search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ttvdinakaran"

    • மணமக்களை டி.டி.வி. தினகரன் வாழ்த்தி பேசினார்
    • பெருமாள் கோவில் அருகே டி.டி.வி.தினகரனுக்கு உற்சாக வரவேற்பு

    திருப்பூர், 

    அ.ம.மு.க.பொங்கலூர் கிழக்கு ஒன்றிய செயலாளரும், வடக்கு அவினாசிபாளையம் ஊராட்சி தலைவருமான மலையாண்டவர் ஏ.ஆர்.நடராஜ்-நிர்மலா தம்பதியின் மகன் லோகேஷ் மற்றும் திருப்பூர் அனுப்பர்பாளையத்தை சேர்ந்த தங்கராஜ் என்கிற மாரிமுத்து-ஈஸ்வரி தம்பதியின் மகள் வித்யா ஆகியோரின் திருமண வரவேற்பு விழா நேற்று இரவு திருப்பூர் ராமசாமி கவுண்டர்முத்தம்மாள் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

    விழாவுக்கு வந்திருந்தவர்களை திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளர் விசாலாட்சி வரவேற்றார். வடக்கு மாவட்ட செயலாளர் ஆனந்தகுமார் முன்னிலை வகித்தார். தலைமை நிலைய செயலாளர் உடுமலை சி.சண்முகவேலு, அமைப்பு செயலாளர் சேலஞ்சர் துரை ஆகியோர் மணமக்களை வாழ்த்தி பேசினார்கள். அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் மணமக்களுக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். பின்னர் மணமக்களை வாழ்த்தி அவர் பேசினார். விழாவில் மணமக்களின் பெற்றோர், உறவினர்கள், மருத்துவர் அணி மாநில துணை செயலாளர் டாக்டர் கே.கிங், மாநகர் மாவட்ட துணை செயலாளர் சூர்யா செந்தில் மற்றும் அ.ம.மு.க. திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர். முடிவில் அ.ம.மு.க. பொங்கலூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் மலையாண்டவர் நடராஜ் நன்றி கூறினார்.

    முன்னதாக திருப்பூர் மாநகர் மாவட்டத்தின் சார்பில் பெருமாள் கோவில் முன்பும், வடக்கு மாவட்டத்தின் சார்பில் சந்தைப்பேட்டையிலும் அ.ம.மு.க. பொதுச்செயலளார் டி.டி.வி.தினகரனுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    திருப்பூர் பெருமாள் கோவில் அருகே திருப்பூர் மாநகர் மாவட்ட அ.ம.மு.க. செயலாளர் விசாலாட்சி தலைமையில் மேளதாளங்கள் முழங்க பூரண கும்ப மரியாதையுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் மாநகர் மாவட்ட துணை செயலாளர்கள் புல்லட் ரவி, சூர்யா செந்தில் , மாநகர் மாவட்ட பொருளாளர் சேகர் என்ற ஜெகநாதன், மாநகர் மாவட்ட அம்மாபேரவை செயலாளர் ரத்தினசாமி, மாநகர் மாவட்ட அம்மா இளைஞரணி செயலாளர் பெஸ்ட் தம்பு என்ற சண்முகசுந்தரம், மாநகர அமைப்பு சாரா ஓட்டுனர் அணி செயலாளர் முத்துக்குட்டி, பொதுக்குழு உறுப்பினர் குட்வின் பழனிசாமி, அம்மா பனியன் தொழிற்சங்கம் சுரேஷ்ராஜா, மாவட்ட தொழிற்சங்க துணை தலைவர் பச்சமுத்து உள்பட அ.ம.மு.க. பல்வேறு அணி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

    ஜெயலலிதாவை குற்றவாளி எனவும், அவர் உயிருடன் இருந்திருந்தால் சிறைக்கு சென்றிருப்பார் என்று சொன்னவர்களுடன் அதிமுக கூட்டணி வைத்து உள்ளதற்கு தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். #dinakaran #admk #pmk

    ஓசூர்:

    அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் நேற்று கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    அம்மா மக்கள் முன்னேற்ற கழக கட்சியை நான் பதிவு செய்யவில்லை. இதனால் உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என்றனர். எதற்காக நான் கட்சியை பதிவு செய்யவில்லை. நான் தனியாக கட்சி தொடங்கினால் நான் இரட்டை இலை சின்னத்திற்காக நடத்திய உரிமை போராட்டத்தை நடத்த முடியாது என்ற காரணத்தால் தான் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை தொடங்கினேன்.

    அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தைச் சேர்ந்த 40 நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர்களும், 18 சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களும் தான் தமிழகத்திலும், மத்தியிலும் ஆட்சி மாற்றத்தை கொண்டு வர போகிறார்கள்.

