என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Telengana assembly election"

    • தெலுங்கானா சட்டமன்ற தேர்தலில் போட்டியிட தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த 60 பேர் விருப்பம் தெரிவித்தனர்.
    • தேர்தலில் போட்டியிடாமல் கட்சி பின்வாங்கியது ஏன் என தேர்வு செய்த வேட்பாளர்கள் கேள்வி கேட்கின்றனர்.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநில தெலுங்கு தேசம் கட்சி தலைவர் கசானி ஞானேஸ்வர். இவர் தெலுங்கு தேசம் கட்சியிலிருந்து தனது பதவியை ராஜினாமா செய்தார்.

    பின்னர் அவர் கூறியதாவது:-

    தெலுங்கானா சட்டமன்ற தேர்தலில் போட்டியிட தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த 60 பேர் விருப்பம் தெரிவித்தனர்.

    60 வேட்பாளர்களின் பட்டியலை தயாரித்து கட்சி தலைமைக்கு அனுப்பி வைத்தேன்.

    இது சம்பந்தமாக தெலுங்கு தேசம் கட்சி பொதுச் செயலாளர் லோகேஷ்க்கு 20 முதல் 30 தடவை போன் செய்தேன்.

    ஆனால் அவர் போனை எடுத்து பதில் அளிக்கவில்லை. கட்சி வேட்பாளர்கள் தங்களது சொந்த பணத்தை செலவழித்து போட்டியிட ஆர்வம் காட்டினர்.

    ஆனால் தெலுங்கானாவில் கட்சி போட்டியிட வில்லை என அறிவித்துள்ளனர். போட்டியிடாததற்கான உறுதியான காரணத்தை தலைமை எதையும் தெரிவிக்கவில்லை.

    3 நாட்களுக்கு முன்பு சிறையில் சந்திரபாபு நாயுடுவை சந்தித்தேன். அப்போது தேர்தலில் போட்டியிடாததற்கு என்ன காரணம். என்னை ஏன் கட்சியில் சேர ஊக்கப்படுத்தினீர்கள்.

    தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்ற முடிவை ஏன் எடுத்தீர்கள் என கேட்டேன் அதற்கு அவர் எந்த பதிலையும் அளிக்கவில்லை.

    லோகேஷிடம் கேட்டதற்கு அவர் ஒரு குழந்தையை போல் பதில் அளிக்கிறார். தெலுங்கானா அரசியல் குறித்து அவருக்கு எதுவும் தெரியவில்லை. தேர்தலில் போட்டியிடாமல் கட்சி பின்வாங்கியது ஏன் என தேர்வு செய்த வேட்பாளர்கள் கேள்வி கேட்கின்றனர்.

    இதனால் விரக்தி அடைந்த நான் எனது பதவியை ராஜினாமா செய்தேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அதானியின் வங்கிக்கணக்கில் பல லட்சங்கள் குவிந்துள்ளன.
    • சந்திரசேகரராவிடமிருந்து ஆட்சி அதிகாரத்தை பறித்து மக்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதே எங்களுடைய கனவு.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநில சட்டமன்ற தேர்தலையொட்டி ராகுல் காந்தி தீவிர பிரசாரம் செய்து வருகிறார். நேற்று தெலுங்கானா மாநிலத்தில் நடந்த பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியதாவது:-

    நான் நரேந்திர மோடி அல்ல. நான் ஒரு வாக்குறுதியை அளிக்கும்போது அதை நிறைவேற்ற முயற்சி செய்வேன்.

    பொதுமக்கள் ஒவ்வொருவரின் வங்கி கணக்குகளிலும் ரூ.15 லட்சம் வெளிநாட்டில் மீட்கப்பட்ட கருப்பு பணத்தில் இருந்து டெபாசிட் செய்வதாக மோடி உறுதி அளித்தார்.

    ஆனால் இதுவரை உங்கள் கணக்குகளுக்கு ஒரு பைசா கூட மாற்றப்படவில்லை.

    ஆனால் அதானியின் வங்கிக் கணக்கில் பல லட்சங்கள் குவிந்துள்ளன. மோடி போல் இல்லாமல் நாங்கள் எங்கள் வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம்.

