என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இஸ்லாமியர்கள்"

    • எங்கள் மீது சட்டத்துக்கு புறம்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர்.
    • அரசுக்கு எதிரான அதிருப்தியை வெளிப்படுத்த ஒன்று கூடுவதை குற்றமாக கருதி வழக்கு பதிவு செய்ய அனுமதிக்க முடியாது.

    மதுரை:

    தஞ்சாவூர் மாவட்டம் அதிராமபட்டினம் பகுதியைச் சேர்ந்த அகமது காஜா, பஷீர் அகமது, அகமது அஸ்லாம், முகமது புகாரி, முகமது ரஷீத் உள்பட 19 பேர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது :-

    கடந்த 2022-ம் ஆண்டில் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பை மத்திய அரசு தடை செய்து உத்தர விட்டது. மேலும் சம்பந்தப்பட்ட தலைவர்கள் வீட்டில் நள்ளிரவில் புகுந்து சோதனை செய்வது போன்ற நடவடிக்கைகள் எதிர்த்து 28.9.2022 அன்று அதிராமபட்டினம் பஸ் நிலையம் முன்பாக மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு எதிர்த்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோம்.

    நாங்கள் எந்தவித முன் அனுமதியும் பெறாமல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தாக கூறி அதிராமபட்டினம் போலீசார் எங்கள் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 143, 341, 188, 290 மற்றும் 291 ஆகியவற்றின்கீழ் வழக்குப் பதிவு செய்து உள்ளனர்.

    காவல்துறை சட்டத்தின் பிரிவு 30(2)-ன் படி அதிராமபட்டினம் போலீசார் அரசியலமைப்பின் வரம்பிற்குள் மட்டுமே செயல்பட முடியும். இது ஒரு குடிமகனுக்கு பேச்சு சுதந்திரத்தையும் நியாயமான கட்டுப்பாடுகளுடன் வெளிப்பாடுகளையும் வழங்குகிறது.

    அந்த வகையில் எங்கள் மீது சட்டத்துக்கு புறம்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர். எனவே இந்த வழக்கை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறியிருந்தனர்.

    இந்த வழக்கு நீதிபதி சுந்தர் மோகன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் சார்பில் வக்கீல் கலந்த ஆசிக் அகமது ஆஜராகி, மனுதாரர்கள் மீது வழக்குப்பதிவு செய்வதற்கு முன்பாக போலீசார் இது தொடர்பான புகார் குறித்து முதல்கட்ட விசாரணையை நடத்தாமல் நேரடியாக வழக்கு பதிவு செய்தது ஏற்புடையதல்ல என வாதாடினார்.

    விசாரணை முடிவில், போராடியதற்காக வழக்கு பதிந்தால் எந்த ஒரு குடிமகனும் ஜனநாயக முறையில் அதிருப்தியை வெளிப்படுத்த முடியாது. அரசுக்கு எதிரான அதிருப்தியை வெளிப்படுத்த ஒன்று கூடுவதை குற்றமாக கருதி வழக்கு பதிவு செய்ய அனுமதிக்க முடியாது. அந்த வகையில் போராட்டத்தில் பங்கேற்ற நூற்றுக்கணக்கான இஸ்லாமியர்கள் மீது போலீசார் பதிவு செய்த வழக்கு ரத்து செய்யப்படுவதாக நீதிபதி உத்தரவிட்டார்.

    • அசாமில் பாஜக ஆட்சி தற்போது நடைபெற்று வருகிறது.
    • ஏஐ வீடியோவை பாஜக கட்சி தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

    அசாமில் பாஜக ஆட்சி தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அசாமில் பாஜக ஆட்சி இல்லையென்றால் என்னவெல்லாம் நடந்திருக்கும் என்று ஒரு ஏஐ வீடியோவை அம்மாநில பாஜக கட்சி தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

