என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "kantara 2"

    • படத்தில் ரிஷப்-இன் அசுரத்தனமான நடிப்பை ஹைலைட் செய்ய வேண்டும் என்பதுதான் என் நோக்கம்
    • நம் நாட்டில் பின்பற்றப்படும் கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் நம்பிக்கைகளை நான் எப்போதும் மதித்துள்ளேன்

    ரிஷப் ஷெட்டி எழுத்து, இயக்கம், நடிப்பு மற்றும் தயாரிப்பில் கடந்த 2022ஆம் ஆண்டு வெளியான படம் காந்தாரா. கன்னடத்தில் வெளியான இப்படம் தென்னியந்தியாவில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இப்படத்தின் மாபெரும் வரவேற்பையும், வெற்றியையும் அடுத்து இதன் தொடர்ச்சியாக 'காந்தாரா சாப்டர் 1' எடுக்கப்பட்டது. இதனையும் ரிஷப் ஷெட்டியே நடித்து, இயக்கியிருந்தார். இப்படம் இந்தியா மட்டுமின்றி பல்வேறு உலக நாடுகளிலும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

    இந்நிலையில் கோவாவில் சர்வதேச இந்திய திரைப்பட விழா நடைபெற்றது. இதில் படத்தின் நாயகன் ரிஷப் ஷெட்டி உட்பட பல்வேறு நடிகர்கள் கலந்துகொண்டனர். பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கும் கலந்துகொண்டார். விழாவில் ரன்வீர் சிங் காந்தாரா குறித்து பேசியிருந்தார்.

    அப்போது, படத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பெண் தெய்வம் ரிஷப் ஷெட்டி உடலுக்குள் செல்லும்போது அவர் வெளிப்படுத்திய நடிப்பு அபாரமாக இருந்ததாக கூறிய ரன்வீர் சிங் அதுபோல நடித்தும் காட்டினார். இது ரிஷப் ஷெட்டியின் நடிப்பை கிண்டல் செய்யும் விதமாக இருந்ததாகவும், பெண் தெய்வத்திற்கும், பேய்க்கும் வித்தியாசம் தெரியவில்லை எனவும், இந்த செயல் தங்கள் மத உணர்வுகளை புண்படுத்தியதாகவும் பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. 

    இது மிகப்பெரிய சர்ச்சையாக உருவெடுத்த நிலையில், இதற்கு விளக்கம் கொடுத்து மன்னிப்பு கோரியுள்ளார் நடிகர் ரன்வீர் சிங். இதுதொடர்பாக தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்ட அவர்,

    "படத்தில் ரிஷப்-இன் அசுரத்தனமான நடிப்பை ஹைலைட் செய்ய வேண்டும் என்பது தான் என் நோக்கம். ஒரு நடிகராக அந்த குறிப்பிட்ட காட்சியை நடிப்பது எவ்வளவு கடினம் என்பது எனக்கு நன்றாகவே தெரியும். அதனை கச்சிதமாக செய்த அவரை போற்றுகிறேன். நம் நாட்டில் பின்பற்றப்படும் கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் நம்பிக்கைகளை நான் எப்போதும் மதித்துள்ளேன். நான் யாருடைய உணர்வுகளையாவது புண்படுத்தியிருந்தால் மனப்பூர்வமாக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்" என தெரிவித்துள்ளார். 

    • ரிஷப் செட்டியும் பார்வையாளர்கள் இருக்கையில் இருந்து அதை பார்த்துக்கொண்டிருந்தார்.
    • தெய்வத்தை பெண் ஆவி என ரன்வீர் குறிப்பிட்டதும் கண்டனத்துக்கு உள்ளாகி வருகிறது.

    பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் சர்ச்சையில் சிக்கியுள்ளார். அண்மையில் கோவாவில் சர்வதேச இந்திய திரைப்பட விழா (IFFI) நடைபெற்று முடிந்தது.

    விழாவின் நிறைவு நாளில் மேடையில் ரன்வீர் சிங் செய்த செயலின் வீடியோ இணையத்தில் கண்டனத்தை குவித்து வருகிறது.

    அண்மையில் ரிஷப் ஷெட்டியின் காந்தாரா 2 படம் வெளியாகி பெரும் வசூல் சாதனை படைத்தது. இந்த படத்திலும், 2022 இல் வெளியான முதல் பாகத்திலும் ரிஷப் செட்டி, சாமியாடிகள் எழுப்பும் 'ஓ' என்ற ஒளியை ஆக்ரோஷமான முகபாவத்துடன் எழுப்பும் காட்சிகள் சிலிர்க்க வைக்கும் வகையில் இருக்கும்.

