search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    சந்திரசேகரராவுக்கு ஷூ அனுப்பி வைத்த ஜெகன்மோகன் ரெட்டி தங்கை
    X

    சந்திரசேகரராவுக்கு அனுப்பி வைத்த ஷூவை காட்டிய ஷர்மிளா.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    சந்திரசேகரராவுக்கு 'ஷூ' அனுப்பி வைத்த ஜெகன்மோகன் ரெட்டி தங்கை

    • சந்திரசேகர ராவ் சொன்னபடி தலித் ஒருவரை முதல்வராக்க வேண்டும்.
    • சந்திரசேகரராவ் தேர்தலின் போது பல வாக்குறுதிகளை அளித்து முதல்வரானார்.

    திருப்பதி:

    தெலுங்கானா ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தலைவரும், ஜெகன் மோகன் ரெட்டி தங்கையுமான ஷர்மிளா தனது தாயுடன் சேர்ந்து தெலுங்கானா முழுவதும் பாதயாத்திரை நடத்தி வந்தார்.

    அப்போது முதலமைச்சர் சந்திரசேகர ராவ் குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறினார்.

    இந்த நிலையில் கடந்த மாதம் பாதயாத்திரை சென்ற ஷர்மிளா மீது முதலமைச்சர் சந்திரசேகர ராவை அவதூறாக பேசியதாக கூறி அவரது பிரச்சார வாகனத்தின் மீது கற்களை வீசினர்.

    பின்னர் பிரசார வாகனத்திற்கு தீ வைத்து எரித்தனர். இதனால் பாதயாத்திரைக்கு தடை விதிக்கப்பட்டது.

    இந்த நிலையில் நேற்று முதல்-அமைச்சர் சந்திரசேகர ராவுக்கு ஒரு ஜோடி ஷூக்களை அனுப்ப உள்ளதாக ஐதராபாத்தில் நிருபர்களிடம் ஷர்மிளா கூறினார்.

    தனது ஆட்சி அற்புதமாக இருப்பதாக முதலமைச்சர் சந்திரசேகர ராவ் கூறி வருகிறார். தெலுங்கானாவில் எந்த பிரச்னையும் இல்லை என நிரூபித்தால் நான் அரசியலில் இருந்து விலகுகிறேன்.

    இது உண்மை இல்லை என்றால் சந்திரசேகர ராவ் மக்களிடம் மன்னிப்பு கேட்டு முதல்வர் பதவியில் இருந்து விலக வேண்டும்.

    சந்திரசேகர ராவ் சொன்னபடி தலித் ஒருவரை முதல்வராக்க வேண்டும். சந்திரசேகரராவ் தேர்தலின் போது பல வாக்குறுதிகளை அளித்து முதல்வரானார்.

    ஆனால், மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. சந்திரசேகர ராவுக்கு தைரியமும், ஆட்சியில் நம்பிக்கையும் இருந்தால் ஒரு நாள் பாத யாத்திரைக்கு என்னுடன் வர வேண்டும்.

    இதற்காக தான் ஒரு ஜோடி ஷூக்களை முதலமைச்சர் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கிறேன். ஷூ சைஸ் சரியாக இல்லாவிட்டால் எக்ஸ்சேஞ்ச் செய்து கொள்ள பில் கூட அனுப்புகிறேன்.

    தொப்பி அணிந்து கொண்டு தனி விமானத்தில் சுற்றி வராமல் தங்களது கட்சிக்கு வாக்களித்து வெற்றி பெற வைத்த மக்களை பற்றி சிந்திக்க வேண்டும். ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் ஆட்சியில் மக்கள் குறைகள் இன்றி வாழ்ந்தனர்.

    பொதுமக்கள் முதல்வரை சந்தித்து குறைகளை தெரிவித்தனர். ஆனால் தற்போது முதலமைச்சரை பொதுமக்கள் யாரும் சந்திக்க முடியாத சூழ்நிலை உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×