    அந்த வீடியோவில், அசாமில் பாஜக ஆட்சி இல்லையென்றால் மாட்டுக்கறி உணவு சட்டபூர்வமாக மாறும். பாகிஸ்தானுடன் தொடபுடைய காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருக்கும். டீ எஸ்டேட் முழுவதும் முஸ்லிம்கள் இருப்பார்கள். கவுகாத்தி விமான நிலையம் கிரிக்கெட் மைதானத்தில் முஸ்லிம்கள் நிறைந்திருப்பார்கள். சட்டவிரோத முஸ்லிம் குடியேறிகள் நம் மாநிலத்தின் அரசு நிலங்களை ஆக்கிரமிப்பார்கள். அசாம் 90% இஸ்லாமிய மக்கள் கொண்ட மாநிலமாக மாறிவிடும்" என்று முஸ்லிம்கள் மீது வெறுப்பு பரப்பும் வகையில் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சிறிதளவும் தயக்கமின்றி மக்களை மத ரீதியில் பிளவுபடுத்தும் செயலில் பாஜக ஈடுபடுவதாக அசாம் மாநில அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    இந்த கண்டனங்களை பாஜக சிறிதும் பொருட்படுத்தவில்லை. அதன் விளைவாக அசாம் மாநில பாஜக அமைச்சர் அந்த வீடியோவை மீண்டும் பகிர்ந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • வசீம் மற்றும் சமீர் மறுத்தபோது, தாக்குதல் தொடங்கியது.
    • வசீமின் உடலின் உள்பகுதியில் காயம் ஏற்பட்டதாகவும், வலது காதில் கேட்கும் திறன் இழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கர்நாடக மாநிலம் பெங்களூரில் ஜெய் ஸ்ரீ ராம் என்று கோஷமிட மறுத்ததற்காக ஒரு முஸ்லிம் ஆட்டோ ஓட்டுநர் தாக்கப்பட்டார்.

    ஜூன் 22 அன்று, சம்பிகேஹள்ளிக்கு அருகிலுள்ள ஹெக்டே நகரில் தனது நண்பரும் மெக்கானிக்குமான சமீருடன் தனது ஆட்டோவில் வசீம் (35) சென்றுகொண்டிருந்தார். அவர்கள் ஓய்வெடுக்க ஒரு காலியான இடத்தில் வாகனத்தை நிறுத்தினர்.

    அருகில் மது அருந்திக் கொண்டிருந்த சுமார் எட்டு பேர் எங்களிடம் வந்து அவர்களின் பெயர்களைக் கேட்டார்கள். பின்னர் அவர்கள் ஜெய் ஸ்ரீ ராம் என்று கோஷமிடச் சொன்னார்கள். வசீம் மற்றும் சமீர் மறுத்தபோது, தாக்குதல் தொடங்கியது. சமீர் ஓடிவிட்டார். அவர்கள் வசீமை சுற்றி வளைத்து அடித்தனர்.

    வசீம் அகமது பலத்த காயங்களுடன் பெங்களூருவின் ஏலஹங்கா பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேலும், தாக்குதலின் காரணமாக வசீமின் உடலின் உள்பகுதியில் காயம் ஏற்பட்டதாகவும், வலது காதில் கேட்கும் திறன் இழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

    • நரேந்திர மோடிக்கு மிகவும் நெருக்கமான விஜய் ஷா ராஜினாமாவை பாஜக ஏற்குமா?.
    • விஜய் ஷா இந்த மோசமான சிந்தனைக்காக பதவி உயர்வு பெறுவார்.

    பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நடத்திய ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கமளித்து கவனம் ஈர்த்தவர் கர்னல் சோபியா குரேஷி. இந்நிலையில் அவரின் இஸ்லாமிய மத அடையாளத்தை வைத்து மத்தியப் பிரதேச பாஜக அமைச்சர் குன்வார் விஜய் ஷா தரம் தாழ்ந்த கருத்து ஒன்றை தெரிவித்தார்.

    நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமைச்சர் குன்வார் விஜய் ஷா, "பஹல்காமில் நமது மகள்களின் நெற்றிக் குங்குமத்தை அழித்தவர்களை அழிக்க, அவர்களது சகோதரியை அனுப்பி வைத்தோம். எங்களின் விமானத்தில் அவர்களின் சகோதரியை அனுப்பி வைத்து, அவர்களை அழிக்க வைத்தார் மோடி. எங்கள் சகோதரிகளை நீங்கள் விதவைகளாக்கினால், உங்களின் சகோதரிகளை கொண்டு உங்களை அழிக்க வைப்போம்" என்று பேசினார்.