    அம்மா மக்கள் முன்னேற்ற கழக தேர்தல் அறிக்கை மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதில் தேசிய கூட்டுறவு, வங்கிகளில் வாங்கிய அனைத்து விவசாய கடன்கள், மாணவர்களின் கல்வி கடன்கள் ரத்து செய்யப்படும். தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்களின் திருமண உதவியாக ரூ.2 லட்சம் வரை வட்டியில்லா கடன் வழங்கப்படும். ஆற்றுப்பாசனம், கிணற்று பாசனம் இல்லாத கிராமங்களில் விவசாயிகளுடன் ஆலோசனை நடத்தி ஆழ்குழய் கிணறுகள் அமைக்கப்படும்.

    ஜாக்டோ- ஜியோ அமைப்பு உள்ளிட்ட அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றி தரப்படும். அரசு அலுவலகங்களில் அனைத்து சலுகை விலையில் உணவகம் அமைக்கப்படும். நெசவாளர்கள், மீனவர்கள் உள்பட அனைத்து தொழிலாளர்கள் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மாதம் ரூ.4 ஆயிரம் உதவித்தொகையும், முதியோர் உதவி தொகை ரூ.2 ஆயிரமாக வழங்கப்படும். இளைஞர்களுக்கு புதிய வேலை வாய்ப்பு திட்டங்கள் உருவாக்கி தரப்படும்.

    ஜெயலலிதாவை குற்றவாளி எனவும், அவர் உயிருடன் இருந்திருந்தால் சிறைக்கு சென்றிருப்பார். அவருக்கு மணி மண்டபம் கட்டக்கூடாது என்று பழித்து பேசியவர்களுடன், தற்போது அ.தி.மு.க.வினர் கூட்டணி வைத்துள்ளனர். அப்போது 37 தொகுதிகளில் வெற்றியை அளித்து, மோடி வேண்டாம் என மக்கள் தீர்ப்பளித்தனர்.

    ஆனால், தற்போது மோடி எங்களுக்கு தந்தை (டாடி) என அ.தி.மு.க.வினர் பேசி வருகின்றனர். மோடியல்ல யார் வந்தாலும் இனி இவர்களை காப்பாற்ற முடியாது. இடைத் தேர்தலில் 8 தொகுதிகளில் வெற்றி பெறவில்லை எனில் தமிழகத்தில் ஆட்சி முடிவுக்கு வந்துவிடும்.

    அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்துக்கு சின்னம் வழங்குவதில் இடையூறுகள் அளிக்கப்பட்டன. ஆனால் நாம் யாரையும் நாடாமல் எவ்வித சமரசமும் செய்து கொள்ளாமல், உச்சநீதிமன்றம் சென்று, பொதுசின்னமாக பரிசு பெட்டகத்தை பெற்றுள்ளோம். இந்த பரிசு பெட்டி அவர்களின் பணப்பெட்டியை வீட்டுக்கு அனுப்பப் போகிறது.

    அ.ம.மு.க.வை சேர்ந்த 40 நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர்களும், சட்டப்பேரவை இடைத் தேர்தலில் போட்டியிடும் 18 வேட்பாளர்களும் தான் தமிழகத்திலும், மத்தியிலும் ஆட்சி மாற்றத்தை கொண்டு வரப்போகிறார்கள்.

    இவ்வாறு அவர் பேசினார். #dinakaran #admk #pmk

    அதிமுக- பாமக கூட்டணிக்கு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள் என்று நெய்வேலியில் டிடிவி தினகரன் எம்எல்ஏ பேசினார். #dinakaran #pmk #admk

    நெய்வேலி:

    அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொது செயலாளர் டி.டி.வி. தினகரன் எம்.எல்.ஏ. கடலூர் மாவட்டத்தில் நேற்று மாலை 2-வது நாளாக மக்கள் சந்திப்பு பயணம் மேற்கொண்டார்.

    குறிஞ்சிப்பாடி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட சத்திரத்தில் இருந்து அவர் தனது பயணத்தை தொடங்கினார். முத்தாண்டிகுப்பம் கடைவீதி, நெய்வேலி புதுநகர் மெயின் பஜார், வடலூர் ஆகிய இடங்களுக்கு சென்றார். அப்போது அங்கு திரண்டிருந்த பொதுமக்கள் மத்தியில் திறந்த வேனில் நின்றபடி பேசினார்.

    அ.தி.மு.க. கூட்டணியில் பாரதீய ஜனதா, பாட்டாளி மக்கள் கட்சி இணைந்துள்ளது. பா.ம.க. இணைந்தது கேள்விக்குறியான செய்தியாக உள்ளது. பா.ம.க. இனிமேல் திராவிட கட்சிகளுடன் கூட்டணி வைத்துக் கொள்ள மாட்டோம் என கூறியிருந்தனர். ஆனால் வரக்கூடிய பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்துள்ளது.


    அ.தி.மு.க. தலைமையிலான இந்த கூட்டணி ஒரு சந்தர்ப்பவாத கூட்டணியாகும். இந்த கூட்டணிக்கு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள். அ.தி.மு.க. அரசு மக்கள் நம்பிக்கையை இழந்து விட்டது. மக்கள் நம்பிக்கையை இழந்த இந்த அரசை இனிமேலும் தொடரவிடக்கூடாது. எனவே மக்கள் பொறுத்திருந்தது போதும்.

