search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Chandrashekar Rao"

    • தேர்தல் நெருங்கிய நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • காங்கிரஸ் பற்றி சந்திரசேகர ராவ் கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் வரும் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

    தேர்தல் நெருங்கிவரும் நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதற்கிடையே, கடந்த 5-ம் தேதி தெலுங்கானா மாநிலம் சிர்சில்லாவில் பி.எஸ்.ஆர். தலைவர் சந்திரசேகர ராவ் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களை நாய்களின் மகன்கள் என்றும், விவசாயிகளுக்கு ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூ.500 போனஸ் வழங்காவிட்டால் காங்கிரஸ் தலைவர்கள் தொண்டையை கடிக்க நேரிடும் எனவும் தெரிவித்தார். சந்திரசேகர ராவின் இந்தக் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இதுதொடர்பாக தெலுங்கானா காங்கிரஸ் கமிட்டி மூத்த துணை தலைவர் ஜி. நிரஞ்சன், ஏப்ரல் 6 அன்று தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தார்.

    இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் புகார் தொடர்பாக ஏப்ரல் 18-ம் தேதி காலை 11 மணிக்குள் தனது நிலைப்பாட்டை விளக்க வேண்டும் என சந்திரசேகர ராவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.

    குறிப்பிட்ட காலத்திற்குள் அவரிடமிருந்து பதில் வரவில்லை என்றால் ஆணையத்தின் உரிய நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.

    • சட்டமன்ற தேர்தலின் போது சந்திரசேகர ராவ் கட்சி தோல்வியை சந்தித்தது.
    • காவ்யா மீண்டும் வாரங்கல் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    தெலுங்கானா மாநிலத்தில் கடந்த சந்திரசேகர ராவ் ஆட்சியில் துணை முதல் மந்திரியாக இருந்தவர் கடியம் ஸ்ரீ ஹரி.

    இவரது மகள் கடியம் காவ்யா. சட்டமன்ற தேர்தலின் போது சந்திரசேகர ராவ் கட்சி தோல்வியை சந்தித்தது. காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.

    இதனால் சந்திரசேகர ராவின் பி.ஆர்.எஸ். கட்சியிலிருந்து தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்து வருகின்றனர்.

    கடியம் ஸ்ரீ ஹரியன் மகள் காவ்யா வாரங்கல் தொகுதியில் போட்டியிட பி.ஆர்.எஸ். கட்சி வேட்பாளராக அறிவிக்கப்பட்டு இருந்தார்.

    அவர் திடீரென போட்டியில் இருந்து விலகி காங்கிரசில் சேர்ந்தார். காவ்யா மீண்டும் வாரங்கல் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தேர்தல் வேலைகளில் பா.ஜ.க.வினர் தீவிரமாக இறங்கியுள்ளனர்.
    • வேறு கட்சியில் இருந்து வந்தவர்களுக்கு போட்டியிட வாய்ப்பு.

    தெலுங்கானாவில் உள்ள 17 பாராளுமன்ற தொகுதிகளில் இதுவரை 15 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை பா.ஜ.க அறிவித்துள்ளது.

    இதில் 9 பேர் சந்திரசேகரராவின் பி.ஆர். எஸ். கட்சியில் இருந்து சமீபத்தில் பா.ஜ.க.வில் இணைந்தவர்கள். வேறு கட்சியில் இருந்து வந்தவர்களுக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கியதால் தெலுங்கானா மாநில பா.ஜ.கவில் சலசலப்பு ஏற்பட்டது.


    கடந்த வாரம் ஐதராபாத் வந்திருந்த அமித்ஷாவிடம் இதுகுறித்து மூத்த நிர்வாகிகள் தகவல் தெரிவித்தனர். இப்போதைக்கு அதிக இடங்களில் வெல்ல ஒன்றினைந்து வேலை செய்ய வேண்டும் என்று அவர் கண்டிப்பாக கூறியுள்ளார்.