    அவர் பேசிய வீடியோ வைரலான நிலையில் பாஜக அமைச்சர் ஆயுதப்படைகளை அவமதித்ததாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.

    பீகார் காங்கிரஸ் எக்ஸ் பதிவில் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மத்தியப் பிரதேச பாஜக அரசாங்கத்தில் அமைச்சராக இருக்கும் விஜய் ஷா, கர்னல் சோபியா குரேஷி பயங்கரவாதிகளின் மகள் என்று அவமானகரமான கருத்தை தெரிவித்துள்ளார்.

    இந்தியாவின் மகள் கர்னல் சோபியா குரேஷி நமது பெருமை, ஆனாலும் அவரைப் பற்றி இதுபோன்ற ஒரு அவமானகரமான கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இது நமது துணிச்சலான ஆயுதப் படைகளுக்கு அவமானம்.

    இப்படிப்பட்ட சூழ்நிலையில், நரேந்திர மோடிக்கு மிகவும் நெருக்கமானவர் என்று தன்னை அழைத்துக் கொள்ளும் விஜய் ஷா, ராஜினாமாவை பாஜக ஏற்குமா?.

    இந்த அற்ப சிந்தனைக்கு பிரதமர் மோடியும் பாஜக தலைவர்களும் மன்னிப்பு கேட்பார்களா?. அல்லது, எப்போதும் போல, விஜய் ஷாவும் இந்த மோசமான சிந்தனைக்காக பதவி உயர்வு பெற்று, அவருக்கு ஆதரவாக பேரணிகள் நடத்தப்படுமா? என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. 

    • உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜில் சமீபத்தில் நடந்த மகா கும்பமேளா குறிப்புக்கள் சேர்க்கப்பட்டது.
    • 12 ஜோதிர்லிங்கங்கள், சார்தாம் யாத்திரை மற்றும் சக்திபீடங்கள் உள்ளிட்ட புனிதமான புவியியல் இடங்களின் விவரங்கள் சேர்க்கப்பட்டன.

    மத்திய அரசின் NCERT, 7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகத்திலிருந்து முகலாயர்கள் மற்றும் டெல்லி சுல்தான்களின் வரலாறு முற்றிலுமாக நீக்கப்பட்டுள்ளது.

    அவற்றிற்குப் பதிலாக, மகதம், மௌரியர்கள், சாதவாகனர்கள் மற்றும் சுங்கர்கள் போன்ற பண்டைய இந்திய வம்சங்களைப் பற்றிய புதிய அத்தியாயங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

    இந்தப் புதிய புத்தகங்கள் தேசிய கல்விக் கொள்கை (NEP)-2020 மற்றும் தேசிய பாடத்திட்ட கட்டமைப்பு (NCF)-2023 ஆகியவற்றின் ஒரு பகுதியாக உருவாக்கப்பட்டுள்ளன.

    'எக்ஸ்ப்ளோரிங் சொசைட்டி: இந்தியா அண்ட் பியாண்ட், பாகம்-1' என்ற தலைப்பிலான புதிய சமூக அறிவியல் புத்தகம், உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜில் சமீபத்தில் நடந்த மகா கும்பமேளா மற்றும் மேக் இன் இந்தியா மற்றும் பேட்டி பச்சாவ்-பேட்டி பதாவோ போன்ற மத்திய அரசின் திட்டங்கள் பற்றிய குறிப்புக்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

    'பூமி எவ்வாறு புனிதமாகிறது' என்ற அத்தியாயம், இந்தியாவிலும் வெளிநாட்டிலும் உள்ள அனைத்து மதங்களாலும் புனிதமாகக் கருதப்படும் இடங்கள் மற்றும் புனித யாத்திரைகள் குறித்த குறிப்புக்கள் இடம்பெற்றுள்ளன.

