என் மலர்

    நீங்கள் தேடியது "Chandrashekar Rao"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இரைப்பை பிரச்சனையால் அவதிப்பட்ட அவரை குடும்பத்தினர் ஏஐஜி மருத்துவமனையில் சேர்த்தனர்.
    • வயிற்று வலி மற்றும் பிற உடல்நலக் கோளாறுகள் உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

    திருப்பதி:

    தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகரராவிற்கு திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டது.

    இரைப்பை பிரச்சனையால் அவதிப்பட்ட அவரை, அவரது குடும்பத்தினர் ஐதராபாத், கச்சிபவுலியில் உள்ள ஏஐஜி மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு மருத்துவர்கள் பல்வேறு பரிசோதனைகளை மேற்கொண்டனர்.

    அவருக்கு வயிற்று வலி மற்றும் பிற உடல்நலக் கோளாறுகள் உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர். சாதாரண மருத்துவ பரிசோதனைக்காக சந்திரசேகரராவ் மருத்துவமனைக்கு வந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.

    சந்திரசேகரராவுக்கு சிகிச்சை அளித்த டாக்டர் நாகேஸ்வரரெட்டி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

    காலையில் வயிற்றில் அசவுகரியமாக இருப்பதாக சந்திரசேகர ராவ் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார்.

    அவருக்கு சி.டி., எண்டோஸ்கோபி பரிசோதனைகள் செய்யப்பட்டது. அவருக்கு அல்சர் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

    அல்சர் பிரச்சினையில் இருந்து சந்திரசேகரராவ் விரைவில் குணமடைவார். மற்ற அனைத்து வகையான சோதனைகளும் இயல்பானவை. அவருக்கு தேவையான மருந்துகளை கொடுத்துள்ளோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இதனிடையே, இரவு 7.15 மணிக்கு மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட சந்திரசேகர ராவ் பிரகதி பவன் சென்றார். 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இந்தியாவில் ஆப்கானிஸ்தானாக தெலுங்கானா மாநிலம் மாறி வருகிறது.
    • தலிபானாக முதல் மந்திரி சந்திரசேகர ராவ் உள்ளார் என ஆந்திர முதல் மந்திரி சகோதரி கூறியுள்ளார்.

    ஐதராபாத்:

    ஆந்திர முதல் மந்திரியாக பதவி வகித்து வருபவர் ஜெகன்மோகனின் ரெட்டி. இவரது சகோதரி ஷர்மிளா, தெலுங்கானா மாநிலத்தில் ஒய்.எஸ்.ஆர் தெலுங்கானா கட்சியை நடத்தி வருகிறார்.

    இந்நிலையில், தெலுங்கானாவில் மெஹபூபாபாத் நகரில் ஷர்மிளா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    சந்திரசேகர ராவ் சர்வாதிகாரி, கொடுங்கோலனாக உள்ளார். இங்கு இந்திய அரசியல் சாசனம் அமலில் இல்லை. சந்திரசேகர ராவின் சாசனம் தான் உள்ளது. இந்தியாவின் ஆப்கானிஸ்தானாக தெலுங்கானா உள்ளது. அதன் தலிபானாக சந்திரசேகர ராவ் உள்ளார் என தெரிவித்தார்.

    இதையடுத்து, ஷர்மிளாவைக் கண்டித்து சந்திரசேகர ராவ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவரது கொடும்பாவியை எரித்ததுடன் மாநிலத்தை விட்டு வெளியேறு என கோஷம் போட்டனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சந்திரசேகர ராவ் சொன்னபடி தலித் ஒருவரை முதல்வராக்க வேண்டும்.
    • சந்திரசேகரராவ் தேர்தலின் போது பல வாக்குறுதிகளை அளித்து முதல்வரானார்.

    திருப்பதி:

    தெலுங்கானா ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தலைவரும், ஜெகன் மோகன் ரெட்டி தங்கையுமான ஷர்மிளா தனது தாயுடன் சேர்ந்து தெலுங்கானா முழுவதும் பாதயாத்திரை நடத்தி வந்தார்.

    அப்போது முதலமைச்சர் சந்திரசேகர ராவ் குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறினார்.

    இந்த நிலையில் கடந்த மாதம் பாதயாத்திரை சென்ற ஷர்மிளா மீது முதலமைச்சர் சந்திரசேகர ராவை அவதூறாக பேசியதாக கூறி அவரது பிரச்சார வாகனத்தின் மீது கற்களை வீசினர்.

