search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "chandrasekhar rao"

    • காங்கிரஸ், பா.ஜ.க என்ற பலமான அரசியல் எதிரிகளை தேர்தல் களத்தில் சந்திக்க முடியாமல் பி.ஆர்.எஸ் கட்சி திணறி வருகிறது.
    • சந்திரசேகரராவ் கட்சி முக்கிய தலைவர்களை இழுக்கும் வேலையில் காங்கிரஸ், பா.ஜ.க. தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலத்தில் சந்திரசேகர ராவ் மிகப்பெரிய அரசியல் சக்தியாக வலம் வந்தார்.

    ஆளும் கட்சியாக இருந்த சந்திரசேகரராவின் பாரத் ராஷ்டிரீய சமிதி கட்சி கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஆட்சியை இழந்தது. அதன்பிறகு பிறகு கட்சி நிலைகுலைந்து விட்டது.

    சந்திரசேகரராவின் மகள் கவிதா டெல்லி மதுபான ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டு உள்ளார். அவருக்கு வீட்டு சாப்பாடு வழங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் சந்திரசேகரராவ் மன உளைச்சல் அடைந்துள்ளார்.

    இந்த பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ், பா.ஜ.க. வேட்பாளர்கள் அறிவிக்க திணறி கொண்டிருந்த நேரத்தில் முதல் ஆளாக 17 பாராளுமன்ற தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்தார்.

    சந்திரசேகரராவின் பி.ஆர்.எஸ். கட்சியின் மூத்த தலைவர்கள், தற்போதைய எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், முன்னாள் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் என பெரும்பாலான தலைவர்கள் ஆளும் கட்சியான காங்கிரசிலும் பிரதான எதிர்க்கட்சியாக உருவெடுத்து வரும் பாரதிய ஜனதா கட்சியிலும் சேர்ந்து வருகின்றனர்.

    மேலும் கட்சியில் இருக்கும் வலுவான மூத்த தலைவர்கள் இந்த முறை போட்டியிட தயங்குகின்றனர். இதனால் காங்கிரஸ், பா.ஜ.க. என்ற பலமான அரசியல் எதிரிகளை தேர்தல் களத்தில் சந்திக்க முடியாமல் பி.ஆர்.எஸ். கட்சி திணறி வருகிறது.

    இந்நிலையில் பி.ஆர்.எஸ். கட்சி சார்பில் அறிவிக்கப்பட்ட வேட்பாளர்கள் போட்டியிலிருந்து விலகத் தொடங்கியுள்ளனர்.

    சந்திரசேகரராவ் முதல் மந்திரியாக இருந்தபோது துணை முதல் மந்திரியாக இருந்தவர் ஸ்ரீஹரி. அவரது மகள் காவ்யா, வாரங்கல் தொகுதி பி.ஆர்.எஸ். வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அவர் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று அறிவித்துள்ளார்.

    சந்திர சேகரராவின் ஆட்சியில் நடந்த ஊழல் தொடர்பாக வரும் புகார்கள் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்களின் தொலைபேசி ஒட்டு கேட்பு விவகாரம் ஆகியவை கட்சிக்கு மிகப்பெரிய பிரச்சனையை ஏற்படுத்தி இருப்பதால் தேர்தலில் போட்டியிடப் போகவில்லை என அவர் கூறியுள்ளார்.

    இதேபோல் மேலும் சில வேட்பாளர்கள் போட்டியில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளனர்.

    சந்திரசேகரராவ் கட்சி முக்கிய தலைவர்களை இழுக்கும் வேலையில் காங்கிரஸ், பா.ஜ.க. தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

    வலுவான வேட்பாளர்கள் எல்லோரும் காங்கிரஸ் பா.ஜ.க.வுக்கு தாவிய நிலையில் அறிவிக்கப்பட்ட வேட்பாளர்கள் போட்டியிலிருந்து விலகத் தொடங்கி இருப்பது சந்திரசேகரராவ் கட்சிக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அவர் பரிதவிப்பில் உள்ளார்.

    • மாநில எதிர்க்கட்சியான பி.ஆர்.எஸ். கட்சி கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
    • அடிக்கல் நாட்டப்பட்ட இடத்தில் தெலுங்கானா அன்னையின் சிலை அமைக்க முடிவு செய்யப்பட்டிருந்தது.

    தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள தலைமைச் செயலகத்தில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி சிலை அமைக்க முதல் மந்திரி ரேவந்த் ரெட்டி அடிக்கல் நாட்டினார்.

    இதற்கு அந்த மாநில எதிர்க்கட்சியான பி.ஆர்.எஸ். கட்சி கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ராஜீவ் காந்தி சிலை வைக்க அடிக்கல் நாட்டப்பட்ட இடத்தில் தெலுங்கானா அன்னையின் சிலை அமைக்க முடிவு செய்யப்பட்டிருந்தது.

    அந்த இடத்தில் ராஜீவ் காந்தி சிலையை அமைக்க கூடாது. தெலுங்கானா அன்னை சிலை மாநிலத்தின் கலாச்சார அடையாளத்தை குறிக்கிறது. எனவே தலைமைச் செயலக வளாகத்தில் ராஜீவ் காந்தி சிலை அமைக்கும் முடிவை கைவிட வேண்டும்.

    அந்த இடத்தில் தெலுங்கானா அன்னை சிலையை வைக்க வேண்டும் என சந்திரசேகர ராவின் மகள் கவிதா வலியுறுத்தி உள்ளார்.

    • தெலுங்கானா தேர்தலில் சந்திரசேகர ராவ் முதலமைச்சராக காங்கிரஸ் ஆதரவு அளிக்கும்.
    • பாராளுமன்ற தேர்தலில் ராகுல் காந்தி பிரதமராக சந்திரசேகர ராவ் ஆதரவு அளிப்பார்.

    தெலுங்கானாவில் வருகிற 30-ந்தேதி (நாளைமறுதினம்) சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. 119 இடங்களுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடக்க இருக்கிறது. நேற்று மத்திய அமைச்சரும், பா.ஜனதாவின் முக்கிய தலைவர்களில் ஒருவருமான அமித் ஷா நேற்று தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.

    அப்போது அமித் ஷா கூறியதாவது:-

    காங்கிரஸ் கட்சிக்கும், சந்திரசேகர ராவின் பாரதிய ராஷ்டிரிய சமிதி கட்சிக்கும் இடையில் ரகசிய புரிந்துணர்வு உள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு அளிக்கும் ஒவ்வொரு வாக்கும் பிஆர்எஸ் கட்சிக்கு செல்லும். இதனால் வாக்காளர்கள் பா.ஜனதாவுக்கு வாக்களிக்க வேண்டும்.

     பா.ஜனதா வேட்பாளர் ஈடால ராஜேந்தருக்கு அதிக அளவில் வாக்களிப்பதன் மூலம், அடுத்த தேர்தலில் பிஆர்எஸ் வேட்பாளர்களை பெற முடியாது என்ற தெளிவான தகவலை சந்திரசேகர ராவுக்கு அனுப்ப முடியும்.

     தெலுங்கானா தேர்தலில் சந்திரசேகர ராவ் முதலமைச்சராக காங்கிரஸ் ஆதரவளிக்கும். அதேபோல் பாராளுமன்ற தேர்தலில் ராகுல் காந்தி பிரதமராக சந்திரசேகர ராவ் ஆதரவு அளிப்பார். ஆனால், அந்த பதவிகள் காலியாக இல்லை. காங்கிரஸ், பிஆர்எஸ் கட்சிகள் குடும்ப கட்சிகள். ஊழல் மற்றும் குடும்ப ஆட்சிக்கு உறுதியளிக்கும் கட்சிகள்.

    இவ்வாறு அமித் ஷா தெரிவித்தார்.

    • 2016 பண மதிப்பிழப்பு மற்றும் கொரோனா ஆகியவற்றால் தெலுங்கானாவின் பொருளாதார வளர்ச்சியில் சரிவு
    • தெலுங்கானா கடுமையான மற்றும் தியாகத்தின் மூலமாக மிகப்பெரிய வளர்ச்சியை எட்டும்

    தெலுங்கானா மாநிலத்தில் 119 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக நவம்பர் 30-ந்தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் 95 முதல் 105 இடங்களில் வெற்றி பெறுவோம் என பாரதிய ராஷ்டிரிய சமிதி கட்சி தலைவர் சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளார்.

