search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "dinakaran"

    • மு.க. ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதிகளை எதையும் நிறைவேற்றவில்லை.
    • ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தலில் தி.மு.க.வினர் சர்வதிகாரி போன்று அராஜகத்தை அரங்கேற்றி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோட்டில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் விடியா அரசு ஒவ்வொரு வாக்காளர்களுக்கும் பணத்தை வாரி இரைக்கிறார்கள். வீட்டுக்கு வீடு குக்கர், கொலுசு வழங்கப்படுகிறது. குறுக்கு வழிகளில் தேர்தலை எதிர்நோக்கி வருகிறார்கள்.

    பெண்களுக்கான உரிமை தொகை ஆயிரத்தை தி.மு.க. அரசு இதுவரை வழங்கவில்லை. ஆனால் தேர்தல் வருவதை ஒட்டி அமைச்சர் உதயநிதி இன்னும் ஐந்து மாதத்தில் உரிமை தொகை வழங்கப்படும் என்கிறார் இதை எப்படி நம்புவது.

    நூல் விலை உயர்வால் 40 சதவீத தொழில்கள் முடங்கிப் போய் உள்ளன. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. போலீஸ், ராணுவத்தினர், பொதுமக்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. என்னை பார்த்த பெண்மணி ஒருவர் தி.மு.க.வினர் தேர்தலுக்காக பணத்தை வாரி வாரி இரைக்கிறார்கள். நீங்கள் கவலைப்பட வேண்டாம் எங்கள் ஓட்டு உங்களுக்கு தான் என்கிறார். மக்கள் மத்தியில் இரட்டை இலைக்கு வரவேற்பு உள்ளது.

    ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தலில் தி.மு.க.வினர் சர்வதிகாரி போன்று அராஜகத்தை அரங்கேற்றி வருகின்றனர். 150 இடங்களில் பட்டியில் மாடுகளை அடைப்பது போல் மக்களை அடைத்து வைத்துள்ளார்கள். பல கோடி ரூபாய்களை வாரி இரைத்துள்ளனர். மாவட்ட தேர்தல் ஆணையர் ஆளுங்கட்சிக்கு சாதகமாக செயல்பட்டு வருகிறார். பணம் பரிசுப் பொருட்கள் விநியோகப்பதை தடை செய்ய வேண்டும். தி.மு.க.வினர் ஆட்சிக்கு வந்து 21 மாதங்கள் ஆகிறது.

    எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்காக அவர்கள் எத்தனை முறை டெல்லி சென்றார்கள். எத்தனை பேர் சந்தித்து அழுத்தம் கொடுத்தார்கள். நாங்கள் தேர்தலில் மக்களை நம்பி தான் நிற்கிறோம். பணத்தை நம்பி நிற்கவில்லை. மு.க. ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதிகளை எதையும் நிறைவேற்றவில்லை.

    கள்ள ஓட்டு போட்டவரை பிடித்துக் கொடுத்ததற்காக எனக்கு கிடைத்த பரிசு சிறை தண்டனை. இரவு 11 மணிக்கு வந்து என்னை கைது செய்தனர். உடைமாற்றி வருகிறேன் என்று சொன்னால் கூட கேட்காமல் என்னை கைது செய்தனர். இதுதான் இன்றைய தமிழகத்தின் நிலை.

    ஓ.பன்னீர்செல்வம் களத்திலேயே இல்லை. அவர் பின்னால் இனிமேல் யாரும் இருக்கமாட்டார்கள். அ.தி.மு.க.விற்கு ஓ பன்னீர்செல்வம், சசிகலா, தினகரன் இவர்களை தவிர யார் வந்தாலும் அவர்களை அரவணைத்து ஏற்றுக் கொள்வோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது என டி.டி.வி தினகரன் குற்றச்சாட்டியுள்ளார்.
    • பொதுதேர்வு விடைதாள் திருத்தும் பணியையும் ஆசிரியர்கள் புறக்கணித்து உள்ளனர்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நகர்பகுதியில் அ.ம.மு.க. முப்பெரும் விழா நடைபெற்றது. இதில் அந்த கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கலந்து கொண்டு கொடி ஏற்றி வைத்தார்.

    தொடர்ந்து தலைமை கழகபேச்சாளரும், வழக்கறிஞர் பிரிவு துணைச் செயலாளருமான வக்கீல் குரு முருகானந்தத்தின் புதிய வழக்கறிஞர் அலுவலகத்தை குத்துவிளக்கு ஏற்றி தொ டங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் ஏழை எளிய மக்களுக்காக அம்மாவால் கொண்டு வந்த அனைத்து திட்டங்களும் தி.மு.க. அரசால் கைவிடப்பட்டு உள்ளது. அம்மா உணவகம் தொடர்ந்து மூடப்பட்டு வருகிறது.

    விடியல் அரசு என கூறி வரும் தி.மு.க. ஆட்சியில் மக்களுக்கு எவ்விதமான பயன்படக்கூடிய திட்டங்கள் எதுவும் இல்லை. தினமும் கொலை, கொள்ளை அதிகரித்து வருகிறது. மக்களுக்கு பாதுகாப்பு இல்லை. சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து உள்ளது.

    மின்வெட்டு மக்களை பெரிதும் பாதிப்படைய செய்து உள்ளது. குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ. 1000 அறிவித்து ஓராண்டு முடிந்தும் இன்னும் வழங்க முடிய வில்லை. மக்களுக்கு எவ்வித வகையிலும் பயன் அளிக்காத திட்டங்கள்பல இடங்களில் செயல்படுத்த ப்படுகிறது.

