search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "vasundhara raje"

    • ஐந்து மாநில தேர்தலில் மூன்றில் பா.ஜனதா வெற்றி பெற்றது.
    • மத்திய பிரதேச மாநில முதல்வராக மோகன் யாதவ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், தெலுங்கானா, மிசோரம், ராஜஸ்தான் ஆகிய ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் கடந்த 3-ந்தேதி வெளியாகின. மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் மாநிலங்களில் பா.ஜதனா ஆட்சியை பிடித்தது.

    என்றபோதிலும் முதலமைச்சரை தேர்வு செய்வதில் அந்த கட்சி தொடர்ந்து ஆலோசனை நடத்தியது. இதனால் ஒரு வாரத்திற்கு மேலாகியும் இன்னும் பதவி ஏற்பு விழா நடைபெறவில்லை. சத்தீஸ்கரில் சில தினங்களுக்கு முன் முதலமைச்சர் தேர்வு செய்யப்பட்டார்.

    மத்திய பிரதேச மாநிலத்தில் நேற்று தேர்வு செய்யப்பட்டது. ராஜஸ்தானில் இன்னும் தேர்வு செய்யப்படவில்லை. இந்த நிலையில்தான் இன்று மாலை பா.ஜனதா எம்.எல்.ஏ.-க்கள் கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்த கூட்டத்தில் மத்திய பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ள பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங், தேசிய துணை தலைவர் சரோஜ் பாண்டே, தேசிய பொது செயலாளர் வினோத் டவ்தே ஆகிய துணை பார்வையாளர்களும் கலந்து கொள்ள இருக்கின்றனர்.

    இந்த கூட்டத்தில் முதலமைச்சர் யார் என்பது தேர்வு செய்யப்படும் என கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

    ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே, மத்திய மந்திரிகள் அர்ஜூன் ராம் மெஹ்வால், கஜேந்திர சிங் ஷெகாவத், அஷ்வினி வைஷ்ணவ் ஆகியோர் முதல்வர் பதவி போட்டியாளர்களில் முன்னணியில் இருக்கிறார்கள்.

    ராஜஸ்தானில் 199 சட்டமன்ற இடங்களுக்கு தேர்தல் நடைபெற்றது. இதல் பா.ஜனதா 115 இடங்களில் வெற்றி பெற்றது. வேட்பாளர் மரணம் காரணமாக ஒரு தொகுதியில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

    • மத்திய பிரதேசத்தில் சிவராஜ் சிங் சவுகான் மீண்டும் முதலமைச்சர் ஆவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
    • ராஜஸ்தானில் வசுந்தரா ராஜே சிந்தியா தேர்வு செய்யப்படலாம் எனத் தெரிகிறது.

    நடந்து முடிந்த 5 மாநில சட்டசபை தேர்தலில் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மாநிலங்களில் பா.ஜனதா அமோக வெற்றி பெற்றது.

    பெரும்பாலும் மாநில தேர்தலின்போது பா.ஜனதா முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பது குறிப்பிடுவதில்லை. கட்சியின் கொள்கை, பிரதமர் மோடியின் பிம்பம் ஆகிவற்றை முன்னிறுத்திதான் தேர்தலை சந்திக்கிறது.

    மத்திய பிரதேச மாநிலத்தில் சிவராஜ் சிங் சவுகான் முதலமைச்சராக இருக்கிறார். அவர்தான் தொடர்ந்து முதலமைச்சராக பதவி ஏற்பார் என எதிர்பார்க்கப்பட்டது.

    ராஜஸ்தானில் வசுந்தரா ராஜே சிந்தியா தேர்வு செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படடது. சத்தீஸ்கரில் மட்டும் யாரை தேர்வு செய்வார்கள் என்பது கேள்விக்குறியாக இருந்தது.

    இதனால் 3-ந்தேதி தேர்தல் முடிவடைந்த ஒரிரு நாட்களுக்குள் முதலமைச்சர்கள் யார் என்பது தெரிந்துவிடும் என எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால் ராஜஸ்தான், மத்திய பிரதேசத்தில் புதுமுகம் அல்லது மாற்று நபருக்கு வாய்ப்பு கொடுக்க கட்சி மேலிடம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது. இதனால் அந்தந்த மாநில தலைவர்கள் ஒன்றிரண்டு பெயர்களை டெல்லிக்கு அனுப்பி வைத்தனர்.

