என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vishva Hindu Parishad"

    • விசுவ ஹிந்து பரிஷத்தின் அகில பாரத இணை செயலாளர் நாகராஜன் புதுவை வந்தார். அவர் நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
    • திருக்கோவில்களை ஹிந்து சமய அறநிலைய துறை வியாபார நோக்கோடு அணுகிவருகிறது.

    புதுச்சேரி:

    விசுவ ஹிந்து பரிஷத்தின் அகில பாரத இணை செயலாளர் நாகராஜன் புதுவை வந்தார். அவர் நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் கூறியதாவது:-

    விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பு உலகெங்கிலும் உள்ள ஹிந்து மக்களை ஒற்றுமைப்படுத்தவும், ஹிந்து பண்பாடு மற்றும் கலாச்சாரத்தை காக்கவும் பணியாற்றி வருகிறது.

    ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் ஜல்லிக்கட்டு விழா இந்த ஆண்டும் அரசியல் தலையீடு இல்லாமல் சிறப்பாக நடைபெற வேண்டும். நம்நாட்டில் ஹிந்து சமயத்தில் உள்ள பாரம்பரியமான விஷயங்களை சீர்குலைக்கும் வகையில் பீட்டா என்ற அமைப்பு செயல்பட்டு வருகிறது.

    இவர்கள் நோக்கம் மிருகங்களை காக்க வேண்டும் என்பது அல்ல. மாறாக தமிழர்களின் பண்பாடு மற்றும் பாரம்பரியத்தை சீர்குலைக்கும் விதமாக செயல்பட்டு வருகிறது.

    நம்நாட்டில் பசுவதை தடை சட்டம் இயற்ற வேண்டும், எந்தவித தடங்களும் இல்லாமல் ஜல்லிக்கட்டு சிறப்பாக நடைபெற மத்திய, மாநில அரசுகள் ஆவண செய்ய வேண்டும்.

    திருக்கோவில்களை ஹிந்து சமய அறநிலைய துறை வியாபார நோக்கோடு அணுகிவருகிறது. ஆலய நிர்வாகத்தில் ஆன்மீகத்தில் நம்பிக்கையும், நாட்டமும் உள்ளவர்களையே நியமிக்க வேண்டும். ஹிந்து சயம அறநிலைய துறையை உத்தரகாண்ட் மற்றும் கர்நாடக மாநில அரசுகள் தனிவாரியமாக அறிவித்ததை விசுவ ஹிந்து பரிஷத் வரவேற்கிறது. இது போன்ற தமிழக மற்றும் புதுவை அரசுகளும் அறிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    இந்நிகழ்ச்சியின் போது வட தமிழ்நாடு அமைப்பு செயலாளர் ராமன் மாநில மேலிட பொறுப்பாளர் வேல்முருகன், புதுவை தலைவர் ரவிக்குமார், துணைத்தலைவர் இளங்கோவன், பொருலாளர் கோவிந்தன் நகர தலைவர் சத்யமூர்த்தி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • நாங்கள் கையில் அரிவாள், கத்தி போன்ற பொருட்களை எடுத்துச் செல்லவில்லை. பால் குடங்கள் மட்டும்தான் எடுத்து செல்கிறோம்.
    • பிற கோவிலுக்கு பாதயாத்திரை செல்பவர்கள் உங்களிடம் அனுமதி பெற்று தான் செல்கிறார்களா?

    திருச்சி:

    தைப்பூசத்தை முன்னிட்டு விசுவ இந்து பரிசத் அமைப்பினர் அகில இந்திய செயலாளர் சானுமலைஜி தலைமையில் இன்று காவிரி படித்துறைக்கு வந்தனர். பின்னர் அவர்கள் பால் குடம், காவடி, வேல் மற்றும் அனுமன் கொடியுடன் பாத யாத்திரையாக வயலூர் முருகன் கோவிலுக்கு புறப்பட்டனர்.

    அப்போது அங்கு பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டிருந்த ஸ்ரீரங்கம் காவல் உதவி ஆணையர் நிவேதா லட்சுமி தலைமையிலான போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினார். பின்னர் போலீசார் அவர்களிடம் கொடியேந்தி சொல்ல அனுமதிக்க இயலாது என கூறினர். இதனால் இரு தரப்பிற்கும் இடையே தள்ளுமுள்ளு மற்றும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    அப்போது விசுவ இந்து பரிஷத் அகில இந்திய செயலாளர் சானுமலைஜி, நமது நாட்டில் அனைவருக்கும் அவர்களது மத உரிமைக்கும், வழிபாட்டிற்கும் அனுமதி உண்டு. எனவே பாத யாத்திரை செல்ல எங்களுக்கு உரிமை உண்டு. நீங்கள் அனுமதி தரவில்லை என்றால் இதனை தமிழகம் மட்டுமின்றி இந்திய அளவிலான பிரச்சினையாக எடுத்து சொல்வோம் என்றார். விசுவ இந்து பரிஷத் சேதுராமன், கடந்த 35 வருடமாக இந்த பாதயாத்திரை மேற்கொண்டு வருகிறோம். 5 பால் குடங்களுடன் 21 பேர் மட்டுமே செல்கிறோம்.

    நாங்கள் கையில் அரிவாள், கத்தி போன்ற பொருட்களை எடுத்துச் செல்லவில்லை. பால் குடங்கள் மட்டும்தான் எடுத்து செல்கிறோம். பிற கோவிலுக்கு பாதயாத்திரை செல்பவர்கள் உங்களிடம் அனுமதி பெற்று தான் செல்கிறார்களா? இல்லை என்றால் தமிழகத்தில் இனிமேல் பாதயாத்திரை செல்ல அனுமதி வாங்கவேண்டும் என்ற நிலை வருமா? எங்களுக்கு அனுமதி மறுத்து எங்களை கைது செய்தால் நாங்க கைதாக தயார். ஆனால் சாப்பிடமாட்டோம் என்றார்.

    பா.ஜ.க. மாவட்ட தலைவர் ராஜசேகர் கூறுகையில், சாமி கும்பிடுவதற்கு எதற்காக போலீசார் அனுமதி வாங்க வேண்டும். இதற்கு முன்பு இந்த நடைமுறை இல்லையே என்றார். அதற்கு போலீசார் உயரதிகளிடம் கேட்டிருக்கிறோம், சிறிது நேரம் பொறுத்திருங்கள் சொல்கிறோம் என்றனர்.

    பின்னர் தொடர்ந்து காலதாமதமானதால் ஆத்திரமடைந்த விசுவ இந்து பரிஷத் அமைப்பினர் தொடர்ந்து அம்மா மண்டபம் முன்பு சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    தொடர்ந்து நடந்த பேச்சுவார்த்தையில் கொடிகள் இல்லாமல் பாதயாத்திரைக்கு செல்லவும், நடுவில் ஏதும் அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க வயலூர் வரை போலீசார் பாதுகாப்புக்கு வருவார்கள் என்று போலீசார் தெரிவித்தனர். இதனையடுத்து அனைவரும் பாதயாத்திரையாக புறப்பட்டு சென்றனர்.

    ×