search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Poriyal"

    • குழந்தைகளுக்கு இறால் என்றால் மிகவும் பிடிக்கும்.
    • இன்று இறால், முட்டை சேர்த்து பொடிமாஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள் :

    இறால் - 200 கிராம்

    முட்டை - 2

    வெங்காயம் - 2,

    இஞ்சி, பூண்டு பேஸ்ட் - 1/2 ஸ்பூன்,

    மஞ்சள் தூள் - சிறிது,

    உப்பு - 1/2 ஸ்பூன்,

    வெங்காயத்தாள் - சிறிதளவு

    மிளகு தூள் - கால் டீஸ்பூன்

    மிளகாய் தூள் - கால் டீஸ்பூன்,

    கரம்மசாலா தூள் - கால் டீஸ்பூன்,

    கறிவேப்பிலை - சிறிதளவு

    கொத்தமல்லி - சிறிதளவு

    எண்ணெய் - தேவையான அளவு

    செய்முறை :

    இறாலை சுத்தம் செய்து சிறிது மிளகாய் தூள், உப்பு, இஞ்சி, பூண்டு பேஸ்ட், மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கலந்து அரை மணி நேரம் ஊற வைத்து தோசை கல்லையில் போட்டு வறுத்து கொள்ளவும். வறுத்த இறாலை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    வெங்காயத்தாள், வெங்காயம், கொத்தமல்லி, கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம், வெங்காயத்தாள் போட்டு வதக்கவும்.

    வெங்காயம் சற்று வதங்கியதும் இஞ்சி, பூண்டு பேஸ்ட் போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

    அடுத்து அதில் மஞ்சள் தூள், மிளகு தூள், கரம்மசாலா தூள், மிளகாய் தூள், கறிவேப்பிலை, உப்பு போட்டு வதக்கவும்.

    அடுத்து அதில் முட்டையை உடைத்து ஊற்றி நன்றாக கிளறவும்.

    முட்டை நன்றாக வெந்து உதிரி உதிரியாக வந்ததும் பொடியாக நறுக்கி இறால், வெங்காயத்தாள், கொத்தமல்லி சேர்த்து நன்றாக கலந்து இறக்கி பரிமாறவும்.

    சூப்பரான இறால் பொடிமாஸ் ரெடி.

    லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • பச்சை மொச்சையில் அதிகளவு புரதச்சத்து உள்ளது.
    • மலச்சிக்கல் பிரச்சனை இருப்பவர்கள் பச்சை மொச்சை சாப்பிடுவதால் நல்ல பலன் கிடைக்கும்.

    தேவையான பொருட்கள் :

    பச்சை மொச்சை மொச்சை - கால் கிலோ

    துவரம்பருப்பு - 100 கிராம்

    சின்னவெங்காயம் - 50 கிராம்

    சாம்பார் பொடி - அரை டீஸ்பூன்

    தேங்காய்த்துருவல் - 3 டேபிள்ஸ்பூன்

    மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்

    கறிவேப்பிலை - சிறிதளவு

    சீரகம் - கால் டீஸ்பூன்

    உப்பு - தேவையான அளவு

    தாளிக்க

    எண்ணெய் - 2 டீஸ்பூன்

    உளுத்தம்பருப்பு - கால் டீஸ்பூன்

    கடுகு - அரை டீஸ்பூன்

    செய்முறை:

    சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி இரண்டாக வெட்டிக்கொள்ளவும்.

    துவரம்பருப்பை நன்றாக கழுவி ஒன்றரை கப் தண்ணீர், மஞ்சள்தூள் சேர்த்து அரை பதமாக வேக வைத்து கொள்ளவும்.

    வேக வைத்த துவரம் பருப்புடன் பச்சை மொச்சை, சின்ன வெங்காயம், சாம்பார்பொடி, உப்பு சேர்த்து மேலும் வேக விடவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, சீரகம், உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை சேர்த்துத் தாளித்து, மொச்சைக் கலவையில் சேர்த்துக் கலக்கவும்.

