search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Consulting"

    • சுற்றுச்சூழலை பாதிக்காமல் களைச் செடிகளை நீக்கலாம்.
    • உள்ளே உருவாகும் வெப்பம் களை விதைகளை அழித்துவிடும்.

    கீழக்கரை

    பயிர்களுக்கு கிடைக்கும் நீர், ஊட்டச்சத்து, சூரிய ஒளி ஆகியவற்றை களைச் செடிகள் உட்கொண்டு பற்றாக்குறை நிலையை ஏற்படுத்துகிறது. ரசாயனங்களைக் கொண்டு களைச் செடிகளை அகற்றுவது தற்போது வழக்கமாகிவிட்டது. ஆனால் ரசாயனங்கள் சுற்றுச்சூழலை மாசு படுத்துகின்றன.களை கொல்லிகளை பயன்படுத்து வதன் மூலம் மண் மற்றும் நீரின் தன்மை பாதிக்கப்ப டுகிறது. அங்கக வேளாண் முறையில் சுற்றுச்சூழலை பாதிக்காமல் பல்வேறு முறைகளில் களைச் செடிகளை நீக்க முடியும்.

    களை வித்துக்கள் உழவுமுறைக்கு தகுந்தாற்போல் பரவிக் கிடக்கும். பொதுவாக உழவு செய்யாத நிலத்தில் அவை மேல்மட்டத்தில் 5 செமீ ஆழம் வரை ஊடுருவி இருக்கும். இயற்கை கலப்பை கொண்டு உழுத நிலத்தில் களை வித்துக்கள் சீராக பரவி இருக்கும். களை வித்துக்களின் பரவுத் தன்மை வளர்ச்சி ஆகியவை உழவு முறையின் அடிப்படை யில் கட்டுப்படுத்தபடு கின்றன.

    சுத்தமான பயிர் வித்துக்களை உபயோகித்தல், புல் வெட்டுதல், மக்கிய குப்பைகளை மட்டும் உபயோகித்தல், வயல் ஓரங்களில் உள்ள இடங்களை சுத்தமாக வைத்தல் போன்ற முறைகளை பின்பற்றினால் களை செடிகளை நீக்க முடியும். பயிர் சுழற்சியில் மண்ணின் வளம் மேம்படுவது மட்டுமல்லாமல் களைகளின் வளர்ச்சியும் கட்டுப்படுத்தப்படுகிறது.

    சில மூடு பயிர்கள் சிவப்பு கிராம்பு, எண்ணெய் விதைச் செடிகள், தீவனப்பயிர்கள், முள்ளங்கி போன்றவை வேகமாகவும் அடர்த்தியாகவும் வளரக் கூடியவை. இவை நிலத்தை மூடுவதுபோல வளர்ந்து களை வளர்ச்சியை கட்டுப்படுத்தும். பயிர் வரிசைக்கு இடையில் நிலக்கடலை, தட்டைபயறு, கொள்ளு போன்றவற்றை ஊடுபயிராக வளர்த்தும் களைச் செடிகளைக் கட்டுப்படுத்த முடியும்.

    நிலப்போர்வை நிலத்தை மூடி களைச் செடிகளின் விதை முளைப்பதை தடுக்க வல்லது. ஒளி ஊடுருவதைத் தடுப்பதால் களைச் செடிகள் கட்டுப்படுத்த படுகின்றன. வைக்கோல், புல், மரப்பட்டை, மக்கிய குப்பை மற்றும் கழிவுகள் போன்றவற்றை நில போர்வையாக பயன்படுத்த லாம். வைக்கோல், புல் விதையின்றி சுத்தமாக இருத்தல் மிக அவசியம். இவை மக்கக்கூடியவை. ஆகவே மண் வளத்திற்கும் உகந்தது. செந்துார மரங்களின் இலை, பனை ஓலைகள் போன்றவற்றை பயன்படுத்தலாம். அங்கக மூடாக்கு நிலப்போர்வை அமைத்து ஆண்டு முழுவதும் களைகள் பெருகாமல் கவனித்து கொள்ளலாம்.

