search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Nomination"

    • 2021-ம் ஆண்டு மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கியில் நடந்த ரூ.25,000 கோடி ஊழல் தொடர்பாக விசாரிக்க, மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
    • இந்த ஊழல் நடந்தபோது, மகாராஷ்டிரா துணை முதல்வராக இருக்கும் அஜித் பவார் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கியில் இயக்குனராக இருந்தார்

    மகாராஷ்டிராவில் மொத்தமுள்ள 48 மக்களவைத் தொகுதிகளுக்கு 5 கட்டங்களாகத் தேர்தல் நடைபெற இருக்கிறது. ஏற்கெனவே முதற்கட்டத் தேர்தலின்போது 5 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு முடிந்துவிட்டது.

    மகாராஷ்டிராவில் வி.ஐ.பி தொகுதியாகக் கருதப்படும் பாராமதியில் சரத் பவார் மகள் சுப்ரியா சுலேயும், துணை முதல் மந்திரி அஜித் பவார் மனைவி சுனேத்ர பவாரும் போட்டியிடுகின்றனர். இந்த பாராமதி தொகுதிக்கு மே 7ஆம் தேதி மூன்றாம் கட்டத் தேர்தல் நடைபெறுகிறது.

    இந்நிலையில், மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் அஜித் பவாரின் மனைவி சுனேத்ரா பவார் மீதான ₹25,000 கோடி கூட்டுறவு வங்கி மோசடி வழக்கில், அவர் மீது குற்றமில்லை என்றும் வங்கிகளுக்கு பணம் இழப்பே இல்லை என்றும் வழக்கை மாநில பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறை மூடியுள்ளது.

    இதுகுறித்து உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா தலைவர் ஆனந்த் துபே கருத்து தெரிவித்துள்ளார். அதில், "பிரதமர் மோடி இந்தக் குற்றச்சாட்டை எழுப்பி, இது ஊழல் குடும்பம் என்று கூறினார். ஆனால், இன்று அவர் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். குற்றம் சாட்டப்பட்டு பாஜகவில் இணைந்த தலைவர்கள் அனைவரும் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் எந்த குற்றச் செயலையும் பார்க்கவில்லை என மாநில பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறை அறிக்கை சமர்ப்பித்துள்ளது" என அவர் கூறினார்.

    2021-ம் ஆண்டு மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கியில் நடந்த ரூ.25,000 கோடி ஊழல் தொடர்பாக விசாரிக்க, மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன் அடிப்படையில் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

    இந்த ஊழல் நடந்தபோது, தற்போது மகாராஷ்டிரா துணை முதல்வராக இருக்கும் அஜித் பவார் உட்பட, தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கியில் இயக்குநர்களாக இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
    • பாராமதியில் சரத் பவார் மகள் சுப்ரியா சுலேயும், அஜித் பவார் மனைவி சுனேத்ர பவாரும் போட்டியிடுகின்றனர்.

    மும்பை:

    பாராளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் நாளை (19-ம் தேதி) தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

    இதற்கிடையே, நாடு முழுவதும் நாளை முதல் கட்ட தேர்தல் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளம் உள்ளிட்ட 21 மாநிலங்களுக்கு உள்பட்ட 102 தொகுதிகளில் நடைபெறுகிறது

    இந்நிலையில், பாராமதி தொகுதியில் போட்டியிடும் அஜித் பவார் மனைவி சுனேத்ர பவார் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

    அப்போது முதல் மந்திரி ஏக்நாத் ஷிண்டே, துணை முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் உள்பட பலர் உடனிருந்தனர்.

    வி.ஐ.பி தொகுதியாகக் கருதப்படும் பாராமதியில் சரத் பவார் மகள் சுப்ரியா சுலேயும், துணை முதல் மந்திரி அஜித் பவார் மனைவி சுனேத்ர பவாரும் போட்டியிடுகின்றனர். இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    • முதற்கட்ட தேர்தலில் 102 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவுக்கு நடைபெறுகிறது.
    • 2-ம் கட்ட தேர்தல் வருகிற 26-ந்தேதி நடைபெறுகிறது.

    18-வது மக்களவை தேர்தல் வரும் 19-ந்தேதி முதல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. 19ம் தேதி முதல் ஜூன் 1ம் தேதி வரை நடைபெறும் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ம் தேதி நடக்கிறது.

