search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ஆட்சிக்கு வந்தால் ஐதராபாத் பெயர் மாற்றப்படும்: பா.ஜ.க. அதிரடி அறிவிப்பு
    X

    ஆட்சிக்கு வந்தால் "ஐதராபாத்" பெயர் மாற்றப்படும்: பா.ஜ.க. அதிரடி அறிவிப்பு

    • பா.ஜ.க.வாலும், மோடியாலும்தான் ராமர் கோவில் என்ற கனவு நிறைவேறி இருக்கிறது.
    • மத்தியில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்ததும், பல நகரங்களின் முந்தைய பெயர்கள் மீண்டும் சூட்டப்பட்டது.

    திருப்பதி:

    தெலுங்கானாவில் பா.ஜ.க.வைச் சேர்ந்த அசாம் மாநில முதல் மந்திரி ஹிமந்த பிஸ்வா சர்மா பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:

    தெலுங்கானாவில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்து 30 நிமிடங்களில் ஐதராபாத்தின் பெயர் பாக்யாநகர் என மாற்றப்படும். இப்படி மாற்றினால் யாரும் எதுவும் செய்துவிட முடியாது.

    பாலஸ்தீனத்தை ஆதரிக்கிற இவர்கள் எல்லாம் (ஒவைசி கட்சி) அங்கேயே போய்விடட்டும். அவர்களுக்காக சண்டையிடட்டும்.

    ராமர் கோவில் கட்டப்பட்டு விடும் என்று யாரேனும் நினைத்தது உண்டா? ஜவகர்லால் நேருவுக்கோ, இந்திராவுக்கோ அந்தத் துணிச்சல் இருந்ததா?

    பா.ஜ.க.வாலும், மோடியாலும்தான் இப்போது ராமர் கோவில் என்ற கனவு நிறைவேறி இருக்கிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    மத்தியில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்ததும், பல நகரங்களின் முந்தைய பெயர்கள் மீண்டும் சூட்டப்பட்டது. அது தெலுங்கானா மாநிலத்திலும் தொடர்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த வாக்குறுதி எல்லோரையும் அதிர வைத்துள்ளது.

    Next Story
    ×