search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sharmila"

    • சந்திரபாபு நாயுடு சர்மிளாவிற்கு பணம் வழங்கவில்லை என்றால் அவருக்கு எங்கே இருந்து இவ்வளவு பணம் வந்தது.
    • சர்மிளா சந்திரபாபு நாயுடுவின் கை பாவையாக மாறி இருக்கிறார்.

    திருப்பதி:

    ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி மாநில பிரதிநிதியும், முன்னாள் எம்.எல்.ஏ-வுமான ரமேஷ் குமார் ரெட்டி கூறியதாவது:-

    கடப்பா மாநகராட்சி தேர்தலில் காங்கிரஸ் கட்சி தலைவர் சர்மிளாவுக்கு சந்திரபாபு நாயுடு ரூ.60 கோடி வழங்கி உள்ளார்.

    சந்திரபாபு நாயுடு சர்மிளாவிற்கு பணம் வழங்கவில்லை என்றால் அவருக்கு எங்கே இருந்து இவ்வளவு பணம் வந்தது.

    சந்திரபாபு நாயுடுவின் நாடகத்தில் சர்மிளா நடிக்கிறார். அவருக்கு முக்கிய கதாபாத்திரம் வழங்கப்பட்டுள்ளது.

    அவரது ஏற்பாட்டின் பேரிலேயே சர்மிளா ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறார்.

    சர்மிளா சந்திரபாபு நாயுடுவின் கை பாவையாக மாறி இருக்கிறார். கடப்பா மாவட்டத்தில் 10 தொகுதிகளில் தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளர்கள் சர்மிளாவிற்கு பணம் கொடுத்து போட்டியிடுகின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மக்கள் பிரச்சனைக்காக நானும் ஜெகன்மோகன் ரெட்டியை கேள்வி கேட்கிறேன்.
    • ஆந்திராவின் சிறப்பு அந்தஸ்து என்ன ஆனது.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலத்தில் பாராளுமன்ற தேர்தலுடன் சட்டசபை தேர்தலும் நடைபெற உள்ளது. ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், பா.ஜ.க., தெலுங்கு தேசம் கூட்டணி மற்றும் காங்கிரஸ் கட்சி என மும்முனை போட்டி நிலவுகிறது.

    மாநிலத்தில் காங்கிரஸ் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள சர்மிளா அண்ணன் என்று கூட பார்க்காமல் முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டியை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்.

    இந்த நிலையில் தனது அண்ணனுக்காக தானும் ஒரு காலத்தில் போராட்டங்களில் ஈடுபட்டதாக சர்மிளா உருக்கமாக பேசினார்.

    ஒய்.எஸ்.ஆர். மாவட்டம் மைடுகூரில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் சர்மிளா பேசியதாவது:-

    கடந்த காலங்களில் என்னுடைய தந்தை ராஜசேகர ரெட்டியின் கனவை ஜெகன்மோகன் ரெட்டி நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கையுடன் இருந்தேன். நானும் ஜெய் ஜெகன் கோஷத்தை எழுப்பினேன். அவர் ஜெயிலில் இருந்த போது அவருக்கு ஆதரவாக 3200 கிலோமீட்டர் பாதயாத்திரை சென்றேன்.

    ஆனால் முதல் மந்திரியாக பதவி ஏற்ற பிறகு ஜெகன்மோகன் வாக்குறுதிகளை மறந்து விட்டார். அவர் வாக்களித்தபடி முழு மதுவிலக்கு அமல்படுத்தவில்லை. ஆந்திராவின் சிறப்பு அந்தஸ்து என்ன ஆனது. மாநிலத்தின் தலைநகரம் எங்கே என்பது தெரியவில்லை.

    இதனால் மக்கள் பிரச்சனைக்காக நானும் ஜெகன்மோகன் ரெட்டியை கேள்வி கேட்கிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • ஒய்.எஸ். சர்மிளா முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் நேற்று இணைந்தார்.
    • தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிட பாபுவுக்கு வாய்ப்பு வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம் பூத்தலப்பட்டு தொகுதி ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ. எம்.எஸ். பாபுவிற்கு மீண்டும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டு, முன்னாள் எம்.எல்.ஏ. சுனில் என்பவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.