    எனவே உங்களுடைய பொன்னான வாக்குகளை அளித்து எங்களை வெற்றி பெற செய்யவேண்டும். தமிழர்கள் தான் இனிமேல் பாராளுமன்றத்தில் தலைநிமிர்ந்து நிற்கவேண்டும். பாரத பிரதமரை தேர்ந்தெடுக்கும் முழு உரிமை தமிழர்களுக்கு மட்டுமே தரக்கூடிய எங்கள் அணிக்கு நீங்கள் வாக்களிக்க வேண்டும்.

    நெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்தால் பாதிக்கப்பட்ட பல்வேறு மக்கள் என்னிடம் பலகுறைகளை கூறினார்கள். அதில் மிக முக்கியமாக நடந்து முடிந்த ஊதிய மாற்று ஒப்பந்தம் மூலம் நெய்வேலி என்.எல்.சி. தொழிலாளர்களுக்கு தரவேண்டிய புதிய ஊதியத்தை காலம் தாழ்த்தி வருவது தெரியவந்தது.

    இதில் மத்திய நிலக்கரி துறை மந்திரி உடனடியாக கவன ஈர்ப்பு கொண்டு வந்து தொழிலாளர்களுக்கு சேர வேண்டிய புதிய ஊதிய மாற்று ஒப்பந்த தொகையை உடனடியாக வழங்க வேண்டும்.

    மேலும் வீடு, நிலம் இழந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும். தொழிலாளர்களுக்கு உரிய சம்பளம் வழங்க வேண்டும்

    ஒப்பந்த தொழிலாளர்களை பணிநிரந்தரம் செய்யவேண்டும். தமிழ்நாட்டை சேர்ந்த படித்த இளைஞர்களுக்கு வேலை வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார். #dinakaran #pmk #admk

    தேர்தல் நெருங்கிவரும் நேரம் என்பதால் சிலர் பண மூட்டையுடன் உங்களை தேடிவருவார்கள், எனவே சிந்தித்து வாக்களியுங்கள் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார். #TTVDinakaran #AMMK
    ஈரோடு:

    அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணைப்பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் எம்.எல்.ஏ ஈரோடு மாவட்டத்தில் மக்கள் சந்திப்பு புரட்சி பயணத்தை தொடங்கி நடத்தி வருகிறார். அவர் ஈரோட்டில் பல்வேறு பகுதியில் மக்களை சந்தித்து பேசி வருகிறார்.

    அதன்படி டி.டி.வி. தினகரன் ஈரோடு மரப்பாலம் நால்ரோடு பகுதிக்கு வந்துபொது மக்களை சந்தித்துபேசினார். அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அவர் பொதுமக்கள் மத்தியில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது,-

    மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டம் மூலம் மத்திய அரசு தமிழகத்தை தொடர்ந்து வஞ்சித்து வருகிறது. இந்திய நாட்டின் பிரதமரை தமிழக மக்கள் தான் முடிவு செய்வார்கள். எனவே பாராளுமன்ற தேர்தலில் மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும். தேர்தல் நெருங்கிவரும் நேரம் என்பதால் சிலர் பண மூட்டையுடன் உங்களை தேடிவருவார்கள். உஷாராக இருங்கள்.



    தமிழகத்தில் முன்னேற்றம் தேவை. கல்வி, வேலை வாய்ப்பை பெற நீங்கள் (மக்கள்) அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்துக்கு வாக்களித்து வெற்றி பெற வைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார். #TTVDinakaran #AMMK
    பரமத்தியில் எம்.ஜி.ஆரின் 102-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு அமமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய தினகரன், எந்த தேர்தல் வந்தாலும் நாங்கள் வெற்றி பெறும் என்று கூறினார். #ttvdinakaran

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தியில் எம்.ஜி.ஆரின் 102-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் பொதுக்கூட்டம் நேற்று (புதன்கிழமை) இரவு நடைபெற்றது. இக்கூட்டத்தில் அக் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் பேசியதாவது:-

    இந்த ஆட்சியாளர்கள் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் கூட்டம் என்றாலே பயந்து கொண்டு கூட்டம் நடத்த அனுமதி அளிப்பதில்லை. ஒவ்வொரு முறையும் நீதிமன்றத்துக்கு சென்று தான் கூட்டம் நடத்தும் நிலை உள்ளது.

    இந்த கூட்டத்திற்கு கூட முதலில் கேட்டது 19-ந் தேதி. ஆனால் ஜல்லிக்கட்டை காரணம் காட்டி அனுமதி மறுக்கப்பட்டது. அதன் பிறகு நீதிமன்றம் மூலம் இக்கூட்டம் நடத்த அனுமதி பெற்று உள்ளோம். இது போன்று அ.ம.மு.க நடத்தம் பெரும்பாலான கூட்டங்களுக்கும் இதே நிலைதான்.

