என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிஆர்எஸ்"

    • ஆற்று நீர் விவகாரத்தில் தெலுங்கானாவிற்கு அநீதி இழைத்ததாக கேசிஆர் மீது ரேவந்த் ரெட்டி குற்றச்சாட்டு.
    • தெலுங்கானாவிற்கு அநீதி இழைத்த அவரை தூக்கிலிட வேண்டும் என ரேவந்த் ரெட்டி கூறியிருந்தார்.

    ஆற்று நீர் விவகாரத்தில் தெலுங்கானா மாநிலத்திற்கு அநீதி இழைத்ததாக பிஆர்எஸ் தலைவர் கே. சந்திரசேக ராவ் மற்றும் அவரது மருமகன் ஹரிஷ் ராவ் ஆகியோரை தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி கடுமையாக விமர்சித்திருந்தார். மேலும், அநீதி இழைத்த இருவரையும் தூக்கில் போட தகுதியானவர்கள் எனக் கூறியிருந்தார்.

    இந்த நிலையில் ராகுல் காந்தியைத்தான் தூக்கிலிட வேண்டும் என பிஆர்எஸ் கட்சியின் செயல் தலைவர் ராம ராவ் பதிலடி கொடுத்துள்ளார்.

    இது தொடர்பாக ராம ராவ் கூறுகையில் "உண்மையில் யாரை தூக்கிலிட வேண்டும். ராகுல் காந்தி வாரங்கலுக்கு வந்தார். அவர்கள் (காங்கிரஸ் தலைவர்கள்) விவசாயிகளை சந்தித்து அவர்களுடன் ஆலோசனை நடத்தினர். ரைத்து பாண்டு (Rythu Bandhu) கீழ் கேசிஆர் 10 ஆயிரம் ரூபாய் கொடுத்துக் கொண்டிருக்கிறார். நாங்கள் 15 ஆயிரம் ரூபாய் கொடுப்போம் என்றார்கள். அவர்கள் கொடுத்தார்களா?. அவர்கள் இரண்டு பயிர்களுக்கு கொடுக்கவில்லை. தற்போது அவர்கள் 15 ஆயிரத்திற்குப் பதிலாக 12 ஆயிரம் ரூபாய் கொடுத்துள்ளனர்.

    அனைத்துப் பயிர்களுக்கும் ரூ.500 போனஸ் வழங்குவது, குத்தகை விவசாயிகளுக்கு ரைத்து பாண்டு திட்டத்தை விரிவுபடுத்துவது மற்றும் விவசாயத் தொழிலாளர்களுக்கு நிதி உதவி வழங்குவது உள்ளிட்ட மற்ற வாக்குறுதிகள் செயல்படுத்தப்படுகிறதா?.

    அப்படியானால், யாரைத் தூக்கிலிட வேண்டும்? ரேவந்த் ரெட்டியை அல்ல. அவரை நம் மீது திணித்த ராகுல் காந்தியைத்தான் தூக்கிலிட வேண்டும். வாரங்கலில் வாக்குறுதிகளை அளித்துவிட்டு, ராகுல் காந்தி 70 லட்சம் விவசாயிகளை ஏமாற்றிவிட்டார். அவரை ஒரு திறந்தவெளி சந்தையில் தூக்கிலிட வேண்டும்.

    இவ்வாறு ராம ராவ் பதிலடி கொடுத்துள்ளார்.

    • கட்சிக்குள் தனது கருத்துச் சுதந்திரம் பறிக்கப்படுவதாக அவர் குற்றம் சாட்டினார்.
    • தந்தையை சுற்றி தீயசக்திகள் இருப்பதாக கவிதா கூறியிருந்தார்.

    தெலுங்கானா முன்னாள் முதல்வர் கே.சந்திரசேகர் ராவின் மகளும், பிஆர்எஸ் கட்சியின் முக்கியத் தலைவருமான கவிதா அக்கட்சியிலிருந்து விலகி புதிய அரசியல் கட்சியைத் தொடங்கப் போவதாக அறிவித்துள்ளார்.

    கேசிஆரின் மகனான கே.டி. ராமராவ் கட்சியில் அதிக அதிகாரத்துடன் வலம் வந்ததும், மகள் கவிதா ஓரங்கட்டப்பட்டதும் நீண்டகாலமாகப் பேசப்பட்டு வந்தது.