    பின்னர் பிரசார வாகனத்திற்கு தீ வைத்து எரித்தனர். இதனால் பாதயாத்திரைக்கு தடை விதிக்கப்பட்டது.

    இந்த நிலையில் நேற்று முதல்-அமைச்சர் சந்திரசேகர ராவுக்கு ஒரு ஜோடி ஷூக்களை அனுப்ப உள்ளதாக ஐதராபாத்தில் நிருபர்களிடம் ஷர்மிளா கூறினார்.

    தனது ஆட்சி அற்புதமாக இருப்பதாக முதலமைச்சர் சந்திரசேகர ராவ் கூறி வருகிறார். தெலுங்கானாவில் எந்த பிரச்னையும் இல்லை என நிரூபித்தால் நான் அரசியலில் இருந்து விலகுகிறேன்.

    இது உண்மை இல்லை என்றால் சந்திரசேகர ராவ் மக்களிடம் மன்னிப்பு கேட்டு முதல்வர் பதவியில் இருந்து விலக வேண்டும்.

    சந்திரசேகர ராவ் சொன்னபடி தலித் ஒருவரை முதல்வராக்க வேண்டும். சந்திரசேகரராவ் தேர்தலின் போது பல வாக்குறுதிகளை அளித்து முதல்வரானார்.

    ஆனால், மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. சந்திரசேகர ராவுக்கு தைரியமும், ஆட்சியில் நம்பிக்கையும் இருந்தால் ஒரு நாள் பாத யாத்திரைக்கு என்னுடன் வர வேண்டும்.

    இதற்காக தான் ஒரு ஜோடி ஷூக்களை முதலமைச்சர் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கிறேன். ஷூ சைஸ் சரியாக இல்லாவிட்டால் எக்ஸ்சேஞ்ச் செய்து கொள்ள பில் கூட அனுப்புகிறேன்.

    தொப்பி அணிந்து கொண்டு தனி விமானத்தில் சுற்றி வராமல் தங்களது கட்சிக்கு வாக்களித்து வெற்றி பெற வைத்த மக்களை பற்றி சிந்திக்க வேண்டும். ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் ஆட்சியில் மக்கள் குறைகள் இன்றி வாழ்ந்தனர்.

    பொதுமக்கள் முதல்வரை சந்தித்து குறைகளை தெரிவித்தனர். ஆனால் தற்போது முதலமைச்சரை பொதுமக்கள் யாரும் சந்திக்க முடியாத சூழ்நிலை உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று காலை ராஜ்பவனில் தேசிய கொடியை ஏற்றி வைத்து பேசினார்.
    • கருத்து வேறுபாடு காரணமாக ஐகோர்ட்டு உத்தரவையும் மீறி முதலமைச்சர் சந்திரசேகர ராவ் குடியரசு தின விழாவில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்த சம்பவம் தெலுங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    திருப்பதி:

    குடியரசு தினத்தை முன்னிட்டு ஆண்டுதோறும் தெலுங்கானா மாநிலம், செகந்திராபாத்தில் உள்ள போலீஸ் பயிற்சி மைதானத்தில் குடியரசு தின விழா கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த ஆண்டு குடியரசு தின விழா ரத்து செய்யப்பட்டது.

    இந்த நிலையில் தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகரராவிற்கும், கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோருக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக விரிசல் ஏற்பட்டது. இதனால் இந்த ஆண்டும் கொரோனாவை காரணம் காட்டி செகந்திராபாத்தில் குடியரசு தின விழாவை மாநில அரசு ரத்து செய்தது. இதுகுறித்து கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு மாநில அரசு சார்பில் தகவல் அனுப்பி இருந்தனர். அதில் ராஜ் பவனில் தனியாக குடியரசு தின விழாவை நடத்திக் கொள்ளலாம் என தெரிவித்து இருந்தனர்.

    இதுகுறித்து ஐதராபாத்தை சேர்ந்த சீனிவாஸ் என்பவர் தற்போது கொரோனா தொற்று பரவல் இல்லாத நிலையில் மாநில அரசு வேண்டும் என்றே கவர்னரை தவிர்க்க வேண்டும் என்பதற்காக கொரோனாவை காரணம் காட்டி குடியரசு தின விழாவை ரத்து செய்துள்ளது எனவே குடியரசு தின விழாவை நடத்த உத்தரவு வழங்க வேண்டும் என வழக்கு தொடர்ந்தார். அவரது வழக்கை விசாரித்த ஐதராபாத் ஐகோர்ட்டு வழக்கம்போல் குடியரசு தின விழாவை செகந்திராபாத்தில் நடந்த வேண்டுமென உத்தரவிட்டது.