    குறிப்பாக அந்தந்த மாவட்ட அமைச்சர்கள் திட்டங்களை தேர்வு செய்கின்றனர். மக்களுக்கு எவ்வித பயனும் இல்லாத வகையில் கடலூர் மற்றும் இளையான்குடி பகுதி யில் பொதுமக்களின் எதிர்ப்பை யும் கண்டு கொள்ளாமல் புதிய பஸ்நிலையம் அமைக்க ப்படுகிறது. தற்போது அரசு பொதுதேர்வு விடைதாள் திருத்தும் பணியையும் ஆசிரியர்கள் புறக்கணித்து உள்ளனர். இதனால் தி.மு.க. அரசிற்கும் தடுமாற்றம் ஏற்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

    மாவட்ட தலைவர் தேர்போகி பாண்டி, மாநில அம்மா பேரவை செய லாளர் டேவிட் அண்ணா துரை, தமிழ்நாடு-பாண்டிச் சேரி பார் கவுன்சில் துணைத் தலைவர் கார்த்திகேயன், மாநில சிறுபான்மைப்பிரிவு செயலாளர் துருக்கி ரபீக்ராஜா, முன்னாள் எம்.எல்.ஏ. மகேந்திரன் மற்றும் மாவட்ட, மானாமதுரை ஒன்றிய, நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    தேர்தல் தோல்வி குறித்து அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் நிர்வாகிகளுடன் வருகிற 1-ந்தேதி ஆலோசனை நடத்துகிறார்.

    சென்னை:

    தமிழகத்தில் நடந்த பாராளுமன்ற தேர்தல் மற்றும் 22 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் டி.டி.வி. தினகரனின் அ.ம.மு.க. படுதோல்வி அடைந்தது.

    அ.தி.மு.க. வாக்கு வங்கியை அ.ம.மு.க. பிரித்து நெருக்கடி கொடுக்கும் என்று கூறப்பட்டது. ஆனால் அ.ம.மு.க. வால் எந்த நெருக்கடியும் கொடுக்க முடியவில்லை. அக்கட்சி வேட்பாளர்கள் டெபாசிட்டுகளை இழுந்தனர்.

    சட்டமன்ற இடைத்தேர்தலில் சாதிக்க வேண்டும் என்று அ.ம.மு.க.வின் எண்ணம் நிறைவேறவில்லை. இந்த நிலையில் தேர்தல் தோல்வி குறித்து அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் நிர்வாகிகளுடன் வருகிற 1-ந்தேதி ஆலோசனை நடத்துகிறார்.

    இதுகுறித்து அ.ம.மு.க. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கட்சியின் பொதுச் செயலாளர் தினகரன் தலைமையில் வருகிற ஜூன் 1-ந்தேதி காலை 10 மணிக்கு சென்னை அசோக் நகர் நடேசன் சாலையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

    கூட்டத்தில் கட்சி தலைமை கழக நிர்வாகிகள் மாவட்ட செயலாளர்கள் பாராளுமன்ற மற்றும் சட்ட மன்ற தொகுதி வேட்பாளர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    நம்பிக்கை ஓட்டெடுப்பின்போது சிலீப்பர் செல்கள் வெளியே வருவார்கள் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

    சென்னை:

    அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் சென்னையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    எங்களுக்கு எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி கிடைக்காததற்கு காரணம் போகப் போக உங்களுக்கு தெரியவரும். தமிழகம் முழுவதும் நிறைய வாக்குச்சாவடிகளில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்துக்கு ஜீரோ வாக்குகள் பதிவாகி இருக்கின்றது என்று தகவல்கள் வந்தன.

    300 வாக்குசாவடிகளில் ஜீரோ வாக்குகள் பதிவானதாக எனக்கு தகவல் கிடைத்தது. எங்கள் முகவர்களே அங்கு இருக்கிறார்கள். ஒரு வாக்குச்சாவடியில் குறைந்த பட்சம் 4 பேர் எங்கள் முகவர்கள் இருப்பார்கள். அந்த 4 ஓட்டுக்களாவது இருக்க வேண்டும் அல்லவா? மக்களும், கட்சிக்காரர்களும் ஓட்டு போடாவிட்டாலும் பூத் ஏஜெண்டுகளின் ஓட்டுகள் எங்கே போனது? அதுதான் எங்களுக்கு தெரியவில்லை.

    ஜீரோ வாக்குகள் பதிவானதாக இணையதளத்தில் போடப்பட்டிருப்பது தொடர்பாக வருங்காலத்தில் தேர்தல் ஆணையம்தான் பதில் சொல்ல வேண்டும்.

    கேள்வி:- எடப்பாடி பழனிசாமி ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவேன் என்றீர்கள். அது தவிர்க்கப்பட்டிருக்கிறதா?

    பதில்:- கழுத்தை நெரிக்கும் வகையில் சரியாக 9 தொகுதிகளில் மட்டும் வெற்றி பெற்றுள்ளார்கள். அரசியலில் எது வேண்டு மானாலும் நடக்கலாம். இந்த ஆட்சி முடிவை நோக்கி போய்க்கொண்டிருப்பது நன்றாக தெரிகிறது.

    கேள்வி:- அ.ம.மு.க. தமிழகம் முழுக்க அதிக ஒட்டுகள் வாங்கவில்லையே ஏன்?

    பதில்:- அதற்கான காரணம் சிலருக்கு இப்போதே தெரியும். ஒருவாக்குச்சாவடியில் ஜீரோ பதிவாகி இருப்பதால் ஏஜெண்டே ஓட்டு போடவில்லை என்று சொல்கிறீர்களா? இதை நீதிமன்றத்துக்கு எடுத்துச் செல்ல முடியாது.

    கேள்வி:- அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை மக்கள் நம்பவில்லை என்று எடுத்துச் கொள்ளலாமா?

    பதில்: இதுபற்றி தேர்தல் ஆணையம்தான் பதில் சொல்ல வேண்டும்.

    பதில்:- ஓட்டு போட்டவர்கள் அனைவரும் பார்த்திருக்க மாட்டார்கள்.