    கடைசியாக தேங்காய்த்துருவல் சேர்த்துக் கிளறி இறக்கவும்.

    இப்போது சூப்பரான பச்சை மொச்சை பருப்பு கூட்டு ரெடி.

    லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • முட்டையில் பல்வேறு ருசியான ரெசிபிகளை செய்யலாம்.
    • தோசை, சூடான சாதத்துடன் சாப்பிடவும் சூப்பராக இருக்கும்.

    தேவையான பொருட்கள்

    வேகவைத்த முட்டை - 3

    பெரிய வெங்காயம் - 2

    தக்காளி - 3

    பச்சை மிளகாய் - 2

    இஞ்சி பூண்டு விழுது - 1/2 தேக்கரண்டி

    மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி

    மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி

    கரம் மசாலா தூள் - 1 தேக்கரண்டி

    கொத்தமல்லி இலை - சிறிதளவு

    எண்ணெய் - 1 மேசைக்கரண்டி

    உப்பு - தேவையான அளவு

    செய்முறை

    * தக்காளி, வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் பெரிய வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்கவும்.

    * அடுத்து இதில் இஞ்சி பூண்டு விழுது போட்டு, பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

    * அடுத்து தக்காளி சேர்த்து, பாதி வதங்கியதும், இதில் மிளகாய் தூள், மஞ்சள் தூள், தேவையான உப்பு, கரம் மசாலா தூள் போட்டு கிளறவும்.

    * அடுத்து அதில் சிறிது தண்ணீர் சேர்த்து கடாயை மூடி மிதமான தீயில், 10 நிமிடம் கொதிக்கவிடவும்/

    * 10 நிமிடம் கழித்து, இதில் வேகவைத்த முட்டையை துருவி சேர்க்கவும்.

    * நறுக்கிய கொத்தமல்லி இலை தூவி, குறைந்த தீயில் 3 நிமிடம் வேகவிடவும்.

    * இப்போது சுவையான முட்டை கீமா தயார்.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • காராமணிக்காயில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது.
    • தினமும் ஏதாவது ஒரு காயை உணவில் சேர்த்து கொள்வது நல்லது.

    தேவையான பொருட்கள்:

    காராமணிக்காய் - 400 கிராம்

    சாம்பார் வெங்காயம் - 200 கிராம்

    கடுகு - 1 தேக்கரண்டி

    மஞ்சள் தூள் - ¼ தேக்கரண்டி

    சில்லி பிளேக்ஸ் - 2 தேக்கரண்டி

    கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி

    தேங்காய் எண்ணெய் - தேவைக்கேற்ப

    உப்பு - தேவைக்கேற்ப

    செய்முறை:

    காராமணிக்காயை நன்றாக சுத்தம் செய்து சற்று பெரிய துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும், பின்னர் அவற்றை அடி கனமான பாத்திரத்தில் போட்டு எண்ணெய் சேர்க்காமல் மிதமான தீயில் 5 நிமிடங்கள் வதக்கவும்.

    அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் கடுகு, கறிவேப்பிலை, பொடிதாக நறுக்கிய சாம்பார் வெங்காயம் ஆகியவற்றை சேர்த்து வதக்கவும்.

    பின்பு அதில் மஞ்சள் தூள், சில்லி பிளேக்ஸ் மற்றும் சிறிதளவு உப்பு சேர்த்து மீண்டும் வதக்கவும்.

    பிறகு அதில், வதக்கிய காராமணியை மசாலாவுடன் சேர்த்து 10 முதல் 15 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கிளறவும்.

    இப்பொழுது சுவையான 'காராமணிக்காய் பொரியல்' தயார்.

    இதனை சூடான சாதத்துடன் கலந்து சாப்பிடலாம்.

    • வாழைக்காயில் ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளது.
    • சாம்பார், தயிர் சாதத்துடன் சேர்த்து சாப்பிட சூப்பராக இருக்கும்.

