search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Assembly Polls"

    • தெலுங்கானா மாநிலத்தை முழுமையான வளர்ச்சி பெற்ற மாநிலமாக மாற்ற முடியும்.
    • பா.ஜ.க.வின் இலக்கு ஏழை, எளியோருக்கு நன்மை செய்வது மட்டும் தான்.

    தெலுங்கானா மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருப்பதை ஒட்டி, அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில், பா.ஜ.க. சார்பில் நடத்தப்பட்ட பிரசாரத்தில் மத்திய மந்திரி அமித் ஷா கலந்து கொண்டு உரையாற்றினார்.

     

    பிரசாராத்தில் பேசிய அவர், "இன்று, நான் தெலுங்கானா மக்களுக்கு ஒன்றை கூற விரும்புகிறேன். நீங்கள் பாஜ.க.வை ஆசீர்வதித்து, பா.ஜ.க.-வை ஆட்சிக்கு கொண்டுவந்தால், தெலுங்கானா மாநிலத்தின் பா.ஜ.க. முதல்வர் பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவராக இருப்பார். நாங்கள் இதனை முடிவு செய்துவிட்டோம்."

    "பிரதமர் நரேந்திர மோடி தலைமையின் கீழ் உள்ள பா.ஜ.க. கட்சியால் மட்டுமே தெலுங்கானா மாநிலத்தை முழுமையான வளர்ச்சி பெற்ற மாநிலமாக மாற்ற முடியும். பா.ஜ.க.வின் இலக்கு ஏழை, எளியோருக்கு நன்மை செய்வது மட்டும் தான். காங்கிரஸ் மற்றும் பி.ஆர்.எஸ்.-இன் இலக்கு அவர்களது குடும்பத்துக்கு மட்டும் நன்மை செய்வது," என்று தெரிவித்தார்.

    • பிரம்மாண்ட பிரசாரத்தில் ஈடுபட கே. சந்திரசேகர ராவ் முடிவு.
    • பொது கூட்டங்களில் கலந்து கொள்ள சந்திரசேகர ராவ் திட்டம்.

    தெலுங்கானா மாநிலத்தில் நவம்பர் 30-ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தலை சந்திக்க ஆயத்தமாகி வருகின்றன. அந்த வகையில், பி.ஆர்.எஸ். கட்சி தலைவரும், தெலுங்கானா மாநில முதலமைச்சருமான கே. சந்திரசேகர ராவ் தனது கட்சியின் தேர்தல் வாக்குறுதிகளை நாளை அறிவிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    மேலும் வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலுக்காக பிரம்மாண்ட பிரசாரத்தில் ஈடுபட கே. சந்திரசேகர ராவ் முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது. அதன்படி நாளை (அக்டோபர் 15) துவங்கி மொத்தம் 41 பொதுக்கூட்டங்களில் பங்கேற்க முதலமைச்சர் சந்திரசேகர ராவ் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    தேர்தல் பிரசாரத்தினை சித்திப்பெட் மாவட்டத்தில் உள்ள ஹூஸ்னாபாத்தில் கே. சந்திரசேகர ராவ் துவங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து அக்டபோர் 16 மற்றும் அக்டோபர் 17-ம் தேதிகளில் ஜங்கோன், புவனகிரி மற்றும் சிர்சிலா மற்றும் சித்திப்பெட் பகுதிகளில் நடைபெற இருக்கும் பொது கூட்டங்களில் சந்திரசேகர ராவ் கலந்து கொள்ள இருப்பதாக தெரிகிறது.

    சந்திரசேகர ராவ் நவம்பர் 9-ம் தேதி சட்டமன்ற தேர்தலுக்கான மனுத்தாக்கல் செய்வார் என்றும் கூறப்படுகிறது. சட்டமன்ற தேர்தலுக்காக ஆளும் பி.ஆர்.எஸ். கட்சி 105 பேர் அடங்கிய வேட்பாளர்களை ஏற்கனவே அறிவித்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

    காஷ்மீர் சட்டசபை தேர்தல் நடத்தாததால் பிரதமர் நரேந்திர மோடிக்கு காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரி உமர் அப்துல்லா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். #OmarAbdullah #Modi
    ஸ்ரீநகர்:

    காஷ்மீர் மாநிலத்தில் நாடாளுமன்ற தேர்தல் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் சட்டசபை தேர்தல் நடத்தப்படவில்லை.

    இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரியும், தேசிய மாநாடு கட்சியின் துணைத்தலைவருமான உமர் அப்துல்லா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.



    அவர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், “பிரதமர் மோடி பாகிஸ்தானிடம், பயங்கரவாதிகளிடம், ஹூரியத் அமைப்பிடம் (பிரிவினைவாத அமைப்பு) சரண் அடைந்துவிட்டார். நன்றாக செய்து விட்டீர்கள் மோடி. 56 அங்குல மார்பு தோற்றுப்போய் விட்டது” என கூறி உள்ளார்.

    மேலும், “காஷ்மீர் தேர்தல் மீது சர்வதேச கவனம் ஈர்க்கப்பட்டுள்ள நிலையில், உலக அரங்கில் பிரதமர் மோடி தனது தோல்வியை ஒப்புக்கொள்ள விரும்புவார் என நான் ஒருபோதும் கருதவில்லை” எனவும் குறிப்பிட்டுள்ளார்.

    நாடாளுமன்ற தேர்தலுடன் ஆந்திரா, ஒடிசா, சிக்கிம், அருணாசலபிரதேசம் ஆகிய மாநில சட்டசபைகளுக்கும் தேர்தல் நடத்த தேர்தல் கமிஷன் திட்டமிட்டு உள்ளது. #AndhraPradesh #Odisha #Sikkim #AssemblyPolls #LokSabhaElections
    புதுடெல்லி:

    ஆந்திரா, ஒடிசா, சிக்கிம், அருணாசலபிரதேசம் ஆகிய 4 மாநில சட்டசபைகளின் ஆயுட்காலம் அடுத்த ஆண்டு(2019) மே மற்றும் ஜூன் மாதங்களில் முடிவடைகிறது. இதனால் அங்கு கட்டாயம் தேர்தல் நடத்தவேண்டிய நிலை உள்ளது. அதேநேரம் நாடாளுமன்றத்துக்கும் அடுத்த ஆண்டு மே மாத வாக்கில் தேர்தல் நடைபெறுகிறது.

    இதனால் நாடாளுமன்றத்துக்கு தேர்தலை நடத்தும்போது இந்த 4 மாநிலகளுக்கும் சேர்த்தே தேர்தலை நடத்தி முடிக்க தேர்தல் கமிஷன் திட்டமிட்டு உள்ளது. இதேபோல் அண்மையில் கலைக்கப்பட்ட காஷ்மீர் மாநில சட்டசபைக்கும் வருகிற மே மாதம் தேர்தல் நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படு கிறது. இதுபற்றி தேர்தல் கமிஷன் அலுவலக அதிகாரி ஒருவர் கூறியதாவது:-



    ஆந்திரா, ஒடிசா, சிக்கிம், அருணாசலபிரதேச மாநிலங்களில் இதற்கு முந்தைய முன்மாதிரிகளைக் கொண்டு நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டசபைக்கும் தேர்தல் நடத்தப்படும். அதேநேரம் காஷ்மீரில் அடுத்த 6 மாதத்துக்குள் தேர்தலை நடத்தி முடிக்கவேண்டும். இதற்கான அதிக பட்ச கால அவகாசம் மே மாதத்துடன் முடிகிறது. அதற்குள்ளாகவே அங்கும் தேர்தலை நடத்தவேண்டிய நிலையும் உள்ளது. காஷ்மீரில் நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தலை நடத்தும் போதே சட்டசபைக்கும் தேர்தலை நடத்தினால் பாதுகாப்பு படையினரின் தேர்தல் பாதுகாப்பு பணி எளிதாக முடிந்துவிடும் என்று தேர்தல் கமிஷன் கருதுகிறது. இதனால் நாடாளுமன்ற தேர்தலுடன் காஷ்மீர் சட்டசபை தேர்தலும் சேர்ந்தே நடைபெறுவதற்கான வாய்ப்புகளே அதிகம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இன்னொரு அதிகாரி கூறுகையில், “மராட்டியம், அரியானா மாநிலங்களின் சட்டசபை ஆயுட்காலம் 2019-ம் ஆண்டு நவம்பர் மாதத்துடன் முடிகிறது. இந்த 2 மாநிலங்களிலும் பா.ஜனதா அரசுதான் உள்ளது. அவர்கள் 6 மாதத்துக்குள் சட்டசபையை கலைக்க முன்வந்தால் அந்த 2 மாநிலங்களிலும் சட்டசபை தேர்தலை நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து நடத்துவது பற்றி பரிசீலிக்கப்படும்” என்றார். #AndhraPradesh #Odisha #Sikkim #AssemblyPolls #LokSabhaElections
    மத்திய பிரதேச சட்டசபை தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்ட இன்றே, 6 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை சமாஜ்வாதி கட்சி வெளியிட்டுள்ளது. #SamajwadiParty #MadhyaPradeshPolls
    போபால்:

    மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மற்றும் மிசோரம் மாநில சட்டசபை தேர்தல் இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிடப் போவதாக சமாஜ்வாதி கட்சியின் தலைவரும், உத்திரப்பிரதேச முன்னாள் முதல்வருமான அகிலேஸ் யாதவ் முன்னர் தெரிவித்திருந்தார்.

    ஆனால், இந்த 4 மாநிலங்களுடன் சேர்த்து தெலங்கானா மாநிலத்திற்கும் தேர்தல் தேதியை தலைமை தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ள நிலையில் காங்கிரஸ் கட்சி, சமாஜ்வாதி கட்சியுடன் இன்னும் கூட்டணிக்கான பேச்சுவார்த்தையை தொடங்கவில்லை.



    இதனால், அதிருப்தியடைந்துள்ள அகிலேஷ் யாதவ் காங்கிரஸ் கூட்டணிக்காக இனியும் காத்திருக்க முடியாது, 4 மாநில தேர்தலை மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியுடன் இணைந்து சந்திக்க முடிவு செய்திருப்பதாக இன்று பரபப்பு பேட்டியளித்திருந்தார்.

    இதன் அடுத்தகட்டமாக, மத்திய பிரதேச மாநிலத்தின் 6 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளார். சித்தி மாவட்டம் சித்தி 77 தொகுதியில் கே.கே. சிங் என்ற வேட்பாளர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதே போல், பரஸ்வடா மாவட்டம் பாலகட் 110 தொகுதியில் கன்கர் முன்ஜார் போட்டியிடுவதாகவும், பாலகட் 111 தொகுதியில் அனுபா முன்ஜார் என்பவரும், நிவாரி பகுதியின் டிகம்பர் 46 தொகுதியில் மீரா யாதவ்வும், பன்னா பகுதியின் பன்னா 60 தொகுதியில் தர்ஷத் சிங் யாதவ்வும், புத்னி பகுதி செஹோர் 156 தொகுதியில் அசோக் ஆரியா ஆகியோரை வேட்பாளர்களாக நியமித்து சமாஜ்வாதி கட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. #SamajwadiParty #MadhyaPradeshPolls
    மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், மிசோரம், சத்தீஸ்கர் ஆகிய நான்கு மாநிலங்களுடன் தெலுங்கானா சட்டசபைக்கும் தேர்தல் நடத்தப்படலாம் என்ற யூகத்துக்கு தேர்தல் அதிகாரி விளக்கம் அளித்துள்ளார். #TelanganaPolls #eci
    ஐதராபாத்:

    ஆந்திர மாநிலத்தில் இருந்து பிரிந்த தெலுங்கானாவில் கடந்த 2014-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுடன் சேர்த்து சட்டசபை தேர்தல் நடந்தது. இதில், மொத்தமுள்ள 119 தொகுதிகளில் 63 இடங்களில் வெற்றி பெற்று தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி (டி.ஆர்.எஸ்.) கட்சி ஆட்சியமைத்தது. 

    அங்கு அடுத்த ஆண்டு (2019) நாடாளுமன்ற தேர்தலுடன் இணைந்து சட்டசபைக்கும் தேர்தல் நடத்தப்பட வேண்டும். ஆனால் அம்மாநிலத்தின் முதலாவது முதல்-மந்திரியான சந்திரசேகர் ராவும், அவரது தலைமையிலான டி.ஆர்.எஸ். கட்சியினரும் சட்டசபையை கலைத்துவிட்டு முன்கூட்டியே தேர்தல் நடத்த முடிவு செய்தனர்.
     
