search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "thanga tamil selvan"

    உளவுத்துறை எச்சரிக்கையை தொடர்ந்து தோல்வி பயத்தால் 3 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களின் பதவியை பறிக்க சபாநாயகர் முயற்சி செய்வதாக தங்க தமிழ்செல்வன் தெரிவித்துள்ளார். #ThangaTamilSelvan
    சென்னை:

    நடந்து முடிந்த 18 தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி கிடைக்காது என்று உளவுத்துறை ரிபோர்ட் கொடுத்துள்ளது. அதுமட்டுமல்ல வருகிற 19-ந்தேதி நடைபெறும் 4 சட்டசபை தொகுதி இடைத் தேர்தலில் பணம் பாதாளம் வரை பாய்ந்தாலும் அ.தி.மு.க.வுக்கு வெற்றி கிடைப்பது சிரமம்தான்.

    அதனால்தான் ஆட்சியை தக்க வைப்பதற்காக குறுக்கு வழியில் முயல்கின்றனர். அதற்கு சபாநாயகர் துணை போகிறார்.



    நோட்டீசு அனுப்பப்பட்டுள்ள 3 எம்.எல்.ஏ.க்கள் மீதும் நடவடிக்கை எடுக்க முடியாது அவர்களுக்கு சட்ட பாதுகாப்பு உள்ளது. அறந்தாங்கி ரத்தினசபாபதி, விருத்தாசலம் கலைச் செல்வன், இருவரும் இதற்கு முன்பு அ.தி.மு.க. அம்மா அணியில் இருந்தனர். சசிகலா தலைமையில் ஒரு அணியாக செயல்படுவதற்கு 20 எம்.எல்.ஏ.க்கள் சுப்ரீம் கோர்ட்டில் கையெழுத்து போட்டு கொடுத்ததில் இவர்கள் இருவரும் கையெழுத்திட்டுள்ளனர்.

    எனவே சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி தான் இரு எம்.எல்.ஏ.க்களும் செயல்பட்டனர். இப்போது இந்த 3 எம்.எல்.ஏ.க்களும் அ.ம.மு.க.வில் உறுப்பினராக இல்லை. அ.தி.மு.க.வில் தான் உள்ளனர். எனவே இதற்கு முன்பு நடந்த சம்பவத்தை வைத்து இப்போது சபாநாயகர் சட்டப்படி தகுதி நீக்கம் செய்ய முடியாது.அதையும் மீறி தகுதிநீக்கம் செய்தால் 6 மாதத்தில் தேர்தலை சந்திப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார். #ThangaTamilSelvan
    தேர்தல் விதிமுறைகளை மீறி பிரசாரத்தில் ஈடுபட்டதாக தங்கதமிழ்செல்வன் உள்பட அவரது கட்சியினர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். #ThangaTamilSelvan
    ஆண்டிப்பட்டி:

    ஆண்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி பறக்கும்படை அதிகாரியாக இருப்பவர் நாகரத்தினம். இவர் ஆண்டிப்பட்டி போலீஸ் நிலையத்தில் அளித்த புகார் மனுவில், ஆண்டிப்பட்டியில் அ.ம.மு.க. வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் அனுமதியின்றி அதிக வாகனங்களில் ஒன்று கூடி போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுத்தி உள்ளனர் என தெரிவித்தார்.

    அதன் பேரில் அ.ம.மு.க. நிர்வாகிகள் மீது போலீசார் வழக்குபதிவு செய்தனர். இதேபோல் போடியில் அதிக வாகனங்கள் தேர்தல் பிரசாரத்துக்கு பயன்படுத்தப்பட்டதாக போடி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து வேட்பாளர் தங்கதமிழ் செல்வன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    இதேபோல் கூடலூர் அருகே லோயர்கேம்ப் பகுதியில் இரவு 10 மணிக்கு மேல் பிரசாரம் செய்ததாக லோயர்கேம்ப் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். #ThangaTamilSelvan
    தேனி தொகுதியில் ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் தெரு, தெருவாக பணத்தை அள்ளி இரைக்கிறார்கள் என்று தங்க. தமிழ்ச்செல்வன் புகார் தெவித்துள்ளார். #thangatamilselvan #opanneerselvam #dinakaran

    குன்னம்:

    பெரம்பலூரில் அ.ம.மு.க., கொள்கை பரப்பு செயலாளர் தங்க.தமிழ்ச்செல்வன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தேனி பாராளுமன்ற தொகுதியில் எனக்கு மக்கள் மிகப்பெரிய வெற்றியை தருவார்கள் என நம்புகிறேன். தேர்தல் ஆணையம் நியாயமாக நடந்தால் நல்லது. ஆளும் கட்சிக்கு உடனே ரிசல்ட் கொடுக்கிறார்கள். எங்கள் கட்சியை நசுக்க பார்க்கிறார்கள்.

    ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் பணத்தை அள்ளி இரைக்கிறார்கள். தெரு, தெருவாக ரோட்டில் பணத்தை போட் டுக்கொண்டே போகிறார்கள். அந்த அளவுக்கு அத்துமீறல் நடக்கிறது. ஆனால் போலீசார் வேடிக்கை பார்க்கிறார்கள்.


    கலெக்டர் இதனை கண்டித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். செந்தில்பாலாஜி, கலைராஜன் ஆகியோர் போனது எங்கள் இயக்கத்திற்கு பெரிய இழப்பு இல்லை. தேனி பகுதியில் 25 ஆண்டுகளாக பணி செய்துள்ளேன். எனக்கு மக்கள் ஆதரவு தருவார்கள்.

    பணம் மட்டுமே முதலீடாக வைத்து தேர்தலை பார்க்க முடியாது. பணத்தை கொடுத்தால் யாரும் ஓட்டு போடமாட்டார்கள். மக்கள் மனநிலை நேரத்திற்கு ஏற்ப மாறும். பணம், அதிகாரத்தை வைத்து வெற்றி பெற முடியாது. பா.ஜ.க., அ.தி.மு.க. அரசுக்கு மக்களிடம் நல்ல பெயர் இல்லை.

    ஜாக்டோ-ஜியோ அமைப்பின் 9 அம்ச கோரிக்கைகளை பரிசீலனை செய்வோம் என தேர்தல் அறிக்கை வெளியிட்டது அ.ம.மு.க. மட்டுமே தான். எத்தனை ஆண்டுகளாக ஜாக்டோஜியோ அமைப்பினர் போராடுகிறார்கள். தி.மு.க., அ.தி.மு.க. இரண்டு கட்சியும் ஏன்? அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்றுவது குறித்து தேர்தல் அறிக்கையில் வெளியிடவில்லை.

    எங்களுக்கு பாராளுமன்ற தேர்தலில் நல்ல மெஜாரிட்டி உள்ளது. தற்போது மிகப் பெரிய அரசியல் மாற்றம் வேண்டும் என மக்கள் நினைக்கிறார்கள். அந்த மாற்றத்தை மக்கள் ஓட்டு போட்டு தருவார்கள்.

    புல்வாமா தாக்குதல் குறித்து தேர்தல் ஆணையம் பேசக்கூடாது என தடை போட்டுள்ள நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், அமைச்சர் ராஜேந்திர பாலாஜியும் பேசி வருகின்றனர். இது தேர்தல் விதிமீறல்.

    இதனால் முதல்வர், அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்திற்கு துணிவிருக்கிறதா? 100 சதவீதம் குக்கர் சின்னம் எங்களுக்குத்தான் கிடைக்கும். குக்கர் சின்னம் கிடைக்கா விட்டால் தனித்தனி சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெறுவோம். இந்த தேர்தலில் டி.டி.வி. அலை வீசுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார். #thangatamilselvan #opanneerselvam #dinakaran

    அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பாக ஆண்டிப்பட்டி தொகுதியில் தங்க தமிழ்செல்வன் மீண்டும் போட்டியிடுவார் என்று தெரிகிறது. #ThangaTamilSelvan #AndipattiConstituency
    சென்னை:

    தமிழகத்தில் 39 பாராளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் 1 பாராளுமன்ற தொகுதிக்கும் அடுத்த மாதம் (ஏப்ரல்) 18-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.

    இந்த தேர்தலோடு சேர்த்து தமிழகத்தில் காலியாக உள்ள 18 சட்டசபை தொகுதிக்களும், புதுச்சேரி மாநிலம் தட்டாஞ்சாவடி சட்டசபை தொகுதிக்கும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

    இந்த தேர்தலில் வேட்பாளர்கள் அ.தி.மு.க.- தி.மு.க. இரு கட்சிகளும் கடந்த ஞாயிற்றுக்கிழமை வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. இதில் உள்ள கூட்டணி கட்சிகளும் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது.

    அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர்களின் முதற்கட்ட பட்டியலை துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டிருந்தார். இதில் 24 எம்.பி. தொகுதிக்கான வேட்பாளர்களும், 9 சட்டமன்ற இடைத்தேர்தல் தொகுதிக்கான வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டனர்.

    அடுத்த பட்டியலை இன்னும் 2 நாளில் டி.டி.வி. தினகரன் வெளியிட உள்ளார். இதில் 16 எம்.பி. தொகுதிக்கான வேட்பாளர்களும், 9 சட்டமன்ற தொகுதிக்கான வேட்பாளர்களும் அறிவிக்கப்பட உள்ளனர்.

    இந்த பட்டியலில் ஆண்டிப்பட்டி சட்டமன்ற தொகுதியில் தங்க தமிழ்ச் செல்வன் பெயர் இடம் பெற்றுள்ளது. #ThangaTamilSelvan #AndipattiConstituency
    அ.தி.மு.க.,-பா.ஜ.க. கூட்டணியின் வாக்குகள் நோட்டாவிற்கு கீழ் செல்லும் என அ.ம.மு.க.வின் கொள்கை பரப்புச் செயலாளர் தங்க தமிழ்செல்வன் தெரிவித்தார். #parliamentelection #admk #thangatamilselvan

    திருப்பரங்குன்றம்:

    மதுரை புறநகர் தெற்கு மாவட்ட அ.ம.மு.க. சார்பில் திருப்பரங்குன்றம் பகுதியில் நடைபெற்ற ஜெயலலிதா பிறந்தநாள் பொதுக்கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் மகேந்திரன் தலைமை தாங்கினார்.

    துணைச்செயலாளர் எஸ்.எஸ்.டி.மனோகரன், ஒன்றிய செயலாளர் கருத்தக் கண்ணன், பேரவை மாவட்ட செயலாளர் செல்வம், பகுதி செயலாளர் ராமமூர்த்தி, சுமதிமதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    பகுதி செயலாளர் வீரமணி வரவேற்றார். மாநில கொள்கை பரப்பு செயலாளர் தங்கதமிழ் செல்வன் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசியதாவது:-

    அ.தி.மு.க. தொண்டர்கள் 90 சதவீதம் பேர் அ.ம.மு.க. வில் உள்ளனர். மத்திய, மாநில அரசு மீது மக்கள் அதிருப்தி உள்ளது. பா.ஜ.க., அ.தி.மு.க.விற்கு எதிரான வாக்குகள் அ.ம.மு.க.விற்கே வந்து சேரும்.

    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு இந்த ஆட்சியை எதிர்க்க திராணி இல்லை என்பதை மக்கள் உணர்ந்துள்ளதால் தி.மு.க.விற்கு வாக்களிக்க மாட்டார்கள். பா.ம.க. அ.தி.மு.க. கூட்டணி குறித்து சமூக வலைதளங்களில் வெளிவரும் செய்திகளை பார்த்தால் ராமதாஸ், அன்புமணி ஆகிய. இருவரும் தமிழகத்தை விட்டே வெளியேறும் நிலை உருவாகும். அ.தி.மு.க. பா.ஜ.க. கூட்டணியின் வாக்கு சதவீதம் நோட்டாவிற்கு கீழ் செல்லும்.

    இந்தியாவின் பிரதமராக யார் வரவேண்டும் என்பதை அ.ம.மு.க. நிர்ணயிக்கும், தமிழகத்தின் ஜீவாதார உரிமைகளை மீட்டெடுப்போம். அடிமை அரசின் அவலத்தால் மத்தியஅரசு தமிழகத்திற்கு எதிரான திட்டங்களை செயல்படுத்துகிறது.

    ஆர்.கே.நகரை போன்று வரும் மக்களவை தேர்தலில் 40 தொகுதிகளிலும் அ.ம.மு.க.விற்கே வெற்றி எளிதில் கிட்டும். இளம் வாக்காளர்கள் அ.ம.மு.க.வின் பக்கமே உள்ளனர்.

    மெகா கூட்டணி, மேஜிக் கூட்டணி அமைத்தாலும் வெற்றி அ.ம.மு.க. விற்கே, அடுத்த ஆட்சி அ.ம.மு.க.வின் ஆட்சி தான் என்பதை பொதுமக்களே கூறுகின்றனர். அ.ம.மு.க. ஒன்றரை ஆண்டில் மிகப்பெரிய வளர்ச்சியை பெற்றுள்ளது.

