search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kareena Kapoor"

    • யாஷ் அடுத்ததாக கீது மோஹன் தாஸ் இயக்கத்தில் டாக்சிக் படத்தில் நடித்து வருகிறார்.
    • யாஷ், சாய் பல்லவி, நவாசுதின் சித்திக், சம்யுக்தா மேனன், ஷைன் டாம் சாக்கோ போன்ற பல முன்னணி நடிகர்கள் நடிக்கவுள்ளனர்.

    பிரஷாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் நடித்து 2018 ஆம் ஆண்டு கே. ஜி. எஃப் சாப்டர் 1 படம் வெளியானது. பான் இந்தியன் படமாக இப்படம் அமைந்தது . கன்னட சினிமாவை அடுத்த கட்டத்திற்கு இப்படம் நகர்த்தி சென்றது. உலகமே திரும்பி பார்க்கும் வகையில் மிக பிரமாண்டமாக எடுக்கப்பட்டது கே.ஜி.எஃப் திரைப்படம். கன்னடா திரைத்துறையில் அதிகம் வசூலித்த படம் இதுவே.

    யாஷ் இப்படத்திற்கு சிறந்த நடிகருக்கான விருதைப் பெற்றார். இதற்கடுத்து கே ஜி எஃப் பகுதி 2 வெளியானது அப்படமும் மிகப்பெரிய வெற்றிப் பெற்றது.

    யாஷ் அடுத்ததாக கீது மோஹன் தாஸ் இயக்கத்தில் டாக்சிக் படத்தில் நடித்து வருகிறார். நிவின் பாலி நடித்து 2019 வெளியான 'மூத்தோன்' படத்தின் இயக்குனர் என்பது குறிப்பிடத்தக்கது. வெங்கட் நாரயணன் மற்றும் யாஷ் இணைந்து கே வி என் மற்றும் மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் கீழ் தயாரிக்கவுள்ளனர்.

    யாஷ், சாய் பல்லவி, நவாசுதின் சித்திக், சம்யுக்தா மேனன், ஷைன் டாம் சாக்கோ போன்ற பல முன்னணி நடிகர்கள் நடிக்கவுள்ளனர்.

    இந்நிலையில் கரீனா கப்பூர் நேற்று நடந்த நேர்காணலில் அவர் ஒரு மிக பெரிய சவுத் இந்தியன் படத்தில் நடிக்கவுள்ளார் அப்படம் பான் இந்தியன் படமாக இருக்கப்போகிறது என கூறியுள்ளார்.  கரீனா கபூர்  டாக்சிக் படத்தில் நடிக்க வாய்ப்பு அதிகம் இருக்கிறது என ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்க்கபடுகிறது. ஏப்ரல் 2025 ஆம் ஆண்டு டாக்சிக் படம் வெளியிடப்படும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்

    • கரீனா கபூர் , தபு, கிருதி சானோன் முன்னிலை கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள படம் க்ரீவ்.
    • தங்க கட்டிகளுடன் ஒரு பயணி இறந்துக் கிடக்கிறார்.

    கரீனா கபூர் , தபு, கிருதி சானோன் முன்னிலை கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள படம் க்ரீவ். இவர்கள் மூவரும் கோஹினூர் விமான நிறுவனத்தில் ஏர் ஹோஸ்டஸாக பணிப்புரிகிறார்கள். மூன்று கதாநாயகிகளுக்கும் அவர்களின் வாழ்க்கையில் ஒரு பண நெருக்கடி வருகிறது.

    வாழ்கையில் அடுத்து பணத்துக்காக என்ன செய்வது என்று தெரியாமல் இருக்க, அவர்கள் வேலை செய்யும் விமானத்தில் தங்க கட்டிகளுடன் ஒரு பயணி இறந்துக் கிடக்கிறார். அவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தங்க கட்டிகளை எடுத்துக் கொள்ளலாம் என்று திட்டம் தீட்டுகிறார்கள்.

    தங்க கட்டிகளை மூவரும் சேர்ந்து கடத்தினார்களா? இல்லையா? அதில் என்ன சிக்கல் ஏற்பட்டது என்பதே கதை. இப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.

