search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rajasthan polls"

    • ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவருக்கு சொந்தமான இடங்களில் சோதனை
    • அசோக் கெலாட் மகன் வைபவ் கெலாட், விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன்

    ராஜஸ்தான் மாநிலத்தில் அடுத்த மாதம் 25-ந்தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதமே இருக்கும் நிலையில், இன்று அமலாக்கத்துறை அதிகாரிகள் ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவர் கோவிந்த் சிங் தோதாஸ்ரா வீடு மற்றும் அவர் தொடர்பான இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.

    மேலும், FEMA வழக்கு தொடர்பாக அம்மாநில முதல்வர் அசோக் கெலாட்டின் மகன் வைபவ் கெலாட் நாளை அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி சம்மன் வழங்கியுள்ளது.

    இதுதொடர்பான அசோக் கெலாட் கூறியதாவது:-

    நேற்று, காங்கிரஸ் ராஜஸ்தான் பெண்களுக்கான உத்தரவாதத்தை வெளியிட்டது. இன்று ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை, எனது மகனுக்கு ஆஜராகும்படி சம்மன் நடவடிக்கை.

    ராஜஸ்தானில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். ஏனென்றால், பெண்கள், விவசாயிகள், ஏழை மக்கள் காங்கிரஸின் உத்தரவாதத்தின் பலன்களை பெறுவதை பா.ஜனதா விரும்பவில்லை. நான் என் சொல்வதை உங்களால் புரிந்து கொள்ள முடியும்'' என்றார்.

    நேற்று நடைபெற்ற பேரணியின்போது, அசோக் கெலாட் ராஜஸ்தான் மாநிலத்தில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் 1.05 கோடி குடும்பங்களுக்கு சமையல் கியாஸ் சிலிண்டர் 500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும். குடும்பத் தலைவிகளுக்கு ஆண்டுக்கு 10 ஆயிரம் ரூபாய் தவணை முறையில் வழங்கப்படும்'' என வாக்குறுதி அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • கடந்த வாரம் சோதனை நடத்தி பணம் மற்றும் ஆவணங்கள் பறிமுதல்
    • தேர்தலுக்கு ஒரு மாதமே இருக்கும் நிலையில், அசோக் கெலாட்டிற்கு இது சவால் நிறைந்ததாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

    அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவர் கோவிந்த் சிங் தோதாஸ்ராவிற்கு தொடர்பான இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும், ஆறு இடங்களில் சோதனை நடத்தி வருவதாகவும் அமலாகத்துறை தெரிவித்துள்ளது.

    ராஜஸ்தான் மாநில பள்ளி ஆசிரியர்கள் தேர்வுக்கான கேள்வித்தாள் வெளியான குற்றச்சாட்டு தொடர்பாக இந்த விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

    கடந்த வாரம் காங்கிரஸ் தலைவர் தினேஷ் கோதானியா மற்றும் பல இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. அப்போது 12 லட்சம் ரூபாய் கைப்பற்றியதுடன், குற்றச்சாட்டு தொடர்பான ஆவணங்களையும் கைப்பற்றியது. இந்த நிலையில் தற்போது காங்கிரஸ் தலைவருக்கு தொடர்பான இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

    ராஜஸ்தான் மாநில சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதமே இருக்கும் நிலையில், இதுபோன்ற சோதனை அசோக் கெலாட்டிற்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதற்கிடையே FEMA வழக்கு தொடர்பாக ஜெய்ப்பூர் அலுவலகத்தில் நாளை ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி அமலாக்கத்துறை, ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட்டின் மகன் வைபவ் கெலாட்டிற்கு சம்மன் அனுப்பியுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ராஜஸ்தானில் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது
    • தொடர்ந்து 2-வது முறையாக மீண்டும் ஆட்சியை பிடிக்க காங்கிரஸ் தீவிரம்

    ராஜஸ்தானில் அடுத்த மாதம் (நவம்பர்) 25-ந்தேதி, மாநில சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. தற்போது ஆட்சி செய்து வரும் காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சியை பிடிக்க, துரிதமாக வேலை செய்து வருகிறது.

    அதேவேளையில், பா.ஜனதாவும் ஆட்சியை பிடிக்க விரும்புகிறது. ஆளுங்கட்சிக்கு எதிரான எதிர்ப்பை தங்களுக்கு சாதகமாக்க நினைக்கிறது. ராஜஸ்தானில் ஐந்தாண்டுக்கு ஒருமுறை ஆட்சி மாறிமாறி வந்துள்ளது. இதனால் பா.ஜனதா இந்த முறை தங்களுக்குதான் வாய்ப்பு என்ற முறையில் வேலை செய்து வருகிறது. தேதி அறிவிப்பதற்கு முன்னதாகவே பிரதமர் மோடி, அமித் ஷா போன்ற தலைவர்கள் ராஜஸ்தான் சென்று பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில், வேட்பாளர்களை தேர்வு செய்வது குறித்து காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையிலான, காங்கிரஸ் கட்சியின் மத்திய தேர்தல் கமிட்டி கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற்றது.