    இதில் 12 ஜோதிர்லிங்கங்கள், சார்தாம் யாத்திரை மற்றும் சக்திபீடங்கள் உள்ளிட்ட புனிதமான புவியியல் இடங்களின் விவரங்கள் அடங்கும். இதேபோல், ஜனபதா, சாம்ராஜ், ஆதிராஜா, ராஜாதிராஜா போன்ற சமஸ்கிருத வார்த்தைகள் பல்வேறு அத்தியாயங்களில் சேர்க்கப்பட்டுள்ளன.

    முன்னதாக 2022-23 ஆம் ஆண்டில் முகலாயர்கள் மற்றும் டெல்லி சுல்தான்கள் தொடர்பான பிரிவுகளை NCERT வெகுவாக குறைத்தது.

    துக்ளக்குகள், கில்ஜிகள் மற்றும் லோடி ஆகியோரின் ஆட்சிக்கால விவரங்களுடன், அவர்களின் சாதனைகள் அடங்கிய இரண்டு பக்க அட்டவணை சேர்க்கப்பட்டுள்ளது. இப்போது, அவர்களைப் பற்றிய அனைத்து விவரங்களும் புதிய புத்தகத்திலிருந்து முற்றிலுமாக நீக்கப்பட்டுள்ளன.

    "இவை வயதுக்கு ஏற்ற உலகக் கண்ணோட்டங்களை அறிமுகப்படுத்துகின்றன" என்று NCERT இயக்குனர் தினேஷ் பிரசாத் சக்லானி தெரிவித்தார். 

    • சென்னையில் நடந்த இப்தார் விருந்தை விஜய் கொச்சைப்படுத்தி பாவம் செய்துவிட்டதாக குற்றச்சாட்டு.
    • விஜயை தங்கள் மத நிகழ்ச்சிகளுக்கு அழைக்க வேண்டாம். விஜய் முஸ்லிம் விரோதி.

    த.வெ.க. தலைவர் விஜயிடம் இருந்து தமிழ்நாடு இஸ்லாமியர்கள் தள்ளியிருக்க வேண்டும் என அகில இந்திய முஸ்லீம் ஜமாத் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அகில இந்திய முஸ்லீம் ஜமாத் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

    அந்த அறிக்கையில், குடிகாரர்கள், சூதாட்டக்காரர்களை இஃப்தார் விருந்துக்கு அழைத்து வந்ததாக தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் மீது ஜமாத் தலைவர் குற்றம்சாட்டியுள்ளார்.

    சென்னையில் நடந்த இப்தார் விருந்தை விஜய் கொச்சைப்படுத்தி பாவம் செய்துவிட்டதாக குற்றம்சாட்டியுள்ளார்,

    தமிழ்நாட்டில் உள்ள இஸ்லாமியர்கள் விஜய்யிடமிருந்து விலகி இருக்க வேண்டும்.

    விஜயை தங்கள் மத நிகழ்ச்சிகளுக்கு அழைக்க வேண்டாம். விஜய் முஸ்லிம் விரோதி. அவரது பின்னணி, கடந்த கால நடவடிக்கைகள் இஸ்லாமியத்திற்கு எதிரானவை.

    இஸ்லாம் மற்றும் இஸ்லாமியர்களுக்கு எதிராக விஜயின் செயல்பாடுகள் இருப்பதாக அகில இந்திய முஸ்லீம் ஜமாத் சகாபுதீன் ராஜ்வி குற்றம்சாட்டியுள்ளார்.

    • 52,000 தங்குமிட ஒதுக்கீடுகளை ரத்து செய்து, அவற்றை இதர நாடுகளுக்கு மறு ஒதுக்கீடு செய்துள்ளது.
    • முதல்வர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்டோர், மத்திய அரசு இதில் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தினர்.

    ஒவ்வொரு ஆண்டும் உலகம் முழுவதிலுமிருந்து இஸ்லாத்தை பின்பற்றும் லட்சக்கணக்கான ஆண்களும் பெண்களும் ஹஜ் யாத்திரை மேற்கொள்வதற்காக சவுதி அரேபியாவின் மெக்காவில் கூடுகிறார்கள்.