    டிரெயிலர் மிகவும் விறுவிறுப்பாக அமைந்துள்ளது. கதைக்களம் மிகவும் வித்தியாசமாக தேர்வு செய்து இருக்கிறார் இயக்குனர் ராஜேஷ் ஏ கிருஷ்ணன். இவர் இதற்கு முன் 2023-ஆம் ஆண்டு வெளிவந்த 'லூட் கேஸ்' படத்தை இயக்கியது குறிப்பிடத்தக்கது. பாலாஜி டெலி பிலிம்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது.

    மார்ச் 29-ஆம் தேதி வெளியாகவுள்ள இப்படம் மீது மிகுந்த எதிர்பார்ப்பு உண்டாகியுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

     

    • உடல்நடக்குறைவு காரணமாக நடிகர் சையித் அலிகான் மருத்துவமனையில் அனுமதி.
    • நடிகர் சையித் அலிகானுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    பாலிவுட் உலகில் முன்னணி கதாநாயகனாக இருப்பவர் சையித் அலிகான். இவர் நடிகை கரீனா கபூரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

    இந்நிலையில் உடல்நடக்குறைவு காரணமாக நடிகர் சையித் அலிகான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மும்பை கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தொடர்ந்து அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். மருத்துவமனையின் அதிகாரபூர்வ அறிக்கைக்கு பிறகே, சையித் அலிகானின் உடல்நிலை குறித்து விவரம் தெரியவரும்.

    ஜூனியர் என்.டி.ஆர் உடன் இணைந்து, பான் இந்தியா படமான தேவராவில் இவர் நடித்துள்ளார். அனிரூத் இசையமைத்துள்ள இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகியது குறிப்பிடதக்கது.

    • கரீனா கபூர் கடந்த வாரம் முதல் புதிய படம் ஒன்றில் தபு மற்றும் கிருத்தி சலோனுடன் நடித்து வருகிறார்.
    • ராஜேஷ் கிருஷ்ணன் இயக்கும் படம் 3 பெண்களை பற்றிய கதை ஆகும்.

    இந்தி நடிகை கரீனா கபூர் திரைத்துறையில் 23 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். 39 வயதான அவர் தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பதற்காக உணவு கட்டுப்பாட்டை கடைப்பிடித்து வருகிறார்.

    அவர் எதை செய்தாலும் சுறுசுறுப்பாகவும், தன்னம்பிக்கையுடனும் எடுத்த காரியத்தை செய்யக்கூடியவர். சமீபத்தில் யூனிசெப்பின் புதிய முயற்சியான 'எவரி சைல்ட் ரீடிங்' திட்டத்தின் நல்லெண்ண தூதராக கரீனா கபூர் நியமிக்கப்பட்டிருந்தார்.

    நேற்று அவர் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றார். அதில் முதலில் ஆரஞ்சு நிற உடையில் கவர்ச்சிகரமாக காட்சியளித்த அவரது தோற்றத்தை ரசிகர்கள் பாராட்டினர்.

    குறைந்த மேக்கப்புடன் காணப்பட்ட கரீனா தனது தலைமுடியை தளர்வாக வைத்திருந்தார். சிறிது நேரம் கழித்து மஞ்சள் நிற பேண்ட்-சூட் உடையில் அவர் தோன்றினார். அவரது இந்த இரண்டு தோற்றங்களும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.

    கரீனா கபூர் கடந்த வாரம் முதல் புதிய படம் ஒன்றில் தபு மற்றும் கிருத்தி சலோனுடன் நடித்து வருகிறார். ராஜேஷ் கிருஷ்ணன் இயக்கும் இந்த படம் 3 பெண்களை பற்றிய கதை ஆகும்.

    • பாலிவுட் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக இருப்பவர் சையிப் அலிகான்.
    • இவர் புகைப்படக்காரர்களை கோபமாக பேசிய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

    பாலிவுட் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக இருப்பவர் சையிப் அலிகான். இவர் நடிகை கரீனா கபூரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். சமீபத்தில் மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் சையிப் அலிகானும் கரீனா கபூரும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி முடிந்து இருவரும் காரில் வீட்டுக்கு திரும்பினார்கள்.


