என் மலர்
நீங்கள் தேடியது "Hindutva Group"
- மற்றொரு தனியார் அசைவ உணவகத்தையும் இந்துத்துவா கும்பல் மூட வைத்துள்ளது.
- யாரும் இதுவரை கைது செய்யப்படவில்லை.
உத்தரப் பிரதேசத்தில் அசைவ உணவு விற்கக்கூடாது என்று கூறி கேஎஃப்சி உணவகத்தை இந்து அமைப்பினர் மூட வைத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் காசியபாத்தில் இந்திராபுரம் பகுதியில் KFC உணவக கிளை இயங்கி வந்தத. இந்நிலையில் நேற்று இந்த கடைக்குள் திடீரென காவிக்கொடியுடன் இந்து ரக்ஷா தளம் கும்பல் புகுந்தது.
ஷ்ரவன் மாதத்தில் (ஜூலை - ஆகஸ்ட்) அசைவ உணவு விற்கக்கூடாது என அங்குள்ள ஊழியர்களை கும்பல் மிரட்டி ஆர்ப்பாட்டம் செய்துள்ளது.
சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ள இந்தக் காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
சைவம் மட்டுமே என்று வலுக்கட்டாயமாக கடையின் முன் போர்டை நிறுவியுள்ளது. ஆனால் தங்கள் உணவகத்திற்கு அசைவம் சாப்பிடவே மக்கள் வருகிறார்கள் என்றும் இதனால் தங்களுக்கு நஷ்டம் தான் என கடையை மூடுவதாக உணவக மேலாளர் தெரிவித்தார்.
இதேபோல் மற்றொரு தனியார் அசைவ உணவகத்தையும் இந்துத்துவா கும்பல் மூட வைத்துள்ளது.
மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி கோரியே இந்த ஆர்ப்பாட்டத்தை கும்பல் நடத்தியுள்ளது. அதில் உள்ளே புகுந்து மிரட்டல் விடுத்து கும்பல் அத்துமீறியுள்ளதால் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஆனால் யாரும் இதுவரை கைது செய்யப்படவில்லை.
- PUCL மற்றும் APCR நடத்திய விசாரணையில் தெரியவந்தது.
- ஆர்எஸ்எஸ், சிவ் பிரதிஷ்டான் மற்றும் இந்து ராஷ்டிர சேனா போன்ற குழுக்கள் இந்து கிராமவாசிகளின் மனதைக் கெடுத்துள்ளன.
மகாராஷ்டிராவின் புனேவில் உள்ள போட் மற்றும் பிராங்குட் கிராமங்களில், வகுப்புவாத அச்சுறுத்தல்கள் மற்றும் சமூக-பொருளாதார புறக்கணிப்புகள் காரணமாக முஸ்லிம் குடும்பங்கள் கிராமங்களை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
இவர்களில் பலர் இருபது ஆண்டுகளுக்கும் மேலாக இங்கு வசிப்பவர்கள். கிராமங்களைச் சேர்ந்த இந்துத்துவா அடிப்படைவாதிகள், இவர்களை பூர்வீகமற்ற முஸ்லிம்கள் என்று கூறி புறக்கணிப்பை நியாயப்படுத்துகின்றனர்.
மனித உரிமை அமைப்புகளான PUCL மற்றும் APCR நடத்திய உண்மை கண்டறியும் விசாரணையில், அச்சமான சூழல், வணிகங்கள் மூடல், சீர்குலைந்த வாழ்க்கை மற்றும் குடும்ப இடம்பெயர்வுகள் கண்டறியப்பட்டன.
மே 2 அன்று, பாட் கிராமத்தில் பாஜக மற்றும் பிற வலதுசாரி அமைப்புகள், அம்மன் சிலையை அவமதித்ததாக முஸ்லிம்களைக் குற்றம் சாட்டி பேரணிகள் நடத்தினர். இதைத் தொடர்ந்து, பூர்வீகமற்ற முஸ்லிம்களைப் புறக்கணிக்கக் கோரும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு, முஸ்லிம்களுக்கு அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டன.
PUCL இது தொடர்பாக புனே கிராமப்புற காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தது. சுவரொட்டிகள் அகற்றப்பட்டாலும், பேக்கரிகள், சலூன்கள் போன்ற முஸ்லிம்களுக்குச் சொந்தமான பல கடைகள் மூடப்பட்டே கிடக்கின்றன. காவல்துறையிடம் புகார் அளித்தும் வணிகங்களைத் திறக்க எந்தப் பாதுகாப்பும் கிடைக்கவில்லை என்று முஸ்லிம்கள் தெரிவித்தனர்.
ஒரு பேக்கரி உரிமையாளர், தனது குடும்பம் 40 ஆண்டுகளாக வசித்தாலும், உத்தரப்பிரதேசத்தில் தங்கள் பூர்வீகம் என்பதால் வெளியாட்கள் என்று முத்திரை குத்தப்படுவதாகக் கூறினார். மூடப்பட்ட பல முஸ்லிம் பேக்கரிகள் 400க்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப் பறித்துள்ளன.