    தீப்பெட்டி கூட எடுத்துச் செல்ல முடியாத காஷ்மீர் தேசிய நெடுஞ்சாலையில் பாராளுமன்ற தேர்தல் நெருங்கும் வேளையில் திடீரென தாக்குதல் நடத்துவதற்கான சூட்சுமம் என்ன? பாராளுமன்ற தேர்தல் வருமா? போர் வருமா? என்ற நிலை உள்ளது.

    பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. மிகப்பெரிய தோல்வியை தழுவும், அ.ம.மு.க. 40 இடங்களிலும் வெல்லும்.

    ஆறுமுகசாமி ஆணையத்தை நியமித்த நிலையில் அம்மா இறப்பில் மர்மம் இல்லை என்பது தெரிந்தால் சசிகலாவிற்கு ஆதரவு பெருகும் என்ற நிலை உள்ளது.

    எனவே ஆணையம் விசாரணை முடிவுக்கு வரவில்லை. தர்ம யுத்தம் நடத்திவிட்டு தற்போது ஆணையத்தில் ஆஜராகாமல் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் காலம் தாழ்த்தி வருகிறார்.

    வழக்கை முடிக்காமல் பா.ஜ.க.. அ.தி.மு.க. மூடி மறைக்கிறது. மக்களவை தேர்தலோடு 18 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நடக்க வாய்ப்புள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இளைஞரணி செயலாளர் டேவிட் அண்ணாத் துரை, அமைப்பு செயலாளர் சோழன் பழனிச்சாமி, ஒன்றிய துணைச்செயலாளர் நிலையூர் முத்துராஜா, ஆசைத்தம்பி, சங்கேஸ்வரன், பி.முருகன், முருகன், ரங்கராஜ், கிருஷ்ணமூர்த்தி, சூரி உள்ளிட்ட பலர் கூட்டத்தில் பங்கேற்றனர். #parliamentelection #admk #thangatamilselvan

    பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க., தி.மு.க. கூட்டணிகள் படுதோல்வி அடையும் என்று தங்கதமிழ்செல்வன் தெரிவித்துள்ளார். #thangatamilselvan #admk #dmk

    மதுரை:

    மதுரை பாண்டி கோவிலில் ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு 3 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதனை தொடங்கி வைத்த தினகரன் ஆதரவாளர் தங்க தமிழ்செல்வன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திடம் பணபலம்தான் உள்ளது. மக்கள் பலம் இல்லை. தமிழகத்தில் கூட்டணி கட்சிகளின் எண்ணம் எடுபடாது. 40 பாராளுமன்ற தொகுதிகளிலும் அ.ம.மு.க. வெற்றிபெறும். அ.ம.மு.க. கூட்டணி குறித்து பல்வேறு கட்சிகளிடம் பேசி வருகிறோம்.


    ஜெயலலிதாவுக்கு ஈடு இணையாக யாரும் இல்லை. அ.தி.மு.க.வை கேவலமாக விமர்சித்த பா.ம.க.வுடனான கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணி யாகும்.

    விஜயகாந்தின் உடல் நிலையை விசாரிக்க வரும் தலைவர்கள் குறித்து அவரது மகன் விமர்சிப்பது தவறான செயலாகும். அ.தி.மு.க., தி.மு.க. கூட்டணிகள் தேர்தலில் படுதோல்வி அடையும். அ.ம.மு.க. வெற்றி பெற்று தமிழக உரிமைகளை பெற பாடுபடும்.

    இவ்வாறு அவர் கூறினார். #thangatamilselvan #admk #dmk

    மதுரை பாராளுமன்ற தொகுதியில் 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அ.ம.மு.க. வெற்றி பெறும் என்று தங்க தமிழ்செல்வன் பேசினார். #thangatamilselvan #parliamentelection #edappadipalanisamy

    மேலூர்:

    அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் மதுரை புறநகர் வடக்கு, மாநகர் மற்றும் தெற்கு மாவட்டம் சார்பில் மதுரை பாராளுமன்ற தொகுதி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் ஒத்தக்கடையில் நடந்தது.

    புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் சரவணன் தலைமை தாங்கினார். மாநகர் வடக்கு மாவட்ட செயலாளர் ஜெயபால், தெற்கு மாவட்ட செயலாளர் ராஜலிங்கம் முன்னிலை வகித்தனர்.

