search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அசைவம்"

    • இதை சூடான சாதத்துடன் சாப்பிடவும் சூப்பராக இருக்கும்.
    • இந்த ரெசிபி செய்வது மிகவும் எளிது.

    தேவையான பொருட்கள்:

    ஆட்டுக்கறி - 500 கிராம்

    வெங்காயம் - 2

    கோதுமை மாவு - 4 டீஸ்பூன்

    இஞ்சி பூண்டு விழுது - 2 டேபிள் ஸ்பூன்

    பிரியாணி இலை - 3

    தனியா - 1 டீஸ்பூன்

    மிளகு - 1 டீஸ்பூன்

    காய்ந்த மிளகாய் - 6

    கருப்பு ஏலக்காய் - 2

    பச்சை ஏலக்காய் - 6

    அன்னாசி பூ - 1

    கடுக்காய் - 1 சிறியது

    கிராம்பு - 6

    சீரகம் - 1 டீஸ்பூன்

    பட்டை - 2 துண்டு

    ஜாதிப்பத்திரி - 3 துண்டு

    கருஞ்சீரகம் - ½ டீஸ்பூன்

    சோம்பு - 1 டேபிள் ஸ்பூன்

    சுக்குப்பொடி - 1 டீஸ்பூன்

    மல்லித்தூள் - 1 டேபிள் ஸ்பூன்

    காஷ்மீரி மிளகாய்த்தூள் - 2½ டீஸ்பூன்

    உப்பு - தேவையான அளவு

    எண்ணெய் - 1 கப்

    நெய் - 2 டேபிள் ஸ்பூன்

    செய்முறை:

    நிஹாரி மசாலா தயாரிப்பதற்கு பிரியாணி இலை, தனியா, மிளகு, காய்ந்த மிளகாய், ஏலக்காய், அன்னாசி பூ, கடுக்காய், கிராம்பு, சீரகம், பட்டை, ஜாதி பத்திரி, கருஞ்சீரகம், சோம்பு ஆகியவற்றை மிதமான தீயில் வறுத்து பொடியாக்கிக் கொள்ளவும். இவை 1 கிலோ ஆட்டுக்கறிக்கான மசாலா அளவாகும்.

    ஆட்டுக்கறியை நன்றாக கழுவி அதனுடன் மல்லித்தூள், சுக்குப்பொடி, 2 டீஸ்பூன் காஷ்மீரி மிளகாய்த்தூள், தேவையான அளவு உப்பு, இஞ்சி பூண்டு விழுது மற்றும் அரைத்து வைத்துள்ள 'நிஹாரி' மசாலாவில் பாதி அளவு சேர்த்து நன்றாகப் பிசைந்து கலந்து கொள்ளவும். இந்தக் கலவையை ஒரு மணி நேரம் அப்படியே மூடி வைக்கவும்.

    பின்பு பிரஷர் குக்கரில் ஒரு கப் அளவு எண்ணெய் ஊற்றி சூடுபடுத்தவும். அதில் பொடிதாக நறுக்கிய ஒரு வெங்காயம்(முக்கால் பாகம்) சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும்.

    வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் அதனுடன் ஊற வைத்துள்ள ஆட்டுக்கறி கலவையை சேர்த்து, கறி பொரியும் வரை வறுக்கவும். சிறிது நேரத்தில் எண்ணெய் பிரிந்து மேலே வரும்.

    அப்போது இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி கறியை வேக வைக்கவும். இரண்டு விசில் வந்து ஆவி அடங்கியதும் குக்கரை திறக்கவும்.

    வெந்திருக்கும் கலவையில் சிறிது தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும்.

    ஒரு கிண்ணத்தில் கோதுமை மாவுடன் தண்ணீர் ஊற்றி கட்டி இல்லாமல் கரைக்கவும். இந்தக் கரைசலை அடுப்பில் இருக்கும் கலவையில் ஊற்றி கிளறவும். கலவை சிறிது சிறிதாக கெட்டியாக ஆரம்பிக்கும்.

    பிறகு அதனை மூடி குறைவான தீயில் 10 நிமிடம் கொதிக்க வைக்கவும்.

    இப்போது வாணலியில் நெய் ஊற்றி அது சூடானதும், அதில் மீதியுள்ள வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும்.