    கேள்வி:- அ.ம.மு.க.வில் உள்ள அ.தி.மு.க. சிலீப்பர் செல்கள் ஆக்டிவேட் ஆகி விட்டார்களா?

    பதில்: எங்கள் வாக்குச் சாவடி ஏஜெண்டுகள் ஓட்டு போடாத இடங்களில் சிலீப்பர் செல் என்று எடுத்துக்கொள்கிறீர்களா? எங்களது சிலீப்பர் செல்கள் ஓட்டெடுப்பின்போது வெளியே வருவார்கள்.

    கேள்வி: அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வந்து இணைய வேண்டும் என்று கூறி இருக்கிறார்களே?

    பதில்: யாரும் போக வேண்டும் என்றால் போவார்கள். அதில் என்ன இருக்கிறது. 10 பேர் போவதால் கட்சி அழிந்து விடும் என்று நீங்கள் ஆசைப்படுகிறீர்களா செந்தில் பாலாஜி தி.மு.க.வுக்கு சென்று வெற்றி பெற்றிருப்பது அவரது புத்திசாலித்தனம்.


    அ.தி.மு.க. ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவேன் என்ற நம்பிக்கை எனக்கு நிச்சயம் இருக்கிறது. ஒரு ஓட்டில்தான் அவர்கள்.

    கேள்வி: தேர்தல் தோல்வி பற்றி என்ன சொல்கிறீர்கள்?

    பதில்: மக்கள் தீர்ப்பை ஏற்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    காவிரி பாசனப் பகுதியில் கெயில் குழாய் பதிக்க பயிர்களை அழித்திருப்பதற்கு தினகரன், ராமதாஸ், வைகோ ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    சென்னை:

    காவிரி பாசனப் பகுதியில் கெயில் குழாய் பதிக்க பயிர்களை அழித்திருப்பதற்கு தினகரன், ராமதாஸ், வைகோ ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன்:- 

    காவிரி டெல்டாவில் பயிர் இருக்கிற வயல்களை அழித்து எரிவாயு குழாய் பதிக்கிற வேலைகளை மத்திய அரசின் கெயில் நிறுவனம் மேற்கொண்டு வருவது கடுமையான கண்டனத்திற்குரியது.

    சீர்காழியை அடுத்த மாதானம் முதல் செம்பனார் கோவில் அருகிலுள்ள மே மாத்தூர் வரை விளை நிலங்களில் எரிவாயு குழாய்களைப் பதிக்க வேண்டும் என கெயில் நிறுவனம் ஒற்றைக்காலில் நின்று வருகிறது.

    ஆனால் அப்பகுதி விவசாயிகள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். அதனையும் மீறி நாற்றாங்கால்களிலும், நடவு செய்யப்பட்டிருக்கிற வயல்களிலும் எந்திரங்களைக் கொண்டு வந்து இறக்கி, எரிவாயு குழாய்களைப் பதிப்பதற்கான பணிகளை அரசு அதிகாரிகள் துணையோடு மேற்கொண்டிருக்கிறார்கள்.

    கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தருமபுரி,கிருஷ்ணகிரி ஆகிய 7 மாவட்டங்களில் கெயில் எரிவாயு குழாய்களை விளை நிலங்களில் பதிப்பதற்கு உச்சநீதிமன்றம் தடை விதித்த இரண்டொரு நாட்களுக்குள்ளாக இந்த நடவடிக்கையை மேற்கொண்டிருக்கிறார்கள்.

    விவசாயிகளின் வயிற்றில் அடிக்கிற இந்தப் பணியை மத்திய, மாநில ஆட்சியாளர்கள் உடனடியாக நிறுத்த வேண்டும். அங்கே குவிக்கப்பட்டிருக்கிற கனரக வாகனங்களையும், எந்திரங்களையும் அப்புறப்படுத்த வேண்டும்.

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ்:-

    நாகப்பட்டினம் மாவட்டம் மாதானத்திலிருந்து நரிமனம் எண்ணை சுத்திகரிப்பு நிலையத்திற்கு கச்சா எண்ணையை கொண்டு செல்வதற்காக, உழவர்களின் எதிர்ப்பையும் மீறி, குறுவை நடவு செய்யப்பட்டுள்ள வயல்களில் காவல்துறை துணையுடன் குழாய்ப் பாதை அமைக்கும் பணிகளை கெயில் ஓ.என்.ஜி.சி. நிறுவனங்கள் மேற்கொண்டுள்ளன.

    உழவர்களின் உணர்வுகளையும், உரிமைகளையும் மதிக்காமல் அத்துமீறி வயலில் நுழைந்து, பயிர்களை அழித்து, குழாய்ப் பாதை அமைப்பது கண்டிக்கத்தக்கதாகும்.

    மாதானம் முதல் மேமாத்தூர் வரை கெயில் எண்ணைக் குழாய்ப் பாதை அமைப்பதால் அப்பாதை நெடுகிலும் உள்ள 30 ஆயிரம் ஏக்கருக்கும் கூடுதலான விளைநிலங்கள் பாதிக்கப்படும்.

    இதனால் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் வாழ்வாதாரங்களை இழப்பார்கள். உழவர்களின் வாழ்வாதாரங்களை பறித்து விட்டு, எண்ணை குழாய்ப் பாதைகளை அமைப்பது கண்களை பறித்து விற்று விட்டு, அந்தக் காசில் கண்மை வாங்குவதற்கு இணையான அபத்தமான, அழிவுச் செயலாகும்.

    விவசாயத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பையும், பாதிப்பையும் ஏற்படுத்திவிடும்.

    எனவே, இனியாவது விழித்துக் கொண்டு இந்தத் திட்டத்தை உடனடியாக கைவிட மத்திய அரசு நிறுவனங்கள் முன்வர வேண்டும்.

