search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "hacked to death"

    • உடலை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • முன்பகை காரணமாக சாமியப்பனை யாராவது வெட்டி கொலை செய்தனரா என விசாரிக்கின்றனர்.

    மேட்டுப்பாளையம்,

    திருச்சி மாவட்டம் லால்குடியை சேர்ந்தவர் சாமியப்பன் (வயது 53). கூலித்தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

    இவர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள மாணிக்கம்கவுண்டன் புதூரில் உள்ள தோட்டத்துக்கு வேலைக்காக வந்தார். பின்னர் அங்கு தங்கி இருந்து கூலிவேலை செய்து வந்தார்.

    நேற்று மாலை தோட்டத்து க்குள் நுழைந்த மர்மநபர் யாரோ சாமியப்பனை வெட்டி கொலை செய்து விட்டு தப்பிச் சென்றனர்.

    ரத்த வெள்ளத்தில் தொழிலாளி கொலை செய்யப்பட்டு பிணமாக கிடப்பதை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் இது குறித்து அன்னூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக இன்ஸ்பெக்டர் நித்யா, சப்-இன்ஸ்பெக்டர் விக்னேஷ், சிவக்குமார், தனிப்பிரவு ஏட்டு சிவபிரசாத் மற்றும் போலீ சார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசா ரணை நடத்தினர்.

    பின்னர் போலீசார் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்த சாமியப்பனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனை க்கு கோவை அரசு ஆஸ்பத்தி ரிக்கு பிரேத பரிசோத னைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து அன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    தொடர்ந்து முன்பகை காரணமாக சாமியப்பனை யாராவது வெட்டி கொலை செய்தார்களா அல்லது வேறு ஏதாவது காரணமாக என விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் போலீசார் அந்த பகுதிகளில் பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு காமி ராக்களில் கொலையாளி கள் வந்து செல்லும் காட்சி கள் பதிவாகி உள்ள தா என ஆய்வு செய்து வருகின்றனர்.

    • ஒரு வாலிபர் வெட்டுகாயத்துடன் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார்.
    • இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள செண்பகபுதூர் கொப்பு வாய்க்கால் பகுதியில் இன்று அதிகாலை ஒரு வாலிபர் தலை,உடல் முழுவதும் வெட்டுகாயத்துடன் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார்.

    மேலும் அவரது உடல் அருகே ஒரு மோட்டார் சைக்கிளும் கிடந்தது. இதுப்பற்றி அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சத்தியமங்கலம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    இதையடுத்து சம்பவ இடத்துக்கு சத்தியமங்கலம் ஏ.எஸ்.பி.ஐமன் ஜமால் மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    அப்போது பிணமாக கிடப்பது சத்தியமங்கலம் செண்பகபுதூர் அருகே உள்ள சாணார் பதி பகுதியை சேர்ந்த மாரிமுத்து (35) என்பது தெரியவந்தது.

    மேலும் இவருக்கு திருமணமாகி கல்யாணி (30) என்ற மனைவியும், 13 வயதில் ஒரு மகள் இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரது குடும்பத்தினருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் விரைந்து வந்து மாரிமுத்துவின் உடலை பார்த்து கதறி அழுதனர்.

    மாரிமுத்து ஒரு தனியார் பள்ளியில் பஸ் டிரைவராக வேலைப்பார்த்து வந்தார். நேற்று மாலை வீட்டில் இருந்த அவரை அவரது நண்பர் ஒருவர் அழைத்து சென்றார்.

    அதன் பின்னர் அவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இந்த நிலையில் தான் அவர் உடலில் வெட்டு காயத்துடன் பிணமாக மீட்கப்பட்டார்.

    இது குறித்து போலீசார் மாரிமுத்துவின் நண்பரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் அவர் கொலை செய்யப்பட்டாரா?அல்லது விபத்தில் இறந்தாரா? என்று பிரேத பரிசோதனையில் தான் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.

    ×