search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Chandrasekara Rao"

    வருகிற பாராளுமன்ற தேர்தலில் கரீம்நகர் தொகுதியில் தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி சார்பில் போட்டியிடும் வேட்பாளரை முதல் மந்திரி சந்திரசேகரராவ் அறிவித்துள்ளார். #ChandrashekarRao

    ஐதராபாத்:

    பாராளுமன்றத்துக்கு தேர்தல் நடைபெற இன்னும் 3 மாதங்கள் உள்ள நிலையில் கூட்டணி பேச்சு வார்த்தை, தொகுதி பங்கீடு மற்றும் வேட்பாளர் தேர்வில் கட்சிகள் தீவிரம் காட்ட தொடங்கி உள்ளன.

    இந்த நிலையில் தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சி வேட்பாளர்களை அறிவிக்க தொடங்கி உள்ளது.

    தெலுங்கானா மாநிலத்தில் கரீம்நகர் தொகுதியில் தற்போது தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியைச் சேர்ந்த வினோத்குமார் எம்.பி.யாக இருக்கிறார். அவர் மீண்டும் அந்த தொகுதியில் போட்டியிடுவார் என்று நேற்று சந்திரசேகரராவ் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

    கரீம்நகர் தொகுதிக்குட்பட்ட சர்சீலா நகரில் நடந்த கட்சி ஊழியர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட சந்திரசேகரராவ் இந்த அறிவிப்பை வெளியிட்டார். தற்போது தெலுங்கானாவில் எம்.பி.க்களாக இருக்கும் டி.ஆர்.எஸ். கட்சி எம்.பி.க்கள் அனைவருக்கும் மீண்டும் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படும் என்று தெரிகிறது.

    பாராளுமன்ற தேர்தலில் கரீம்நகரில் மீண்டும் வேட்பாளராக வினோத்குமார் அறிவிக்கப்பட்டதும் டி.ஆர்.எஸ். கட்சி தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். வினோத்குமாருக்கு டி.ஆர்.எஸ். கட்சி நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

    தெலுங்கானாவில் சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சி அமோக வெற்றி பெற்றது. 43 சதவீதம் பேர் இந்த கட்சிக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

    இதையடுத்து தெலுங்கானாவில் அனைத்து எம்.பி. தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்று டி.ஆர்.எஸ். கட்சி தலைவர் சந்திரசேகரராவ் இலக்கு நிர்ணயித்துள்ளார்.

    சந்திரசேகரராவின் வேட்பாளர் அறிவிப்பு காரணமாக காங்கிரஸ், பா.ஜ.க., தெலுங்கு தேசம் கட்சிகள் அதிர்ச்சி அடைந்து உள்ளன. #ChandrashekarRao

    பிரதமர் மோடியின் கட்டளையை சந்திரசேகரராவ் நிறைவேற்றுகிறார் என்று ஆந்திர மாநில முதல்- மந்திரி சந்திரபாபு நாயுடு நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். #PMModi #ChandrababuNaidu

    விஜயவாடா:

    ஆந்திர மாநில முதல்- மந்திரி சந்திரபாபு நாயுடு விஜயவாடாவில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தெலுங்கானா மாநில முதல்-மந்திரி கே.சந்திரசேகரராவ், பிரதமர் மோடி, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டியின் கட்டளையை ஏற்று செயல்படுகிறார்.

    கே.சந்திரசேகரராவ் மீது ஊழல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. அதனால் அவரை மிரட்டி பிரதமர் மோடி பணிய வைக்க பார்க்கிறார். சந்திரசேகரராவும் ஊழல் வழக்கில் இருந்து தன்னை காப்பாற்றிக் கொள்ள பா.ஜனதாவுடன் கூட்டணி வைத்து இருக்கிறார்.

    ஆந்திராவில் தெலுங்கு தேசம் அரசின் சாதனைகளால் பொறாமை அடைந்த மோடியும், ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டியும், சந்திரசேகரராவை தூண்டி விட்டுள்ளனர்.

     


    சட்டசபை தேர்தலில் பா.ஜனதா, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் மற்றும் தெலுங்கு ராஷ்டீரிய சமிதி கட்சிகள் கூட்டணி அமைக்க உள்ளன. ஆகவே தேர்தல் பிரசாரத்தின்போது சந்திரசேகரராவ் ஆந்திராவுக்கு வரட்டும். அதற்கு நான் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.

    ஆனால் மக்கள் அவர்களுக்கு சரியான தீர்ப்பு வழங்குவார்கள். இருந்தாலும் தெலுங்குதேசம் கட்சியில் இருந்துதான் தனது அரசியல் வாழ்வை தொடங்கினார் என்பதை அவர் மறந்து விடக்கூடாது.

    தெலுங்கானா சட்டசபை தேர்தலில் காங்கிரசுடன் தெலுங்கு தேசம் கூட்டணி வைத்தது. அதற்கு நான் ஒரு சந்தர்ப்பவாதி என சந்திரசேகரராவ் தெரிவித்து இருந்தார். அதை நான் மறுக்கிறேன்.

    ஆனால் சந்திரசேகரராவ் ஒன்றை மறந்து விடக்கூடாது. தெலுங்கானா மாநிலம் உருவாக மத்திய அரசு ஒப்புக் கொண்டால் தனது கட்சியை காங்கிரசுடன் இணைக்க தயார் என அவர் வாக்குறுதி அளித்தார்.

    இவ்வாறு அவர் கூறினார். #PMModi #ChandrababuNaidu

    தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் விஜய வாடாவில் உள்ள கனக துர்க்கை அம்மனுக்கு ரூ.1.37 கோடி மதிப்புள்ள வைர மூக்குத்தியை காணிக்கையாக வழங்கி நேர்த்தி கடனை செலுத்தினார். #KChandrasekharRao
    நகரி:

    தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் விஜய வாடாவில் உள்ள பிரசித்து பெற்ற கனக துர்க்கை அம்மன் கோவிலுக்கு தனது குடும்பத்துடன் சென்றார்.

    அப்போது தனி தெலுங்கானா அமைந்தற்காக கனக துர்க்கை அம்மனுக்கு ரூ.1.37 கோடி மதிப்புள்ள வைர மூக்குத்தியை காணிக்கையாக வழங்கி நேர்த்தி கடனை செலுத்தினார். 11.290 கிராம் எடை கொண்ட இந்த வைர மூக்குத்தியில் 57 வைரக்கற்கள், நீலம், கெம்பு போன்ற விலை மதிப்புள்ள கற்கள் பதிக்கப்பட்டுள்ளன.



    தனி தெலுங்கானா மாநிலம் அமைந்ததையொட்டி முதல்வர் சந்திர சேகரராவ் திருப்பதி ஏழுமலையானுக்கு ரூ.5.5 கோடி மதிப்பில் சாலிக்கிராம ஹாரம், திருச்சானூர் பத்மாவதி தாயாருக்கு வைர மூக்குத்தி காணிக்கை வழங்கினார்.

    மேலும் வாரங்கல் பத்ரகாளி அம்மனுக்கு தங்க கிரீடம், குருவி பகுதியில் உள்ள வீரபத்ரசாமிக்கு தங்க மீசை ஆகியவை வழங்கி நேர்த்தி கடனை செலுத்தி உள்ளார். #KChandrasekharRao
    ×