி அதிகாலை 4.30 மணிக்கு நாகூர் தர்காவை வந்தடைகிறது. பின்னர் நாகூர் தர்காவில் பாத்தியா ஓதி நாகூர் ஆண்டவருக்கு சந்தனம் பூசப்படும். முன்னதாக தர்காவில் வாணவேடிக்கை, பீர்வைக்குதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கின்றன. விழாவையொட்டி பாதுகாப்பு பணியில் நூற்றுக்கணக்கான போலீசார் ஈடுபட்டு இருந்தனர். 
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அல் குத்பு மகான் செய்யது முகம்மது அப்பா, கீது ஒலியுல்லா பாதுஷா நாயகத்தின் 844-வது ஆண்டு கந்தூரி விழாவை முன்னிட்டு கொடி ஏற்றப்பட்டு மவுலீது (புகழ்மாலை) ஓதப்பட்டு நேர்ச்சி வழங்கப்பட்டது.
    ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அல் குத்பு மகான் செய்யது முகம்மது அப்பா, கீது ஒலியுல்லா பாதுஷா நாயகத்தின் 844-வது ஆண்டு கந்தூரி விழா நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு கொடி ஏற்றப்பட்டு மவுலீது (புகழ்மாலை) ஓதப்பட்டு நேர்ச்சி வழங்கப்பட்டது.

    உலக மக்களின் ஒற்றுமை மற்றும் அமைதிக்காக மாவட்ட அரசு காஜி சலாஹீதீன் ஆலிம் சிறப்பு பிரார்த்தனை செய்தார்.

    தொடர்ந்து 14 நாட்களுக்கு தர்கா மண்ட பத்தில் தினந்தோறும் இரவு மவுலீது ஓதப்பட்டு நேர்ச்சி வழங்கப்படும். வருயீஜீஷ் 19-ந் தேதி இரவு 12 மணிக்கு சந்தனம் பூசும் விழா நடைபெறும். தொடர்ந்து பிப்ரவரி 5-ந் தேதி மாலை 5.30 மணியளவில் கொடி இறக்கப்பட்டு ஆயிரக்கணக் கானவர்களுக்கு நெய் சோறு வழங்கப்படும்.

    தர்ஹா நிர்வாகிகள் சகாப்தீன், ஹபீப் முகமது தம்பி மற்றும் உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர். இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் மக்பூல் சுல்தான், ஜலாலுதீன், ஜகுபர், முத்துவேல், அபூபக்கர் சித்தீக், அடுமை உள்ளிட்டவர்கள் செய்து வருகின்றனர். கொடியேற்று விழாவில் அனைத்து சமுதாயத்தை சேர்ந்த ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர்.
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    பொட்டல்புதூர் முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசல் கந்தூரி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.
    நெல்லை மாவட்டம் கடையம் அருகே உள்ள பொட்டல்புதூர் முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசல் கந்தூரி விழா ஆண்டு தோறும் சிறப்பாக கொண்டாடப்படும். இந்த ஆண்டுக்கான கந்தூரி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    இதைமுன்னிட்டு நேற்று முன்தினம் மதியம் 2 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட யானையில் கீழுர் ஜமாஅத்தில் இருந்து நிறைபிறை கொடி ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு பள்ளிவாசல் கொடிமரத்தில் ஏற்றப்பட்டது. பின்னர் சிறப்பு துஆ ஓதப்பட்டது. இதில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

    விழாவில் வருகிற 17-ந் தேதி (திங்கட்கிழமை) இரவு 8 மணிக்கு பச்சைக்களை ஊர்வலம் நடக்கிறது. 18-ந் தேதி காலை 10 மணிக்கு சுவாமி கம்முத்தவல்லி இனாம்தார் எஸ்.பி.ஷா இல்லத்தில் ராத்திபு ஓதும் நிகழ்ச்சியும், மதியம் 12 மணிக்கு அரண்மனை கொடியேற்றமும், 2 மணிக்கு மேலூர் ஜமாஅத்தில் இருந்து 10-ம் இரவு கொடி ஊர்வலம் தொடங்கி மாலை 6 மணிக்கு கொடியேற்றமும் நடைபெறுகிறது. இரவு 10 மணிக்கு ரவணசமுத்திரத்தில் இருந்து சந்தனக்கூடு ஊர்வலம் நடைபெறுகிறது.