    இதை மேடையில் முயன்ற ரன்வீர் சிங், கிண்டலடிக்கும் வகையில் முகபாவத்துடன் அதை செய்தார். அப்போது ரிஷப் செட்டியும் பார்வையாளர்கள் இருக்கையில் இருந்து அதை பார்த்துக்கொண்டிருந்தார். இந்த நிகழ்வில் வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற ரஜினிகாந்தும் அதை பார்த்துக்கொண்டிருந்தார்.

    இதற்கு முன்னதாக "நான் காந்தாரா சாப்டர்1 ஐ திரையரங்குகளில் பார்த்தேன், ரிஷப் நன்றாக நடித்திருந்தார், குறிப்பாக பெண் ஆவி (சாமுண்டி தெய்வம்) உங்கள் உடலில் நுழையும் போது அந்த ஷாட் அற்புதமாக இருந்தது" என்றும் ரன்வீர் சிங் மேடையில் பேசியிருந்தார். 

    இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் சூழலில் கன்னடர்களின் தெய்வங்களை அவர் கிண்டலிப்பதாகவும், அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் பலர் கருத்து பதிவிட்டு வருகின்றனர். மேலும் தெய்வத்தை பெண் ஆவி என ரன்வீர் குறிப்பிட்டதும் கண்டனத்துக்கு உள்ளாகி வருகிறது. 

    ரன்வீர் மன்னிப்பு கேட்கவில்லை என்றால் அவர் நடிப்பில் வெளியாக உள்ள 'துரந்தர்' படத்தின் வெளியீட்டைத் தடுப்போம் என்றும் எச்சரித்து வருகின்றனர். ரன்வீர் சிங் நடித்த 'துரந்தர்' படம் டிசம்பர் 5 ஆம் தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. 

    • 'காந்தாரா சாப்டர்1' கடந்த 2-ந்தேதி உலகம் முழுவதும் வெளியானது
    • காந்தாரா சாப்டர் 1 30 நாடுகளில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

    2022-ம் ஆண்டு கன்னடத்தில் வெளியாகி தென்னிந்திய மொழிகளில் வரவேற்பை பெற்ற படம் 'காந்தாரா'. இப்படத்தை ரிஷப் ஷெட்டி இயக்கி, கதாநாயகனாகவும் நடித்து இருந்தார். குறைந்த பட்ஜெட்டில் உருவான இப்படம் ரூ.400 கோடிக்கும் அதிகமாக வசூலை குவித்தது.

    இதனை தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகமாக உருவான 'காந்தாரா சாப்டர்1' கடந்த 2-ந்தேதி உலகம் முழுவதும் வெளியானது. இப்படம் அமெரிக்கா, பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியோ, ஜெர்மனி, ஜப்பான், சிங்கப்பூர், மலேசியா, நேபாளம் உள்ளிட்ட 30 நாடுகளிலும் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

    இந்நிலையில் 'காந்தாரா சாப்டர்1' படம் வெளியாகி 2 வாரங்களில் உலக அளவில் இதுவரை ரூ.717.50 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இந்த படம் விரைவில் ஆயிரம் கோடியை எட்டும் என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

     

    'காந்தாரா சாப்டர்1' படம் விரைவில் ஆயிரம் கோடியை எட்டும் என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

    2022-ம் ஆண்டு கன்னடத்தில் வெளியாகி தென்னிந்திய மொழிகளில் வரவேற்பை பெற்ற படம் 'காந்தாரா'. இப்படத்தை ரிஷப் ஷெட்டி இயக்கி, கதாநாயகனாகவும் நடித்து இருந்தார். குறைந்த பட்ஜெட்டில் உருவான இப்படம் ரூ.400 கோடிக்கும் அதிகமாக வசூலை குவித்தது.

    இதனை தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகமாக உருவான 'காந்தாரா சாப்டர்1' கடந்த 2-ந்தேதி உலகம் முழுவதும் வெளியானது. இப்படம் அமெரிக்கா, பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியோ, ஜெர்மனி, ஜப்பான், சிங்கப்பூர், மலேசியா, நேபாளம் உள்ளிட்ட 30 நாடுகளிலும் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப்பெற்றுள்ளது.

