search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Prawn Recipes"

    • குழந்தைகளுக்கு இறால் என்றால் மிகவும் பிடிக்கும்.
    • இன்று இறால், முட்டை சேர்த்து பொடிமாஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள் :

    இறால் - 200 கிராம்

    முட்டை - 2

    வெங்காயம் - 2,

    இஞ்சி, பூண்டு பேஸ்ட் - 1/2 ஸ்பூன்,

    மஞ்சள் தூள் - சிறிது,

    உப்பு - 1/2 ஸ்பூன்,

    வெங்காயத்தாள் - சிறிதளவு

    மிளகு தூள் - கால் டீஸ்பூன்

    மிளகாய் தூள் - கால் டீஸ்பூன்,

    கரம்மசாலா தூள் - கால் டீஸ்பூன்,

    கறிவேப்பிலை - சிறிதளவு

    கொத்தமல்லி - சிறிதளவு

    எண்ணெய் - தேவையான அளவு

    செய்முறை :

    இறாலை சுத்தம் செய்து சிறிது மிளகாய் தூள், உப்பு, இஞ்சி, பூண்டு பேஸ்ட், மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கலந்து அரை மணி நேரம் ஊற வைத்து தோசை கல்லையில் போட்டு வறுத்து கொள்ளவும். வறுத்த இறாலை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    வெங்காயத்தாள், வெங்காயம், கொத்தமல்லி, கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம், வெங்காயத்தாள் போட்டு வதக்கவும்.

    வெங்காயம் சற்று வதங்கியதும் இஞ்சி, பூண்டு பேஸ்ட் போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

    அடுத்து அதில் மஞ்சள் தூள், மிளகு தூள், கரம்மசாலா தூள், மிளகாய் தூள், கறிவேப்பிலை, உப்பு போட்டு வதக்கவும்.

    அடுத்து அதில் முட்டையை உடைத்து ஊற்றி நன்றாக கிளறவும்.

    முட்டை நன்றாக வெந்து உதிரி உதிரியாக வந்ததும் பொடியாக நறுக்கி இறால், வெங்காயத்தாள், கொத்தமல்லி சேர்த்து நன்றாக கலந்து இறக்கி பரிமாறவும்.

    சூப்பரான இறால் பொடிமாஸ் ரெடி.

    லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • இறாலில் பல்வேறு ருசியான ரெசிபிகளை செய்யலாம்.
    • இந்த ரெசிபி செய்ய 10 நிமிடங்களே போதுமானது.

    தேவையான பொருட்கள்

    இறால் - 1/4 கிலோ,

    இஞ்சி - 1 துண்டு,

    பூண்டு - 5 பல்,

    பச்சைமிளகாய் - 5,

    சின்ன வெங்காயம் - 100 கிராம்,

    சோம்பு, சீரகம் - தலா 20 கிராம்,

    மஞ்சள் தூள்- 10 கிராம்,

    நல்லெண்ணெய் - 10 மி.லி.,

    எலுமிச்சை பழம் - 1,

    உப்பு,கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை - தேவைக்கு.

    செய்முறை

    இறாலை நன்றாக சுத்தம் செய்துகொள்ளவும்.

    இஞ்சி, பூண்டு, பச்சைமிளகாய், வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    சுத்தம் செய்த இறாலை மிக்சியில் போட்டு கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் சோம்பு, சீரகம், பூண்டு, இஞ்சி, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின்னர் வெங்காயம், ப.மிளகாய் சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் வதங்கியதும் அரைத்த இறாலை போட்டு கிளறவும்.

    அடுத்து அதில் மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கிளறவும்.

    இறால் வெந்து உதிரியாக வரும் போது கொத்தமல்லித்தழை, எலுமிச்சைச்சாறு பிழிந்து புட்டு மாதிரி வரும்வரை கிளறி இறக்கவும்.

    இப்போது சூப்பரான இறால் புட்டு ரெடி.

    • கடல் உணவுகளில் பெரும்பாலானவர்களுக்கு பிடித்தது இறால்.
    • ‘இறால் பால்ஸ்’ எவ்வாறு சமைப்பது என்பதை இங்கு காணலாம்...

