search icon
என் மலர்tooltip icon

    மிசோரம்

    • விறகு வெட்டி கொண்டு இருந்த மற்றவர்களை உஷார் படுத்த மெதுவான குரலில் ‘புலி...புலி...' என்று எச்சரித்தார்.
    • சுற்றுலா பயணிகளுக்கு இளம்பெண் லால் சாடிங்கியின் வீரத்தை அது பறைசாற்றிக் கொண்டிருக்கிறது.

    முறத்தால் புலியை விரட்டிய வீரத் தமிழ்ப் பெண்கள் பற்றி சங்க இலக்கியங்களில் படித்து இருக்கிறோம். கோடரியால் புலியை வெட்டிச் சாய்த்த வீரப் பழங்குடியின பெண்ணை பற்றி இங்கே படிக்கப் போகிறோம்.

    வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மிசோரத்தில் ஒரு குக்கிராமத்தை சேர்ந்தவர், லால் சாடிங்கி. 26 வயதான அந்த ஏழைப் பெண், காடுகளுக்கு சென்று விறகு வெட்டி பிழைத்து வந்தார்.

    ஒருநாள் அந்தப் பெண்ணும் அதே கிராமத்தைச் சேர்ந்த சிலரும் விறகு வெட்டுவதற்காக, அருகில் இருக்கும் காட்டுக்குச் சென்றார்கள். காய்ந்த விறகுகளைத் தேடிப் பிடித்து, வெட்டிக் கொண்டு இருந்தார்கள்.

    அப்போது புதருக்கு பின்னால் இருந்து ஓர் உறுமல் சத்தம் கேட்டது. லால் சாடிங்கி திரும்பிப் பார்த்தார். எந்த அசைவும் இல்லை. அது காட்டுப்பன்றியாக இருக்கக்கூடும் என்று நினைத்துக் கொண்டார். மறுபடியும் உறுமல் சத்தம் ஓங்கிக் கேட்கவே அவர் அதிர்ந்து போனார். புதருக்குள் இருந்து வருவது புலி என்பதை உணர்ந்தார்.

    அருகில் விறகு வெட்டி கொண்டு இருந்த மற்றவர்களை உஷார் படுத்த மெதுவான குரலில் 'புலி...புலி...' என்று எச்சரித்தார். அவர்கள் காதுகளில் அது விழுந்ததாகத் தெரியவில்லை.

    புலி அதற்குள்ளாக மிக அருகில் வந்து விட்டது. எப்படி தப்பிப்பது? அந்தப் பெண்ணுக்கு வழி தெரியவில்லை. ஒரே பாய்ச்சலில் அவர் உயிரைப் பறிக்க புலிக்கு ஒரு வினாடிகூட ஆகாது. அந்த அளவில் அருகில் நெருங்கிவந்தது.

    கையில் விறகு வெட்டும் கோடரி மட்டும் அவரிடம் இருந்தது. வாழ்வா? சாவா? என்ற கேள்வி மனதில் எழுந்தது. மனதைத் தைரியப்படுத்திக் கொண்டு, ஓங்கி ஆக்ரோஷத்தில் ஒரே வெட்டாக புலியை தலையில் வெட்டிச் சாய்த்தார். நல்ல வேளையாக ஒரே வெட்டில் கதை முடிந்தது. அந்தப் பெண்ணுக்கு வாழ்வும், புலிக்கு சாவும் உறுதியானது.

    விறகு வெட்டப்போன இடத்தில் புலியை வெட்டிக்கொன்ற இளம்பெண் லால் சாடிங்கி பற்றி ஊரெல்லாம் பேசியது. அவர் வீரப் பெண்மணியாக போற்றப்பட்டார். அவர் வெட்டி சாய்த்த புலி 'மம்மி'யாக பாடம் செய்யப்பட்டு மிசோரம் தலைநகர் ஐசால், அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டு இருக்கிறது.

    இன்னமும் அங்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு இளம்பெண் லால் சாடிங்கியின் வீரத்தை அது பறைசாற்றிக் கொண்டிருக்கிறது.

    அந்த வங்கப் புலியை வெட்டிச் சாய்த்த வீரப்பெண் லால் சாடிங்கி 72 வயதை எட்டி இருந்தார். சம்பவம் நடந்து 46 ஆண்டுகள் கடந்த நிலையில், சில காலமாக புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த அவர் கடந்த வெள்ளிக்கிழமை மரணம் அடைந்தார்.