    வரும் 19ம் தேதி முதற்கட்டமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்பட பல்வேறு மாநிலங்களில் 102 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவுக்கு நடைபெறுகிறது.

    இதற்கிடையே 2-ம் கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நிறைவு பெற்று பிரசாரம் நடந்து வரும் நிலையில், 2-ம் கட்ட தேர்தல் வருகிற 26-ந்தேதி நடைபெறுகிறது.

    இந்நிலையில், 94 தொகுதிகளுக்காக நடைபெறும் 3-ம் கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது. 19ம் தேதி வரை வேட்புமனுக்கள் பெறப்படுகின்றன. அவை 20ம் தேதி பரிசீலனை செய்யப்படுகின்றன. 22ம் தேதி வரை வேட்புமனுக்களை திரும்ப பெற்றுக்கொள்ளலாம். இதைத்தொடர்ந்து மே 7ம் தேதி ஓட்டுப்பதிவு நடக்கிறது.

    2-ம் கட்ட தேர்தலில் ஒத்திவைக்கப்பட்ட மத்திய பிரதேசத்தின் பேதுல் தொகுதிக்கும் மேற்படி கால அட்டவணையில் 3-ம் கட்டத்தில் தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.

    • வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை 20-ந் தேதியும், மனுக்களை திரும்ப பெற 22-ந்தேதி கடைசி நாளாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
    • 22-ந்தேதியே வேட்பாளர்கள் இறுதி பட்டியல் வெளியிடப்படும்.

    பெங்களூரு:

    கர்நாடகாவில் உள்ள 28 பாராளுமன்ற தொகுதிகளுக்கும் 2 கட்டமாக தேர்தல் நடக்கிறது. முதல் கட்டமாக 14 தொகுதிகளுக்கு வருகிற 26-ந்தேதி தேர்தல் நடக்கிறது.

    2-வது கட்டமாக பெல்காம், பாகல்கோட், விஜயபுரா, கலபுர்கி, ராய்ச்சூர், பிதார், கொப்பலா, பெல்லாரி, பாருங்கள், தார்வாட், உத்தரகன்னடம், தாவணகெரே, ஷிமோகா, சிக்கோடி ஆகிய 14 தொகுதிகளுக்கு அடுத்த மாதம் (மே) 7-ந்தேதி ஓட்டுப்பதிவு நடக்கிறது.

    இதற்கான வேட்பு மனுதாக்கல் நாளை மறுநாள் (12-ந்தேதி) தொடங்கி 19-ந்தேதி வரை நடக்கிறது. வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை 20-ந் தேதியும், மனுக்களை திரும்ப பெற 22-ந்தேதி கடைசி நாளாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினமே வேட்பாளர்கள் இறுதி பட்டியல் வெளியிடப்படும்.

    • அதே போன்று சம்பவம் தென்காசி பாராளுமன்ற தொகுதியிலும் நடந்துள்ளது.
    • வேட்புமனு தாக்கலுக்கான கடைசி நாளான நேற்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

    நெல்லை:

    ராமநாதபுரம் தொகுதியில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் சுயேட்சையாக போட்டியிட மனுத்தாக்கல் செய்தார்.

    இதனை தொடர்ந்து அவரது பெயரை போலவே பன்னீர்செல்வம் என பெயர்கொண்ட 4 பேர் சுயேட்சையாக அந்த தொகுதியில் போட்டியிட மனுத்தாக்கல் செய்தனர். இந்த சம்பவம் அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்நிலையில் அதே போன்று சம்பவம் தென்காசி பாராளுமன்ற தொகுதியிலும் நடந்துள்ளது. இந்த தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் அதன் கூட்டணி கட்சியான புதிய தமிழகம் கட்சியின் நிறுவன தலைவர் டாக்டர் க.கிருஷ்ணசாமி இரட்டை இலை சின்னத்தில் போட்டி யிடுகிறார்.