    'காந்தாரா சாப்டர்1' படம் வெளியாகி 11 நாட்களில் உலக அளவில் இதுவரை ரூ.700 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. 'காந்தாரா சாப்டர்1' படம் விரைவில் ஆயிரம் கோடியை எட்டும் என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

    படம் வெளியாவதற்கு முன்பே காந்தாரா சாப்டர் 2 படத்தின் டிரெயிலர் வெளியான நிலையில், படத்திற்கு கிடைத்துள்ள வரவேற்பு மற்றும் தீபாவளியை முன்னிட்டு படக்குழு புதிய டிரெயிலரை வெளியிட்டுள்ளது.

    இந்த டிரெயிலர் ஜெட் வேகத்தில் பார்வையாளர்களை கடந்து சென்றுக்கொண்டிருக்கிறது.

    • 30 நாடுகளில் இப்படம் நேற்று வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது.
    • ‘காந்தாரா சாப்டர்-1’ படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

    2022-ம் ஆண்டு கன்னடத்தில் வெளியாகி தென்னிந்திய மொழிகளில் வரவேற்பை பெற்ற படம் 'காந்தாரா'. இப்படத்தின் இரண்டாம் பாகமாக 'காந்தாரா சாப்டர்1' வெளியாகி உள்ளது. 30 நாடுகளில் இப்படம் நேற்று வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது.

    இந்த நிலையில், 'காந்தாரா சாப்டர்-1' படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, படம் வெளியான முதல் நாளில் சுமார் 65 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இதனால் வரும் நாட்களில் 'காந்தாரா சாப்டர்-1' வசூலை வாரிக்குவிக்கும் என்றும் முதல் பாகத்தை விட இப்படம் வசூல் சாதனை படைக்கும் என நம்பப்படுகிறது. 

    • படத்தின் நாயகனாக வரும் ரிஷப் ஷெட்டி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்
    • நாயகியாக நடித்திருக்கும் ருக்மிணி வசந்த், தனது அழகால் மட்டுமில்லாமல் நடிப்பாலும் நம்மை கவர்கிறார்.

    காந்தாரா படத்தின் கதை நிகழ்காலத்தில் நடந்த நிலையில், அதற்கு முந்தைய காலகட்டங்களில் நடக்கும் நிகழ்வுகளை கூறும் கதை தான் காந்தாரா சாப்டர் 1.

    காந்தாரா படத்தில் ரிஷப் ஷெட்டி மற்றும் அவரது தந்தை ஒரே இடத்திலேயே ஏன் மறைந்து போகிறார்கள் என்கிற கேள்விகளுக்கு ஒரு புராணக் கதை சொல்லப்படுகிறது.

    அதில், பாங்ரா என்ற நாட்டை ஒரு ராஜா ஆட்சி செய்து வருகிறார். காந்தாரா மலைப்பகுதிகளில் உள்ள ஈஸ்வர பூந்தோட்டம் என்று அழைக்கப்படும் பகுதியில் பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருகின்றனர். ஈஸ்வர பூந்தோட்டத்தை கைப்பற்ற நினைக்கும் மன்னன் படையுடன் சென்று காந்தார மக்களை அழிக்க பார்க்கிறார். ஆனால் தெய்வத்தின் உதவியுடன் மக்கள் மன்னரின் படைகளை எதிர்த்து சண்டையிட்டு வெற்றி பெறுகிறார்கள்.

    இந்த போரில் உயிர்பிழைத்த ராஜாவின் வாரிசுகள் பல ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் காந்தராவை கைப்பற்ற நினைக்கிறார்கள். ராஜா வாரிசுகளின் ஆசை நிறைவேறியதா? இல்லை அதை கதாநாயகன் ரிஷப் செட்டி தடுத்து நிறுத்தினாரா? என்பது தான் படத்தின் மீதிக்கதை.

    நடிகர்கள்:

    படத்தின் நாயகனாக வரும் ரிஷப் ஷெட்டி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். இயக்குனராக மட்டுமில்லாமல் நல்ல நடிகராகவும் இப்படத்தில் அவர் மிளிர்கிறார். தெய்வ சக்தி வந்தவுடன் ரிஷப் ஷெட்டி ஆடும் ஆட்டம் நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது.

    நாயகியாக நடித்திருக்கும் ருக்மிணி வசந்த், தனது அழகால் மட்டுமில்லாமல் நடிப்பாலும் நம்மை கவர்கிறார். வழக்கமான 'கதாநாயகி' பாத்திரம் போல் அல்லாமல் அழுத்தமான பாத்திரத்தில் சிறப்பாக நடித்துள்ளார். மன்னரின் அப்பாவாக வரும் ஜெயராம் உட்பட படத்தில் நடித்துள்ள பிற நடிகர்களும் சிறப்பான பங்களிப்பை வழங்கியுள்ளனர்.