    அம்மாவின் ஆட்சி என்று சொல்லிக்கொள்ளும் இப்போதைய ஆட்சியாளர்கள் அ.ம.மு.க என்று சொன்னாலே அச்சப்படுகின்றனர். இவர்கள்தான் இப்படி என்றால் பிரதான எதிர்கட்சியான தி.மு.க.வும் ஆர்.கே.நகர் தேர்தல் முடிவுக்கு பின் எங்களை பார்த்து அஞ்சுகிறது.

    திருவாரூர் தொகுதியில் மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி 2016ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் சுமார் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 2016 தேர்தலில் மாநிலத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் சுமார் 63 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் கருணாநிதி இரண்டாவது முறையாக வெற்றி பெற்றார்.

    ஆனால் அங்கு இடைத்தேர்தல் அறிவித்தபோது ஆளும் கட்சி மட்டுமல்லாது, தி.மு.க.வினரும் நீதிமன்ற படியேறி இடைத் தேர்தலை தடுத்து நிறுத்தினர். கருணாநிதி செய்த துரோகத்தினால் எம்.ஜி.ஆரால் உருவானது தான் அ.தி.மு.க. 30 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது துரோகிகள் இந்த இயக்கத்தை சிதைக்க பார்க்கின்றனர்.

    எடப்பாடி பழனிச்சாமி முதல்-அமைச்சர் ஆகக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்த செம்மலை தற்போது கொடநாடு விவகாரத்தில் அவருக்கு பக்கவாத்தியம் வாசிக்கிறார். இவருக்கு ஏற்பட்ட மனமாற்றத்திற்கான காரணம் மக்களுக்கு தெரியும். பதவி, பணம், அதிகாரம் என்பதற்காக என்னவேண்டுமானாலும் பேசலாம் என்ற நிலையில் சில அமைச்சர்கள் உள்ளனர்.

    அரசியலில் எத்தனையோ துரோகங்கள் பார்த்திருக்கிறோம் ஆனால் இப்படிப்பட்ட துரோகத்தை பார்த்ததில்லை. இப்போதுள்ள அமைச்சர்கள் சிலர் பேசுவது ஆயுள்காலம் முழுவதும் அமைச்சர்களாக இருப்பது போல் எண்ணிக் கொள்கின்றனர். ஜெயலலிதா இல்லை என்ற தைரியத்தில் அமைச்சர்கள் சிலர் என்ன வேண்டுமானாலும் பேசலாம் என பேசுகின்றனர். இதற்கெல்லாம் வருகிற ஏப்ரல், மே மாதத்தில் தேர்தலில் பதில் சொல்லியாக வேண்டும். கொடநாடு விவகாரத்தில் முதல்-அமைச்சர் ஏன் பதற்றப்படுகிறார்.

    சிலைக்கடத்தல் வழக்குகளை சி.பி.ஐ விசாரணைக்கு பரிந்துரைக்கும் அரசு கொடநாடு விவகாரத்தை ஏன் பரிந்துரைக்க கூடாது.

    விரைவில் 21 சட்டமன்ற இடைத்தேர்தல் மற்றும் பாராளுமன்ற பொதுத் தேர்தல்கள் வர உள்ளது. இந்த தேர்தலில் இப்போதுள்ள ஆட்சியாளர்களுக்கு டெபாசிட் கூட கிடைக்காது. ஓட்டுக்கு எத்தனை ஆயிரம் பணம் கொடுத்தாலும் மக்கள் இவர்களிடம் ஏமாற மாட்டார்கள். எம்.ஜி.ஆரால் தொடங்கப்பட்ட இந்த கட்சி இதுவரைக்கும் தோல்வியை சந்தித்ததே இல்லை. ஆனால் இப்போது இந்த கட்சியின் நிலை என்ன என்பது மக்கள் அறிவார்கள்.

    ஆர்.கே நகரில் 41 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றேன். திருவாரூரில் தேர்தல் நடந்திருந்தால் அ.ம.மு.க 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கும். இனி எப்போது எந்த தேர்தல் வந்தாலும் அ.ம.மு.க தான் வெற்றி பெறும். அ.தி.மு.க டெபாசிட் இழக்கும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    தொடர்ந்து அவருக்கு கட்சி பொறுப்பாளர்கள் வெள்ளிவாள் பரிசாக வழங்கினார்கள். மாற்றுக்கட்சியினர் பலர் அவரது முன்னிலையில் தங்களை அ.ம.மு.கவில் இணைத்துக்கொண்டனர்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், கூறியதாவது:-

    பாராளுமன்ற தேர்தல் தொடர்பான தொகுதி பங்கீட்டு குழுவை தேவை வரும்போது அறிவிப்போம்.

    பாராளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக சில கட்சிகளுடன் பேசி வருகிறேன். முடிவு வந்தவுடன் நிச்சயமாக கூறுகிறேன். பாராளுமன்ற தேர்தலுடன் சட்ட பேரவைக்கும் தேர்தல் வந்தால் நல்லது.