    அ.ம.மு.க. கொள்கை பரப்பு செயலாளரும், மண்டல பொறுப்பாளருமான தங்க தமிழ்ச்செல்வன் கலந்து கொண்டு பேசியதாவது:-

    நாங்கள் 18 எம்.எல். ஏ.க்களும் கவர்னிடம் முதல்வரை மாற்ற வேண்டும் என்ற மனு கொடுத்த ஒரே காரணத்திற்காக நீக்கப்பட்டுள்ளோம். ஆனால் எதிர்த்து ஓட்டு போட்ட ஓ.பன்னீர்செல்வம் உள்பட 11 பேர் நீக்கப்படவில்லை.

    கடந்த தேர்தலில் அம்மா லேடியா, மோடியா என்றார்கள். மக்கள் அம்மாவிற்கு தான் வாக்களித்தார்கள். தி.மு.க.வை மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. தற்போது அம்மாவும் இல்லை, கருணாநிதியும் இல்லை.

    மக்கள் புதிய தலைவர் டி.டி.வி. தினகரனைத்தான் விரும்புகின்றனர். அ.ம.மு.க. ஆரம்பித்து 1½ ஆண்டுகளாகிறது. மக்களிடம் அமோக ஆதரவு உள்ளது. தற்போதுள்ள அ.தி.மு.க. அவல ஆட்சியும், பா.ஜ.க. ஆட்சியும் மக்களுக்கு பிடிக்கவில்லை.

    மக்கள் செல்வாக்கு நமக்கு உள்ளது. உறுதியாக 39 இடங்களில் 37 இடங்களில் வெற்றி பெற முடியும்.

    மதுரை தொகுதியில் தினகரன் யாரை வேட்பாளராக நிறுத்தினாலும் எல்லோரும் கடுமையாக உழைக்க வேண்டும். மதுரை பாராளுமன்ற தேர்தலில் அ.ம.மு.க. மக்களின் ஆதரவோடு 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதில் பேரவை செயலாளர் மாரியப்பன் கென்னடி, துணை செயலாளர் செல்வராஜ், முன்னாள் எம்.எல்.ஏ. மகேந்திரன்,ஒன்றிய செயலாளர்கள் சோமாசி, சரவணன், சேவுகன், பாஸ்கரன், நிவாகிகள் நாகசுப்பிரமணியன், அன்புக்கரசு, சொக்கம்பட்டி இளங்கோ, மாணவரணி கமல் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    கொடநாடு விவகாரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பதவி விலகி சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என தங்கதமிழ்ச்செல்வன் தெரிவித்தார். #ThangaTamilSelvan #EdappadiPalaniswami #KodanadEstate

    ஆண்டிப்பட்டி:

    ஆண்டிப்பட்டியில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழாவை முன்னிட்டு அவரது சிலைக்கு அ.ம.மு.க. கொள்கை பரப்பு செயலாளர் தங்கதமிழ்ச்செல்வன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கொடநாடு கொலை மற்றும் கொள்ளை சம்பவத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.

    அந்த சம்பவம் முதல்வர் பழனிச்சாமி ஏற்பாட்டில்தான் நடந்ததா? என்பது விசாரணையில்தான் தெரிய வரும். முதல்வர் மீது பழி சுமத்தப்பட்டிருப்பதால் அவர் தனது பதவியை விட்டு விலகி வேறு ஒருவரிடம் தற்காலிகமாக ஒப்படைக்க வேண்டும். தான் நிரபராதி என நிரூபித்தபின் மீண்டும் முதல்வர் பதவிக்கு வரலாம். இதை அவர் செய்வாரா? என்பது தெரிய வில்லை.


    இந்த சம்பவத்தில் யார்? யாரெல்லாம் தொடர்பில் இருக்கிறார்கள் என்பது விசாரணைக்கு பின்னரே தெரிய வரும். தனி நீதிபதி மூலமாகவோ, சி.பி.ஐ. மூலமாகவோ விசாரித்து அதன் உண்மைத்தன்மையை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்.

    மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக விசாரணை கமி‌ஷன் அமைக்கப்பட்டது. 3 மாதத்தில் விசாரணை முடியும் என கூறிய நிலையில் 2 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் இழுத்துக்கொண்டே செல்வது ஏன்? அப்படி என்றால் இந்த விசாரணை கமி‌ஷன் இன்னும் எத்தனை ஆண்டுக்குள் இதனை முடிக்கும் என்பதை மக்களுக்கு தெளிவு படுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினர். #ThangaTamilSelvan #EdappadiPalaniswami #KodanadEstate

    திருவாரூர் தொகுதியில் மட்டும் தேர்தல் நடக்க வாய்ப்பு உள்ளதால் அங்கே நாங்கள் அமோக வெற்றி பெறுவோம் என்று தங்க தமிழ்செல்வன் தெரிவித்துள்ளார். #thangatamilselvan #thiruvarurelection

    அவனியாபுரம்:

    மதுரை விமான நிலையத்தில் அ.ம.மு.க. கொள்கை பரப்புச் செயலாளர் தங்க தமிழ் செல்வன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    செந்தில் பாலாஜி கட்சியை விட்டு சென்றால் அ.ம.மு.க. வில் உள்ள அனைவரும் கட்சியை விட்டு சென்று விடுவார்கள் என்று கூற முடியாது. தேர்தலை சந்திப்போம் என்று எங்கள் பொதுச்செயலாளர் கூறினார்.

    தற்சமயத்திற்கு திருவாரூர் தொகுதியில் மட்டும் தேர்தல் நடக்க வாய்ப்புள்ளது. அங்கே நாங்கள் அமோக வெற்றி பெறுவோம். உளவுத்துறை அ.ம.மு.க. தான் வளர்ச்சியடைந்து வருகிறது என தெரிவித்துள்ளது. பாராளுமன்ற தேர்தலோடுதான் இடைத்தேர்தல் நடக்கும். திருவாரூர் மட்டும் நாளை மறுதினம் அறிவிக்க வாய்ப்புள்ளது.

    அலங்காநல்லூரில் நடைபெற்ற கூட்டுறவு சங்க தேர்தலில் அ.ம.மு.க.வை சேர்ந்தவர் துணைத்தலைவர் ஆவதற்கு செல்லூர் ராஜூ மற்றும் ராஜன்செல்லப்பா உதவியிருக்கலாம். இனி வரும் தேர்தலில் அவர்கள் உதவி செய்தாலும், இல்லையென்றாலும் நாங்கள் வெற்றி பெறுவோம்.

    இவ்வாறு அவர் கூறினார். #thangatamilselvan #thiruvarurelection 

    அதிமுக அணிகள் இணைப்பு பேச்சுவார்த்தைக்கு தயார் என்று தங்க தமிழ்ச்செல்வன் கூறியுள்ளார். #ThangaTamilSelvan

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தல் மற்றும் 20 தொகுதி இடைத்தேர்தல்களில் வெற்றி பெறுவதற்கு அ.தி.மு.க.வும் தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகமும் இணைய வேண்டும் என்று அ.தி.மு.க. தொண்டர்களும் பாரதிய ஜனதா மேலிடமும் விரும்புவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

    இதுபற்றி தினகரனின் ஆதரவாளரான தங்கதமிழ்ச் செல்வனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

    அ.தி.மு.க.வும், அம்மா மக்கள் முன்னேற்ற கழகமும் இணைய வேண்டும். அப்போதுதான் வர இருக்கிற தேர்தல்களில் முழு வெற்றியை பெற முடியும் என்பது தொண்டர்களின் கருத்தாக உள்ளது.

    தேர்தலில் தி.மு.க.வை வீழ்த்த வேண்டும் என்றால் அ.தி.மு.க. இரு அணிகளும் இணைய வேண்டும் என்று தான் எல்லா நிர்வாகிகளும் விரும்புகிறார்கள்.

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை மாற்ற வேண்டும் என்ற ஒரே கோரிக்கைதான் 18 எம்.எல்.ஏ.க்களின் ‘அஜண்டாவாக இருந்தது. டி.டி.வி தினகரனின் நிபந்தனை, கூடுதலாக 4, 5 அமைச்சர்கள் பதவியை விட்டு விலக வேண்டும் என்பதுதான்.


    ஆனால் எடப்பாடி தரப்பு சசிகலா குடும்பத்தை தவிர யார் வந்தாலும் சேர்த்து கொள்வோம் என்கிறார்கள்.

    எனவே யார்-யார் பதவியில் இருக்க வேண்டும், யார்-யார் விலக வேண்டும் என்பதை பெருந்தன்மையுடன் பேசி முடிவெடுக்க வேண்டும். இரு தரப்பிலும் பேசினால் கட்சிகள் இணைவது சாத்தியம்தான்.