    இருந்த போதிலும் வசுந்தரா ராஜே சிந்தியா ராஜஸ்தானில் முதல் தேர்வாக இருந்து வருகிறார். மத்திய பிரதேசத்தில் சிவராஜ் சிங் சவுகான் முதல் தேர்வாக இருந்து வருகிறார்.

    டெல்லியில் பா.ஜனதா உயர்மட்டக்குழு ஆலோசனை நடத்தி வந்தது. முதலமைச்சர்கள் யார் என்பதை பிரதமர் மோடி அறிவிப்பார் எனத் தெரிவிக்கப்பட்டது. இதனால் நேற்று மாலை அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால், இதுவரை முதலமைச்சர்கள் பட்டியல் தயாராகவில்லையாம். பா.ஜனதா இன்று மூன்று மாநிலங்களுக்கும் பார்வையாளர்களை நியமிக்க இருக்கிறது. இந்த பார்வையாளர்கள் வெற்றி பெற்ற பா.ஜனதா எம்.எல்.ஏ.-க்களுடன் ஆலோசனை நடத்தி அதன்பின் மேலிடத்திற்கு தகவல் தெரிவிப்பார்கள். பின்னர் கட்சி மேலிடம் முதலமைச்சர்கள் பட்டியலை வெளியிடும்.

    தெலுங்கானாவில் காங்கிரஸ் ஆட்சியை பிடித்த நிலையில், நேற்ற ரேவந்த் ரெட்டி முதலமைச்சராக பதவி ஏற்றுக் கொண்டார்.

    • கோபிசந்த் மீனா, சங்கர் சிங் ராவத் உள்பட 20-க்கும் மேற்பட்ட பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் வசுந்தரா ராஜேவின் வீட்டிற்கு சென்றுள்ளனர்.
    • ராஜஸ்தான் பா.ஜ.க. தலைவர் சிபி ஜோஷியை தேர்தல் பொறுப்பாளராக இருந்த அருண் சிங் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

    ராஜஸ்தானில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் காங்கிரசை வீழ்த்தி பா.ஜ.க. அமோக வெற்றி பெற்றுள்ளது. அம்மாநிலத்தில் புதிய முதல் மந்திரியை தேர்வு செய்வதில் பாரதிய ஜனதா தீவிரம் காட்டி வருகிறது. தேர்தல் பிரசாரத்தின்போது முதல்-மந்திரியாக யாரும் முன்னிறுத்தப்படவில்லை.

    இந்நிலையில் தேர்தலில் அபார வெற்றி பெற்று கொண்டாட்டங்கள் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து புதிய முதல்-மந்திரியாக யாரை தேர்ந்தெடுப்பது என்பது பற்றி கட்சியின் உயர்மட்ட குழு ஆலோசனை நடத்தி வருகிறது.

    முன்னாள் முதல்-மந்திரி வசுந்தரா ராஜே, முன்னாள் ஜெய்ப்பூர் அரச குடும்பத்தை சேர்ந்த தியா குமாரி,

    எம்.பி. பாபா பாலக்நாத், மத்திய மந்திரி கஜேந்திர சகாவாத் ஆகியோர் முதல்-மந்திரி பதவிக்கான பரிசீலனையில் உள்ளனர்.

    இந்நிலையில் கோபிசந்த் மீனா, சங்கர் சிங் ராவத் உள்பட 20-க்கும் மேற்பட்ட பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் வசுந்தரா ராஜேவின் வீட்டிற்கு சென்றுள்ளனர். அவர்கள் முதல்-மந்திரியாக வசுந்தரா ராஜேவுக்கு ஆதரவு தெரிவிப்பதாக கூறப்படுகிறது.

    இதுவரை முதல்- மந்திரியை கட்சி தலைமை தேர்வு செய்யவில்லை. இந்நிலையில் வசுந்தரா ராஜே வீட்டுக்கு சென்ற 20 எம்.எல்.ஏ.க்களும் டெல்லி சென்று மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவையும் சந்தித்துள்ளனர்.

