search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "5 States Polls"

    • மோடியின் தெய்வ வழிபாடு குறித்து பிரியங்கா விமர்சனம்
    • ஹிமாந்தா சர்மா, சத்தீஸ்கர் மாநில முஸ்லிம் மந்திரியை கடுமையாக தாக்கி பேசியிருந்தார்

    ராஜஸ்தான், சத்தீஸ்கர் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதத்திற்கு குறைவான காலமே உள்ளதால் தலைவர்கள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    காங்கிரஸ் தலைவரான பிரியங்கா காந்தி, ராஜஸ்தானில் நடைபெற்ற பேரணியின்போது பிரதமர் மோடியின் தெய்வ வழிபாடு குறித்து பேசியதாக தெரிகிறது. இதுகுறித்து தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த புகாருக்கு வருகிற திங்கட்கிழமைக்குள் விளக்கம் அளிக்க வேண்டும். இல்லையெனில், நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் ஆணையம் அந்த நோட்டீஸில் தெரிவித்துள்ளது.

    அசாம் மாநில முதல்வர் ஹிமாந்தா சர்மா, சத்தீஸ்கரில் மதமாற்றம் நடைபெறுவதாக விமர்னம் செய்திருந்தார். மேலும், சத்தீஸ்கர் மாநில முஸ்லிம் மந்திரியை தாக்கி பேசினார். இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் விளக்கம் அளிக்க தேர்தல் ஆணையம் ஹிமாந்தா சர்மாவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

    ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இரண்டு மாநிலங்களிலும் ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள காங்கிரஸ் தீவிரம் காட்டி வருகிறது. அதேவேளையில் பா.ஜனதா இந்த முறை வெற்றி பெற திட்டமிட்டு பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது.

    • ஆளுங்கட்சி சார்பில் மீண்டும் 26 எம்.எல்.ஏ.க்கள் மனுத்தாக்கல்
    • பா.ஜனதா சார்பில் 23 பேர், ஆம் ஆத்மி கட்சி சார்பில் 4 பேர் மனுத்தாக்கல்

    மத்திய பிரதேசம், ராஜஸ்தான், மிசோரம், சத்தீஸ்கர், தெலுங்கானா உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் நவம்பர் 30-ந்தேதி வரை தேர்தல் நடைபெற இருக்கிறது. டிசம்பர் 3-ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

    40 தொகுதிகளை கொண்ட மிசோரமில் நவம்பர் 7-ந்தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் முடிவடைந்த நிலையில் இன்று, வேட்மனு மீதான பரிசீலனை நடைபெற இருக்கிறது. அதன்பின் அக்டோபர் 23-ந்தேதி வேட்புமனுவை திரும்பப் பெற கடைசி நாளாகும்.

    மிசோரம் மாநிலத்தில் 16 பெண்கள் உள்பட 174 பேர் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். வேட்புமனு பரிசீலனை முடிவடைந்து பின், அக்டோபர் 23-ந்தேதி இறுதி கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். அப்போது அதிகாரப்பூர்வமாக போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்படும்.

    ஆளும மிசோரம் தேசிய முன்னணி (MNF), எதிர்க்கட்சிகளான சோரம் மக்கள் இயக்கம் (ZPM), காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

    தற்போதைய எம்.எல்.ஏ.க்கள் 35 பேருக்கு மீண்டும் வாயப்பு அளித்துள்ளது ஆளுங்கட்சி. அதேவேளையில் சோரம் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த ஆறு எம்.எல்.ஏ.-க்கள் உள்பட 40 பேர் மறுதேர்தல் நடத்த வலியுறுத்தியுள்ளனர்.

    இவர்களைத்தவிர பா.ஜனதா சார்பில் 23 பேர், ஆம் ஆத்மி கட்சி சார்பில் 4 பேர், சுயேட்சையாக 27 பேர் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

    • 2016 பண மதிப்பிழப்பு மற்றும் கொரோனா ஆகியவற்றால் தெலுங்கானாவின் பொருளாதார வளர்ச்சியில் சரிவு
    • தெலுங்கானா கடுமையான மற்றும் தியாகத்தின் மூலமாக மிகப்பெரிய வளர்ச்சியை எட்டும்

    தெலுங்கானா மாநிலத்தில் 119 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக நவம்பர் 30-ந்தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் 95 முதல் 105 இடங்களில் வெற்றி பெறுவோம் என பாரதிய ராஷ்டிரிய சமிதி கட்சி தலைவர் சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளார்.