    இயக்கம்:

    காந்தாரா படத்திலேயே தான் ஒரு சிறந்த இயக்குனர் என்பதை நிரூபித்த ரிஷப் ஷெட்டி, வரலாற்று கதை அம்சம் கொண்ட காந்தாரா சாப்டர் 1 படத்தில் மேலும் மெனெக்கெட்டு உழைத்துள்ளது திரையில் தெரிகிறது. குறிப்பாக அருமையான VFX காட்சிகள், சிறப்பான மேக்கிங் படத்திற்கு வலுசேர்க்கின்றன. அதே சமயம் காந்தாரா படத்தில் இருந்த சுவாரசியம் காந்தாரா சாப்டர் 1 படத்தில் இல்லை. கதை மிகவும் மெதுவாக நகர்வது ரசிகர்களை சோர்வடைய செய்கிறது. மேக்கிங்கில் கவன செலுத்திய ரிஷப் ஷெட்டி திரைக்கதையில் சற்று சறுக்கி விட்டார்.

    இசை:

    அஜனீஷ் லோக்நாத் இசையில் பாடல்கள் அனைத்தும் நன்றாக உள்ளது. அதைவிட அவரின் பின்னணி இசை படத்தின் காட்சிகளுக்கு பக்க பலமாக அமைந்துள்ளது.

    ஒளிப்பதிவு:

    அரவிந்த் கஷ்யப்பின் ஒளிப்பதிவு நம்மை படத்தின் வரலாற்று காலகட்டத்திற்கே கொண்டு செல்கிறது.

    தயாரிப்பு:

    ஹோம்பாலே பிலிம்ஸ்

    ரேட்டிங்:

    3/5

    • உலக முழுவதும் நாளை இப்படம் வெளியாக உள்ளது.
    • பாடலை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

    2022-ம் ஆண்டு கன்னடத்தில் வெளியாகி தென்னிந்திய மொழிகளில் வரவேற்பை பெற்ற படம் 'காந்தாரா'. இப்படத்தின் இரண்டாம் பாகமாக 'காந்தாரா சாப்டர்1' உருவாகி உள்ளது.

    உலக முழுவதும் நாளை இப்படம் வெளியாக உள்ளது. இப்படத்தின் தமிழக தியேட்டர் வியாபார உரிமம் சுமார் ரூ.33 கோடிக்கு விநியோகம் நடந்துள்ளதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில், 'காந்தாரா சாப்டர்-1' படத்தின் 'ரெபெல்' பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகி உள்ளது. இதனை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

    முன்னதாக, சென்னையில் நேற்று நடைபெற இருந்த 'காந்தாரா சாப்டர்1' பட புரமோஷன் நிகழ்ச்சியை படக்குழு ரத்து செய்தது. கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 உயிரிழந்த சம்பவத்தை அடுத்து 'காந்தாரா சாப்டர்1' பட புரமோஷன் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.


    • காயமடைந்தவர்கள் விரைந்து குணமடைய பிரார்த்திப்பதாக ‘காந்தாரா சாப்டர்1’ படக்குழு தெரிவித்துள்ளது.
    • 30 நாடுகளில் ‘காந்தாரா சாப்டர் 1’ வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.

    2022-ம் ஆண்டு கன்னடத்தில் வெளியாகி தென்னிந்திய மொழிகளில் வரவேற்பை பெற்ற படம் 'காந்தாரா'. இப்படத்தை ரிஷப் ஷெட்டி இயக்கி, கதாநாயகனாகவும் நடித்து இருந்தார். குறைந்த பட்ஜெட்டில் உருவான இப்படம் ரூ.400 கோடிக்கும் அதிகமாக வசூலை குவித்தது.

    இதனை தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகமாக 'காந்தாரா சாப்டர்1' உருவாகி உள்ளது. நாளை மறுநாள் 2-ந்தேதி இப்படம் வெளியாக உள்ளது. இப்படத்தின் தமிழக தியேட்டர் வியாபார உரிமம் சுமார் ரூ.33 கோடிக்கு படத்தின் விநியோகம் நடந்துள்ளதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில், சென்னையில் நடைபெற இருந்த 'காந்தாரா சாப்டர்1' பட புரமோஷன் நிகழ்ச்சியை படக்குழு ரத்து செய்தது. கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 உயிரிழந்த சம்பவத்தை அடுத்து 'காந்தாரா சாப்டர்1' பட புரமோஷன் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் காயமடைந்தவர்கள் விரைந்து குணமடைய பிரார்த்திப்பதாக 'காந்தாரா சாப்டர்1' படக்குழு தெரிவித்துள்ளது.