    மேலும், காஜ்வெல் தொகுதி மக்கள் தன்மீது அன்பு வைத்திருப்பதாகவும், தொடர்ந்து இரண்டு முறை பிரமாண்ட வெற்றியை வழங்குவார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

    தொகுதி அளவிலான கூட்டத்தில் பேசிய சந்திரசேகர ராவ், 2016 பண மதிப்பிழப்பு மற்றும் கொரோனா ஆகியவற்றால் தெலுங்கானாவின் பொருளாதார வளர்ச்சியில் சரிவு ஏற்பட்டதாகவும், இந்தியாவின் இளம் மாநிலமான தெலுங்கானா கடுமையான மற்றும் தியாகத்தின் மூலமாக மிகப்பெரிய வளர்ச்சியை எட்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

    மேலும், தற்போது வளர்ச்சி மற்றும் சாதனையால் நாம் திருப்தி அடையக் கூடாது. சிறந்து விளங்க பாடுபடுவது ஒரு தொடர்ச்சியான செயல்முறையாகும், நாம் மக்களுக்கு நல்ல வாழ்க்கைத் தரத்தை வழங்க வேண்டும் எனக் குறிப்பிட்டார்.

    2016-ல் இருந்து சந்திரசேகர ராவ் தொடர்ந்து தெலுங்கானாவின் முதல்வராக இருந்து வருகிறார். அவரது பிஆர்எஸ் கட்சிக்கும் காங்கிரஸ்க்கும் இடையில் கடும் போட்டி நிலவி வருகிறது. இதற்கிடையே பா.ஜனதாவும் தெலுங்கானாவில் கால்பதிக்க முயற்சி செய்து வருகிறது.

    • ஐதராபாத் மாநகராட்சியை கைப்பற்ற தங்கள் கட்சிக்கு பா.ஜனதா ஆதரவு அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
    • தெலுங்கானா வளர்ச்சி திட்டங்களுக்காக மத்திய அரசு கொடுக்கும் நிதியை தெலுங்கானா அரசு கொள்ளையடித்து வருகிறது.

    நிஜாமாபாத்:

    பிரதமர் மோடி நேற்று தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத்துக்கு சென்றார். அங்கு நடந்த பா.ஜனதா பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டார். அதில் அவர் பேசியதாவது:-

    நான் ஒரு ரகசியம் சொல்கிறேன். ஐதராபாத் மாநகராட்சி தேர்தலுக்கு முன்பெல்லாம், தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் என்னை வரவேற்க வருவார். அந்த தேர்தலுக்கு பிறகு அவர் வரவேற்க வருவது இல்லை.

    திடீரென்று என்ன கோபம்? ஐதராபாத் மாநகராட்சி தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. அப்போது, சந்திரசேகர ராவ் என்னை டெல்லிக்கு வந்து சந்தித்தார்.

    ஒரு அழகிய சால்வையை போர்த்தி எனக்கு மரியாதை செய்தார். பிறகு அவர், பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் சேர விரும்புவதாக தெரிவித்தார். பதிலுக்கு என்ன செய்ய வேண்டும் என்று கேட்டேன். ஐதராபாத் மாநகராட்சியை கைப்பற்ற தங்கள் கட்சிக்கு பா.ஜனதா ஆதரவு அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

    ஆனால், உங்கள் தவறான செயல்களால், உங்களை கூட்டணியில் சேர்த்துக் கொள்ள முடியாது என்று கூறி, அவரது கோரிக்கையை நிராகரித்து விட்டேன். ஐதராபாத் மாநகராட்சியில் பா.ஜனதா எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்தாலும் பரவாயில்லை என்று கூறிவிட்டேன்.

    அதன்பிறகுதான் என்னை நேருக்குநேர் சந்திப்பதை சந்திரசேகர ராவ் தவிர்க்க தொடங்கினார். நான் சொல்வது 100 சதவீதம் உண்மை.

