என் மலர்
நீங்கள் தேடியது "அசைவம்"
- காந்தாரா சாப்டர் 1 படத்தின் டிரெய்லர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
- காந்தாரா படம் அடுத்த மாதம் 2-ந்தேதி இப்படம் வெளியாக உள்ளது.
2022-ம் ஆண்டு கன்னடத்தில் வெளியாகி தென்னிந்திய மொழிகளில் வரவேற்பை பெற்ற படம் 'காந்தாரா'. இப்படத்தை ரிஷப் ஷெட்டி இயக்கி, கதாநாயகனாகவும் நடித்து இருந்தார். குறைந்த பட்ஜெட்டில் உருவான இப்படம் ரூ.400 கோடிக்கும் அதிகமாக வசூலை குவித்தது.
இதனை தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகமாக 'காந்தாரா சாப்டர்1' உருவாகி உள்ளது. ரிஷப் ஷெட்டி, ருக்மிணி உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படம் அடுத்த மாதம் 2-ந்தேதி இப்படம் வெளியாக உள்ளது.
இப்படத்தின் தமிழக தியேட்டர் வியாபார உரிமம் சுமார் ரூ.33 கோடிக்கு படத்தின் விநியோகம் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தை 30 நாடுகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
நேற்று வெளியான காந்தாரா சாப்டர்1' படத்தின் டிரெய்லர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இதனையடுத்து காந்தாரா படக்குழு வெளியிட்டதாக ஒரு போஸ்டர் இணையத்தில் வைரலானது.

அந்த போஸ்டரில், "காந்தாரா படத்தை பார்க்க விரும்புவோர் அப்படத்தை பார்க்கும் வரை கீழ்கண்ட 3 விஷயங்களை கடைபிடிக்க வேண்டும்.
1. மது அருந்த கூடாது
2. புகை பிடிக்கக்கூடாது
3. அசைவ உணவுகள் சாப்பிட கூடாது
என்று கூறப்பட்டுள்ளது'
இந்த போஸ்டர் இணையத்தில் வைரலாக இந்த மாதிரி ரூல்ஸ் போட்டா தமிழ்நாட்டுல ஒருத்தன் கூட காந்தாரா படத்தை பார்க்க மாட்டான் என்று நெட்டிசன்கள் கிண்டலடித்தனர்.
இதனிடையே இந்த போஸ்டர் குறித்து காந்தாரா படத்தின் நடிகரும் இயக்குனருமான ரிஷப் ஷெட்டியிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதில் அளித்த ரிஷப் ஷெட்டி, "உணவு என்பது அவரவர் விருப்பம் சார்ந்தது. அதில் விதிமுறைகள் சொல்ல யாருக்கும் உரிமை இல்லை. அது யாரோ போலியாக உருவாக்கிய போஸ்டர். எங்கள் கவனத்திற்கு அது வந்தபோது எங்களுக்கும் அதிர்ச்சியாகவே இருந்தது. படத்தின் பிரபல்யத்துக்கு இடையே தங்களை விளம்பரப்படுத்த நினைக்கும் சிலரின் வேலைதான் இது. இதற்கும் இப்படத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை" என்று தெரிவித்தார்.
- ஈரலைச் சுத்தம் செய்து துண்டுகளாக நறுக்கிக் கழுவிப் பிழிந்து கொள்ளுங்கள்.
- ஈரல் துண்டுகளை அதிக நேரம் வேக வைக்கக்கூடாது.
தேவையான பொருட்கள்:
கோழி ஈரல் - அரைக் கிலோ
சின்ன வெங்காயம் - 50 கிராம்
பூண்டு - 8 பல்
பட்டை - 2
இஞ்சி - 1 துண்டு
தேங்காய்த் துருவல் - 3 தேக்கரண்டி
கிராம்பு - 4
சோம்பு - 1 தேக்கரண்டி
எலுமிச்சம் பழச்சாறு - 1 மேசைக்கரண்டி
எண்ணெய் - 1 மேசைக்கரண்டி
மிளகாய்த்தூள் - 2 தேக்கரண்டி
தனியா தூள்- 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - ½ தேக்கரண்டி
கொத்தமல்லித் தழை, கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு- தேவையான அளவு
செய்முறை:
* இஞ்சி, பூண்டு ஆகியவற்றை விழுதாக அரைத்துக்கொண்டு, தேங்காய்த் துருவலுடன் கிராம்பு, சோம்பு, பட்டை ஆகியவற்றைச் சேர்த்து நீர் தெளித்து அரைத்துக் கொள்ளுங்கள்.