    பின்னர் அடுப்பை அணைத்துவிட்டு அதனுடன் அரை டீஸ்பூன் காஷ்மீரி மிளகாய் தூள், அரை டீஸ்பூன் 'நிஹாரி மசாலா' சேர்த்து வறுக்கவும்.

    பின்பு இந்த தாளிப்பை கொதித்துக் கொண்டிருக்கும் நிஹாரியுடன் சேர்த்து கிளறவும். இப்போது சுவையான 'மட்டன் நிஹாரி' தயார்.

    லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • குழந்தைகளுக்கு இதை ஸ்நாக்ஸ் போன்று கொடுக்கலாம்.
    • குடைமிளகாயில் வைட்டமின் சி நிறைந்துள்ளது.

    தேவையான பொருட்கள்

    குடைமிளகாய் - ஒன்று

    முட்டை - 2

    வெங்காயம் - ஒன்று

    தக்காளி - 1 (விருப்பப்பட்டால்)

    ப.மிளகாய் - 1

    கேரட் துருவியது - 2 டீஸ்பூன்

    உப்பு - தேவையான அளவு

    மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்

    மிளகுத்தூள் - அரை ஸ்பூன்

    எண்ணெய் - தேவையான அளவு

    செய்முறை

    தக்காளி, வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    குடைமிளகாயை மேற்பகுதி மற்றும் கீழ்பகுதி நறுக்கி விட்டு நடுவில் உள்ள விதையை எடுத்து விட வேண்டும் பின்பு அதனை வட்ட வட்டமாக நறுக்கிக் கொள்ள வேண்டும்

    ஒரு பௌலில் முட்டையை உடைத்து விட்டு அதனுடன் வெங்காயம், தக்காளி, கேரட், ப.மிளகாய், மஞ்சள் தூள், மிளகு தூள், உப்பு சேர்த்து நன்கு அடித்துக் கொள்ள வேண்டும்.

    தோசை கல்லை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி நறுக்கிய குடமிளகாயை அதில் வைக்கவேண்டும். இருபுறமும் குடைமிளகாயை திருப்பி திருப்பி விட்டு பின்னர் அதனுள்ளே அடித்து வைத்த முட்டை கலவையை ஊற்ற வேண்டும்.

    ஒருபுறம் வெந்ததும் மறுபுறம் திருப்பி போட்டு இருபுறமும் திருப்பி திருப்பி விட்டு மிதமான தீயில் வேக வைத்து எடுக்க வேண்டும்.

    இப்போது சுவையான குடைமிளகாய் ஆம்லெட் ரெடி

    லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • குழந்தைகளுக்கு இறால் என்றால் மிகவும் பிடிக்கும்.
    • இன்று இறால், முட்டை சேர்த்து பொடிமாஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள் :

    இறால் - 200 கிராம்

    முட்டை - 2

    வெங்காயம் - 2,

    இஞ்சி, பூண்டு பேஸ்ட் - 1/2 ஸ்பூன்,

    மஞ்சள் தூள் - சிறிது,

    உப்பு - 1/2 ஸ்பூன்,

    வெங்காயத்தாள் - சிறிதளவு

    மிளகு தூள் - கால் டீஸ்பூன்

    மிளகாய் தூள் - கால் டீஸ்பூன்,

    கரம்மசாலா தூள் - கால் டீஸ்பூன்,

    கறிவேப்பிலை - சிறிதளவு

    கொத்தமல்லி - சிறிதளவு

    எண்ணெய் - தேவையான அளவு

    செய்முறை :

    இறாலை சுத்தம் செய்து சிறிது மிளகாய் தூள், உப்பு, இஞ்சி, பூண்டு பேஸ்ட், மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கலந்து அரை மணி நேரம் ஊற வைத்து தோசை கல்லையில் போட்டு வறுத்து கொள்ளவும். வறுத்த இறாலை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    வெங்காயத்தாள், வெங்காயம், கொத்தமல்லி, கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம், வெங்காயத்தாள் போட்டு வதக்கவும்.

    வெங்காயம் சற்று வதங்கியதும் இஞ்சி, பூண்டு பேஸ்ட் போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

    அடுத்து அதில் மஞ்சள் தூள், மிளகு தூள், கரம்மசாலா தூள், மிளகாய் தூள், கறிவேப்பிலை, உப்பு போட்டு வதக்கவும்.

    அடுத்து அதில் முட்டையை உடைத்து ஊற்றி நன்றாக கிளறவும்.