    வெயில் மற்றும் குளிர் காலங்களின் போது அங்கக உழவர்கள் நிலத்தை மண் வெப்பமூட்டும் முறையின் மூலம் மேற்பரப்பில் உள்ள களை விதைகளை அழிக்கமுடியும். இதில் பிளாஸ்டிக் விரிப்புகளை உழவு செய்த நிலத்தின் மீது விரித்து அவற்றின் ஓரங்களை இறுக மூடி விட வேண்டும். உள்ளே உருவாகும் வெப்பம் களை விதைகளை அழித்துவிடும்.

    பயிர் பாகங்களில் குறிப்பாக வேர்ப்பகுதியில் சுரக்கும் ஒருவித வேதி பொருள் களையை வளர விடாமல் தடுக்கிறது. உதாரணமாக சோளம், மக்காசோளம், வெள்ளரி, கடுகு, சூரியகாந்தி மற்றும் சோயாமொச்சை ஆகிய பயிர்களை களை தடுப்பு பயிராக பயன்படுத்தலாம். இவ்வாறு மேற்கொண்ட உத்திகளை பயன்படுத்தி அங்கக வேளாண்மை செய்யும் விவசாயிகள் களைகளைக் கட்டுப்படுத்தலாம்.

    மேற்கண்ட தகவலை ராமநாதபுரம் விதைச்சான்று மற்றும் அங்ககச் சான்று உதவி இயக்குநர் சிவகாமி தெரிவித்துள்ளார்.

    • தி.மு.க. மகளிரணி உள்ளிட்ட அணி நிர்வாகிகளுடன் மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன் ஆலோசனை நடத்தினார்.
    • புதிய நிர்வாகிகளை நியமனம் செய்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

    நெல்லை:

    நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பொதுக்கூட்டங்கள், தெருமுனை பிரச்சாரம் நடத்துவது சம்பந்தமாக சார்பு அணி நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டம் பாளை மகாராஜநகரில் உள்ள அலுவலகத்தில் நடைபெற்றது.

    நேற்று மகளிரணி, மகளிர் தொண்டரணி, கலை-இலக்கிய பேரவை, இளைஞரணி நிர்வாகிகளுடன் மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன் ஆலோசனை நடத்தினார். இதில் மாவட்ட மகளிரணி தலைவா கமலா நேரு, அமைப்பாளர் மல்லிகா அருள், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஜான் ரபிந்தர், துணை அமைப்பாளர்கள் வேல்முருகன், அருள்ராஜ் டார்வின், ஆகாஷ், தில்லைராஜா, மகளிர் தொண்டரணி அமைப்பாளர் ஜெயமாலதி, துணை அமைப்பாளர் அனுராதா ரவி முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    அப்போது புதிய நிர்வாகிகளை நியமனம் செய்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மாநில இளைஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோருக்கும், பரிந்துரைத்த மாவட்ட செயலாளர் ஆவுடையப்பனுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது. கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி பொதுக்கூட்டங்கள் நடத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    • வருகிற 26-ந் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்பட இருக்கிறது.
    • ஜூலை 2-ந்தேதி முதல் 5-ந்தேதி வரை சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு நடக்கிறது.

    சென்னை:

    தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 460-க்கும் மேற்பட்ட என்ஜினீயரிங் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் இளநிலைப் படிப்புகளில் உள்ள சுமார் 1.5 லட்சம் இடங்கள், ஆண்டுதோறும் பொது கலந்தாய்வு மூலம் ஒற்றைச்சாளர முறையில் நிரப்பப்பட்டு வருகின்றன.

    அதன்படி, இந்த ஆண்டுக்கான என்ஜினீயரிங் கலந்தாய்வு, தொழில் நுட்பக் கல்வி இயக்குநரகம் மூலம் ஆன்லைன் வழியாக அடுத்த மாதம் (ஜூலை) 2-ந் தேதி தொடங்க உள்ளது. ஜூலை 2-ந்தேதி முதல் 5-ந்தேதி வரை சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு நடக்கிறது. அதன் பிறகு பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூலை 7-ந்தேதி தொடங்கி ஆகஸ்டு 24-ந்தேதி வரை நடக்கிறது.

