search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bus driver"

    • தகவல் அறிந்த நேசமணிநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற் கொண்டனர்.
    • ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் அரசு பஸ் டிரைவரிடமும் விசாரணை நடத்தப்பட்டது.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் வெட்டூர்ணிமடம் பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் ராணிதோட்டம் அரசு போக்குவரத்து கழக பணி மனையில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவர் இன்று காலை வேலைக்கு செல்வதற்காக வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். வீட்டில் இருந்து சிறிது தூரம் வந்த நிலையில் அங்கு வந்த ஒருவர் திடீரென டிரைவரை தடுத்து நிறுத்தி தகராறு செய்தார். பின்னர் தான் மறைத்து வைத்திருந்த ஆசிட்டை டிரைவர் மீது வீசினார். இதில் டிரைவருக்கு படுகாயம் ஏற்பட்டது. பின்னர் அந்த நபர் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார்.

    இதைத் தொடர்ந்து வலியால் துடித்துக் கொண்டிருந்த டிரைவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக நாகர்கோவிலில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுபற்றி தகவல் அறிந்த நேசமணிநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற் கொண்டனர்.

    ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் அரசு பஸ் டிரைவரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. போலீசார் நடத்திய முதற் கட்ட விசாரணையில் கள்ளக்காதல் விவகாரத்தில் அரசு பஸ் டிரைவர் மீது ஆசிட் வீசப்பட்டது தெரியவந்துள்ளது. இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    • டைமிங் பிரச்சினையில் 2 பஸ் டிரைவர், கண்டக்டர்களும் செரு ப்பால் தாக்கிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
    • சுற்றுலா பயணிகள், பொதுமக்கள், கல்லூரி மாணவிகள் முகம் சுளிக்கும் நிலை ஏற்பட்டது.

    கொடைக்கானல்:

    கொடைக்கானலில் இருந்து மதுரைக்கு அரசு ஏ.சி. பஸ் இயக்கப்பட்டு வருகிறது. இதனைத் ெதாடர்ந்து சாதாரண அரசு பஸ்சும் அடுத்து புறப்பட்டு செல்லும். இந்த நிலையில் கொடைக்கானல் பஸ் நிலையத்தில் ஏ.சி. பஸ் டிரைவர் தாமதமாக பஸ்சை எடுத்துள்ளார்.

    இதனை சாதாரண பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டர் ஆகியோர் தட்டிக்கேட்டு ள்ளனர். இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இரு தரப்பும் ஒருவரு க்கொருவர் கைகலப்பில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து 2 பஸ் டிரைவர், கண்டக்டர்களும் செரு ப்பால் தாக்கிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    இதனால் சுற்றுலா பயணிகள், பொதுமக்கள், கல்லூரி மாணவிகள் முகம் சுளிக்கும் நிலை ஏற்பட்டது. டிரைவர்கள், கண்டக்டர்கள் தங்கள் பிரச்சினையை பேசி தீர்த்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு பொது இடத்தில் தகாதமுறையில் நடக்க கூடாது என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    • விண்ணப்பிக்கும் டிரைவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை நெருங்கும் என்று தெரிகிறது.
    • விண்ணப்பங்களை பரிசீலனை செய்து எழுத்துத் தேர்வுக்கான நுழைவுச் சீட்டு அனுப்பப்படும்.

    சென்னை:

    அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் 685 டிரைவர் பணி இடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன.

    நீண்ட நாட்களாக டிரைவர் பற்றாக்குறையால் கடுமையான நெருக்கடியில் இருந்த போக்குவரத்து கழகம் புதிதாக நடத்துனருடன் டிரைவர் பணிக்கான ஆட்களை எழுத்து தேர்வு மூலம் தேர்வு செய்ய திட்டமிட்டு உள்ளது.