    தேவையான பொருட்கள்:

    வாழைக்காய் - 1

    மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்

    வெங்காயம் - 1

    எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

    உப்பு - தேவையான அளவு

    அரைக்க

    தேங்காய் துருவல் - கால் கப்

    ப.மிளகாய் - 3

    சீரகம் - 1 டீஸ்பூன்

    தாளிக்க

    கடுகு - 1 டீஸ்பூன்

    உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்

    பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்

    காய்ந்த மிளகாய் - 2

    கறிவேப்பிலை - சிறிது

    செய்முறை:

    * முதலில் வாழைக்காயின் தோலை நீக்கிவிட்டு, சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும்.

    * அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை மிக்சியில் போட்டு கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.

    * ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றி சூடானதும் தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை போட்டு தாளித்த பின்னர் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

    * அடுத்து மஞ்சள் தூள் சேர்த்த பின்னர் நறுக்கிய வாழைக்காயை சேர்த்து வதக்கவும். சிறிது தண்ணீர் தெளித்து மூடி வைத்து 5 நிமிடம் வேக விடவும். வாழைக்காய் வேக அதிக நேரம் ஆகாது.

    * வாழைக்காய் வெந்தவுடன் அரைத்த தேங்காயை போட்டு 2 நிமிடம் மூடி போட்டு மிதமான தீயில் வைத்த இறக்கி பரிமாறவும்.

    * இப்போது சூப்பரான வாழைக்காய் வறுவல் ரெடி.

    • இதயநோய் உள்ளவர்கள் வாரம் 2 முறை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
    • டபுள் பீன்ஸில் அதிகளவு நார்ச்சத்து நிறைந்துள்ளது.

    தேவையான பொருட்கள்:

    டபுள் பீன்ஸ் - 150 கிராம்,

    பெரிய வெங்காயம் - 1,

    தக்காளி - 1,

    இஞ்சி பூண்டு விழுது - 1 ஸ்பூன்,

    தேங்காய் - 5 சில்லு,

    காய்ந்த மிளகாய் - 3,

    வேர்க்கடலை - ஒரு ஸ்பூன்,

    பொட்டுக்கடலை - ஒரு ஸ்பூன்,

    சீரகம் - அரை ஸ்பூன்,

    சோம்பு - ஒன்றரை ஸ்பூன்,

    தனியா - அரை ஸ்பூன்,

    கரம் மசாலா - அரை ஸ்பூன்,

    மிளகாய்தூள் - ஒரு ஸ்பூன்,

    மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்,

    உப்பு, எண்ணெய் - தேவையான அளவு,

    கறிவேப்பிலை, கொத்தமல்லி தழை - - ஒரு கொத்து,

    செய்முறை:

    வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    டபுள் பீன்ஸ் பருப்பை தண்ணீர் ஊற்றி கழுவி 8 மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

    ஒரு ஸ்பூன் வேர்க்கடலையை தண்ணீரில் சிறிது நேரம் ஊற வைக்க வேண்டும்.

    தேங்காயைத் துருவி கொள்ளவும்.

    மிக்ஸி ஜாரில் ஊற வைத்த வேர்க்கடலை, பொட்டுக்கடலை, அரை ஸ்பூன் சோம்பு, துருவிய தேங்காய், தனியா, சிறிதளவு தண்ணீர் சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

    அடுப்பில் கடாயை வைத்து, எண்ணெய் ஊற்றி சூடானதும் சீரகம், சோம்பு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாயை சேர்த்து தாளித்த பின்னர் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கிக் கொள்ள வேண்டும்.

    அடுத்து அதில் தக்காளி சேர்த்து குழைய வதக்கிக் கொள்ள வேண்டும்.

    அதன் பிறகு ஊறவைத்த டபுள் பீன்ஸை இவற்றுடன் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.

    பின்னர் உப்பு, மஞ்சள் தூள், கரம் மசாலா, மிளகாய்த் தூள் சேர்த்து நன்றாக வதக்கி விட வேண்டும்.