    என்ஜினீயரிங் படிப்புக்கான இணையதள விண்ணப்பப் பதிவு கடந்த மே 5-ந் தேதி தொடங்கியது. விண்ணப்ப பதிவு நேற்றுடன் முடிவடைந்தது. என்ஜினீயரிங் படிப்பில் சேர தமிழகம் முழுவதும் மொத்தம் 2,29,167 மாணவர்கள் பதிவு செய்துள்ளனர். அதில் 1,87,693 பேர் விண்ணப்ப கட்டணம் செலுத்தியுள்ளனர். அவர்களில் 1,55,124 பேர் சான்றிதழ்களை முழுமையாக பதிவேற்றியுள்ளனர்.

    கடந்த ஆண்டை ஒப்பிடும்போது இந்த ஆண்டில் 18,174 பேர் கூடுதலாக விண்ணப்பித்துள்ளனர். அதேபோல் விண்ணப்ப கட்டணம் செலுத்திய மாணவர்களின் எண்ணிக்கையும் கடந்த ஆண்டை விட 20,306 பேர் அதிகம். விண்ணப்பங்களின் பதிவு நேற்று முடிவடைந்தாலும் விண்ணப்பங்களை பதிவேற்ற வருகிற 9-ந்தேதி வரை அவகாசம் உள்ளதால் இந்த எண்ணிக்கை மேலும் உயரும்.

    இந்நிலையில் என்ஜினீயரிங் மாணவர்களை தேர்வு செய்வதற்கான அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் ரேண்டம் எண் நாளை (செவ்வாய்க்கிழமை) ஒதுக்கப்பட உள்ளது. மாணவர்களின் சான்றிதழ்கள் சரிபார்ப்புப் பணிகள் ஆன்லைன் மூலம் வருகிற 20-ந்தேதி வரை நடைபெறும். அதனை தொடர்ந்து தரவரிசை பட்டியல் வருகிற 26-ந் தேதி வெளியிடப்படும்.

    மேலும் மாணவர்கள் கூடுதல் விவரங்களை www.tneaonline.org மற்றும் tndte.gov.in ஆகிய இணைய தளங்கள் மூலம் அறிந்து கொள்ளலாம் என்று தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் தெரிவித்து உள்ளது.

    • என்ஜினீயரிங் படிப்புகளுக்கு இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கும் நடைமுறை தொடங்கியது.
    • பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வருகிற 8-ந்தேதி வெளியாகும் நிலையில் ஜூன் 6-ந்தேதி வரை மாணவர்கள் விண்ணப்பிக்க அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் 2023-24-ம் கல்வி ஆண்டில் பி.இ., பி.டெக், பி.ஆர்க் போன்ற என்ஜினீயிரிங் படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி என்ஜினீயரிங் படிப்புகளுக்கு இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கும் நடைமுறை தொடங்கியது.

    பிளஸ்-2 முடித்துள்ள மாணவர்கள் ஆன்லைனில் விண்ணப்பங்களை பதி விறக்கம் செய்து அதை நிரப்பி விண்ணப்பிக்க தொடங்கினார்கள்.

    www.tneaonline.org மற்றும் www.tndte.gov.in ஆகிய இணைய தளம் மூலம் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. அனைத்து மாவட்டங்களிலும் அமைக்கப்பட்டுள்ள என்ஜினீயரிங் சேர்க்கை சேவை மையத்திலும் மாணவர்கள் விண்ணப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

    பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வருகிற 8-ந்தேதி வெளியாகும் நிலையில் ஜூன் 6-ந்தேதி வரை மாணவர்கள் விண்ணப்பிக்க அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

    ஜூன் 7-ந்தேதி ரேண்டம் எண் வெளியிடப்படுகிறது. ஜூன் 12-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை சான்றிதழ் சரி பார்ப்பு நடைபெறும்.

    ஜூலை 12-ந்தேதி தர வரிசை பட்டியல் வெளியிடப்படுகிறது. அதில் ஏதாவது குறைகள் இருந்தால் ஜூலை 13-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை அணுகி சரி செய்து கொள்ளலாம்.

