என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Madurai parliament election"
மதுரை:
மதுரை பாராளுமன்ற தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்ட அண்ணா திராவிட மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் வக்கீல் பசும்பொன் பாண்டியன் மதுரை ஐகோர்ட்டு கிளையில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-
நான் மதுரை பாராளுமன்ற தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்டேன். கடந்த 18-ந்தேதி ஓட்டுப்பதிவு நடந்தது. பதிவான ஓட்டுப்பெட்டிகள் அனைத்தும் மதுரை மருத்துவக் கல்லூரி அரங்கில் வைக்கப்பட்டுள்ளது.
3 அடுக்கு பாதுகாப்பு கொண்ட அங்கு கடந்த வாரம் பெண் அதிகாரி மற்றும் ஊழியர்கள் 3 பேர் சட்ட விரோதமாக சென்றுள்ளனர். 3 மணி நேரம் அங்கு இருந்துள்ளனர்.
இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரி மற்றும் ஊழியர்கள் மீது சஸ்பெண்டு நடவடிக்கை மட்டுமே எடுக்கப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தும் அலுவலர் மாவட்ட கலெக்டர் நடராஜன் மற்றும் தேர்தல் அலுவலர்கள் இந்த விவகாரத்தை மூடி மறைக்க முயற்சி செய்கிறார்கள். சட்டம் - ஒழுங்கு சம்பந்தப்பட்ட இந்த சம்பவம் குறித்து போலீஸ் கமிஷனர் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே மதுரை வாக்கு எண்ணும் மையத்தில் நடந்த சம்பவம் குறித்து முழுமையான விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் மதுரை பாராளுமன்ற தொகுதிக்கான தேர்தலை ரத்து செய்து விட்டு மறு தேர்தல் நடத்த உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது. #ParliamentEelection #HCMaduraiBench
மேலூர்:
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் மதுரை புறநகர் வடக்கு, மாநகர் மற்றும் தெற்கு மாவட்டம் சார்பில் மதுரை பாராளுமன்ற தொகுதி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் ஒத்தக்கடையில் நடந்தது.
புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் சரவணன் தலைமை தாங்கினார். மாநகர் வடக்கு மாவட்ட செயலாளர் ஜெயபால், தெற்கு மாவட்ட செயலாளர் ராஜலிங்கம் முன்னிலை வகித்தனர்.
அ.ம.மு.க. கொள்கை பரப்பு செயலாளரும், மண்டல பொறுப்பாளருமான தங்க தமிழ்ச்செல்வன் கலந்து கொண்டு பேசியதாவது:-
நாங்கள் 18 எம்.எல். ஏ.க்களும் கவர்னிடம் முதல்வரை மாற்ற வேண்டும் என்ற மனு கொடுத்த ஒரே காரணத்திற்காக நீக்கப்பட்டுள்ளோம். ஆனால் எதிர்த்து ஓட்டு போட்ட ஓ.பன்னீர்செல்வம் உள்பட 11 பேர் நீக்கப்படவில்லை.
கடந்த தேர்தலில் அம்மா லேடியா, மோடியா என்றார்கள். மக்கள் அம்மாவிற்கு தான் வாக்களித்தார்கள். தி.மு.க.வை மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. தற்போது அம்மாவும் இல்லை, கருணாநிதியும் இல்லை.
மக்கள் புதிய தலைவர் டி.டி.வி. தினகரனைத்தான் விரும்புகின்றனர். அ.ம.மு.க. ஆரம்பித்து 1½ ஆண்டுகளாகிறது. மக்களிடம் அமோக ஆதரவு உள்ளது. தற்போதுள்ள அ.தி.மு.க. அவல ஆட்சியும், பா.ஜ.க. ஆட்சியும் மக்களுக்கு பிடிக்கவில்லை.
மக்கள் செல்வாக்கு நமக்கு உள்ளது. உறுதியாக 39 இடங்களில் 37 இடங்களில் வெற்றி பெற முடியும்.
மதுரை தொகுதியில் தினகரன் யாரை வேட்பாளராக நிறுத்தினாலும் எல்லோரும் கடுமையாக உழைக்க வேண்டும். மதுரை பாராளுமன்ற தேர்தலில் அ.ம.மு.க. மக்களின் ஆதரவோடு 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதில் பேரவை செயலாளர் மாரியப்பன் கென்னடி, துணை செயலாளர் செல்வராஜ், முன்னாள் எம்.எல்.ஏ. மகேந்திரன்,ஒன்றிய செயலாளர்கள் சோமாசி, சரவணன், சேவுகன், பாஸ்கரன், நிவாகிகள் நாகசுப்பிரமணியன், அன்புக்கரசு, சொக்கம்பட்டி இளங்கோ, மாணவரணி கமல் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்