    கவிதா, அண்ணன் ராமராவை மறைமுகமாக பலமுறை விமர்சித்து வந்தார். தந்தையை சுற்றி தீயசக்திகள் இருப்பதாக கவிதா கூறியிருந்தார்.

    கவிதாவின் நடவடிக்கைகளுக்காக கேசிஆர் கடந்த ஆண்டு செப்டம்பரில் அவரை கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்திருந்தார். அதற்கு அடுத்தநாளே கட்சியில் இருந்து விலகுவதாக கவிதா அறிவித்தார்.

    இந்நிலையில் புதிய அரசியல் கட்சியை தொடங்கும் முடிவை கவிதா அறிவித்துள்ளார்.

    நேற்று தெலுங்கானா சட்ட மேலவையில் கவிதா பேசும்போது, "சுயமரியாதைக்காகவே எனது தந்தையின் கட்சியை விட்டு வெளியேறினேன்" என்று கண்கலங்கியபடி தெரிவித்தார்.

    தனது பங்களிப்புகள் இருந்தபோதிலும், கட்சிக்குள் தனது கருத்துச் சுதந்திரம் பறிக்கப்படுவதாக அவர் குற்றம் சாட்டினார். மேலும் தனது முடிவுக்கு காரணம் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கூறுவதுபோல் சொத்து தகராறு காரணம் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

    மேலும், தெலுங்கானா பெண்களுக்காகவும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும் தொடர்ந்து உழைக்கப்போவதாகவும் அவர் கூறினார்.   

    இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய கவிதா, ''நாங்கள் மாநிலத்தில் ஒரு அரசியல் கட்சியை உருவாக்கப் போகிறோம். ஜனநாயக ரீதியாக களத்தில் பணியாற்ற விரும்பும் மக்களுக்கு இது ஒரு பெரிய வாய்ப்பை உருவாக்கும்.

    எங்களின் கட்சி என்றும் தெலுங்கானா மக்களின் கட்சி என்றும் நாங்கள் நினைத்த பிஆர்எஸ், பல விஷயங்களில் எங்களை கைவிட்டுவிட்டது. எங்கள் லட்சியங்களை அது நிறைவேற்றவில்லை. புதிய கட்சி அடுத்த சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும்'' என தெரிவித்தார்.

    தெலுங்கானா ஜாக்ருதி என்ற அமைப்பின் தலைவராக இருக்கும் கவிதா, அந்த அமைப்பையே அரசியல் கட்சியாக மாற்ற திட்டமிட்டிருக்கிறார். தெலுங்கானாவில் தற்போது முதல்வர் ரேவந்த் ரெட்டி தலைமையில் காங்கிரஸ் ஆட்சியில் உள்ள நிலையில் அங்கு 3 ஆண்டுகள் கழித்து சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. 

    • பி.ஆர்.எஸ். கட்சி தலைவர் சந்திரசேகர ராவ் மகள் கவிதா, கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
    • தனது சகோதரர் கே.டி.ராமாராவை கவிதா எச்சரித்தார்.

    பாரத் ராஷ்ட்ர சமிதி கட்சியின் தலைவரான சந்திரசேகர ராவுக்கும், அவரது மகள் கவிதாவுக்கும் இடையே சமீப காலமாக மோதல் வெடித்தது. சகோதரர் ராமா ராவுடனும் மோதல் வெடித்தது.

    இதற்கிடையே, கட்சியின் நிர்வாகிகளை வெளிப்படையாக விமர்சித்து பேசினார் கவிதா. மேலும், கட்சி தலைவர்கள் ஊழலில் ஈடுபட்டதாகவும் குற்றம்சாட்டினார்.

    இதனால், பி.ஆர்.எஸ். கட்சியில் இருந்து கவிதாவை சஸ்பெண்ட் செய்து அவரது தந்தையும், கட்சி தலைவருமான சந்திரசேகர ராவ் உத்தரவிட்டார்.

    இந்நிலையில், சஸ்பெண்ட் நடவடிக்கையை தொடர்ந்து பி.ஆர்.எஸ். கட்சியில் இருந்து விலகுவதாக கவிதா அறிவித்துள்ளார்.

    மேலும், உறவினர்களான ஹரிஷ் மற்றும் சந்தோஷ் ராவ் ஆகியோர் நமது குடும்பத்தை அழிக்க திட்டமிட்டுள்ளனர் என்று தனது சகோதரர் கே.டி.ராமாராவை கவிதா எச்சரித்தாக தகவல் வெளியாகியுள்ளது.

