search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sukka"

    நாண், தோசை, சப்பாத்தி, புலாவ், சாதத்திற்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இறால் சுக்கா. இன்று இந்த சுக்காவை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    இறால் - 250 கிராம்,
    சின்ன வெங்காயம் - 100 கிராம்,
    தக்காளி - 25 கிராம்,
    நறுக்கிய பூண்டு - 2 டீஸ்பூன்,
    இஞ்சி பூண்டு விழுது - 2 டீஸ்பூன்,
    உப்பு - தேவைக்கு,
    மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்,
    தனியா தூள் - 2 டீஸ்பூன்,
    கரம்மசாலாத்தூள் - 2 டீஸ்பூன்,
    கொத்தமல்லித்தழை - 1/2 கட்டு,
    கறிவேப்பிலை - 1 கொத்து,
    எண்ணெய் - 100 மி.லி.,
    பச்சைமிளகாய் - 5,
    சோம்பு தூள் - 2 டீஸ்பூன்,
    சீரகத்தூள் - 2 டீஸ்பூன்.



    செய்முறை :

    இறாலை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும்.

    தக்காளி, வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் சின்ன வெங்காயம், பூண்டு, கரம்மசாலாத்தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

    அடுத்து அதில் தக்காளி, பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும்.

    தக்காளி நன்கு வதங்கியதும் இறால், உப்பு, சோம்பு தூள், சீரகத்தூள், மிளகாய்த்தூள், தனியா தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.

    இறால் நன்கு வெந்து தண்ணீர் சுண்டியதும், கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலையை தூவி அலங்கரித்து பரிமாறவும்.

    சூப்பரான இறால் சுக்கா ரெடி. 
    விருதுநகர் மட்டன் சுக்காவை தோசை, சப்பாத்தி, சாதத்துடன் சாப்பிட சூப்பராக இருக்கும். இன்று இந்த சுக்காவை வீட்டிலேயே எளிய முறையில் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    சின்னவெங்காயம் - 200 கிராம்
    எலும்பில்லாத மட்டன் - 200 கிராம்
    இஞ்சி, பூண்டு விழுது - 30 கிராம்
    சீரகத்தூள் - 40 கிராம்
    மிளகாய்த்தூள் - 20 கிராம்
    நல்லெண்ணெய் - 30 மில்லி.
    கொத்தமல்லித்தழை - சிறிதளவு
    கறிவேப்பிலை - சிறிதளவு
    காய்ந்த மிளகாய் - 2
    உப்பு - தேவையான அளவு



    செய்முறை :

    மட்டனை நன்றாக சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

    கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக வெட்டிக்கொள்ளவும்.

    கடாயில் எண்ணெய் ஊற்றி, கிள்ளிய காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை போட்டு தாளித்த பின்னர் வெங்காயம் போட்டு வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம், பொன்னிறமாக வந்தவுடன் மட்டனையும், மிளகாய்த்தூளையும் சேர்த்து வதக்கி, சிறிதளவு தண்ணீர் மட்டும் சேர்த்து நன்றாக வேகவைக்கவும்.

    மட்டன் நன்கு வெந்தது தண்ணீர் ஏதும் இல்லாமல் டிரையாக வந்தவுடன், சீரகத்தூளை தூவி, உப்பு சேர்த்து கலக்கி, கொத்தமல்லித்தழை தூவி இறக்கி பரிமாறவும்.

    சூப்பரான விருதுநகர் மட்டன் சுக்கா ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    புலாவ், நாண், சப்பாத்தி, பூரி, சாம்பார் சாதத்திற்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் பன்னீர் சுக்கா. இன்று இந்த சுக்காவை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பன்னீர் - 300 கிராம்
    இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
    மஞ்சள் தூள் - அரைத்தேக்கரண்டி
    மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
    மல்லித்தூள் - அரை தேக்கரண்டி
    கரம்மசாலா தூள் - அரை தேக்கரண்டி
    பச்சை மிளகாய் - 1
    கறிவேப்பிலை - சிறிதளவு
    கொத்தமல்லி - சிறிதளவு
    நெய் - 2 தேக்கரண்டி
    வெண்ணெய் - 1 தேக்கரண்டி
    உப்பு - சுவைக்கு
    எலுமிச்சை சாறு - அரை தேக்கரண்டி



    செய்முறை :

    பன்னீரை துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

    கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து 1 தேக்கரண்டி நெய் விட்டு வெட்டி வைத்துள்ள பன்னீர் துண்டுகளை சேர்த்து பொன்னிறமாக வறுத்து தனியாக எடுத்து வைக்கவும்.

    கடாயில் மேலும் ஒரு தேக்கரண்டி நெய் சேர்த்து சூடானதும் ப.மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளித்த பின்னர் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

    அடுத்து அதில் சிறிது தண்ணீர் சேர்த்து பிரட்டி அத்துடன்  மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள், கரம்மசாலா தூள், உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.

    மசாலா சுண்டி வரும் போது வெண்ணெய் சேர்த்து பிரட்டி சுக்காவாக இறக்கவும்.

    இறக்கும்போது எலுமிச்சை சாறு, கொத்தமல்லி இலை சேர்த்து பிரட்டி இறக்கவும்.

    சூப்பரான பன்னீர் சுக்கா ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×