    ஏற்கனவே ஜெ.அணி, ஜானகி அணி என 2 பிரிவாக இருந்த போதுதான் தி.மு.க. ஜெயித்து ஆட்சியை பிடித்தது. அந்த தவறை உணர்ந்து இரு அணிகளும் பின்னர் இணைந்தது. ஆட்சியையும் பிடித்தது.

    அதே போன்ற ஒரு கால கட்டம்தான் இப்போது வந்துள்ளது. ஆளும் கட்சியிடம் உளவுப் பிரிவு உள்ளதால் யாருக்கு பலம் அதிகம் உள்ளது என்ற சர்வே இருக்கும். அதன் அடிப்படையில் பதவி கொடுக்கலாம்.

    தமிழ்நாடு முழுவதும் மக்களையும், கட்சி நிர்வாகிகளையும் சந்திக்கும் ஒரே தலைவராக டி.டி.வி. தினகரன் வலம் வருகிறார். ஆனால் ஆளும் கட்சியில் உள்ள முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்ற ஊர்களுக்கு சென்று தொண்டர்களை சந்திக்க முடிவதில்லை. சேலம் மாவட்டத்திலேயே அவர் 5 நாட்கள் முகாமிட்டு தங்குகிறார்.

    எனவே யாருக்கு மக்களிடம் செல்வாக்கு உள்ளது என்பது தெள்ளத் தெளிவாக தெரிகிறது. அம்மாவின் சபதத்தை நிறைவேற்ற வேண்டுமானால் ஆளும் கட்சிதான் விட்டு கொடுத்து வரவேண்டும்.

    கட்சியின் பொதுச் செயலாளர் சசிகலாவை ஜெயிலுக்கு அனுப்பி விட்டார்கள். 18 எம்.எல்.ஏ.க் களை தகுதி நீக்கம் செய்து வீட்டுக்கு அனுப்பி விட்டார்கள். இதைவிட இழப்பதற்கு எங்களிடம் என்ன இருக்கிறது?

    அ.தி.மு.க.வில் உள்ள 10 பேர் சுய நலத்துக்காக கட்சியையும், ஆட்சியையும் இழக்க வேண்டுமா? என்பதை சிந்தியுங்கள்.

    அ.தி.மு.க. இணைந்தால் கட்சிக்கு மிகப்பெரிய பலம் கிடைக்கும். தேர்தலில் அ.தி.மு.க.வுடன் பாரதிய ஜனதா கூட்டணி சேர்ந்தால் அ.தி.மு.க. ‘அவுட்’ ஆகி விடும். இதுதான் இன்றைய நிலை.

    இவ்வாறு தங்க தமிழ்ச் செல்வன் கூறினார். #ThangaTamilSelvan

    தி.மு.க.தான் முதல் எதிரி, அ.தி.மு.க.வுடன் அ.ம.மு.க. இணைய தயார் என்று நெல்லையில் தங்கதமிழ்செல்வன் நிருபர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். #thangatamilselvan #ammk #admk #dmk

    நெல்லை:

    அ.ம.மு.க. கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்செல்வன் நெல்லையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் அ.ம.மு.க. வளர்ச்சி பெற்று வருகிறது. வருகிற தேர்தல்களில் அ.தி.மு.க.- அ.ம.மு.க. இணையாமல் ஜெயிக்க முடியாது என எண்ணி இரு கட்சிகளையும் இணைய வைக்க பா.ஜனதா முயற்சி செய்து வருவதாக அறிகிறோம்.

    அ.தி.மு.க.வையும், இரட்டை இலையையும் அழிக்க நாங்கள் வரவில்லை. எம்.ஜி.ஆர். உருவாக்கி, ஜெயலலிதாவால் பாதுகாக்கப்பட்ட அ.தி.மு.க.வும் இருக்க வேண்டும், இரட்டை இலையும் இருக்க வேண்டும். தி.மு.க. தான் எங்களுக்கு முதல் எதிரி. முதல்வரையும், சில அமைச்சர்களையும், நிர்வாகிகளையும் மாற்றி ஜெயலலிதா ஆட்சியை அமைத்தால் அ.தி.மு.க.வுடன் அ.ம.மு.க. இணைய தயார்.

    அ.தி.மு.க., தி.மு.க. பா.ஜனதா மீது மக்கள் அதிருப்தியில் உள்ளனர். புதிய தலைமயை மக்கள் எதிர்பார்க்கின்றனர். தமிழகத்தில் அரசியல் வெற்றிடம் ஏற்பட்டது உண்மைதான். அதை சசிகலா, டி.டி.வி. தினகரனால் தான் கொடுக்க முடியும். முன்கூட்டியே இதை உணர்ந்து செயல்பட்டால் நல்லது.