    தமிழகம் முழுவதும் இருந்தும் பஸ் டிரைவர் பணிக்கு ஆர்வத்துடன் விண்ணப்பித்து வருகின்றனர். இன்று காலை வரையில் 4,800 பேர் விண்ணப்பித்து இருப்பதாக அரசு விரைவு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் இளங்கோவன் தெரிவித்தார்.

    அடுத்த மாதம் 18-ந்தேதி வரை விண்ணப்பிக்க கால அவகாசம் கொடுக்கப்பட்டு உள்ளது. அதனால் விண்ணப்பிக்கும் டிரைவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை நெருங்கும் என்று தெரிகிறது.

    இதுவரையில் அரசு போக்குவரத்து கழக டிரைவர்-கண்டக்டர் பணி நியமனத்தில் சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்முகத் தேர்வு மட்டுமே நடைப்பெற்றது. தற்போது முதன் முறையாக எழுத்து தேர்வு நடத்தப்பட உள்ளது.

    விண்ணப்பங்களை பரிசீலனை செய்து எழுத்துத் தேர்வுக்கான நுழைவுச் சீட்டு அனுப்பப்படும். அக்டோபர் மாதத்தில் எழுத்து தேர்வு நடைபெறலாம் என எதிர் பார்க்கப்படுகிறது.

    தனியார் ஏஜென்சி மூலம் இந்த பணியினை மேற்கொள்ள போக்குவரத்து கழகம் திட்டமிட்டு உள்ளது.

    • மாணவர்களை அழைத்து சென்ற போது பஸ்சில் சிறு கோளாறு ஏற்ப ட்டுள்ளது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 திருநங்கைகளை தேடி வந்தனர்.

    புதுச்சேரி:

    மயிலாடுதுறை மாவட் டம், திருவிளையாட்டம் பகுதியை சேர்ந்தவர் மோகன்(வயது32).இவர் நாகப்பட்டினம், தனியார் கல்லூரியில் பஸ் டிரைவராக வேலை செய்து வருகிறார். தினமும் இவர் நாகப் பட்டினத்தில் இருந்து செம்பனார்கோவில் வரை மாணவர்களை அழைத்து சென்று வருவது வழக்கம். சம்பவத்தன்று காலை மாணவர்களை அழைத்து சென்ற போது பஸ்சில் சிறு கோளாறு ஏற்ப ட்டுள்ளது. அதனால் அன்று மாலை மோகன் பஸ்சை இயக்கவில்லை. 

    இரவு பஸ்சில் உள்ள கோளாறை சரி செய்து, மறு நாள் மாணவர்களை அழைத்து வருவதற்காக, நாகப்பட்டினத்தில் இருந்து செம்பனார் கோவிலுக்கு அன்று இரவு 10.30 மணிக்கு, காரைக்கால் டாக்டர் கலைஞர் புறவழி சாலை வழியாக சென்றார். அப்போது அந்த சாலையின் ஓரத்தில் உள்ள ஒரு ஐயனார் கோவில் அருகே பஸ்ஸை நிறுத்திவிட்டு சிறுநீர் கழிக்க சென்றுள்ளார். அப்போது 30 வயது மதிக்கத்தக்க திருநங்கைகள் 2 பேர் திடீரென மோகனை வழிமறித்து, மோகன் கழுத்தில் அணிந்திருந்த 12 கிராம் தங்கச் செயினை பறித்துக் கொண்டு தப்பி ஓடி விட்டனர். 

    இதனால் அதிர்ச்சி யடைந்த மோகன், காரைக்கால் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில், நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் புருஷோத்தமன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 திருநங்கைகளை தேடி வந்தனர். இந்நிலையில், நேற்று மாலை பஸ் நிலையம் அருகே நின்றிருந்த பவானி (வயது 35), சுவாதி (23) ஆகிய 2 திருநங்கைகளை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்த போது, பஸ் டிரைவரிடம் நகையை பறித்ததை ஒப்புக் கொண்டனர். தொடர்ந்து 2 பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து 12 கிராம் தங்கச் செயினை போலீசார் மீட்டனர்.