    இதன் தொடர்ச்சியாக நடந்த அமைச்சரவைக் கூட்டம்  கூட்டத்தில், சட்டசபையை கலைப்பது என முடிவு செய்யப்பட்டது. அமைச்சரவையின் முடிவை ஏற்று, சட்டசபை கலைப்புக்கு கவர்னர் ஒப்புதல் அளித்தார். தெலுங்கானா சட்டசபை கலைக்கப்பட்டது தொடர்பான அறிக்கையை தலைமை தேர்தல் ஆணையம் பெற்றுள்ளது. 

    இந்த ஆண்டு இறுதிக்குள் மிசோரம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம் ஆகிய நான்கு மாநிலங்களுக்கு நடக்கவுள்ள சட்டசபை தேர்தலுடன் தெலுங்கானா சட்டசபைக்கு சேர்த்து தேர்தல் நடத்துவதற்கான சாத்தியக்கூறுகளை தலைமை தேர்தல் ஆணையம் ஆராய்ந்து அறிவிப்பு வெளியிடலாம் என எதிர்பார்க்கப்பட்டது. 

    தெலுங்கானா மாநிலத்தில் இப்போதே தேர்தல் நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதா? தேர்தலுக்கான முன்னேற்பாடு நடவடிக்கைகள் தயார் நிலையில் உள்ளனவா? என்பதை ஆய்வு செய்வதற்காக ஐதராபாத் நகருக்கு துணை தேர்தல் ஆணையர் உமேஷ் சின்ஹா தலைமையிலான அதிகாரிகள் குழுவை டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் கமிஷன்  கடந்த 11-ம் தேதி அனுப்பி வைத்தது.

    அங்குள்ள நிலைமைகளை ஆய்வு செய்த அதிகாரிகள் இதுதொடர்பான அறிக்கையை தலைமை தேர்தல் கமிஷனரிடம் சமர்ப்பித்துள்ளனர். இதன் அடிப்படையில் 4 மாநில தேர்தல்களுடன் தெலுங்கானா மாநில சட்டசபை தேர்தல் நடத்தலாம் என்று தேர்தல் கமிஷன் தீர்மானித்துள்ளதாக சமீபத்தில் சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.

    இந்நிலையில், இந்த தகவலை தெலுங்கானா மாநில தேர்தல் அதிகாரி ரஜத் குமார் இன்று மறுத்துள்ளார். 

    இதுதொடர்பாக இன்றிரவு அவரது அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், ‘மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், மிசோரம், சத்தீஸ்கர்  ஆகிய நான்கு மாநிலங்களுடன் தெலுங்கானா சட்டசபைக்கும் தேர்தல் நடத்தப்படலாம் என இன்றைய நாளிதழ்களில் வெளிவந்த செய்திகள் அனைத்தும் யூகத்தின் அடிப்படையிலானவை. 

    இதுபோல் தேர்தல் தொடர்பான செய்திகளை வெளியிடும் பத்திரிகை மற்றும் ஊடகங்கள் உரிய அதிகாரியின் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு பின்னரே பிரசுரிக்க வேண்டும் என தெலுங்கானா மாநில தேர்தல் அதிகாரி கேட்டுக் கொண்டுள்ளார்’ என குறிப்பிடப்பட்டுள்ளது. #TelanganaPolls #ECIteamvisitHyderabad #ECI
    பாகிஸ்தான் பாராளுமன்றத்துக்கு சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் பத்து சதவீதத்துக்கும் குறைவாக பெண்களின் வாக்குகள் பதிவான இரு தொகுதிகளில் தேர்தல் ரத்து செய்யப்படுகிறது. #ECPvoidpolls #femalevoterslowturnout
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் நாட்டில் பெண்களுக்கும் வாக்களிக்கும் உரிமைகள் நிலநாட்டப்பட வேண்டும் என்னும் அந்நாட்டு தேர்தல் விதிமுறைகளின்படி,  பத்து சதவீதத்துக்கும் குறைவாக பெண்கள் வாக்களிக்கும் தொகுதிகளில் தேர்தல் ரத்து செய்யப்பட்டு மறுதேர்தல் நடத்தப்படும் சட்டம் நடைமுறையில் இருந்து வருகிறது.