    இதனால் தேர்தல் வேலைகளில் பா.ஜ.க.வினர் தீவிரமாக இறங்கியுள்ளனர்.

    • கிஷன் ரெட்டி ஆம்பர்பேட்டை தொகுதிக்கு ஒரு பைசா கூட செலவு செய்யவில்லை.
    • ஓட்டு போட்ட மக்களே காங்கிரஸ் கட்சியை தூக்கி எறிவார்கள்.

    தெலுங்கானா முன்னாள் முதல் மந்திரி சந்திரசேகராவின் மகன் கே.டி.ராமராவ். இவர் பி.ஆர்.எஸ் கட்சியின் செயல் தலைவராக இருந்து வருகிறார். பி.ஆர்.எஸ் கட்சியின் பொது கூட்டத்தில் கே.டி.ராமாராவ் கலந்து கொண்டு பேசியதாவது:-

    500 ரூபாய்க்கு கியாஸ் சிலிண்டர் தருவதாக வாக்குறுதி கொடுத்து காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தது. ஆனால் தற்போது ரேஷன் கார்டு உள்ளவர்களுக்கு மட்டுமே தருவதாக ஏமாற்றி வருகின்றனர்.

    காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கையில் கொடுத்த 6 வாக்குறுதிகளை 100 நாட்களுக்குள் நிறைவேற்றாவிட்டால் தெலுங்கானாவில் காங்கிரஸ் கட்சி நசுக்கப்படுவது உறுதி. ஓட்டு போட்ட மக்களே காங்கிரஸ் கட்சியை தூக்கி எறிவார்கள்.

    கடந்த 5 ஆண்டுகளாக மத்திய மந்திரியாக உள்ள கிஷன் ரெட்டி ஆம்பர்பேட்டை தொகுதிக்கு ஒரு பைசா கூட செலவு செய்யவில்லை.

    மக்களவைத் தேர்தலில் எந்த வளர்ச்சியும் இல்லாமல் மோடியின் முகத்தைக் காட்டி ஓட்டு கேட்பது வெட்கக்கேடானது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    முன்னதாக பொதுக்கூட்டத்திற்கு வந்த ராமாராவிற்கு ஐதராபாத் இளைஞர் காங்கிரஸ் தலைவர் ரோஹித் தலைமையில் காங்கிரசார் எதிர்ப்பு கோஷம் எழுப்பினர்.

    பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் காங்கிரசாரை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

    • கொல்லப்பூர் சட்டமன்ற தொகுதியில் சிரிஷா போட்டியிடுகிறார்.
    • எதிர்க்கட்சிகள் அவருக்கு நிதி உதவி செய்வதாக ஆளும் கட்சி குற்றம் சாட்டி உள்ளது.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம், மஹபூப் நகரை சேர்ந்தவர் சிரிஷா என்ற பரெலக்கா. பட்டதாரி பெண்ணான இவர் எருமை மாடுகளை வளர்த்து வருகிறார்.

    சில மாதங்களுக்கு முன்பு சிரிஷா தான் வளர்த்து வரும் மாடுகளுக்கு மத்தியில் வீடியோ எடுத்து, எருமை மாடுகளால் எப்படி வருமானம் கிடைக்கிறது, தன்னால் எப்படி படிப்பை தொடர முடிகிறது என விவரித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டார்.

    ஆயிரகணக்கான வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் சிரிஷாவின் வீடியோவை பார்த்து அவருடன் சமூக வலைத்தளத்தில் இணைந்தனர்.

    இந்த நிலையில் கொல்லப்பூர் சட்டமன்ற தொகுதியில் சிரிஷா போட்டியிடுகிறார். மனு தாக்கல் செய்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

    முதலில் சிரிஷாவின் தேர்தல் பிரசாரத்தை கண்டு ஆளும் மற்றும் எதிர்க்கட்சியை சேர்ந்த வேட்பாளர்கள் அலட்சியம் காட்டினர்.