    தெலுங்கானா சட்டமன்றத் தேர்தலில் தனது தந்தை மற்றும் சகோதரரை தோற்கடிக்க ஹரிஷ் ராவ் பிரச்சாரத்திற்கு நிதியளித்ததாகவும் கவிதா குற்றம் சாட்டினார்.

    • கட்சியின் நிர்வாகிகளை கவிதா வெளிப்படையாக விமர்சித்து பேசினார்.
    • பி.ஆர்.எஸ். கட்சி தலைவர் சந்திரசேகர ராவ் மகள் கவிதா, கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

    ஐதராபாத்:

    பாரத் ராஷ்ட்ர சமிதி கட்சியின் தலைவரான சந்திரசேகர ராவுக்கும், அவரது மகள் கவிதாவுக்கும் இடையே சமீப காலமாக மோதல் வெடித்தது. சகோதரர் ராமா ராவுடனும் மோதல் வெடித்தது.

    இதற்கிடையே, கட்சியின் நிர்வாகிகளை வெளிப்படையாக விமர்சித்து பேசினார் கவிதா. மேலும், கட்சி தலைவர்கள் ஊழலில் ஈடுபட்டதாகவும் குற்றம்சாட்டினார்.

    இந்நிலையில், பி.ஆர்.எஸ். கட்சியில் இருந்து கவிதாவை சஸ்பெண்ட் செய்து அவரது தந்தையும், கட்சி தலைவருமான சந்திரசேகர ராவ் உத்தரவிட்டுள்ளார்.

    தெலுங்கானாவில் காலேஸ்வரம் நீர்ப்பாசன திட்ட முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்தும்படி சி.பி.ஐ.க்கு முதல் மந்திரி ரேவந்த் ரெட்டி பரிந்துரை செய்துள்ள நிலையில், கவிதா கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • காலேஷ்வரம் திட்டம் முறைகேடு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகும்படி கே.சி.ஆர்-க்கு சம்மன்.
    • சந்திரசேகர ராவ் பெயரை கெடுக்கவே இந்த சதி தீட்டப்பட்டுள்ளது என கவிதா குற்றச்சாட்டு.

    காலேஷ்வரம் திட்டம் முறைகேடு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகும்படி தெலுங்கானா மாநில முன்னாள் முதல்வர கே. சந்திரசேகர ராவுக்கு நீதித்துறை கமிஷன் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அந்த நோட்டீஸில் நாளை ஆஜராகும்படி குறிப்பிடப்பட்டுள்ளது.

    சந்திரசேகர ராவ் நாளை ஆஜராகுவதற்குப் பதிலாக வருகிற 11ஆம் தேதி ஆஜராக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சந்திரசேகர ராவின் நற்பெயரை கெடுக்கும் வகையில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. நீதித்துறை ஆணையம் காங்கிரஸ் ஆணையம் என்று அழைக்கப்படுகிறது என சந்திரசேகர ராவ் மகளும், பிஆர்ஆஸ் கட்சி தலைவருமான கே. கவிதா கடுமையாக சாடியுள்ளார்.

    இது தொடர்பாக கே. கவிதா கூறுகையில் "காலேஷ்வரம் திட்டம் முடிவடைந்த பின்னர் மொத்தமாக 40 லட்சம் ஏக்கர் நிலங்களுக்கு தண்ணீர் கிடைக்கும். இதெல்லாம் புறந்தள்ளப்பட்டுள்ளது. சந்திரசேகர ராவ் பெயரை கெடுக்கவே இந்த சதி தீட்டப்பட்டுள்ளது.

    200 டிஎம்சி கோதாவரி ஆற்றின் நீரை பயன்படுத்துவது தொடர்பான போலாவரம்-பனகச்செர்லா திட்டத்தை ஆந்திர அரசு முன்மொழிந்துள்ள நிலையில், ரேவந்த் ரெட்டி அமைதியாக இருந்து வருகிறார்.

    இவ்வாறு சந்திரசேகர ராவ் மகள் கே. கவிதா கடுமையாக விமர்சித்துள்ளார்.

    போலாவரம்- பனகச்செர்லா திட்டம் முக்கிய குறிக்கோள் கோதாவரி ஆற்றின் உபரி நீரை, வறட்சியான பிராந்திகளுக்கு மாற்றுவதாகும் என ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.