    கூட்டத்திற்கு நாமக்கல் மேற்கு மாவட்ட செயலர் சாமிநாதன் தலைமை வகித்தார். கிழக்கு மாவட்ட செயலாளர் சம்பத்குமார் வரவேற்றார். மேற்கு மாவட்ட அவைத் தலைவர் நல்லியப்பன், கிழக்கு மாவட்ட அவைத் தலைவர் நாச்சிமுத்து, கிழக்கு மாவட்ட இணைச் செயலாளர் திலகம், கிழக்கு மாவட்ட துணைச் செயலாளர் திலகவதி, சந்திரன், பொருளாளர் அன்புச்செழியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் அவைத் தலைவர் அன்பழகன், பொருளாளர் ரெங்கசாமி, தலைமை நிலையச் செயலாளர் பழனியப்பன், கொள்கை பரப்புச்செயலாளர் தமிழ்செல்வன், தேர்தல் பிரிவு செயலாளர் செந்தமிழன், அமைப்புச் செயலாளர் ரவிக்குமார், நாமக்கல் சக்தி கல்வி கலாச்சார அறக்கட்டளை நிறுவனர் என்.கே.எஸ்.சக்திவேல், புதிய திராவிட கழக நிறுவனத் தலைவர் ராஜ்கவுண்டர், அம்மா பேரவை இணைச் செயலாளர் பழனிவேல், வர்த்தக அணி இணைச் செயலாளர் நல்லியப்பன், எம்.ஜி.ஆர் இளைஞர் அணி துணைச் செயலாளர் ராஜ்குமார், மாவட்ட துணைச்செயலாளர் சந்திரன், சேந்தமங்கலம் ஒன்றிய செயலாளர் வெங்கடாசலம், ராசிபுரம் அக்ரி நடராஜ் மற்றும் மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள், தொண்டர்கள், நாமக்கல் சக்தி கல்வி கலாச்சார அறக்கட்டளை உறுப்பினர்கள் சுமார் 5ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். #ttvdinakaran #admk #parliamentelection

    அருமனையில் நாளை கிறிஸ்துமஸ் தாத்தா அணிவகுப்புடன் ஊர்வலம் நடைபெறுகிறது. இதில் டிடிவி தினகரன் பங்கேற்கிறார். #ttvdinakaran

    மார்த்தாண்டம்:

    அருமனை கிறிஸ்தவ இயக்கத்தின் 21-வது கிறிஸ்துமஸ் விழா கடந்த 19-ந்தேதி தொடங்கி நாளை (23-ந்தேதி) ஊர்வலம், நலத்திட்ட உதவிகள் வழங்குதல், மத நல்லிணக்க பொதுக்கூட்டம் ஆகியவற்றுடன் நிறைவடைகிறது.

    நிகழ்ச்சியின் முதல் நாள் கலைநிகழ்ச்சிகளும், மாநில அளவிலான இறகு பந்து போட்டியும் நடைபெற்றது. நேற்று முன்தினம் மாலை மாநில அளவிலான ஓணப்பந்துப் போட்டி நடைபெற்றது. நேற்று மாநில அளவிலான கபடி போட்டி நடந்தது. இன்று (22-ந்தேதி) மத நல்லிணக்க மாநாடு ஆகியன நடக்கிறது.

    நாளை (23-ந்தேதி) நெடிய சாலை சந்திப்பில் இருந்து 60-க்கும் மேற்பட்ட கலை நிகழ்ச்சிகளுடன் ஆயிரத்துக்கும் அதிகமான கலைஞர்கள் கிறிஸ்துமஸ் தாத்தா அணிவகுப்புடன் ஊர்வலம் நடைபெறுகிறது.

    அதனை தொடர்ந்து நடைபெறும் மதநல்லிணக்க பொதுக்கூட்டத்திற்கு கிறிஸ்தவ இயக்க செயலாளர் ஸடாலின் தலைமை தாங்குகிறார். தலைவர் டென்னிஸ், பொருளாளர் கென்னத், துணை தலைவர் ஜோஸ் செல்வன், இணை செயலாளர் அருள் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர், அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன், புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி. சண்முகம், திரைப்பட இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர் ஆகியோர் சிறப்புரை ஆற்றுகின்றனர்.

    மேலும் பி‌ஷப்புகள், சட்டமன்ற, நாடாளுமன்ற, உறுப்பினர்கள், முன்னாள் மக்கள் பிரதிநிதிகள், பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள், போதகர்கள், அருட்பணியாளர்கள், கிறிஸ்தவ அமைப்புகளின் நிர்வாகிகள் பங்கேற்று சிறப்பிக்கின்றனர்.

