search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போட்டி"

    ராமநாதபுரம் அரசு அருங்காட்சியகத்தில் கட்டுரை போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.
    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் அரசு அருங்காட்சியகத்தில் 6-ம் வகுப்பு முதல் 10-ம்  வகுப்பு வரை மாணவ-மாணவிகளுக்கு கட்டுரைப் போட்டி நடந்தது. இதில் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் மாணவர்கள் கலந்து கொண்டனர். 6,7,8-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்குஹோமி ஜகாங்கீர் பாபா என்ற தலைப்பில் கட்டுரைப் போட்டி நடந்தது. 

    அதில் முதல் இடத்தை அத்தியூத்து அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர் ஹஸன் அலியும், 2-வது இடத்தை ராமநாதபுரம் நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி திவ்யதர்ஷினி மற்றும் ராமநாதபுரம் ராஜா மேல்நிலைப்பள்ளி மாணவி லேகா ஸ்ரீ, 3-வது இடத்தை முதலூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவி ஜெயமாலினி ஆகியோர் பெற்றனர்.

    9, 10-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு இஸ்ரோ - ஐ.எஸ்.ஆர்.ஓ. என்ற தலைப்பில் கட்டுரைப் போட்டி நடந்தது இதில் ராமநாதபுரம் ராஜா மேல்நிலைப்பள்ளி மாணவர் தனசேகர், விநாயகர் மேல்நிலைப்பள்ளி மாணவி பிரீத்தி ஜிந்தா, 3-ம் இடத்தை சித்தார்கோட்டை முகம்மதிய மேல்நிலைப்பள்ளி மாணவி காருண்யா ஆகியோர் பெற்றனர்.

    வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. கலந்து கொண்ட அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் பள்ளிக்கு சான்றிதழ்கள் அனுப்பி வைத்தனர்.


    நாமக்கல்லில் உடற்திறன் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடந்தது.
    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட தடகள சங்கத்தின் சார்பாக மாவட்ட கலெக்டர் வளாகத்தில் உள்ள விளையாட்டு அரங்கில் மாவட்ட அளவிலான உடற்திறன் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெற்றது. 

    இப்போட்டியை நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் சின்ராஜ் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

    ஆண்களுக்கு 10 கிலோமீட்டர் தூரமும் மற்றும் பெண்களுக்கு 5 கிலோமீட்டர் தூரமும் என 2 பிரிவுகளாக நடத்தப்பட்டன. இதில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த வீரர்கள் திரளாக பங்கேற்றனர். 

    இந்த மாரத்தான் போட்டியை நாமக்கல் மாவட்ட தடகள சங்கத்தின் நிர்வாகிகள் ஏற்பாடு செய்தனர்.
    ×