search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காஞ்சிபுரத்தில் வேட்பாளர்களுடன் கலெக்டர் ஆலோசனை
    X

    காஞ்சிபுரத்தில் வேட்பாளர்களுடன் கலெக்டர் ஆலோசனை

    காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகத்தில் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான பொன்னையா தலைமையில் வேட்பாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. #LokSabhaElections2019
    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகத்தில் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான பொன்னையா தலைமையில் தேர்தல் பொது பார்வையாளர்கள் யோகேஷ் பி.மகசி, டெசிஸ்தான், சிவகுமார் வர்மா முன்னிலையில் வேட்பாளர்களுடன் தேர்தல் விதிகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    இந்திய தேர்தல் ஆணையத்தின் தேர்தல் விதிகளை, வேட்பாளர்கள் அனைவரும் பின்பற்ற வேண்டும். வேட்பாளர்களுடைய செலவு கணக்குகளும் அவர்கள் தேர்தல் விதிமுறைகளை பின்பற்றும் முறையும் தேர்தல் கண்காணிப்பு குழுவினரால் கண்காணிக்கப்பட்டு வருகிறது. எனவே தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்ட அறிவுரைகளின்படி தேர்தல் நடைபெற வேண்டுமென வேட்பாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

    ஆலோசனை கூட்டத்தில் போலீஸ் உயர் அதிகாரிகள் மற்றும் அதிகாரிகள், தேர்தல் நடத்தும் அலுவலர்கள் கலந்து கொண்டனர். #LokSabhaElections2019

    Next Story
    ×