    தெலுங்கானா மக்கள் உடனான உறவு எனக்கு மட்டுமல்ல எனது தாத்தா நேரு, பாட்டி இந்திரா காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோருக்கும் உள்ளது.

    நாங்கள் இங்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற உறுதி கொண்டு உள்ளோம்.

    சந்திரசேகரராவ் கொள்ளை அடித்த பணம் பொதுமக்கள் வங்கி கணக்கில் மீண்டும் போடப்படும். சந்திரசேகர ராவ் மற்றும் அவரது குடும்பத்தினர் தெலுங்கானாவை தங்களின் திருட்டு தளமாக கருதுகின்றனர்.

    சந்திரசேகரராவிடமிருந்து ஆட்சி அதிகாரத்தை பறித்து மக்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதே எங்களுடைய கனவு. தெலுங்கானா மாநிலத்தை ஒரு மன்னனும் அவனது குடும்பமும் தங்களின் ராஜ்ஜியம் போல ஆட்சி செய்து கொண்டிருக்கிறார்கள்.

    காங்கிரஸ் கட்சி மக்களுடைய அனைத்து கொள்கைகளையும் வேண்டிய வசதிகளையும் நிறைவேற்றும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • மிசோரம், சத்தீஸ்கா், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா ஆகிய 5 மாநிலங்களில் இம்மாதம் சட்டசபை தேர்தல்கள் நடைபெறவுள்ளன.
    • 90 தொகுதிகளைக் கொண்ட சத்தீஸ்கரில் மட்டும் இரண்டு கட்டங்களாக தோ்தல் நடைபெறுகிறது.

    ஐதராபாத்:

    119 தொகுதிகளைக் கொண்ட தெலுங்கானாவில் வருகிற 30-ந்தேதி ஒரே கட்டமாக சட்டசபை தோ்தல் நடைபெற உள்ளது.

    தற்போது வேட்புமனு தாக்கல் தொடங்கியிருக்கும் நிலையில், வருகிற 10-ந் தேதி வரை வேலை நாட்களில் காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மனுக்களைத் தாக்கல் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நவம்பா் 13-ந் தேதி நடைபெறும். மனுக்களைத் திரும்பப் பெற கடைசி நாள் நவம்பா் 15-ந் தேதி.

    முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் தலைமையில் பாரத ராஷ்டிர சமிதி ஆட்சியில் உள்ள தெலுங்கானாவில் மொத்த வாக்காளா்களின் எண்ணிக்கை 3.17 கோடி. இதில் பெண்கள் 1.58 கோடி போ்.

    மிசோரம், சத்தீஸ்கா், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா ஆகிய 5 மாநிலங்களில் இம்மாதம் சட்டசபை தேர்தல்கள் நடைபெறவுள்ளன.

    எஞ்சிய 4 மாநிலங்களில் ஏற்கனவே தோ்தல் நடைமுறைகள் தொடங்கப்பட்ட நிலையில், தெலுங்கானாவிலும் நடைமுறைகள் தொடங்கி இருப்பதால் 5 மாநில தோ்தல் களம் விறுவிறுப்படைந்துள்ளது.

    90 தொகுதிகளைக் கொண்ட சத்தீஸ்கரில் மட்டும் இரண்டு கட்டங்களாக தோ்தல் நடைபெறுகிறது.

    மிசோரமின் 40 தொகுதிகளுக்கும், சத்தீஸ்கரில் முதல்கட்டமாக 20 தொகுதிகளுக்கும் வருகிற 7-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

    மத்திய பிரதேசத்தின் 230 தொகுதிகள் மற்றும் சத்தீஸ்கரில் 2-வது கட்டமாக 70 தொகுதிகளில் 17-ந்தேதியும், ராஜஸ்தானின் 200 தொகுதிகளுக்கு 25-ந்தேதியும், தெலுங்கானாவில் 30-ந்தேதியும் தோ்தல் நடைபெறவுள்ளது. 5 மாநிலங்களிலும் டிசம்பா் 3-ந்தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

    அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் பாராளுமன்ற தோ்தலுக்கு முன்னோட்டமாக இத்தோ்தல்கள் கருதப்படுகின்றன.