    சையிப் அலிகான் - கரீனா கபூர்

    அப்போது வீட்டின் எதிரே சில புகைப்படக்காரர்கள் காத்து நின்றனர். சையிப் அலிகான் மனைவியுடன் வந்ததும் இருவரையும் புகைப்படம், எடுக்க அவர்கள் முண்டியடித்தனர். அதோடு அவர்களை பின் தொடர்ந்து கேட்டை தாண்டி அத்துமீறி வீட்டின் கட்டிட வளாகத்துக்குள் சென்றுவிட்டனர். இதனால் கோபமான சையிப் அலிகான் ஒன்று செய்கிறீர்களா. அப்படியே எங்கள் படுக்கை அறைக்கே வந்து விடுங்கள் என்று கோபமாக கூறியுள்ளார்.


    சையிப் அலிகான் - கரீனா கபூர்

    உடனே புகைப்படக்காரர்கள் பின்வாங்கினர். பின்னர் புகைப்படக்காரர்கள் பார்த்து கோபமாக கையை அசைத்தபடி வீட்டுக்குள் சென்றார். சயீப் அலிகான் கோபப்பட்டு பேசும் வீடியோ வலைத்தளத்தில் வைரலாகிறது. சமீபத்தில் இந்தி நடிகை அலியாபட் வீட்டுக்குள் அறையில் இருந்ததை எதிர்வீட்டு மாடியில் நின்று சிலர் புகைப்படம் எடுத்தது சர்ச்சையானது.

    • பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகை கரீனா கபூர்.
    • இவரை ரசிகர்கள் சூழ்ந்து கொண்டு செல்ஃபி எடுக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

    பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கரீனா கபூர். இவர் அண்மையில் தனது 42-வது பிறந்தநாளை கொண்டாடினார். இவரது பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ரன்பீர் கபூர், ஆலியா பட், கரண் ஜோக்கர் என திரைப்பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர்.


    கரீனா கபூர்

    இவர் சமீபத்தில் மும்பை விமான நிலையத்திற்கு சென்றுள்ளார். அப்போது காரில் இருந்து இறங்கிய நடிகை கரீனா கபூரை ரசிகர்கள் பலர் செல்ஃபி எடுப்பதற்காக சூழ்ந்துள்ளனர். புகைப்படம் எடுப்பதில் ஆர்வமாக இருந்த ரசிகர்கள் பலர் அவரை தள்ளவும் செய்துள்ளனர்.


    கரீனா கபூர்

    இதைத்தொடர்ந்து நடிகையின் பாதுகாவலர்கள் ரசிகர்களை அப்புறப்படுத்தினர். அதன்பின்னர் கரீனா கபூர் விமான நிலையத்திற்கு சென்றார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. 

    • அமீர் கான் - கரீனா கபூர் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் லால் சிங் சத்தா.
    • லால் சிங் சத்தா படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்து வருகின்றன.

    அமீர் கான் - கரீனா கபூர் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் 'லால் சிங் சத்தா'. இந்த படத்துக்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்து வருகின்றன. இந்த படம் வெளிவருவதற்கு முன்பு கரீனா கபூர் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்பொழுது அவரிடம் 'லால் சிங் சத்தா' படம் குறித்து பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன. தொடர் கேள்விகளால் ஆத்திரமடைந்த அவர் ஒருகட்டத்தில், 'உங்களை யார் படம் பார்க்க சொல்லி கட்டாயப்படுத்தினார்கள்? எங்கள் படங்களை பார்க்க வேண்டாம். நீங்கள் பார்க்காததால் ஒன்றும் மோசமாகி விடப்போவது கிடையாது' என்று கூறினார். அவரின் இந்த கருத்துக்கு திரையுலகினர் கண்டனம் தெரிவித்தனர். ரசிகர்கள் தரப்பிலும் பல விமர்சனங்கள் எழுந்தன.