    மதிமுக பொதுச் செயலாளர் வைகோ:-

    விவசாயிகள் எதிர்ப்பை பொருட்படுத்தாமல், கெயில் நிறுவனம் மே 16 -ம் தேதி, மேமாத்தூர், காளகஸ்தி நாதபுரம் பகுதியில் குறுவை சாகுபடிக்கு விதை விட்ட மற்றும் நடவு செய்த வயல்களில் பொக்லைன் இயந்திரத்தை இறக்கி பயிர்களை நாசப்படுத்தி, குழாய் பதிக்க முனைந்தபோது, மக்கள் கொதித்து எழுந்தனர்.


    நேற்று முன்தினம் உமையாள்புரம் கிராமத்தில் நடவு செய்த விளைநிலத்தில் ராட்சத குழாய் பதிக்கும் வேலைக்காக பொக்லைன் இயந்திரத்தை இறக்கிப் பயிர்களை அழித்துள்ளது கெயில் நிறுவனம்.

    கொச்சியிலிருந்து பெங்களூருக்கு எரிவாயு குழாய் கொண்டு செல்ல மேற்கு மாவட்ட விளைநிலங்களில் குழாய் அமைக்க கெயில் நிறுவனம் முயற்சித்தபோது, விவசாயிகள் போராடிய தால் மறைந்த முதல்வர் ஜெயலலிதா, கெயில் நிறுவனத்துக்கு தடை விதித்தார்.

    காவிரி பாசனப் பகுதிகளில் ஹைட்ரோ கார்பன், மீத்தேன் எரிவாயு எடுத்தல் உள்ளிட்ட நாசகாரத் திட்டங்களை ரத்துச் செய்யக்கோரி மக்கள் போராட்டம் தீவிரமடையும் சூழலை உணர்ந்துகொண்டு, தமிழக அரசு இத்திட்டங்களுக்கு உடனடியாகத் தடை விதிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

    துரோகிகள் மற்றும் எதிரிகளை டெபாசிட் இழக்கச்செய்ய வேண்டும் என்று தேர்தல் பிரசாரத்தில் டி.டி.வி.தினகரன் பேசியுள்ளார்.

    திருப்பரங்குன்றம்:

    திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலில் அ.ம.மு.க. வேட்பாளரை ஆதரித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் நாகமலை புதுக்கோட்டை பகுதியில் தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    ஆர்.கே.நகர் மக்கள் என்னை வெற்றி பெறச் செய்து தமிழகம் முழுவதும் துரோகிகளை வீழ்த்த அனுப்பியுள்ளனர்.

    ஓ.பன்னீர்செல்வம் துரோக சிந்தனையுடன் செயல்பட்டதால் அவரை பதவியில் இருந்து விலக்கி எடப்பாடி பழனிசாமியை முதல்-அமைச்சராக்கினார் சசிகலா. நான் நினைத்திருந்தால் அன்றே முதல்வராகி இருக்கலாம்.

    22 தொகுதி இடைத் தேர்தலிலும் அ.ம.மு.க. அமோக வெற்றி பெறும் என்பதை தெரிந்து கொண்ட அ.தி.மு.க.வினர் 3 எம்.எல்.ஏ.க்களை தகுதியிழப்பு செய்ய முயற்சிக்கின்றனர். வருகிற 23-ந் தேதி துரோகிகள் வீழ்ந்து விடுவார்கள்.

    சசிகலா முதல்-அமைச்சராக வேண்டும் என்று முதலில் கூறிய ஆர்.பி.உதயகுமார் தற்போது சசிகலா சிறையில் உள்ளதால் அவரைப்பற்றி பேச வேண்டாம் என்று கூறுகிறார். மந்திரவாதி கே.டி. ராஜேந்திரபாலாஜி அடுத்த தேர்தலில் டெபாசிட் இழப்பார். இவர்கள் எல்லாம் கசாப்புக்கடைக்காரர்கள் போல செயல்படுகின்றனர்.

    ஆர்.கே.நகரில் தி.மு.க. டெபாசிட் இழந்தது. திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் துரோகிகள், விரோதிகளான அ.தி.மு.க. மற்றும் தி.மு.க.வை டெபாசிட் இழக்கச் செய்ய வேண்டும்.

    துரோகத்தை ராஜதந்திரம் என்கிறார்கள். இதை எங்காவது கேள்விப்பட்டதுண்டா? பல அமைச்சர்கள் ஊருக்குள் செல்ல முடியாத நிலையில் உள்ளனர். அவர்களோடு நாம் எப்படி சேர முடியும். துரோகிகளை கூண்டோடு தோற்கடிக்க வேண்டும். உண்மையான ஜெயலலிதா ஆட்சி அமைய, மக்களாட்சி அமைய அ.ம.மு.க.வை மக்கள் அமோக வெற்றி பெறச் செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    எந்த மதத்தையும் புண்படுத்தி பேச நடிகர் கமல்ஹாசனுக்கு என்ன அவசியம்? என்று அரவக்குறிச்சியில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

    கரூர்:

    அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.ம.மு.க. வேட்பாளர் சாகுல்ஹமீதை ஆதரித்து அக்கட்சியின் பொதுச்செயலார் டி.டி.வி. தினகரன் அரவக்குறிச்சி புங்கம்பாடி பகுதியில் திறந்த வேனில் நின்றபடி பிரசாரம் செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    அ.தி.மு.க.வுக்கு எல்லா தொகுதிகளிலும் தோற்று விடுவோம் என பயம் வந்து விட்டது. துரோகம் என்றைக்கும் வென்றதாக வரலாறு கிடையாது. 18 தொகுதிகளிலும் தோற்று விடுவோம் என்ற பயத்தில் எனது ஆதரவாளர்களான 3 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்ய நோட்டீசு அனுப்பியுள்ளனர். அதற்கு நீதிமன்றம் தடைவிதித்து விட்டது.