    தெலுங்கானா ஆட்சிப்பொறுப்பை தன்னுடைய மகன் கே.டி.ராமாராவிடம் ஒப்படைக்க விரும்புவதாகவும் சந்திரசேகர ராவ் என்னிடம் கூறினார். அதற்கு நான், அப்படி செய்யாதீர்கள். இது மன்னர் ஆட்சியல்ல, ஜனநாயகம் என்று கூறினேன்.

    தெலுங்கானா வளர்ச்சி திட்டங்களுக்காக மத்திய அரசு கொடுக்கும் நிதியை தெலுங்கானா அரசு கொள்ளையடித்து வருகிறது. கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு பாரத ராஷ்டிர சமிதி மறைமுக ஆதரவு கொடுத்தது.

    எனவே, தாய்மார்களும், சகோதரிகளும் உஷாராக இருக்க வேண்டும். தெலுங்கானா சட்டசபை தேர்தலில் பா.ஜனதாவை ஆதரிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    முன்னதாக, நிஜாமாபாத்தில் நடந்த அரசு நிகழ்ச்சியில், பிரதமர் மோடி, ரூ.8 ஆயிரம் கோடி மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், நிறைவடைந்த திட்டங்களை தொடங்கியும் வைத்தார்.

    அவற்றில், தெலுங்கானா சூப்பர் அனல்மின் திட்டத்தின் முதலாவது அலகு திறப்பும் அடங்கும். அந்த ஆலை, 800 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யவல்லது.

    மனோகராபாத்தையும், சித்திப்பேட்டையும் இணைக்கும் புதிய ரெயில் பாதை, 2 ரெயில்வே வழித்தடங்களை மின்மயமாக்கும் திட்டம் ஆகியவையும் அடங்கும்.

    அந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசுகையில், இன்னும் சில மாதங்களில், அனைத்து ரெயில் பாதைகளும் 100 சதவீதம் மின்மயமாக்கப்படும் என்று கூறினார்.

    • 2010-ல் ராஜ்யசபாவால் அங்கீகரிக்கப்பட்ட மகளிர் இட ஒதுக்கீடு மசோதா 2023-ல் கூட மக்களவையில் ஒப்புதல் பெறவில்லை.
    • பெண்கள் இடஒதுக்கீடு மசோதாவுக்கு எதிராக டிசம்பர் மாதம் டெல்லியில் போராட்டம் நடத்த உள்ளேன்.

    திருப்பதி:

    தெலுங்கானா முதல்அமைச்சர் சந்திரசேகர ராவின் மகள் கவிதா எம்.எல்.சி.யாக உள்ளார். இவர் பெண்கள் இட ஒதுக்கீடு சட்ட மசோதாவுக்கு எதிராக டெல்லியில் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    பி.ஆர்.அம்பேத்கர், சட்ட மன்றங்களில் பெண்களின் பிரதிநிதித்துவம் வேண்டும் என்று வாதிட்டார், ஆனால் நாடு சுதந்திரம் அடைந்ததில் இருந்து எந்த ஒரு அரசியல் கட்சியும் இந்தப் பிரச்சினையை போதுமான அளவு கவனிக்கவில்லை. 2010-ல் ராஜ்யசபாவால் அங்கீகரிக்கப்பட்ட மகளிர் இட ஒதுக்கீடு மசோதா 2023-ல் கூட மக்களவையில் ஒப்புதல் பெறவில்லை.

    அறுதிப் பெரும்பான்மையை வைத்துள்ள நரேந்திர மோடி அரசு ஏன் மசோதாவை நிறைவேற்றவில்லை. "ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் எனது வேண்டுகோள் என்ன வென்றால், அவர்கள் இதை பொது பிரச்சினை யாக பார்க்க வேண்டும்.

    இது ஒட்டுமொத்த பெண்களுக்கும் கவலை அளிப்பதாக உள்ளது.இது நம் நாட்டில் உள்ள 70 கோடி பெண்களுக்கும் பொருந்தும். பெண்கள் இடஒதுக்கீடு மசோதாவுக்கு எதிராக டிசம்பர் மாதம் டெல்லியில் போராட்டம் நடத்த உள்ளேன்.