    • அரசு பஸ் ஓட்டுநரை தாக்கியவா்கள் மீது குண்டாஸ் வழக்கு பதிவு செய்ய கோரிக்கை விடுத்தனர்.
    • ராமநாதபுரம் காவல் துணைக் கண்காணிப்பாளா் ராஜா ஆகியோா் ஊழியர்களிடம் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் அரசு போக்குவரத்துக்கழகம் நகா் கிளையில் டிரைவராக பணியாற்றி வருப வா் முருகேசன் (50). இவா் ராமநாதபுரத்திலிருந்து அழகன்குளத்துக்கு செல்லும் டவுன் பஸ் ஓட்டி வந்த போது, சிலா் படிக்கட்டில் தொங்கியவாறு பயணம் செய்தனா். அவர் களை ஓட்டுநா், பஸ் உள்ளே செல்லும் படி அறிவுறுத்தி னாா்.

    இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் டிரைவரை தாக்கினர். இதில் பலத்த காயமடைந்த ஓட்டுநா் ராம நாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். தேவிபட்டினம் போலீசார் இதுதொடர்பாக இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர் இந்த நிலையில் இரண்டு பேரையும் குண்டா் சட்டத் தில் கைது செய்யக்கோரி நேற்று நகா் கிளை போக்குவரத்து ஊழியா்கள், 57 பஸ்களை இயக்காமல், கிளையின் நுழைவாயிலில் அமா்ந்து தா்ணாவில் ஈடு பட்டனா்.

    இதைத்தொடா்ந்து, அங்கு வந்த போக்குவரத்துத் துறை அதிகாரி பத்மநாதன், ராமநாதபுரம் காவல் துணைக் கண்காணிப்பாளா் ராஜா ஆகியோா் ஊழியர்களிடம் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா்.

    இந்த நிலையில் இன்று காலை ராமநாதபுரத்தில் இருந்து சித்தார் கோட்டை வழியாக அழகன்குளம் வழித்தடத்தில் செல்லும் டவுன் பஸ் அனைத்தும் தேர்போகி பஸ் நிறுத்தத்து டன் திருப்பி செல்லப் பட்டது, இதனால் பனைக்குளம், அழகன் குளம், ஆற்றாங்கரை மாணவ, மாணவிகளும் வியாபாரிகளும், பொது மக்களும் பெரிதும் அவதி அடைந்தனர்.

    இதுகுறித்து போக்கு வரத்து துறை அதிகாரியிடம் கேட்டபோது, புதுவலசை கிராமத்தில் இருந்து முக்கிய நபர்களை அழைத்து ராம நாதபுரம் டி.எஸ்.பி தலைமை யில் பேச்சுவார்த்தை நடத்தி, அதன் பின்னர் அந்த பகுதிக்கு பஸ் போக்குவரத்து தொடங்கும் என்று தெரிவித்தார்.

    • கல்லூரி பஸ்சை ஆண் டிரைவர்களே இயக்கி வந்த நிலையில், முதல் முதலாக பெண் ஒருவர் நியமிக்கப்பட்டது மாணவிகளிடையே பெரும் வரவேற்பை ஏற்படுத்தியது.
    • எனக்கு சின்ன வயதில் இருந்தே லாரி அல்லது பஸ்சை ஓட்ட வேண்டும் எண்ணம் மனதில் ஏற்பட்டு வந்தது.

    மேட்டூர்:

    ஆண்களுக்கு பெண்கள் எந்தவிதத்திலும் குறைந்தவர்கள் இல்லை என்பதை நிருபிக்கும் விதமாக சாலையில் ஓடும் கார் தொடங்கி ஆகாயத்தில் பறக்கும் விமானம் வரை இன்று பெண்களால் இயக்கப்பட்டு வருகிறது. தடைகளை கடந்து சாதிக்கும் பெண்கள் சரித்திரத்தில் இடம் பிடித்து வருகின்றனர்.