    இதனால் அதிருப்தியில் இருந்த எம்.எஸ். பாபு கடப்பாவில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் ஒய்.எஸ். சர்மிளா முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் நேற்று இணைந்தார்.

    இந்த தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிட பாபுவுக்கு வாய்ப்பு வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

    • எனக்கு எதிராக தெலுங்கு தேசம், பா.ஜ.க., ஜனசேனா, காங்கிரஸ் கட்சி இணைந்து பிரசாரம் செய்கின்றனர்.
    • கடவுள் மற்றும் மக்கள் என் பக்கம் உள்ளனர்.

    திருப்பதி:

    ஆந்திராவில் ஒரே கட்டமாக பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலையொட்டி முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி நேற்று பஸ் யாத்திரை பிரசாரம் தொடங்கினார்.

    தனது சொந்த தொகுதியான கடப்பாவில் தேர்தலில் பிரசாரத்தை முடித்து விட்டு பின்னர் பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

    மக்களின் ஆதரவு இன்றி தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு மோசமான அரசியல் செய்து வருகிறார். என் மீது சேற்றை வாரி வீசி அரசியல் செய்கிறார்.

    எனக்கு எதிராக தெலுங்கு தேசம், பா.ஜ.க., ஜனசேனா, காங்கிரஸ் கட்சி இணைந்து பிரசாரம் செய்கின்றனர்.

    இது போதாதென்று எனது தங்கையை அரசியலுக்கு அழைத்து வந்து அவர் மூலம் சேற்றை வாரி இறைத்து வருகின்றனர். நான் எந்த தவறும் செய்யவில்லை. நீதியை நம்புகிறேன்.

    கடவுள் மற்றும் மக்கள் என் பக்கம் உள்ளனர்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ஜெகன் மோகன் ரெட்டியின் தங்கை ஷர்மிளா காங்கிரஸ் தலைவராக உள்ளார். இவர் ஜெகன்மோகன் ரெட்டியை கடுமையாக விமர்சித்து வருகிறார்.

    • சர்மிளாவின் சம்பந்தியின் ஓட்டலில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடியாக புகுந்தனர்.
    • ஐதராபாத் பெருநகரத்தில் சர்மிளாவின் உறவினருக்கு சொந்தமான ஓட்டல் என்பதால் இந்த சோதனை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    திருப்பதி:

    ஆந்திர மாநில முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டியின் தங்கை சர்மிளா. இவர் ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவராக உள்ளார். சமீபத்தில் இவரது மகனுக்கும் ஐதராபாத்தில் உள்ள பிரபல ஓட்டல் அதிபர் ஒருவரின் மகளுக்கும் திருமணம் நடந்தது.

    சர்மிளாவின் சம்பந்தியின் ஓட்டலில் நேற்று வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடியாக புகுந்தனர்.

    அங்குள்ள அறைகள் மற்றும் அலுவலகத்தில் சோதனை நடத்தினர். மேலும் பலவிதமான ஆவணங்களை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

    ஐதராபாத் பெருநகரத்தில் சர்மிளாவின் உறவினருக்கு சொந்தமான ஓட்டல் என்பதால் இந்த சோதனை அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ஓட்டலில் பணம் ஆவணங்கள் கைப்பற்றியது குறித்து ஓட்டல் நிர்வாகம் மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் எந்தவிதமான அதிகாரப்பூர்வமான அறிக்கையும் வெளியிடவில்லை.

    • ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் வரை காங்கிரஸ் கட்சி அயராது போராடும்.
    • சிறப்பு அந்தஸ்து விவகாரத்தில் சந்திரபாபு பச்சோந்தி போல் நிறம் மாறியுள்ளார்.

    திருப்பதி:

    ஆந்திர மாநில முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டியின் தங்கை ஷர்மிளா அம்மாநில காங்கிரஸ் தலைவராக உள்ளார். இவர் அண்ணன் என்று கூட பார்க்காமல் முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டியை கடுமையாக விமர்சித்து வருகிறார்.