    இந்நிலையில் இந்த வருடம் சவுதி அரேபியாவின் ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகம், மினா பள்ளத்தாக்கில் இந்திய தனியார் ஹஜ் சேவை நிறுவனங்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த 52,000 தங்குமிட ஒதுக்கீடுகளை ரத்து செய்து, அவற்றை இதர நாடுகளுக்கு மறு ஒதுக்கீடு செய்துள்ளது.

    இதனால் இந்தியாவிலிருந்து புனித ஹஜ் பயணம் மேற்கொள்ளும் 52,000 ஹஜ் பயணிகளின் புனித கடமை கேள்விக்குறியானது. தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்டோர், மத்திய அரசு இதில் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தினர்.

    இந்நிலையில் மத்திய அரசின் வற்புறுத்தலை அடுத்து 10,000 இஸ்லாமியர்களுக்கு மட்டும் ஹஜ் விசா வழங்க சவுதி அரேபியாவின் ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது.

    • வக்ஃபு வாரிய திருத்த சட்டத்திற்கு எதிராக அதைத் திரும்பப் பெற வேண்டும்.
    • சிறுபான்மையினருக்கு எந்த பாதிப்பு வந்தாலும் முதலில் குரல் கொடுப்பது திமுக தான்

    சென்னை பெரம்பூரில் உள்ள டான்பாஸ்கோ பள்ளியில் நடைபெறும் ரமலான் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார்.

    இந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-

    இஸ்லாமிய மக்களுக்கு ரமலான் பெருவிழா வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இஸ்லாமியர்களையும் திமுகவையும் யாரும் பிரிக்க முடியாது.

    வக்ஃபு வாரிய திருத்த சட்டத்திற்கு எதிராக அதைத் திரும்பப் பெற வேண்டும்.

    வக்பு வாரிய சட்டத் திருத்தத்திற்கு எதிரான தீர்மானம் நிறைவேற்ற கூட சட்டப்பேரவைக்கு எடப்பாடி பழனிசாமி வரவில்லை. தீர்மனாத்திற்கு ஆதரவு கொடுக்க வராமல் டெல்லிக்கு சென்றுவிட்டார்.

    இருமொழிக் கொள்கை குறித்து வலியுறுத்துங்கள் என எடப்பாடி பழனிசாமிக்கு கூறினேன். இருமொழிக் கொள்கை குறித்து பேசியதாக எடப்பாடி பழனிசாமி கூறினார். மக்கள் சார்பில் நன்றி கூறிக் கொள்கிறேன்.

    சிறுபான்மையினருக்கு எந்த பாதிப்பு வந்தாலும் முதலில் குரல் கொடுப்பது திமுக தான்.

    இஃப்தார் விழாக்களை பலரும் நடத்துவார்கள். ஆனால், இஸ்லாமியர்களுக்கு ஒரு தீமை என்றால் வாயே திறக்கமாட்டார்கள்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • காலம் காலமாக சிறுபான்மையின மக்களுக்கு நட்பாகவும் அரணாகவும் இருந்து திமுக தான்.
    • அரசியல் ரீதியிலான அச்சுறுத்தல் வரும் போதெல்லாம் இஸ்லாமியர்களை காக்கும் அரசாக திமுக உள்ளது.

    சென்னை திருவான்மியூரில் இஃப்தார் ரமலான் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுள்ளார்.

    திமுக சிறுபான்மையினர் நல உரிமை பிரிவு சார்பில் ரமலான் நோன்பு திறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

    இதில், பங்கேற்று நோன்பு திறந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பின்னர் உரையாற்றினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    காலம் காலமாக சிறுபான்மையின மக்களுக்கு நட்பாகவும் அரணாகவும் இருந்து திமுக தான்.

    அரசியல் ரீதியிலான அச்சுறுத்தல் வரும் போதெல்லாம் இஸ்லாமியர்களை காக்கும் அரசாக திமுக உள்ளது.