    மிசோரமில் ஆளும் மிசோ தேசிய முன்னணி, பிராந்திய கட்சியான ஜோரம் மக்கள் இயக்கம், காங்கிரஸ், பா.ஜ.க. என பலமுனைப் போட்டி ஏற்பட்டுள்ளது.

    சத்தீஸ்கா், மத்திய பிரதேசம், ராஜஸ்தானில் பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    தெலுங்கானாவில் ஆளும் பிஆா்எஸ், எதிர்க்கட்சிகளான காங்கிரஸ், பா.ஜ.க. என மும்முனைப் போட்டி நிலவுகிறது.

    5 மாநிலங்களிலும் மொத்த வாக்காளா்களின் எண்ணிக்கை சுமாா் 16 கோடி. இதில் ஆண்கள் 8.2 கோடி போ், பெண்கள் 7.8 கோடி போ். இவா்களில் 60.2 லட்சம் போ் முதல்முறை வாக்காளா்கள்.

    மொத்தம் 1.77 லட்சம் வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்படவுள்ளன. இவற்றில் சுமாா் ஒரு லட்சம் மையங்களில் இணைய ஒளிபரப்பு வசதி மேற்கொள்ளப்படும். 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குப்பதிவு மையங்கள் முழுமையாக பெண்களால் நிா்வகிக்கப்பட உள்ளன.

    • தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார்.
    • கமரெட்டி தொகுதியில் மாநில தலைவரை அவருக்கு எதிராக நிறுத்தியுள்ளது காங்கிரஸ்.

    119 தொகுதிகளை கொண்ட தெலுங்கானாவில் வருகிற 30-ந்தேதி சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. நாளை வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும்.

    அம்மாநில முதல்வரும் பாரதிய ராஷ்ரிய சமிதி கட்சி தலைவருமான சந்திரசேகராவ் கமரெட்டி மற்றும் கஜ்வெல் ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார். இந்த நிலையில், இன்று கஜ்வெல் தொகுதியில் போட்டியிடுவதற்கு வேட்புமனு தாக்கல் செய்தார்.

    13-ந்தேதி வேட்புமனு மீதான பரிசீலனை நடைபெறுகிறது. 15-ந்தேதி வேட்புமனு திரும்பப்பெற கடைசி நாளாகும். அன்றைய தினம் ஒவ்வொரு தொகுதிகளிலும் போட்டியிடுபவர்களின் பெயர்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும்.

    வேட்புமனு தாக்கல் செய்த கடைசி நாளான நாளை கமரெட்டியில் வேட்புமனு தாக்கல் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கமரெட்டில் காங்கிரஸ் சார்பில், அக்கட்சியின் மாநில தலைவர் ரேவந்த் ரெட்டி நிறுத்தப்பட்டுள்ளார்.

    • 119 தொகுதிகளை கொண்ட தெலுங்கானாவில் 30-ந்தேதி வாக்குப்பதிவு.
    • சந்திரசேகர ராவ் கட்சி கடந்த மாதம் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறது.

    119 தொகுதிகளை கொண்ட தெலுங்கானாவில் வருகிற 30-ந்தேதி சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. வேட்புமனு தாக்கல் முடிவடைந்த நிலையில் காங்கிரஸ், பாரதிய ராஷ்டிரிய சமிதி, பா.ஜனதா கட்சிகள் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன.

    இந்த நிலையில் வருகிற 17-ந்தேதி (வெள்ளிக்கிழமை) பா.ஜனதா தலைவரும், மத்திய உள்துறை மந்திரியுமான அமித் ஷா தெலுங்கானா மாநிலத்தில் சுற்றுப் பயணம் செய்து பேரணியில் கலந்து கொள்கிறார். அப்போது தேர்தல் அறிக்கையை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    நல்கொண்டா, வாரங்கல், கட்வால், ராஜேந்திர நகர் ஆகிய தொகுதிகளில் நடைபெறும் பேரணிகளில் கலந்து கொண்டு உரையாற்றுகிறார். இதற்கு முன்னதாக சோமாஜிபுடாவில் உள்ள பா.ஜனதாவின் மீடியா மையத்தில் வைத்து தேர்தல் அறிக்கையை வெளியிடுகிறார்.