    மதசார்பற்ற அணிகளுடன் தான் கூட்டணி என்று டி.டி.வி. தினகரன் தெளிவுப்படுத்தி விட்டார். எனவே பா.ஜனதாவுடன் கூட்டணி சேர மாட்டோம். அ.தி.மு.க.வை பொறுத்த வரை தவறு செய்தது ஓ.பன்னீர்செல்வம் தான். கட்சியை பிளவுப்படுத்தி இரட்டை இலையை முடக்க காரணமாக இருந்த ஓ.பி.எஸ்.ஐ. மீண்டும் கட்சியில் சேர்த்ததை மக்கள் விரும்பவில்லை. அ.தி.மு.க. வில் 90 சதவீத தொண்டர்கள் எங்களுடன் உள்ளனர். இடைத்தேர்தலில் அ.ம.மு.க. தனித்து போட்டியிடும். யாரும் கூட்டணிக்கு வந்தால் சேர்த்துக்கொள்வோம்.

    தமிழக அரசு உள்ளாட்சி, இடைத்தேர்தலை நடத்தாமல் உள்ளது. எனினும் பாராளுமன்ற தேர்தலுடன் இடைத் தேர்தலை நடத்தியே ஆக வேண்டும். கஜா புயல் நிவாரணத்திற்கு முதல்வர் 15 ஆயிரம் கோடி நிவாரணம் கேட்டார். அதுவே தவறு. 40 ஆயிரம் கோடி கேட்டிருக்க வேண்டும்.

    ஆனால் வெறும் 350 கோடியை மட்டும் வழங்கி மத்திய அரசு தமிழகத்தை அவமானப்படுத்தி விட்டது. தமிழக அமைச்சர்களோ, முதல்வரோ மக்கள் பிரச்சினைக்காக டெல்லி செல்வ தில்லை. தங்களை பாதுகாத்து கொள்ளவே டெல்லி செல்கின்றனர். தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் 3 பேர் விடுவிப்பு துணிச்சலான முடிவு.

    இவ்வாறு அவர் கூறினார். #thangatamilselvan #ammk #admk #dmk

    20 தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வெற்றிபெற முடியாது என்று தங்க தமிழ்செல்வன் கூறினார். #ADMK #TTVDhinakaran #ThangaTamilSelvan

    திண்டுக்கல்:

    நிலக்கோட்டையில் வருகிற 11-ந் தேதி அ.ம.மு.க. சார்பில் உண்ணாவிரதம் நடைபெறுகிறது. இது குறித்த ஆலோசனைக் கூட்டம் நிலக்கோட்டையில் நடந்தது. இதில் மாநில கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்செல்வன் பங்கேற்று பேசினார். அவர் கூறியதாவது:-

    நிலக்கோட்டை தொகுதியில் மட்டுமின்றி இடைத்தேர்தல் நடைபெற உள்ள 20 தொகுதிகளிலும் அ.ம.மு.க. அமோக வெற்றி பெறும். ஆனால் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி 8 தொகுதிகளில் மட்டும் வெற்றி பெற்றால் போதும் என்ற மனநிலையில் உள்ளார். அதன் மூலம் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளலாம் என அ.தி.மு.க.வினர் நினைத்து வருகின்றனர். 20 தொகுதியில் நடைபெறும் இடைத்தேர்தலில் ரூ.200 கோடி அல்ல ரூ.2 ஆயிரம் கோடி செலவு செய்தாலும் அ.தி.மு.க. வெற்றிபெற முடியாது.


    யார் எவ்வளவு பணம் கொடுத்தாலும் அதனை வாங்கிக் கொண்டு குக்கர் சின்னத்தில் வாக்களித்து அ.ம.மு.க. வேட்பாளர்களை தொகுதி மக்கள் வெற்றி பெற செய்வார்கள். தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களும் மீண்டும் போட்டியிடுவதில் தடை ஏற்படுத்தவோ, வேட்பு மனுக்களை தள்ளுபடி செய்வதற்கான முயற்சிகளையோ மேற்கொள்ள முடியாத வகையில் அனைத்து கட்ட முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன.

    இவ்வாறு அவர் பேசினார். #ADMK #TTVDhinakaran #ThangaTamilSelvan

    ×