    • சந்திரசேகர ராவ் கடவுள் போன்றவர், இப்போது அவரை சாத்தான்கள் சூழ்ந்துள்ளன
    • காங்கிரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி, சொந்தக் கட்சியை உருவாக்கப் போவதாக செய்தி பரவியது.

    2014 ஆம் ஆண்டு ஆந்திராவில் இருந்து பிரிந்து தெலுங்கானா மாநிலம் உருவானதில் இருந்து தொடர்ந்து 9 வருடங்கள் முதலமைச்சராக இருந்தவர் சந்திரசேகர ராவ். இவரின் கட்சி பாரத் ராஷ்டிர சமிதி (பி.ஆர்.எஸ்).

    கடந்த வாரம் இந்த கட்சியின் வெள்ளி விழா நடைபெற்றது. எம்எல்சியாக உள்ள சந்திரசேகர ராவின் மகள் கவிதா அப்போது தந்தைக்கு எழுதிய கடிதம் பொது வெளியில் கசிந்தது. அதில் சந்திரசேகர ராவ் பாஜக மீது கடுமையான விமர்சனங்களை முன்வைக்கவில்லை என கவிதா அதிருப்தி தெரிவித்தார்.

    இதுகுறித்த பேட்டியில், சந்திரசேகர ராவ் கடவுள் போன்றவர், இப்போது அவரை சாத்தான்கள் சூழ்ந்துள்ளன என்று கவிதா பேசினார். அவர் எம்.பியாக உள்ள தனது அண்ணன் கே.டி.ராமா ராவை மறைமுகமாக விமர்சித்ததாக ஊகங்கள் எழுந்தன.

    இந்நிலையில் நேற்று ஊடகங்களுக்கு பேட்டியளித்த கவிதா, 'கட்சியில் உள்ள சில தலைவர்கள் பிஆர்எஸ்-ஐ பாஜகவுடன் இணைக்க விரும்புகிறார்கள். நான் சிறையில் இருந்தபோது கட்சியில் இதுபோன்ற விவாதம் நடந்தது. நான் சிறையில் இருந்திருக்கலாம், ஆனால் கட்சியை பாஜகவுடன் இணைக்கக்கூடாது என்று நான் சொன்னேன்' என்று தெரிவித்தார்.

    மேலும் தந்தை சந்திரசேகர் ராவை தன்னிடமிருந்து பிரிக்க வேலைகள் நடந்து வருவதாகவும் கவிதா குற்றம்சாட்டினார். அதேசமயம் ஆட்சியில் உள்ள காங்கிரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி, சொந்தக் கட்சியை உருவாக்கப் போவதாக வந்த செய்தியை கவிதா மறுத்தார்.

    கவிதா தொடர்ந்து போர் கொடி தூக்கி வருவது பிஆர்எஸ் கட்சி மற்றும் அண்ணன், தங்கை இடையே பூசலை அதிகரித்து வருவதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    குறிப்பிட்ட நிறுவனங்களுக்கு ஆதாயம் அளித்ததாக கூறப்படும் டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் ஆம் ஆத்மி தலைவர்களுடன் சேர்ந்து முறைகேட்டில் ஈடுபட்டதாக கவிதா கடந்த வருடம் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தது குறிப்பிடத்தக்கது. 

    • பதவியேற்பதற்கு முன்பே அவர் ஒரு ஊழல் சாம்ராஜ்யத்தை கட்டியெழுப்பினார்.
    • முதல்வராக பதவியேற்றதிலிருந்து, அதை பல ஆயிரம் கோடி ரூபாய் மோசடியாக விரிவுபடுத்தியுள்ளார்.

    தெலுங்கானா மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டியின் பெயர் அமலாக்கத்துறையின் குற்றப்பத்திரிகையில் இடம் பெற்றுள்ளதை சுட்டிக்காட்டிய பிஆர்எஸ் கட்சியின் செயல்தலைவர் கே.டி. ராம ராவ், தெலுங்கானாவை காங்கிரஸ் கட்சியின் ஏ.டி.எம்.ஆக மாற்றியதாக குற்றம்சாட்டியுள்ளார்.