    இந்த கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட், ராஜஸ்தான் மாநிலத்திற்கான காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளர் சுக்ஜிந்தர் ரந்தாவா, ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவர் கோவிந்த், பொது செயலாளர் (ஒருங்கிணைப்பு) கே.சி. வேனுகோபால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    இந்த கூட்டத்திற்குப்பின் மல்லிகார்ஜூன கார்கே தனது எக்ஸ் பக்கத்தில் ''சேமிப்பு, நிவாரணம், வளர்ச்சி, பாதுகாப்பு, உயர்வு போன்ற அம்சங்களில் காங்கிரசின் நல்லாட்சியால் ராஜஸ்தான் வளர்ச்சியை கண்டுள்ளது. இதனால் மக்கள் எங்களை மீண்டும் ஆட்சியில் அமர்த்துவார்கள் என்று நம்புகிறோம்'' என்றார்.

    • அசோக் கெலாட் மக்களுக்காக உழைத்திருந்தால் விளம்பர போஸ்டர் எதற்கு
    • டெல்லி, பஞ்சாப் மாநிலத்தில் தொடர்ந்து ஆம் ஆத்மி ஆட்சிதான்

    ராஜஸ்தான் மாநிலத்தில் இந்த வருட இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. டெல்லி, பஞ்சாப் மாநிலங்களை தொடர்ந்து ராஜஸ்தானிலும் ஆதிக்கம் செலுத்த ஆம் ஆத்மி கட்சி விரும்புகிறது. இதற்கு முன்னோட்டமாக பஞ்சாப் மாநில முதல்வருடன் இணைந்து நேற்று ராஜஸ்தானில் கெஜ்ரிவால் பேரணி நடத்தினார்.

    நேற்று நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டத்தில் கெஜ்ரிவால் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    ஆம் ஆத்மி ஆட்சியை டெல்லி மற்றும் பஞ்சாபில் யாராலும் 50 வருடத்திற்கு வீழ்த்த முடியாது. நீங்கள் வரும் தேர்தலில் எங்களுக்கு வாக்களிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறேன். அப்படி செய்தால் ராஜஸ்தானில் இருந்தும் எங்களை 50 வருடத்திற்கு யாராலும் நீக்க முடியாது என்ற வகையில் சேவைகள் செய்து மக்கள் மனதில் இடம் பிடிப்போம்.

    நாங்கள் இங்கே வரும்போது, அசோக் கெலாட் போஸ்டர்கள் கங்காநகர் முழுவதும் மற்றும் இந்த மைதானத்திலும் ஒட்டப்படிருந்ததை பார்த்தோம். அவர் கடந்த 5 வருடம் மக்களுக்காக உழைத்திருந்தால், இந்த போஸ்டர்கள் தேவையிருந்திருக்காது.

    பேரணியின்போது சிலர் இங்கே வந்து நாற்காலிகளை தூக்கி எறிந்து சேதப்படுத்தினர். இதெல்லாம் கோழைத்தனம். அசோக் கெலாட் 5 வருடம் ஏதும் செய்யவில்லை. இதனால் ஆம் ஆத்மியின் பேரணிகளை அழிக்க முயற்சிக்கிறார்கள்.

    இவ்வாறு தெரிவித்தார்.

    ராஜஸ்தானில் பா.ஜனதாவுக்கு 50 இடங்களுக்கு மேல் கிடைக்காது. அந்த கட்சிக்கு தோல்வி உறுதி என்று மாநில காங்கிரஸ் தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான சச்சின் பைலட் கூறினார். #SachinPilot #RajasthanAssemblyElection
    ஜெய்ப்பூர்:

    200 தொகுதிகள் கொண்ட ராஜஸ்தான் சட்டசபைக்கு வருகிற 7-ந் தேதி தேர்தல் நடக்கிறது. பா.ஜனதாவின் கோட்டையாக கருதப்படும் ராஜஸ்தானில் 2008-ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்தது. அதன் பிறகு பா.ஜனதா 2013-ம் ஆண்டு மீண்டும் போராடி காங்கிரசிடம் இருந்து ஆட்சியை கைப்பற்றியது.