    இதையடுத்து என்ஜினீயரிங் படிப்புக்கான கலந்தாய்வு ஆகஸ்டு 2-ந்தேதி தொடங்குகிறது. அன்று முதல் 5-ந்தேதி வரை சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு நடக்கிறது. இதில் மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரர்கள், முன்னாள் படை வீரர்களின் வாரிசுகள் பங்கேற்பார்கள். அதன் பிறகு பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு ஆகஸ்டு 7-ந்தேதி தொடங்கி செப்டம்பர் 24-ந்தேதி வரை நடைபெறுகிறது.

    • சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் பெற்றோர்-ஆசிரியர் கலந்தாய்வு கூட்டம் நடந்தது.
    • முதல்வர் பாலமுருகன் தலைமை தாங்கினார்.

    சிவகாசி

    சிவகாசி காளீஸ்வரி கல்லூரி ஆங்கிலத்துறையின் 3-ம் ஆண்டு இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்களுக்கான பெற்றோர்-ஆசிரியர் கலந்தாய்வுக் கூட்டம் நடந்தது. உதவிப்பேராசிரியை சாந்தி வரவேற்றார். ஆங்கிலத்துறையின் தலைவர் பெமினா, உதவிப் பேராசிரியர்கள் சாந்தா கிறிஸ்டினா, ஸ்வப்னா ஆகியோர் பேசினர்.

    பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் வகுப்பாசிரியர்களிடம் கலந்துரையாடினார். மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் வருகை குறிப்புகள் பெற்றோர்களின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. உதவிப்பே ராசிரியர் அர்ச்சனா தேவி நன்றி கூறினார்.

    சிவகாசி காளீஸ்வரி கல்லூரியின் வணிக நிறும செயலரியல் துறை சார்பில் மாணவர்களிடையே போட்டிகள் நடத்தப்பட்டன. இதன் நோக்கமானது மாணவர்களிடையே சந்தையிடுதல் குறித்த சிந்திக்கும் திறனை ஊக்குவிப்பதாகும். முதல்வர் பாலமுருகன் தலைமை தாங்கினார்.

    இதில் 105 மாணவர்கள் இணைய வழி சந்தையிடுதலை மையமாக வைத்து விளம்பர நடிப்பு மற்றும் வண்ண கோலம் வரைதல் போன்ற போட்டிகளில் ஆர்வமாக பங்கேற்றனர். துறைத்தலைவர் செந்தில்குமார் வரவேற்றார். உதவிப் பேராசிரியர் விண்ணரசி ரெக்ஸ் போட்டிக்கான விதிமுறை களை எடுத்துரைத்தார்.

    முடிவில் உதவி பேராசிரியர் சூர்யா நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை உதவி பேராசிரியர் ஜாஸ்மின் பாஸ்டினா செய்திருந்தார்.

    • திட்டப்பணிகளை விரைந்து முடிப்பது குறித்து அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் அதிகாரிகளுடன் ஆலோசனை நடந்தது.
    • கூட்ட அரங்கில் கருணாநிதி மற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் படங்களை அமைச்சர் சாத்தூர் ராமச்ச ந்திரன் திறந்து வைத்தார்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் நகராட்சியின் வளர்ச்சி திட்டப்பணிகளான தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டம், பாதாள சாக்கடை த்திட்டம், ெரயில்வே மேம்பாலம், புதிய பஸ் நிலையம் முதல் தென்காசி ரோடு வரையிலான இணைப்பு சாலை திட்டம் குறித்து அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தலைமையில் கலெக்டர் மேகநாதரெட்டி முன்னிலையில் நகராட்சி அலுவலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடந்தது.

    கூட்டத்தில் கையில் வரைபடத்துடன் கலந்தா லோசித்து ஆய்வு செய்த அமைச்சர், ராஜபாளையம் நகரின் வளர்ச்சி திட்டப்ப ணிகள் அனைத்தும் வரும் மார்ச் மாதத்திற்குள் முடிக்க திட்டம்வகுத்துக் கொடுத்து அந்தந்த துறை அதிகாரிகளுக்கு உத்தர விட்டார். அதற்கு பதில் அளித்த அதிகாரிகளும் மார்ச் மாதத்திற்குள் பணி களை முடித்துவிடலாம் என உறுதி அளித்தனர்.