    லால் சிங் சத்தா

    லால் சிங் சத்தா

     

    இதையடுத்து படத்தை புறக்கணிக்க போவதாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் சில கருத்துகளை பதிவிட்டனர். இதனால் அதிர்ச்சிக்குள்ளான கரீனா கபூர் ஒரு வீடியோ பதிவு வெளியிட்டார். அதில், 'இந்த படத்தை புறக்கணிக்காதீர்கள். 2.5 வருடமாக இந்த படத்துக்காக 250 பேர் உழைத்து இருக்கிறார்கள். அவர்களுக்காக இந்த படத்தை பாருங்கள் ஆதரவு தாருங்கள்' என கூறியுள்ளார்.

    கரீனா கபூர்

    கரீனா கபூர்

     

    இதற்கிடையில் கரீனாவின் இந்த இருவேறு கருத்துகளையும் ஒன்றாக இணைத்து சமூக வலைதளங்களில் ரசிகர்கள் அவரை கேலி செய்து வருகிறார்கள். 'கரீனா கபூர் வாயை கொடுத்து மாட்டிக்கொண்டு விட்டார்' என சக நடிகர்களும் கருத்து தெரிவிக்கிறார்கள். இதனால் கரீனா கபூர் செய்வதறியாது திகைத்திருக்கிறார்.

    பாராளுமன்ற தேர்தலில் போபால் தொகுதியில் போட்டியிடுவதாக வெளியாக தகவல் குறித்து பிரபல இந்தி நடிகை கரீனா கபூர் விளக்கம் அளித்துள்ளார். #ParliamentElection #KareenaKapoor
    பிரபல இந்தி நடிகை கரீனா கபூர். இவர் இந்தி நடிகர் சயீப் அலிகானை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தைமூர் என்ற மகன் இருக்கிறார். சயீப் அலிகானின் தந்தை முன்னாள் கிரிக்கெட் வீரர் மன்சூர் அலிகான் பட்டோடி ஆவார். இவர் 1991-ஆம் ஆண்டு காங்கிரஸ் சார்பில் போபால் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.

    தற்போது பட்டோடி குடும்பத்தை சேர்ந்த நடிகை கரீனா கபூரை போபால் தொகுதியில் களம் இறக்க அங்குள்ள காங்கிரஸ் தலைவர்கள் திட்டமிட்டு உள்ளனர். இதுகுறித்து ராகுல் காந்திக்கும் கடிதம் அனுப்பி உள்ளனர். போபால் காங்கிரஸ் கவுன்சிலர் யோகேந்திர சிங் கூறும்போது, “போபால் தொகுதியில் கடந்த 30 வருடங்களாக காங்கிரஸ் வெற்றிபெறவில்லை. இந்த தொகுதியை பா.ஜனதாவிடம் இருந்து கைப்பற்ற புதுமுகத்தை இறக்க வேண்டும். கரீனா கபூர் இந்த மண்ணின் மருமகளாகி விட்டதால் அவரை காங்கிரஸ் வேட்பாளராக நிறுத்த வேண்டும். இதை கரீனா கபூர் ஏற்றுக்கொள்வார் என்று நம்புகிறோம்” என்றார்.

    இதற்கு கரீனா கபூர் விளக்கம் அளித்து கூறும்போது, “என்னை தேர்தலில் போட்டியிடும்படி எந்த கட்சியும் அழைத்தாலும் கூட அரசியலில் ஈடுபட எனக்கு விருப்பம் இல்லை. நான் அரசியல் கட்சியில் இணையப் போவதாக வெளியாகும் தகவலில் உண்மை இல்லை. நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்துவேன்” என்றார்.  #ParliamentElection #KareenaKapoor
    போபால் தொகுதியில் பிரபல இந்தி நடிகை கரீனா கபூரை காங்கிரஸ் சார்பில் போட்டியிட வைக்கலாமா? என்ற திட்டம் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. #KareenaKapoor #Bhopal #Congress
    போபால்:

    மத்திய பிரதேசம் மாநிலத்தின் தலைநகரான போபால், பா.ஜனதா கட்சியின் நீண்டநாள் கோட்டையாக உள்ளது.