    திருப்பதியில் நடந்த பிரசாரத்தில் ஷர்மிளா பேசியதாவது:-

    ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் வரை காங்கிரஸ் கட்சி அயராது போராடும். இந்திரம்மா அபயஹஸ்தம்' என்ற பெயரில், ஒவ்வொரு ஏழை வீட்டுக்கும், பெண்களின் கணக்கில் மாதம் ரூ .5 ஆயிரம் வழங்கப்படும். வறுமையை ஒழிக்கவும், ஏற்றத்தாழ்வுகளை அகற்றவும் கரம் கொடுக்கப் போகிறோம்.

    ஜெகன்மோகன் ரெட்டி 3 தலைநகரங்கள் நாடகம் ஆடினார். ஜெகன்மோகன் ரெட்டி ஒரு தலை நகரையாவது வளர்த்திருக்கிறாரா? நமக்கு வெட்கமாக இல்லையா?


    சிறப்பு அந்தஸ்து விவகாரத்தில் சந்திரபாபு பச்சோந்தி போல் நிறம் மாறியுள்ளார். எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஜெகனண்ணா அந்தஸ்து கேட்டு உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார்.

    அந்தஸ்துக்காக ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்வேன் என்று கூறிய அவர், முதல்-மந்திரி ஆன பிறகு கொடுத்த வார்த்தையை காப்பாற்றவில்லை. ஏன் இதுவரை ஒரு எம்.பி கூட ராஜினாமா செய்யவில்லை.

    ஜெகன்மோகன் ரெட்டி பா.ஜ.க.வை ஏன் எதிர்க்கவில்லை? இப்போது ஜெகன்மோகன் ரெட்டி ஆந்திராவில் புலி, டெல்லி போனால் பூனையாக மாறிவிடுகிறார்.

    ஒரு எம்.பி., எம்.எல்.ஏ., சீட் இல்லாவிட்டாலும், நம் மாநிலத்தை பா.ஜ.க. ஆட்சி செய்கிறது. ஆளும் கட்சியும், எதிர்க்கட்சிகளும் பா.ஜ.க.வைச் சுற்றியே வருகின்றன. ஆந்திர அரசியலில் முக்கோண காதல் கதை நடக்கிறது".

    இவ்வாறு அவர் பேசினார்.

    • ஒய்.எஸ்.ஆர் காங்கிரசிலிருந்து விலகி தெலுங்கு தேசம் கட்சியில் சேர முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
    • ஆந்திர அரசியலில் பரபரப்பு நிலவி வருகிறது.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலத்தில் முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது.

    வரும் பாராளுமன்ற தேர்தலில் தனது கட்சியில் உள்ள எம்.பி.க்கள் சிலருக்கு போட்டியிட வாய்ப்பு வழங்க மறுப்பு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக முக்கிய பிரமுகர்கள் ஏற்கனவே ஒய்.எஸ்.ஆர். காங்கிரசிலிருந்து விலகி தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்தனர்.

    ஜெகன்மோகன் ரெட்டி கட்சியை சேர்ந்த ராஜ்யசபா எம்.பி. வெமிரட்டி பிரபாகர் ரெட்டி மற்றும் நெல்லூர் எம்.பி. அட்லா பிரபாகர் ரெட்டியும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரசிலிருந்து விலகி தெலுங்கு தேசம் கட்சியில் சேர முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இதேபோல் ஆளூர் தொகுதியில் போட்டியிட்டு தொழிலாளர் துறை அமைச்சராக உள்ள கும்மனூர் ஜெயராம் 3 தொகுதிகளில் போட்டியிட வாய்ப்பு கேட்டார். ஆனால் அவருக்கு கர்னூல் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும் என கட்சி தலைமை தெரிவித்தது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த கும்மனூர் ஜெயராம் கட்சியிலிருந்து விலக முடிவு செய்துள்ளனர்.

    ஜெயராம் காங்கிரஸ் கட்சியில் சேர முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

    பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் ஆளும் கட்சியில் இருந்து எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அமைச்சர் உள்ளிட்டோர் மாற்றுக் கட்சிக்கு தாவுவதால் ஆந்திர அரசியலில் பரபரப்பு நிலவி வருகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பல்வேறு கட்சியில் இருந்தும் காங்கிரஸ் கட்சிக்கு பல தலைவர்கள் இடம் பெயர்ந்தனர்.
    • சந்திரபாபு மற்றும் தெலுங்கு தேசம் கட்சியின் நலன்களுக்காக-ஷர்மிளா செயல்படுவதாக அவர் குற்றம்சாட்டி உள்ளார்.