    தேவையான பொருட்கள்:

    இறால் - 500 கிராம்

    மிளகு தூள் - 1 தேக்கரண்டி

    மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி

    முட்டை - 1

    சோயா சாஸ் - 1 தேக்கரண்டி

    சோளமாவு - 2 தேக்கரண்டி

    ரொட்டித் தூள் / நுணுக்கிய பொறை - 8 தேக்கரண்டி

    இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி

    பச்சை மிளகாய் - 2

    வெங்காயம் பெரியது - 1

    கொத்தமல்லித் தழை - சிறிதளவு

    எண்ணெய் - தேவையான அளவு

    உப்பு - தேவையான அளவு

    செய்முறை:

    இறாலை நன்றாக சுத்தம் செய்து, மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்துக் கிளறி 10 நிமிடங்கள் ஊற வைக்கவும்.

    இஞ்சி பூண்டு விழுதுடன், பச்சை மிளகாய் மற்றும் வெங்காயம் சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.

    ஊறவைத்த இறாலை சிறு சிறு துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் இறாலுடன் மிளகுத்தூள், உப்பு, சோயா சாஸ், அரைத்து வைத்த விழுது சேர்த்து நன்றாகக் கிளறவும்.

    பின்பு முட்டையை சிறிய பாத்திரத்தில் நன்றாக அடித்துக் கலக்கவும். அதனை இறாலுடன் சேர்த்துக் கிளறவும்.

    பின்னர் அதில் சோள மாவு, 4 தேக்கரண்டி ரொட்டித் தூள் அல்லது நுணுக்கிய பொறையை சேர்த்து நன்றாகக் கலந்து சிறு சிறு உருண்டைகளாக பிடிக்கவும்.

    இந்த இறால் உருண்டைகளை மீதமிருக்கும் ரொட்டித் தூள் அல்லது நுணுக்கிய பொறையில் மென்மையாக உருட்டி 30 நிமிடங்கள் வரை குளிர்சாதனப்பெட்டியில் வைக்கவும்.

    பின்பு அடுப்பில் அடி கனமான வாணலியை வைத்து, அதில் பொரிப்பதற்குத் தேவையான அளவு எண்ணெய் ஊற்றவும். அது நன்றாக சூடானதும், அதில் இறால் உருண்டைகளைப் போட்டு பொன்னிறமாகும் வரை பொரித்து எடுக்கவும்.

    அதன் மேல் சிறிது கொத்தமல்லித்தழையைத் தூவவும்.

    இப்பொழுது மொறுமொறு இறால் பால்ஸ் தயார்.

    இதனுடன் சில்லி சாஸ் கலந்த மயோன்னசை சேர்த்து சாப்பிடலாம்.

    • கேரளாவில் இறால் மொய்லி மிகவும் பிரபலமான உணவு.
    • இதனை இட்லி, தோசை, இடியாப்பம், சாதத்துடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

    தேவையான பொருட்கள்

    இறால் - அரை கிலோ

    பெரிய வெங்காயம் - 1

    தக்காளி -1

    பச்சை மிளகாய் - 2

    இஞ்சி - சிறிது

    பூண்டு - 4 பல்

    கறிவேப்பிலை - தேவையான அளவு

    தேங்காய் பால் - 2 கப் (முதல் பால்)

    மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி

    மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி

    மல்லித் தூள் - 1 தேக்கரண்டி

    எலுமிச்சை சாறு/வினிகர் - 1 தேக்கரண்டி

    தேங்காய் எண்ணெய் - 2 மேசைக்கரண்டி

    கடுகு - 1/2 தேக்கரண்டி

    உப்பு - தேவையான அளவு

    தண்ணீர் - கால் கப்

    செய்முறை

    இறாலை நன்கு சுத்தம் செய்து அரை தேக்கரண்டி மஞ்சள் தூள், சிறிதளவு உப்பு சேர்த்து 15 நிமிடம் ஊற வைக்கவும்.

    வெங்காயம், தக்காளியை நீளவாக்கில் நறுக்கி வைக்கவும்.

    பச்சை மிளகாயை கீறி வைக்கவும்.

    இஞ்சியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

    ஒரு கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு போட்டு தாளித்த பின்னர் இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

    அடுத்து அதில் வெங்காயம் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.

