search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    சந்திரசேகரராவிற்கு திடீர் உடல்நல குறைவு- ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    சந்திரசேகரராவிற்கு திடீர் உடல்நல குறைவு- ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்

    • இரைப்பை பிரச்சனையால் அவதிப்பட்ட அவரை குடும்பத்தினர் ஏஐஜி மருத்துவமனையில் சேர்த்தனர்.
    • வயிற்று வலி மற்றும் பிற உடல்நலக் கோளாறுகள் உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

    திருப்பதி:

    தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகரராவிற்கு திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டது.

    இரைப்பை பிரச்சனையால் அவதிப்பட்ட அவரை, அவரது குடும்பத்தினர் ஐதராபாத், கச்சிபவுலியில் உள்ள ஏஐஜி மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு மருத்துவர்கள் பல்வேறு பரிசோதனைகளை மேற்கொண்டனர்.

    அவருக்கு வயிற்று வலி மற்றும் பிற உடல்நலக் கோளாறுகள் உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர். சாதாரண மருத்துவ பரிசோதனைக்காக சந்திரசேகரராவ் மருத்துவமனைக்கு வந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.

    சந்திரசேகரராவுக்கு சிகிச்சை அளித்த டாக்டர் நாகேஸ்வரரெட்டி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

    காலையில் வயிற்றில் அசவுகரியமாக இருப்பதாக சந்திரசேகர ராவ் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார்.

    அவருக்கு சி.டி., எண்டோஸ்கோபி பரிசோதனைகள் செய்யப்பட்டது. அவருக்கு அல்சர் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

    அல்சர் பிரச்சினையில் இருந்து சந்திரசேகரராவ் விரைவில் குணமடைவார். மற்ற அனைத்து வகையான சோதனைகளும் இயல்பானவை. அவருக்கு தேவையான மருந்துகளை கொடுத்துள்ளோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இதனிடையே, இரவு 7.15 மணிக்கு மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட சந்திரசேகர ராவ் பிரகதி பவன் சென்றார்.

    Next Story
    ×