    சமீபத்தில் கோவையில் ஷர்மிளா என்ற இளம்பெண் காந்திபுரத்தில் இருந்து சோமனூர் வழித்தடத்தில் தனியார் பஸ்சை இயக்கி கோவையில் முதல் பெண் பஸ் ஓட்டுனர் என்ற பெருமையை பெற்றார். கோவைைய தொடர்ந்து சேலத்திலும் தனியார் பேருந்து ஓட்டுநராக களம் இறங்கி உள்ள பெண்ணுக்கு பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

    சேலம் மாவட்டம் ஓமலூர், செட்டிப்பட்டி பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வி (வயது 28). சிறு வயது முதலே கனரக வாகனம் இயக்கி அனுபவம் பெற்ற இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மேட்டூர் அருகே உள்ள நங்கவள்ளி பகுதியில் செயல்பட்டு தனியார் மகளிர் கல்லூரியில் பஸ் டிரைவர் பணியில் சேர்ந்தார். இந்த கல்லூரி பஸ்சை ஆண் டிரைவர்களே இயக்கி வந்த நிலையில், முதல் முதலாக பெண் ஒருவர் நியமிக்கப்பட்டது மாணவிகளிடையே பெரும் வரவேற்பை ஏற்படுத்தியது.

    இதனால் சேலத்தில் முதல் முறையாக கல்லூரி பஸ்சை ஓட்டிய முதல் பெண்மணி என்ற பெருமையை தமிழ்ச்செல்வி பெற்றார்.

    இதனிடையே தமிழ்ச்செல்விக்கு வெளி மாவட்டங்களுக்கிடையே பொது பஸ்சை இயக்க வேண்டும் என விருப்பம் ஏற்பட்டது. இதனால் அவர் வேலையை ராஜினாமா செய்து விட்டு மேட்டூரில் இருந்து ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை வழித்தடத்தில் செல்லும் தனியார் பேருந்தை ஓட்டும் பணியில் சேர்ந்தார். அவர், தினமும் மேட்டூரில் இருந்து அம்மாபேட்டைக்கு இந்த பஸ்சை இயக்கி வருகிறார்.

    மேட்டூரில் முதல் முறையாக தனியார் நகர பேருந்தை இயக்கும் முதல் பெண்ணாக திகழும் தமிழ்ச் செல்வி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

    இது குறித்து தமிழ்ச்செல்வி கூறியதாவது:-

    எனக்கு 5 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. எனது தந்தை மணி, லாரி ஓட்டுநராக பணியாற்றி, சொந்தமாக லாரி தொழில் செய்து வருகிறார். இதனால் எனக்கு சின்ன வயதில் இருந்தே லாரி அல்லது பஸ்சை ஓட்ட வேண்டும் எண்ணம் மனதில் ஏற்பட்டு வந்தது. இது பற்றி நான், அப்பாவிடம் தெரிவித்தேன். அவர் எனக்கு லாரியை எப்படி ஓட்ட வேண்டும் என கற்று தந்தார். இதனால் நான் லாரி ஓட்டுவதை எளிதாக கற்றுக்கொண்டேன். தமிழ்நாடு மற்றும் கர்நாடகா இரு மாநிலங்களின் அனைத்து பகுதிகளுக்கும் லாரியில் பல்வேறு லோடுகளை ஏற்றிச் சென்று வந்துள்ளேன். இதையடுத்து குடும்ப சூழ்நிலை காரணமாக உள்ளூரில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கல்லூரி பஸ் டிரைவர் பணியில் சேர்ந்தேன். தற்போது அந்த பணியில் இருந்து விலகி, தனியார் பஸ்சில் டிரைவராக வேலைக்கு சேர்ந்துள்ளேன். பெண்கள் அனைத்து துறையிலும் சாதிக்கலாம். மிகவும் தைரியமாக இருக்க வேண்டும் என்பதை அனைத்து பெண்களுக்கும் உணர்த்த வேண்டும் என்பது எனது விருப்பம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • டிரைவராக வேலை பார்த்து வரும் ஷர்மிளாவுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
    • இன்று காலை தி.மு.க. எம்.பி. கனிமொழி, ஷர்மிளாவை சந்தித்து கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தார்.