    இதனையொட்டி அவர் வேட்புமனு தாக்கலுக்கான கடைசி நாளான நேற்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

    இந்நிலையில் அவரது பெயரை போலவே பெயர் கொண்ட மேலும் 4 பேர் நேற்று சுயேட்சைகளாக மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

    அதன்படி புதிய தமிழகம் டாக்டர் கிருஷ்ணசாமியை தவிர்த்து, கேசவபுரம் கடஞ்சிகுளத்தை சேர்ந்த பா.கிருஷ்ணசாமி, சிவகிரி விஸ்வநாதபேரி காந்தி காலனியை சேர்ந்த மூ.கிருஷ்ணசாமி, சங்கரன்கோவில் கரிவலம் வந்த நல்லூரை சேர்ந்த க.கிருஷ்ணசாமி, சிதம்பராபுரம் மலையன்குளம் பகுதியை சேர்ந்த வெ.கிருஷ்ணசாமி (45) ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

    இதனால் ஒரே நாளில் கிருஷ்ணசாமி என்ற ஒரே பெயரை கொண்ட 5 பேர் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

    • அனைவரும் நாளை நல்ல நேரம் பார்த்து வேட்பு மனுவை தாக்கல் செய்ய வேண்டும் என்று தெரிவித்து உள்ளார்.
    • வருகிற 27-ந் தேதியுடன் வேட்புமனு தாக்கல் முடிவடைகிறது.

    சென்னை:

    தமிழகத்தில் பாராளுமன்றத் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. கடந்த 20-ந் தேதி முதல் வேட்பு மனு தாக்கல் நடைபெற்று வருகிறது. வருகிற 27-ந் தேதியுடன் வேட்புமனு தாக்கல் முடிவடைகிறது.

    இந்த நிலையில் அ.தி.மு.க. வேட்பாளர்கள் அனைவரும் நாளை நல்ல நேரத்தில் தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளரான எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார்.

    எந்த ஒரு காரியத்தையும் நல்ல நாளில் தொடங்குவது அ.தி.மு.க.வின் வழக்க மாகும். ஜெயலலிதா, தான் தொடங்கும் அனைத்து செயல்களையுமே நல்ல நாள், நல்ல நேரம் பார்த்தே தொடங்கி அதில் வெற்றியையும் கண்டிருக்கிறார்.

    இப்போது அவரது வழியை பின்பற்றியே எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. வேட்பாளர்கள் அனைவரும் நாளை நல்ல நேரம் பார்த்து வேட்பு மனுவை தாக்கல் செய்ய வேண்டும் என்று தெரிவித்து உள்ளார்.

    தமிழகத்தில் மொத்தம் உள்ள 39 பாராளுமன்ற தொகுதிகளில் கூட்டணி கட்சிகளுக்கு 7 இடங்களை ஒதுக்கியது போக மீதமுள்ள 32 இடங்கள் மற்றும் புதுச்சேரி தொகுதி ஆகியவற்றில் அ.தி.மு.க. வேட்பாளர்களே களம் இறங்குகிறார்கள்.

    இவர்கள் அனைவரும் திருச்சியில் இன்று எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறும் தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் பங்கேற்கிறார்கள். பின்னர் அனைவரும் நாளை தங்களது தொகுதிகளுக்கு சென்று ஒரே நேரத்தில் வேட்பு மனுக்களை தாக்கல் செய்கிறார்கள். நாளை மதியம் 12 மணி முதல் 1 மணிவரை புதன் ஓரையாகும்.

    அந்த நேரத்தில் அ.தி.மு.க. வேட்பாளர்கள் அனைவரும் வேட்பு மனுக்களை தாக்கல் செய்கிறார்கள். முன்னதாக நாளை காலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் வேட்பாளர்கள் தங்களது இஷ்ட தெய்வங்களை வணங்கிவிட்டு வேட்பு மனுக்களில் கையெழுத்து போடவும் அ.தி.மு.க. தலைமை அறிவுறுத்தி உள்ளது.

    ஜெயலலிதா பாணியில் எடப்பாடி பழனிசாமி மேற் கொண்டிருந்த இந்த ஜோதிட நம்பிக்கை அரசியலில் அவருக்கு எப்படி கை கொடுக்கப் போகிறது? என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

    • வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் வருகிற 27ந்தேதி ஆகும்.
    • 28ந்தேதி வேட்பு மனு பரிசீலனை நடைபெறும்.

    திருச்சி:

    தமிழகத்தில் அடுத்த மாதம் 19-ந்தேதி பாராளுமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இதில் போட்டியிடும் வேட்பாளருக்கான வேட்புமனுத்தாக்கல் இன்று தொடங்கியது.