* ஈரலைச் சுத்தம் செய்து துண்டுகளாக நறுக்கிக் கழுவிப் பிழிந்து கொள்ளுங்கள்.
* அந்த துண்டுகளை ஒரு பாத்திரத்தில் போட்டு இஞ்சி விழுது, பூண்டு விழுது, மஞ்சள் தூள், எலுமிச்சம்பழச் சாறு ஆகியவற்றைச் சேர்த்துப் பக்குவமாகப் புரட்டிவிட்டு ஊற வையுங்கள்.
* வெங்காயத்தைத் தோலுரித்துக்கொள்ள வேண்டும்.
* அடுப்பில் இருப்புச் சட்டியை வைத்து எண்ணெய் ஊற்றி அது காய்ந்ததும், வெங்காயத்தைத் தட்டிப் போட்டு வதக்குங்கள்
* பிறகு ஈரல் துண்டுகளை மசாலாவுடன் கொட்டி, அரைத்து வைத்திருக்கும் தேங்காய்க் கலவையைப் போட்டு உப்பு சேர்க்கவும். அரை கப் நீர் ஊற்றி, ஒரு தட்டால் மூடி வைத்து வேகவிடுங்கள்.
* ஈரல் துண்டுகளை அதிக நேரம் வேக வைக்கக்கூடாது. ஆகையால் அவை வெந்ததும் உடனே அடுப்பிலிருந்து இறக்கிவிட வேண்டும்.
சுவையான ஈரல் வறுவல் ரெடி!
- மற்றொரு தனியார் அசைவ உணவகத்தையும் இந்துத்துவா கும்பல் மூட வைத்துள்ளது.
- யாரும் இதுவரை கைது செய்யப்படவில்லை.
உத்தரப் பிரதேசத்தில் அசைவ உணவு விற்கக்கூடாது என்று கூறி கேஎஃப்சி உணவகத்தை இந்து அமைப்பினர் மூட வைத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் காசியபாத்தில் இந்திராபுரம் பகுதியில் KFC உணவக கிளை இயங்கி வந்தத. இந்நிலையில் நேற்று இந்த கடைக்குள் திடீரென காவிக்கொடியுடன் இந்து ரக்ஷா தளம் கும்பல் புகுந்தது.
ஷ்ரவன் மாதத்தில் (ஜூலை - ஆகஸ்ட்) அசைவ உணவு விற்கக்கூடாது என அங்குள்ள ஊழியர்களை கும்பல் மிரட்டி ஆர்ப்பாட்டம் செய்துள்ளது.
சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ள இந்தக் காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
சைவம் மட்டுமே என்று வலுக்கட்டாயமாக கடையின் முன் போர்டை நிறுவியுள்ளது. ஆனால் தங்கள் உணவகத்திற்கு அசைவம் சாப்பிடவே மக்கள் வருகிறார்கள் என்றும் இதனால் தங்களுக்கு நஷ்டம் தான் என கடையை மூடுவதாக உணவக மேலாளர் தெரிவித்தார்.
இதேபோல் மற்றொரு தனியார் அசைவ உணவகத்தையும் இந்துத்துவா கும்பல் மூட வைத்துள்ளது.
மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி கோரியே இந்த ஆர்ப்பாட்டத்தை கும்பல் நடத்தியுள்ளது. அதில் உள்ளே புகுந்து மிரட்டல் விடுத்து கும்பல் அத்துமீறியுள்ளதால் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஆனால் யாரும் இதுவரை கைது செய்யப்படவில்லை.
- சிக்கனில் பல்வேறு வெரைட்டியான ரெசிபிகளை செய்யலாம்.
- தோசை, சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும்.
தேவையான பொருட்கள்:
சிக்கன் - 1/2 கிலோ
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
சர்க்கரை - 1 டீஸ்பூன்
மிளகுத் தூள் - 2 டீஸ்பூன்
கரம் மசாலா - 1 டீஸ்பூன்
சீரகப் பொடி - 2 டீஸ்பூன்
மல்லித் தூள் - 2 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
வரமிளகாய் - 2
கெட்டியான புளிச்சாறு - 1 டேபிள் ஸ்பூன்
அரைத்த தக்காளி - 1 கப்
நெய் - 7 டேபிள் ஸ்பூன் + 2 டீஸ்பூன்
கொத்தமல்லி - 1/2 கப் (நறுக்கியது)
கறிவேப்பிலை - சிறிது.