    பிறகு இவற்றுடன் அரைத்து வைத்துள்ள மசாலா விழுதை சேர்த்து அதனுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க விட வேண்டும்.

    பின்னர் குக்கரை மூடி, 6 விசில் வரும் வரை வேக வைக்க வேண்டும்.

    விசில் போனவுடன் குக்கர் மூடியைத் திறந்து கொத்தமல்லி தழைகளைத் தூவி, ஒரு முறை கலந்து விட்டால் போதும்.

    சுவையான டபுள் பீன்ஸ் கிரேவி தயாராகிவிடும்.

    • இதில் புரோட்டின் சத்து அதிகம் உள்ளது.
    • இந்த சுண்டல், வளரும் குழந்தைகளுக்கு ஏற்றது.

    தேவையான பொருட்கள் :

    கருப்பு கொண்டைக்கடலை - 100 கிராம்

    வெங்காயம் - 1

    பச்சை மிளகாய் - 3

    முட்டை - 3

    மிளகுத் தூள், சீரகத் தூள் - தலா ஒரு டீஸ்பூன்

    ஆலிவ் எண்ணெய் - ஒரு டேபிள் ஸ்பூன்

    கொத்தமல்லித் தழை - சிறிதளவு

    உப்பு - தேவையான அளவு

    செய்முறை :

    வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கொண்டைக் கடலையை முதல் நாள் இரவே ஊற வையுங்கள். மறுநாள் அதனுடன் சிறிதளவு உப்பு சேர்த்து குக்கரில் போட்டு வேக வையுங்கள்.

    வாணலியில் தேவையான எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்குங்கள்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதில் மூன்று முட்டைகளை உடைத்து ஊற்றி, அதனுடன் மிளகுத் தூள், சீரகத் தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாகக் கிளறுங்கள்.

    முட்டை உதிரியாக வந்ததும் வேக வைத்த கடலையைச் சேர்த்து சிறு தீயில் சிறிது நேரம் வையுங்கள்.

    கடைசியாக கொத்தமல்லித் தழையைத் தூவி அலங்கரியுங்கள்.

    புரோட்டின் சத்து அதிகம் உள்ள இந்த சுண்டல், வளரும் குழந்தைகளுக்கு ஏற்றது.

    • முருங்கை கீரையில் பொரியல் செய்வது வழக்கம்.
    • முருங்கை கீரையுடன் வாழைத்தண்டை சேர்த்து பொரியல் செய்தால் அருமையாக இருக்கும்.

    தேவையான பொருட்கள் :

    முருங்கைக்கீரை - 1 கப்

    வாழைத்தண்டு - சிறிய துண்டு

    வெங்காயம் - 1

    தேங்காய் துருவல் - 2 ஸ்பூன்

    பச்சை மிளகாய் - 1

    சிகப்பு மிளகாய் - 1

    கடுகு, உளுத்தம் பருப்பு - தாளிக்க

    எண்ணெய் - 2 ஸ்பூன்

    உப்பு - தேவைக்கு

    செய்முறை :

    * முருங்கைக்கீரையை நன்றாக கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.

    * ப.மிளகாய், வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * வாழைத்தண்டை நாரை எடுத்து விட்டு மெல்லி துண்டுகளாக நீளவாக்கில் வெட்டி மோரில் போட்டு வைக்கவும். இவ்வாறு மோர் கலந்த நீரில் வாழைத்தண்டு துண்டுகளை போட்டு வைப்பதால் நிறம் மாறாமல் இருக்கும்.

    * வாணலியை அடுப்பின் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய், ப.மிளகாய் போட்டு தாளித்த பின் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

    * வெங்காயம் சற்று வதங்கியதும் வாழைத்தண்டு சேர்த்து ஒரு முறை கிளறி விடவும்.

    * வாழைத்தண்டு சற்று வெந்ததும் முருங்கைக்கீரை மற்றும் உப்பு சேர்த்து நன்கு கிளறி அடுப்பை மிதமான தீயில் வைத்து மூடி போட்டு வேக வைக்கவும்.