    திருச்சி பாராளுமன்ற தொகுதிக்கு திருச்சி மாவட்ட கலெக்டர் தேர்தல் நடத்தும் அலுவலராகவும் திருச்சி உதவி கலெக்டர் உதவி தேர்தல் நடத்தும் அலுவலராகவும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

    இவர்களிடம் திருச்சி தொகுதியில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள் இன்று முதல் வருகிற 27-ந்தேதி வரை தினமும் காலை 11 மணியிலிருந்து மதியம் 3 மணி வரை வேட்புமனுவை தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டது.

    அதன்படி திருச்சி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட முதல் நபராக ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர் ஒருவர் இன்று காலை தேர்தல் நடத்தும் அலுவலருமான பிரதீப் குமாரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

    முன்னதாக வேட்பு மனு தாக்கல் செய்ய வரும் பொழுது தன்னுடைய கழுத்தில் ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுனர் உரிமம், ஏடிஎம் கார்டுகள் உள்ளிட்டவற்றை மாலையாக அணிந்து வந்தார்.

    அதன் பின்னர் ஸ்ரீரங்கத்தை சேர்ந்த ஒரு பெண் மனு தாக்கல் செய்தார். இதையொட்டி திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் வருகிற 27ந்தேதி ஆகும். 28ந்தேதி வேட்பு மனு பரிசீலனை நடைபெறும். 30 ந்தேதி மாலை 3 மணிக்குள் வேட்பாளர் மனுவை திரும்ப பெறலாம்.

    • நடிகர் தேவன் கேரள மக்கள் கட்சி என்ற பேரில் 2004-ல் புதிய கட்சியை தொடங்கி நடத்தி வந்தார்.
    • பாரதிய ஜனதா கட்சியின் துணைத்தலைவராக நியமிக்கப்பட்டுள்ள நடிகர் தேவனுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்தவர் நடிகர் தேவன். இவர் ஏராளமான மலையாளம் மற்றும் தமிழ் படங்களில் நடித்துள்ளார். தமிழில் இவர் பாட்ஷா படத்தில் வில்லனாக நடித்தது மிகவும் பேசப்பட்டது.

    நடிகர் தேவன் கேரள மக்கள் கட்சி என்ற பேரில் 2004-ல் புதிய கட்சியை தொடங்கி நடத்தி வந்தார். இந்நிலையில் கடந்த 2021-ம் ஆண்டு தனது கட்சியை பாரதிய ஜனதாவுடன் இணைத்தார். மேலும் பாரதிய ஜனதா கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார்.

    இந்நிலையில் கேரள மாநில பாரதிய ஜனதா கட்சியின் துணைத்தலை வராக நடிகர் தேவன் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த தகவலை மாநில தலைவர் சுரேந்திரன் அறிவித்தார். பாரதிய ஜனதா கட்சியின் துணைத்தலைவராக நியமிக்கப்பட்டுள்ள நடிகர் தேவனுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

    • இதனை தொடர்ந்து அவருக்கு ஏராளமான நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
    • மாநகர் மாவட்ட பொருளாளர் டாக்டர் இரா.பிரனேஷ் இன்பென்ட்ராஜிடம் வழங்கினார்.

    தஞ்சாவூர்:

    அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகா அர்ஜூன்கார்கே, சோனியா காந்தி, ராகுல்காந்தி ஆகியோர் ஆணைப்படி அகில இந்திய காங்கிரஸ் சேவாதள தலைவர் லால்ஜி தேசாய் உத்தரவுப்படி தமிழ்நாடு காங்கிரஸ் சேவாதள மாநில தலைவர் குங்பூ எஸ்.எக்ஸ்.விஜயன் பரிந்துரையின் பேரில் தஞ்சாவூர் மாநகர் மாவட்ட சேவாதள பொருளாளராக பாரதசிற்பி டாக்டர்.இரா.பிரனேஷ் இன்பென்ட்ராஜ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    இதனை தொடர்ந்து தஞ்சாவூரில் நடந்த நிகழ்ச்சியில் நியமனம் செய்யப்பட்டதற்கான அறிவிப்பு கடிதத்தை சேவாதள மாநில தலைவர் குங்பூ எஸ்.எக்ஸ்.விஜயன், மாநகர் மாவட்ட பொருளாளர் டாக்டர் இரா.பிரனேஷ் இன்பென்ட்ராஜிடம் வழங்கினார்.