    தொடர்ந்து 1000 ஏழைகளுக்கு நல உதவிகள், மாணவ- மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. முடிவில் கலைநிகழ்ச்சிகள், திரைப்பட பாடகர்கள் பங்கேற்கும் இன்னிசை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. #ttvdinakaran

    தி.மு.க.தான் முதல் எதிரி, அ.தி.மு.க.வுடன் அ.ம.மு.க. இணைய தயார் என்று நெல்லையில் தங்கதமிழ்செல்வன் நிருபர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். #thangatamilselvan #ammk #admk #dmk

    நெல்லை:

    அ.ம.மு.க. கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்செல்வன் நெல்லையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் அ.ம.மு.க. வளர்ச்சி பெற்று வருகிறது. வருகிற தேர்தல்களில் அ.தி.மு.க.- அ.ம.மு.க. இணையாமல் ஜெயிக்க முடியாது என எண்ணி இரு கட்சிகளையும் இணைய வைக்க பா.ஜனதா முயற்சி செய்து வருவதாக அறிகிறோம்.

    அ.தி.மு.க.வையும், இரட்டை இலையையும் அழிக்க நாங்கள் வரவில்லை. எம்.ஜி.ஆர். உருவாக்கி, ஜெயலலிதாவால் பாதுகாக்கப்பட்ட அ.தி.மு.க.வும் இருக்க வேண்டும், இரட்டை இலையும் இருக்க வேண்டும். தி.மு.க. தான் எங்களுக்கு முதல் எதிரி. முதல்வரையும், சில அமைச்சர்களையும், நிர்வாகிகளையும் மாற்றி ஜெயலலிதா ஆட்சியை அமைத்தால் அ.தி.மு.க.வுடன் அ.ம.மு.க. இணைய தயார்.

    அ.தி.மு.க., தி.மு.க. பா.ஜனதா மீது மக்கள் அதிருப்தியில் உள்ளனர். புதிய தலைமயை மக்கள் எதிர்பார்க்கின்றனர். தமிழகத்தில் அரசியல் வெற்றிடம் ஏற்பட்டது உண்மைதான். அதை சசிகலா, டி.டி.வி. தினகரனால் தான் கொடுக்க முடியும். முன்கூட்டியே இதை உணர்ந்து செயல்பட்டால் நல்லது.


    மதசார்பற்ற அணிகளுடன் தான் கூட்டணி என்று டி.டி.வி. தினகரன் தெளிவுப்படுத்தி விட்டார். எனவே பா.ஜனதாவுடன் கூட்டணி சேர மாட்டோம். அ.தி.மு.க.வை பொறுத்த வரை தவறு செய்தது ஓ.பன்னீர்செல்வம் தான். கட்சியை பிளவுப்படுத்தி இரட்டை இலையை முடக்க காரணமாக இருந்த ஓ.பி.எஸ்.ஐ. மீண்டும் கட்சியில் சேர்த்ததை மக்கள் விரும்பவில்லை. அ.தி.மு.க. வில் 90 சதவீத தொண்டர்கள் எங்களுடன் உள்ளனர். இடைத்தேர்தலில் அ.ம.மு.க. தனித்து போட்டியிடும். யாரும் கூட்டணிக்கு வந்தால் சேர்த்துக்கொள்வோம்.

    தமிழக அரசு உள்ளாட்சி, இடைத்தேர்தலை நடத்தாமல் உள்ளது. எனினும் பாராளுமன்ற தேர்தலுடன் இடைத் தேர்தலை நடத்தியே ஆக வேண்டும். கஜா புயல் நிவாரணத்திற்கு முதல்வர் 15 ஆயிரம் கோடி நிவாரணம் கேட்டார். அதுவே தவறு. 40 ஆயிரம் கோடி கேட்டிருக்க வேண்டும்.

    ஆனால் வெறும் 350 கோடியை மட்டும் வழங்கி மத்திய அரசு தமிழகத்தை அவமானப்படுத்தி விட்டது. தமிழக அமைச்சர்களோ, முதல்வரோ மக்கள் பிரச்சினைக்காக டெல்லி செல்வ தில்லை. தங்களை பாதுகாத்து கொள்ளவே டெல்லி செல்கின்றனர். தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் 3 பேர் விடுவிப்பு துணிச்சலான முடிவு.

    இவ்வாறு அவர் கூறினார். #thangatamilselvan #ammk #admk #dmk

    சென்னையில் இன்று காலை 20 தொகுதி பொறுப்பாளர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பி.எஸ். ஆகியோர் ஆலோசனை நடத்தினர். #edappadipalanisamy #opanneerselvam

    சென்னை:

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை மாற்ற வேண்டும் என்று போர்க்கொடி உயர்த்தி வெற்றிவேல், தங்க தமிழ்ச்செல்வன், செந்தில் பாலாஜி உள்பட 18 எம்.எல்.ஏ.க்கள் பதவி நீக்கம் செல்லும் என்று ஐகோர்ட்டு தீர்ப்பு வழங்கியதை தொடர்ந்து அந்த தொகுதிகள் காலியாக உள்ளன.

    இவற்றுடன் திருப்பரங்குன்றம், திருவாரூர் தொகுதியையும் சேர்த்து 20 தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தேர்தல் நடத்த ஏற்பாடு நடந்து வருகிறது.

    தேர்தலை கவனிப்பதற்காக 20 தொகுதிகளுக்கும் அ.தி.மு.க.வில் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர்.