    சந்திரசேகர ராவ் கட்சி கடந்த மாதம் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு பிரசாரத்தை தொடங்கியது. அந்த கட்சியின் தேர்தல் அறிக்கையில் விவசாயிகள், பெண்கள் உள்ளிட்டோர் பயனடையும் வகையில் பல்வேறு திட்டங்கள் இடம் பிடித்துள்ளன.

    காங்கிரஸ் ஆறு வாக்குறுதிகளை முன்வைத்துள்ளது.

    • வருகிற 30-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது.
    • பிஆர்எஸ்- காங்கிரஸ் இடையே கடுமையான போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    தெலுங்கானா மாநிலத்தில் வருகிற 30-ந்தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது. பி.ஆர்.எஸ்., காங்கிரஸ், பா.ஜனதா ஆகிய மூன்று கட்சிகளுக்கு இடையே நேரடி போட்டி நிலவி வருகிறது.

    இந்த நிலையில் தெலுங்கானாவில் காங்கிரசுக்கு ஆதரவு தெரிவித்து திமுக தலைமைக் கழகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

    அந்த அறிவிப்பில் "வருகிற 2023 நவம்பர் 30 அன்று தெலுங்கானா மாநிலத்தில் நடைபெற உள்ள சட்டப்பேரவை பொதுத் தேர்தலில், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை வெற்றிபெறச் செய்ய வேண்டுமெனவும், தெலுங்கானா மாநிலக் கழக அமைப்பு உள்ளிட்ட அனைத்து அமைப்புகளில் உள்ள நிர்வாகிகள் மற்றும் தோழர்கள் தேர்தல் பணிக்குழு அமைத்து, காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து தேர்தல் பணியாற்றி, அக்கட்சி வேட்பாளர்களை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்ய வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்." எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கர்நாடகா மாடல் என மற்ற மாநிலங்களில் கூறி வரும் காங்கிரஸ், உத்தரவாத திட்டங்களை நிறைவேற்றுவதில் தோல்வி.
    • தெலுங்கானா மக்களை ஏமாற்றுவதற்கான 6 உத்தரவாத திட்டங்களை காங்கிரஸ் கட்சி அதன் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

    தெலுங்கானாவில் வருகிற 30-ந்தேதி தேர்தல் நடைபெறுகிறது. சந்திரசேகர ராவ் தொடர்ந்து 3-வது முறையாக ஆட்சியை பிடிக்க வியூகம் வகுத்துள்ளார். அவரிடம் இருந்து ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸ் நினைக்கிறது. இதற்கிடையே தெலுங்கானாவில் காலூன்ற பா.ஜனதா விரும்புகிறது.

    மூன்று கட்சிகளின் முக்கிய தலைவர்கள் தெலுங்கானாவில் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

    கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியை பிடித்ததில் இருந்து, கர்நாடக மாடல் என மற்ற மாநிலங்களிலும் பிரசாரம் செய்து வருகிறது.

    இந்த நிலையில் கர்நாடக மாநில முன்னாள் முதல்வரும், பா.ஜனதா தலைவரும்மான எடியூரப்பா தெலுங்கானாவில் பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டார்.

    அப்போது எடியூரப்பா கூறியதாவது:-

    கர்நாடகாவில் நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு, ஐந்து முக்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம் எனத் தெரிவித்த காங்கிரஸ், அதை நிறைவேற்றாமல் கர்நாடக மக்களை ஏமாற்றியுள்ளது.

    கர்நாடகா மாடல் என மற்ற மாநிலங்களில் கூறி வரும் காங்கிரஸ், உத்தரவாத திட்டங்களை நிறைவேற்றுவதில் தோல்வியடைந்துள்ளது. இதன் மூலம் கர்நாடகா மக்களை ஏமாற்றியுள்ளது.