    போராட்டத்தில் பங்கேற்க காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, பிரியங்கா காந்தி, பாஜகவின் ஸ்மிருதி , டிகே அருணா ஆகியோர் பங்கேற்க அழைப்பு விடுப்பேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ரூ.148.50 கோடியில் சுமார் 11.80 ஏக்கர் நிலத்தில் என்டிஆர் கார்டன் பகுதியில் இந்த சிலை அமைக்கப்பட்டுள்ளது.
    • இப்பகுதி விரைவில் சுற்றுலா தலமாக மாற்றப்பட உள்ளது.

    ஐதராபாத் ஹூசைன் சாகர் பகுதியில் நாடாளுமன்ற கட்டிட வடிவில் அம்பேத்கருக்கு 125 அடி உயரத்தில் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இப்பகுதி விரைவில் சுற்றுலா தலமாக மாற்றப்பட உள்ளது.

    ரூ.148.50 கோடியில் சுமார் 11.80 ஏக்கர் நிலத்தில் என்டிஆர் கார்டன் பகுதியில் இந்த சிலை அமைக்கப்பட்டுள்ளது. கட்டுமானப் பணிகளுக்கு எஸ்சி நலத்துறை நிதி வழங்கிய நிலையில், கட்டுமானப் பொறுப்பு சாலைகள் மற்றும் கட்டிடங்கள் துறையிடம் ஒப்படைக்கப்பட்டு ஒரு வருடத்திற்குள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

    ஹைதராபாத்தில் உள்ள இந்த 125 அடி உயர அம்பேத்கர் சிலையை முதல்வர் கே சந்திரசேகர் ராவ் திறந்து வைத்தார்.

    இந்நிகழ்ச்சியில் அம்பேத்கரின் பேரன் பிரகாஷ் அம்பேத்கர், தெலுங்கானா அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மற்றும் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

    • பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட அனைத்துக் கட்சிகளும் காங்கிரசின் யாத்திரையைத் தவிர்த்துவிட்டன.
    • பாஜக அல்லது காங்கிரசின் ஆதரவின்றி எந்த மூன்றாம் அணியும் இதுவரை வெற்றி பெற்றதில்லை.

    ஐதராபாத்:

    தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் தன்னுடைய தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியை பாரத ராஷ்டிரிய சமிதி என்று தேசிய கட்சியாக அறிவித்தார். பல்வேறு மாநிலங்களில் போட்டியிட உள்ளதாகவும் கூறினார். இந்நிலையில், பாரத ராஷ்டிரிய சமிதி கட்சியின் முதல் பொதுக்கூட்டம் கட்சித் தலைவர் சந்திரசேகர ராவ் தலைமையில் கம்மத்தில் உள்ள மைதானத்தில் இன்று இரவு பிரமாண்டமாக நடைபெற்றது.

    காங்கிரஸ் அல்லாத எதிர்க்கட்சிகளின் கூட்டணியை உருவாக்குவதில் தீவிரம் காட்டி வரும் சந்திரசேகர ராவ், அதற்கான முதல் படியாக, கட்சியின் முதல் பொதுக்கூட்டத்தை இன்று நடத்தி உள்ளார். இதில், ஆம் ஆத்மி கட்சித் தலைவரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் மற்றும் கேரள முதல்வர் பினராயி விஜயன், சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் டி.ராஜா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    தேசிய அரசியலில் சந்திரசேகர ராவ் கால் பதிப்பதை ஆதரித்து வரும் மதச்சார்பற்ற ஜனதா தளம் தலைவர் குமாரசாமி, கர்நாடகாவில் பஞ்சரத்ன ரத யாத்திரை மேற்கொண்டு வருவதால், அவர் இன்றைய பொதுக்கூட்டத்தில் பங்கேற்கவில்லை.

    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணம் நிறைவுபெறுவதற்கு சில நாட்களுக்கு முன்னதாக இந்த பொதுக்கூட்டம் நடைபெற்றிருப்பது, தேசிய அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இன்று சந்திரசேகர ராவின் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட அனைத்துக் கட்சிகளும் காங்கிரசின் யாத்திரையைத் தவிர்த்துவிட்டன.