    இவர்களுக்கு தேர்தல் பணிகள் தொடர்பான ஆலோசனை வழங்குவதற்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் இன்று காலை அ.தி.மு.க. தலைமை கழகத்துக்கு வந்திருந்தனர்.

    இவர்களுடன் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி. முனுசாமி, வைத்திலிங்கம் மற்றும் தலைமை கழக நிர்வாகிகள் வந்தனர்.

    20 தொகுதிக்கான பொறுப்பாளர்கள் மாவட்டக் கழக செயலாளர்கள் என 120 பேர் இதில் கலந்து கொண்டனர். அவர்கள் மத்தியில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இருவரும் பேசினார்கள்.

    தேர்தல் களத்தில் டி.டி.வி. தினகரன் பெரும் சவாலாக இருப்பார் என்பதால் அவரை எதிர்கொள்வது பற்றியும், அவரது பிரச்சாரத்துக்கு எவ்வாறு பதிலடி கொடுப்பது பற்றியும் விரிவாக ஆலோசனை வழங்கப்பட்டதாக தெரிகிறது.

    அ.தி.மு.க. 20 தொகுதியிலும் ஜெயித்தால் 5 ஆண்டு காலம் எந்த பிரச்சினையும் இன்றி ஆட்சியை கொண்டு செல்லலாம். எனவே அதற்காக கடுமையாக உழைக்க வேண்டும்.

    இதற்காக 20 தொகுதியிலும் நன்கு பரீட்சயமான உள்ளூர் நபர்களை வேட்பாளர்களாக அறிவிக்க இருக்கிறோம் என்று பொறுப்பாளர்களுக்கு ஆலோசனை கூறினார்கள். #edappadipalanisamy #opanneerselvam

    திருப்பூர் மாவட்டத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொது செயலாளர் டி.டி.வி. தினகரன் 3 நாட்கள் சுற்றுப் பணம் செய்கிறார். #ttvdinakaran

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொது செயலாளர் டி.டி.வி. தினகரன் 3 நாட்கள் சுற்றுப் பணம் செய்கிறார். அதன்படி நாளை (வியாழக்கிழமை) மாலை உடுமலை பகுதியில் சுற்றுப் பயணம் செய்கிறார்.

    21-ந் தேதி (வெள்ளிக்கிழமை) மாலை மடத்துக்குளம், தாராபுரம் பகுதியிலும் 22-ந் தேதி (சனிக்கிழமை) மாலை மூலனூர், வெள்ள கோவில், காங்கயம் பகுதிகளிலும் சுற்றுப் பயணம் செய்து பேசுகிறார். #ttvdinakaran

    அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் உறுப்பினர்கள் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. எனவே அ.தி.மு.க.வில் சேர வேண்டிய அவசியம் இல்லை என்று டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. கூறினார். #ttvdinakaran #ADMK
    திருச்செந்தூர் :


    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. சாமி தரிசனம் செய்தார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-

    நெல்லை மாவட்டம் நெற்கட்டும்செவலில் நாளை (அதாவது இன்று) நடைபெறும் மாவீரன் பூலித்தேவன் பிறந்த நாள் விழாவில் கலந்து கொள்வதற்காக வந்துள்ளேன். மத்திய அரசின் பணமதிப்பு இழப்பு நடவடிக்கை தோல்வியில் முடிந்துள்ளது. இதே கருத்தை காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் கூறி உள்ளது.

    தமிழகத்தில் தாமிர உற்பத்தி ஆலை வேண்டாம் என்று மாநில அரசு கொள்கை முடிவு எடுத்து, சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். அப்போதுதான் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட முடியும். ஸ்டெர்லைட் ஆலையை கொல்லைப்புறமாக திறக்க முயற்சி நடக்கிறது.

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் அ.ம.மு.க. துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. சாமி தரிசனம் செய்ய வந்தபோது எடுத்த படம்.

    மோசமான ஆட்சியில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. மக்கள் விரும்பாத, லஞ்சம், ஊழல் நிறைந்த ஆட்சி நடைபெறுகிறது. 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் விரைவில் சுப்ரீம் கோர்ட்டு நல்ல தீர்ப்பு வழங்கும். பின்னர் சட்டமன்றத்தில் அறுதி பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு கவிழும்.

    அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் உறுப்பினர்களின் எண்ணிக்கை ஒரு கோடியாக அதிகரித்து உள்ளது. வருகிற 15-ந் தேதிக்குள் 2 கோடி உறுப்பினர்களை சேர்த்து விடுவோம் என்ற நம்பிக்கை உள்ளது. அ.தி.மு.க.வில் இருந்து ஏராளமான தொண்டர்கள், நிர்வாகிகள் விலகி, அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் சேர்ந்து வருகிறார்கள். எனவே அ.தி.மு.க.வில் நாங்கள் சேர வேண்டிய அவசியம் இல்லை. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட சிலரை தவிர மற்றவர்கள் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் சேரலாம்.