    தெலுங்கானா மக்களை ஏமாற்றுவதற்கான 6 உத்தரவாத திட்டங்களை காங்கிரஸ் கட்சி அதன் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் பொய்கள் மற்றும் வெற்று வாக்குறுதிகளால் ஏமாற வேண்டாம் என தெலுங்கானா மக்களை கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

    • தெலுங்கானா சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு 30-ந்தேதி நடைபெற இருக்கிறது.
    • தொடர்ந்து 3-வது முறையாக ஆட்சியை பிடிக்க பிஆர்எஸ் கட்சி தீவரமாக தேர்தல் வேலை செய்து வருகிறது.

    தெலுங்கானாவில் வருகிற 30-ந்தேதி சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. ராஜஸ்தான் சட்டசபை தேர்தலுக்கான பிரசாரம் நேற்றுடன் முடிவடைந்தது. இதனால் தேசிய தலைவர்கள் தெலுங்கானாவில் சூறாவளி பிரசாரம் செய்ய இருக்கிறார்கள்.

    இந்த நிலையில் சந்திரசேகர ராவின் மகளும், அம்மாநில எம்.எல்.சி.யுமான கே. கவிதா கூறியதாவது:-

    கடந்த 10 ஆண்டுகளாக அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சி எங்களுடன் நட்பாக இருக்கிறது. நாங்கள் ஒருபோதும் கூட்டணி அமைத்தது கிடையாது. அவர்களுடன் நட்பு முறையில் அணுகுகிறோம்.

    பா.ஜனதா மற்றும் காங்கிரஸ் கட்சிகளை பொறுத்தவரை, மற்ற அரசியல் கட்சி அதிகாரத்திற்கு வருவதை அவர்கள் விரும்புவதில்லை. பி.ஆர்.எஸ் கட்சியின் வளர்ச்சி நாடு முழுவதும் பெருகி வருகிறது. தெலுங்கானா மாநிலம் காரணமாக நாட்டின் ஒட்டுமொத்த அரசியல் முறையும் விவசாயிகளை பற்றி சிந்திக்க தொடங்கியது. எங்கள் வளர்ச்சியை இரு கட்சிகளாலும் ஜீரணிக்க முடியவில்லை. நாங்கள் யாருடைய பி டீம் அல்ல. நாங்கள் தெலுங்கானா மக்களுடைய அணி.

    • காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து பிரியங்கா காந்தி 2 நாள்களாக பிரசாரம் செய்து வருகிறார்
    • பிரதமர் மோடி, மத்திய மந்திரிகள் உள்ளிட்ட தேசிய தலைவர்கள் வருகையால் தெலுங்கானா முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலத்தில் உள்ள 119 சட்டமன்ற தொகுதிகளுக்கு வருகிற 30-ந் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது.

    தேர்தல் பிரசாரம் வருகிற 28-ந்தேதி மாலை 5 மணியுடன் நிறைவு பெறுகிறது. இந்நிலையில் நேற்று முதல் தொடர்ந்து 3 நாட்களுக்கு தேசிய தலைவர்கள் தெலுங்கானாவில் தொடர் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    இதில் நேற்று மாலை பா.ஜ.க. வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிப்பதற்காக கட்சியின் மூத்த தலைவரும் மத்திய உள்துறை மந்திரியுமான அமித்ஷா பிரசாரம் செய்தார். ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங் இன்று பிரசாரம் செய்கிறார்.

     இதே போன்று காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து பிரியங்கா காந்தி 2 நாளாக பிரசாரம் செய்து வருகிறார். இன்று மாலை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி பிரசாரம் செய்கிறார்.

    இன்று மாலை முதல் அடுத்த 3 நாட்களுக்கு பிரதமர் மோடி தெலுங்கானாவுக்கு வந்து பிரசாரம் செய்கிறார். குறிப்பாக பொதுக்கூட்டம், ரோடுஷோ ஆகியவற்றில் அவர் பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பா.ஜ.க., காங்கிரஸ் கட்சியினர் போட்டி பிரசாரம் செய்து வருகின்றனர்.