    முட்டை நன்றாக வெந்து உதிரி உதிரியாக வந்ததும் பொடியாக நறுக்கி இறால், வெங்காயத்தாள், கொத்தமல்லி சேர்த்து நன்றாக கலந்து இறக்கி பரிமாறவும்.

    சூப்பரான இறால் பொடிமாஸ் ரெடி.

    லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • சிக்கனில் எத்தனையோ வகை ரெசிபிஸ் செஞ்சிருப்பீங்க..
    • சிக்கன்ல பொடிமாஸ் செஞ்சிருக்கீங்களா ? இப்போ செய்யலாம் வாங்க...

    தேவையான பொருட்கள்:

    எலுமிபில்லாத சிக்கன் - 250 கிராம்

    வெங்காயம் - ஒன்று

    இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்

    பச்சை மிளகாய் - 2

    குடைமிளகாய் - 1

    கரம் மசாலா - 1 டீஸ்பூன்

    மல்லித் தூள் - 1 டீஸ்பூன்

    மிளகாய்த் தூள் - 1 டேபிள் ஸ்பூன்

    கரம் மசாலா தூள் - அரை தேக்கரண்டி

    மிளகுத் தூள் - 1 டேபிள் ஸ்பூன்

    சோம்பு - கால் டீஸ்பூன்

    மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்

    கறிவேப்பிலை - தேவைக்கேற்ப

    கொத்தமல்லி - சிறிதளவு

    உப்பு, எண்ணெய் -தேவைக்கு ஏற்ப

    செய்முறை:

    குடைமிளகாய், கொத்தமல்லி, வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    சிக்கனை நன்றாக கழுவி வைக்கவும்.

    வாணலியில் சிக்கன், உப்பு, மஞ்சள் தூள் மிளகுத் தூள் சேர்த்து நன்றாக வேக வைக்கவும். சிக்கன் நன்றாக வெந்ததும், ஆற வைத்து மிக்சிஜாரில் போட்டு திரித்திரியாக அரைக்கவும்.

    ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் சோம்பு, கறிவேப்பலை போட்டு தாளித்த பின்னர் பச்சை மிளகாய், வெங்காயம் போட்டு வதக்கவும்.

    வெங்காயம் நன்கு வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்றாக வதக்கவும்.

    அடுத்து அதில் அரைத்த சிக்கன், குடைமிளகாய் சேர்த்து வதக்கவும்.

    அடுத்து அதில் மல்லித் தூள், மிளகாயத் தூள், கரம் மசாலா தூள், சிறிது உப்பு(சிக்கன் வேகவைக்கும் போது உப்பு சேர்த்துள்ளது) சேர்த்து நன்றாக கிளறவும்.

    சிக்கன் உதிரிஉதிரியாக வந்தவுடன் அதில் கொத்தமல்லி தழை தூவி இறக்கவும் அவ்ளோதாங்க.. சுவையான சிக்கன் பொடிமாஸ் ரெடி.

    லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • எலுமிச்சை, மாங்காய், பூண்டு, இஞ்சி ஊறுகாய் சாப்பிட்டு இருப்பீங்க.
    • இன்று மீனை வைத்து ஊறுகாய் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்

    மீன் - 1/2 கிலோ ( முள் இல்லாத மீன்)

    மஞ்சள் பொடி - 1/2 தேக்கரண்டி

    மிளகாய் தூள் - 4 மேஜைக்கரண்டி

    வெந்தயப்பொடி - 1 மேஜைக்கரண்டி

    பூண்டு - 1

    இஞ்சி - ஒரு சிறிய துண்டு

    வினிகர் - 1/2 கப்

    உப்பு - தேவையான அளவு

    கடுகு - 1 மேஜைக்கரண்டி

    கறிவேப்பில்லை - சிறிது

    நல்லெண்ணெய் - தேவையான அளவு

    செய்முறை :

    மீனை நன்றாக சுத்தம் செய்து சதுரமான துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

    இஞ்சி, பூண்டு இரண்டையும் பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    மீனை நன்றாக கழுவி ஈரத்தன்மை போனதும் அதன் மேல் மிளகாய் பொடி, மஞ்சள் பொடி உப்பு சேர்த்து எல்லா இடங்களிலும் படும்படி நன்றாக கலந்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

    அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் ஊற வைத்திருக்கும் மீன் துண்டுகளை போட்டு வறுத்து தனியே வைக்கவும்.

