search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mizoram Assembly polls"

    • ஆளுங்கட்சி சார்பில் மீண்டும் 26 எம்.எல்.ஏ.க்கள் மனுத்தாக்கல்
    • பா.ஜனதா சார்பில் 23 பேர், ஆம் ஆத்மி கட்சி சார்பில் 4 பேர் மனுத்தாக்கல்

    மத்திய பிரதேசம், ராஜஸ்தான், மிசோரம், சத்தீஸ்கர், தெலுங்கானா உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் நவம்பர் 30-ந்தேதி வரை தேர்தல் நடைபெற இருக்கிறது. டிசம்பர் 3-ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

    40 தொகுதிகளை கொண்ட மிசோரமில் நவம்பர் 7-ந்தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் முடிவடைந்த நிலையில் இன்று, வேட்மனு மீதான பரிசீலனை நடைபெற இருக்கிறது. அதன்பின் அக்டோபர் 23-ந்தேதி வேட்புமனுவை திரும்பப் பெற கடைசி நாளாகும்.

    மிசோரம் மாநிலத்தில் 16 பெண்கள் உள்பட 174 பேர் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். வேட்புமனு பரிசீலனை முடிவடைந்து பின், அக்டோபர் 23-ந்தேதி இறுதி கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். அப்போது அதிகாரப்பூர்வமாக போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்படும்.

    ஆளும மிசோரம் தேசிய முன்னணி (MNF), எதிர்க்கட்சிகளான சோரம் மக்கள் இயக்கம் (ZPM), காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

    தற்போதைய எம்.எல்.ஏ.க்கள் 35 பேருக்கு மீண்டும் வாயப்பு அளித்துள்ளது ஆளுங்கட்சி. அதேவேளையில் சோரம் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த ஆறு எம்.எல்.ஏ.-க்கள் உள்பட 40 பேர் மறுதேர்தல் நடத்த வலியுறுத்தியுள்ளனர்.

    இவர்களைத்தவிர பா.ஜனதா சார்பில் 23 பேர், ஆம் ஆத்மி கட்சி சார்பில் 4 பேர், சுயேட்சையாக 27 பேர் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

    மிசோரம் மாநிலத்தில் இன்று சட்டமன்றத் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், முதல் இரண்டு மணி நேரத்தில் 15 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. #MizoramElections #MizoramVoterTurnout
    கவுகாத்தி:

    மிசோரம் மற்றும் மத்திய பிரதேச மாநிலங்களில் இன்று சட்டமன்றத் தேர்தல் ஒரே கட்டமாக நடத்தப்படுகிறது. 40 தொகுதிகளைக் கொண்ட மிசோரம் மாநிலத்தில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்காளர்கள் காலையிலேயே வாக்குச்சாவடிகளுக்கு வந்து ஆர்வத்துடன் வாக்களித்தனர். காலையில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக இருந்தது.

    இந்நிலையில், காலை 9 மணி நிலவரப்படி சராசரியாக 15 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். செர்சிப் போன்ற தொலைதூரப் பகுதிகளில் மட்டும் குறைந்த அளவிலான வாக்குகள் பதிவாகியிருந்தன.

    தள்ளாத வயதிலும் ஜனநாயக கடமையாற்றிய மகிழ்ச்சியில் மூதாட்டி

    கிராமப்புற மற்றும் தொலைதூரப் பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளில் காலையில் வாக்குப்பதிவு சற்று மந்தமாக இருந்தது. அதன்பின்னர் வாக்காளர்கள் வருகை படிப்படியாக அதிகரித்தது. ஐசால் நகர்ப்புற வாக்குச்சாவடிகளில் நீண்ட வரிசையில் வாக்காளர்கள் காத்திருந்து வாக்களித்தனர்.

    மிசோரம் மாநில காங்கிரஸ் துணைத்தலைவர் சி.எல்.ருவாலா, ஐசால் தெற்கு-2 வாக்குச்சாவடியில் தனது வாக்கினை பதிவு செய்தார். முன்னாள் முதல்வரும் எதிர்க்கட்சியான மிசோ தேசிய முன்னணி தலைவருமான ஜோரம்தங்கா காலை 7 மணிக்கே ஐசால் வடக்கு-2 தொகுதிக்குட்பட்ட ராம்லன் வாக்குச்சாவடிக்கு வந்து ஓட்டு போட்டார். #MizoramElections #MizoramVoterTurnout
    ×