    பிரதமர் மோடி, மத்திய மந்திரிகள் உள்ளிட்ட தேசிய தலைவர்கள் வருகையால் தெலுங்கானா முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

    இதனிடையே தெலுங்கானாவில் ஆளும் பாரத் ராஷ்டிரிய சமிதி தலைவர் சந்திரசேகரராவ், அவரது மகன் மற்றும் ஜனசேனா கட்சி தலைவர் பவன் கல்யாண் உள்ளிட்ட அனைத்து கட்சிகளை சேர்ந்த மாநில, தேசிய தலைவர்கள் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    தேர்தலுக்கு இன்னும் 5 நாட்களே உள்ளதால் தெலுங்கானா முழுவதும் தேசிய தலைவர்களின் படையெடுப்பால் களை கட்டியுள்ளது.

    • பா.ஜ.க.வாலும், மோடியாலும்தான் ராமர் கோவில் என்ற கனவு நிறைவேறி இருக்கிறது.
    • மத்தியில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்ததும், பல நகரங்களின் முந்தைய பெயர்கள் மீண்டும் சூட்டப்பட்டது.

    திருப்பதி:

    தெலுங்கானாவில் பா.ஜ.க.வைச் சேர்ந்த அசாம் மாநில முதல் மந்திரி ஹிமந்த பிஸ்வா சர்மா பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:

    தெலுங்கானாவில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்து 30 நிமிடங்களில் ஐதராபாத்தின் பெயர் பாக்யாநகர் என மாற்றப்படும். இப்படி மாற்றினால் யாரும் எதுவும் செய்துவிட முடியாது.

    பாலஸ்தீனத்தை ஆதரிக்கிற இவர்கள் எல்லாம் (ஒவைசி கட்சி) அங்கேயே போய்விடட்டும். அவர்களுக்காக சண்டையிடட்டும். 

    ராமர் கோவில் கட்டப்பட்டு விடும் என்று யாரேனும் நினைத்தது உண்டா? ஜவகர்லால் நேருவுக்கோ, இந்திராவுக்கோ அந்தத் துணிச்சல் இருந்ததா?

    பா.ஜ.க.வாலும், மோடியாலும்தான் இப்போது ராமர் கோவில் என்ற கனவு நிறைவேறி இருக்கிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    மத்தியில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்ததும், பல நகரங்களின் முந்தைய பெயர்கள் மீண்டும் சூட்டப்பட்டது. அது தெலுங்கானா மாநிலத்திலும் தொடர்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த வாக்குறுதி எல்லோரையும் அதிர வைத்துள்ளது.

    • தெலுங்கானாவில் ஏழு வாக்குறுதிகளை அளித்து காங்கிரஸ் தேர்தலை சந்திக்கிறது.
    • கர்நாடகாவில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

    தெலுங்கானாவில் வருகிற 30-ந்தேதி சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. தொடர்ந்து 3-வது முறையாக ஆட்சியை பிடிக்க பிஆர்எஸ் (சந்திரசேகர ராவ்) தீவிர பிரசாரம் செய்து வருகிறது. அதேவேளையில் காங்கிரஸ் முதல் முறையாக ஆட்சியை பிடிக்க வாக்குறுதிகளை அள்ளி வீசியுள்ளது.

    கர்நாடகா மாநிலத்தில் பா.ஜனதாவை வீழ்த்த முக்கியமான ஐந்து வாக்குறுதிகளை அளித்தது. மக்களும் காங்கிரஸ் கட்சியை ஆட்சியில் அமர்த்தினர்.

    தற்போது காங்கிரஸ் கட்சி "கர்நாடகா மாடல்" என மற்ற மாநில தேர்தலின்போது பயன்படுத்தி வருகிறது. அந்த வகையில்தான் தெலுங்கானாவில் முக்கியமான ஏழு வாக்குறுதிகளை அளித்துள்ளது.

    ஆனால் சந்திரசேகர ராவின் பாரதிய ராஷ்டிரிய சமிதி, கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி தேர்தலின்போது அளித்த முக்கியமான வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. காங்கிரஸ் பொய் சொல்கிறது என பிரசாரம் செய்து வருகிறது. அதேபோல்தான் பா.ஜனதாவும் பிரசாரம் செய்து வருகிறது.