    இதுகுறித்து பா.ஜ.க. எம்.எல்.ஏ. சுரேஷ் ராவத் கூறுகையில், வசுந்தரா ராஜே தனது பதவி காலத்தில் முதல்-மந்திரியாக சிறப்பாக செயல்பட்டார் என்றார்.

    இதற்கிடையே ராஜஸ்தான் பா.ஜ.க. தலைவர் சிபி ஜோஷியை தேர்தல் பொறுப்பாளராக இருந்த அருண் சிங் சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது முதலமைச்சர் பதவி குறித்து கேட்டபோது, "முதலமைச்சர் யார் என்பதை உயர்மட்ட குழு முடிவு செய்யும். அதை அனைவரும் ஏற்றுக்கொள்வார்கள்" என்றார்.

    புதிய முதல்-மந்திரி யார்? என்பது குறித்து பா.ஜ.க. தலைமை இன்று அறிவிப்பு வெளியிடும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கடந்த தேர்தலை விட அதிகமாக 47 இடங்களில் பா.ஜனதா முன்னிலைப் பெற்றுள்ளது.
    • வசுந்தரா ராஜே சிந்தியா முதலமைச்சர் போட்டியில் இருக்கிறார்.

    4 மாநில தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. ராஜஸ்தானில் மாறிமாறிதான் தேர்தல் முடிவு இருந்துள்ளது. கடந்த முறை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றதால், இந்த முறை பா.ஜனதா வெற்றி பெறும் எனக் கூறப்பட்டது.

    பா.ஜனதா ஆட்சியை பிடிக்கும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளும் தெரிவித்தன. என்றாலும், மக்கள் எங்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளனர். நாங்கள் மீண்டும் ஆட்சியை பிடிப்போம் என அசோக் கெலாட் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் கூறினார்கள்.

    ஆனால், தேர்தல் முடிவு பா.ஜனதாவுக்கு ஆதரவாக அமைந்துள்ளது. 199 தொகுதிகளில் பா.ஜனதா 112 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. இதனால் பா.ஜனதா தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க இருக்கிறது.

    ராஜஸ்தானில் முதல்வர் வேட்பாளரை முன்னிறுத்தாமல் பா.ஜனதா தேர்தலை சந்தித்தது. இதனால் முதலமைச்சர் யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது.

    கடந்த முறை முதலமைச்சராக இருந்த வசுந்தரா ராஜே சிந்தியாவை பா.ஜனதா ஓரங்கட்டுகிறது என தேர்தல் பிசாரத்தின்போது தெரிவிக்கப்பட்டது. அதை நிரூபிக்கும் வகையில் பிரதமர் மோடியின் தொடக்கக்கால பிரசாரத்தில் வசுந்தரா ராஜே சிந்தியா கலந்து கொள்ளவில்லை. கடைசி கட்டத்தில் பிரமதர் மோடியுடன் ஒரு மேடையில் தோன்றினார். இதனால் வசுந்தரா ராஜே சிந்தியா மீண்டும் முதலமைச்சராக பதவி ஏற்க வாய்ப்புள்ளது. இவர் ஜல்ராபதான் தொகுதியில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளார்.

     அதேநேரத்தில் பா.ஜனதா எம்.பி.யான தியா குமாரிக்கு வித்யாநகர் தொகுதியில் போட்டியிட கட்சி மேலிடம் வாய்ப்பு வழங்கியது. இவரும் அதிக வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளார். மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தும் தேர்தல் களத்தில் உள்ளார்.  இவர்கள் மூன்று பேரில் வசுந்தரா ராஜே, கஜேந்திர சிங் ஷெகாவத் இடையே கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்பட்டது.

    இதற்கிடையே சாமியாரும், அல்வார் தொகுதி எம்.பி.யுமான மஹந்த் பாலக்நாத் ராஜஸ்தான் முதலமைச்சர் பதவிக்கு முன்னணி போட்டியாளராக இருப்பார் என தகவல் வெளியாகியுள்ளது.

    திஜாரா தொகுதியில் போட்டியிடும் பாலக்நாத் காங்கிரஸ் வேட்பாளரை விட மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் முன்னிலைப் பெற்றுள்ளார்.