இந்து ராஷ்டிர சேனா உறுப்பினர் தனஞ்சய் தேசாய், முஸ்லிம் வணிகர்களை கடைகளை விட்டு வெளியேறும்படி மிரட்டி வருவதாகக் கூறப்படுகிறது. முஸ்லிம்களுக்குச் சொந்தமான ஒரு பழைய இரும்பு கடைக்கு தீ வைக்கப்பட்டதில் ரூ. 20 லட்சம் இழப்பு ஏற்பட்டது, ஆனால் எந்த நடவடிக்கையும் இல்லை. மத இடங்களும் இலக்காகின. முஸ்லிம்களின் நடமாட்டம் வாட்ஸ்அப் குழுக்களால் கண்காணிக்கப்பட்டது.
பலர் உத்தரப்பிரதேசத்தில் உள்ள தங்கள் பூர்வீக கிராமங்களுக்குத் தப்பிச் சென்றுள்ளனர். இதனால் குழந்தைகளுடைய கல்வி பாதிக்கப்பட்டுள்ளது. முன்னாள் காங்கிரஸ் தாலுகா தலைவர் அசோக் மாத்ரே, ஆர்எஸ்எஸ், சிவ் பிரதிஷ்டான் மற்றும் இந்து ராஷ்டிர சேனா போன்ற குழுக்கள் இந்து கிராமவாசிகளின் மனதைக் கெடுத்துள்ளதாகக் கூறினார்.
பொருளாதார புறக்கணிப்புகளை அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என்று PUCL கண்டித்துள்ளது. சிவில் உரிமைக் குழுக்கள் இந்த மீறல்களை எதிர்த்து சட்ட நடவடிக்கை எடுக்க தயாராகி வருகின்றன.
- இந்த தாக்குதல் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
- பிரேயரில் கிறிஸ்தவ பாடல் பாடும்படி கூறியதாக குற்றம்சாட்டி இந்த தாக்குதலை நடத்தி உள்ளனர்.
மகாராஷ்டிர மாநிலம் புனே மாவட்டம், தலேகான் தபாடே நகரில் பள்ளி முதல்வரை இந்துத்துவா அமைப்பைச் சேர்ந்தவர்கள் சரமாரியாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
பள்ளி முதல்வர் அலெக்சாண்டர் கோட்ஸ் ரீட், மாணவர்களை பிரேயரில் கிறிஸ்தவ பாடல் பாடும்படி கூறியதாக குற்றம்சாட்டி இந்த தாக்குதலை நடத்தி உள்ளனர். மேலும், பள்ளியில் மாணவிகள் மற்றும் மாணவிகளுக்கான கழிவறைகளுக்கு இடையே கேமரா பொருத்தப்பட்டிருப்பதற்கும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
பள்ளிக்குள் நடந்த இந்த தாக்குதல் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் கிழிந்த சட்டையுடன் பள்ளி முதல்வர் படிக்கட்டில் ஏறுவதும், அவரை சிலர் துரத்துவதும் பதிவாகி உள்ளது. ஒரு நபர் முதல்வரை பின்னால் வந்து வேகமாக தாக்குகிறார். மற்றொரு நபர் அவரை தடுக்கிறார்.
இதுபற்றி தகவல் அறிந்த போலீசார், பள்ளிக்கு விரைந்து சென்று அந்த கும்பலை தடுத்து நிறுத்தி நிலைமையை கட்டுப்படுத்தினர். மேலும் இதுதொடர்பாக விசாரணை நடத்தினர்.
இதுதொடர்பாக போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஞ்சித் சாவந்த் கூறியதாவது:-
ஒரு சில பெற்றோர்கள், இந்துத்துவா அமைப்பைச் சேர்ந்தவர்களுடன் சேர்ந்து பள்ளி முதல்வரை தாக்கி அவரது ஆடைகளைக் கிழித்துள்ளனர். மேலும், ஆட்சேபம் தெரிவிக்கப்பட்ட கேமராவானது, கழிவறைக்கு வெளியே பொருத்தப்பட்டுள்ளது. மாணவர்கள் தினமும் காலையில் ஒரு கிறிஸ்தவ பிரார்த்தனை பாடலை பாடுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டதாக அந்த நபர்கள் கூறினர். ஆனால் "ஓ லார்ட்' என்று தொடங்கும் பொதுவான பிரார்த்தனை பாடல் இது. இது பைபிளில் உள்ள ஒரு வசனம் என்று பெற்றோர்கள் கூறினார்கள். ஆனால் ஜெபத்தில் மதமாற்றம் குறித்தோ அல்லது பைபிளில் இருந்து எந்த வாசகமோ குறிப்பிடப்படவில்லை.
பெற்றோர்கள் அளித்த புகார் மனுவின் அடிப்படையில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால் பள்ளி தரப்பில் புகார் கொடுக்கப்படவில்லை. பள்ளி முதல்வரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தி பள்ளி முதல்வர் மீது தாக்குதல் நடத்தியதாகவும், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் அவருக்கு ஆதரவாக இருப்பதாகவும் பள்ளி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.