    கடந்த பல எம்.பி. தேர்தல்களில் இந்த தொகுதியை பா.ஜனதாவிடம் இருந்து தட்டிப் பறிக்க காங்கிரஸ் கட்சி தீவிர முயற்சிகளில் ஈடுபட்டது. ஆனால் காங்கிரஸ் கட்சியால் போபால் தொகுதியில் எதிர்பார்த்த வாக்குகளையும் வெற்றியையும் பெற இயலவில்லை.

    இந்த நிலையில் சமீபத்தில் மத்திய பிரதேச சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்த காங்கிரஸ், வரும் ஏப்ரல் மாதம் நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் போபால் தொகுதியை பா.ஜனதாவிடம் இருந்து மீட்க வேண்டும் என்ற வியூகத்தை வகுத்து வருகிறது. இதற்காக மத்திய பிரதேச மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் ரமேஷ்வர் நிக்ரா தீவிர ஆலோசனை நடத்தினார்.

    அவரை சமீபத்தில் போபால் மாநகராட்சி காங்கிரஸ் கவுன்சிலர் யோகேந்திர சிங் சவுகான் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் போபால் தொகுதியில் பிரபலமான ஒருவரை காங்கிரஸ் சார்பில் களம் இறக்கினால் நிச்சயமாக பா.ஜனதாவை வீழ்த்தி வெற்றி பெற முடியும் என்று தெரிவித்தார்.

    இதையடுத்து போபால் தொகுதியில் பிரபல இந்தி நடிகை கரீனாகபூரை காங்கிரஸ் சார்பில் போட்டியிட வைக்கலாமா? என்ற திட்டம் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இந்தி பேசும் மாநில மக்களிடம் தனக்கென தனி இடத்தைப் பிடித்துள்ள நடிகை கரீனா கபூர் போட்டியிட்டால் மக்கள் ஆதரவளிப்பார்கள் என்ற கருத்து காங்கிரஸ் மேலிட தலைவர்களிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு முக்கிய காரணமாக நடிகை கரீனா கபூர் மறைந்த கிரிக்கெட் வீரர் மன்சூர்அலிகான் பட்டோடியின் மருமகளாக இருப்பது சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

    மன்சூர் அலிகான் பட்டோடி- நடிகை சர்மிளா தாகூர் தம்பதியரின் மகனான சைப்அலிகானை, நடிகை கரீனா கபூர் திருமணம் செய்துள்ளார். எனவே பட்டோடி குடும்பத்தின் போபால் வாரிசுகளில் ஒருவராக கரீனா கபூர் கருதப்படுகிறார். இந்த அந்தஸ்துடன் இருப்பதால் போபால் நகர மக்களின் ஆதரவைப் பெற முடியும் என்று உள்ளூர் காங்கிரஸ் தலைவர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

    போபால் நகரில் பிறந்த மன்சூர்அலிகான் பட்டோடி, போபால் நகரின் நவாப் என்ற கவுரவத்துடன் வாழ்ந்தார். போபால் மக்கள் இவரை செல்லமாக “டைகர் பட்டோடி” என்றழைத்தனர். 21 வயதில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக பொறுப்பேற்ற பட்டோடி “உலகின் மிகச் சிறந்த கிரிக்கெட் பீல்டர்” என்ற சிறப்பை பெற்றார்.

    இந்தியாவுக்காக 46 டெஸ்ட் ஆட்டங்களில் முத்திரைப் பதித்த பட்டோடி 137 முதல் தர டெஸ்டுகளிலும் ஆடியுள்ளார். கிரிக்கெட்டில் பல சாதனை படைத்து ஓய்வு பெற்ற அவரை 1991-ம் ஆண்டு தேர்தலின்போது காங்கிரஸ் கட்சி போபால் எம்.பி. தொகுதியில் களம் இறக்கியது.

    போபால் மண்ணின் மைந்தர் என்பதால் எளிதில் பட்டோடி வெற்றி பெறுவார் என்று கருதப்பட்டது. ஆனால் 2 லட்சம் வாக்குகளைப் பெற்ற போதிலும் பா.ஜனதா வேட்பாளர் சுசீல்சந்திர வர்மாவிடம் சுமார் 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றுப் போனார்.