    நடிகர் கமலஹாசன் தேவையில்லாமல் சினிமா வசனம் போல இங்கு பேசியுள்ளார். ஒரு பரபரப்பை உண்டாக்குவதற்காக அவர் பேசியிருக்கிறார். கமல் விஸ்வரூபம் என்ற ஒரு படம் எடுத்தார். பின்னர் அந்த படம் பெரிதாக விஸ்வரூபம் எடுத்து நாட்டை விட்டே போய் விடுவேன் என கமலஹாசன் தெரிவித்தார்.

    இஸ்லாமியர்களுக்கு எதிராக படம் எடுத்ததாக சந்தேகம் வந்ததால், அந்த படத்தை விளக்க வேண்டியது படத் தயாரிப்பாளர்களின் கடமை. நாட்டில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படக்கூடாது என்பதற்காக அதனை சரி செய்ய ஜெயலலிதா கூறினார். இதனால் ஜெயலலிதா மீது அவருக்கு கோபம்.

    எந்த மதத்தையும் புண்படுத்தி பேச வேண்டிய அவசியம் என்ன? இந்து, கிறிஸ்தவம், இஸ்லாம் என மதம் பற்றி எதுக்கு பேசவேண்டும். யாரோ ஒருத்தர் கொலைகாரர் என்றால் அதற்காக மதத்தை பற்றி பேச வேண்டிய அவசியம் என்ன? கோட்சே காந்தியை சுட்டுக் கொன்றதை யாருமே எற்றுக் கொள்ளமாட்டோம். அவர் என்ன மதம் என்று பார்த்துக் கொண்டிருப்போமா?

    இந்திராகாந்தியை ஒரு சீக்கியர் கொன்றார். ஆனால் மன்மோகன்சிங்கை பிரதமராக்கினார் சோனியாகாந்தி. கோட்சே எந்த மதம் என்றே நமக்கு தெரியவில்லை. அந்த பெயர் ரஷ்யன் பெயர் போல உள்ளது. அந்த கோட்சேவை இந்து பயங்கரவாதி என பேசியிருக்கிறார். இது தேவையா? காந்தியடிகளை கோட்சே துப்பாக்கியால் சுட்டுக்கொன்றதில் மதம் எங்கிருந்து வந்தது.

    தமிழக அரசு சினிமாவை போல ஏதோ செய்துவிடும் என அவரே (கமலஹாசன்) பிரசாரத்தை ரத்து செய்து விட்டு சென்றார். கமலஹாசனின் நாக்கை வெட்டுவேன் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசி உள்ளார். இது தவறில்லையா?

    துரோகத்தை பற்றி நான் பேசினால் வழக்கு போடுவோம் என்கின்றனர். நீங்கள் எத்தனை வழக்குகள் போட்டாலும் பார்த்துக்கொள்ளலாம். வருகிற 23-ந்தேதிக்கு பின்னர் நீங்கள் வழக்குபோட இருக்கிறீர்களா? என்று பார்ப்போம். உங்கள் மீதும் வழக்குவராமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

    நம்மகூட இருந்து ஓடிப் போன செந்தில் பாலாஜி என்னை அரவக்குறிச்சிக்கு அழைத்து வந்து மக்களுக்காக உண்ணாவிரம் இருக்க வைத்தார். இப்போது பா.ஜ.க.வின் சி. டீம் என அவர் பேசுகிறார். அவருக்கு இந்த தேர்தலில் தக்க பாடத்தினை புகட்ட வேண்டும். காங்கிரஸ் கூட்டணியில் இருந்து கொண்டு பா.ஜ.க., சந்திரசேகரராவுடன் பேசிக்கொண்டிருக்கிறார்கள். பா.ஜ.க.வுடன் தி.மு.க. பேசிய உண்மையை தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்து விட்டார்.

    இவ்வாறு அவர் கூறினார். 

    வருகிற 23-ந் தேதிக்கு பிறகு மோடி நினைத்தால் கூட தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சி நீடிக்காது என்று தினகரன் பேசியுள்ளார்.

    சூலூர்:

    சூலூர் தொகுதியில் அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் பிரசாரம் மேற்கொண்டார். தொகுதிக்குட்பட்ட சின்னியம்பாளையம், நீலாம்பூர், குரும்பபாளையம், கருமத்தம்பட்டி உள்பட பல்வேறு இடங்களில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    நான் முதல்-அமைச்சர் ஆக வேண்டும் என்ற ஆசையில் சுற்றி வருகிறேன் என்று சிலர் கூறுகிறார்கள். எனக்கு ஆசை இருந்தால் எனது சித்தி (சசிகலா) சிறைக்கு செல்லும்போதே நான் முதல்-அமைச்சர் ஆகி இருக்கலாம். இல்லை என்றால் ஜெயலலிதா இறந்த அன்றே ஆகி இருக்கலாம்.

    எடப்பாடி பழனிசாமி தமிழக மக்களிடம் ஓட்டு வாங்கியா முதல்-அமைச்சரானார். அவருடன் இருக்கும் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி ஆகியோர் அணி மாற முயற்சித்தனர். இது கூவத்தூரில் இருந்த அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும் தெரியும்.

    சசிகலாவை அ.தி.மு.க. பொதுச்செயலாளராக்கியது எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் உள்பட அனைவரும்தான். அதுபோன்று முதல்-அமைச்சராக இருப்பதற்கு ஓ.பன்னீர்செல்வம் தகுதியற்றவர், சசிகலாவை முதல்-அமைச்சராக மாற்ற வேண்டும் என்று சொன்னவர்களே அவர்கள்தான். 2 நாட்கள் எங்களுடன் இருந்த ஓ.பன்னீர்செல்வம், பா.ஜனதா சொன்னதும், ஜெயலலிதா சமாதிக்கு சென்ற அவர், அங்கு அமர்ந்து தர்மயுத்தம் தொடங்குகிறேன் என்று நாடகம் ஆடினார்.