    சென்னை:

    கோவை வடவள்ளியை சேர்ந்தவர் ஷர்மிளா. இவர் கோவை காந்திபுரத்தில் இருந்து சோமனூர் நோக்கி செல்லும் தனியார் பஸ்சில் டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவர்தான் முதல் பெண் பஸ் டிரைவர். இதனால் இவருக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர்.

    இன்று காலை தி.மு.க. எம்.பி. கனிமொழி, ஷர்மிளாவை சந்திப்பதற்காக அவர் இயக்கும் பஸ்சில் ஏறினார். பின்னர் அவரை நேரில் சந்தித்து அவருக்கு கைகுலுக்கி வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

    இதற்கிடையே, இன்று பிற்பகலில் தனியார் பஸ் டிரைவரான ஷர்மிளாவை அந்த நிறுவனம் பணி நீக்கம் செய்துள்ளது. கனிமொழி எம்.பி. பஸ்சில் பயணித்தபோது டிக்கெட் எடுப்பதில் ஏற்பட்ட தகராறில் இவர் பணி நீக்கம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் ஷர்மிளா பணியில் இருந்து நீக்கப்பட்டதை அறிந்து தொலைபேசியில் ஷர்மிளாவுடன் தி.மு.க. எம்.பி. கனிமொழி பேசியுள்ளார். அப்போது ஷர்மிளாவுக்கு வேறு வேலை, தேவையான உதவிகளை அளிப்பதாக உறுதி அளித்துள்ளார்.

    • ஓட்டுநர் ஷர்மிளாவை பணிக்கு வர வேண்டாம் என நான் கூறவில்லை.
    • கனிமொழி பேருந்தில் வந்தபோது எனது கடமையை நான் செய்தேன்.

    கோவை:

    கோவையைச் சேர்ந்தவர் ஷர்மிளா. இவர் வடவள்ளியில் இருந்து ஒண்டிப்புதூர் வழித்தடத்தில் இயக்கப்படும் தனியார் பஸ்சில் டிரைவராக பணியாற்றி வருகிறார். கோவையின் முதல் பெண் டிரைவரான ஷர்மிளாவுக்கு பெண்கள் மத்தியிலும், பொதுமக்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

    இந்த நிலையில் தி.மு.க.வை சேர்ந்த கனிமொழி எம்.பி., ஷர்மிளா இயக்கிய பஸ்சில் பயணம் மேற்கொண்டார். அவர் காந்திபுரத்தில் இருந்து பீளமேடு வரை பஸ்சில் பயணம் செய்தார்.

    பயணத்தின்போது ஷர்மிளாவுக்கு கனிமொழி எம்.பி. தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். அவருடன் சிறிது நேரம் பஸ்சில் பயணித்தபடியே பேசி சென்றார்.

    இந்நிலையில் பேருந்து ஓட்டுநராக பணியாற்றிய ஷர்மிளாவை பேருந்தின் உரிமையாளர் பணி நீக்கம் செய்துள்ளதாக தகவல் வெளியாகி பரபரப்பு ஏற்பட்டது.

    இதையடுத்து ஓட்டுநர் ஷர்மிளா பணி நீக்கம் தொடர்பாக தனியார் பேருந்து உரிமையாளர் விளக்கம் அளித்துள்ளார். அப்போது அவர் கூறியதாவது:

    ஓட்டுநர் ஷர்மிளாவை பணிக்கு வர வேண்டாம் என நான் கூறவில்லை. ஓட்டுநர் ஷர்மிளாவுக்கு பெண் நடத்துனருடன் தான் பிரச்சினை என்று கூறினார்.

    இதன்பின்னர் விளக்கம் அளித்த பேருந்து நடத்துனர், கனிமொழி பேருந்தில் வந்தபோது எனது கடமையை நான் செய்தேன்.