    நேற்று காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து கர்நாடகா மாநில முதல்வர் சித்தராமையா தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.

    அப்போது சித்தராமையா கூறும்போது "செய்தித்தாள் மற்றும் தொலைக்காட்சிகளில், கர்நாடகா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி அளித்த முக்கிய ஐந்து வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை எனச் சொல்வதை நான் பார்த்தேன். 

    பா.ஜனதா தலைவர்கள், பிஆர்எஸ் தலைவர் மற்றும் மற்ற தலைவர்களும் சொல்கிறார்கள். இது உண்மை அல்ல. நாங்கள் மே மாதம் ஆட்சிக்க வந்தோம். நாங்கள் கேபினட் அறைக்குள் சென்றதும், ஐந்து வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான முடிவை எடுத்தோம். அதே நாள் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதற்கு சற்று நேரம் எடுத்துக் கொண்டது. அவ்வளவுதான்" என்றார்.

    119 தொகுதிகளை கொண்ட தெலுங்கானாவில் பிஆர்எஸ்- காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. சந்திரகேசர ராவ் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார். ஒரு தொகுதியில் காங்கிரஸ் வலுவான வேட்பாளரை நிறுத்தியுள்ளது.

    • விமான நிலையம் வந்த பிரதமர் மோடிக்கு ஆந்திர முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி ஏழுமலையான் சிலையை பரிசாக வழங்கி வரவேற்றார்.
    • பிரதமர் மோடி பதவி ஏற்ற பிறகு 4-வது முறையாக திருப்பதி வந்து ஏழுமலையானை தரிசனம் செய்தார்.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி விமானம் மூலம் நேற்று இரவு 7.50 மணிக்கு ரேணிகுண்டா வந்தடைந்தார்.

    விமான நிலையம் வந்த அவருக்கு ஆந்திர முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி ஏழுமலையான் சிலையை பரிசாக வழங்கி வரவேற்றார்.

    சாலை மார்க்கமாக திருப்பதி மலைக்கு வந்த பிரதமர் மோடிக்கு வழி நெடுகிலும் ஏராளமானோர் திரண்டு வந்து வரவேற்றனர். நேற்று இரவு திருமலையில் உள்ள ரச்சனா சிறப்பு விருந்தினர் மாளிகையில் பிரதமர் மோடி தங்கினார்.

    இன்று காலை 8 மணிக்கு ஏழுமலையான் கோவிலில் பிரதமர் மோடி வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தில் சாமி தரிசனம் செய்தார். நெற்றியில் பெரிய நாமமிட்டு பிரதமர் மோடி கோவிலுக்கு வந்திருந்தார்.

    சுமார் 45 நிமிடங்கள் கோவிலில் இருந்தார். பிரதமர் மோடிக்கு திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் கருணாகர ரெட்டி, முதன்மை செயல் அலுவலர் தர்மா ரெட்டி உள்ளிட்டோர் ஏழுமலையான் படம் மற்றும் பிரசாதங்களை வழங்கி கவுரவித்தனர். 

    தரிசனம் முடிந்து 9.30 மணிக்கு வெளியே வந்தார். அவரை பார்த்து பக்தர்கள் கோஷம் எழுப்பினர்.

    இதனை தொடர்ந்து புறப்பட்டு ரேணிகுண்டா விமான நிலையம் சென்றார். அங்கிருந்து விமானம் மூலம் ஹக்கீம் பேட்டை விமான நிலையத்திற்கு சென்றார்.

    திருப்பதி கோவிலில் வழிபாடு செய்த புகைப்படங்களை பிரதமர் மோடி எக்ஸ் சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

    அதில் பிரதமர் மோடி 140 கோடி இந்தியர்களின் நல் ஆரோக்கியம், நலன் மற்றும் வளமான வாழ்வுக்காக திருப்பதி வெங்கடேஸ்வர சுவாமி கோவிலில் பிரார்த்தனை செய்தேன் என தெரிவித்துள்ளார்.

    ×