    இன்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்குவதற்கு முன் 40 வயதான பாலக்நாத் சிவன் கோவில் சென்று தரிசனம் மேற்கொண்டார். அப்போது, பா.ஜனதா 120 தொகுதிகளுக்கு மேல் கைப்பற்றும் எனத் தெரிவித்தார்.

    வாக்கு எண்ணிக்கைக்கு முந்தைய நாளான நேற்று பாலக்நாத், அமைப்பு பொதுச்செயலாளர் பி.எல். சந்தோஷை நேற்று பா.ஜனதா தலைமைக்கழகத்தில் சந்தித்துள்ளார். அவரிடம் சந்தோஷ் உடனான சந்திப்பு குறித்து கேட்டபோது, இது தனிப்பட்ட சந்திப்பு என முடித்துக் கொண்டார்.

     மேலும், முதலமைச்சர் பதவியை பொறுத்தவரையில் பா.ஜனதாவின் முகம் பிரதமர் மோடி. அவரது தலைமையின் கீழ் நாங்கள் தொடர்ந்து பணியாற்றுவோம். முதலமைச்சர் யார் என்பதை கட்சி முடிவு செய்யும். எம்.பி.யாக மக்களுக்கு சேவை புரிய விரும்புகிறேன். அதனால் நான் திருப்தி அடைந்துள்ளேன்" என்றார்.

    உத்தர பிரதேசத்தில் யாரும் எதிர்பார்க்காத வகையில் யோகி ஆதித்தயநாத்தை பா.ஜனதா முதலமைச்சராக்கியது. அதற்கு முன் அவர் எம்.பி.யாகத்தான் இருந்தார். யோகி ஆதித்யநாத் நாத் சமூகத்தை சேர்ந்தவர். பாலக்நாத்தும் நாத் சமூகத்தை சேர்ந்தவர். அல்வாரில் அவருக்கு மிகப்பெரிய ஆதரவு உள்ளது.

    6 வயதிலேயே சன்னியாசியாக சென்றார். அவரது குடும்பத்தினர் அவரை துறவியாக்க வேண்டும் என முடிவு செய்தனர். அதன்படி துறவியானார்.

    • முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜேவு ஓரங்கட்டப்பட்டதாக தகவல் வெளிவந்த வண்ணம் இருந்தது.
    • பா.ஜனதா வெற்றி பெற்றால், முதல்வர் வேட்பாளர்களில் ஒருவராக கருதப்பட வாய்ப்புள்ளது.

    ராஜஸ்தான் மாநிலத்தில் வருகிற 25-ந்தேதி சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. நாளையுடன் தேர்தல் பிரசாரம் முடிவடையும் நிலையில் பா.ஜனதாவின் தேசிய தலைவர்கள் நேற்று சூறாவளி பிரசாரம் மேற்கொண்டனர்.

    பரான் மாவட்டத்தில் உள்ள அன்ட்டா-வில் நடைபெற்ற பேரணியில் பிரதமர் மோடியுடன் வசுந்தர ராஜே சிந்தியா கலந்து கொண்டார். இது பா.ஜனதா உயர் தலைவர்களுக்கும், அவருக்கும் இடையில் பிரச்சினைகள் ஏதும் இல்லை. அனைத்தும் நன்றாகவே செல்கிறது என்ற தகவலை கொடுப்பதாக கருதப்படுகிறது.

    ராஜஸ்தான் தேர்தல் தேதி அறிவித்த பிறகு, பிரதமர் மோடி வசுந்தர ராஜே சிந்தியாவுடன் ஒரே மேடையில் பிரசாரம் செய்வது இதுதான் முதன்முறை. வசுந்தரா ராஜேவை பா.ஜனதா உயர் தலைவர்கள் புறக்கணிப்பதாகவும், முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்தப்பட வாய்ப்பு இல்லை எனவும் கருதப்பட்டது. இந்த நிலையில்தான் மோடியுடன் பிரசாரம் மேற்கொண்ட நிலையில் வசுந்தர ராஜே சிந்தியாவும் முதல்வர் வேட்பாளர் போட்டியில் இருப்பதாக கருதப்படுகிறது.