    இருந்தாலும் ஓட்டுநர் ஷர்மிளாவிடம் பலமுறை மன்னிப்பு கேட்டும் அவர் வீண்பிடிவாதம் செய்கிறார். வேலை செய்ய பிடிக்கவில்லை என பலமுறை கூறினார். எங்களுக்குள் வேறு எந்த பிரச்சனையும் இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கடந்த மூன்று மாதங்களாக பேருந்து ஓட்டுநராக பணியாற்றி வந்த ஷர்மிளாவை பேருந்தின் உரிமையாளர் பணி நீக்கம் செய்துள்ளார்.
    • விளம்பரத்திற்காக பயணிகளை ஏற்றுவதாக ஓட்டுநர் ஷர்மிளாவுடன் பேருந்து உரிமையாளர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

    கோவை:

    கோவையைச் சேர்ந்தவர் ஷர்மிளா. இவர் வடவள்ளியில் இருந்து ஒண்டிப்புதூர் வழித்தடத்தில் இயக்கப்படும் தனியார் பேருந்தில் டிரைவராக பணியாற்றி வருகிறார்.

    கோவையின் முதல் பெண் டிரைவரான ஷர்மிளாவுக்கு பெண்கள் மத்தியிலும், பொதுமக்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

    தி.மு.க.வை சேர்ந்த கனிமொழி எம்.பி., ஷர்மிளா இயக்கிய பேருந்தில் பயணம் மேற்கொண்டார். அவர் காந்திபுரத்தில் இருந்து பீளமேடு வரை பேருந்தில் பயணம் செய்தார். பயணத்தின்போது ஷர்மிளாவுக்கு கனிமொழி எம்.பி. தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். அவருடன் சிறிது நேரம் பேருந்தில் பயணித்தபடியே பேசி சென்றார்.

    இந்நிலையில், கடந்த மூன்று மாதங்களாக பேருந்து ஓட்டுநராக பணியாற்றி வந்த ஷர்மிளாவை பேருந்தின் உரிமையாளர் பணி நீக்கம் செய்துள்ளார்.

    விளம்பரத்திற்காக பயணிகளை ஏற்றுவதாக ஓட்டுநர் ஷர்மிளாவுடன் பேருந்து உரிமையாளர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

    இன்று தி.மு.க. எம்.பி. கனிமொழி பேருந்தில் பயணம் செய்த நிலையில், திடீரென ஷர்மிளாவை பேருந்தின் உரிமையாளர் பணி நீக்கம் செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    மேலும், கடந்த சில நாட்களுக்கு முன்பாக ஷர்மிளா இயக்கிய பேருந்தில் பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் பயணித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • அண்ணா நகர் பஸ் டெப்போவில் பணியாற்றும் ஒருவர் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார்.
    • சான்றிதழில் பரிசோதனை செய்ததாக கூறப்பட்ட பெயர் கொண்ட டாக்டர்கள் அங்கு பணியிலேயே இல்லை என்பது விசாரணையில் தெரியவந்து உள்ளது.

    சென்னை:

    சென்னையில் மாநகர பஸ் போக்குவரத்தை ஏராளமானோர் பயன்படுத்தி வருகிறார்கள். மாநகர பஸ்களில் டிரைவராக பணியாற்றும் 40 வயது மற்றும் அதற்குமேல் வயது உள்ள டிரைவர்கள் ஆண்டுதோறும் தங்களது கண்பரிசோதனை அறிக்கையை சம்பந்தப்பட்ட பணிமனையில் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் தற்காலிக கண்பார்வை பிரச்சினை மற்றும் உடல் நலக்குறைவு உள்ளவர்களுக்கு இதன் மூலம் எளிதான மாற்றுப் பணிகள் வழங்கப்பட்டு வந்தது.