    வருகிற 19-ந் தேதி (புதன்கிழமை) அதிகாலை 5 மணிக்கு பள்ளிவாசலில் இனாம்தார் எஸ்.பி.ஷா மூலஸ்தானத்தில் சந்தனம் பூசும் நிகழ்ச்சியும், மாலை 6 மணிக்கு தீப அலங்காரத்திடலில் தீப அலங்காரமும் நடைபெறுகிறது. 21-ந் தேதி மாலையில் ராத்திபு ஓதுதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசல் நிர்வாக கமிட்டி தலைவர் எஸ்.பி.ஷா, கமிட்டி உறுப்பினர்கள் செய்து வருகின்றனர்.
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    திசையன்விளை அருகே உள்ள ஆத்தங்கரை பள்ளிவாசல் கந்தூரி விழா கொடியேற்றம் நேற்று நடந்தது. அப்போது அங்கு கூடியிருந்தவர்கள் ‘நாரே தக்குபீர் அல்லாகு அக்பர்‘ என கோஷம் எழுப்பினர்.
    நெல்லை மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற தர்காக்களில் திசையன்விளை அருகே ஆத்தங்கரை பள்ளிவாசலில் உள்ள சேகு முகம்மது (ஒலி), சையதலி பாத்திமா (ரலி) தர்காவும் ஒன்றாகும். இங்கு ஆண்டு தோறும் கந்தூரி விழா வெகு சிறப்பாக நடைபெறும். அதுபோல் இந்த ஆண்டுக்கான கந்தூரி விழா கொடியேற்றம் நேற்று நடந்தது.

    இதையொட்டி நேற்று அதிகாலை கத்முல் குர்ஆனுடன் விழா தொடங்கியது. அதனை தொடர்ந்து பள்ளிவாசல் இமாம் முகம்மது யூசுப் தலைமையில் குர்ஆன் தமாம் செய்யப்பட்டது. காலை 10 மணிக்கு அரண்மனை புலிமான்குளத்தில் இருந்து யானை மீது கொடி, சந்தனகுடம் ஆகியன பரம்பரை டிரஸ்டி ஹபிபுர் ரகுமான் பிஜிலி தலைமையில் ஊர்வலமாக தர்காவுக்கு புறப்பட்டது.

    11.45 மணிக்கு கொடி ஊர்வலம் தர்காவை அடைந்தது. பரம்பரை டிரஸ்டி ஹபிபுர் ரகுமான் பிஜிலி யானையில் இருந்தவாறு பள்ளிவாசல் முன்பு கொடியேற்றினார். அப்போது அங்கு கூடியிருந்தவர்கள் ‘நாரே தக்குபீர் அல்லாகு அக்பர்‘ என கோஷம் எழுப்பினர். அதை தொடர்ந்து தர்காவில் சந்தனம் மெழுகுதல் நடந்தது.

    பின்னர் தர்காவில் பச்சை நிற போர்வை போர்த்தப்பட்டு பூ அணிவிக்கப்பட்டு சிறப்பு துவா ஓதப்பட்டது. மாலையில் மவ்லூது ஷரீப் ஓதுதல், ராத்திப்புத்துல் காதிரிய்யா திக்று மஜ்லீஸ் ஓதுதல் நடந்தது. இரவில் இஸ்லாமியர்களின் மார்க்க சொற்பொழிவு, இன்னிசை கச்சேரி நடந்தது. இதில் நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் இருந்து மட்டுமில்லாமல் கேரள மாநிலத்தில் இருந்தும் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

    விழாவில் இன்று (வியாழக்கிழமை) அதிகாலையில் நன்றி நவிலல், சிறப்பு துவா ஓதுதல், நேர்ச்சை வினியோகம் ஆகியன நடக்கிறது. கந்தூரி விழாவை முன்னிட்டு நெல்லை உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

    விழா ஏற்பாடுகளை பள்ளிவாசல் பரம்பரை டிரஸ்டிகள் நயாஸ் அகமது பிஜிலி, ஹபிபுர் ரகுமான் பிஜிலி ஆகியோர் செய்திருந்தனர்.
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    பொட்டல்புதூர் முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசல் கந்தூரி விழா வருகிற 8-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
    நெல்லை மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற தர்காக்களில் கடையம் அருகே பொட்டல்புதூரில் உள்ள முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசல் தர்காவும் ஒன்றாகும்.

    இங்கு ஆண்டு தோறும் கந்தூரி விழா சிறப்பாக நடைபெறும். அதுபோல் இந்த ஆண்டுக்கான கந்தூரி விழா வருகிற 8-ந் தேதி (சனிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    அதனை முன்னிட்டு அன்று மதியம் 2 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட யானை மீது கீழுர் ஜமாஅத் நிறைபிறை கொடி, மேள தாளம் முழங்க வான வேடிக்கையுடன் பொட்டல்புதூரின் முக்கிய வீதி வழியாக சென்று பள்ளிவாசலில் உள்ள கொடிமரத்தில் கொடியேற்றம் நடக்கிறது.