    மற்றொரு கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போடவும். கடுகு வெடித்தவுடன் கறிவேப்பிலை, நறுக்கி வைத்துள்ள இஞ்சி, பூண்டு சேர்த்து நன்கு கிளறவும்.

    பின்னர் அதனுடன் மிளகாய் பொடி, வெந்தயப்பொடி, உப்பு சேர்த்து கிளறி அதனுடன் வறுத்து வைத்துள்ள மீன் துண்டுகளை சேர்த்து 5 நிமிடம் கிளறவும்.

    5 நிமிடம் ஆனதும் அதில் அரை கப் வினிகர் சேர்த்து 5 நிமிடம் கழித்து அடுப்பை அணைக்கவும்.

    இந்த கலவை நன்கு ஆறியதும் ஒரு காற்றுப்புகாத பாட்டிலில் போட்டு வைக்கவும்.

    சுவையான மீன் ஊறுகாய் ரெடி.

    லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • கேழ்வரகில் பல்வேறு ரெசிபிகளை செய்யலாம்.
    • இன்று ராகி முட்டை நூடுல்ஸ் செய்முறையை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள் :

    ராகி நூடுல்ஸ் - இரண்டு கப்

    முட்டை - 3

    நீளமாக நறுக்கிய குடைமிளகாய் (சிவப்பு, மஞ்சள், பச்சை) - ஒரு கப்

    வெங்காயம் - 2

    பூண்டு - 2 பல்

    வீட்டில் செய்த இனிப்பு தக்காளி சட்னி - தேவையான அளவு

    மிளகுத்தூள் - கால் டீஸ்பூன்

    வெண்ணெய் - 2 டீஸ்பூன்

    எண்ணெய் - 2 டீஸ்பூன்

    செய்முறை:

    வெங்காயத்தை நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும்.

    கடாயில் அரை டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும் முட்டையை உடைத்து ஊற்றி உப்பு, மிளகு தூள் சேர்த்து உதிரியாக பொரித்து வைக்கவும்.

    பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி சிறிதளவு உப்பு, அரை டீஸ்பூன் எண்ணெய் சேர்த்துக் கலந்து அடுப்பில் வைத்துக் கொதிக்கவிடவும். கொதிக்கும்போது ராகி நூடுல்ஸ் சேர்த்து ஐந்து நிமிடங்கள் வேகவிடவும். பின்னர் எடுத்து, வடிகட்டி உடனே குளிர்ந்த நீரை ஊற்றி அலசி, தண்ணீர் வடியும் வரை தனியே வைக்கவும்.

    கடாயை அடுப்பில் வைத்து வெண்ணெய், எண்ணெய் ஊற்றி, சூடானதும் பூண்டை நசுக்கி அதில் சேர்த்து வதக்கவும்.

    பின்னர் வெங்காயம், குடைமிளகாய் சேர்த்து வதக்கவும்.

    இதனுடன் இனிப்பு தக்காளி சட்னி சேர்த்து வதக்கவும்.

    பாதி வெந்ததும் உப்பு சேர்த்துக் கிளறிவிட்டு, நூடுல்ஸ் சேர்த்து நன்றாக வதக்கவும்.

    இறுதியில் பொரித்த முட்டை, மிளகுத்தூள் தூவி நன்றாக கலந்து இறக்கி, லஞ்ச் பாக்ஸில் `பேக்' செய்யவும்.

    லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • சைனீஸ் உணவுகளில் மிகவும் பிரபலமான ஒன்று டிராகன் சிக்கன்.
    • குழந்தைகளுக்கு இந்த சிக்கன் மிகவும் பிடிக்கும்.