    புலியை அதன் வாழ்விடத்துக்கே சென்று தன்னந்தனியாக வீழ்த்திய அந்த பெண்மணிக்கு மிசோரமே வீரவணக்கம் செலுத்தியது.

    • மிசோரமில் உள்ள அய்ஸ்வால் மாவட்டத்தில் பெய்த அதி கனமழையால் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு வருகிறது.
    • தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட நிலச்சரிவினால் மாநிலத்தின் பிற நகரங்களிலிருந்து அம்மாவட்டம் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது

    வங்கக் கடலில் உருவாகி மேற்கு வங்கம் மற்றும் வங்க தேச எல்லையில் நேற்று முன் தினம் (மே 26) கரையைக் கடந்த ரீமால் புயலால் தெலங்கானா தொடங்கி வட கிழக்கு மாநிலங்கள் வரை பலத்த சேதங்களும் உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகிறது.

    வடகிழக்கு மாநிலமான மிசோரமில் உள்ள அய்ஸ்வால் மாவட்டத்தில் பெய்த அதி கனமழையால் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு வருகிறது. இதனால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. அனைவரும் வீட்டிலேயே இருக்குமாறு அரசாங்கம் அறிவுறுத்தியிருந்தது.

    இந்நிலையில் அங்குள்ள கல் குவாரி இடிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில்10 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கிக்கொண்டுள்ளனர். அவர்களை மீட்கும் பணியில் மீட்புப்படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட நிலச்சரிவினால் மாநிலத்தின் பிற நகரங்களிலிருந்து அம்மாவட்டம் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது.

    புயலின் தாக்கத்தால் சாலையோர மரங்கள் வேரோடு முறிந்து விழுந்தது. மின் கம்பங்கள் சாய்ந்து மின்சார வயர்கள் அறுந்து மழை நீரில் விழுந்து பொதுமக்களுக்கு அபாயகரமாக மாறியுள்ளது. இந்த புயல் காரணமாக மேற்கு வங்கத்தில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தங்கள் இருப்பிடங்களை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 




     


    • கடந்த கல்வியாண்டில் வெவ்வேறு வகுப்புகளில் 4 ஜோடி இரட்டை குழந்தைகள் பயின்றனர்.
    • சுவாரஸ்யம் என்னவென்றால் 8 ஜோடி இரட்டையர்களில் ஒரு ஜோடி தலைமை ஆசிரியரின் குழந்தைகள் ஆவார்கள்.

    மிசோராம் மாநிலத்தில் உள்ள ஒரு தொடக்கப்பள்ளியில் 8 ஜோடி இரட்டை குழந்தைகள் புதிதாக சேர்ந்துள்ளனர். இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

    அங்குள்ள ஐஸ் வால் பகுதியில் ஒரு தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் தான் புதிதாக 8 ஜோடி இரட்டை குழந்தைகள் சேர்ந்துள்ளனர். இதுதொடர்பாக அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் லால்வென்ட் லுங்கா கூறுகையில், எங்கள் பள்ளியில் கடந்த ஆண்டுகளிலும் பல இரட்டை குழந்தைகள் சேர்ந்து பயின்றுள்ளனர்.

    கடந்த கல்வியாண்டில் வெவ்வேறு வகுப்புகளில் 4 ஜோடி இரட்டை குழந்தைகள் பயின்றனர். ஆனால் இந்த ஆண்டு அதிக அளவாக 8 ஜோடி இரட்டையர்கள் சேர்ந்து சாதனை படைத்துள்ளது. இதனால் நாங்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளோம். இதில் 4 ஜோடி பெண் குழந்தைகளும், 3 ஜோடி ஆண் குழந்தைகளும் அடங்குவர் என்றார்.

    இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் 8 ஜோடி இரட்டையர்களில் ஒரு ஜோடி தலைமை ஆசிரியரின் குழந்தைகள் ஆவார்கள். அவரது மகன் ரெம்ருதிகா, மகள் லால்சார்ஜோவி ஆகியோர் எல்.கே.ஜி.யில் சேர்ந்துள்ளனர். அவர்கள் ஜூலை 21-ந் தேதி 5 வயதை எட்டுகிறார்கள்.

    • மியான்மர் ராணுவத்தினர் மிசோரமில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
    • அவர்களை அழைத்துச் செல்ல வந்த விமானம் விபத்தில் சிக்கியதாக தகவல்.