    பிரசாத்தின்போது வசுந்தர ராஜே சிந்தியா, "2024 மக்களவை தேர்தலில் வெற்றி பெற்று பிரதமர் மோடி ஹாட்ரிக் வெற்றி பெறுவார் என நாட்டு மக்கள் ஆர்வமாக காத்திருக்கின்றனர். மோடியின் பலத்தை ஒட்டுமொத்த நாடும் அங்கீகரித்துள்ளது. தற்போது ஒட்டுமொத்த உலகமும் அவரது தலைமையை ஏற்றுக் கொண்டிருக்கிறது" என்றார்.

    பாஜக தலைவர்களான சிவராஜ்சிங் சவுகான், ரமண்சிங் மற்றும் வசுந்தரராஜே சிந்தியா ஆகியோரை தேசிய துணை தலைவர்களாக நியமனம் செய்துள்ளது. #BjP #NationalVicePresident #ShivrajSinghChouhan #RamanSingh #VasundharaRaje
    புதுடெல்லி:

    சமீபத்தில் ஐந்து மாநில சட்டசபை தேர்தல்களில் பாஜக ஆட்சியில் இருந்த மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. இதையடுத்து, ம.பி., ராஜஸ்தான் சத்தீஸ்கர் மாநில முதல் மந்திரிகள் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர்.



    இந்நிலையில், சிவராஜ்சிங் சவுகான், ரமண்சிங் மற்றும் வசுந்தரராஜே சிந்தியா ஆகியோரை பாஜக தேசிய துணை தலைவர்களாக நியமனம் செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. #BjP #NationalVicePresident #ShivrajSinghChouhan #RamanSingh #VasundharaRaje
    ராஜஸ்தான் மாநிலத்திற்கான தேர்தல் அறிக்கையை பாஜக இன்று வெளியிட்டது. அதில், பல்வேறு கவர்ச்சிகரமான வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன. #RajastanPolls #BJPManifesto
    ஜெய்ப்பூர்:

    பாஜக ஆளும் ராஜஸ்தான் மாநிலத்தில் வரும் டிசம்பர் 7-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. பாஜகவிடம் இருந்து ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தீவிர களப்பணியாற்றி வருகின்றன. அதேசமயம் ஆட்சியைத் தக்க வைக்க பாஜக தனது பிரசாரத்தை முடுக்கி விட்டுள்ளது. ஆட்சியின் சாதனைகள் மற்றும் நிறைவேற்றப்பட்ட வாக்குறுதிகளை மக்களிடம் எடுத்துக் கூறி வாக்கு சேகரித்து வருகின்றனர்.

    இந்நிலையில், பாஜகவின் தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்பட்டது. ஜெய்ப்பூரில் நடந்த நிகழ்ச்சியில், மத்திய மந்திரிகள் அருண் ஜெட்லி, பிரகாஷ் ஜவடேகர், மாநில முதல்வர் வசுந்தரா ராஜே ஆகியோர் வெளியிட்டனர். நிகழ்ச்சியில் கட்சியின் பல்வேறு தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் கலந்துகொண்டனர்.


    பாஜகவின் தேர்தல் அறிக்கையில் பல்வேறு கவர்ச்சிகரமான வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன. அடுத்த ஐந்து ஆண்டுகளில் 50 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும், ஒவ்வொரு ஆண்டும் அரசுத்துறையில் 30 ஆயிரம் பேருக்கு வேலை வழங்கப்படும், தகுதிவாய்ந்த வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் 5000 ரூபாய் வரை உதவித் தொகை வழங்கப்படும் என தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    நிகழ்ச்சியில் வசுந்தரா ராஜே பேசும்போது, 2013 சட்டமன்றத் தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளில் 95 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றியிருப்பதாக குறிப்பிட்டார். #RajastanPolls #BJPManifesto
    ராஜஸ்தான் சட்டசபை தேர்தலில் முதல் மந்திரி வசுந்தரா ராஜே சிந்தியாவை எதிர்த்து மத்திய முன்னாள் மந்திரி ஜஸ்வந்த் சிங் மகன் மன்வேந்திரா சிங் காங்கிரஸ் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். #JaswantSingh #VasundharaRaje #ManvendraSingh #Rajasthanpolls
    ஜெய்ப்பூர்:

    200 இடங்களை கொண்ட ராஜஸ்தான் சட்டசபைக்கு டிசம்பர் 7-ம்தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் மீண்டும் ஆட்சியை தக்கவைத்து கொள்ள ஆளும் பா.ஜ.க.வும், இழந்த ஆட்சியை கைப்பற்ற எதிர்க்கட்சியான காங்கிரசும் முனைப்பு காட்டி வருகின்றன.