    இந்நிலையில், கடந்த மாதம் 25-ம் தேதி பாராளுமன்றத்துக்கும் 4 மாகாணங்களுக்கான சட்டசபைக்கும் நடைபெற்ற தேர்தலில் ஷங்லா மற்றும் வடக்கு வசிரிஸ்தான் பாராளுமன்ற தொகுதிகளில் மிக குறைவான எண்ணிக்கையிலான பெண்கள் மட்டுமே வாக்களித்திருந்தனர். 

    ஆனால், வாக்குப்பதிவு நிலவரப்படி  வடக்கு வசிரிஸ்தான் தொகுதியில் வாக்குரிமை பெற்றுள்ள மொத்தம் 77 ஆயிரத்து 537 பெண்களில் வெறும் 6 ஆயிரத்து 364 பேர் (8.91 சதவீதம்) மட்டுமே வாக்களித்திருந்தனர்.

    இதேபோல், ஷங்லா தொகுதியில் ஒரு லட்சத்து 62 ஆயிரத்து 49 பெண் வாக்காளர்களில் 12 ஆயிரத்து 663 பேர் மட்டுமே வாக்களித்தனர். இந்த எண்ணிக்கையும் மொத்த பெண் வாக்காளர்களில் பத்து சதவீதத்துக்கும் குறைவு என்பதால்  இந்த இரு  தொகுதிகளிலும் நடைபெற்ற தேர்தல் ரத்து செய்யப்படுவதாக அந்நாட்டின் தலைமை தேர்தல் கமிஷன் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவுள்ளது.

    இதைதொடர்ந்து, அங்கு மறுதேர்தல் நடத்துவதற்கான தேதி அறிவிக்கப்பட்டு, மீண்டும் வேட்புமனு தாக்கலும், வாக்குப்பதிவும் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த இரு தொகுதிகளில் நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் ஷங்லா தொகுதியில் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சி வேட்பாளர் இபாதுல்லா கான்,  வடக்கு வசிரிஸ்தான் தொகுதியில் சுயேட்சை வேட்பாளர் மோஹ்சென் ஜாவெத் வெற்றி பெற்றதாக முன்னர் முடிவுகள் வெளியாகின என்பது நினைவிருக்கலாம். #ECPvoidpolls #femalevoterslowturnout 
    கர்நாடக தேர்தலில் 70 சதவீதம் வாக்குப்பதிவு நடந்ததாக வந்த செய்திகளுக்கு மாறாக வரலாறு காணாத அளவில் 72.13 சதவீதம் வாக்குகள் பதிவானதாக அம்மாநில தேர்தல் அதிகாரி இன்று தெரிவித்துள்ளார்.

    பெங்களூரு:

    கர்நாடக சட்டசபைக்கு நேற்று நடைபெற்ற தேர்தலில் சுமார் 70 சதவீதம் வாக்குப்பதிவு நடந்ததாக நேற்றிரவு தகவல்கள் வெளியாகின. இதை அனைத்து ஊடகங்களும் பதிவு செய்திருந்தன.

    இந்நிலையில், இந்த தேர்தலில் 72.13 சதவீதம் வாக்குகள் பதிவானதாக கர்நாடக தலைமை தேர்தல் அதிகாரி சஞ்சீவ் குமார் இன்று தெரிவித்துள்ளார்.

    கர்நாடக சட்டசபைக்கு 1952-ம் ஆண்டு நடைபெற்ற முதல் தேர்தலில் இருந்து இதுவரை நேற்று பதிவான வாக்கு சதவீதம் முந்தைய தேர்தல் வரலாறு காணாத வகையில் அமைந்திருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

    1989, 1990,1994-ம் ஆண்டுகளில் நடைபெற்ற சட்டசபை தேர்தல்களில் 69 சதவீதம் வாக்குகள் பதிவானதாகவும், 2004, 2008-ம் ஆண்டுகளில் நடந்த சட்டசபை தேர்தல்களில் 65 சதவீதம் வாக்குகள் பதிவானதாகவும், கடந்த 2013-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 71.45 சதவீதம் வாக்குகள் பதிவானதாகவும் அவர் தெரிவித்துள்ளார். #KarnatakaAssembly polls #72.13percent 

    ×