    தற்போது நடைபெறும் தேர்தலில் பா.ஜனதா ஆட்சியை தக்க வைக்க கடுமையாக போராடுகிறது. அங்கு பா.ஜனதாவுக்கு செல்வாக்கு இருந்தாலும் முதல்-மந்திரி வசுந்தரா ராஜேசிந்தியா மீது மக்கள் மத்தியில் அதிருப்தி நிலவுகிறது. இதை தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்டு காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடிக்க கடும் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளது.

    ஓட்டுப்பதிவுக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் தேர்தல் நிலவரம் குறித்து மாநில காங்கிரஸ் தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான சச்சின் பைலட் அளித்த பேட்டி வருமாறு:-

    கடந்த 5 ஆண்டு கால பா.ஜனதா ஆட்சியில் மக்களுக்கு எதுவும் செய்யவில்லை. கடந்த 11 மாதங்களாக டெல்லியில் இருந்து வந்த பா.ஜனதா தலைவர்கள்தான் இங்கு பேசிக் கொண்டு இருக்கிறார்கள். அவர்களால் 4 வருடங்களில் செய்ய முடியாததை 11 மாதங்களில் செய்ய முடியுமா?

    இந்த 5 ஆண்டுகளில் வறட்சி, வெள்ளம், கற்பழிப்பு, கொலை, சமூக மோதல்கள் என பல சம்பவங்கள் நடந்தன. அப்போது எந்த தலைவரும் டெல்லியில் இருந்து வந்து பார்க்கவில்லை. எனவே மக்கள் பா.ஜனதாவை தோற்கடித்து காங்கிரசை ஆட்சியில் அமர்த்த முடிவு செய்து விட்டார்கள்.

    பா.ஜனதாவுக்கு 50 இடங்களுக்கு மேல் கிடைக்காது. அந்த கட்சிக்கு தோல்வி உறுதி. பிரதமர் மோடி, அமித்ஷா தங்களது பண பலத்தை காட்டுகிறார்கள். ஆனால் எதுவும் பலிக்காது. மக்கள் பா.ஜனதாவுக்கு சரியான பாடம் புகட்டுவார்கள்.

    முதல்-மந்திரி வசுந்தரா திட்டங்களை நிறைவேற்ற 5 ஆண்டுகள் போதாது என்று கூறுகிறார். அரசு நினைத்தால் முன்கூட்டியே எதையும் செய்யலாம். ஆனால் வசுந்தராவின் அகந்தை, புறக்கணிப்பு, அதிகார குவிப்பு போன்றவற்றாலும் சுரங்கம், மணல் மற்றும் சாராய மாபியாக்களுக்கு ஆதரவாக செயல்பட்டதாலும் மக்கள் அவருக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்க மாட்டார்கள்.

    உ.பி.முதல்வர் யோகி ஆதித்யநாத் இங்கு வந்து மதப்பிரசாரம் செய்தார். அவர் பதவி ஏற்றபோது என்ன உறுதிமொழி எடுத்தார் என்பது மக்களுக்கு தெரியும். அதை மீறும் வகையில் பிரசாரம் செய்தார்.

    பா.ஜனதா மத உணர்வை தூண்டி விட்டு ஆதாயம் தேடப்பார்க்கிறது. மாநிலத்தின் வளர்ச்சி, வேலை வாய்ப்பு, விவசாயிகள் தற்கொலை, விலைவாசி உயர்வு போன்றவை பற்றி ஒரு போதும் பேசியது கிடையாது. அதை புறக்கணித்ததற்கு காரணம் அவர்கள் அதில் எந்த சாதனையும் படைக்கவில்லை.

    பா.ஜனதா இப்போது காங்கிரசை ஒரு குடும்ப கட்சி என்று விமர்சிக்கிறது. ஏன் வசுந்தராவின் தாய் ஒரு அரசியல்வாதியாக இருந்தவர்தானே. அவரது வாரிசுதான் வசுந்தரா. இவரின் சகோதரிகளும் அரசியலில் தான் இருக்கிறார்கள். மகனும் ஒரு அரசியல்வாதிதான். இப்படி வசுந்தரா குடும்பமே அரசியலில் இருப்பது பிரதமர் மோடியின் பார்வைக்கு தெரியவில்லை.