    திருப்பதி:

    ஆந்திர முதல் மந்திரியாக உள்ள ஜெகன்மோகன் ரெட்டியின் தங்கை ஷர்மிளா காங்கிரசில் சேர்ந்து கட்சியின் மாநில தலைவரானார்.

    அதன் பிறகு பல்வேறு கட்சியில் இருந்தும் காங்கிரஸ் கட்சிக்கு பல தலைவர்கள் இடம் பெயர்ந்தனர்.

    அவர்களில் முதல் ஆளாக மங்களகிரி தொகுதி ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ. ஆலா ராமகிருஷ்ணன் முதலில் சேர்ந்தார்.


    முதல் மந்திரி ஜெகன் மோகனுக்கு நெருக்கமாக இருந்த ராமகிருஷ்ணா தனிப்பட்ட அதிருப்தியால், அக்கட்சியில் இருந்து விலகி, காங்கிரசில் சேர்ந்தார்.

    ஷர்மிளாவுடன் இணைந்து செயல்பட இருந்த ராமகிருஷ்ணா ஒரு மாதத்திலேயே முதல் மந்திரி ஜெகன் மோகனை சந்தித்து ஒய்.எஸ். ஆர். காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். சந்திரபாபு மற்றும் தெலுங்கு தேசம் கட்சியின் நலன்களுக்காக-ஷர்மிளா செயல்படுவதாக அவர் குற்றம்சாட்டி உள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஷர்மிளா அமைச்சர் ரோஜா மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை தெரிவித்தார்.
    • தந்தையின் பெயரை கெடுக்க ஷர்மிளா செயல்பட்டு வருகிறார்.

    திருப்பதி:

    ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்ற ஷர்மிளா நகரி உள்ளிட்ட இடங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

    அப்போது ஷர்மிளா அமைச்சர் ரோஜா மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை தெரிவித்தார். மேலும் ரோஜாவை ஊழல் ராணி என விமர்சித்தார்.

    இதையடுத்து மந்திரி ரோஜா அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் காங்கிரஸ் தெலுங்கு தேசம் ஜனசேனா கட்சிகள் ஒரே கிளையில் சாய்ந்து கொண்டு இருக்கின்றன.


    ஷர்மிளா கூறிய தன் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபித்தால் அரசியலை விட்டு விலகுவேன்.

    ஒய்எஸ் ராஜசேகர் ரெட்டி மறைவிற்கு பிறகு முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி அவரது பெயரை மக்களின் மனதில் நிலை நிறுத்த பல்வேறு சேவைகளை செய்து வருகிறார். தந்தையின் பெயரை கெடுக்க ஷர்மிளா செயல்பட்டு வருகிறார்.

    ஒய்.எஸ்.ஆர். மறைவிற்கு பிறகு ஜெகன்மோகன் ரெட்டியை 16 மாதங்கள் ஜெயிலில் அடைத்த காங்கிரஸ் கட்சியின் ஒரு அங்கத்தினராக ஷர்மிளா உள்ளார் .

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஜெகன்மோகன் ரெட்டியின் நலன் மற்றும் வளர்ச்சித் திட்டங்களைக் கண்டு எதிர்க்கட்சிகள் பயப்படுகிறார்கள்.
    • சர்மிளா போன்றவர்கள் தங்களுக்கு வாக்குரிமை உள்ள மாநிலத்துக்கு நிச்சயம் திரும்பிச் செல்வார்கள்.

    திருப்பதி:

    ஆந்திர மாநில சுற்றுலாத்துறை மந்திரி ரோஜா தடா அருகே சுற்றுலா விடுதிகளைத் திறந்து வைத்தார்.

    ஓங்கோலு பாராளுமன்ற தொகுதியில் வேட்பாளராக போட்டியிட போவதாக வதந்தி பரப்பி வருகின்றனர். ஆனால், தொடர்ந்து 2 முறை தனக்கு ஆதரவளித்த நகரி சட்டமன்றத் தொகுதியில் இந்த முறையும் போட்டியிடுவேன்.