செய்முறை:
சிக்கனை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி காய்ந்ததும் கறிவேப்பிலை, வரமிளகாய், சீரகப் பொடி, இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து குறைவான தீயில் வைத்து தாளிக்க வேண்டும்.
பின்னர் அதில் அரைத்து தக்காளியை சேர்த்து 5 நிமிடம் நன்கு வதக்கிய பின் மல்லித் தூள், மிளகாய் தூள் சேர்த்து, நெய் தனியாக பிரியும் வரை நன்கு வதக்க வேண்டும்.
நெய்யானது பிரிய ஆரம்பித்தால், அதில் 2 டீஸ்பூன் நெய் சேர்த்து, சிக்கன் துண்டுகள், உப்பு, கரம்மசாலா மற்றும் மிளகுத்தூள் சேர்த்து நன்கு 5-6 நிமிடம் கிளறி விட வேண்டும்.
பிறகு அதில் 1/2 கப் கொத்தமல்லியைத் தூவி, சர்க்கரை சேர்த்து பிரட்டி, மூடி வைத்து குறைவான தீயில் 10 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
பின் மூடியைத் திறந்து, அதில் புளி பேஸ்ட் சேர்த்து, மீண்டும் மூடி வைத்து 5 நிமிடம் சிக்கனை நன்கு வேக வைக்க வேண்டும்.
சிக்கனானது நன்கு வெந்தது நெய் ஓரங்களில் பிரிந்து வரும் போது இறக்கி, அதில் மீதமுள்ள கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், சிக்கன் நெய் ரோஸ்ட் ரெடி!!!
- நண்டு குருமா இட்லி, தோசையுடன் சாப்பிடவும் அருமையாக இருக்கும்.
- சளி, வறட்டு இருமல் தொல்லையால் அவதிப்படுபவர்கள் இதை சாப்பிடலாம்.
தேவையான பொருட்கள்:
நண்டு - 1 கிலோ
வெங்காயம் - 2
தக்காளி - 1
பச்சைமிளகாய் - 2
தேங்காய் பால் - 2 டம்ளர்
இஞ்சி, பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
கொத்தமல்லிதழை - சிறிதளவு
கறிவேப்பிலை - ஒரு கொத்து
மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்
கரம் மசாலாத்தூள் - ½ டீஸ்பூன்
எண்ணெய் - 100 மிலி
உப்பு - தேவையான அளவு
அரைக்க தேவையானவை:
தேங்காய் துருவல் - ஒரு கப்
மஞ்சள்தூள் - 1 டீஸ்பூன்
மிளகுத்தூள் - 1 டீஸ்பூன்
மல்லித்தூள் - 3 டீஸ்பூன்
சீரகத்தூள் - 2 டீஸ்பூன்
சோம்புத்தூள் - 1 டீஸ்பூன்
முந்திரி - 10
பாதாம் - 6
பூண்டு - 5 பல்
செய்முறை:
நண்டை நன்கு கழுவி சுத்தம் செய்து எடுத்து கொள்ளவும்.
வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி வைத்து கொள்ளவும்.
அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை மிக்சியில் போட்டு நைசாக அரைத்து கொள்ளவும்.
அரைத்த மசாலாவை பாத்திரத்தில் எடுத்து தேங்காய் பாலுடன் மேலும் இரண்டு டம்ளர் தண்ணீர், சிறிதுளவு உப்பு சேர்த்து கரைத்து விட்டு கொத்தமல்லிதழையை சேர்த்து கொள்ளவும்.
ஒரு அகலமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி கறிவேப்பிலை, வெங்காயம், பச்சை மிளகாயை சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் நன்கு வதங்கியதும் தக்காளி, அரை ஸ்பூன் உப்பும் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.
அனைத்தும் நன்கு வதங்கியதும், இஞ்சி பூண்டு விழுது, மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள் சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கவும்.
இப்போது கரைத்து வைத்திருக்கும் கலவையை ஊற்றி நண்டை சேர்த்து கொதிக்க விடவும்.
நன்றாக கொதித்து பச்சை வாசனை போனவுடன் கொத்தமல்லித்தழை தூவி இறக்கினால் சுவையான நண்டு குருமா ரெடி.
- சூப் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.
- இன்று சிக்கன் சூப் செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
சிக்கன் - 300 கிராம்
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
தண்ணீர் - 2 கப்
அரைப்பதற்கு...
சின்ன வெங்காயம் - 10
கொத்தமல்லி - 1/4 கப்
சீரகம் - 1 டீஸ்பூன்
மிளகு - 1/2 டீஸ்பூன்
தாளிப்பதற்கு...