    மேலும், "தெலுங்கானாவின் நிர்வாகம் ஊழல் மற்றும் கமிஷன் ஒப்பந்தங்களால் நிறைந்துள்ளது என்ற பிஆர்எஸ் குற்றச்சாட்டை தற்போது மத்திய அமைப்பான அமலாக்கத்துறை உறுதிப்படுத்தியுள்ளது.

    தெலுங்கானாவின் ஊழல் மோசடியை அமலாக்கத்துறை அதிகாரப்பூர்வமாக அம்பலப்படுத்தியுள்ளது. பதவியேற்பதற்கு முன்பே அவர் ஒரு ஊழல் சாம்ராஜ்யத்தை கட்டியெழுப்பினார். முதல்வராக பதவியேற்றதிலிருந்து, அதை பல ஆயிரம் கோடி ரூபாய் மோசடியாக விரிவுபடுத்தியுள்ளார்" என்றார்.

    தனியார் நிறுவனத்திற்கு நன்கொடை வழங்கும்படி கேட்டதாக தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, மறைந்த அகமது படேல், பவன் பன்சால் மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. ஆனால் குற்றம் சாட்டப்பட்டவர்களாக குறிப்பிடப்படவில்லை.

    குற்றப்பத்திரிகையில் ரேவந்தின் பெயர் இருப்பதால் மத்திய அரசு இப்போது நடவடிக்கை எடுக்குமா அல்லது முந்தைய ஊழல்களைப் போலவே அவரைப் பாதுகாப்பார்களா? என்று ராம ராவ் கேள்வி எழுப்பியுள்ளார்.

    • பிரம்மாண்ட பிரசாரத்தில் ஈடுபட கே. சந்திரசேகர ராவ் முடிவு.
    • பொது கூட்டங்களில் கலந்து கொள்ள சந்திரசேகர ராவ் திட்டம்.

    தெலுங்கானா மாநிலத்தில் நவம்பர் 30-ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தலை சந்திக்க ஆயத்தமாகி வருகின்றன. அந்த வகையில், பி.ஆர்.எஸ். கட்சி தலைவரும், தெலுங்கானா மாநில முதலமைச்சருமான கே. சந்திரசேகர ராவ் தனது கட்சியின் தேர்தல் வாக்குறுதிகளை நாளை அறிவிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    மேலும் வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலுக்காக பிரம்மாண்ட பிரசாரத்தில் ஈடுபட கே. சந்திரசேகர ராவ் முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது. அதன்படி நாளை (அக்டோபர் 15) துவங்கி மொத்தம் 41 பொதுக்கூட்டங்களில் பங்கேற்க முதலமைச்சர் சந்திரசேகர ராவ் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    தேர்தல் பிரசாரத்தினை சித்திப்பெட் மாவட்டத்தில் உள்ள ஹூஸ்னாபாத்தில் கே. சந்திரசேகர ராவ் துவங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து அக்டபோர் 16 மற்றும் அக்டோபர் 17-ம் தேதிகளில் ஜங்கோன், புவனகிரி மற்றும் சிர்சிலா மற்றும் சித்திப்பெட் பகுதிகளில் நடைபெற இருக்கும் பொது கூட்டங்களில் சந்திரசேகர ராவ் கலந்து கொள்ள இருப்பதாக தெரிகிறது.

    சந்திரசேகர ராவ் நவம்பர் 9-ம் தேதி சட்டமன்ற தேர்தலுக்கான மனுத்தாக்கல் செய்வார் என்றும் கூறப்படுகிறது. சட்டமன்ற தேர்தலுக்காக ஆளும் பி.ஆர்.எஸ். கட்சி 105 பேர் அடங்கிய வேட்பாளர்களை ஏற்கனவே அறிவித்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

    • 2016 பண மதிப்பிழப்பு மற்றும் கொரோனா ஆகியவற்றால் தெலுங்கானாவின் பொருளாதார வளர்ச்சியில் சரிவு
    • தெலுங்கானா கடுமையான மற்றும் தியாகத்தின் மூலமாக மிகப்பெரிய வளர்ச்சியை எட்டும்

    தெலுங்கானா மாநிலத்தில் 119 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக நவம்பர் 30-ந்தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் 95 முதல் 105 இடங்களில் வெற்றி பெறுவோம் என பாரதிய ராஷ்டிரிய சமிதி கட்சி தலைவர் சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளார்.