    வெங்காயம் வதங்கியதும் இறால் மற்றும் உப்பு சேர்த்து நிறம் மாறும் வரை வதக்கவும்.

    நிறம் மாறியதும் தூள் வகைகள் சேர்த்து ஒரு நிமிடம் சிறுதீயில் வதக்கவும்.

    நன்கு வதங்கியதும் தக்காளி சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி தண்ணீர் ஊற்றவும்.

    பின்பு தேங்காய் பாலைச் சேர்க்கவும்.

    நுரைத்து கொதி வந்ததும் அடுப்பை அணைத்து எலுமிச்சை சாறு சேர்த்து இறக்கவும்.

    சுவையான இறால் மொய்லி தயார்.

    இதனை இட்லி, தோசை, இடியாப்பம், சாதம் ஆகியவற்றுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

    இறாலில் புரதம், கால்சியம், பொட்டசியம் மற்றும் பல வைட்டமின்கள் நிறைந்துள்ளன. உணவில் வாரம் ஒரு முறை இறாலை சேர்த்துக் கொண்டால், பல நோய்களுக்கு மருந்தாகும்.
    தேவையான பொருட்கள்

    இறால் - 100 கிராம்
    முட்டை - 2
    மிளகு தூள் - சிறிதளவு
    உப்பு - அரை ஸ்பூன்
    இஞ்சி, பூண்டு பேஸ்ட் - அரை ஸ்பூன்
    மஞ்சள் தூள் - சிறிது
    மிளகாய் தூள் - சிறிதளவு
    வெங்காயம் - 2
    கறிவேப்பிலை - சிறிதளவு
    வெங்காயத்தாள் - சிறிதளவு
    கொத்தமல்லி - சிறிதளவு
    எண்ணெய் - தேவையான அளவு

    செய்முறை

    முதலில் இறாலை சுத்தம் செய்து சிறிது மிளகாய் தூள், உப்பு, இஞ்சி, பூண்டு பேஸ்ட், மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கலந்துசுமார் அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.

    பின்னர் அதனை தோசை கல்லையில் போட்டு நன்றாக வறுத்து கொள்ளவும். வறுத்த இறாலை பொடியாக நறுக்கி கொள்ளவும். வெங்காயத்தாள், வெங்காயம், கொத்தமல்லி, கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    பின்னர் பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம், வெங்காயத்தாள் போட்டு வதக்கவும். வெங்காயம் சற்று வதங்கியதும் இஞ்சி, பூண்டு பேஸ்ட் போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

    அடுத்து அதில் மஞ்சள் தூள், மிளகு தூள், மிளகாய் தூள், கறிவேப்பிலை, உப்பு போட்டு வதக்கவும். அடுத்ததாக அதில் முட்டையை உடைத்து ஊற்றி நன்கு கிளறவும்.

    முட்டை நன்றாக வெந்து உதிரி உதிரியாக வந்ததும் பொடியாக நறுக்கிய இறால், வெங்காயத்தாள் சேர்த்து நன்றாக கலந்து இறக்கி பரிமாறலாம்.

    இப்போது சுவையான இறால் முட்டை பொடிமாஸ் ரெடி.
    நாண், தோசை, சப்பாத்தி, புலாவ், சாதத்திற்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இறால் சுக்கா. இன்று இந்த சுக்காவை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    இறால் - 250 கிராம்,
    சின்ன வெங்காயம் - 100 கிராம்,
    தக்காளி - 25 கிராம்,
    நறுக்கிய பூண்டு - 2 டீஸ்பூன்,
    இஞ்சி பூண்டு விழுது - 2 டீஸ்பூன்,
    உப்பு - தேவைக்கு,
    மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்,
    தனியா தூள் - 2 டீஸ்பூன்,
    கரம்மசாலாத்தூள் - 2 டீஸ்பூன்,
    கொத்தமல்லித்தழை - 1/2 கட்டு,
    கறிவேப்பிலை - 1 கொத்து,
    எண்ணெய் - 100 மி.லி.,
    பச்சைமிளகாய் - 5,
    சோம்பு தூள் - 2 டீஸ்பூன்,
    சீரகத்தூள் - 2 டீஸ்பூன்.



    செய்முறை :

    இறாலை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும்.