    காங்கிரஸ் கட்சி சார்பில் இந்த தேர்தலில் போட்டியிடும் 184 வேட்பாளர்களின் பெயர்களை கொண்ட இரு பட்டியல்களாக அக்கட்சியின் தலைமை வெளியிட்டுள்ளது.

    இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள முன்னாள் முதல் மந்திரி அசோக் கேலாட், சர்தார்பூர் தொகுதியிலும், அம்மாநில காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட், டோங்க் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.

    இதேபோல், பா.ஜ.க.வும் மூன்று பட்டியல்களின் மூலம் தங்கள் கட்சியை சேர்ந்த 170 வேட்பாளர்களின் பெயர்களை அறிவித்துள்ளது.

    அம்மாநில முதல் மந்திரி வசுந்தரா ராஜே சிந்தியா ஜல்ராபட்டான் தொகுதியில் இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அவரை எதிர்த்து போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளராக முன்னாள் மந்திரி ஜஸ்வந்த் சிங் மகன் மன்வேந்திரா சிங் அறிவிக்கப்பட்டுள்ளார்.



    தற்போது பார்மர் தொகுதி எம்.எல்.ஏ.வாக பதவி வகித்துவரும் மன்வேந்திரா சிங்குக்கு மீண்டும் சீட் வழங்கப்படாததால் அவர் பா.ஜ.க.வில் இருந்து விலகி சமீபத்தில் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். இந்நிலையில், வசுந்தரா ராஜே சிந்தியாவை எதிர்த்து ஜல்ராபட்டான் தொகுதியில் மோதும் வாய்ப்பு இவருக்கு அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. #JaswantSingh #VasundharaRaje #ManvendraSingh #Rajasthanpolls
    ராஜஸ்தான் மாநில சட்டசபை தேர்தலில் முதல் மந்திரி வசுந்தரா ராஜே சிந்தியா இன்று வேட்பு மனுவை தாக்கல் செய்தார். #VasundharaRaje #Rajasthanpolls
    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தான் மாநில சட்டசபைக்கு டிசம்பர் 7-ம்தேதி நடைபெறும் தேர்தலில் போட்டியிடும் 152 வேட்பாளர்களின் பெயர்களை  கொண்ட முதல் பட்டியலை காங்கிரஸ் தலைமை வெளியிட்டது.

    200 இடங்களை கொண்ட ராஜஸ்தான் சட்டசபைக்கு டிசம்பர் 7-ம்தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் மீண்டும் ஆட்சியை தக்கவைத்து கொள்ள ஆளும் பா.ஜ.க.வும், இழந்த ஆட்சியை கைப்பற்ற எதிர்க்கட்சியான காங்கிரசும் முனைப்பு காட்டி வருகின்றன.

    காங்கிரஸ் கட்சி சார்பில் இந்த தேர்தலில் போட்டியிடும் 184 வேட்பாளர்களின் பெயர்களை  கொண்ட இரு பட்டியல்களாக அக்கட்சியின் தலைமை வெளியிட்டுள்ளது.

    இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள முன்னாள் முதல் மந்திரி அசோக் கேலாட், சர்தார்பூர் தொகுதியிலும், அம்மாநில காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட், டோங்க் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.



    இதேபோல், பா.ஜ.க.வும் மூன்று பட்டியல்களின் மூலம் தங்கள் கட்சியை சேர்ந்த 170  வேட்பாளர்களின் பெயர்களை அறிவித்துள்ளது.

    இந்நிலையில், அம்மாநில  முதல் மந்திரி வசுந்தரா ராஜே சிந்தியா ஜல்ராபட்டான் தொகுதியில் இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

    கடந்த 1985-ம் ஆண்டு முதன்முதலாக தோல்பூர் தொகுதியில் சட்டசபை தேர்தலை சந்தித்து வெற்றிபெற்ற வசுந்தரா, பின்னர் 1989 முதல் 2003 வரை ஜல்வார் பாராளுமன்ற தொகுதியில் தொடர்ந்து 5 முறை போட்டியிட்டு வெற்றி பெற்றவர்.