எண்ணெய் - 1 1/2 டீஸ்பூன்
ஏலக்காய் - 1
சீரகம் - 1/2 டீஸ்பூன்
கறிவேறிப்பிலை - சிறிது
பெரிய வெங்காயம் - 1 சின்ன வெங்காயம்
செய்முறை:
* முதலில் சிக்கனை சிறிது மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கழுவிக் கொள்ள வேண்டும்.
* பின் அரைப்பதற்கு கொடுத்துள்ள சின்ன வெங்காயம், கொத்தமல்லி, மிளகு, சீரகத்தைப் போட்டு நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், ஏலக்காய், சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பிறகு வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து லேசான பொன்னிறமாகும் வரை வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் கழுவி வைத்துள்ள சிக்கன் துண்டுகள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து 2 நிமிடம் நன்கு வதக்க வேண்டும்.
* பின் அரைத்து வைத்துள்ள விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை குறைந்தது 3-5 நிமிடம் வதக்க வேண்டும்.
* பின்பு தேவையான அளவு நீர், சுவைக்கேற்ப உப்பு சேர்த்து குக்கரை மூடி 5 விசில் விட்டு இறக்கினால், சுவையான சிக்கன் சூப் தயார்.
- ஆட்டு கறியில் பல வகையான உணவுகளை செய்யலாம்.
- இன்று ஆட்டுக் குடலில் சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
ஆட்டுக் குடல் - அரை கிலோ
சின்ன வெங்காயம் - 150 கிராம்
தக்காளி - 100 கிராம்
சீரகம், மிளகுத்தூள் - தலா 2 டீஸ்பூன்
மஞ்சள்த்தூள் - சிறிதளவு
இஞ்சி பூண்டு விழுது - 1 ஸ்பூன்
உப்பு, எண்ணெய்,
தண்ணீர் - தேவைக்கேற்ப
கொத்தமல்லி இலை - சிறிதளவு
இஞ்சி - சிறிய துண்டு
பெருஞ்சீரகம் - 1 டீஸ்பூன்
செய்முறை
முதலில், குடலை நன்றாக வாசனை வராத அளவு கழுவி பொடியாக நறுக்கி கொள்ளவும்.
அடுத்து இஞ்சி, பெருஞ்சீரகத்தை தட்டி வைக்கவும்.
மிளகு சீரகத்தை பொடித்து கொள்ளவும்.
வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
குக்கரில் எண்ணெய் ஊற்றி சூடானதும் தட்டி வைத்த பெருஞ்சீரகம் இஞ்சியை போட்டு தாளித்த பின்னர் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது போட்டு வதக்கவும்.
அடுத்து அதில் தக்காளியை சேர்த்த வதக்கவும்.
தக்காளி சற்று வதங்கியதும் கழுவிய குடல், மஞ்சள் தூள், பொடித்த மிளகு சீரகம் 1 டீஸ்பூன், உப்பு போட்டு சிறிது தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி 15 விசில் போட்டு இறக்கவும்.
விசில் போனவுடன் குக்கர் மூடியை திறந்து மேலும் சிறிதளவு தண்ணீர் ஊற்றி 5 நிமிடம் கொதிக்க விடவும்.
கடைசியாக சிறிது கொத்தமல்லி, மீதமுள்ள மிளகுத்தூள் சேர்த்து இறக்கி பரிமாறவும்.
சூப்பரான ஆட்டுக் குடல் சூப் ரெடி
- குழந்தைகளுக்கு மீன் வறுவல் என்றால் மிகவும் பிடிக்கும்.
- இன்று மீன், தேங்காய் சேர்த்து வறுவல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
துண்டு மீன் - 250 கிராம்
சோளமாவு - 2 ஸ்பூன்
எலுமிச்சை சாறு - 2 ஸ்பூன்
பச்சை மிளகாய் - 1
கொத்தமல்லி - சிறிதளவு
பூண்டு விழுது - 1/4 ஸ்பூன்
எலுமிச்சை பழம் - பாதி
மிளகு பொடி - 1 ஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1 ஸ்பூன்
இஞ்சி - சிறிய துண்டு
தேங்காய் துருவல் - தேவையான அளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
செய்முறை:
இஞ்சி, கறிவேப்பிலை, கொத்தமல்லி, பச்சை மிளகாயை மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.
இந்த விழுதோடு மிளகாய்த்தூள், எலுமிச்சை சாறு, மிளகு தூள், பூண்டு விழுது, சோளமாவை சேர்த்து நன்றாக கலக்கவும்.
