என் மலர்
நீங்கள் தேடியது "england PM"
- விமான நிலையத்தில் இருவரையும் வரவேற்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட நடன நிகழ்ச்சிகளை கண்டு பாராட்டினர்.
- பிரதமர் ரிஷி சுனக் தனது மூன்று நாள் பயணத்தின்போது பிரதமர் நரேந்திர மோடியுடன் இருதரப்பு சந்திப்பை நடத்த உள்ளார்.
டெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் நாளை மற்றும் நாளை மறுநாள் ஜி20 மாநாடு நடைபெறுகிறது. மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் இந்தியாவிற்கு வருகை தந்துள்ளார்.
விமானம் மூலம் டெல்லி விமான நிலையத்திற்கு வந்த ரிஷி சுனக் மற்றும் அவரது மனைவி அக்ஷிதா மூர்த்தியை மத்திய அமைச்சர் அஷ்வினி செளபே, இந்தியாவுக்கான பிரிட்டிஷ் உயர் ஆணையர் அலெக்ஸ் எல்லிஸ் மற்றும் மூத்த தூதரர்கள் வரவேற்றனர்.
விமான நிலையத்தில் இருவரையும் வரவேற்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட நடன நிகழ்ச்சிகளை கண்டு பாராட்டினர்.
இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் தனது மூன்று நாள் பயணத்தின்போது பிரதமர் நரேந்திர மோடியுடன் இருதரப்பு சந்திப்பை நடத்த உள்ளார்.
இதற்கிடையே, இந்த வார தொடக்கத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ரிஷி சுனக், இந்தியாவுக்கும், தனக்குமான பிணைப்பு, இந்திய-இங்கிலாந்து உறவு, இங்கிலாந்தில் அதிகரித்து வரும் காலிஸ்தான் ஆதரவாளர்களின் வன்முறைகள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விரிவாக பேசினார். அப்போது அவர், "இந்தியாவுடனான எனது தொடர்புகள் குறித்தும் நான் மிகவும் பெருமைப்படுகிறேன்" என்றார்.
- இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர்.
- இந்தியாவில் நடைபெறும் ஜி20 மாநாட்டுக்கு அழைப்பும் விடுத்தார்.
இங்கிலாந்தில் சமீப நாட்களாக காலிஸ்தானி ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் அங்குள்ள இந்திய தூதரகம் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இது தொடர்பாக இந்தியா ஏற்கனவே கண்டனம் தெரிவித்து இருந்தது.
இந்த நிலையில் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்குடன் பிரதமர் மோடி நேற்று தொலைபேசியில் பேசினார். அப்போது இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர்.
இந்த உரையாடலின்போது, "இங்கிலாந்தில் வன்முறையில் ஈடுபட்டு வரும் இந்திய விரோத சக்திகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று ரிஷி சுனக்கை பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார்.
அத்துடன் இங்கிலாந்தில் தலைமறைவாக இருக்கும் இந்திய பொருளாதார குற்றவாளிகளை நாடு கடத்தும் நடவடிக்கையின் நிலவரம் குறித்தும் கேட்டறிந்தார்.
இந்திய வம்சாளியை சேர்ந்த ரிஷி சுனக்குக்கு பைசாகி வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி, இந்தியாவில் நடைபெறும் ஜி20 மாநாட்டுக்கு அழைப்பும் விடுத்தார்.
- இங்கிலாந்து பிரதமர் இந்தோனேசியாவின் பாலியில் நடந்த ஜி20 உச்சி மாநாட்டிற்கு 340,000 யூரோக்களுக்கு மேல் செலவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
- டிசம்பர் மாதத்தில் சுனக்கின் லாட்வியா மற்றும் எஸ்டோனியா பயணத்திற்கு 62,498 யூரோ பயணச் செலவு ஏற்பட்டுள்ளது.
இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் கடந்த ஆண்டு தனியார் விமானங்களில் பயணத்திற்காக 500,000 யூரோக்களுக்கு மேல் வரி செலுத்துவோர் பணத்தை செலவிட்டதாக தி கார்டியன் என்கிற பிரபல பத்திரிக்கை தெரிவித்துள்ளது.
குறிப்பாக, எகிப்தில் நடந்த காப்27 உச்சி மாநாட்டில் ரிஷி சுனக் கலந்துகொள்வதற்காக, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 6ம் தேதி பயணம் செய்துவிட்டு மறுநாள் திரும்பி வருவதற்காக, இங்கிலாந்து அரசு 108,000 யூரோக்கள் தனியார் ஜெட் பயணத்திற்கு செலவிட்டதாக கூறப்பட்டுள்ளது.
ஒரு வாரம் கழித்து, இங்கிலாந்து பிரதமர் இந்தோனேசியாவின் பாலியில் நடந்த ஜி20 உச்சி மாநாட்டிற்கு 340,000 யூரோக்களுக்கு மேல் செலவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
டிசம்பர் மாதத்தில் சுனக்கின் லாட்வியா மற்றும் எஸ்டோனியா பயணத்திற்கு 62,498 யூரோ பயணச் செலவு ஏற்பட்டுள்ளது. இதன்மூலம், இங்கிலாந்து பிரதமர் ரிஷி இந்திய ரூபாய் மதிப்பின்படி 4.46 கோடி செலவிடப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
மக்கள் தங்களின் சொந்த கட்டணத்தையே செலுத்த முடியாமல் திணறிக்கொண்டிருக்கும் நேரத்தில், வரி செலுத்துவோரின் பணத்தை வீணடிப்பது அதிர்ச்சியூட்டும் வகையில் உள்ளது என்று கூறப்படுகிறது.