search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் பணத்தை அள்ளி வீசுகிறார்கள்- தங்க. தமிழ்ச்செல்வன் புகார்
    X

    ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் பணத்தை அள்ளி வீசுகிறார்கள்- தங்க. தமிழ்ச்செல்வன் புகார்

    தேனி தொகுதியில் ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் தெரு, தெருவாக பணத்தை அள்ளி இரைக்கிறார்கள் என்று தங்க. தமிழ்ச்செல்வன் புகார் தெவித்துள்ளார். #thangatamilselvan #opanneerselvam #dinakaran

    குன்னம்:

    பெரம்பலூரில் அ.ம.மு.க., கொள்கை பரப்பு செயலாளர் தங்க.தமிழ்ச்செல்வன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தேனி பாராளுமன்ற தொகுதியில் எனக்கு மக்கள் மிகப்பெரிய வெற்றியை தருவார்கள் என நம்புகிறேன். தேர்தல் ஆணையம் நியாயமாக நடந்தால் நல்லது. ஆளும் கட்சிக்கு உடனே ரிசல்ட் கொடுக்கிறார்கள். எங்கள் கட்சியை நசுக்க பார்க்கிறார்கள்.

    ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் பணத்தை அள்ளி இரைக்கிறார்கள். தெரு, தெருவாக ரோட்டில் பணத்தை போட் டுக்கொண்டே போகிறார்கள். அந்த அளவுக்கு அத்துமீறல் நடக்கிறது. ஆனால் போலீசார் வேடிக்கை பார்க்கிறார்கள்.


    கலெக்டர் இதனை கண்டித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். செந்தில்பாலாஜி, கலைராஜன் ஆகியோர் போனது எங்கள் இயக்கத்திற்கு பெரிய இழப்பு இல்லை. தேனி பகுதியில் 25 ஆண்டுகளாக பணி செய்துள்ளேன். எனக்கு மக்கள் ஆதரவு தருவார்கள்.

    பணம் மட்டுமே முதலீடாக வைத்து தேர்தலை பார்க்க முடியாது. பணத்தை கொடுத்தால் யாரும் ஓட்டு போடமாட்டார்கள். மக்கள் மனநிலை நேரத்திற்கு ஏற்ப மாறும். பணம், அதிகாரத்தை வைத்து வெற்றி பெற முடியாது. பா.ஜ.க., அ.தி.மு.க. அரசுக்கு மக்களிடம் நல்ல பெயர் இல்லை.

    ஜாக்டோ-ஜியோ அமைப்பின் 9 அம்ச கோரிக்கைகளை பரிசீலனை செய்வோம் என தேர்தல் அறிக்கை வெளியிட்டது அ.ம.மு.க. மட்டுமே தான். எத்தனை ஆண்டுகளாக ஜாக்டோஜியோ அமைப்பினர் போராடுகிறார்கள். தி.மு.க., அ.தி.மு.க. இரண்டு கட்சியும் ஏன்? அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்றுவது குறித்து தேர்தல் அறிக்கையில் வெளியிடவில்லை.

    எங்களுக்கு பாராளுமன்ற தேர்தலில் நல்ல மெஜாரிட்டி உள்ளது. தற்போது மிகப் பெரிய அரசியல் மாற்றம் வேண்டும் என மக்கள் நினைக்கிறார்கள். அந்த மாற்றத்தை மக்கள் ஓட்டு போட்டு தருவார்கள்.

    புல்வாமா தாக்குதல் குறித்து தேர்தல் ஆணையம் பேசக்கூடாது என தடை போட்டுள்ள நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், அமைச்சர் ராஜேந்திர பாலாஜியும் பேசி வருகின்றனர். இது தேர்தல் விதிமீறல்.

    இதனால் முதல்வர், அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்திற்கு துணிவிருக்கிறதா? 100 சதவீதம் குக்கர் சின்னம் எங்களுக்குத்தான் கிடைக்கும். குக்கர் சின்னம் கிடைக்கா விட்டால் தனித்தனி சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெறுவோம். இந்த தேர்தலில் டி.டி.வி. அலை வீசுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார். #thangatamilselvan #opanneerselvam #dinakaran

    Next Story
    ×