    இந்தியா- மியான்மர் எல்லையில் அமைந்துள்ள மிசோரம் மாநிலத்தில் உள்ள லெங்புய் விமான விலையத்தில் மியான்மர் நாட்டின் ராணுவத்திற்கு சொந்தமான விமானம் தரையிறங்கியது.

    அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த விமானம், ஓடுபாதையில் இருந்து விலகி அருகில் உள்ள காட்டுப்பகுதிக்குள் சென்று விபத்துக்குள்ளானது. இந்த விமானத்தில் விமானியுடன் 14 பேர் இருந்தனர். இதில் 6 பேர் காயம் அடைந்தனர்.

    மியான்மரில் ராணுவத்தினருக்கும், இனக்குழுவினருக்கும் இடையில் சண்டை நடைபெற்று வருகிறது. இனக்குழுவினருக்கு பயந்து ராணுவ வீரர்கள் மியான்மரில் தஞ்சம் அடைந்து வருகிறார்கள். அவர்கள் சொந்த நாட்டிற்கு திருப்பு அனுப்பப்பட்டு வருகிறார்கள்.

    அந்த வகையில் 184 மியான்மர் ராணுவ வீரர்களை அழைத்துச் செல்ல வந்தபோது விபத்துக்குள்ளானதாக தகவல் வெளியாகியுள்ளது.

    • மிசோரமில் இனக்குழுக்களுக்கும் ராணுவத்திற்கும் இடையில் சண்டை நடைபெற்று வருகிறது.
    • ராணுவ வீரர்கள் சரணடைந்து வருவதால், மிசோரமில் தஞ்சம் அடைகிறார்கள்.

    மியான்மரில் அந்நாட்டு ராணுவத்திற்கும், ஆயுதமேந்திய இனக்குழுவினருக்கும் இடையில் சண்டை நடைபெற்று வருகிறது. ஒரு சில நகரங்களில் இனக்குழுக்கள் ஒன்றாக இணைந்து ராணுவத்திற்கு எதிராக ஆயுதம் ஏந்தி சண்டையிட்டு வருகின்றன.

    இதனால் ராணுவம் இனக்குழுக்களை எதிர்த்து போரிட முடியவில்லை. அவர்களிடம் சரணடைந்துள்ளனர். நூற்றுக்கணக்கான மியான்மர் ராணுவ வீரர்கள் உயிருக்கு பயந்து இந்தியாவிற்கு ஒடி வருகின்றனர். எல்லையில் உள்ள மிசோரம் மாநிலத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

    அவர்களை அடிக்கடி வெளியேற்றும் முயற்சிகளை மிசோரம் மாநில அரசு மேற்கொண்டு வருகிறது. இருந்த போதிலும் தற்போது அதன் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சுமார் 600-க்கும் மேற்பட்ட வீரர்கள் இந்தியாவின் மிசோரம் மாநிலத்திற்குள் வந்துள்ளனர்.

    இதனால் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு குறித்து மிசோரம் அரசு கவலை அடைந்துள்ளது. இதனால் அவர்களை உடனடியாக மாநிலத்தில் இருந்து மியான்மருக்கு திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் வலியுறுத்தியுள்ளது.

    வடகிழக்கு கவுன்சில் கூட்டம் ஷில்லாங்கில் நடைபெற்றது. அப்போது மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் மிசோரம் முதல்வர் லால்துஹொமா விவரமாக எடுத்துக் கூறியதாக தெரிகிறது.

    அப்போது, உடனடியாக மியான்மர் ராணுவ வீரர்களை திருப்பி அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அமித் ஷாவிடம் லால்துஹோமா வலியுறுத்தியுள்ளார்.

    இதுகுறித்து லால்துஹோமா கூறுகையில் "மியான்மரில் இருந்து மக்கள் தஞ்சம் கேட்டு எங்கள் மாநிலத்திற்கு வருகிறார்கள். அவர்களுக்கு நாங்கள் மனிதாபிமான அடிப்படையில் உதவி செய்து வருகிறோம். முன்னதாக இங்கு வந்து அடைக்கலம் கேட்டு தங்கியிருந்த ராணுவ வீரர்களை நாங்கள் விமாங்கள் மூலம் அங்கு திருப்பி அனுப்பி வைத்தோம். சுமார் 450 வீரர்களை அனுப்பி வைத்துள்ளோம்" என்றார்.

