search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெற்றோர்-ஆசிரியர் கலந்தாய்வு கூட்டம்
    X

    சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் பெற்றோர்-ஆசிரியர் கலந்தாய்வுக்கூட்டம் நடந்தது.

    பெற்றோர்-ஆசிரியர் கலந்தாய்வு கூட்டம்

    • சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் பெற்றோர்-ஆசிரியர் கலந்தாய்வு கூட்டம் நடந்தது.
    • முதல்வர் பாலமுருகன் தலைமை தாங்கினார்.

    சிவகாசி

    சிவகாசி காளீஸ்வரி கல்லூரி ஆங்கிலத்துறையின் 3-ம் ஆண்டு இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்களுக்கான பெற்றோர்-ஆசிரியர் கலந்தாய்வுக் கூட்டம் நடந்தது. உதவிப்பேராசிரியை சாந்தி வரவேற்றார். ஆங்கிலத்துறையின் தலைவர் பெமினா, உதவிப் பேராசிரியர்கள் சாந்தா கிறிஸ்டினா, ஸ்வப்னா ஆகியோர் பேசினர்.

    பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் வகுப்பாசிரியர்களிடம் கலந்துரையாடினார். மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் வருகை குறிப்புகள் பெற்றோர்களின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. உதவிப்பே ராசிரியர் அர்ச்சனா தேவி நன்றி கூறினார்.

    சிவகாசி காளீஸ்வரி கல்லூரியின் வணிக நிறும செயலரியல் துறை சார்பில் மாணவர்களிடையே போட்டிகள் நடத்தப்பட்டன. இதன் நோக்கமானது மாணவர்களிடையே சந்தையிடுதல் குறித்த சிந்திக்கும் திறனை ஊக்குவிப்பதாகும். முதல்வர் பாலமுருகன் தலைமை தாங்கினார்.

    இதில் 105 மாணவர்கள் இணைய வழி சந்தையிடுதலை மையமாக வைத்து விளம்பர நடிப்பு மற்றும் வண்ண கோலம் வரைதல் போன்ற போட்டிகளில் ஆர்வமாக பங்கேற்றனர். துறைத்தலைவர் செந்தில்குமார் வரவேற்றார். உதவிப் பேராசிரியர் விண்ணரசி ரெக்ஸ் போட்டிக்கான விதிமுறை களை எடுத்துரைத்தார்.

    முடிவில் உதவி பேராசிரியர் சூர்யா நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை உதவி பேராசிரியர் ஜாஸ்மின் பாஸ்டினா செய்திருந்தார்.

    Next Story
    ×