    நாளுக்கு நாள் சிரிஷாவிற்கு சமூக வலைதளங்களில் ஆதரவு பெருகி வந்தது. ஆதரவு பெருகி வருவதால் அவரை எதிர்த்து போட்டியிடும் வேட்பாளர்கள் அதிர்ச்சி அடைந்து தூக்கத்தை தொலைத்தனர்.

    தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு இருந்த சிரிஷா மற்றும் அவரது சகோதரரை சரமாரியாக தாக்கினர். சிரிஷா ரத்த காயங்களுடன் கதறி அழும் வீடியோ சமூக வலைதளங்களில் பதிவிட்டார். இதனால் மேலும் அவருக்கு ஆதரவு பெருகியது.

    தனக்கு அரசியல் கட்சிகளால் ஆபத்து உள்ளதாக ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து போலீஸ் பாதுகாப்பு பெற்றார்.

    பல்வேறு தரப்பில் இருந்து சிரிசாவுக்கு ஆதரவு குவிந்து வரும் நிலையில் எதிர்க்கட்சிகள் அவருக்கு நிதி உதவி செய்வதாக ஆளும் கட்சி குற்றம் சாட்டி உள்ளது.

    தற்போது சிரிஷாவிற்கு சமூக வலைத்தளங்களில் சமூக ஆர்வலர்கள் பிரசாரம் செய்து வருகின்றனர்.

    அவருக்கு மவுசு அதிகரித்து வருகிறது. அவரை எதிர்த்து போட்டியிடும் வேட்பாளர்கள் கலக்கத்தில் உள்ளனர்.

    • பாரதிய ஜனதா வேட்பாளர்கள் கடவுளால் தேர்வு செய்யப்பட்டவர்கள்.
    • புலனாய்வு அமைப்புகளை தவறாக பயன்படுத்துவது வெளிப்படையாக தெரிகிறது.

    சென்னை:

    தெலுங்கானாவில் வருகிற 30-ந்தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்தநிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான ப.சிதம்பரம் தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் கூறி இருப்பதாவது-

    மத்திய புலனாய்வு அமைப்புகளை ஆளும் பாரதிய ஜனதா தனது சாதகத்திற்கு பயன்படுத்தி கொள்கிறது. இத்தகைய அமைப்பினர் தெலுங்கானாவில் குறைந்தது 4 காங்கிரஸ் வேட்பாளர்களை தேர்தல் பிரசாரத்தின் போது விசாரணைக்கு அழைத்ததுடன், அவர்களின் வீடுகளில் சோதனை நடத்தி உள்ளனர். ஆனால் இதுவரை பா.ஜனதா வேட்பாளர் யாரையும் புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்த வில்லை. இதன்மூலம் புலனாய்வு அமைப்புகளை தவறாக பயன்படுத்துவது வெளிப்படையாக தெரிகிறது.

    பாரதியஜனதா வேட்பாளர்கள் கடவுளால் தேர்வு செய்யப்பட்டவர்கள். அவர்களுக்கு தெய்வ ஆசீர்வாதம் உண்டு. ஒரு வேளை பாரதியஜனதா ஆட்சி அமைந்தால் தெலுங்கானா மக்களை அவர்கள் நேரடியாக சொர்க்கத்துக்கு கூட அழைத்து செல்வார்கள்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • அரசியல் தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
    • தெலுங்கானாவின் எதிர்காலம் குறித்து அனைவருக்கும் சந்தேகம் உள்ளது.