    ஓ.பன்னீர்செல்வம் சரியில்லை என்பதால்தான், கொங்கு மண்டலத்தை சேர்ந்த எடப்பாடி பழனிசாமியை முதல்-அமைச்சராக வைத்தோம். அடுத்த நாளே அவர் துரோகம் செய்துவிட்டார்.

    இந்த கட்சியை காப்பாற்ற டி.டி.வி.தினகரன் வந்து உள்ளார் என்று ஜெயலலிதாவே கூறிவிட்டு சென்றார் என செயல்வீரர்கள் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசினாரே?. ஆனால் இப்போது தினகரனுக்கு எந்த ஊர் என்று கூறுகிறார். இதுதான் கலிகாலம். எந்த ஒரு துரோகத்துக்கும் மன்னிப்பு உண்டு. ஆனால் நம்பிக்கை துரோகத்துக்கு மன்னிப்பே கிடையாது. 7 ஜென்மத்துக்கும் அதை அனுபவித்து ஆக வேண்டும்.

    18 எம்.எல்.ஏ.க்களை பதவி நீக்கம் செய்தார்கள். அந்த தொகுதிகளில் இடைத்தேர்தல் வந்துவிடக்கூடாது என்று மோடியை சந்தித்தார்கள். ஆனால் மோடியாலும் முடியவில்லை. அந்த தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடந்து முடிந்து உள்ளது. அதில் ஒரு தொகுதியில்கூட அ.தி.மு.க. வெற்றி பெற முடியாது என்று உளவுத்துறை கூறி இருக்கிறது. இதனால்தான் 3 எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்ய முடிவு செய்து உள்ளனர். அதற்கும் கோர்ட்டு தடை விதித்து உள்ளது. எனவே வருகிற 23-ந் தேதி நீங்கள் வீட்டிற்கு செல்வது உறுதி.

    இவர்களுக்கு ஆதரவாக ஓட்டுப்போட்ட 18 எம்.எல்.ஏ.க்களின் பதவியை பறித்துவிட்டு, தி.மு.க.வுடன் சேர்ந்து எதிர்த்து வாக்களித்த ஓ.பன்னீர்செல்வத்துக்கு துணை முதல்-அமைச்சர் பதவி கொடுத்தார்கள். அதற்கு காரணம் மோடிதான். தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி ஆட்சி தொடர அவர்தான் காரணம்.

    வருகிற 23-ந் தேதிக்கு பிறகு மோடி நினைத்தால் கூட தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சி நீடிக்காது. அவரால் காப்பாற்றவும் முடியாது.

    துரோகத்தை வேரறுக்க, துரோகம் என்பதை இனி அரசியல்வாதிகள் பதவிக்காக நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவுக்கு நீங்கள் தீர்ப்பு வழங்க வேண்டும். தன்னை முதல்-அமைச்சராக்கியவருக்கு துரோகம் செய்தவர்கள், மக்களுக்கு எப்படி நன்மை செய்வார்கள். நீங்கள் அனைவரும் கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலில் ஜெயலலிதாவுக்குத்தான் ஓட்டுப்போட்டீர்கள். பா.ஜனதாவுக்கு வாக்களிக்கவில்லை. தமிழகத்தை பாலைவனமாக்க மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது. தயவு செய்து நீங்கள் சிந்தித்து பார்க்க வேண்டும்.

    தமிழ்நாடு தலைநிமிரவும், தமிழக மக்கள் வாழ்வு மலரவும், யாரிடமும் மண்டியிடாத, தமிழக மக்களுக்காக ஜெயலலிதா எப்படி செயல் பட்டாரோ அதுபோன்று இருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    துரோகத்தை பற்றி துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசக்கூடாது என்று தேர்தல் பிரசாரத்தில் டி.டி.வி.தினகரன் பேசியுள்ளார்.

    தூத்துக்குடி:

    ஓட்டப்பிடாரம் தொகுதி அ.ம.மு.க. வேட்பாளரை ஆதரித்து அந்த கட்சியின் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் நேற்று மாலை 2-ம் கட்டமாக பிரசாரம் செய்தார். பொட்டலூரணி பகுதியில் அவர் பேசியதாவது: -

    தமிழகத்தில் ஜெயலலிதாவின் பெயரை சொல்லிக் கொண்டு, போலியான ஆட்சி நடந்து வருகிறது. மக்களை பாதிக்கும் திட்டங்களை ஜெயலலிதா எதிர்த்தார். அவர் இருந்திருந்தால் தூத்துக்குடியில் நடந்த ஸ்டெர்லைட் போராட்டத்தில் 13 பேர் உயிர் இழந்திருக்க மாட்டார்கள். நீட் தேர்வால் மாணவி அனிதா உயிர் இழந்திருக்க மாட்டார். மோடியை ஜெயலலிதா எதிர்த்தார். அதனால்தான் ஜெயலலிதா ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் இருந்தபோது, மோடி வந்து பார்க்கவில்லை.

    ஜெயலலிதா கொலை செய்யப்பட்டு இருந்தால், நாட்டின் பிரதமருக்கு தெரியாமல் இருக்குமா? ஜெயலலிதா மரணம் குறித்து நடந்து வரும் விசாரணைக்கு இன்று வரை ஓ.பன்னீர்செல்வம் ஆஜராகாமல் இருந்து வருகிறார். ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் மக்களுக்கு துரோகம் செய்து வருகிறார்கள். இதனால்தான் அவர்களின் ஆட்சியை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்று நாங்கள் ஓட்டு கேட்கிறோம். மோடிக்கும், அ.தி.மு.க.வுக்கும் என்ன சம்பந்தம்?. இவர்கள் அண்ணா படத்துக்கு பதிலாக, மோடி படத்தை வைத்தாலும் வைப்பார்கள். இதனை தடுக்கதான் நாங்கள் வந்துள்ளோம்.