    தொடர்ந்து 17-ந் தேதி (திங்கட்கிழமை) இரவு 8 மணிக்கு பச்சைக்கனை ஊர்வலம் நடைபெறும். 18-ந்தேதி காலை 10 மணிக்கு சுவாமி கம்முத்தவல்லி இனாம்தார் எஸ்.பி.ஷா இல்லத்தில் ராத்திபு நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    பகல் 12 மணிக்கு அரண்மனை கொடியேற்றமும், மதியம் 2 மணிக்கு மேலூர் ஜமாஅத் சார்பில் கொடி ஊர்வலம் தொடங்கி, மாலை 6 மணிக்கு கொடியேற்றம் நடைபெறுகிறது.

    தொடர்ந்து இரவு 10 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட யானைகள் முன்வர மேள தாளங்கள் முழங்க ரவணசமுத்திரத்தில் இருந்து சந்தனக்கூடு ஊர்வலம் புறப்பட்டு, அதிகாலை 5 மணிக்கு பள்ளிவாசல் வந்தடையும். 19-ந் தேதி (புதன்கிழமை) அதிகாலை 5 மணிக்கு பள்ளிவாசலில் இனாம்தார் எஸ்.பி.ஷா மூலஸ்தானத்தில் சந்தனம் பூசும் நிகழ்ச்சியும், மாலை 6 மணிக்கு தீப அலங்காரத்திடலில் தீப அலங்காரமும் நடைபெறுகிறது. 21-ந் தேதி இரவு ராத்திபு ஓதுதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. ஏற்பாடுகளை முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசல் நிர்வாக கமிட்டி தலைவர் எஸ்.பி.ஷா மற்றும் கமிட்டி உறுப்பினர்கள் செய்து வருகின்றனர். 
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    சீனாவில் தன்னாட்சி உரிமை பெற்ற நிங்சியா பகுதியில் கட்டப்பட்டுள்ள மசூதியை இடிப்பதில் இருந்து காப்பாற்ற பல்லாயிரக்கணக்கான முஸ்லிம் ஆண், பெண்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். #China
    பீஜிங்:

    சீனாவில் சுமார் 2 கோடி முஸ்லிம்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்களில் சீன வம்சாவளியினரான ஹுய் எனப்படும் முஸ்லிம் பிரிவை சேர்ந்தவர்கள் 1 கோடி பேரும், துருக்கி வம்சாவளியைச் சேர்ந்தவர்களாக கருதப்படும் உய்குர் பிரிவைச் சேர்ந்த முஸ்லிம்கள் 1 கோடி பேரும் அடங்குவர்.

    இவர்கள் வழிபாட்டுக்காக நாடு முழுவதும் பிரம்மாண்டமான பல மசூதிகள் உள்ளன. அவற்றில் தன்னாட்சி உரிமை பெற்ற நிங்சியா பகுதியில் உள்ள உசோங் நகரில் இருக்கும் பழம்பெருமை வாய்ந்த வெய்சூங் பெரிய மசூதியும் ஒன்றாகும்.

    இந்த மசூதியை புணரமைக்கும் பணிகள் கடந்த 2015-ம் ஆண்டுவாக்கில் தொடங்கின. தற்போது பணிகள் நிறைவடைந்து புதுப்பொலிவுடன் கம்பீரமாக காட்சியளிக்கும் இந்த மசூதியின் உச்சியில் உள்ள கோபுரங்கள் (மினராக்கள்) தொடர்பாக உள்ளாட்சித்துறை அதிகாரிகளுக்கும் மசூதி நிர்வாகிகளுக்கும் இடையே மோதல் எழுந்துள்ளது.



    இந்த மினராக்கள் சீன கட்டிட வடிவமைப்பின்படி இல்லாமல், மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள மசூதிகளின் கட்டிட வடிவமைப்பு போல் காணப்படுவதால்  இவற்றை இடித்துவிட்டு, சீன பாரம்பரிய கட்டிடக்கலையின்படி மாற்ற அதிகாரிகள் முடிவெடுத்தனர். இந்த முடிவுக்கு எதிராக நிங்சியா பகுதியில் வாழும் முஸ்லிம்கள் கொதித்து எழுந்தனர்.