    ஐதராபாத்:

    தெலுங்கானா மாநிலத்தில் சந்திரசேகரராவ் தலைமையிலான தெலுங்கானா ராஷ்டீரிய சமீதி கட்சி ஆட்சி நடந்து வருகிறது. அம்மாநில சட்டசபை தேர்தல் வருகிற 30-ந் தேதி நடக்கிறது. அங்கு அரசியல் தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இந்த நிலையில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, தெலுங்கானாவில் சோமாஜி குடாவில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    உங்கள் (தெலுங்கானா மக்கள்) வாக்குகள் ஒரு எம்.எல்.ஏ. அல்லது அரசாங்கத்தின் தலைவிதியை மட்டும் தீர்மானிக்காது. தெலுங்கானா மற்றும் நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கும். ஒவ்வொரு கட்சியின் செயல்திறனையும் ஆய்வு செய்த பின்னரே வாக்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். அனைத்து கட்சிகளையும் ஆய்வு செய்தவுடன் நீங்கள் பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜனதாவுக்கு வாக்களிப்பீர்கள் என்று எனக்கு நம்பிக்கை உள்ளது.

    சந்திரசேகரராவின் 10 ஆண்டு ஆட்சியை திரும்பி பார்க்கும்போது, ஒரு காலத்தில் வருவாய் உபரி மாநிலமாக இருந்து தற்போது லட்சக்கணக்கான கோடி ரூபாய் கடன் வைத்திருப்பதை காண்கிறோம்.

    இங்கு இளைஞர்கள் மனமுடைந்து போயுள்ளனர். விவசாயிகள், தலித்துக்கள், பிற்படுத்தப்பட்டோர் ஏமாற்றமடைந்துள்ளனர். தெலுங்கானாவின் எதிர்காலம் குறித்து அனைவருக்கும் சந்தேகம் உள்ளது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • மாஸ்டர்கள் களத்தில் நிற்கும் போதெல்லாம் அங்கு மாயாஜாலம் நிகழ்கிறது என்று கவிதா பதிவிட்டுள்ளார்.
    • காலேஸ்வரம் ஊழலில் கே.சி.ஆர்.ஐ. மிஞ்ச ஒருவரும் இல்லை என்று கிண்டல் செய்து காங்கிரஸ் பதிவிட்டுள்ளது.

    திருப்பதி:

    தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் மகள் கவிதா தன்னுடைய தந்தையை கிரிக்கெட் வீரர் விராட் கோலியுடன் ஒப்பிட்டு பாராட்டு தெரிவித்துள்ளார்.

    கவிதா தன்னுடைய எக்ஸ் தளத்தில் முதல்- மந்திரி கே.சி.ஆர்.ஐ. போல் விராட் கோலி தோற்கடிக்க முடியாதவர்.

    மாஸ்டர்கள் களத்தில் நிற்கும் போதெல்லாம் அங்கு மாயாஜாலம் நிகழ்கிறது என்று பதிவிட்டுள்ளார்.

    இதற்கு பதிலடி கொடுத்து எக்ஸ் தள பக்கத்தில் காங்கிரஸ் கட்சி செய்துள்ள பதிவில், நாட்டுக்காக விளையாடுவதற்கும், கமிஷனுக்காக செயல்படுவதற்கும் வித்தியாசம் உள்ளது.

    கிரிக்கெட் வீரர் விராட் கோலிக்கு போட்டியில்லை. காலேஸ்வரம் ஊழலில் கே.சி.ஆர்.ஐ. மிஞ்ச ஒருவரும் இல்லை என்று கிண்டல் செய்து பதிவிட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை முடிவுற்று இறுதிக்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது.
    • இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று மாலை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    திருப்பதி:

    தெலுங்கானாவில் வருகிற 30-ந் தேதி 119 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது.

    இதில் 3-வது முறையாக வெற்றி பெற்று சாதனை படைப்போம் என்று பிஆர்எஸ் கட்சி தலைவர் முதல் மந்திரி கே. சந்திரசேகர ராவ் நம்பிக்கையுடன் கூறி வருகிறார். மாதம் 4,000 உதவித் தொகை, ரூ.500-க்கு கியாஸ் சிலிண்டர் என காங்கிரசின் தேர்தல் வாக்குறுதிகளும் மக்களை கவர்ந்துள்ளது.