    காங்கிரஸ் அப்படி அல்ல. இங்குதான் ஜனநாயகம் நிலவுகிறது. இதற்கு 130 ஆண்டு கால வரலாறு உள்ளது. அதன் தலைவர்களாக நாடு முழுவதிலும் இருந்து பலர் இருந்துள்ளனர். அவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.  #SachinPilot #RajasthanAssemblyElection

    ராஜஸ்தானில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய பா.ஜ.க. தலைவர் அமித் ஷா காங்கிரஸ் கட்சிக்கு தலைவரும் கிடையாது செயல்திட்டமும் இல்லை என்று குறிப்பிட்டார். #Congress #Rajasthanpolls #AmitShah
    ஜெய்ப்பூர்:

    200 இடங்களை கொண்ட ராஜஸ்தான் சட்டசபைக்கு டிசம்பர் 7-ம்தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் மீண்டும் ஆட்சியை தக்கவைத்து கொள்ள ஆளும் பா.ஜ.க.வும், இழந்த ஆட்சியை கைப்பற்ற எதிர்க்கட்சியான காங்கிரசும் முனைப்பு காட்டி வருகின்றன.

    பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் இம்மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு தங்கள் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டியுள்ளனர்.

    இந்நிலையில், இங்குள்ள ஜலோர் மாவட்டத்தில் பா.ஜ.க. தலைவர் அமித் ஷா இன்று பிரசாரம் செய்தார். அப்போது, காங்கிரஸ் கட்சிக்கு தலைவரும் கிடையாது செயல்திட்டமும் இல்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

    இம்மாநிலத்தில் வசுந்தராஜே சிந்தியா தலைமையிலான பா.ஜ.க. ஆட்சியில் மாநிலத்தின் வருவாய் கணிசமாக அதிகரித்துள்ளது. இதன் மூலம் ராஜஸ்தான் மாநிலம் வளர்ச்சிப் பாதையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இந்த சட்டசபை தேர்தலில் மட்டுமில்லாமல் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலிலும் பா.ஜ.க. வெற்றிபெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும்.

    ஆனால், காங்கிரஸ் கட்சியும் ஆட்சி அமைக்க வேண்டும் என கணவு காணுகின்றது. ஆனால், அந்த கட்சிக்கு தலைமையும் கிடையாது, செயல்திட்டமும் கிடையாது என்றும் அமித் ஷா தெரிவித்தார். #Congress #Rajasthanpolls #AmitShah
    ராஜஸ்தான் சட்டசபை தேர்தலில் இன்று காங்கிரஸ் சார்பில் முன்னாள் முதல் மந்திரி அசோக் கேலாட், அம்மாநில கட்சி தலைவர் சச்சின் பைலட் ஆகியோர் இன்று வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். #VasundharaRaje #Rajasthanpolls #SachinPilot #AshokGehlot #SachinPilot
    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தான் மாநில சட்டசபைக்கு டிசம்பர் 7-ம்தேதி நடைபெறும் தேர்தலில் போட்டியிடும் 152 வேட்பாளர்களின் பெயர்களை  கொண்ட முதல் பட்டியலை காங்கிரஸ் தலைமை வெளியிட்டது.

    200 இடங்களை கொண்ட ராஜஸ்தான் சட்டசபைக்கு டிசம்பர் 7-ம்தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் மீண்டும் ஆட்சியை தக்கவைத்து கொள்ள ஆளும் பா.ஜ.க.வும், இழந்த ஆட்சியை கைப்பற்ற எதிர்க்கட்சியான காங்கிரசும் முனைப்பு காட்டி வருகின்றன.

    அம்மாநில முதல் மந்திரி வசுந்தரா ராஜே சிந்தியா ஜல்ராபட்டான் தொகுதியில் கடந்த 16-ம் தேதி தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

    கடந்த 1985-ம் ஆண்டு முதன்முதலாக தோல்பூர் தொகுதியில் சட்டசபை தேர்தலை சந்தித்து வெற்றிபெற்ற வசுந்தரா, பின்னர் 1989 முதல் 2003 வரை ஜல்வார் பாராளுமன்ற தொகுதியில் தொடர்ந்து 5 முறை போட்டியிட்டு வெற்றி பெற்றவர்.


    தற்போது, ஜல்ராப்பட்டான் தொகுதி எம்.எல்.ஏ.வாக இவர் வெற்றி பெற்றால் ஐந்தாவது முறையாக அம்மாநில சட்டசபை உறுப்பினராக பொறுப்பேற்பார் என்பது குறிப்பிடத்தக்கது.  

