என் மலர்tooltip icon

    இந்தியா

    இந்தியாவில் முழு கல்வியறிவு பெற்ற முதல் மாநிலம் என்ற சாதனையை படைத்தது மிசோரம்
    X

    இந்தியாவில் முழு கல்வியறிவு பெற்ற முதல் மாநிலம் என்ற சாதனையை படைத்தது மிசோரம்

    • 2011ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, மிசோரம் மாநிலத்தின் எழுத்தறிவு விகிதம் 91.33 சதவீதமாக இருந்தது.
    • அப்போது மிசோரம் நாட்டிலேயே அதிக எழுத்தறிவு விகிதம் கொண்ட மூன்றாவது மாநிலமாக இருந்தது.

    இந்தியாவில் முழு கல்வி அறிவு பெற்ற முதல் மாநிலம் என்ற சாதனையை மிசோரம் படைத்துள்ளது. இதனை மிசோரம் மாநில முதலமைச்சர் லால்டுஹோமா அறிவித்துள்ளார்

    மிசோரம் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், மத்திய கல்வித் துறை இணை அமைச்சர் ஜெயந்த் சவுத்ரி முன்னிலையில், அம்மாநில முதல்வர் இதனை தெரிவித்தார்.

    கடந்த 2011ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, மிசோரம் மாநிலத்தின் எழுத்தறிவு விகிதம் 91.33 சதவீதமாக இருந்தது. அப்போது மிசோரம் மாநிலம் நாட்டிலேயே அதிக எழுத்தறிவு விகிதம் கொண்ட மூன்றாவது மாநிலமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×