    அமெரிக்கா, பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியோ, ஜெர்மனி, ஜப்பான், சிங்கப்பூர், மலேசியா, நேபாளம் உள்ளிட்ட 30 நாடுகளில் 'காந்தாரா சாப்டர் 1' வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது. 

    • காந்தாரா சாப்டர் 1 படத்தின் டிரெய்லர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
    • காந்தாரா படம் அடுத்த மாதம் 2-ந்தேதி இப்படம் வெளியாக உள்ளது.

    2022-ம் ஆண்டு கன்னடத்தில் வெளியாகி தென்னிந்திய மொழிகளில் வரவேற்பை பெற்ற படம் 'காந்தாரா'. இப்படத்தை ரிஷப் ஷெட்டி இயக்கி, கதாநாயகனாகவும் நடித்து இருந்தார். குறைந்த பட்ஜெட்டில் உருவான இப்படம் ரூ.400 கோடிக்கும் அதிகமாக வசூலை குவித்தது.

    இதனை தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகமாக 'காந்தாரா சாப்டர்1' உருவாகி உள்ளது. ரிஷப் ஷெட்டி, ருக்மிணி உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படம் அடுத்த மாதம் 2-ந்தேதி இப்படம் வெளியாக உள்ளது.

    இப்படத்தின் தமிழக தியேட்டர் வியாபார உரிமம் சுமார் ரூ.33 கோடிக்கு படத்தின் விநியோகம் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தை 30 நாடுகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

    நேற்று வெளியான காந்தாரா சாப்டர்1' படத்தின் டிரெய்லர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இதனையடுத்து காந்தாரா படக்குழு வெளியிட்டதாக ஒரு போஸ்டர் இணையத்தில் வைரலானது.

    அந்த போஸ்டரில், "காந்தாரா படத்தை பார்க்க விரும்புவோர் அப்படத்தை பார்க்கும் வரை கீழ்கண்ட 3 விஷயங்களை கடைபிடிக்க வேண்டும்.

    1. மது அருந்த கூடாது

    2. புகை பிடிக்கக்கூடாது

    3. அசைவ உணவுகள் சாப்பிட கூடாது

    என்று கூறப்பட்டுள்ளது'

    இந்த போஸ்டர் இணையத்தில் வைரலாக இந்த மாதிரி ரூல்ஸ் போட்டா தமிழ்நாட்டுல ஒருத்தன் கூட காந்தாரா படத்தை பார்க்க மாட்டான் என்று நெட்டிசன்கள் கிண்டலடித்தனர்.

    இதனிடையே இந்த போஸ்டர் குறித்து காந்தாரா படத்தின் நடிகரும் இயக்குனருமான ரிஷப் ஷெட்டியிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

    இதற்கு பதில் அளித்த ரிஷப் ஷெட்டி, "உணவு என்பது அவரவர் விருப்பம் சார்ந்தது. அதில் விதிமுறைகள் சொல்ல யாருக்கும் உரிமை இல்லை. அது யாரோ போலியாக உருவாக்கிய போஸ்டர். எங்கள் கவனத்திற்கு அது வந்தபோது எங்களுக்கும் அதிர்ச்சியாகவே இருந்தது. படத்தின் பிரபல்யத்துக்கு இடையே தங்களை விளம்பரப்படுத்த நினைக்கும் சிலரின் வேலைதான் இது. இதற்கும் இப்படத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை" என்று தெரிவித்தார்.

    • காந்தாரா சாப்டர் 1 திரைப்படம் அடுத்த மாதம் 2-ந்தேதி வெளியாக உள்ளது.
    • இப்படத்தை 30 நாடுகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

    2022-ம் ஆண்டு கன்னடத்தில் வெளியாகி தென்னிந்திய மொழிகளில் வரவேற்பை பெற்ற படம் 'காந்தாரா'. இப்படத்தை ரிஷப் ஷெட்டி இயக்கி, கதாநாயகனாகவும் நடித்து இருந்தார். குறைந்த பட்ஜெட்டில் உருவான இப்படம் ரூ.400 கோடிக்கும் அதிகமாக வசூலை குவித்தது.

