search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    மிசோரமில் விபத்துக்குள்ளான மியான்மர் ராணுவ விமானம்: 6 பேர் படுகாயம்
    X

    மிசோரமில் விபத்துக்குள்ளான மியான்மர் ராணுவ விமானம்: 6 பேர் படுகாயம்

    • மியான்மர் ராணுவத்தினர் மிசோரமில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
    • அவர்களை அழைத்துச் செல்ல வந்த விமானம் விபத்தில் சிக்கியதாக தகவல்.

    இந்தியா- மியான்மர் எல்லையில் அமைந்துள்ள மிசோரம் மாநிலத்தில் உள்ள லெங்புய் விமான விலையத்தில் மியான்மர் நாட்டின் ராணுவத்திற்கு சொந்தமான விமானம் தரையிறங்கியது.

    அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த விமானம், ஓடுபாதையில் இருந்து விலகி அருகில் உள்ள காட்டுப்பகுதிக்குள் சென்று விபத்துக்குள்ளானது. இந்த விமானத்தில் விமானியுடன் 14 பேர் இருந்தனர். இதில் 6 பேர் காயம் அடைந்தனர்.

    மியான்மரில் ராணுவத்தினருக்கும், இனக்குழுவினருக்கும் இடையில் சண்டை நடைபெற்று வருகிறது. இனக்குழுவினருக்கு பயந்து ராணுவ வீரர்கள் மியான்மரில் தஞ்சம் அடைந்து வருகிறார்கள். அவர்கள் சொந்த நாட்டிற்கு திருப்பு அனுப்பப்பட்டு வருகிறார்கள்.

    அந்த வகையில் 184 மியான்மர் ராணுவ வீரர்களை அழைத்துச் செல்ல வந்தபோது விபத்துக்குள்ளானதாக தகவல் வெளியாகியுள்ளது.

    Next Story
    ×