    அதன் பிறகு பட்டோடி குடும்பத்தினர் யாரும் போபால் தொகுதியில் போட்டியிடவில்லை. இந்த நிலையில் வரும் பாராளுமன்ற தேர்தலில் பட்டோடி மருமகளான நடிகை கரீனா கபூரை களம் இறக்க காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கருதுகிறார்கள்.

    தற்போது மத்திய பிரதேசத்தில் அரசியல் சூழ்நிலைகள் மாறி உள்ளதால் கரீனா கபூரை வெற்றி பெற செய்ய முடியும் என்று காங்கிரஸ் தலைவர்கள் நம்புகிறார்கள். #KareenaKapoor #Bhopal #Congress

    பிரபல பாலிவுட் நடிகை கரீனா கபூர், தன்னுடைய குழந்தையை கவனிக்கும் பெண்ணுக்கு லட்ச கணக்கில் சம்பளம் கொடுத்து வருகிறார். #KareenaKapoor
    பிரபல இந்தி நடிகை கரீனா கபூரும், நடிகர் சயீப் அலிகானும் காதல் திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு தைமூர் அலிகான் என்ற மகன் இருக்கிறான். இந்த குழந்தையை கவனித்துக்கொள்ள கரீனா கபூர் பிரத்யேகமாக பெண் ஒருவரை நியமித்து உள்ளார். இதில் விசேஷம் என்னவென்றால் அந்த குழந்தையை பார்த்துக்கொள்ளும் பெண்ணுக்கு மாதம் ரூ.1½ லட்சம் சம்பளம் கொடுக்கிறார். 

    குழந்தையை கவனித்துக்கொள்ள இந்த பெண்ணை தேர்வு செய்யும் முன்பு பெரிய அளவில் நேர்முக தேர்வு நடத்தினார். நிறைய குழந்தை வளர்ப்பு நிபுணர்களெல்லாம் இதில் கலந்துகொண்டனர். அவர்களில் இருந்து கடைசியாக இந்த பெண்ணை தேர்வு செய்து இருக்கிறார். அவருக்கு மாதத்துக்கு ரூ.1½ லட்சம் சம்பளம் பேசி உள்ளார்.

    ஒரு வினாடிகூட விலகாமல் குழந்தையை அவர் கண்ணும் கருத்துமாக பார்த்துக்கொள்ள வேண்டும். கரீனா எங்கு போனாலும் குழந்தையோடு சேர்ந்து அந்த பெண்ணும் செல்ல வேண்டும். வெளிநாட்டுக்கு போனாலும் கூட உடன் போகவேண்டும். இதற்காக சம்பளம் தவிர்த்து சிறப்பு அலவன்சும் நிறைய கொடுக்கிறார்.

    படப்பிடிப்பை முடித்துக்கொண்டு கரீனா வீட்டுக்கு வந்ததும் அந்த பெண் அவரது வீட்டுக்கு செல்ல தனியாக காரும், டிரைவரும் ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார். இவ்வளவு வசதி செய்துகொடுத்து இருப்பது ஆச்சரியமாக தெரியலாம். ஆனால் பிரபலங்கள் வீடுகளில் இதெல்லாம் சகஜம் என்கின்றனர்.
    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை தான் விரும்பியதாக இந்தி நடிகை கரீனா கபூர் தான் எழுதிய புத்தகத்தில் தெரிவிதுள்ளார். #KareenaKapoor #RahulGandhi #Marry
    புதுடெல்லி:

    பிரபல இந்தி நடிகை கரீனா கபூர், பிரபல இந்தி நடிகர் சயீப் அலிகானை காதல் திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்த தம்பதிக்கு குழந்தையும் உள்ளது.

    ஆனால், சயீப் அலிகான் மீது காதல்வயப்படுவதற்கு முன்பு, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை கரீனா கபூர் விரும்பி உள்ளார். இந்த தகவலை ஒரு பத்திரிகையாளர் தெரிவித்துள்ளார். அவர், சோனியா காந்தி குடும்பத்துக்கும், கரீனா கபூர் குடும்பத்துக்கும் மிகவும் நெருக்கமானவர்.