இந்த மசாலாவை மீனுடன் சேர்த்து பிரட்டி 4 மணி நேரம் பிரிட்ஜ் பீரீசரில் வைக்கவும்.
அடுத்து ஊற வைத்த மீனை தேங்காய் துருவலில் போட்டு பிரட்டவும்.
தோசைக்கல்லில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் மீனை போட்டு மிதமான தீயில் பொரித்து எடுக்கவும்.
மாறுபட்ட சுவையில் தேங்காய் பிஷ் பிரை ரெடி.
- ஹோட்டலில் இந்த பரோட்டா வாங்கி சாப்பிட்டு இருப்பீங்க.
- இன்று இந்த பரோட்டாவை வீட்டிலேயே செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
கோதுமை மாவு - 500 கிராம்
தயிர் - 3 தேக்கரண்டி
பேக்கிங் பவுடர் - அரை தேக்கரண்டி
வெண்ணெய் - 3 தேக்கரண்டி
முட்டை - 2
உப்பு - தேவையான அளவு
கொத்துக்கறி மசாலாவிற்கு தேவையான பொருட்கள்
கொத்துக் கறி - 500 கிராம்
பெரிய வெங்காயம் - 2
பூண்டு - 4 பல்
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 2
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
சீரகத் தூள் - 1 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லி தழை - சிறிதளவு
நல்லெண்ணெய் - 4 மேஜைக் கரண்டி
செய்முறை:
கொத்துக் கறியுடன் மஞ்சள் தூள், சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும்.
வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய், கொத்தமல்லி தழை இவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும், வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு போட்டு வதக்கி, கொத்துக் கறியைப் போட்டு கிளறவும்.
மிளகாய்த் தூள், சீரகத் தூள், உப்பு போட்டுக் கிளறி நன்றாக வதக்கி, கெட்டியானதும் கொத்தமல்லி தழை தூவி இறக்கி வைக்கவும்.
பரோட்டா செய்முறை:
மைதா மாவுடன் உப்பு, பேக்கிங் பவுடர், வெண்ணெய், தயிர் இவற்றைப் போட்டுக் கலந்து, பிசைந்து 30 நிமிடங்கள் ஊற விடவும்.
முட்டையுடன் சிறிது உப்புத் தூள் கலந்து அடித்துக் கொள்ளவும்.
மாவில் இருந்து சிறிதளவு எடுத்து உருண்டையாக்கி, பூரிப்பலகை மீது வைத்து, மிக மெல்லியதாக தேய்க்கவும்.
தோசைக் கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் விரித்த மாவைப் போட்டு, முட்டையை கரண்டியில் எடுத்து பரவலாக தடவவும்.
கொத்துக்கறி மசாலாவை இதன் மீது பரப்பவும். மாவை, இடது பக்கமும், வலது பக்கமும் மடக்கி மூடவும். கவனமாக திருப்பிப் போட்டு, பொன்நிறமானதும் எடுத்துப் பரிமாறவும்.
இப்போது சூப்பரான முட்டை கொத்துக்கறி பரோட்டா ரெடி.
- இதில் புரோட்டின் சத்து அதிகம் உள்ளது.
- இந்த சுண்டல், வளரும் குழந்தைகளுக்கு ஏற்றது.
தேவையான பொருட்கள் :
கருப்பு கொண்டைக்கடலை - 100 கிராம்
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 3
முட்டை - 3
மிளகுத் தூள், சீரகத் தூள் - தலா ஒரு டீஸ்பூன்
ஆலிவ் எண்ணெய் - ஒரு டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லித் தழை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை :
வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கொண்டைக் கடலையை முதல் நாள் இரவே ஊற வையுங்கள். மறுநாள் அதனுடன் சிறிதளவு உப்பு சேர்த்து குக்கரில் போட்டு வேக வையுங்கள்.
வாணலியில் தேவையான எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்குங்கள்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதில் மூன்று முட்டைகளை உடைத்து ஊற்றி, அதனுடன் மிளகுத் தூள், சீரகத் தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாகக் கிளறுங்கள்.
முட்டை உதிரியாக வந்ததும் வேக வைத்த கடலையைச் சேர்த்து சிறு தீயில் சிறிது நேரம் வையுங்கள்.
கடைசியாக கொத்தமல்லித் தழையைத் தூவி அலங்கரியுங்கள்.
புரோட்டின் சத்து அதிகம் உள்ள இந்த சுண்டல், வளரும் குழந்தைகளுக்கு ஏற்றது.