    டார்கெட் 75 என்ற இலக்குடன் பா.ஜ.க. களமிறங்கி உள்ளது.

    இந்நிலையில், வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை முடிவுற்று இறுதிக்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது.

    அதன்படி, 119 தொகுதிகளுக்கு. மொத்தம் 4,798 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். இதில் வேட்பு மனு பரிசீலனை செய்ததில் 2,898 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

    வேட்புமனுக்களை வாபஸ் பெற இன்று கடைசி நாள் என்பதால், இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று மாலை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    தெலுங்கானா முதல் மந்திரி சந்திரசேகர ராவ் போட்டியிடும் கஜ்வேல் தொகுதியில் அவரை எதிர்த்து மொத்தம் 113 பேர் போட்டியிடுகின்றனர்.

    இதேபோன்று அவர் போட்டியிடும் மற்றொரு தொகுதியான காமாரெட்டி தொகுதியில் சந்திரசேகர ராவை எதிர்த்து 57 பேர் போட்டியிடுகின்றனர்.

    • தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார்.
    • கமரெட்டி தொகுதியில் மாநில தலைவரை அவருக்கு எதிராக நிறுத்தியுள்ளது காங்கிரஸ்.

    119 தொகுதிகளை கொண்ட தெலுங்கானாவில் வருகிற 30-ந்தேதி சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. நாளை வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும்.

    அம்மாநில முதல்வரும் பாரதிய ராஷ்ரிய சமிதி கட்சி தலைவருமான சந்திரசேகராவ் கமரெட்டி மற்றும் கஜ்வெல் ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார். இந்த நிலையில், இன்று கஜ்வெல் தொகுதியில் போட்டியிடுவதற்கு வேட்புமனு தாக்கல் செய்தார்.

    13-ந்தேதி வேட்புமனு மீதான பரிசீலனை நடைபெறுகிறது. 15-ந்தேதி வேட்புமனு திரும்பப்பெற கடைசி நாளாகும். அன்றைய தினம் ஒவ்வொரு தொகுதிகளிலும் போட்டியிடுபவர்களின் பெயர்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும்.

    வேட்புமனு தாக்கல் செய்த கடைசி நாளான நாளை கமரெட்டியில் வேட்புமனு தாக்கல் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கமரெட்டில் காங்கிரஸ் சார்பில், அக்கட்சியின் மாநில தலைவர் ரேவந்த் ரெட்டி நிறுத்தப்பட்டுள்ளார்.

    • காங்கிரஸ் கட்சி நன்றியற்ற கட்சியாக மாறி உள்ளது.
    • எம்.எல்.சி.கவிதா காங்கிரஸ் கட்சியை விமர்சித்து பேசிய சம்பவம் தெலுங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம், நிஜாமாபாத்தில் உள்ள போர்கான் எக்ஸ்' சாலையில், பிராமண சங்கம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில், முன்னாள் பிரதமர் பி.வி.நரசிம்மராவின் சிலையை தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவின் மகளும் எம்.எல்.சி யுமான கவிதா திறந்து வைத்தார்.

    நிகழ்ச்சியில் முன்னாள் பிரதமர் நரசிம்மராவின் மகளும் எம்.எல்.சி.யுமான சுரபி வாணி, பி.வி.பிரபாகர் ராவ், மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியில் கவிதா பேசியதாவது:-

    முன்னாள் பி.வி. நரசிம்மராவின் தலைமைப் பண்புகளையும், தேசத்திற்கு அவர் ஆற்றிய சேவைகளையும் மறக்கமுடியாது.

    நாட்டில் பொருளாதார சீர்திருத்தங்களை உருவாக்கியவர் பி.வி.நரசிம்மராவ். அவரை கவுரவிக்க காங்கிரஸ் கட்சி தவறிவிட்டது.