    இணைப்பு சாலை அமைக்கும் பணியும் விரைவில் தொடங்க இருக்கிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். அதனை தொடர்ந்து நேருசிலை முதல் சொக்கர்கோவில் வரை செல்லும் தென்காசி ரோட்டில் பேட்ச் ஓர்க் பணியை துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    மேலும் புதிய தார்ச்சாலை அமைக்க மத்திய அரசின் கட்டுப்பாட்டிலுள்ள தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திடம் நிதி கோரப்பட்டுள்ளது. விரைவில் தார்ச்சாலை அமைக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    அதனைத்தொடர்ந்து ராஜபாளையம் நகராட்சி கூட்ட அரங்கில் கருணாநிதி மற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் படங்களை அமைச்சர் சாத்தூர் ராமச்ச ந்திரன் திறந்து வைத்தார். இதில் தனுஷ்குமார் எம்.பி., தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ., நகர் மன்ற தலைவி பவித்ரா ஷியாம்ராஜா, யூனியன் சேர்மன் சிங்கராஜ், தி.மு.க நகர செயலாளர்கள் ராமமூர்த்தி, மணிகண்டராஜா, நகரசபை துணை தலைவர் கல்பனாகுழந்தைவேலு மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    • அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2022 - 2023 கல்வியாண்டிற்கு கலந்தாய்வு நடைபெற்றது.
    • 2 நாட்களில் நடைபெற்ற கலந்தாய்வில் 158 மாணவ, மாணவியர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

    குமாரபாளையம்:

    குமாரபாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2022 - 2023 கல்வியாண்டிற்கு கலந்தாய்வு கல்லூரி முதல்வர் ரேணுகா தலைமையில் நடைபெற்றது.

    பி.ஏ. தமிழ், ஆங்கிலம், பொருளியல், பி.எஸ்.சி. கணிதம், கணினி அறிவியல், இயற்பியல், வேதியியல், பி.காம்., பி.பி.ஏ., ஆகிய பாடப்பிரிவுகளுக்கு கலந்தாய்வானது ஆக. 4ல் சிறப்பு ஒதுக்கீடு மாணாக்கர்களுக்கும், ஆக. 5ல் பொதுப்பிரிவு மாணாக்கர்களுக்கும் நடைபெற்றதுஇந்த கலந்தாய்வில் கலந்து கொள்ளும் மாணாக்கர்களின் தர வரிசை பட்டியல் கல்லூரியின் இணைய தளம் மற்றும் கல்லூரி தகவல் பலகையில் வெளியிடப்பட்டது. மேலும் மின்னஞ்சல் மற்றும் மொபைல் போன் மூலமும் இத்தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இணைய வழியில் பதிவு செய்த சிறப்பு ஒதுக்கீடு கோரும் மாணவர்கள், பொதுப்பிரிவு மாணாக்கர்கள் தங்கள் அசல் மற்றும் நகல் சான்றிதழ்களுடன் கல்லூரிக்கு நேரில் வருகை தந்து கலந்தாய்வில் கலந்து கொண்டனர். 2 நாட்களில் நடைபெற்ற கலந்தாய்வில் 158 மாணவ, மாணவியர் சேர்க்கப்பட்டுள்ளனர் என கல்லூரி நிர்வாகம் தெரிவித்தது.

    • பண்ருட்டியில் முந்திரி தொழில் வளர்ச்சி குறித்து ஆலோசனை நடைபெற்றது.
    • ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்டு முந்திரிதொழிலுக்கு தேவையான வசதிகள் குறித்தும் அதற்கான வழிமுறைகள்குறித்தும்கேட்டறிந்தார்.

    கடலூர்:

    பாரதீய ஜனதா கட்சி தேசிய உறுப்பினர் கல்யாணராமன் முந்திரி தொழில் வளர்ச்சி குறித்து ஆராய பண்ருட்டி வந்தார்.

    பண்ருட்டி, காட்டாண்டி க்குப்பம், கீழக்குப்பம் பகுதியிலுள்ள முந்திரி நிறுவனங்களுக்கு நேரில் சென்று பார்வையிட்டு முந்திரி கொட்டை உடைக்கும்பணிகளை பார்வையிட்டார்.