    இருப்பினும் இன்று காலை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் ராஜ்பவனில் தேசிய கொடியை ஏற்றி வைத்து பேசினார். குடியரசு தின விழாவில் முதலமைச்சர் சந்தரசேகர ராவ் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தார். நிகழ்ச்சியில் மாநில அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் சந்திரகுமாரி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

    கருத்து வேறுபாடு காரணமாக ஐகோர்ட்டு உத்தரவையும் மீறி முதலமைச்சர் சந்திரசேகர ராவ் குடியரசு தின விழாவில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்த சம்பவம் தெலுங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இந்த பெயர் மாற்றத்துக்கு தேர்தல் கமிஷன் ஒப்புதல் அளித்து இருக்கிறது.
    • கட்சித்தலைமை அலுவலகத்தில் சந்திரசேகர் ராவ் கொடியேற்றினார்.

    ஐதராபாத் :

    தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர் ராவ், தெலுங்கானா ராஷ்டிர சமிதி (டி.ஆர்.எஸ்.) என்ற பெயரில் கடந்த 2001-ம் ஆண்டு கட்சி தொடங்கினார். தெலுங்கானா பிரிவினைக்காக பாடுபட்ட அவர், மாநில பிரிவினைக்குப்பின் தெலுங்கானாவில் ஆட்சியையும் பிடித்து உள்ளார்.

    இந்த நிலையில் தனது கட்சியை கடந்த அக்டோபர் மாதம் தேசிய கட்சியாக மாற்றி, பாரதிய ராஷ்டிர சமிதி (பி.ஆர்.எஸ்.) என பெயரையும் மாற்றி சந்திரசேகர் ராவ் அறிவித்தார்.

    பின்னர் இதற்கு அங்கீகாரம் கேட்டு தேர்தல் கமிஷனுக்கு டி.ஆர்.எஸ். கட்சி கடிதம் அனுப்பியது. இந்த பெயர் மாற்றத்துக்கு தேர்தல் கமிஷன் ஒப்புதல் அளித்து இருக்கிறது.

    இதைத்தொடர்ந்து தெலுங்கானா ராஷ்டிர சமிதி, பாரதிய ராஷ்டிர சமிதியாக நேற்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதையொட்டி கட்சித்தலைமை அலுவலகத்தில் சந்திரசேகர் ராவ் கொடியேற்றினார்.

    இந்த நிகழ்ச்சியில் கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி, நடிகர் பிரகாஷ் ராஜ் மற்றும் கட்சியின் மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சுமார் 10 ஆயிரம் தொழிற்சாலைகள் மூடப்பட்டு இருக்கின்றன.
    • 50 லட்சம் பேர் வேலை இழந்து இருக்கிறார்கள்.

    ஐதராபாத் :

    தெலுங்கானாவின் ஜாக்டியால் மாவட்டத்தில் கலெக்டர் அலுவலக வளாகத்தை முதல்-மந்திரி சந்திரசேகர் ராவ் நேற்று திறந்து வைத்தார். பின்னர் நிகழ்ச்சியில் பேசும்போது அவர் பிரதமர் மோடியை கடுமையாக குற்றம் சாட்டினார்.

    அவர் கூறுகையில், 'பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் கடந்த 8 ஆண்டுகால ஆட்சியில் சுமார் 10 ஆயிரம் தொழிற்சாலைகள் மூடப்பட்டு இருக்கின்றன. இதன்மூலம் 50 லட்சம் பேர் வேலை இழந்து இருக்கிறார்கள். கடந்த 8 ஆண்டுகளில் நாட்டுக்கு பிரதமர் மோடி எதையும் செய்யவில்லை' என விமர்சித்தார்.

    விவசாயம், மின்சாரம், வளர்ச்சி என எந்த துறையாவது நாட்டில் வளர்ச்சி கண்டிருக்கிறதா? என கேள்வி எழுப்பிய அவர், இது தொடர்பாக எந்த இடத்திலும் விவாதத்துக்கு தயார் எனவும், மத்திய அரசின் திறமையின்மையால் சுமார் ரூ.3 லட்சம் கோடி அளவுக்கு மாநிலம் இழந்திருக்கிறது என்றும் தெரிவித்தார்.