    இதனை தொடர்ந்து அவருக்கு ஏராளமான நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    • அ.ம.மு.க. தெற்கு மாவட்டசெயலாளராக டேவிட் அண்ணாத்துரை நியமிக்கப்பட்டுள்ளார்.
    • புதிதாக நியமிக்கப்பட்ட மாவட்ட செயலாளர்களுக்கு அ.ம.மு.க. நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்‌.

    மதுரை

    மதுரை புறநகர் தெற்கு மாவட்ட அ.ம.மு.க. செய லாளராக டேவிட் அண்ணா துரை நியமிக்கப்பட்டுள்ளார்.

    மதுரை புறநகர் தெற்கு மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட செயலாளராக இருந்தவர் முன்னாள் எம்.எல்.ஏ. மகேந்திரன். இவர் கடந்த சட்டமன்ற தேர்தலில் அ.ம.மு.க. சார்பில் உசிலம்பட்டி தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இந்த நிலையில் கட்சியில் இருந்து ஒதுங்கி இருந்த மகேந்திரன் நேற்று அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அ.தி.மு.க.வில் சேர்ந்தார்.

    அ.தி.மு.க.விற்கு மகேந்திரன் தாவியதை அடுத்து மதுரை புறநகர் தெற்கு மாவட்ட அ.ம.மு.க. புதிய செயலாளராக கா.டேவிட் அண்ணாதுரை நியமிக்கப்பட்டுள்ளார். இவர் முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவின் மகன் என்பது குறிப் பிடத்தக்கது.

    இவர் அ.ம.மு.க. வில் ஜெயலலிதா பேரவை மாநில செயலாளராகவும், ஆட்சி மன்ற குழு உறுப்பினராகவும் பதவி வகித்து வருகிறார்.

    புதிய மாவட்ட செய லாளராக டேவிட் அண்ணா துரையை நியமித்து கட்சியின் பொதுச் செயலா ளர் டிடிவி தினகரன் அறிவிப்பு வெளி யிட்டுள்ளார். மதுரை புறநகர் தெற்கு மாவட்ட த்தில் திருப்பரங்குன்றம், திருமங்கலம், உசிலம்பட்டி ஆகிய 3 சட்டசபை தொகுதி கள் வருகின்றன.

    எனவே புதிய மாவட்ட செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ள டேவிட் அண்ணாதுரைக்கு கட்சி நிர்வாகிகள் முழு ஒத்து ழைப்பை நல்கிட வேண்டும் என்றும் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.

    மதுரை புறநகர் வடக்கு மாவட்ட செயலாளராக சரவணன் நியமிக்கப்பட் டுள்ளார். மதுரை புறநகர் வடக்கு மாவட்டத்தில் மேலூர், மதுரை கிழக்கு, சோழவந்தான் ஆகிய சட்டசபை தொகுதிகள் உள்ளடங்கியுள்ளன. புதிதாக நியமிக்கப்பட்ட மாவட்ட செயலாளர்களுக்கு அ.ம.மு.க. நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

    • மாநில ஹஜ் கமிட்டி உறுப்பினராக ராமநாதபுரம் நகராட்சி கவுன்சிலர் நியமனம் செய்யப்பட்டார்.
    • அரசு நிறைவேற்றி தந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    கீழக்கரை

    ராமநாதபுரம் நகராட்சி 31-வது வார்டு கவுன்சிலர் எம்.முகம்மது ஜஹாங்கீர். முதுகலை பட்டதாரியான இவர் தி.மு.க. விளையாட்டு மேம்பாட்டு அணி மாவட்ட துணை அமைப்பாளராக உள்ளார். இந்த நிலையில் தமிழக அரசின் மாநில ஹஜ் கமிட்டி உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

    இதுகுறித்து கவுன்சிலர் முகம்மது ஜஹாங்கீர் கூறிய தாவது:-

    தமிழக அளவில் மிக முக்கியத்துவம் வாய்ந்த மாநில ஹஜ் கமிட்டி உறுப்பி னராக என்னை நியமனம் செய்த தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக் கும், நான் சார்ந்துள்ள தி.மு.க விளையாட்டு மேம்பாட்டு அணி தொடர்பு டைய அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கும், இதற்காக பரிந்துரைத்த ராமநாதபுரம் மாவட்ட தி.மு.க. செயலாளர் காதர்பாட்சா முத்துராம லிங்கம் எம்.எல்.ஏ.வுக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