    பண்ருட்டி பிரதீபா கேஷ்யூஸ்க்கு வருகை தந்த இவரை, பண்ருட்டி பிரதீபா கேஷ்யூஸ்நிறுவனத்தின் அதிபர்கள் மாயகிருஷ்ணன், தமிழ்நாடுமுந்திரிஉற்பத்தி மற்றும் ஏற்றுமதியாளர் சங்கசெயலாளர் ராம கிருஷ்ணன், தேவநாதன், பாலகிருஷ்ணன், ரவி ஆகியோர் வரவேற்றனர்.தொடர்ந்து தமிழ்நாடு முந்திரி உற்பத்தி மற்றும் ஏற்றுமதியாளர் சங்க தலைவர்மலர்வாசகம், செயலாளர் ராமகிரு ஷ்ணன், பொருளாளர் செல்வமணி, ஆகியோர் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்டு முந்திரிதொழிலுக்கு தேவையான வசதிகள் குறித்தும் அதற்கான வழிமுறைகள்குறித்தும்கேட்டறிந்தார்.

    இரண்டு நாள் பயணத்தின் மூலம் தான்அறிந்து கொண்டவிவரங்களை அறிக்கையாக தயார் செய்து அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்று பிரச்சினை களைத் தீர்க்க உதவ உதவுவதாக கல்யாணராமன் உறுதி யளித்தார்.

    தேர்தல் தோல்வி குறித்து அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் நிர்வாகிகளுடன் வருகிற 1-ந்தேதி ஆலோசனை நடத்துகிறார்.

    சென்னை:

    தமிழகத்தில் நடந்த பாராளுமன்ற தேர்தல் மற்றும் 22 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் டி.டி.வி. தினகரனின் அ.ம.மு.க. படுதோல்வி அடைந்தது.

    அ.தி.மு.க. வாக்கு வங்கியை அ.ம.மு.க. பிரித்து நெருக்கடி கொடுக்கும் என்று கூறப்பட்டது. ஆனால் அ.ம.மு.க. வால் எந்த நெருக்கடியும் கொடுக்க முடியவில்லை. அக்கட்சி வேட்பாளர்கள் டெபாசிட்டுகளை இழுந்தனர்.

    சட்டமன்ற இடைத்தேர்தலில் சாதிக்க வேண்டும் என்று அ.ம.மு.க.வின் எண்ணம் நிறைவேறவில்லை. இந்த நிலையில் தேர்தல் தோல்வி குறித்து அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் நிர்வாகிகளுடன் வருகிற 1-ந்தேதி ஆலோசனை நடத்துகிறார்.

    இதுகுறித்து அ.ம.மு.க. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கட்சியின் பொதுச் செயலாளர் தினகரன் தலைமையில் வருகிற ஜூன் 1-ந்தேதி காலை 10 மணிக்கு சென்னை அசோக் நகர் நடேசன் சாலையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

    கூட்டத்தில் கட்சி தலைமை கழக நிர்வாகிகள் மாவட்ட செயலாளர்கள் பாராளுமன்ற மற்றும் சட்ட மன்ற தொகுதி வேட்பாளர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகத்தில் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான பொன்னையா தலைமையில் வேட்பாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. #LokSabhaElections2019
    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகத்தில் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான பொன்னையா தலைமையில் தேர்தல் பொது பார்வையாளர்கள் யோகேஷ் பி.மகசி, டெசிஸ்தான், சிவகுமார் வர்மா முன்னிலையில் வேட்பாளர்களுடன் தேர்தல் விதிகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    இந்திய தேர்தல் ஆணையத்தின் தேர்தல் விதிகளை, வேட்பாளர்கள் அனைவரும் பின்பற்ற வேண்டும். வேட்பாளர்களுடைய செலவு கணக்குகளும் அவர்கள் தேர்தல் விதிமுறைகளை பின்பற்றும் முறையும் தேர்தல் கண்காணிப்பு குழுவினரால் கண்காணிக்கப்பட்டு வருகிறது. எனவே தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்ட அறிவுரைகளின்படி தேர்தல் நடைபெற வேண்டுமென வேட்பாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

    ஆலோசனை கூட்டத்தில் போலீஸ் உயர் அதிகாரிகள் மற்றும் அதிகாரிகள், தேர்தல் நடத்தும் அலுவலர்கள் கலந்து கொண்டனர். #LokSabhaElections2019