    இதனை தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகமாக 'காந்தாரா சாப்டர்1' உருவாகி உள்ளது. ரிஷப் ஷெட்டி, ருக்மிணி உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படம் அடுத்த மாதம் 2-ந்தேதி இப்படம் வெளியாக உள்ளது.

    இப்படத்தின் தமிழக தியேட்டர் வியாபார உரிமம் சுமார் ரூ.33 கோடிக்கு படத்தின் விநியோகம் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தை 30 நாடுகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

    இந்நிலையில், காந்தாரா சாப்டர்1' படத்தின் தமிழ் டிரெய்லரை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ளார்.

    காந்தாராவின் முதல் பாகம் மற்றும் கேஜிஎஃப் 2, சலார் ஆகிய படங்களை தயாரித்த ஹோம்பலே ஃபிலிம்ஸ் நிறுவனமே காந்தாரா சாப்டர் 1-ஐயும் தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    காந்தாரா சாப்டர் 1 திரைப்படம் அடுத்த மாதம் 2-ந்தேதி வெளியாக உள்ளது.

    2022-ம் ஆண்டு கன்னடத்தில் வெளியாகி தென்னிந்திய மொழிகளில் வரவேற்பை பெற்ற படம் 'காந்தாரா'. இப்படத்தை ரிஷப் ஷெட்டி இயக்கி, கதாநாயகனாகவும் நடித்து இருந்தார். குறைந்த பட்ஜெட்டில் உருவான இப்படம் ரூ.400 கோடிக்கும் அதிகமாக வசூலை குவித்தது.

    இதனை தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகமாக 'காந்தாரா சாப்டர்1' உருவாகி உள்ளது. திரைப்படம் அடுத்த மாதம் 2-ந்தேதி இப்படம் வெளியாக உள்ளது.

    இப்படத்தின் தமிழக தியேட்டர் வியாபார உரிமம் சுமார் ரூ.33 கோடிக்கு படத்தின் விநியோகம் நடந்துள்ளதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில், 'காந்தாரா சாப்டர் 1' படத்தை 30 நாடுகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. மேலும் படத்தின் டிரெய்லர் வரும் 22 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. தமிழ் டிரெய்லரை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட இருக்கிறார், இந்தி மொழியில் நடிகர் ஹ்ரித்திக் ரோஷன் வெளியிடவுள்ளார்.

    காந்தாராவின் முதல் பாகம் மற்றும் கேஜிஎஃப் 2, சலார் ஆகிய படங்களை தயாரித்த ஹோம்பலே ஃபிலிம்ஸ் நிறுவனமே காந்தாரா சாப்டர் 1-ஐயும் தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • அடுத்த மாதம் 2-ந்தேதி இப்படம் வெளியாக உள்ளது.
    • சுமார் ரூ.33 கோடிக்கு படத்தின் விநியோகம் நடந்துள்ளதாக கூறப்படுகிறது.

    2022-ம் ஆண்டு கன்னடத்தில் வெளியாகி தென்னிந்திய மொழிகளில் வரவேற்பை பெற்ற படம் 'காந்தாரா'. இப்படத்தை ரிஷப் ஷெட்டி இயக்கி, கதாநாயகனாகவும் நடித்து இருந்தார். குறைந்த பட்ஜெட்டில் உருவான இப்படம் ரூ.400 கோடிக்கும் அதிகமாக வசூலை குவித்தது.

    இதனை தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகமாக 'காந்தாரா சாப்டர்1' உருவாகி உள்ளது. இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. அடுத்த மாதம் 2-ந்தேதி இப்படம் வெளியாக உள்ளது.

    இப்படத்தின் தமிழக தியேட்டர் வியாபார உரிமம் சுமார் ரூ.33 கோடிக்கு படத்தின் விநியோகம் நடந்துள்ளதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில், 'காந்தாரா சாப்டர் 1' படத்தை 30 நாடுகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. அமெரிக்கா, பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியோ, ஜெர்மனி, ஜப்பான், சிங்கப்பூர், மலேசியா, நேபாளம் உள்ளிட்ட நாடுகளில் வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது.

    காந்தாராவின் முதல் பாகம் மற்றும் கேஜிஎஃப் 2, சலார் ஆகிய படங்களை தயாரித்த ஹோம்பலே ஃபிலிம்ஸ் நிறுவனமே காந்தாரா சாப்டர் 1-ஐயும் தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

    ×