    பாஜகவுக்கு எதிராக வலுவான அணியை அமைப்பதற்கான சந்திரசேகர ராவின் முயற்சிக்கு பலன் கிடைக்குமா? என்பது விரைவில் தெரியவரும்

    அதேசமயம், பாஜக அல்லது காங்கிரசின் ஆதரவின்றி எந்த மூன்றாம் அணியும் இதுவரை வெற்றி பெற்றதில்லை. முன்னாள் பிரதமர் வி.பி.சிங் தலைமையிலான ஆட்சிக்கு பா.ஜ.க.வின் ஆதரவு இருந்தது. அவருக்குப் பின் வந்த சந்திரசேகர், தேவகவுடா மற்றும் ஐகே குஜ்ரால் தலைமையிலான அரசுகளுக்கு காங்கிரஸ் ஆதரவு அளித்தது. 

    • திரவுபதி முர்முவுக்கு நாளுக்கு நாள் ஆதரவு பெருகிய வண்ணம் உள்ளது.
    • யஷ்வந்த் சின்கா ஓட்டு சேகரிக்க ஐதாராபாத் வரும்போது அவரை தனியாக சந்திக்க சந்திர சேகரராவ் முடிவு செய்து உள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    ஐதாராபாத்:

    ஜனாதிபதி தேர்தல் அடுத்தமாதம் (ஜூலை) 18-ந்தேதி நடக்கிறது. இதில் பாரதிய ஜனதா சார்பில் பழங்குடியினத்தை சேர்ந்த திரவுபதி முர்மு போட்டியிடுகிறார்.

    அவரை எதிர்த்து காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சி சார்பில் முன்னாள் மத்திய மந்திரி யஷ்வந்த் சின்கா போட்டியிடுகிறார். திரவுபதி முர்முவுக்கு நாளுக்கு நாள் ஆதரவு பெருகிய வண்ணம் உள்ளது. இதனால் அவர் எளிதில் வெற்றி பெறும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

    யஷ்வந்த் சின்காவுக்கு சில மாநில கட்சிகள் ஆதரவு தெரிவித்து உள்ளது.

    காங்கிரஸ் கூட்டணியில் இடம் பெறாத தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவு தெரிவிக்க போகிறது என்ற எதிர்பார்ப்பு நிலவியது.

    இது தொடர்பாக அக்கட்சியின் தலைவரும். தெலுங்கானா முதல்-மந்திரியுமான சந்திரசேகர ராவ் கட்சியினருடன் ஆலோசனை நடத்தினார்.

    பின்னர் யஷ்வந்த் சின்காவுக்கு ஆதரவு தெரிவிப்பதாக சந்திரசேகரராவ் அறிவித்து உள்ளார்.

    நாளை யஷ்வந்த்சின்கா வேட்பு மனுதாக்கல் செய்கிறார் இதில் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி எம்.பி.க்கள் கேசவராவ், நாகேஸ்வர ராவ் ஆகியோர் பங்கேற்க உள்ளனர். யஷ்வந்த் சின்கா ஓட்டு சேகரிக்க ஐதாராபாத் வரும்போது அவரை தனியாக சந்திக்க சந்திர சேகரராவ் முடிவு செய்து உள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    2014-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை, ஆண்டு பொருளாதார வளர்ச்சி என்பது 17.24 சதவீதமாக இருந்தது. இது தெலுங்கானா மாநிலத்தை நாட்டிலேயே முதல் மாநிலமாக உயர்த்தியது.
    ஐதராபாத் :

    8 ஆண்டுகளுக்கு முன்பு ஜூன் 2-ந்தேதி தெலுங்கானா மாநிலம் உருவானது. இதை அந்த மாநில அரசு கொண்டாடி வருகிறது. தெலுங்கானா மாநிலம் உருவான தினத்தை முன்னிட்டு பப்ளிக் கார்டன் பகுதியில் அந்த மாநில முதல்-மந்திரி சந்திரசேகர் ராவ், தேசியக் கொடியை ஏற்றி மக்களிடையே உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

    குறுகிய காலத்தில் தெலுங்கானா மாநிலம், மிக விரைவான, நிலையான வளர்ச்சியை அடைந்துள்ளது. கூடுதல் பாசனம், குடிநீர் கிடைப்பதோடு, மக்கள் நலன், தகவல் தொடர்பு மற்றும் தொழிற்சாலைகளின் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. அனைத்து துறைகளுமே வளர்ச்சி அடைந்துள்ளன. தெலுங்கானா தற்போது இந்தியாவின் முன்மாதிரி மாநிலமாகத் திகழ்கிறது.