    அ.தி.மு.க. மூடப்பட இருக்கும் கம்பெனி. அந்த கம்பெனியில் தொண்டர்கள் இல்லை. அத்தனை தொண்டர்களும் எங்களிடம் உள்ளனர். ஓ.பன்னீர்செல்வம், தற்போது தினகரன் கட்சி ஆரம்பித்து உள்ளார். அது தமிழகத்துக்கு பிடித்த பிணி என்று கூறி உள்ளார். நான் அ.தி.மு.க. துரோகிகளுக்குதான் பிணி. அவர் பா.ஜனதாவில் சேர்ந்து விட்டு, ஜால்ரா அடித்து கொண்டு இருக்கிறார்.

    பிரதமர் மோடி ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கி தருவதாக கூறி ஏமாற்றினார். மேலும் வெளிநாடுகளில் உள்ள கருப்பு பணத்தை மீட்டு, ஒவ்வொருவரின் வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் போடுவதாக கூறி விட்டு, தற்போது பொதுமக்களின் வங்கி கணக்கில் இருந்த பணத்தையும் எடுத்து கொண்டார். வியாபாரிகள் ஜி.எஸ்.டி. வரியால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். ஜி.எஸ்.டி. வரியை அமல்படுத்த ஜெயலலிதா எதிர்த்தார். ஆனால் தற்போதைய ஆட்சியாளர்கள் அதற்கு அனுமதி கொடுத்து விட்டனர். பின்னர் எப்படி ஜெயலலிதா ஆட்சி என்று சொல்ல முடியும்?. அவர்களுக்கு அப்படி சொல்ல தகுதி இல்லை.

    மக்கள் சிந்தித்து வாக்களியுங்கள். ஓட்டுக்கு பணம் கொடுப்பார்கள். அது யார் பணம் என்று உங்களுக்கு தெரியும். மக்களாகிய நீங்கள் துரோகிகளின் டெபாசிட்டை காலி செய்ய வேண்டும். துரோகத்தை பற்றி ஓ.பன்னீர்செல்வம் பேசக்கூடாது. வரும் காலத்தில் எட்டப்பனுக்கு படம் போட வேண்டும் என்றால் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் படத்தைதான் போட வேண்டும்.

    நமது பகுதியை சுற்றியுள்ள கிராமங்களுக்கு முறையான சாலை வசதி கிடையாது. பழுதடைந்த சாலைகள் சீரமைக்கப்படும். பஸ் வசதி இல்லாத கிராமங்களுக்கு பஸ் வசதி ஏற்படுத்தி தரப்படும். குடிநீர் தட்டுப்பாடு சரிசெய்யப்படும். முதியோர் உதவித்தொகை உயர்த்தி தரப்படும். இதுபோன்ற அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டும் என்றால், அ.ம.மு.க. வேட்பாளரை ஆதரித்து வெற்றி பெற செய்யுங்கள்.

    இவ்வாறு அவர் பேசினார். தொடர்ந்து அவர் செக்காரக்குடி, முடிவைத்தானேந்தல், சேர்வைக் காரன்மடம் உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டார். 

    அ.தி.மு.க. ஆட்சியை டிடிவி தினகரனால் தொட்டுக்கூட பார்க்க முடியாது என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியுள்ளார்.

    மதுரை:

    திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் முனியாண்டி நிறுத்தப்பட்டுள்ளார். அவருக்கு அ.தி.மு.க. அமைச்சர்கள், முக்கிய நிர்வாகிகள் தொகுதி முழுவதும் தீவிர சுற்றுப்பயணம் சென்று ஆதரவு திரட்டி வருகிறார்கள்.

    நாகமலை புதுக்கோட்டை, வடபழஞ்சி, கீழக்குயில்குடி, ஆவியூர் உள்ளிட்ட பகுதிகளில் வேட்பாளர் முனியாண்டிக்கு, அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் இரட்டை இலைக்கு ஓட்டு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    இந்தப்பகுதியில் தினகரன் தேர்தல் பிரசாரம் செய்தபோது இங்கு குடிநீர் பிரச்சினை இருப்பதாகவும் வருகிற 23-ந் தேதிக்கு பிறகு தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி இருக்காது என்றும் பேசி உள்ளார்.

    மு.க.ஸ்டாலினும் இது போலத்தான் பேசுகிறார். குடிநீர் பிரச்சினைகளை தீர்க்க முதல்-அமைச்சர் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்துள்ளார். ரூ.10.20 கோடி மதிப்பில் விரைவில் குடிநீர் பணிகள் தொடங்கப்பட உள்ளன. முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர் உள்ளிட்ட நிர்வாகிகளை துரோகிகள் என்கிறார் தினகரன்.

    ஜெயலலிதா உருவாக்கித் தந்த ஆட்சியை தி.மு.க.வுடன் இணைந்து கவிழ்க்க துடிக்கிறார் தினகரன். இதனால் தினகரன் தான் உண்மையான துரோகி என்பதை தொண்டர்கள் தெரிந்து கொண்டனர். எனவே அ.தி.மு.க. ஆட்சியை தினகரனால் தொட்டுக்கூட பார்க்க முடியாது.

    திருப்பரங்குன்றம் அ.தி.மு.க. கோட்டை. இங்கு வெற்றி பெற்றதும் திருப்பரங்குன்றத்தை முதன்மை தொகுதியாக மாற்றுவோம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    தேர்தல் பிரசாரத்தில் சரவணன் எம்.எல்.ஏ., முன்னாள் மண்டலத்தலைவர் சாலைமுத்து, நிர்வாகிகள் வெற்றிவேல், மாரிச்சாமி, முத்து இருளாண்டி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    அ.தி.மு.க. அரசை கவிழ்க்க தினகரனின் ரகசிய பேரம் வெட்ட வெளிச்சமாகி உள்ளது என்று அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறினார்.