    லாபம் ஈட்டும் பொதுத்துறை நிறுவனங்களை மத்திய அரசு விற்பதை சுட்டிக்காட்டிய சந்திரசேகர் ராவ், அறிவுஜீவிகள், இளைஞர்கள் இது குறித்து சிந்திக்குமாறும், இந்த தீய பாரம்பரியம் ஒழிய வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மக்களிடையே வெறுப்புணர்வு பரப்பப்படுகிறது.
    • எதிர்க்கட்சி தலைவர்கள் மீது தாக்குதல் நடக்கிறது.

    ஐதராபாத் :

    தெலுங்கானா மாநில முதல்-மந்திரியும், தெலுங்கானா ராஷ்டிர சமிதி தலைவருமான சந்திரசேகர ராவ், மெகபூப்நகரில் புதிய ஒருங்கிணைந்த மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தை திறந்து வைத்தார். கட்சியின் மாவட்ட அலுவலகத்தையும் திறந்து வைத்தார்.

    பின்னர் அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் மத்திய அரசை கடுமையாக விமர்சித்தார். அவர் பேசியதாவது:-

    தெலுங்கானாவின் முன்னேற்றத்துக்கு பிரதமர் மோடியும், மத்திய அரசும் முட்டுக்கட்டை போடுகிறார்கள். மாநிலத்தின் மொத்த உற்பத்தி ரூ.11 லட்சத்து 50 ஆயிரம் கோடியாக உள்ளது. மத்திய அரசின் ஒத்துழைப்பு இருந்திருந்தால், ரூ.14 லட்சத்து 50 ஆயிரம் கோடியாக உயர்ந்து இருக்கும். ரூ.3 லட்சம் கோடி வருவாய் போய்விட்டது.

    இப்படி மாநிலத்தின் முன்னேற்றத்தை தடுப்பது நியாயமா? நீங்களும் வேலை செய்வதில்லை. மற்றவர்களையும் வேலை செய்ய அனுமதிப்பது இல்லை. யாராவது கேள்வி கேட்டால், உங்கள் அரசை தூக்கி எறிவோம் என்கிறீர்கள்.

    பிரதமர் மோடி சொல்கிறார். ''சந்திரசேகர ராவ், உங்கள் அரசை தூக்கி எறிவேன்'' என்கிறார். இதில் இருந்து நமக்கு என்ன தெரிகிறது?. உங்களைப் போல், நாங்களும் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இல்லையா? மக்கள் ஆதரவு இல்லாமலா ஆட்சி அமைத்துள்ளோம்?.

    என்ன காரணத்துக்காக ஆட்சியை தூக்கி எறிவீர்கள்?. ஒரு பிரதமர், மேற்கு வங்காளத்துக்கு சென்று, ''உங்கள் எம்.எல்.ஏ.க்களில் 40 பேர் எங்களுடன் தொடர்பில் இருக்கிறார்கள்'' என்று பேச முடியுமா?. அவர் சொல்வாரா?

    தெலுங்கானா ராஷ்டிர சமிதி எம்.எல்.ஏ.க்களிடையே பிளவை ஏற்படுத்த சில திருடர்கள் வந்தனர். அவர்கள் இப்போது ஜெயிலில் இருக்கிறார்கள்.

    யார் ஆள வேண்டும், யார் எதிர்க்கட்சி வரிசையில் இருக்க வேண்டும் என்பதை மக்கள்தான் தீர்மானிக்கிறார்கள். மாநில அரசு, எந்த இடையூறும் இன்றி 5 ஆண்டுகள் ஆள அனுமதிக்கப்பட வேண்டும்.

    அற்ப அரசியல் ஆதாயத்துக்காக நாட்டின் உயிர்நாடியையே பா.ஜனதா பாழாக்குகிறது. மக்களிடையே வெறுப்புணர்வு பரப்பப்படுகிறது. எதிர்க்கட்சி தலைவர்கள் மீது தாக்குதல் நடக்கிறது.