    தக்காளி, வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் சின்ன வெங்காயம், பூண்டு, கரம்மசாலாத்தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

    அடுத்து அதில் தக்காளி, பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும்.

    தக்காளி நன்கு வதங்கியதும் இறால், உப்பு, சோம்பு தூள், சீரகத்தூள், மிளகாய்த்தூள், தனியா தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.

    இறால் நன்கு வெந்து தண்ணீர் சுண்டியதும், கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலையை தூவி அலங்கரித்து பரிமாறவும்.

    சூப்பரான இறால் சுக்கா ரெடி. 
    குழந்தைகளுக்கு இறால் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று இறால், முட்டை சேர்த்து சுவையான பொடிமாஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    இறால் - 100 கிராம்
    முட்டை - 2
    வெங்காயம் - 2,
    இஞ்சி, பூண்டு பேஸ்ட் - 1/2 ஸ்பூன்,
    மஞ்சள் தூள் - சிறிது,
    உப்பு - 1/2 ஸ்பூன்,
    வெங்காயத்தாள் - சிறிதளவு
    மிளகு தூள் - சிறிதளவு
    மிளகாய் தூள் - சிறிதளவு,
    கறிவேப்பிலை - சிறிதளவு
    கொத்தமல்லி - சிறிதளவு
    எண்ணெய் - தேவையான அளவு



    செய்முறை :

    இறாலை சுத்தம் செய்து சிறிது மிளகாய் தூள், உப்பு, இஞ்சி, பூண்டு பேஸ்ட், மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கலந்து அரை மணி நேரம் ஊற வைத்து தோசை கல்லையில் போட்டு வறுத்து கொள்ளவும்.

    வறுத்த இறாலை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    வெங்காயத்தாள், வெங்காயம், கொத்தமல்லி, கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம், வெங்காயத்தாள் போட்டு வதக்கவும்.

    வெங்காயம் சற்று வதங்கியதும் இஞ்சி, பூண்டு பேஸ்ட் போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

    அடுத்து அதில் மஞ்சள் தூள், மிளகு தூள், மிளகாய் தூள், கறிவேப்பிலை, உப்பு போட்டு வதக்கவும்.

    அடுத்து அதில் முட்டையை உடைத்து ஊற்றி நன்றாக கிளறவும்.

    முட்டை நன்றாக வெந்து உதிரி உதிரியாக வந்ததும் பொடியாக நறுக்கி இறால், வெங்காயத்தாள் சேர்த்து நன்றாக கலந்து இறக்கி பரிமாறவும்.

    சூப்பரான இறால் முட்டை பொடிமாஸ் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு இறால் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று மதிய உணவிற்கு சூப்பரான இறால் முட்டை சாதம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    இறால் - 300 கிராம்
    முட்டை  - 3
    வடித்த சாதம் - ஒரு கப்
    பச்சை மிளகாய் - 3
    பெரிய வெங்காயம் - 2
    கரம் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன்
    மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்
    மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
    இஞ்சிபூண்டு பேஸ்ட் - ஒரு டீஸ்பூன்
    எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
    கறிவேப்பிலை - சிறிதளவு
    உப்பு - தேவையான அளவு
    கொத்தமல்லித்தழை - தேவையான அளவு



    செய்முறை:

    இறாலை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும்.

    உதிரியாக வேக வைத்த சாதத்தை ஆற வைத்து கொள்ளவும்.

    வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் சுத்தம் செய்த இறாலை போட்டு அதனுடன் ஒரு டீஸ்பூன் மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், சிறிது உப்பு சேர்த்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

    ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு கறிவேப்பிலை, நறுக்கிய பச்சை மிளகாய், பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சிபூண்டு பேஸ்ட் சேர்த்து, பச்சை வாசனை போக வதக்கி, பிசிறி வைத்த இறால் கலவையும் சேர்த்து வதக்கவும்.

    பிறகு கரம் மசாலாத்தூள், மீதமுள்ள மிளகாய்த்தூள் சேர்த்து நன்கு வதக்கி, 10 நிமிடம் தீயைக் குறைத்து இறாலை வேக விடவும்.

    இறால் வெந்ததும் முட்டையை உடைத்து ஊற்றி, முட்டைக்குத் தேவையான உப்பு மட்டும் சேர்த்து முட்டையை இறாலுடன் சேர்த்து நன்கு கலக்கிவிட்டு வேகவிடவும்.