    • மிசோ தேசிய முன்னணி கட்சி 10 தொகுதிகளில் வெற்றி பெற்றது.
    • சோரம் மக்கள் இயக்க கட்சி தலைவர் லால்டுஹோமா அம்மாநில முதல்வர் ஆனார்.

    மிசோரம் சட்டசபை தேர்தல் கடந்த மாதம் 7-ம் தேதி ஒரேகட்டமாக நடந்தது. 40 தொகுதிகளுக்கான சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த திங்கட்கிழமை எண்ணப்பட்டது. இதில் சோரம் மக்கள் இயக்கம் கட்சி 27 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது.

    இதையடுத்து, மிசோ தேசிய முன்னணி கட்சி 10 தொகுதிகளையும், பா.ஜ.க. 2 தொகுதிகளையும், காங்கிரஸ் ஒரு தொகுதியையும் கைப்பற்றியது. ஆட்சியமைக்க பெரும்பான்மை பெற்றதை அடுத்து சோரம் மக்கள் இயக்க கட்சி தலைவர் லால்டுஹோமா அம்மாநில முதல்வராக இன்று பதவியேற்றுக் கொண்டார்.



    இவருடன் 11 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர். மிசோரம் மாநிலத்தின் ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் அம்மாநில முன்னாள் முதலமைச்சர் சோரம்தங்காவும் கலந்து கொண்டிருந்தார். 

    • மாநில கவர்னர் ஹரி பாபுவை நேற்று சந்தித்த லால்டுஹோமா, ஆட்சியமைக்க உரிமை கோரினாா்.
    • முன்னாள் பிரதமா் இந்திரா காந்தியின் பாதுகாப்புப் பொறுப்பு அதிகாரியாக இவா் பணியாற்றியுள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஜஸால்:

    வடகிழக்கு மாநிலமான மிசோரமில் மொத்தமுள்ள 40 தொகுதிகளுக்கு கடந்த மாதம் 7-ந் தேதி ஒரே கட்டமாக சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெற்றது. மொத்தம் 8.57 லட்சம் வாக்காளா்களைக் கொண்ட இந்த மாநிலத்தில் 82 சத வீதத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் பதிவாகின. கடந்த 4-ந் தேதி (திங்கட் கிழமை) வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.

    மாநிலத்தில் ஏற்கெனவே ஆட்சியில் இருந்த மிசோ தேசிய முன்னணியை வீழ்த்தி, மற்றொரு பிராந்திய கட்சியான ஜோரம் மக்கள் இயக்கம் ஆட்சியைக் கைப்பற்றியது.

    இக்கட்சி 27 தொகுதிகளில் வெற்றி பெற்றது. மிசோ தேசிய முன்னணிக்கு 10 இடங்கள் கிடைத்தன. பா.ஜ.க. 2 இடங்களை மட்டுமே கைப்பற்றிய நிலையில், காங்கிரசுக்கு ஓரிடம்தான் கிடைத்தது.

    இந்நிலையில், ஜோரம் மக்கள் இயக்கம் கட்சியின் புதிய எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நேற்று முன்தினம் மாலை நடைபெற்றது. இதில் முதல்-மந்திரியாக கட்சித் தலைவா் லால்டுஹோமா தோ்வு செய்யப்பட்டாா்.

    இதைத் தொடா்ந்து, மாநில கவர்னர் ஹரி பாபுவை நேற்று சந்தித்த லால்டுஹோமா, ஆட்சியமைக்க உரிமை கோரினாா்.

    மாநில முதல்-மந்திரியாக லால்ஹோமா நாளை (வெள்ளிக்கிழமை) பதவியேற்க உள்ளதாக கவர்னர் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன.

    74 வயதாகும் லால்டு ஹோமா, முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி ஆவாா். முன்னாள் பிரதமா் இந்திரா காந்தியின் பாதுகாப்புப் பொறுப்பு அதிகாரியாக இவா் பணியாற்றியுள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மிசோரத்தில் சோரம் மக்கள் இயக்கம் அபார வெற்றி பெற்றது.
    • சோரம் மக்கள் இயக்க கட்சி தலைவர் லால்டுஹோமா கவர்னர் ஹரிபாபுவைச் சந்தித்து ஆதரவு கோரினார்.