    பேரறிஞர் அண்ணாவையும், கலைஞரையும் இணைக்கும் பாலமாக இருந்தது இஸ்லாமிய சமூகம் தான்.

    மற்ற மாநிலங்களில் வருந்தத்தக்க சூழல் இருந்தாலும் தமிழ்நாட்டில் மதரீதியிலான மோதல் ஏற்படாமல் திமுக அரசு காக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அதைச் செய்பவர் நமது அரசியலமைப்பின் சிற்பியான அம்பேத்கருக்கே எதிரானவர்.
    • ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் போராடியவர்கள் மட்டும்தான் சுதந்திரப் போராளிகளா, படையெடுப்பாளர்களை எதிர்த்தவர்கள் சுதந்திரப் போராளிகள் கிடையாதா?

    அரசு ஒப்பந்தங்களில் முஸ்லிம்களுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு வழங்க கர்நாடக அரசு எடுத்த முடிவு குறித்த விவாதம் அரசியல் களத்தில் அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது.

    இந்நிலையில் அரசியலமைப்புச் சட்டம் மத அடிப்படையிலான ஒதுக்கீட்டை அனுமதிக்கவில்லை ஆர்எஸ்எஸ் பொதுச் செயலாளர் தத்தாத்ரேய ஹோசபாலே தெரிவித்துள்ளார்.

    பெங்களூரில் ஆர்எஸ்எஸ் அகில பாரதிய பிரதிநிதி சபா விழாவில் இன்று கலந்துகொண்டபின் செய்தியாளர்களிடம் ஹோசபாலே பேசினார்.

    அப்போது, "பாபாசாகேப் அம்பேத்கர் எழுதிய அரசியலமைப்பில் மத அடிப்படையிலான இடஒதுக்கீடு ஏற்றுக்கொள்ளப்படவில்லை. அதைச் செய்பவர் நமது அரசியலமைப்பின் சிற்பியான அம்பேத்கருக்கே எதிரானவர்.

    முஸ்லிம்களுக்கு மத அடிப்படையிலான இடஒதுக்கீட்டை அறிமுகப்படுத்த ஆந்திரா மற்றும் மகாராஷ்டிராவால் மேற்கொள்ளப்பட்ட முந்தைய முயற்சிகள் உயர் நீதிமன்றங்கள் மற்றும் உச்ச நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டிருக்கின்றன என்று தெரிவித்தார்.

    மகாராஷ்டிராவில் 17 ஆம் நூற்றாண்டின் முகலாயப் பேரரசர் ஔரங்கசீப்பின் கல்லறை குறித்த சர்ச்சை பற்றிய கேள்விக்கு பதிலளித்த ஹோசபாலே, ஔரங்கசீப் போன்றோர் சின்னமாக மாற்றப்பட்டனர். ஆனால் சமூக நல்லிணக்கத்தில் நம்பிக்கை கொண்ட அவரது சகோதரர் தாரா ஷிகோ போன்றோர் மறக்கப்பட்டனர். இந்தியாவின் நெறிமுறைகளுக்கு எதிராகச் சென்றவர்கள் சின்னங்களாக மாற்றப்பட்டனர்.

    ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் போராடியவர்கள் மட்டும்தான் சுதந்திரப் போராளிகளா, படையெடுப்பாளர்களை எதிர்த்தவர்கள் சுதந்திரப் போராளிகள் கிடையாதா? என்று கேள்வி எழுப்பினார்.

    தொடர்ந்து பேசிய வர படையெடுப்பு மனநிலை கொண்டவர்கள் இந்தியாவிற்கு அச்சுறுத்தலாக உள்ளனர் என்று தெரிவித்தார்.

    • ஏற்கனவே அரசு டெண்டர்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு இருந்து வருகிறது.
    • பாஜக எம்எல்ஏக்கள் சபாநாயகர் யுடி காதர் அமர்ந்திருந்த இருக்கை அருகே சென்று மசோதா நகலை கிழித்து அவர் மீது வீசினர்.

