என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஹிமாந்தா சர்மா"

    • அசாம் மாநிலத்தில் ஏற்கனவே சர்வதேச கிரிக்கெட் மைதானம் உள்ளது.
    • தற்போது புதிய மைதானம் கட்டப்பட்டு வருகிறது என அம்மாநில முதல்வர் தெரிவித்துள்ளார்.

    சர்வதேச வசதிகளுடன் கவுகாத்தியின் புறநகர் பகுதியான அமின்கானில் புதிய கிரிக்கெட் மைதானம் அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் தயாராகும் என அசாம் மாநில முதல்வர் ஹிமாந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.

    மேலும், விளையாட்டு மீது ஆர்வமுள்ளவர்களுக்கு அசாம் மநில அரசு கட்டமைப்புகள் மற்றும் போட்டிக்கான தளத்தை ஏற்படுத்தி வருகிறது. இளைஞர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள முடியும் எனத் தெரிவித்தள்ளார்.

    கவுகாத்தியின் சருசாஜாய் மற்றும் பார்சபாரா ஆகிய இரண்டு இடங்களில் தலா ஒரு மிகப்பெரிய மைதானங்கள் உள்ளன. தற்போது புதிதாக அமையவிருக்கும் மைதானம் 20 ஆயிரம் அமர்ந்து கிரிக்கெட் போட்டியை பார்க்கும் வகையில் வருகிற பிப்ரவரி மாதம் திறக்கப்படும்.

    இந்த மைதானம் அனைத்து நவீன வசதிகள் கொண்டதாக உருவாகி வருகிறது. பார்க்கிங் வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகளுக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. எதிர்காலத்தில் இந்த மைதானத்தில் டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டியை நடத்த முடியும்.

    சருசாஜாய் மைதானத்தில் தடகள டிராக், கால்பந்து மைதானம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் உள்ளது. பார்சபாரா மைதானம் கிரிக்கெட் மைதானமாகும். வடகிழக்கு மாநிலத்தில் உள்ள ஒரேயொரு சர்வதேச கிரிக்கெட் மைதானம் இதுவாகும்.

    • மோடியின் தெய்வ வழிபாடு குறித்து பிரியங்கா விமர்சனம்
    • ஹிமாந்தா சர்மா, சத்தீஸ்கர் மாநில முஸ்லிம் மந்திரியை கடுமையாக தாக்கி பேசியிருந்தார்

    ராஜஸ்தான், சத்தீஸ்கர் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதத்திற்கு குறைவான காலமே உள்ளதால் தலைவர்கள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    காங்கிரஸ் தலைவரான பிரியங்கா காந்தி, ராஜஸ்தானில் நடைபெற்ற பேரணியின்போது பிரதமர் மோடியின் தெய்வ வழிபாடு குறித்து பேசியதாக தெரிகிறது. இதுகுறித்து தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த புகாருக்கு வருகிற திங்கட்கிழமைக்குள் விளக்கம் அளிக்க வேண்டும். இல்லையெனில், நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் ஆணையம் அந்த நோட்டீஸில் தெரிவித்துள்ளது.

    அசாம் மாநில முதல்வர் ஹிமாந்தா சர்மா, சத்தீஸ்கரில் மதமாற்றம் நடைபெறுவதாக விமர்னம் செய்திருந்தார். மேலும், சத்தீஸ்கர் மாநில முஸ்லிம் மந்திரியை தாக்கி பேசினார். இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் விளக்கம் அளிக்க தேர்தல் ஆணையம் ஹிமாந்தா சர்மாவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

    ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இரண்டு மாநிலங்களிலும் ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள காங்கிரஸ் தீவிரம் காட்டி வருகிறது. அதேவேளையில் பா.ஜனதா இந்த முறை வெற்றி பெற திட்டமிட்டு பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது.

    ×