    தேவையான பொருட்கள் :

    எலும்பில்லாத சிக்கன் - 1 கிலோ

    இஞ்சி - சிறிய துண்டு

    பூண்டு - 10 பல்

    சில்லி ப்ளேக்ஸ் - 1 1/2 டீஸ்பூன்

    தக்காளி சாஸ் - 2 டீஸ்பூன்

    சோயா சாஸ் - 1 டேபிள் ஸ்பூன்

    சர்க்கரை - 1/2 டீஸ்பூன்

    கொத்தமல்லி - 1 கையளவு

    வெங்காயம் - 1

    வெங்காயத் தாள் - சிறிதளவு

    வெஜிடேபிள் ஆயில் - தேவையான அளவு

    ஊற வைப்பதற்கு…

    இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்

    மிளகுத் தூள் - 1 1/2 டீஸ்பூன்

    முட்டை - 1 (வெள்ளைக்கரு மட்டும்)

    சோள மாவு - 2 டேபிள் ஸ்பூன்

    செய்முறை

    இஞ்சி, பூண்டு, வெங்காயம், வெங்காயத்தாள், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    சிக்கனை நன்றாக சுத்தம் செய்து சற்று நீளமாக வெட்டி கொள்ளவும்.

    ஒரு கிண்ணத்தில் எலும்பில்லாத சிக்கனை போட்டு அதில் ஊற வைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து நன்றாக பிரட்டி, தனியாக 1 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.

    ஊறவைத்த சிக்கனை எண்ணெயில் போட்டு, பொன்னிறமாக பொரித்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

    நாண்ஸ்டிக் தவாவை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அதில் இஞ்சி, பூண்டு சேர்த்து பொன்னிறமாக வதக்கி, சில்லி சாஸ் சேர்த்து கிளறி, தக்காளி சாஸ், சோயா சாஸ் மற்றும் சர்க்கரை சேர்த்து, கலவையை கொதிக்க விட வேண்டும்.

    கலவையானது கொதிக்க ஆரம்பித்ததும், தீயை மிதமான சூட்டில் வைத்து, அதில் பொரித்து வைத்துள்ள சிக்கனை சேர்த்து, மூடி வைத்து 5 நிமிடம் வேக வைத்து இறக்க வேண்டும்.

    இப்போது அருமையான டிராகன் சிக்கன் ரெடி!!!

    இதன் மேல் கொத்தமல்லி மற்றும் வெங்காயத் தாள் தூவி அலங்கரித்து பரிமாறலாம்.

    லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • நெத்திலி கருவாடு சாப்பிட மிகவும் ருசியாக இருக்கும்.
    • நெத்திலி கருவாடு வைத்து தொக்கு, ஊறுகாய், வறுவல் என வித்தியாசமாக சமைக்கலாம்.

    தேவையான பொருட்கள் :

    நெத்திலி கருவாடு - 100 கிராம்

    தேங்காய் எண்ணெய் - 50 மில்லி

    மிளகாய் தூள் - 1 ஸ்பூன்

    மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்

    கறிவேப்பிலை - சிறிதளவு

    உப்பு - சிறிதளவு

    செய்முறை :

    நெத்திலி கருவாடை வெந்நீரில் 5 நிமிடங்களுக்கு ஊற வையுங்கள். நன்கு ஊறிய பின்னர் அதில் இருக்கும் மண், தேவையற்ற உறுப்புகள், அதன் தலை ஆகியவற்றை நீக்கிவிடுங்கள்.

    அதன்பின் மண் இல்லாமல் சுத்தமாக கழுவங்கள். கழுவிய பிறகு அந்த கருவாட்டில் மிளகாய் தூள், கறிவேப்பிலை, மஞ்சள், உப்பு சேர்த்து நன்றாக பிரட்டி 10 நிமிடங்கள் அப்படியே வைத்து விடுங்கள்.

    கடாயை அடுப்பில்வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பிரட்டி வைத்த கருவாட்டை போட்டு அடுப்பை மிதமான தீயில் வைத்து 5 நிமிடங்கள் கழித்து பிரட்டி கொடுங்கள். இப்படி கருவாடு நன்கு வெந்து மொறு மொறுவென ஆகும் வரை வேக விடுங்கள்.

    கருவாடு ரெடி ஆனதும் சூடான சாதத்தில் சாம்பார் ஊற்றி இந்த நெத்திலி கருவாட்டை வைத்து சாப்பிட்டால் அட்டகாசமாக இருக்கும்.

    லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • இந்த ரசத்தில் தேங்காய் பால் சேர்ப்பதால் சூப்பராக இருக்கும்.
    • நண்டுக்கால் ரசம் சளித் தொல்லை, ஜலதோஷத்தை போக்கும்.