    இந்நிலையில், ராஜஸ்தான் சட்டசபை தேர்தலில் இன்று காங்கிரஸ் சார்பில் முன்னாள் முதல் மந்திரி அசோக் கேலாட் சர்தார்புரா தொகுதியிலும், அம்மாநில கட்சி தலைவர் சச்சின் பைலட் டோங் தொகுதியிலும் இன்று வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.  #VasundharaRaje #Rajasthanpolls #SachinPilot #AshokGehlot #SachinPilot
    ராஜஸ்தான் சட்டசபை தேர்தலில் முதல் மந்திரி வசுந்தரா ராஜே சிந்தியாவை எதிர்த்து மத்திய முன்னாள் மந்திரி ஜஸ்வந்த் சிங் மகன் மன்வேந்திரா சிங் காங்கிரஸ் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். #JaswantSingh #VasundharaRaje #ManvendraSingh #Rajasthanpolls
    ஜெய்ப்பூர்:

    200 இடங்களை கொண்ட ராஜஸ்தான் சட்டசபைக்கு டிசம்பர் 7-ம்தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் மீண்டும் ஆட்சியை தக்கவைத்து கொள்ள ஆளும் பா.ஜ.க.வும், இழந்த ஆட்சியை கைப்பற்ற எதிர்க்கட்சியான காங்கிரசும் முனைப்பு காட்டி வருகின்றன.

    காங்கிரஸ் கட்சி சார்பில் இந்த தேர்தலில் போட்டியிடும் 184 வேட்பாளர்களின் பெயர்களை கொண்ட இரு பட்டியல்களாக அக்கட்சியின் தலைமை வெளியிட்டுள்ளது.

    இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள முன்னாள் முதல் மந்திரி அசோக் கேலாட், சர்தார்பூர் தொகுதியிலும், அம்மாநில காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட், டோங்க் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.

    இதேபோல், பா.ஜ.க.வும் மூன்று பட்டியல்களின் மூலம் தங்கள் கட்சியை சேர்ந்த 170 வேட்பாளர்களின் பெயர்களை அறிவித்துள்ளது.

    அம்மாநில முதல் மந்திரி வசுந்தரா ராஜே சிந்தியா ஜல்ராபட்டான் தொகுதியில் இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அவரை எதிர்த்து போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளராக முன்னாள் மந்திரி ஜஸ்வந்த் சிங் மகன் மன்வேந்திரா சிங் அறிவிக்கப்பட்டுள்ளார்.



    தற்போது பார்மர் தொகுதி எம்.எல்.ஏ.வாக பதவி வகித்துவரும் மன்வேந்திரா சிங்குக்கு மீண்டும் சீட் வழங்கப்படாததால் அவர் பா.ஜ.க.வில் இருந்து விலகி சமீபத்தில் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். இந்நிலையில், வசுந்தரா ராஜே சிந்தியாவை எதிர்த்து ஜல்ராபட்டான் தொகுதியில் மோதும் வாய்ப்பு இவருக்கு அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. #JaswantSingh #VasundharaRaje #ManvendraSingh #Rajasthanpolls
    ராஜஸ்தான் சட்டசபைக்கு டிசம்பர் 7-ம்தேதி நடைபெறும் தேர்தலில் போட்டியிடும் 152 வேட்பாளர்களின் பெயர்களை கொண்ட முதல் பட்டியலை காங்கிரஸ் தலைமை வெளியிட்டது. #RajasthanAssemblyElections2018 #Congresslist
    புதுடெல்லி:

    200 இடங்களை கொண்ட ராஜஸ்தான் சட்டசபைக்கு டிசம்பர் 7-ம்தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் மீண்டும் ஆட்சியை தக்கவைத்து கொள்ள ஆளும் பா.ஜ.க.வும், இழந்த ஆட்சியை கைப்பற்ற எதிர்க்கட்சியான காங்கிரசும் முனைப்பு காட்டி வருகின்றன.

    இந்நிலையில், காங்கிரஸ் கட்சி சார்பில் இந்த தேர்தலில் போட்டியிடும் 152 வேட்பாளர்களின் பெயர்களை  கொண்ட முதல் பட்டியலை காங்கிரஸ் தலைமை வெளியிட்டது.



    இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள முன்னாள் முதல் மந்திரி அசோக் கேலாட், சர்தார்பூர் தொகுதியிலும், அம்மாநில காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட், டோங்க் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.
          
    தேசிய மகளின் ஆணையத்தின் முன்னாள் தலைவர் கிரிஜா வியாஸ், உதய்பூர் தொகுதியிலும், தற்போது சட்டசபையில் எதிர்கட்சி தலைவராக பதவி வகிக்கும் ராமேஷ்வர் லால் டுடி, நோக்ஹா தொகுதியிலும் காங்கிரஸ் மூத்த தலைவர் சி.பி. ஜோஷி, நத்ட்வாரா தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.

    இந்த தேர்தலில் 162 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை இருகட்டங்களாக  பா.ஜ.க. ஏற்கனவே வெளியிட்டுள்ளது.  #RajasthanAssemblyElections2018 #Congresslist
    ×