    மாநில ஹஜ் கமிட்டி உறுப்பினராக பதவி ஏற்றவு டன் மாநில அளவில் ஹஜ் பயணிகளுக்கு தேவையான உதவிகளை செய்துதர பாடு படுவேன். இந்தியாவில் முன்மாதிரியான திராவிட மாடல் அரசை நடத்தி வரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டா லின், சிறுபான்மையினரின் நலனை பேண அவரது உரிமைகளை காக்க பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறார்.

    ஹஜ் பயணிகள் சிரமம் இல்லாமல் பயணத்தை மேற்கொள்ள சலுகைகளை செய்து வருகிறார். மத்திய அரசு ஹஜ் மானியத்தை ரத்து செய்தாலும் நமது தமிழக அரசு மானியத்தை வழங்கி வருகிறது. இதனால் பல ஏழை முஸ்லிம்களின் ஹஜ் பயண கனவை தி.மு.க. அரசு நிறைவேற்றி தந்துள்ளது குறிப்பிடத்தக்கது

    சிறுபான்மையினர் நலனுக்காக இன்னும் பல திட்டங்களை கொண்டுவர முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை களை எடுத்து வருகிறார். அனைத்து தரப்பினரும் முன்னேற்றம் அடையும் வகையில் மதசார்பற்ற சமூக நல்லிணக்கமான சமத்துவ ஆட்சியை அவர் தந்து கொண்டிருக்கிறார். அதேபோல் என்னை கவுன்சிலராக தேர்ந்தெடுத்த 31-வது வார்டு மக்களின் கோரிக்ககைளையும் முழு வதுமாக நிறைவேற்ற நகர் மன்ற தலைவர் கார்மேகம், துணைத்தலைவர் பிரவீன் தங்கம், ஆணையாளர் மற்றும் நகராட்சி பணியா ளர்களுடன் இணைந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறேன்.

    குறுகிய காலத்திற்குள் ரேசன் கடை, குடிநீர், தெரு விளக்கு, சாலை வசதிகளை மேம்படுத்தி உள்ளேன். விரைவில் அனைத்து கோரிக்கைகளையும் நிறை வேற்ற நகர்மன்றத்தில் வலியுறுத்தி வருகிறேன். எனது மக்கள் பணிகளுக்கு உறுதுணையாக இருந்து வரும் என வார்டை சேர்ந்த நூற்றுக்கணக்கான இளை ஞர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • விருதுநகர் மாவட்ட தி.மு.க. நெசவாளரணி நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
    • ஸ்ரீவில்லிபுத்தூர் ஆறுமுகம், கோவிந்தராஜ், ராஜபாளையம் ராஜேந்திரகுமார் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட தி.மு.க. நெசவாளரணி நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். வடக்கு மாவட்டத்திற்கு தலைவராக வீரசோழனை சேர்்ந்த சவரிமுத்து, துணைத்தலைவராக கீழஉப்பிலிக்குண்டு ராமர், அமைப்பாளராக கல்குறிச்சி கடம்பவனம் துணை அமைப்பாளர்களாக பூலாங்கால் மைதின் அப்துல்காதர், குலசேகரநல்லூர் முத்துராமலிங்கம், சிவகாசி அன்பு முருகன், பொட்டகாசியேந்தல் பிச்சைமணி, மல்லாங்கிணறு ரங்கசாமி ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

    தெற்கு மாவட்டத்திற்கு தலைவராக சுந்தரபாண்டியம் பகுதிைய சேர்ந்த சடையாண்டி, துணைத்தலைவராக சமுத்திராபுரம் ஆனந்தா முருகன், அமைப்பாளராக அருப்புக்கோட்டை திருநகரம் அண்ணாதுரை, துணை அமைப்பாளர்களாக சங்கரபாண்டியாபுரம் பாலசுப்பிர மணியன், குருநமசிவாயம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆறுமுகம், கோவிந்தராஜ், ராஜபாளையம் ராஜேந்திரகுமார் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

    ×