    ஆரம்பத்தில் சீட் கிடைக்காது என்றார்கள். இப்போது வேறு எங்காவது சென்று போட்டியிடுவேன் என்று வேறு ஒரு கதையை உருவாக்கிவிட்டார்கள்.

    ஜெகன்மோகன் ரெட்டியின் நலன் மற்றும் வளர்ச்சித் திட்டங்களைக் கண்டு எதிர்க்கட்சிகள் பயப்படுகிறார்கள்.

    சந்திரபாபு நாயுடு, நாரா லோகேஷ், பவன் கல்யாண், சர்மிளா போன்றவர்கள் தங்களுக்கு வாக்குரிமை உள்ள மாநிலத்துக்கு நிச்சயம் திரும்பிச் செல்வார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மாநில காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளர் மாணிக்கம் தாகூரிடம் விண்ணப்பங்களை வழங்கலாம்.
    • பல்வேறு மாற்று கட்சிகளை சேர்ந்தவர்கள் காங்கிரஸ் கட்சியில் சேர உள்ளனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவராக முன்னாள் முதல்-மந்திரி ராஜசேகர ரெட்டியின் மகளும் தற்போதைய முதல் மந்திரி ஜெகன் மோகன் ரெட்டியின் தங்கையுமான சர்மிளா காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

    அவருக்கு அந்த மாநில காங்கிரஸ் தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டது. நேற்று அவர் ஆந்திர மாநில காங்கிரஸ் கட்சி தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

    நான் மதச்சார்பற்ற கண்ணோட்டத்தின் தீவிர ஆதரவாளர். ஆந்திராவில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.

    ஆந்திர மாநிலத்தில் உள்ள 175 சட்டமன்ற தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள்.


    வருகிற 24-ந் தேதி முதல் தேர்தலில் போட்டியிட விரும்புவர்களிடம் விண்ணப்பங்கள் பெறப்பட உள்ளது.

    அவர்கள் மாநில காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளர் மாணிக்கம் தாகூரிடம் விண்ணப்பங்களை வழங்கலாம்.

    நாளை முதல் அனைத்து மாவட்டங்களிலும் கட்சித் தலைவர்கள் மற்றும் தொண்டர்களை சந்திக்க உள்ளேன்.

    இந்த சந்திப்பு வருகிற 31-ந் தேதி வரை தொடரும் ஒவ்வொரு நாளும் 3 மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் சந்திப்பில் கலந்து கொள்வார்கள்.

    இதில் பல்வேறு மாற்று கட்சிகளை சேர்ந்தவர்கள் காங்கிரஸ் கட்சியில் சேர உள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சந்திரசேகர ராவ் ஆட்சிக்கு எதிராக நடைபயணம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டார்.
    • அனைத்து தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்த முடிவு செய்துள்ளார்.

    திருப்பதி:

    ஆந்திர முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டியின் தங்கை ஷர்மிளா. தெலுங்கானா மாநிலத்தில் ஒய்.எஸ்.ஆர்.தெலுங்கானா பார்ட்டி என்ற புதிய கட்சியை தொடங்கினார்.

    சந்திரசேகர ராவ் ஆட்சிக்கு எதிராக நடைபயணம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டார். அவரது கட்சியை காங்கிரசுடன் இணைக்க கட்சி மேலிடம் ஆர்வம் காட்டியது.

    இதையடுத்து கர்நாடக துணை முதல்-மந்திரி சிவகுமார் மற்றும் மூத்த காங்கிரஸ் தலைவர்கள் ஷர்மிளாவிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது ஷர்மிளா தனக்கு மாநில தலைவர் பதவி வழங்க வேண்டும் என தெரிவித்ததாக கூறப்படுகிறது.

    ஷர்மிளாவின் கோரிக்கைக்கு தெலுங்கானா காங்கிரஸ் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் விரக்தி அடைந்த ஷர்மிளா தனது கட்சியை காங்கிரசுடன் இணைக்கும் திட்டத்தை கைவிட்டார்.

    இந்த நிலையில் தெலுங்கானாவில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் ஷர்மிளா தனித்து போட்டியிடுகிறார்.

    அனைத்து தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்த முடிவு செய்துள்ளார்.

    மேலும் தனது கட்சி சார்பில் போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் அடுத்த வாரம் முதல் மனு அளிக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

    ×