    பிரியங்கா அரசியலில் நுழைந்திருப்பதை பாராட்டிய அகிலேஷ் யாதவ் காங்கிரசுடன் ரகசிய உடன்பாடு செய்துகொள்ள விரும்புவதாக தெரிய வந்துள்ளது. #AkhileshYadav #Congress
    புதுடெல்லி:

    உத்தரபிரதேச மாநிலத்தில் 80 பாராளுமன்ற தொகுதிகள் உள்ளன. பாராளுமன்ற தேர்தலில் சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ், ராஷ்ட்ரிய லோக்தளம் ஆகிய கட்சிகள் இணைந்து கூட்டணி அமைத்துள்ளன. அகிலேஷ்யாதவும், மாயாவதியும் தலா 38 தொகுதிகளை எடுத்துக்கொண்டு அஜித்சிங்கின் ராஷ்ட்ரிய லோக்தளம் கட்சிக்கு 2 தொகுதிகள் அளித்தன.

    சோனியா மற்றும், ராகுல் காந்தி தொகுதியில் மரியாதை நிமித்தமாக வேட்பாளர்களை நிறுத்தப்போவதில்லை என்று அறிவித்தனர்.



    இந்தநிலையில் காங்கிரசுக்கு புத்துணர்ச்சி அளிக்கும் வகையில் பிரியங்கா தீவிர அரசியலில் இறங்கினார். அவர் காங்கிரஸ் பொதுச்செயலாளராகவும் நியமிக்கப்பட்டார். இதனால் உத்தரபிரதேச மாநிலத்தில் காங்கிரசின் செல்வாக்கு அதிகரித்துள்ளதாக கருதப்படுகிறது. எனவே காங்கிரஸ் அனைத்து தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தப்போவதாக அறிவித்தது.

    இதன்காரணமாக உத்தரபிரதேச மாநிலத்தில் மும்முனைப்போட்டி ஏற்பட்டு வாக்குகள் பிரியும் நிலை உருவானது. இது பா.ஜனதாவுக்கு சாதகமாகிவிடும் என்று கருதப்படுகிறது.

    பிரியங்காவின் வருகையாலேயே அகிலேஷ் யாதவிடம் இந்த மனமாற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பிரியங்கா அரசியலில் நுழைந்திருப்பதை அகிலேஷ் யாதவ் பாராட்டி இருந்தார். பிரியங்கா வருகையை தொடர்ந்து உத்தரபிரதேசத்தில் காங்கிரசின் செல்வாக்கு உயர்ந்திருப்பதாக அவரும் கருதுகிறார். எனவே காங்கிரசுடன் ரகசிய உடன்பாடு செய்துகொள்ள அவர் விரும்புவதாக தெரிகிறது.

    இதுதொடர்பாக சமாஜ்வாடி கட்சி நிர்வாகிகள் கூறுகையில், ‘‘உத்தரபிரதேசத்தில் எங்கள் கூட்டணியில் காங்கிரசையும் சேர்க்கை முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அப்படி முடியாவிட்டால் சமாஜ்வாடி- காங்கிரஸ் இடையே சில தொகுதிகளில் ரகசிய உடன்பாடு செய்ய ஆலோசனை நடந்து வருகிறது’’ என்றனர். #AkhileshYadav #Congress

    ‘சின்னதம்பி’ யானையை மீண்டும் தடாகம் பகுதிக்கு கொண்டுவர வனத்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். #ChinnaThambiElephant
    உடுமலை:

    கோவை தடாகம் பகுதியில் சுற்றித்திரிந்த சின்னதம்பி காட்டுயானையை வனத்துறையினர் கடந்த 25-ந்தேதி மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். பிடிபட்ட யானையின் கழுத்தில் ஜி.பி.எஸ். கருவி பொருத்தி பொள்ளாச்சி டாப்சிலிப் பகுதியில் உள்ள வரகளியாறு அடர்ந்த வனப்பகுதியில் விட்டனர்.