    * இரண்டும் வெந்ததும் தேங்காய் துருவல் சேர்த்து கிளறவும்.

    * சுவையும் சத்தும் நிறைந்த முருங்கைக்கீரை வாழைத்தண்டு பொரியல் தயார்.

    * சாம்பார் மற்றும் ரசம் சாதத்துடன் தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும்.

    • வெறும் பாலக்கீரை செய்து கொடுத்தால் குழந்தைகளுக்கு பிடிக்காது.
    • கீரையில் முட்டை சேர்த்து செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்.

    தேவையான பொருட்கள்:

    பாலக்கீரை - 2 கப்

    முட்டை -3

    பெரிய வெங்காயம் - 1

    தக்காளி - 1

    கறிவேப்பில்லை - 1 கொத்து

    பச்சைமிளகாய் - 1

    மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி

    மிளகாய் தூள் - 1/2 - 3/4 தேக்கரண்டி

    உப்பு - தேவையான அளவு

    எண்ணெய் - 2 தேக்கரண்டி

    கடுகு - தாளிக்க

    செய்முறை :

    பாலக்கீரையை நீரில் சுத்தமாக அலசி பொடியாக நறுக்கிக் கொள்ளவும் .

    வெங்காயம் , தக்காளி, கறிவேப்பிலை, பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி வைக்கவும்.

    ஒரு கிண்ணத்தில் முட்டையை உடைத்து ஊற்றி நன்றாக கலக்கி வைத்துக் கொள்ளவும்.

    ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு போட்டு தாளித்த பின்னர் பச்சை மிளகாய் , கறிவேப்பில்லை, வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.

    வெங்காயம் வதங்கியவுடன் தக்காளி சேர்த்து வதக்கவும்.

    தக்காளி குழைய வதங்கியவுடன் நறுக்கிய பாலக்கீரை, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து 5 நிமிடம் வரை மிதமான தீயில் வதக்கவும்.

    கீரை வதங்கியவுடன் கலக்கி வைத்துள்ள முட்டை சேர்த்து அதனுடன் மிளகாய் தூள் மற்றும் முட்டைக்குத் தேவையான உப்பு சேர்த்து வறுக்கவும்.(உப்பு சேர்க்கும் பொழுது கவனம் தேவை ஏனெனில் ஏற்கனவே கீரைக்கு சேர்த்துள்ளோம் அதை நினைவில் கொள்ளவும்). முட்டை பச்சை வாசனை போய் வாணலியில் ஒட்டாமல் வரும் வரை வதக்கினால் பாலக் முட்டை புர்ஜி தயார் .

    சுவையான பாலக் முட்டை புர்ஜி தயார் !!!!

    • வாரத்தில் இரண்டு முறையேனும் கீரை சேர்த்துக் கொள்வது நல்லது.
    • இதனை சப்பாத்தியுடன் சாப்பிட அருமையாக இருக்கும்.

    தேவையான பொருட்கள்:

    பாலக்கீரை - 2 கப்

    முட்டை -2-3

    பெரிய வெங்காயம் - 1

    தக்காளி - 1

    கறிவேப்பில்லை - 1 கொத்து

    பச்சைமிளகாய் - 1

    மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி

    மிளகாய் தூள் - 1/2 - 3/4 தேக்கரண்டி

    உப்பு - தேவையான அளவு

    எண்ணெய் - 2 தேக்கரண்டி

    செய்முறை:

    வெங்காயம், தக்காளி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    பாலக்கீரையை நீரில் சுத்தமாக அலசி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

    ஒரு கிண்ணத்தில் முட்டையை உடைத்து ஊற்றி நன்றாக கலக்கி வைத்துக் கொள்ளவும்.

    ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கறிவேப்பில்லை சேர்த்து தாளித்த பின்னர் பச்சை மிளகாய், வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.

    வெங்காயம் வதங்கியவுடன் தக்காளி சேர்த்து வதக்கவும்.