    தற்போது, ஜல்ராப்பட்டான் தொகுதி எம்.எல்.ஏ.வாக இவர் வெற்றி பெற்றால் ஐந்தாவது முறையாக அம்மாநில சட்டசபை உறுப்பினராக பொறுப்பேற்பார் என்பது குறிப்பிடத்தக்கது.   #VasundharaRaje #Rajasthanpolls
    தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு சற்றுமுன்பு ராஜஸ்தான் பாரதிய ஜனதா முதல் மந்திரி வசுந்தரா ராஜே கிராமப்புற விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படும் என்று அறிவித்தார். #BJP #VasundharaRaje
    அஜ்மீர்:

    200 தொகுதிகளை கொண்ட ராஜஸ்தான் மாநில சட்டசபைக்கு டிசம்பர் 7-ந்தேதி தேர்தல் நடக்கிறது.

    இதற்கான தேர்தல் தேதியை தேர்தல் கமி‌ஷன் நேற்று அறிவித்தது. இதைத் தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது.

    தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு சற்றுமுன்பு ராஜஸ்தான் பா.ஜனதா முதல்-மந்திரி வசுந்தராராஜே, “கிராமப்புற விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படும்” என்று அறிவித்தார்.

    பிரதமர் நரேந்திரமோடி முன்னிலையில் அஜ்மீரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் இதை தெரிவித்தார்.



    விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பு ஆக்குவதே மோடியின் குறிக்கோளாக இருக்கிறது. இதன்படி கிராமப்புற விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படும். இதற்கான பணிகள் தொடங்கிவிட்டன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    வசுந்தராராஜே தேர்தல் தேதி தெரிவிப்பதற்கு 1 மணி நேரத்துக்கு முன்பு இலவச மின்சார திட்டத்தை வெளியிட்டார். தேர்தல் தேதி 3 மணியளவில் அறிவிக்கப்பட்டது. அவர் 2 மணிக்கு இதை தெரிவித்தார். 12 லட்சம் விவசாயிகள் பயன் அளிக்கும் வகையில் இலவச மின்சார திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

    ராஜஸ்தான் மாநிலத்தில் பா.ஜனதா ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள போராடுகிறது. காங்கிரஸ் மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் ஆர்வத்துடன் இருக்கிறது. அங்கு சமீபத்தில் நடந்த இடைத்தேர்தல்களில் ஆளும் பா.ஜனதா தோல்வியை தழுவியது.

    மக்களின் அதிருப்தியை சமாளிக்க முதல்-மந்திரி வசுந்தரா கடைசி நேரத்தில் இலவச திட்டங்களை அறிவிப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். #BJP #VasundharaRaje
    ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே அரசு அதிகாரிகளை சொந்த வேலைக்கு பயன்படுத்துவதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. #Congress #BJP #RajasthanCM #vasundharaRaje
    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தான் மாநில முன்னாள் முதல்-மந்திரியும், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளருமான அசோக் கெலாட் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    முதல்-மந்திரி வசுந்தரா ராஜே தனது சொந்த அரசியல் லாபத்துக்காக அரசு அதிகாரிகளை தவறாக பயன்படுத்துகிறார். மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி தன்மேகுமால் முதல்-மந்திரியின் முதன்மை செயலாளராக இருக்கிறார். இவரை அரசு அதிகாரி போன்று நடத்தாமல் தனிப்பட்ட முறையில் தனது சொந்த வேலைக்கு பயன்படுத்துகிறார்.

    கடந்த 4 ஆண்டுகளாக முதல்-மந்திரி வசுந்தரா ராஜே ஹெலிகாப்டரில் சுற்றி வருகிறார். அதே நேரத்தில் தன்மேகுமார் ஒரு முதல்- மந்திரி போன்று செயல்படுகிறார். அரசின் அனைத்து முடிவுகளும் அவரது உத்தரவுப்படியே நடைமுறைப்படுத்தப்படுகிறது. ஐ.ஏ.எஸ். மற்றும் அரசு உயர் அதிகாரிகளை மிரட்ட அவரை வசுந்தரா பயன்படுத்தி வருகிறார்.