- குழந்தைகளுக்கு மீன் என்றால் மிகவும் பிடிக்கும்.
- இன்று மீன் பக்கோடா செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
முள் நீக்கிய மீன் துண்டுகள் - கால் கிலோ
முட்டை - 2
சோளமாவு - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - சிறிதளவு
மஞ்சள் தூள் - சிறிதளவு
உப்பு, எண்ணெய் - தேவைக்கு
செய்முறை:
மீன் துண்டுகளை நன்றாக கழுவி இட்லி தட்டில் வேகவைத்துக்கொள்ளவும். பின்னர் அவைகளை உதிர்த்துக்கொள்ளவும்.
அகன்ற பாத்திரத்தில் முட்டையை அடித்து ஊற்றி நன்றாக கலக்கி அதனுடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், சோள மாவு, உப்பு ஆகியவற்றை சேர்த்து கிளறவும்.
அதனுடன் மீன் துண்டுகளை கொட்டி அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
பின்னர் இந்த மீன் கலவையை கொதிக்கும் எண்ணெய்யில் கொஞ்சம் கொஞ்சமாக போட்டு பொரித்தெடுக்கவும்.
ருசியான மீன் பக்கோடா தயார்.
- ஒரு முட்டையில் 72 கலோரி மற்றும் 6 கிராம் புரதம் இருக்கிறது.
- முட்டையை வைத்து ஏராளமான உணவு வகைகளை செய்யலாம்.
தேவையான பொருட்கள்:
வேக வைத்த முட்டை- 4
சாட் மசாலா- 1/2 டீஸ்பூன்
சீரகத் தூள்- 1/4 டீஸ்பூன்
இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், வெங்காயம் பேஸ்ட் - ஒரு டீஸ்பூன்
மிளகாய் தூள்- 1/2 டீஸ்பூன்
சோள மாவு- ஒரு டீஸ்பூன்
வெண்ணெய்- ஒரு டீஸ்பூன்
மல்லித் தூள்- 1/2 டீஸ்பூன்
கரம் மசாலா- 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள்- 1/4 டீஸ்பூன்
உப்பு- 1/4 டீஸ்பூன்
கொத்தமல்லி தழை- சிறிதளவு
எண்ணெய்- தேவையான அளவு
மசாலா செய்ய :
வெங்காயம் - 1
சாட் மசாலா- 1/2 டீஸ்பூன்
தக்காளி - 1
இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், வெங்காயம் பேஸ்ட்- ஒரு டீஸ்பூன்
வெண்ணெய்- 2 டீஸ்பூன்
மிளகாய் தூள்- 1/2 டீஸ்பூன்
உப்பு- 1/4 டீஸ்பூன்
கொத்தமல்லி தழை- சிறிதளவு
செய்முறை:
வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
தக்காளியை அரைத்து கொள்ளவும்.
வேக வைத்த முட்டையை துருவிக் கொள்ளவும்.
துருவிய முட்டையை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், வெங்காய விழுது, மிளகாய் தூள், கரம் மசாலா, மல்லித்தூள், சாட் மசாலா, மஞ்சள் தூள் மற்றும் நறுக்கிய கொத்தமல்லி தழை சேர்த்து கலந்து கொள்ளுங்கள்.
இப்போது இந்த கலவையில் சோள மாவு சேர்த்து உருண்டையாக பிடிக்கவும்.
தோசைக்கல்லை அடுப்பில் வைத்து வெண்ணெய் சேர்த்து சூடானதும் அதில் உருண்டைகளை போட்டு பொரித்து எடுக்கவும்.
இதே தோசைக்கல்லில் நறுக்கிய வெங்காயம், இஞ்சி பூண்டு பச்சை மிளகாய் வெங்காயம் விழுது சேர்த்து வதக்கவும்.
அடுத்து அதில் தக்காளி விழுது சேர்த்து கிளறவும்.
இதனோடு சிறிதளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க விடுங்கள்.
ஒரு கொதி வந்தவுடன் மிளகாய் தூள், சாட் மசாலா, உப்பு சேர்த்து பத்து நிமிடங்கள் கொதிக்க விடலாம்.
கடைசியில் நறுக்கிய கொத்தமல்லி தழை தூவவும்.
இந்த சமயத்தில் நாம் தயார் செய்து வைத்த முட்டை கபாபை சேர்த்து விடலாம்.
அவ்வளவு தான்… ருசியான முட்டை கபாப் தயார்.