    காங்கிரஸ் கட்சி நன்றியற்ற கட்சியாக மாறி உள்ளது. காங்கிரஸ் கட்சி பி.வி. நரசிம்மராவை முற்றிலுமாக மறந்து அவர் கட்சிக்கு ஆற்றிய பங்களிப்பைப் புறக்கணித்துள்ளது.

    தெலுங்கான முதலமைச்சர் கே.சி. சந்திரசேகர ராவ் அவரது பங்களிப்பை அங்கீகரிப்பது மட்டுமல்லாமல், நரசிம்மாராவ் பிறந்த நாள் நூற்றாண்டை உலகம் முழுவதும் பெரிய அளவில் கொண்டாடினார்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    எம்.எல்.சி.கவிதா காங்கிரஸ் கட்சியை விமர்சித்து பேசிய சம்பவம் தெலுங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • சந்திரசேகர் ராவின் ரிமோட் கண்ட்ரோல், பிரதமர் மோடியிடம் இருக்கிறது.
    • பாரதிய ராஷ்டிர சமிதி இருக்கும் கூட்டணியில் காங்கிரஸ் சேராது.

    கம்மம் :

    தெலுங்கானாவில் இந்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக காங்கிரஸ் கட்சி தீவிர களப்பணி ஆற்றி வருகிறது. கட்சியின் மூத்த தலைவரான ராகுல் காந்தி மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

    கம்மம் பகுதியில் நேற்று நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் உரையாற்றினார். அப்போது மாநிலத்தை ஆளும் பாரதிய ராஷ்டிர சமிதி அரசையும், முதல்-மந்திரி சந்திரசேகர் ராவையும் கடுமையாக சாடினார்.

    இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    'பாரதிய ராஷ்டிர சமிதி' என்பது, 'பா.ஜனதா உறவினர் சமிதி' போலத்தான். சந்திரசேகர் ராவ், தன்னை ஒரு பேரரசராகவும், தெலுங்கானாவை தனது பேரரசாகவும் நினைத்துக்கொள்கிறார்.

    பாராளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சி எப்போதும் பா.ஜனதாவுக்கு எதிராகத்தான் நின்று இருக்கிறது. ஆனால் சந்திரசேகர் ராவின் கட்சி, பா.ஜனதாவின் பி டீமாகத்தான் உள்ளது.

    சந்திரசேகர் ராவ் மற்றும் அவரது கட்சித் தலைவர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் அவர்களை பா.ஜனதாவுக்கு அடிபணியச் செய்துள்ளது. தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர் ராவின் ரிமோட் கண்ட்ரோல், பிரதமர் மோடியிடம் இருக்கிறது.

    சந்திரசேகர் ராவ் தலைமையிலான பாரதிய ராஷ்டிர சமிதி இருக்கும் கூட்டணியில் காங்கிரஸ் சேராது. இதை பிற எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கூறிவிட்டேன்.

    காங்கிரஸ் கட்சி சமீபத்தில் கர்நாடகத்தில் ஒரு ஊழல் மற்றும் ஏழை விரோத அரசுக்கு எதிராக வெற்றி பெற்றது. ஏழைகள், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினர், சிறுபான்மையினர் மற்றும் ஒடுக்கப்பட்டவர்களின் ஆதரவுடன் நாங்கள் அவர்களை தோற்கடித்தோம்.

    இது தெலுங்கானாவிலும் நடைபெறும். மாநிலத்தின் பெரும் பணக்காரர்கள், அதிகாரம் மிக்கவர்கள் ஒருபுறம் இருக்கின்றனர். மறுபுறம் ஏழைகள், பழங்குடியினர், சிறுபான்மையினர், விவசாயிகள் மற்றும் சிறு வணிகர்கள் எங்களுடன் இருக்கின்றனர். கர்நாடகாவில் நடந்தது இங்கேயும் நடக்கும்.

    இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.

    ×