    மேலும், காஜ்வெல் தொகுதி மக்கள் தன்மீது அன்பு வைத்திருப்பதாகவும், தொடர்ந்து இரண்டு முறை பிரமாண்ட வெற்றியை வழங்குவார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

    தொகுதி அளவிலான கூட்டத்தில் பேசிய சந்திரசேகர ராவ், 2016 பண மதிப்பிழப்பு மற்றும் கொரோனா ஆகியவற்றால் தெலுங்கானாவின் பொருளாதார வளர்ச்சியில் சரிவு ஏற்பட்டதாகவும், இந்தியாவின் இளம் மாநிலமான தெலுங்கானா கடுமையான மற்றும் தியாகத்தின் மூலமாக மிகப்பெரிய வளர்ச்சியை எட்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

    மேலும், தற்போது வளர்ச்சி மற்றும் சாதனையால் நாம் திருப்தி அடையக் கூடாது. சிறந்து விளங்க பாடுபடுவது ஒரு தொடர்ச்சியான செயல்முறையாகும், நாம் மக்களுக்கு நல்ல வாழ்க்கைத் தரத்தை வழங்க வேண்டும் எனக் குறிப்பிட்டார்.

    2016-ல் இருந்து சந்திரசேகர ராவ் தொடர்ந்து தெலுங்கானாவின் முதல்வராக இருந்து வருகிறார். அவரது பிஆர்எஸ் கட்சிக்கும் காங்கிரஸ்க்கும் இடையில் கடும் போட்டி நிலவி வருகிறது. இதற்கிடையே பா.ஜனதாவும் தெலுங்கானாவில் கால்பதிக்க முயற்சி செய்து வருகிறது.

    • பா.ஜனதாவும், சந்திரசேகர ராவும் கைகோர்த்து உள்ளனர்.
    • தெலுங்கானாவில் பிஆர்எஸ்-க்கு ஓவைசி ஆதரவு கொடுக்கிறார். டெல்லியில் பா.ஜனதாவுக்கு பிஆர்எஸ் ஆதரவு அளிக்கிறது.

    தெலுங்கானா மாநிலத்தில் வருகிற 30-ந்தேதி சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. காங்கிரஸ் கட்சிக்கும், ஆளும் பாரதிய ராஷ்டிரிய சமிதி (பி.ஆர்.எஸ்.) கட்சிக்கும் இடையில் கடும் போட்டி நிலவுகிறது. இதற்கிடையே அசாதுதீன் ஓவைசி தலைமையிலான ஏஐஎம்ஐஎம் கட்சியும் போட்டியிடுகிறது. பா.ஜனதாவும் களத்தில் உள்ளது.

    ஓவைசி காங்கிரஸ் வாக்குகளை பிரிக்கலாம் எனத் தெரிகிறது. இதனால் காங்கிரஸ் கட்சி, ஓவைசி தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறது.

    இந்த நிலையில் பா.ஜனதா, பி.ஆர்.எஸ்., ஏஐஎம்ஐஎம் மூன்றும் கூட்டு என பிரியங்கா காந்தி விமர்சனம் செய்துள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறுகையில் "பா.ஜனதாவும், சந்திரசேகர ராவும் கைகோர்த்து உள்ளனர். இதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். பல மாநிலங்களில் ஓவைசி கட்சி போட்டியிடுகிறது. அதுவும் பல இடங்களில் வேட்பாளர்களை நிறுத்துகிறது.

    ஆனால், தெலுங்கானாவில் 119 தொகுதிகள் இருக்கும் நிலையில், ஏன் 9 தொகுதிகளில் மட்டும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. தெலுங்கானாவில் பிஆர்எஸ்-க்கு ஓவைசி ஆதரவு கொடுக்கிறார். டெல்லியில் பா.ஜனதாவுக்கு பிஆர்எஸ் ஆதரவு அளிக்கிறது. மூன்று கட்சிகளுக்கும் இடையில் சிறந்த கூட்டு உள்ளது. நீங்கள் பா.ஜனதாவுக்கு வாக்களித்தால், அது பிஆர்எஸ்-க்காக வாக்களித்ததாகும். ஓவைசி கட்சிக்கு வாக்களித்தால் அது பிஆர்எஸ்-க்கு வாக்களித்ததாக அர்த்தமாகும்.

    பிரதமர் மோடி பிஆர்எஸ் அரசின் பாசனத் திட்டம் மற்றும் மதுபான மோசடி குறித்து பேச மறுக்கிறார். ஆனால், ஏஜென்சிகளை காங்கிரஸ் கட்சி தலைவர்களின் வீடுகளுக்கு விசாரணைக்காக அனுப்புகிறார்" என்றார்.