    இந்நிலையில் வழக்கமான பஸ் ஓட்டும் பணியை தவிர்ப்பதற்காகவும், அதற்கு மாற்றாக எளிதான வேலைக்கு செல்லவும் 8 மாநகர பஸ் டிரைவர்கள் போலியான கண்பரிசோதனை அறிக்கையை சமர்ப்பித்து இருப்பது தற்போது தெரியவந்து உள்ளது. அவர்களில் அண்ணா நகர் பஸ் டெப்போவில் பணியாற்றும் ஒருவர் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார்.

    அவர் எழும்பூரில் உள்ள அரசு கண் மருத்துவமனையில் கண்பரிசோதனை செய்து சான்றிதழ் பெற்ற போது போல் போலியான அறிக்கையை சமர்ப்பித்து உள்ளார். இதில் அந்த சான்றிதழில் பரிசோதனை செய்ததாக கூறப்பட்ட பெயர் கொண்ட டாக்டர்கள் அங்கு பணியிலேயே இல்லை என்பது விசாரணையில் தெரியவந்து உள்ளது.

    இதே போல் மற்ற பணிமனைகளிலும் டிரைவர்கள் போலியான கண்பரிசோதனை அறிக்கை வழங்கி எளிதான வேலைக்கு மாறி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதையடுத்து சமீபத்தில் டிரைவர் பணியை தவிர்த்து மற்ற வேலைக்கு மாற்றப்பட்டவர்கள் சமர்ப்பித்த டாக்டர்களின் பரிசோதனை அறிக்கைகள் அனைத்தையும் ஆய்வு செய்ய அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர்.

    • அரசு பஸ் டிரைவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
    • சப்-இன்ஸ்பெக்டர் பூபதி ராஜா வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரையை சேர்ந்தவர் ஜெயராமன், அரசு பஸ் டிரைவர். அவர் ஓட்டி சென்ற பஸ் கீழநெட்டூர் கிராமத்தின் வழியாக சென்ற போது, அதே ஊரை சேர்ந்த காளிமுத்து, அவரது மகன் அஜித்குமார் இருவரும் அவர்களின் வீட்டின் அருகே பஸ்சை நிறுத்தி ஏறினர். இதனை ஜெயராமன் கண்டித்தார். அப்போது இருவரும் ஜெயராமனை அவதூறாக பேசி தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்து மானாமதுரை போலீஸ் நிலையத்தில் ஜெயராமன் கொடுத்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பூபதி ராஜா வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

    • ஆம்னி பஸ்சை மகேந்திரன் என்பவர் ஓட்டி வந்தார்.
    • காரில் வந்த 2 வாலிபர்களுக்கும்,மகேந்திரனுக்கும் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    நெல்லை:

    கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து சென்னைக்கு தனியார் ஆம்னி பஸ் ஒன்று நேற்று இரவு புறப்பட்டு வந்தது.

    தாக்குதல்

    அந்த பஸ்சை புதுச்சேரி மாநிலம் பெரியார்நகர் 2-வது குறுக்கு தெருவை சேர்ந்த மகேந்திரன் என்பவர் ஓட்டி வந்தார். பஸ் நெல்லை வண்ணார் பேட்டை பகுதியில் பயணி களை ஏற்றிக் கொண்டிருந்த போது அங்கு ஒரு காரில் சில பயணிகள் வந்தனர்.

    அவர்களை பஸ்சில் ஏற்றுவதில் அந்த காரில் வந்த 2 வாலிபர்களுக்கும், பஸ் டிரைவரான மகேந்திர னுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாகவும், இந்த தகராறில் ஆத்திர மடைந்த 2 வாலிபர்களும் மகேந்திர னை சரமாரியாக தாக்கி விட்டு அங்கிருந்து தப்பி ஓடிய தாகவும் கூறப்படுகிறது.

    போலீசார் வலைவீச்சு

    இது தொடர்பாக மகேந்தி ரன் அளித்த புகாரில் பாளை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    அதில் அந்த நபர்கள் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே பன்னம்பாறையை சேர்ந்த சேகர், ஆறுமுகம் ஆகியோர் என்பது தெரிய வந்தது. அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    ×