    அதன்மூலம் பா.ஜனதா கட்சியினரின் விழா ஏற்பாடுகள் செய்யும் நிறுவனங்களுக்கு பல கோடி ரூபாய் வழங்கி விரையமாக்கப்பட்டுள்ளது. மேலும் வசுந்தராவின் எண்ணம் மற்றும் செயல்பாடுகளை அவர் நிறைவேற்றி வருகிறார். இதனால் கடந்த 5 ஆண்டுகளாக அரசின் செயல்பாடு ‘ஜீரோ’ ஆக உள்ளது.

    அதே நேரத்தில் பணத்தை வீணடிக்கும் நிகழ்ச்சி அல்லது விழா ஏற்பாடு செய்யும் நிறுவனங்களுக்கு ஒத்துழைப்பு அளிக்காத நேர்மையான அதிகாரிகள் குறிவைத்து பழிவாங்கப்படுகின்றனர்.

    கடந்த மாதம் இந்தியா- பாகிஸ்தான் எல்லையில் மனித சங்கிலி நடத்தப்பட்டது. அதற்காக ஹெலிகாப்டரில் இருந்து பூக்கள் கொட்டப்பட்டன. அதற்காக ரூ.21 கோடி செலவிடப்பட்டது. அதற்கு ஐ.ஏ.எஸ். அதிகாரி சுதேசன் சேத்தி மறுப்பு தெரிவித்துள்ளார். எனவே அவர் இடமாற்றம் செய்யப்பட்டார். அதேபோன்று பல அதிகாரிகள் இடமாற்றத்துக்கு ஆளாகி வருகின்றனர் என்றார். #Congress #BJP #RajasthanCM #vasundharaRaje
    ராஜஸ்தானில் தேர்தல் அறிவிப்பு வெளியாக இருப்பதால் அதற்கு முன்னதாகவே வாக்காளர்களை கவரும் வகையில் கூட்டுறவு கடன் முழுவதும் ரத்து செய்யப்படுவதாக பாஜக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. #BJP

    ஜெய்ப்பூர்:

    200 உறுப்பினர்கள் கொண்ட ராஜஸ்தான் சட்டசபையின் பதவிக் காலம் வருகிற 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் 20-ந் தேதியுடன் முடி வடைகிறது.

    எனவே இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடத்த தேர்தல் கமி‌ஷன் ஆலோசித்து வருகிறது. இந்த மாத இறுதிக்குள் தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ளது.

    அங்கு முதல்-மந்திரி வசுந்தரா ராஜே சிந்தியா தலைமையில் பா.ஜனதா ஆட்சி நடந்து வருகிறது. தேர்தலை சந்திக்க பா.ஜனதா தயாராகிவிட்டது. அக்கட்சியின் தேசிய தலைவர் அமத்ஷா தேர்தல் பிரசார ரதயாத்திரை தொடங்கியுள்ளார்.

    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று ராஜஸ்தானில் தேர்தல் பிரசாரம் தொடங்குகிறார்.

    தேர்தல் அறிவிப்பு வெளியாக இருப்பதால் அதற்கு முன்னதாகவே வாக்காளர்களை கவரும் வகையில் பல்வேறு அதிரடி அறிவிப்புகளை முதல்-மந்திரி வசுந்தரா ராஜே சிந்தியா வெளியிட்டு வருகிறார்.


    நேற்று அவர் விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி சலுகைகள் அறிவிப்பை வெளியிட்டார். அதன்படி ராஜஸ்தானில் பழங்குடியினர் வசிக்கும் மாவட்டங்கள் மற்றும் தெற்கு ராஜஸ்தான் மாவட்டங்களில் உள்ள 12 ஆயிரம் விவசாயிகள் பயன் அடையும் வகையில் அவர்களது கூட்டுறவு கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது.

    இந்த மாவட்டங்களில் விவசாயிகளின் 15 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் கூட்டுறவு வங்கிகளில் அடகு வைத்து கடன் பெற்று இருக்கிறார்கள். அவை தள்ளுபடி செய்யப்படுவதாக முதல்-மந்திரி வசுந்தரா ராஜே சிந்தியா அறிவித்துள்ளார். #BJP

    ×