    நிதி விவகாரங்களில் மிக சரியான திட்டமிடல் மூலம் மாநில அரசினால் வருவாய் ஆதாரங்களை உயர்த்த முடிந்தது. 2014-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை, ஆண்டு பொருளாதார வளர்ச்சி என்பது 17.24 சதவீதமாக இருந்தது. இது தெலுங்கானா மாநிலத்தை நாட்டிலேயே முதல் மாநிலமாக உயர்த்தியது.

    கொரோனா பெருந்தொற்று போன்ற பல்வேறு தடைகள் ஏற்பட்டாலும் கூட மாநில வளர்ச்சியில் துரித முன்னேற்றம் ஏற்பட்டது. 2014-15-ம் ஆண்டில் தெலுங்கானா உருவானபோது மாநிலத்தின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி ரூ.5 லட்சத்து 5 ஆயிரத்து 849 கோடியாக இருந்தது. 2021-22-ம் ஆண்டில் இது ரூ.11 லட்சத்து 54 ஆயிரத்து 860 கோடியாக உயர்ந்துள்ளது.

    அதுபோல 2014-15-ம் ஆண்டில் ரூ.1 லட்சத்து 24 ஆயிரத்து 104 ஆக இருந்த தனிநபர் வருமானம், 2021-22-ம் ஆண்டில் ரூ.2 லட்சத்து 78 ஆயிரத்து 833 ஆக உயர்ந்துள்ளது. அனைத்து துறைகளுக்கும் 24 மணிநேரமும் தடையற்ற தரமான மின்சாரம் மற்றும் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கும் ஒரே மாநிலம் தெலுங்கானாவாகும். மாநிலம் தொடங்கப்பட்ட போது தெலுங்கானாவில் இருந்த 7,778 மெகாவாட் என்ற நிறுவு திறன் தற்போது 17 ஆயிரத்து 305 மெகாவாட் ஆக உயர்ந்துள்ளது. அதுபோல சூரிய மின்சக்தியையும் 74 மெகாவாட்டில் இருந்து கடந்த 8 ஆண்டுகளில் 4,478 மெகாவாட் ஆக உயர்ந்துள்ளது. இது இந்த மாநிலத்தின் சாதனையாகும்.

    பகிரதா திட்டத்தை இயக்கமாக அரசு செயல்படுத்தியதை தொடர்ந்து அனைத்து வீடுகளுக்கும் இன்று பாதுகாப்பான, சுத்தமான குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. விவசாயிகளின் கடனை குறைப்பதற்காக திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. மக்களிடையே முன்பிருந்த பாகுபாட்டை நீக்கும் வகையில் தலித் மக்களின் மேம்பாட்டை நோக்கிய சமூக சீர்திருத்தத் திட்டமான தலித் பந்து திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

    அவர்களுக்கு அதிகாரங்களை அளிப்பதோடு தன்னிறைவை பெறச் செய்து பொருளாதாரத்தில் அவர்களை வலுப்படுத்தினால், அவர்களை பாகுபாட்டில் இருந்து விடுதலை செய்ய முடியும் என்பது அரசின் நோக்கமாக உள்ளது. ஐதராபாத் நகரின் 4 திசைகளிலும் 4 தெலுங்கானா மருத்துவ அறிவியல் நிறுவனத்தின் (டைம்ஸ்) பல்நோக்கு நவீன சிறப்பு ஆஸ்பத்திரிகள் அமைக்கப்பட்டு ஐதராபாத் மக்களுக்கு நவீன மருத்துவ வசதிகள் செய்து தரப்படும்.