    அய்ஸ்வால்:

    மிசோரம் சட்டசபைக்கு கடந்த மாதம் 7-ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடந்தது. 40 தொகுதிகளுக்கான சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த திங்கட்கிழமை எண்ணப்பட்டது. இதில் சோரம் மக்கள் இயக்கம் கட்சி அங்கு ஆட்சியைக் கைப்பற்றியது.

    இதையடுத்து, மிசோரமின் புதிய முதல் மந்திரியாக சோரம் மக்கள் இயக்கம் கட்சி தலைவர் லால்டுஹோமா பதவியேற்பார் என தகவல் வெளியானது. ஆளும் மிசோ தேசிய முன்னணி கட்சி 10 தொகுதிகளையும், பா.ஜ.க. 2 தொகுதிகளையும், காங்கிரஸ் ஒரு தொகுதியையும் கைப்பற்றியது.

    இந்நிலையில், சோரம் மக்கள் இயக்க கட்சி தலைவர் லால்டுஹோமா தனது ஆதரவாளர்கள் அடங்கிய பட்டியலை கவர்னர் ஹரிபாபுவைச் சந்தித்து ஆதரவு கோரினார்.

    இதுதொடர்பாக, லால்டுஹோமா கூறுகையில், புதிய அரசு அமைப்பது குறித்து பேசினோம். அவர் என்னை முதல் மந்திரியாக நியமித்து, ஆட்சி அமைக்கச் சொன்னார். அது வெள்ளிக்கிழமை நடைபெறும். அடுத்த வாரம் முதல் அமர்வை நடத்துவோம் என தெரிவித்தார்.

    • 40 இடங்களில் 21-ஐ கைப்பற்றும் கட்சி ஆட்சியமைக்கும்.
    • கருத்துக் கணிப்பில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஐந்து மாநில சட்டசபை தேர்தல் கடந்த மாதம் 30-ந்தேதியுடன் முடிவடைந்தது. டிசம்பர் 3-ந்தேதி (நேற்று) வாக்குகள் எண்ணப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், தெலுங்கானா மாநிலங்களில் நேற்று வாக்குள் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்பட்டது.

    மிசோரமில் பெரும்பாலானோர் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர்கள் என்பதால், ஞாயிற்றுக்கிழமை வாக்கு எண்ணிக்கையை அடுத்த நாளுக்கு மாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

    அவர்களின் கோரிக்கையை ஏற்று இன்று (டிசம்பர் 4-ந்தேதி) வாக்குகள் எண்ணப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று காலை 8 மணிக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு எந்திரங்களின் சீல் நீக்கப்பட்டு வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. மிசோ தேசிய முன்னணி (MNF), சோரம் மக்களின் இயக்கம் (ZPM), காங்கிரஸ் இடையே பலத்த போட்டி நிலவி வருகிறது.

    காலை 9.30 மணி நிலவரப்படி ஆளுங்கட்சியான மிசோ தேசிய முன்னணி (எம்.என்.எஃப்) 11 இடங்களில் முன்னிலைப் பெற்றுள்ளது. எதிர்க்கட்சியான சோரம் மக்கள் இயக்கம் 15 இடங்களில் முன்னணி வகித்து வருகிறது.

    காங்கிரஸ் 10 இடங்களிலும், பா.ஜனதா ஒரு இடத்திலும் முன்னணி வகிக்கின்றன.

    தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில் 40 இடங்களை கொண்ட மிசோரமில் ஆட்சியமைக்க 21 உறுப்பினர்களின் ஆதரவு தேவை என்ற நிலையில், அங்கு ஆளும் மிசோ தேசிய முன்னணி (எம்.என்.எப்.) 14-18 இடங்களும், சோரம் மக்களின் இயக்கம் (இசட்.பி.எம்.) 12-16 இடங்களும், காங்கிரஸ் 8-10 இடங்களும், பா.ஜனதா 0-2 இடங்களும் பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • 40 தொகுதிகளை கொண்ட மிசோரம் மாநிலத்துக்கு ஒரே கட்டமாக வாக்குப்பதிவு.
    • வாக்குப்பதிவு எண்ணிக்கை டிசம்பர் 3-ந்தேதி நடைப்பெற இருப்பதாக அறிவிக்கப்பட்டது.

    மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், தெலுங்கானா மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் சட்டசபை பதவி காலம் முடிவடைந்ததை அடுத்து, கடந்த நவம்பர் 7ம் தேதி முதல் 30ம் தேதி வரை தேர்தல் நடைபெற்றது.