    கடைசியாக அதனுடன் ஆற வைத்த சாதம், கொத்தமல்லி தழை சேர்த்து நன்றாக கலந்து பரிமாறவும்.

    தேவைப்பட்டால், மிளகுத்தூள் சேர்த்துக் கொள்ளலாம்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சப்பாத்தி, சாதம், தோசைக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் முள்ளங்கி இறால் குருமா. இன்று இந்த குருமாவை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்  :

    இறால் - 1/2 கிலோ
    முள்ளங்கி - 1/4 கிலோ
    வெங்காயம் - 200 கிராம்
    தக்காளி - 200 கிராம்
    மஞ்சள் தூள் - சிறிதளவு
    தேங்காய் துருவல் - 1/4 மூடி
    பட்டை - 2
    லவங்கம் - 2
    இஞ்சி, பூண்டு - 1 டீஸ்பூன்
    தயிர் - 1/2 கப்
    பச்சை மிளகாய் - 7
    உப்பு - தேவையான அளவு
    கொத்தமல்லி - சிறிதளவு
    எண்ணெய் - ஒரு குழிக்கரண்டி



    செய்முறை  :

    இறாலைச் சுத்தம் செய்து தயிரில் சிறிது நேரம் ஊற வைக்கவும்.

    வெங்காயம், கொத்தமல்லி, தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    மிளகாயை கீறிக் கொள்ளவும்.

    தேங்காயை அரைத்துக் கொள்ளவும்.

    முள்ளங்கியை வட்டமாக நறுக்கி கொள்ளவும்.

    கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை லவங்கம் போட்டுத் தாளித்த பின்னர் நறுக்கிய வெங்காயம், கீறிய மிளகாய் சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கிதும் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

    அடுத்து அதில் தக்காளியை சேர்த்து வதக்கவும்.

    அடுத்து அதில் மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.

    அடுத்து சுத்தம் செய்த இறாலை, முள்ளங்கி சேர்த்து வதக்கவும்.

    தேவையான உப்பு சேர்த்து, அரைத்த தேங்காயை சேர்க்கவும்.

    முள்ளங்கியும், இறாலும் நன்கு வெந்ததும், நறுக்கிய கொத்தமல்லி இலை தூவி இறக்கி பரிமாறவும்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு இறால் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று ஹாங்காங் ஃப்ரைடு இறாலை வீட்டிலேயே எளிய முறையில் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    இறால் - 500 கிராம்
    கார்ன்ஃப்ளார் - 50 கிராம்
    மைதா மாவு - 25 கிராம்
    முட்டை - 1
    உப்பு - தேவையான அளவு
    இஞ்சி, பூண்டு விழுது - அரை டீஸ்பூன்
    சர்க்கரை - 1 டீஸ்பூன்
    வெள்ளை மிளகுத்தூள் - 2 டீஸ்பூன்
    பெரிய வெங்காயம் - 50 கிராம்
    இடித்த காய்ந்த மிளகாய்ப் பொடி - 2 டீஸ்பூன்
    செலரி இலைகள் - சிறிதளவு
    இஞ்சி, பூண்டு - 10 கிராம்
    எண்ணெய் - தேவையான அளவு
    வெங்காயத்தாள் - 10 கிராம்
    பச்சை மிளகாய் - 2



    செய்முறை:

    ப.மிளகாயை நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும்.

    செலரி, இஞ்சி, பூண்டு, வெங்காயத்தாளை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    இறாலை நன்றாக சுத்தமாக கழுவி கார்ன்ஃப்ளார், மைதா, முட்டை, உப்பு, இஞ்சி, பூண்டு விழுது, தண்ணீர் சேர்த்துப் பிசைந்து 30 நிமிடம் ஊறவைக்கவும்.

    கடாயை அடுப்பில் வைத்து பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி சூடானதும் ஊறவைத்த இறாலை போட்டு பொரித்து எடுக்கவும்.

    மற்றொரு வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி, இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், வெங்காயம், செலரி, காய்ந்த மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கவும்.

    இதில் பொரித்த இறால், உப்பு, சர்க்கரை, வெள்ளை மிளகுத்தூள், வெங்காயத்தாள் தூவிக் கிளறி இறக்கவும்.