    தேவையான பொருள்கள்:

    கடல் நண்டின் கால்கள் மட்டும் - 15

    சீரகம் - 1 டீஸ்பூன்

    சோம்பு - 1 டீஸ்பூன்

    மிளகு - 2 டீஸ்பூன்

    முழுப் பூண்டு - 1

    சாம்பார் வெங்காயம் - 50 கிராம்

    காய்ந்த மிளகாய் - 4

    தக்காளி - 2

    புளி - நெல்லிக்காய் அளவு

    மஞ்சள் தூள் - 1 சிட்டிகை

    தேங்காய்ப் பால்- 50 மில்லி

    உப்பு - தேவையான அளவு.

    தாளிக்க

    கடலை எண்ணெய், கடுகு, உளுந்து, கறிவேப்பிலை.

    செய்முறை:

    நண்டுக் கால்கள் ஒவ்வொன்றிலும் கடிக்கும் பகுதியைக் கணு வரை வெட்டி விட்டு, அதை இரண்டாக வெட்டி, தண்ணீரில் சுத்தமாக அலசி எடுத்து தட்டில் வைத்துக் கொள்ளவும்.

    சீரகம், சோம்பு இரண்டையும் நீர் விட்டு அரைத்து வைத்துக் கொள்ளவும்.

    மிளகு, பூண்டு இரண்டையும் ஒன்றும் பாதியாக தட்டி வைத்து கொள்ளவும்.

    வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    அரைத்து வைத்திருக்கும் சோம்பு, சீரகத்தைத் தேவையான அளவு தண்ணீர் விட்டுக் கரைத்து, அதில் புளியையும் கரைத்துக் கொள்ளவும்.அதில் ஒரு சிட்டிகை மஞ்சள் பொடியை போடவும்.

    அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், கடுகு, உளுந்து, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாயைப் போட்டு தாளித்த பின்னர் வெங்காயம், தக்காளியை போட்டு நன்றாக வதக்கவும்.

    தக்காளி, வெங்காயம் வதங்கிச் சுருண்டதும், புளிக்கரைசலை ஊற்றவும். தேவையான உப்பு போடவும்.

    ரசக்கரைசல் நன்றாகச் சூடானதும் நண்டுக் கால்களை அதில் எடுத்துப் போடவும். கால்கள் வெந்ததும் சிவந்த நிறமாகும் சமயத்தில் தேங்காய்ப் பால் ஊற்றிக் கிண்டி, இறக்கவும்.

    மிதமான சூட்டில் இந்த ரசத்தை சூப் போன்று குடிக்கலாம்; சாதாரண ரசம் போலவே, நண்டுக்கால் ரசத்தையும் சாதத்தில் ஊற்றிச் சாப்பிடலாம்.

    இப்போது சூப்பரான நண்டுக்கால் ரசம் ரெடி.

    லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • மீனில் பல்வேறு ருசியான ரெசிபிகளை செய்யலாம்.
    • சூடான சாதத்துடன் சாப்பிட சூப்பராக இருக்கும்.

    தேவையான பொருட்கள்

    வஞ்சரம் மீன் - அரை கிலோ

    தேங்காய் பால் - 2 கப்

    வெங்காயம் - 1

    தக்காளி - 2

    பூண்டு - 1

    இஞ்சி - சிறிய துண்டு

    பச்சை மிளகாய் - 4

    மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி

    மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி

    மல்லி தூள் - 1 தேக்கரண்டி

    சீரக தூள் - 1 தேக்கரண்டி

    கடுகு - 1 தேக்கரண்டி

    கறிவேப்பிலை - சிறிதளவு

    கல் உப்பு - 1 தேக்கரண்டி

    தேங்காய் எண்ணெய் - தேவையான அளவு

    செய்முறை

    * மீனை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும்.

    * தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * பூண்டு, இஞ்சியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * ஒரு கடாயில் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் கடுகு போட்டு தாளித்த பின்னர் பொடியாக நறுக்கிய வெங்காயம், பூண்டு பற்கள், மெலிதாக நறுக்கிய இஞ்சி, கீறிய பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும்.

    * வெங்காயத்தை நன்கு வதக்கிய பின்பு அதில் பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்.

    * தக்காளி குழைய வதங்கியதும் அதனுடன் கல் உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள், சீரக தூள், மற்றும் அரை கப் தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்

    * குழம்பு கொதித்தவுடன் மீன் துண்டுகளை சேர்த்து வேக வைக்கவும்.

    * மீன் வெந்த உடன் தேங்காய் பாலை சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.