    • தெலுங்கானா சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு 30-ந்தேதி நடைபெற இருக்கிறது.
    • தொடர்ந்து 3-வது முறையாக ஆட்சியை பிடிக்க பிஆர்எஸ் கட்சி தீவரமாக தேர்தல் வேலை செய்து வருகிறது.

    தெலுங்கானாவில் வருகிற 30-ந்தேதி சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. ராஜஸ்தான் சட்டசபை தேர்தலுக்கான பிரசாரம் நேற்றுடன் முடிவடைந்தது. இதனால் தேசிய தலைவர்கள் தெலுங்கானாவில் சூறாவளி பிரசாரம் செய்ய இருக்கிறார்கள்.

    இந்த நிலையில் சந்திரசேகர ராவின் மகளும், அம்மாநில எம்.எல்.சி.யுமான கே. கவிதா கூறியதாவது:-

    கடந்த 10 ஆண்டுகளாக அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சி எங்களுடன் நட்பாக இருக்கிறது. நாங்கள் ஒருபோதும் கூட்டணி அமைத்தது கிடையாது. அவர்களுடன் நட்பு முறையில் அணுகுகிறோம்.

    பா.ஜனதா மற்றும் காங்கிரஸ் கட்சிகளை பொறுத்தவரை, மற்ற அரசியல் கட்சி அதிகாரத்திற்கு வருவதை அவர்கள் விரும்புவதில்லை. பி.ஆர்.எஸ் கட்சியின் வளர்ச்சி நாடு முழுவதும் பெருகி வருகிறது. தெலுங்கானா மாநிலம் காரணமாக நாட்டின் ஒட்டுமொத்த அரசியல் முறையும் விவசாயிகளை பற்றி சிந்திக்க தொடங்கியது. எங்கள் வளர்ச்சியை இரு கட்சிகளாலும் ஜீரணிக்க முடியவில்லை. நாங்கள் யாருடைய பி டீம் அல்ல. நாங்கள் தெலுங்கானா மக்களுடைய அணி.

    • ஊழல் செய்யும் அரசாங்கத்தை கே. சந்திரசேகர ராவ் நடத்தி வருகிறார்.
    • சந்திரசேகர ராவின் குடும்பத்தினர் வசம் தான் உள்ளது.

    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெலுங்கானா மாநிலத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ளார்.

    அந்த வகையில், அந்தோல் மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தல் பிராசார கூட்டத்தில் உரையாற்றிய ராகுல் காந்தி, தெலுங்கானா முதலமைச்சர் மற்றும் பி.ஆர்.எஸ். கட்சி தலைவர் கே. சந்திரசேகர ராவ்- தனது கட்சி மாநிலத்திற்காக என்ன செய்துள்ளது என்பதை மக்களிடம் எடுத்துரைக்க வேண்டும் என்று தெரிவித்து இருக்கிறார்.

    தொடர்ந்து பேசிய அவர், நாட்டிலேயே மிகவும் ஊழல் செய்யும் அரசாங்கத்தை கே. சந்திரசேகர ராவ் நடத்தி வருகிறார். இவரது ஆட்சியில் பணம் கொட்டும் இலாகாக்கள் அனைத்தும் சந்திரசேகர ராவின் குடும்பத்தினர் வசம் தான் உள்ளது என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

    இதோடு காங்கிரஸ் கட்சி தெலுங்கானாவில் ஆட்சிக்கு வந்ததும், காங்கிரஸ் அளித்திருக்கும் ஆறு வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான சட்டம் முதல் சட்டமன்ற கூட்டத்திலேயே இயற்றப்பட்டு விடும், அவை நிறைவேற்றப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

    "தெலுங்கானாவில் தற்போது நில பிரதிநிதித்துவ அரசு மற்றும் மக்கள் அரசிடையேயான போட்டி நிலவி வருகிறது. உங்களது முதலமைச்சர் காங்கிரஸ் கட்சி என்ன செய்திருக்கிறது என கேட்கிறார். ஆனால், காங்கிரஸ் என்ன செய்தது என்பதை விட, கே சந்திரசேகர ராவ் என்ன செய்திருக்கிறார் என்பதே கேள்வியாக இருக்க வேண்டும்," என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

    ×