    மேலும், காஜ்வெல் தொகுதி மக்கள் தன்மீது அன்பு வைத்திருப்பதாகவும், தொடர்ந்து இரண்டு முறை பிரமாண்ட வெற்றியை வழங்குவார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

    தொகுதி அளவிலான கூட்டத்தில் பேசிய சந்திரசேகர ராவ், 2016 பண மதிப்பிழப்பு மற்றும் கொரோனா ஆகியவற்றால் தெலுங்கானாவின் பொருளாதார வளர்ச்சியில் சரிவு ஏற்பட்டதாகவும், இந்தியாவின் இளம் மாநிலமான தெலுங்கானா கடுமையான மற்றும் தியாகத்தின் மூலமாக மிகப்பெரிய வளர்ச்சியை எட்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

    மேலும், தற்போது வளர்ச்சி மற்றும் சாதனையால் நாம் திருப்தி அடையக் கூடாது. சிறந்து விளங்க பாடுபடுவது ஒரு தொடர்ச்சியான செயல்முறையாகும், நாம் மக்களுக்கு நல்ல வாழ்க்கைத் தரத்தை வழங்க வேண்டும் எனக் குறிப்பிட்டார்.

    2016-ல் இருந்து சந்திரசேகர ராவ் தொடர்ந்து தெலுங்கானாவின் முதல்வராக இருந்து வருகிறார். அவரது பிஆர்எஸ் கட்சிக்கும் காங்கிரஸ்க்கும் இடையில் கடும் போட்டி நிலவி வருகிறது. இதற்கிடையே பா.ஜனதாவும் தெலுங்கானாவில் கால்பதிக்க முயற்சி செய்து வருகிறது.

    • 229 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் வெளியிடப்பட்டுள்ளது
    • முதற்கட்டாக அறிவித்ததில் மூன்று தொகுதிகளுக்கான வேட்பாளர் பெயர் மாற்றப்பட்டுள்ளது

    மத்திய பிரதேச மாநிலத்தில் அடுத்த மாதம் (நவம்பர்) 17-ந்தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. 230 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற இருக்கிறது.

    ஏற்கனவே 144 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டிருந்த நிலையில், நேற்றிரவு 88 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. பெட்டல் மாவட்டத்தில் உள்ள அம்லா தொகுதிக்கான வேட்பாளர் பெயர் மட்டும் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

    துணை பெண் கலெக்டரான நிஷா என்பவர் காங்கிரஸ் சார்பில் போட்டியிட வாய்ப்பு கேட்டிருந்தார். ஆனால், ஆளும் பா.ஜனதா அரசு இன்னும் அவரது ராஜினாமாவை ஏற்கவில்லை. இந்த விவகாரம் நீதிமன்றத்தில் உள்ளது. இதனால் ஒரு இடத்திற்கு மட்டும் காங்கிரஸ் அதிகாரப்பூர்வமாக வேட்பாளர் பெயரை வெளியிடவில்லை.

    முதற்கட்ட வேட்பாளர் பட்டியலில் இடம்பிடித்திருந்த மூன்று தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் மாற்றப்பட்டுள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ராஜஸ்தானில் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது
    • தொடர்ந்து 2-வது முறையாக மீண்டும் ஆட்சியை பிடிக்க காங்கிரஸ் தீவிரம்

    ராஜஸ்தானில் அடுத்த மாதம் (நவம்பர்) 25-ந்தேதி, மாநில சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. தற்போது ஆட்சி செய்து வரும் காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சியை பிடிக்க, துரிதமாக வேலை செய்து வருகிறது.

    அதேவேளையில், பா.ஜனதாவும் ஆட்சியை பிடிக்க விரும்புகிறது. ஆளுங்கட்சிக்கு எதிரான எதிர்ப்பை தங்களுக்கு சாதகமாக்க நினைக்கிறது. ராஜஸ்தானில் ஐந்தாண்டுக்கு ஒருமுறை ஆட்சி மாறிமாறி வந்துள்ளது. இதனால் பா.ஜனதா இந்த முறை தங்களுக்குதான் வாய்ப்பு என்ற முறையில் வேலை செய்து வருகிறது. தேதி அறிவிப்பதற்கு முன்னதாகவே பிரதமர் மோடி, அமித் ஷா போன்ற தலைவர்கள் ராஜஸ்தான் சென்று பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில், வேட்பாளர்களை தேர்வு செய்வது குறித்து காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையிலான, காங்கிரஸ் கட்சியின் மத்திய தேர்தல் கமிட்டி கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற்றது.

    இந்த கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட், ராஜஸ்தான் மாநிலத்திற்கான காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளர் சுக்ஜிந்தர் ரந்தாவா, ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவர் கோவிந்த், பொது செயலாளர் (ஒருங்கிணைப்பு) கே.சி. வேனுகோபால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    இந்த கூட்டத்திற்குப்பின் மல்லிகார்ஜூன கார்கே தனது எக்ஸ் பக்கத்தில் ''சேமிப்பு, நிவாரணம், வளர்ச்சி, பாதுகாப்பு, உயர்வு போன்ற அம்சங்களில் காங்கிரசின் நல்லாட்சியால் ராஜஸ்தான் வளர்ச்சியை கண்டுள்ளது. இதனால் மக்கள் எங்களை மீண்டும் ஆட்சியில் அமர்த்துவார்கள் என்று நம்புகிறோம்'' என்றார்.

    ×