    கிருஷ்ணா நதிநீர் பிரச்சினையில் தெலுங்கானாவின் பங்கை அளிக்க மத்திய அரசு முன்வரவில்லை.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பா.ஜனதாவில் இணைந்து போட்டியிட்டால் ரூ.100 கோடி தருவதாக புகார்.
    • நான் ஒரு கண்ணியமான அரசியல்வாதி.

    ஐதராபாத் :

    தெலுங்கானாவில் சந்திரசேகர் ராவ் தலைமையில் தெலுங்கானா ராஷ்டிர சமிதி ஆட்சியில் உள்ளது. இந்த கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் சிலருக்கு, கட்சியில் இருந்து விலக சமீபத்தில் பா.ஜனதா தரப்பில் பேரம் பேசியதாக புகார் எழுந்தது.

    குறிப்பாக ஆளுங்கட்சியில் இருந்து விலகி அடுத்த தேர்தலில் பா.ஜனதாவில் இணைந்து போட்டியிட்டால் ரூ.100 கோடி தருவதாக கூறி மர்ம நபர்கள் சிலர் அணுகியதாக சில எம்.எல்.ஏ.க்கள் புகார் கூறினர்.

    இந்த விவகாரத்தில் 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மாநிலம் மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த 7 பேர் கொண்ட சிறப்புக்குழு ஒன்றையும் மாநில அரசு அமைத்து உள்ளது.

    இந்த நிலையில் சந்திரசேகர் ராவின் மகளும், சட்ட மேலவை உறுப்பினருமான கவிதாவிடமே பா.ஜனதாவில் இணையுமாறு அந்த கட்சியினர் அணுகியதாக நேற்று அவர் பரபரப்பு தகவலை வெளியிட்டார்.

    முன்னதாக இவர் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேயிடம் போனில் பேசியதாக பா.ஜனதா எம்.பி. தர்மபுரி அரவிந்த் கூறியிருந்தார்.

    இதை மறுக்கும் வகையில் கவிதா நேற்று செய்தியாளர்களிடம் கூறுகையில், 'நான் ஒரு கண்ணியமான அரசியல்வாதி. நீண்ட காலம் அரசியலில் இருக்க விரும்புகிறேன். நான் யார் பெயரையும் கூற விரும்பவில்லை. பா.ஜனதாவில் இணையுமாறு அந்த கட்சியின் நண்பர்கள் சிலர் மற்றும் நட்பு அமைப்புகள் என்னை அணுகின. 'ஷிண்டே மாடல்' என்ற பெயரில் இந்த வாய்ப்பை வழங்க முன்வந்தனர். ஆனால் பணிவாக மறுத்து விட்டேன். ஏனெனில் எனது தலைவர் சந்திரசேகர் ராவ் காருவின் கட்சியில் என் இதயம் உள்ளது' என்று தெரிவித்தார்.

    எனவே தன்னை பற்றி தவறான தகவல்களை பரப்புவதை நிறுத்துமாறு பா.ஜனதா எம்.பி.க்கு அறிவுறுத்திய கவிதா, தவறினால் செருப்பால் அடிப்பேன் என்றும் எச்சரிக்கை விடுத்தார்.

    மராட்டியத்தில் சிவசேனா சார்பில் மந்திரியாக இருந்த ஏக்நாத் ஷிண்டே, சிவசேனா-காங்கிரஸ் கூட்டணிக்கு வழங்கியிருந்த ஆதரவை திடீரென விலக்கிக்கொண்டு தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் பா.ஜனதாவுடன் கைகோர்த்து தற்போது முதல்-மந்திரியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

    முதல்-மந்திரி சந்திரசேகர் ராவ் மகளின் இந்த குற்றச்சாட்டு தெலுங்கானா அரசியலில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இதற்கிடையே சந்திரசேகர் ராவின் மகள் கவிதா மீது அவதூறு கருத்துகளை தெரிவித்ததாக, பா.ஜனதா எம்.பி. தர்மபுரி அரவிந்தின் வீட்டை தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சித்தொண்டர்கள் நேற்று சூறையாடினர்.

    இது ஐதராபாத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தற்போதைய மத்திய அரசு கூட்டாட்சி தத்துவங்களை சீர்குலைக்கிறது.
    • மக்கள் நலன்தான் அரசுகளின் முக்கிய கடமை.