    அங்கு சில நாட்கள் சுற்றிய காட்டுயானை கடந்த 31-ந்தேதி நள்ளிரவு ஆழியாறு அருகே உள்ள கோட்டூர் மலையாண்டிப்பட்டினம் என்ற ஊருக்குள் நுழைந்தது. பொள்ளாச்சி வனத்துறையினர் யானையை கோபால்சாமி மலையில் விரட்டி விட்டனர்.

    மறுநாள் 1-ந்தேதி மலை மற்றும் காடு, தோட்டங்களை கடந்து உடுமலை மைவாடி ரெயில் நிலையம் அருகே உள்ள புதருக்குள் யானை நின்றது. 80 கி.மீட்டர் தூரத்துக்கும் மேல் நடந்து வந்த யானை பசி மற்றும் தூக்கத்தால் மயங்கியது. வனத்துறையினர் தண்ணீர் மற்றும் உணவு கொடுத்தனர். அதன்பின்னர் யானைக்கு மயக்கம் தெளிந்தது.

    யானை ஊருக்குள் நுழைந்ததால் பொதுமக்கள் பீதியடைந்தனர். சின்னதம்பி யானையை கும்கியாக மாற்ற வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. இதனை எதிர்த்து விலங்குகள் நல ஆர்வலர் அருண் பிரசன்னா வழக்கு தொடர்ந்தார். சின்னதம்பியை கும்கியாக மாற்றும் எண்ணம் இல்லை என்று தமிழக அரசு கோர்ட்டில் கூறியது.

    இந்நிலையில் யானையை விரட்ட வந்த கும்கி கலீமும், சின்னதம்பியும் நண்பர்களாகி விட்டன. கரும்பு உள்ளிட்ட உணவு பொருட்களை மாறி மாறி ஊட்டி மகிழ்ந்தன.

    யானையின் இந்த திடீர் மாற்றம் குறித்து அறிந்த கால்நடை டாக்டர் மனோகரன் சம்பவ இடத்துக்கு சென்று யானையின் நடவடிக்கைகளை ஆய்வு செய்தார். காட்டுயானையை வேறு இடத்துக்கு மாற்றினால் ஆவேசமாக இருக்கும். சின்னதம்பி குழந்தைபோல் மாறியது பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது என்றார்.

    மாவட்ட வன அலுவலர் தீலிப், உடுமலை ரேஞ்சர் தனபால், அமராவதி ரேஞ்சர் முருகேசன், தலைமை வன அதிகாரி கணேஷ் உள்ளிட்ட அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள். மீண்டும் சின்னதம்பிக்கு பிடித்த இடமான தடாகம் பகுதியிலேயே விட ஆலோசனை நடத்தினர்.

    கும்கிகள் கரும்புடன் நடந்தால் அதனை பின் தொடர்ந்து சின்னதம்பியும் செல்லும் என்று யானை நிபுணர்கள் கூறுகிறார்கள். இன்று 5-வது நாளாக கிருஷ்ணாபுரம் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கும் மைவாடி ரெயில் நிலையத்துக்கும் இடையே சின்னதம்பி நிற்கிறது. அதன் போக்கிலேயே விட்டுபிடிக்க வனத்துறையினர் காத்திருக்கிறார்கள்.

    பொதுமக்கள் வாழைப்பழம், மக்காச்சோள கதிர்களை கொண்டு வந்து பார்த்து வருகிறார்கள். கொண்டு வந்த தின்பண்டங்களை வன ஊழியர்களிடம் கொடுக்கிறார்கள். அவர்கள் சின்னதம்பிக்கு கொடுக்கிறார்கள். சின்னதம்பி ஆசை ஆசையாக வாங்கி உண்கிறது.

    சின்னதம்பியை இன்னும் ஒருவாரம் இதே பகுதியில் வைத்து அதன் உடல் நலம் மற்றும் மன நிலை நல்ல நிலைக்கு திரும்பிய பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கையில் இறங்குவோம் என்று வனத்துறை அதிகாரி கூறினர்.

    சர்க்கரை ஆலையின் பின்புறம் சின்னதம்பி முகாமிட்டுள்ளதால் அதன் பாதுகாப்பு கருதி அது நடமாடும் பகுதியில் தேங்கிய கழிவு நீரை நிர்வாகம் மோட்டார் மூலம் வெளியேற்றியது. #ChinnaThambiElephant


    ×