    கடந்த வியாழனன்று இந்த மசூதியை இடிப்பதற்கு அதிகாரிகள் தயாரான நிலையில், தங்களது வீடுகளில் இருந்து வெளியேறிய பல்லாயிரக்கணக்கான முஸ்லிம் ஆண், பெண்கள் மசூதி வளாகத்தை முகாமிட்டனர். அவர்களில் பலர் மசூதிக்குள் அமர்ந்தபடி, உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.



    தொடர்ந்து 3-வது நாளாக நடைபெற்று வரும் இந்த முற்றுகை போராட்டம் இன்னும் பல நாட்களுக்கு நீடிக்கலாம் என சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன. மிகப்பெரிய அடுப்புகள், சமையல் பாத்திரங்கள் மற்றும் சமையலுக்கு தேவையான உணவுப்பொருட்கள் பெரிய அளவில் அங்கு கொண்டு செல்லப்படுவதை மேற்கோள்காட்டி இந்த செய்திகள் குறிப்பிடுகின்றன.

    தற்போது மசூதியில் அமைக்கப்பட்டுள்ள மினராக்களை அகற்றிவிட்டு வேறுமாதிரியான கட்டுமானம் மேற்கொள்வதற்கு போராட்டக்காரர்கள் சம்மதிக்கவில்லை. இந்த மினராக்களை இடித்துவிட்டால் இஸ்லாமியர்களின் வழிபாட்டுத்தலம் என்பதற்கான அடையாளமே இல்லாமல் போகும் என அவர்கள் குறிப்பிடுவதாகவும் அந்த செய்திகள் தெரிவிக்கின்றன. #China
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    வங்கதேசத்தில் அவாமி லீக் கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் வெள்ளிக்கிழமை தொழுகை முடிந்து திரும்பியபோது மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். #AwamiLeagueLeaderKilled
    டாக்கா:

    வங்கதேசத்தில் ஆளுங்கட்சியான அவாமி லீக் கட்சியின் மூத்த தலைவர் பர்கத் அலி. கட்சியின் பத்தா யூனியன் பொதுச் செயலாளரான இவர் இன்று மசூதிக்கு சென்று தொழுகையில் பங்கேற்றார். தொழுகை முடிந்து வீட்டுக்கு புறப்பட்டபோது மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு நபர்கள் அவரை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுவிட்டு தப்பிச் சென்றுவிட்டனர்.

    இதில் மார்பு மற்றும் தலையில் குண்டுகள் பாய்ந்ததால், பர்கத் அலி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மசூதிக்கு வெளியே நடந்த இந்த சம்பவத்தால் அப்பகுதியில் திடீர் பதற்றம் ஏற்பட்டது. 

    இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். பர்கத் அலி கொலைக்கான காரணம் குறித்த தகவல் வெளியாகவில்லை.

    பத்தா பகுதியில் இரு குழுவினருக்கிடையிலான மோதல் மற்றும் வன்முறை தொடர்ந்து நடைபெற்று வருவதால், முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. #AwamiLeagueLeaderKilled
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    தென் ஆப்பிரிக்காவில் மசூதியில் தொழுகை நேரத்தில் கத்தியுடன் நுழைந்த மர்ம நபர் நிகழ்த்திய தாக்குதலில் 2 பேர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். #SouthAfrica #MosqueAttack
    ஜோகன்னஸ்பர்க்:

    தென் ஆப்பிரிக்காவில் மால்மேஸ்பரி நகரில் ஒரு மசூதி உள்ளது. அந்த மசூதியில் நேற்று தொழுகை நேரத்தில் கையில் கத்தியுடன் நுழைந்த ஒரு நபர், அங்கே தன் கண் எதிரே பட்டவர்களை எல்லாம் சரமாரியாக குத்திச் சாய்த்தார்.

    இதனால் மசூதியில் தொழுகைக்கு கூடி இருந்தவர்கள் அலறியடித்தவாறு நாலா புறமும் ஓட்டம் பிடித்தனர்.

    இந்த தாக்குதலில் 2 பேர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்தனர்.

    இது குறித்த தகவல் அறிந்ததும் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் கத்தியால் குத்திக்கொண்டிருந்த நபரை உடனடியாக சரண் அடையுமாறு கூறினர். ஆனால் அந்த நபர், அதற்கு செவி சாய்க்கவில்லை. இதையடுத்து அவரை போலீசார் சுட்டுக்கொன்றனர்.

    அவர் கத்தியால் குத்தியதில் படுகாயம் அடைந்தவர்கள் அங்கு இருந்து மீட்கப்பட்டு ஆம்புலன்சுகளில் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த போலீசார், இது பயங்கரவாதத்தின் கூறு என கூறினர்.

    இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.   #SouthAfrica #MosqueAttack  #tamilnews
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print