    தக்காளி குழைய வதங்கியவுடன் நறுக்கிய பாலக்கீரை, மஞ்சள் தூள், கீரைக்குத் தேவையான உப்பு சேர்த்து 5 நிமிடம் வரை மிதமான தீயில் வதக்கவும்.

    கீரை 5 நிமிடங்கள் வதங்கினால் போதுமானது. கீரை வதங்கியவுடன் கலக்கி வைத்துள்ள முட்டை சேர்த்து அதனுடன் மிளகாய் தூள் மற்றும் முட்டைக்குத் தேவையான உப்பு சேர்த்து வறுக்கவும்.

    முட்டை பச்சை வாசனை போய் வாணலியில் ஒட்டாமல் உதிரியாக வரும் வரை வதக்கினால் பாலக் முட்டை புர்ஜி தயார்.

    • தினமும் ஒரு முட்டை சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.
    • முட்டையில் அதிகளவு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது.

    தேவையான பொருட்கள்:

    முட்டை - 5

    பச்சை மிளகாய் - 2

    வெங்காயம் - 1

    சீரகம் - 1/2 டீஸ்பூன்

    கறிவேப்பிலை - சிறிது

    மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்

    மிளகுத் தூள் - 1/2 டீஸ்பூன்

    கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்

    கொத்தமல்லி - சிறிது

    தேங்காய் எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

    உப்பு - சுவைக்கேற்ப

    செய்முறை:

    * வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கிகொள்ளவும்.

    * ஒரு பௌலில் முட்டைகளை உடைத்து ஊற்றி, அதில் சிறிது உப்பு சேர்த்து நன்கு அடித்துக் கொள்ள வேண்டும்.

    * ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், சீரகத்தைப் போட்டு தாளித்த, பின் கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

    * பிறகு வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கவும்.

    * வெங்காயம் சற்று வதங்கியதும் மஞ்சள் தூள், மிளகுத் தூள், கரம் மசாலா சேர்த்து நன்கு வதக்கவும்.

    * அடுத்து அதில் அடித்து வைத்துள்ள முட்டையை ஊற்றி, நன்கு கிளறி விட்டு, தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறி விடவும்.

    * முட்டை நன்கு வெந்ததும், கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், சுவையான செட்டிநாடு முட்டை பொடிமாஸ் தயார்.

    கோஸ், கேரட்டில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று இந்த இரண்டு காய்கறிகளை வைத்து சத்தான பொரியல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருள்கள் :

    முட்டைக் கோஸ் - 250 கிராம்
    கேரட் - 100 கிராம்
    தேங்காய் துருவல் - 3 மேஜைக்கரண்டி
    துவரம் பருப்பு - 4 மேஜைக்கரண்டி
    ப.மிளகாய் - 3
    உப்பு - தேவையான அளவு

    தாளிக்க :

    கடுகு - 1 தேக்கரண்டி
    உளுந்தம் பருப்பு - 1/2 தேக்கரண்டி
    பெரிய வெங்காயம் - 1
    கறிவேப்பிலை - சிறிது
    எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி 



    செய்முறை :

    துவரம் பருப்பை நன்றாக கழுவி வேக வைத்து கொள்ளவும்.

    வெங்காயம், முட்டைக் கோஸை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கேரட்டை துருவியில் துருவிக் கொள்ளவும்.

    அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்தம் பருப்பு, ப.மிளகாய், கறிவேப்பில்லை போட்டு தாளித்து பின் வெங்காயத்தை போட்டு பொன்னிறமாகும் வரை வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் அடுப்பை சிம்மில் வைத்து கோஸ், கேரட், உப்பு சேர்த்து வதக்கவும்.

    சிறிது தண்ணீர் தெளித்து 15 நிமிடங்கள் வரை நன்கு வதக்கவும்.  

    இறுதியில் தேங்காய்துருவல், வேக வைத்த பருப்பு போட்டு கிளறி அடுப்பிலிருந்து இறக்கி விடவும்.

    கோஸ் கேரட் பொரியல் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×