    * சுவையான மற்றும் வித்தியாசமான தேங்காய் பால் மீன் குழம்பு தயார்

    லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • சூடான சாதத்தில் சேர்த்து சாப்பிட சூப்பராக இருக்கும்.
    • தோசை, சப்பாத்திக்கும் அருமையாக இருக்கும்.

    தேவையான பொருட்கள்

    கனவா மீன் - அரை கிலோ

    வெங்காயம் - 1 சிறியது

    சின்ன வெங்காயம் - 10

    தக்காளி - 1

    இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி

    பச்சை மிளகாய் - 1

    மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி

    மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி

    சீரக தூள் - அரை தேக்கரண்டி

    தனியா தூள் - 1 தேக்கரண்டி

    மிளகு தூள் - 1/2 தேக்கரண்டி

    கரம் மசாலா தூள் - அரை தேக்கரண்டி

    எலுமிச்சைபழச்சாறு - 1/2 பழம்

    கறிவேப்பிலை

    கொத்தமல்லி இலை - சிறிதளவு

    உப்பு, தேங்காய் எண்ணெய் - தேவையான அளவு

    செய்முறை:

    * வெங்காயம், சின்ன வெங்காயம், ப.மிளகாய், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * கனவா மீனை கழுவி சுத்தம் செய்து அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து கலந்து 30 நிமிடங்கள் ஊற வைக்கவும்..

    * கடாயில் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

    * வெங்காயம் சற்று வதங்கியதும் நறுக்கிய சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

    * வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

    * பிறகு நறுக்கிய தக்காளி சேர்த்து குழைய வதக்கி, பின்பு அதில் உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், சீரக தூள், தனியா தூள், மிளகு தூள் சேர்த்து கலந்துவிடவும்.

    * பின்பு கால் கப் தண்ணீர் ஊற்றி மசாலாவில் பச்சை வாசனை போகும் வரை கொதிக்கவிடவும்.

    * அடுத்து ஊறவைத்த கனவா மீனை சேர்த்து கலந்துவிடவும்.

    * பின்பு கரம் மசாலா தூள் சேர்த்து கலந்து 10 நிமிடம் வேகவிடவும்.

    * கடைசியாக கறிவேப்பிலை மற்றும் நறுக்கிய கொத்தமல்லி இலை மற்றும் எலுமிச்சைபழச்சாறு சேர்த்து கலந்து இறக்கவும்.

    * கனவா மீன் மசாலா தயார்!

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • பிஷ் ஃபிங்கர்ஸ் ஹோட்டலில் வாங்கி சாப்பிட்டு இருப்பீங்க.
    • இந்த ரெசிபியை வீட்டிலேயே எளிய முறையில் செய்யலாம்.

    தேவையான பொருட்கள்

    வஞ்சரம் (அ) வவ்வால் மீன் - அரை கிலோ

    எலுமிச்சை பழம் - இரண்டு (சாறு எடுக்கவும்)

    ரொட்டித்தூள் - 1௦௦ கிராம்

    காஷ்மீரி மிளகாய் தூள் - அரை தேக்கரணடி

    முட்டை - மூன்று

    வெள்ளை மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன்

    உப்பு - தேவைகேற்ப

    எண்ணெய் - தேவைகேற்ப

    செய்முறை

    முட்டையை சிறிது உப்பு சேர்த்து நன்றாக அடித்து கொள்ளவும்.

    மீனை சுத்தம் செய்து எலும்பு, தோல் நீக்கவும்.

    பின்னர் மீனை விரல் நீள, அகலத்திற்கு வெட்டிக் கொள்ளவும்.

    மிளகு தூள், உப்பு, காஷ்மீரி மிளகாய் தூள், எலுமிச்சைபழம் சாறு இவற்றைக் கலந்து மீனில் புரட்டி 30 நிமிடங்கள் ஊற வைக்கவும்.

    ஒரு கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றவும்.

    எண்ணெய் காய்ந்ததும், அடித்த முட்டையில் மீனை முக்கி, ரொட்டித்தூளில் புரட்டி, எண்ணெயில் போடவும்.

    மீன் வெந்ததும், திருப்பி போட்டு பொரித்தெடுக்கவும்.

    இப்போது சூப்பரான பிஷ் ஃபிங்கர்ஸ் ரெடி.

    ×