    மதுரை:

    திருப்பரங்குன்றத்தில் அ.தி.மு.க.வுக்கு ஆதரவு திரட்டிய அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் வருகிற 23-ந் தேதிக்கு பிறகு தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி இருக்காது என்று கிளி ஜோதிடர் போல பேசி வருகிறார். ஆனால் ஓட்டு எண்ணிக்கைக்கு பிறகு தி.மு.க. நிலைகுலைந்து போகும்.

    ஸ்டாலினும், தினகரனும் மறைமுக உடன்பாடு வைத்துக் கொண்டு அ.தி.மு.க. ஆட்சியை வீழ்த்த நினைக்கிறார்கள்.

    கடந்த 2018-ம் ஆண்டு அக்டோபர் 30-ந் தேதி மதுரையில் உள்ள தனியார் ஓட்டலில் மு.க.ஸ்டாலினும், தினகரனும் ரகசியமாக சந்தித்து பேசினர். அதனை அப்போது 2 பேரும் மறுத்தனர். ஆனால் அந்த ரகசிய சந்திப்பு இப்போது அம்பலப்படுத்தப்பட்டு உள்ளது.

    தி.மு.க.வுடன் இணைந்து அ.தி.மு.க. ஆட்சியை கவிழ்ப்போம் என்று தினகரன் கட்சியை சேர்ந்த கொள்கை பரப்புச் செயலாளர் தங்கதமிழ்செல்வன் கூறியுள்ளார்.

    இதன் மூலம் மு.க.ஸ்டாலின், தினகரன் ரகசிய சந்திப்பு தற்போது வெளி வந்துள்ளது. பல்வேறு சாதனைகளை படைத்து வரும் அ.தி.மு.க.வை தினகரன், முக.ஸ்டாலின் போன்ற துரோகிகளும், எதிரிகளும் அசைக்க முடியாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மே. 23-ந் தேதிக்கு பின்னர் மோடியோட டாடி வந்தாலும் அ.தி.மு.க. அரசை காப்பாற்ற முடியாது என்று தினகரன் பேசியுள்ளார். #dinakaran #modi #tamilisai

    திருப்பரங்குன்றம்:

    திருப்பரங்குன்றம் தொகுதி சட்டசபை இடைத் தேர்தலில் அ.ம.மு.க. வேட்பாளராக மகேந்திரன் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து கட்சியின் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் திருப்பரங்குன்றம், ஹார்விபட்டி, மூலக்கரை பகுதிகளில் தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    தமிழகத்தில் தற்போது நடப்பது ஜெயலலிதா ஆட்சி அல்ல. அதை தமிழக மக்கள் நன்றாக தெரிந்துள்ளனர். அதனால் தான் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலிலும், 18 சட்டசபை தொகுதி இடைத் தேர்தலிலும் மக்கள் அ.ம.மு.க.வின் சின்னமான பரிசு பெட்டகத்துக்கு வாக்களித்துள்ளனர். அதேபோல திருப்பரங் குன்றம் தொகுதி இடைத் தேர்தலிலும் வாக்காளர்களாகிய நீங்கள் அ.ம.மு.க.வை வெற்றி பெறச் செய்ய வேண்டும்.

    உலகம் முழுவதும் மே 1-ந்தேதி உழைப்பாளர் தினமாக கொண்டாடப்படுகிறது. அதேபோல மே 23-ந்தேதியை துரோகிகளை வீட்டுக்கு அனுப்பும் தினமாக கொண்டாட வேண்டும். தோல்வி பயம் காரணமாகவே 3 எம்.எல்.ஏ.க்களுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.

    ஜெயலலிதா பெயரைச் சொல்லி ஆட்சி நடத்தும் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் மக்களைப்பற்றி சிந்திக்கவே இல்லை. ஒரு குடம் தண்ணீர் 10 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதுவே இந்த அவல ஆட்சிக்கு சாட்சி. மக்களின் விரோதியான சூரனை முருகப்பெருமான் சம்ஹாரம் செய்தார். அதேபோல பொது மக்களாகிய நீங்கள் வாக்களிப்பதன் மூலம் துரோக ஆட்சியை சம்ஹாரம் செய்ய வேண்டும்.

    எனக்கு கொள்கை, கோட்பாடு எதுவும் இல்லை என்று கூறுகிறார்கள். மக்களை காப்பாற்ற மக்களுக்காக நல்ல பல திட்டங்களை கொண்டு வந்து செயல்படுத்த துரோக ஆட்சியை வீடுக்கு அனுப்ப வேண்டும். அதுவே எனது கொள்கையும் கோட்பாடும் ஆகும்.

    எங்களுக்கு சிறை கம்பி சின்னத்தை வழங்க வேண்டும் என்று கூறிய தமிழிசைக்கு கிருஷ்ணர் எங்கு பிறந்தார்? எனத் தெரியுமா? எங்களுக்கு சிறை கம்பியை சின்னமாக கொடுத்தாலும் வெற்றி பெறுவோம். மே. 23-ந் தேதிக்கு பின்னர் மோடியோட டாடி வந்தாலும் அ.தி.மு.க. அரசை காப்பாற்ற முடியாது. ஜெயலலிதாவின் உண்மை தொண்டர்கள், விசுவாசிகள் அனைவரும் அ.ம.மு.க.வுக்குத்தான் வாக்களிப்பார்கள்.

    மேற்கண்டவாறு டி.டி.வி. தினகரன் பேசினார். #dinakaran #modi #tamilisai

    ×