    அரசு ஒப்பந்தங்கள் மற்றும் டெண்டர்களில் முஸ்லிம்களுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா கர்நாடக சட்டமன்றத்தில் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன்போது கடும் அமளியில் ஈடுபட்ட பாஜக எம்எல்ஏக்கள் சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு மசோதா நகலை கிழித்து சபாநாயகர் யுடி காதர் மீது வீசி பரபரப்பை கிளப்பினர்.

    கடந்த மாதம், முஸ்லிம் எம்எல்ஏக்கள் மற்றும் சமூகத் தலைவர்கள் அடங்கிய குழு, அரசு ஒப்பந்தங்களில் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு கோரி முதல்வர் சித்தராமையாவிடம் ஒரு மனுவை சமர்ப்பித்தது. இதை ஏற்றுக்கொண்ட முதல்வர் சித்தராமையாவின் காங்கிரஸ் அரசு இதுதொடர்பாக புதிய மசோதாவை நடப்பு சட்டமன்றக் கூட்டத்தொடரில் தாக்கல் செய்துள்ளது.

    ஏற்கனவே அரசு டெண்டர்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு இருந்து வரும் நிலையில் அதோடு சிறுபான்மையினருக்கான இடஒதுக்கீடும் சேர்க்கப்பட்டுள்ளதில் எந்த தவறும் இல்லை என அரசு வாதிடுகிறது. ஆனால் எதிர்க்கட்சியான பாஜக, இஸ்லாமியர்களுக்கு இடஒதுக்கீடு கொடுக்கக்கூடாது என்று போராடி வருகிறது.

     

    இந்த நிலையில்தான் இன்று தாக்கல் செய்யப்பட்ட மசோதா சட்டமன்றத்தில் பெரும்பான்மையாக உள்ள காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த பாஜக எம்எல்ஏக்கள் சபாநாயகர் யுடி காதரின் இருக்கை முன்பு திரண்டு கோஷமிட்டனர்.

    அரசு ஒப்பந்தங்களில் இஸ்லாமியர்களுக்கு 4 சதவீதம் வழங்கும் மசோதா நகலை கிழித்து அவர் மீதுவீசினர். சில பாஜக எம்எல்ஏக்கள் சபாநாயகர் யுடி காதர் அமர்ந்திருந்த இருக்கை அருகே சென்று மசோதா நகலை கிழித்து அவர் மீது வீசினர். இதனைத்தொடர்ந்து பாதுகாப்பு அதிகாரிகள் பாஜக எம்எல்ஏக்களை வலுக்கட்டமையாக அவையை விட்டு வெளியேற்றும் சூழல் ஏற்பட்டது.

    • நான் பேசிய கருத்தை இட்டுக்கட்டி திரித்து பரப்புகின்றனர்
    • காயப்படுத்தி இருந்தால் வருத்தம் தெரிவிக்கிறேன்

    திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, இஸ்லாமியர்கள் குறித்து இழிவாக பேசியதாக சர்ச்சை எழுந்தது. இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக சிவாஜி கிருஷ்ணமூர்த்தி வீடியோ வெளியிட்டு வருத்தம் தெரிவித்துள்ளார்.

    த.வெ.க. தலைவர் விஜய் அண்மையில் ரம்ஜான் இஃப்தார் நோன்பு நிகழ்ச்சியில் பங்கேற்றார். இது தொடர்பாக திமுக கூட்டத்தில் பேசிய சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, "இஸ்லாமியர்கள் குறித்து இழிவாக பேசியதாக கூறப்படுகிறது.

    இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மன்னிப்பு தெரிவித்து அவரது எக்ஸ் பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார்.

    அந்த வீடியோவில், "நான் பேசிய கருத்தை வேறுவிதமாக சிலர் இட்டுக்கட்டி திரித்து பரப்புகின்றனர். இஸ்லாமியர்கள் மீது எனக்கு காழ்ப்புணர்ச்சியோ வெறுப்போ இல்லை; என் பேச்சில் வார்த்தை தடுமாறி இருந்தால் அதற்காக என் வருத்ததை பதிவு செய்கிறேன்" என்று அவர் தெரிவித்துள்ளார்.

    ×