    சூப்பரான ஹாங்காங் ஃப்ரைடு இறால் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    வெங்காயம், முந்திரி, சிக்கனில் பக்கோடா சாப்பிட்டு இருப்பீங்க. இன்று இறாலை வைத்து அருமையான பக்கோடா செய்வது எப்படி என்று பாக்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    இறால் - 200 கிராம்
    தக்காளி - 1
    வெங்காயம் - 1
    கொத்தமல்லி - சிறிதளவு
    சோம்பு தூள் - அரை ஸ்பூன்
    கரம்மசாலா தூள் - அரை ஸ்பூன்
    மிளகாய் தூள் - அரை ஸ்பூன்
    தனியா தூள் - கால் ஸ்பூன்
    உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
    பஜ்ஜி மாவு - 1 கப்
    அரிசி மாவு - 3 ஸ்பூன்.



    செய்முறை :

    தக்காளி, வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் பஜ்ஜி மாவு, அரிசி மாவு, உப்பு சேர்த்து பஜ்ஜி மாவு பதத்தில் பிசைந்து கொள்ளவும்.

    இறாலை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் சோம்பு தூள் போட்டு தாளித்த பின்னர் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளியை சேர்த்து வதக்கவும்.

    தக்காளி நன்றாக வதங்கியதும் கரம் மசாலா தூள், மிளகாய் தூள், தனியா தூள் சேர்த்து நன்றாக வதக்கவும்.

    அடுத்து அதில் இறால், உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.

    இறால் நன்றாக வெந்ததும் அதில் கொத்தமல்லி தழை தூவி இறக்கி அதை பஜ்ஜி மாவில் போட்டு நன்றாக கலக்கவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் கலந்து வைத்துள்ள மாவை டீஸ்பூன் எடுத்து சிறிது சிறிதாக ஊற்றவும்.

    வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுக்கவும்.

    சூப்பரான மாலை நேர ஸ்நாக்ஸ் இறால் பக்கோடா ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    இறாலை வறுவல், குழம்பு, கிரேவி, பிரியாணி என பலவகைகளில் சமையல் செய்து உண்ணுகிறார்கள். அதில் இறால் மசாலா தொக்கு செய்வது எப்படி எனப் பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    இறால் - 1/2 கிலோ
    வெங்காயம் - 2
    தக்காளி -2
    இஞ்சி, பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
    சோம்பு - 1/2 டீஸ்பூன்
    சோம்பு தூள் - 1/ 2டீஸ்பூன்
    மிளகுத்தூள் - 1/2 டீஸ்பூன்
    மிளகாய்த்தூள் -1 டீஸ்பூன்
    மல்லித்தூள் -2 டீஸ்பூன்
    மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
    உப்பு - சுவைக்கேற்ப
    பச்சை மிளகாய் - 2
    கறிவேப்பிலை - சிறிதளவு
    எண்ணெய் - 3 டீஸ்பூன்
    கொத்தமல்லி - சிறிதளவு



    செய்முறை :

    இறாலை நன்றாக கழுவி சுத்தம் செய்து வைக்கவும்.

    வெங்காயம், கொத்தமல்லி, தக்காளியை பொடியாக நறுக்கி வைக்கவும்.

    கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சோம்பு போட்டு லேசாக நிறம் மாறியதும் வெங்காயம், கறிவேப்பிலை, பச்சை மிளகாய் போட்டு நன்றாக வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

    அடுத்து அதில் தக்காளி சேர்த்து வதக்கவும்.

    தக்காளி நன்கு குழைய நன்றாக வதங்கியதும் உப்பு, மிளகாய்த்தூள், மல்லித்தூள், மஞ்சள்தூள் போட்டு வதக்கவும்.

    நன்கு வதங்கியதும் அதில் இறாலை போட்டு 10 நிமிடம் வதக்கியதும் சோம்புத்தூள், மிளகுத்தூள் போட்டு கிளறி விடவும்.

    தொக்கு சுருள வதங்கி வந்தவுடன் அதில் கொத்தமல்லி தழை தூவி இறக்கி பரிமாறவும்.

    ருசியான இறால் மசாலா தொக்கு ரெடி!

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×