    ஐதராபாத் :

    சுதந்திர தினத்தையொட்டி, தெலுங்கானா மாநில தலைநகர் ஐதராபாத்தில் முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் தேசிய கொடி ஏற்றி வைத்தார். பிறகு அவர் பேசியதாவது:-

    மக்கள் நலன்தான் அரசுகளின் முக்கிய கடமை. ஆனால், அந்த கடமையை செய்யாத மத்திய அரசு, மாநில அரசுகள் வழங்கும் நலத்திட்டங்களை 'இலவசம்' என்று சொல்கிறது. அப்படி சொல்வது தவறு.

    மேலும், தற்போதைய மத்திய அரசு கூட்டாட்சி தத்துவங்களை சீர்குலைக்கிறது. மாநில அரசுகளை பொருளாதார ரீதியாக பலவீனப்படுத்த சதி செய்கிறது. மத்திய வரி வருவாயில் மாநிலங்களுக்கு அளிக்க வேண்டிய 41 சதவீத பங்கை 29.6 சதவீதமாக குறைத்துவிட்டது.

    பொது பட்டியலில் உள்ள விவகாரங்களை மாநில அரசுகளுடன் ஆலோசனை நடத்தாமல் தன்னிச்சையாக முடிவு எடுக்கிறது. தனது தவறுகளை மறைக்க வெறுப்பு அரசியல் மூலம் மக்களை பிளவுபடுத்த பார்க்கிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • குறுகிய நேரத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் மிக மிக அதிக கனமழை பெய்வது மேக வெடிப்பு என்று சொல்லப்படுகிறது.
    • மேக வெடிப்பு என்று அழைக்கப்படும் புதிய நிகழ்வு ஆங்காங்கே தற்போது நிகழ்கிறது.

    ஐதராபாத் :

    மேகவெடிப்பு பிற வெளிநாடுகளால் ஏற்படுத்தப்படும் சதியாக இருக்கலாம் என சந்தேகிப்பதாக தெலுங்கானா முதல் மந்திரி சந்திரசேகர் ராவ் தெரிவித்துள்ளார். தெலுங்கானா மாநிலத்தில் கடந்த ஒருவாரமாக இடைவிடாது தொடர் மழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக தெலுங்கானாவில் பல இடங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. குறிப்பாக அம்மாநிலத்தின் கோவில் நகரம் என்று அழைக்கப்படும் பத்ராசலம் பகுதியில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

    பத்ராசலத்தின் அணையின் நீரின் அளவு 70 அடியை இரு தினங்களுக்கு முன் கடந்தது. 53 அடியை நீர் மட்டம் கடந்த போது இறுதி எச்சரிக்கை விடப்பட்டது. தற்போது அணையின் நீர் மட்டம் 60 அடியாக உள்ளது. இந்த நிலையில், வெள்ளம் பாதித்த பகுதிகளை தெலுங்கானா முதல் மந்திரி சந்திர சேகர் ராவ் இன்று பார்வையிட்டார்.

    பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சந்திரசேகர் கூறுகையில், "மேக வெடிப்பு என்று அழைக்கப்படும் புதிய நிகழ்வு ஆங்காங்கே தற்போது நிகழ்கிறது. மேக வெடிப்பு சதி செயலாக இருக்கலாம் என்று மக்கள் பேசுகின்றனர். வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் வேண்டும் என்றே மேக வெடிப்பை குறிப்பிட்ட சில இடத்தில் நிகழச் செய்வதாக கூறப்படுகிறது. இது எந்த அளவு உண்மை என்பதை நமக்கு தெரியவில்லை. கடந்த காலங்களில் காஷ்மீர் அருகே இது போன்று மேகவெடிப்பு நடத்தப்பட்டது. பிறகு உத்தரகாண்டிலும் நடந்தது. தற்போது கோதாவரி பகுதியில் மேகவெடிப்பை ஏற்பட செய்து வருவதாக எங்களுக்கு தகவல்கள் வந்து கொண்டு இருக்கின்றன" என்றார்.

    குறுகிய நேரத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் மிக மிக அதிக கனமழை பெய்வது மேக வெடிப்பு என்று சொல்லப்படுகிறது. அதாவது, திடீரென 100 மி.மீட்டர் (10 செ.மீ) மேல் ஒரு குறிப்பிட்ட பரப்பளவில் மழை கொட்டுவதை மேக வெடிப்பு என்று வானிலை ஆய்வு மையம் வரையறுக்கிறது. சமீபத்தில் அமர்நாத்த்தில் மேக வெடிப்பு ஏற்பட்டு பெரு வெள்ளம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print