    அதன்படி, மிசோரம் மாநிலத்தில் கடந்த 7-ந் தேதியும் மத்திய பிரதேசத்தில் 17-ந் தேதியும், ராஜஸ்தானில் 25-ந் தேதியும், தெலுங்கானாவில் 30-ந் தேதியும் தேர்தல் நடைபெற்றது. சத்தீஸ்கரில் 2 கட்டங்களாக 7 மற்றும் 14-ந்தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது.

    40 தொகுதிகளை கொண்ட மிசோரம் மாநிலத்துக்கு ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.

    5 மாநில சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு எண்ணிக்கை டிசம்பர் 3-ந்தேதி நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், மிசோரம் மாநில சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மட்டும் 4ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

    டிசம்பர் 3ம் தேதி நடைபெற இருந்த மிசோரம் மாநில வாக்கு எண்ணிக்கை 4ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் அறிவித்துள்ளது.

    • 5 மாநில தேர்தலில் வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியானது.
    • மிசோரம் மாநிலத்தில் மொத்த இடங்கள் 40 ஆகும்.

    மிசோரம், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று மாலையுடன் நிறைவடைந்தது.

    இந்நிலையில், 5 மாநில தேர்தலில் வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியானது.

    இதில், மிசோரம் மாநிலத்தில் மொத்த இடங்கள் 40 ஆகும். இதில், பெரும்பான்மையாக பிடிக்க வேண்டிய இடங்கள் 21.

    கருத்துக் கணிப்பு முடிவுகளின் விவரம் வருமாறு:

    ஜன் கி பாத்: மி.தே.மு 10- 14, ஜோ.ம.இ 15- 25, காங்கிரஸ் 05- 09, மற்றவை 00- 02.

    இந்தியா டிவி மற்றும் சிஎன்எக்ஸ்: மி.தே.மு 14- 18, ஜோ.ம.இ 12- 16, காங்கிரஸ் 08- 10, மற்றவை 00- 02.

    பி- மார்க்யூ: மி.தே.மு 14- 20, ஜோ.ம.இ 15- 25, காங்கிரஸ் 05- 09, மற்றவை 00- 02.

    (மி.தே.மு- மிசோ தேசிய முன்னணி, ஜோ.ம.இ- சோரா மக்கள் கட்சி)

    • தியாவ் நதிக்கு அருகே சாய்கும்பாய் பகுதியின் வழியாக அவர்கள் இந்திய எல்லைக்குள் வந்தனர்.
    • மியான்மருக்கு திருப்பி அனுப்பும் பேச்சுவார்த்தைகள் நடப்பதாக அசாம் ரைபிள் ராணுவம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

    ஐஸ்வால்:

    மியான்மர் நாட்டு எல்லையில், சில குழுக்களை சேர்ந்த கிளர்ச்சியாளர்கள், ராணுவ முகாம் ஒன்றை கைப்பற்றினர். சில ராணுவ வீரர்களை பணயக் கைதிகளாக சிறைப்பிடித்தனர். அப்போது மியான்மர் ராணுவ வீரர்கள் ஏராளமானவர்கள், எல்லையை ஒட்டி இருந்த இந்திய பகுதியான மிசோரமில் புகுந்தனர். அவர்களில் சுமார் 40 பேர் மிசோரம் போலீசாரிடம் ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு தஞ்சம் அடைந்தனர். இருநாட்டு ராணுவ பேச்சுவார்த்தைக்கு பின்பு, சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர்.

    தற்போது மேலும் 29 மியான்மர் ராணுவ வீரர்கள் மிசோரமில் நுழைந்திருப்பது தெரியவந்து உள்ளது. அவர்கள் நேற்று முன்தினம் மிசோரம் போலீசார் மற்றும் அசாம் ரைபிள் ராணுவ பிரிவினரிடம் தஞ்சம் கேட்டனர். தியாவ் நதிக்கு அருகே சாய்கும்பாய் பகுதியின் வழியாக அவர்கள் இந்திய எல்லைக்குள் வந்தனர். அவர்களை மியான்மருக்கு திருப்பி அனுப்பும் பேச்சுவார்த்தைகள் நடப்பதாக அசாம் ரைபிள் ராணுவம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

    2021-ல் மியான்மரில் ராணுவம் ஆட்சியை கைப்பற்றியதில் இருந்து பொது மக்களும், பல்வேறு கிளர்ச்சி குழுக்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

    ×