    இரு குடும்பங்களைப் பற்றியும் தான் எழுதிய புத்தகத்தில் அவர் இதை தெரிவித்துள்ளார். கடந்த 2002-ம் ஆண்டுவாக்கில், இரு குடும்பங்களும் நெருங்கி பழகி வந்துள்ளன. அப்போது, ராகுல் காந்தி, எம்.பி. ஆகவில்லை. அவர் மீதான தனது விருப்பத்தை வெளிப்படுத்திய கரீனா கபூர், ராகுலுடன் ஊர் சுற்ற ஆர்வமாக இருப்பதாக கூறினார்.

    அதுபோல், ராகுல் காந்தியும் நடிகை கரீனா கபூர் நடித்த படங்களை பார்ப்பதில் ஆர்வம் காட்டினார். முதல் நாளிலேயே அந்த படங்களை பார்த்து விடுவார் என்று அந்த பத்திரிகையாளர் தனது புத்தகத்தில் கூறியுள்ளார்.

    ஆனால், இந்த தகவல்களை நடிகை கரீனா கபூர் தற்போது மறுத்துள்ளார். “அவை அனைத்தும் இரு குடும்பங்களும் நெருக்கமாக பழகிய கடந்த கால நிகழ்வுகள்” என்று அவர் கூறினார்.  #KareenaKapoor #RahulGandhi #Marry
    இந்தி பட உலகில் முன்னணி நடிகையாக இருக்கும் கரீனா கபூர், தனது குடும்பத்தினருக்கு சொந்தமான ஸ்டூடியோவை விற்பதால் கண் கலங்கி இருக்கிறார். #KareenaKapoor
    இந்தி பட உலகில் புகழ் பெற்றது கபூர் குடும்பம். இந்த குடும்பத்தை சேர்ந்த நடிகரும் தயாரிப்பாளருமான ராஜ்கபூரால் 1948–ம் ஆண்டு உருவாக்கப்பட்டது ஆர்.கே. ஸ்டூடியோ. மும்பையில் 2 ஏக்கர் பரப்பளவில் இது அமைந்துள்ளது.

    இந்தியில் வெற்றிகரமாக ஓடி வசூல் சாதனைகள் நிகழ்த்திய பாபி, சத்யம் சிவம் சுந்தரம், ராம் தேரி கங்கா மெய்லி, மேரே நாம் ஜோக்கர் உள்பட நூற்றுக்கணக்கான படங்களின் படப்பிடிப்புகள் இங்கு நடந்துள்ளன.

    70 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த ஸ்டூடியோவில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தீவிபத்து ஏற்பட்டது. படப்பிடிப்பு அரங்குகள் எரிந்து நாசமாயின. அதன்பிறகு அங்கு படப்பிடிப்புகள் நடப்பது குறைந்து போனது. ஸ்டூடியோவை மீண்டும் சரிசெய்ய கோடிக்கணக்கில் செலவாகும் என்பதால் அதை விற்றுவிட கபூர் குடும்பத்தினர் முடிவு செய்தனர்.



    இந்த ஸ்டூடியோ விற்பனைக்கு வருவதாக இப்போது அறிவிக்கப்பட்டு உள்ளது. இது அந்த குடும்பத்தை சேர்ந்த பிரபல நடிகை கரீனா கபூருக்கு வேதனையை அளித்துள்ளது. இவர் ராஜ்கபூரின் பேத்தியும் நடிகர் ரிஷிகபூரின் உடன்பிறந்த சகோதரரான ரந்தீர்கபூரின் மகளும் ஆவார். இந்தி நடிகர் சயீப் அலிகானை திருமணம் செய்துள்ளார்.

    கரீனா கபூர் கூறும்போது, ‘‘ஆர்.கே. ஸ்டூடியோ எனக்கு மிகவும் பிடித்தமான இடம். அந்த ஸ்டூடியோவுக்குள் சிறுவயதில் நான் விளையாடிய நினைவுகள் இன்னும் மனதில் இருக்கிறது. ஸ்டூடியோவை விற்க முடிவு செய்தது வருத்தமாக இருக்கிறது. ஆனாலும் இது எனது குடும்பத்தினர் முடிவு என்பதால் என்னால் எதுவும் கூற முடியவில்லை’’ என்றார்.
    ×