search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mizoram CM"

    • மிசோ தேசிய முன்னணி கட்சியின் தலைவராகவும், முதல்வராகவும் இருந்து வருபவர் ஜோரம்தங்கா.
    • டாக்டரை மகள் தாக்கியதற்கு முதல் மந்திரி பகிரங்க மன்னிப்பு கோரினார்.

    ஐஸ்வால்:

    மிசோ தேசிய முன்னணி கட்சியின் தலைவருமான ஜோரம்தங்கா பகிரங்கமாக மன்னிப்பு கோரியுள்ளார்.

    மிசோரம் முதல் மந்திரியின் மகள் மிலாரி சாங்டே. இவர் தலைநகர் ஐஸ்வாலில் உள்ள ஒரு மருத்துவமனையைச் சேர்ந்த தோல் மருத்துவ நிபுணரிடம் மருத்துவ பரிசோதனைக்காகச் சென்றுள்ளார்.

    முன் அனுமதி இல்லாததால் மருத்துவர் முதல் மந்திரியின் மகளைச் சந்திக்க மறுத்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த முதல் மந்திரி மகள் டாக்டரை தாக்கியுள்ளார். இதனை அங்கு இருந்த ஒருவர் செல்போனில் வீடியோ பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

    இந்த வீடியோ வைரலானதால் முதல் மந்திரி மற்றும் மகள் மீது கடும் விமர்சனங்கள் எழுந்தன.

    இந்நிலையில், முதல் மந்திரி ஜோரம்தங்கா தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரங்க மன்னிப்பு கோரினார்.

    இதுதொடர்பாக அவர் கூறுகையில், ஐஸ்வாலை சேர்ந்த தோல் நிபுணரிடம் தனது மகள் தவறாக நடந்ததற்கு மன்னிப்பு கேட்பதாகவும், அவரது நடத்தையை எந்த வகையிலும் நியாயப்படுத்த மாட்டோம் என தெரிவித்துள்ளார்.

    மிசோரம் மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு கடும் பின்னடைவு ஏற்பட்டுள்ள நிலையில், முதல்வர் லால் தன்ஹாவ்லா தனது தொகுதியில் தோல்வி அடைந்தார். #Results2018 #MizoramElections #LalThanhawla
    ஐசால்:

    மிசோரம் மாநிலத்தில் கடந்த மாதம் 28-ம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. ஆளும் காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சியான மிசோ தேசிய முன்னணி ஆகிய கட்சிகள் மொத்தம் உள்ள 40 தொகுதிகளிலும் போட்டியிட்டன. பா.ஜனதா 39 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தியது. இந்த தேர்தலில் 80 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன.

    இந்நிலையில் மிசோரம் மாநிலத்தில் பதிவான வாக்குகள் 13 மையங்களில் இன்று எண்ணப்படுகின்றன. மூன்றாவது முறை ஆட்சி அமைக்கும் நம்பிக்கையில் காத்திருந்த காங்கிரஸ் கட்சிக்கு கடும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.



    ஆட்சியமைக்க 21 இடங்கள் தேவை என்ற நிலையில், 12 மணி நிலவரப்படி மிசோ தேசிய முன்னணி (எம்என்எப்) கட்சி 28 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. இந்த வெற்றியைத் தொடர்ந்து தொண்டர்கள் கட்சி அலுவலகங்களில் இனிப்புகள் கொடுத்து மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டனர்.

    ஆளும் காங்கிரஸ் கட்சி 6 இடங்களில் மட்டுமே முன்னிலை பெற்றிருந்தது. காங்கிரஸ் வேட்பாளர்கள் பலர் தோல்வி முகத்தில் உள்ளனர். முதல்வர் லால் தன்ஹாவ்லா சாம்பாய் தெற்கு தொகுதியில் தோல்வி அடைந்தார். அவரை எதிர்த்து போட்டியிட்ட எம்என்எப் வேட்பாளர் லால்நந்த்லுவாங்கா வெற்றி பெற்றார். #Results2018 #MizoramElections #LalThanhawla 
    மிசோரம் மாநிலத்தில் தலைமை தேர்தல் அதிகாரிக்கு எதிராக போராட்டம் தீவிரமடைந்துள்ளதால், முதல்வர் லால் தன்ஹாவ்லா வேட்பு மனு தாக்கல் செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. #MizoramElection #MizoramCM
    ஐசால்:

    நாற்பது தொகுதிகள் கொண்ட மிசோரம் மாநில சட்டமன்றத்தின் பதவிக்காலம் வரும் டிசம்பர் 15-ம் தேதிக்குள் முடிவடைகிறது. இதனால் புதிய அரசை தேர்வு செய்வதற்காக வரும் 28-ம் தேதி தேர்தல் நடத்தப்படுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் தொடங்கி நடைபெற்று வருகிறது.



    இந்த தேர்தலில் செர்சிப் மற்றும் சாம்பாய் தெற்கு ஆகிய தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்த முதல்வர் லால் தன்ஹாவ்லா, இன்று செர்சிப் தொகுதிக்கான வேட்பு மனு தாக்கல் செய்ய முடிவு செய்திருந்தார்.  ஆனால், தலைமைத் தேர்தல் அதிகாரியை நீக்க வலியுறுத்தி நடைபெறும் போராட்டம் தீவிரமடைந்திருப்பதால், முதல்வரால் இன்று வேட்பு மனுதாக்கல் செய்ய முடியவில்லை. வேட்பு மனு தாக்கல் செய்ய நாளை மறுதினம் கடைசி நாள் ஆகும்.

    இதுபற்றி கூடுதல் துணை கமிஷனர் கூறுகையில், ‘செர்சிப் நகரில் தேர்தல் அலுவலகம் அமைந்துள்ள துணை கமிஷனர் அலுவலகம் அருகே போராட்டம் நடந்து வருவதால், முதல்வர் தனது வேட்பு மனு தாக்கல் திட்டத்தில் மாற்றம் செய்திருக்கலாம். இன்று மனு தாக்கல் செய்ய வேண்டாம் என யாரும் அவரிடம் கூறவில்லை’ என்றார். #MizoramElection #MizoramCM
    ×