    இவ்வாறு டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. கூறினார். #ttvdinakaran #ADMK
    கடைமடை பகுதிக்கு தண்ணீர் செல்லாததை கண்டித்து நீடாமங்கலத்தில் வருகிற 2-ந் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார். #ttvdinakaran
    மன்னார்குடி:

    காவிரியில் நீர் கரை புரண்டோடும் நிலையிலும் டெல்டா மாவட்டங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏரிகள்,குளங்கள் வறண்டு கிடக்கிறது. மேலும்  பலலட்சம் ஏக்கர் பாசனப்பகுதி இன்னும் பாலைவனமாக உள்ளது. ஆறு, குளங்கள், ஏரிகளில் தூர்வாரும் பணி நடைபெறாததால் கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் வராததை கண்டித்தும் திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் பெரியார் சிலை அருகில் வருகிற 2-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை)  மாலை 4 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணைப்பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் அறிவித்துள்ளார்.

    இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன், டெல்டா பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் காவிரி எஸ்.ரெங்கநாதன், தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு, தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளனர்.

    இந்த ஆர்ப்பாட்டம் குறித்த முன்னேற்பாடுப் பணிகள் குறித்து நீடாமங்கலத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக மாநில பொருளாளர் எம்,ரெங்கசாமி , திருவாரூர் மாவட்ட செயலாளர் எஸ்.காமராஜ், கட்சியின் அமைப்புச்செயலாளர் சிவா.ராஜ மாணிக்கம், முன்னாள் எம்.எல்.ஏ. கு.சீனிவாசன், நீடாமங்கலம் ஒன்றிய செயலாளர் எம்.எஸ்.சங்கர், நகர செயலாளர் எஸ்.சங்கர்  மற்றும் நிர்வாகிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேடை அமைக்கும் பணி , வாகனங்கள் நிறுத்து மிடங்களையும் தேர்வு செய்து பார்வையிட்டனர். #ttvdinakaran 
    அ.தி.மு.க. ஆட்சி விரைவில் முடிவுக்கு வரும் என்று திருக்குறுங்குடியில் டி.டி.வி. தினகரன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். #ttvdinakaran #tngovt

    களக்காடு:

    நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள திருக்குறுங்குடியில் டி.டி.வி. தினகரன் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஓ.பி.எஸ் யார்? அவர் 2001-ல் யாரால் சட்டமன்ற உறுப்பினராகி அமைச்சரானார்?. 2001 செப்டம்பரில் யாரால் முதல்வர் ஆனார் என்பது பெரியகுளம், தேனி மாவட்ட மக்கள் மட்டுமின்றி தமிழகத்தில் உள்ள அனைத்து மக்களுக்கும் நன்றாக தெரியும். அவர் தம்பி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்.

    ஓ.பன்னீர்செல்வத்தின் சம்பந்தி கூடுதல் அட்வகேட் ஜெனரலாக உள்ளார். இவர்கள் எல்லாம் ஜெயலலிதாவால் கட்சியில் நீக்கம் செய்யப்பட்டவர்கள். இவர்களது சதியால் எங்களையும் ஜெயலலிதா ஒதுங்கி இருக்க சொன்னார். அப்போது நாங்கள் ஜெயலலிதாவிற்கு எதிராக எந்த வார்த்தையும் சொல்லவில்லை.

    ஓ.பி.எஸ். அவரது குடும்பத்தை கட்சியில் புகுத்தவே, ஒரு குடும்பத்தின் பிடியில் இருக்க மாட்டோம் என்று கூறுகிறார். அவர் யாருடைய ஏஜெண்டாக உள்ளார் என்பதும் மக்களுக்கும் தெரியும். அவர் சொல்வதை மக்கள் புறக்கணிப்பார்கள். ஓ.பி.எஸ், இ.பி.எஸ் இருவருமே துரோகத்தின் மொத்த உருவம்.


    இந்த ஆட்சி முடிவுக்கு வர வேண்டும் என்பதே மக்கள் விருப்பம். ஆட்சி விரைவில் முடிவுக்கு வரும். அதன் பின் ஓ.பி.எஸ் தமிழகத்தில் எந்த தொகுதியில் போட்டியிட்டாலும் தோல்வி அடைவார். சசிகலா சிறையிலிருந்து விடுதலையாகி வெளியே வர வேண்டும் என்பது எங்கள் விருப்பம். அவர் உடல்நிலை நன்றாக உள்ளது.

    நான் கடந்த 18-ந் தேதி நேரில் சந்தித்தேன். நன்றாக இருந்தார். தேர்தல் வரும் போது கூட்டணி அமைப்போம். பாராளுமன்ற தேர்தலிலும், சட்டமன்ற தேர்தலிலும் அ.ம.மு.க. கூட்டணி வெற்றி பெறும். வரும் திருப்பரங்குன்றம், திருவாரூர் இடைதேர்தல்களிலும் குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெறுவோம்.

    18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் நீதி எங்கள் பக்கம் உள்ளது. எங்களுக்கு சாதகமாகவே தீர்ப்பு வரும்.

    இவ்வாறு அவர் கூறினார். #ttvdinakaran #tngovt

    ×