    கடந்த 8 ஆண்டுகளில் 1.33 லட்சம் அரசுப் பணியிடங்கள் நிரப்பப்பட்டன. தெலுங்கானா உருவான பிறகு ஐதராபாத் நகரத்தின் மதிப்பு பன்மடங்கு உயர்ந்துள்ளது. கடந்த 8 ஆண்டுகளில் ரூ.2.32 லட்சம் கோடி முதலீட்டில் தொழில்கள் தொடங்கப்பட்டு 16.49 லட்சம் வேலை வாய்ப்புகள் கிடைத்துள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார்.
    தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் திருப்பதியில் இன்று காலை வி.ஐ.பி. பிரேக் தரிசன நேரத்தில் சாமி தரிசனம் செய்தார்.
    திருமலை:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் மற்றும் குடும்பத்தினர் ஐதராபாத் பேகும்பேட்டை விமான நிலையத்தில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்டு நேற்று மாலை ரேணிகுண்டா வந்தார். பின்னர் அங்கிருந்து காரில் திருமலைக்கு வந்தார்.

    திருமலைக்கு வந்த சந்திரசேகரராவை, திருமலை- திருப்பதி தேவஸ்தான முதன்மை செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால், இணை அதிகாரி சீனிவாசராஜூ, தேவஸ்தான முதன்மை பாதுகாப்பு அதிகாரி கோபிநாத்ஜாட்டி ஆகியோர் பூங்கொத்து வழங்கி வரவேற்றனர்.


    சந்திரசேகரராவும், குடும்பத்தினரும் திருமலையில் உள்ள கிருஷ்ணா விடுதியில் இரவு தங்கி ஓய்வெடுத்தனர்.

    இன்று காலை வி.ஐ.பி. பிரேக் தரிசன நேரத்தில் சாமி தரிசனம் செய்தார்.

    திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் அவருக்கு லட்டு, தீர்த்த பிரசாதங்களை வழங்கினர்.
    என்னை அரசியலை விட்டு நீக்க சொல்வதற்கு யாருக்கும் உரிமை இல்லை என்று மு.க.ஸ்டாலின் பேச்சுக்கு தமிழிசை சவுந்தரராஜன் பதில் அளித்துள்ளார்.
    கோவில்பட்டி:

    கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவிலில் நேற்று மாலை தமிழக பா.ஜ.க. தலைவரும், தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி வேட்பாளருமான தமிழிசை சவுந்தரராஜன் சாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    எனது அரசியல் வாழ்க்கை என்றுமே நேர்மையானது தான். தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மகன் அதிக நாட்கள் அரசியலில் இருக்க வேண்டும் என்பது தான் எங்களது ஆசை. அதே போல் என்னை அரசியலை விட்டு நீக்க சொல்வதற்கு யாருக்கும் உரிமை இல்லை. அதேபோல் பிரதமர் நரேந்திர மோடியை பற்றி பேசுவதற்கு ஸ்டாலினுக்கு உரிமை இல்லை.

    நான்தான் பாரதிய ஜனதாவுடன் தி.மு.க.வினர் பேசிக் கொண்டிருக்கின்றனர் என கூறினேன். இல்லையென்று அவர்கள் நிரூபிக்கட்டும். அவர் சார்பாக யாராவது பேசி இருக்கலாம். அவர் சார்பாக யாரும் பேசவில்லை என நிரூபிக்கட்டும். அதைப்பற்றி எனக்கு கவலை இல்லை.


    சந்திரசேகரராவை சந்தித்த பின்னர் ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசவில்லை. ராகுல்காந்தியை தான் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்துவோம் என அவர் கூறவில்லை. இன்று சந்திரபாபு நாயுடுவை சந்தித்துவிட்டு, சந்திரசேகரராவை சந்தித்தது ஒன்றுமில்லை என்று சொல்வதற்காக போனோம் என துரைமுருகன் கூறுகிறார். அவர்கள் நிறம் மாறிக் கொண்டிருக்கிறார்கள். சந்திரசேகர ராவை பார்க்கிறார்கள்.

    சந்திரபாபு நாயுடுவிடம் தூது விடுகிறார்கள். அதே போல் பா.ஜ.க.வுக்கும் தூதுவிட்டு இருக்கிறார்கள். ஸ்டாலின் சொல்வதற்காக உடனடியாக நிரூபிக்க வேண்டும் என்றில்லை. எனக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் தான் இதை நான் கூறுகிறேன். உண்மைக்கு புறம்பான கருத்துக்களை சொல்ல வேண்டும் என்ற பாரம்பரியத்தில் நான் வரவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.
    ×