என் மலர்
நீங்கள் தேடியது "Rajasthan Assembly election"
- டேனிஷ் அலியை மத ரீதியாக ரமேஷ் பிதுரி தாக்கி பேசினார்
- டோங்க் மாவட்டத்தில் 30 சதவீதம் இஸ்லாமியர்கள் வசிக்கின்றனர்
இந்திய பாராளுமன்றத்தின் சிறப்பு கூட்டத்தொடர் கடந்த 18 தொடங்கி 21 வரை நடைபெற்றது.
இத்தொடரில் 21 அன்று, பா.ஜ.க.வை சேர்ந்த தெற்கு டெல்லி பாராளுமன்ற உறுப்பினரான ரமேஷ் பிதுரி (62) அவையில் நடந்த விவாதத்தின் போது பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்த அம்ரோகா தொகுதி பாராளுமன்ற உறுப்பினரான கன்வர் டேனிஷ் அலி (48) என்பவரை மத ரீதியாக தாக்கி பேசினார். அனைத்து கட்சியை சேர்ந்த உறுப்பினர்களும் இதற்கு கண்டனம் தெரிவித்தனர். மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, ரமேஷ் பிதுரி மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
ஆளும் பா.ஜ.க., ரமேஷிடம் இந்த நிகழ்ச்சி குறித்து விளக்கம் கோரும் கடிதம் அனுப்பியிருந்தது; ஆனால், கட்சியை விட்டு நீக்கவில்லை.
இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தில் நவம்பர் இறுதிக்குள் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளதால், அங்குள்ள டோங்க் மாவட்டத்திற்கு பா.ஜ.க. சார்பில் தேர்தல் பொறுப்பாளராக ரமேஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து எதிர்கட்சியினர் கடும் விமர்சனம் வைத்துள்ளனர்.
சமாஜ்வாதி கட்சியின் ஆதரவில் மாநிலங்களவை உறுப்பினரான மூத்த உச்ச நீதிமன்ற வழக்கறிஞரும், முன்னாள் காங்கிரஸ் எம்.பி.யுமான கபில் சிபல், தனது எக்ஸ் கணக்கில் தெரிவித்திருப்பதாவது:
பா.ஜ.க. வெறுப்பு பேச்சிற்கு வெகுமானம் அளிக்கிறது. ரமேஷ், வெளியில் கூற முடியாத வார்த்தைகளால், டேனிஷ் அலியை மத ரீதியாக மக்களவையிலேயே தாக்கி பேசினார். அவருக்கு தேர்தல் பொறுப்பாளர் பதவி வழங்கியுள்ளார்கள். டோங்க் பகுதியில் இஸ்லாமிய மக்கள் தொகை சுமார் 30 சதவீதமாகும். இது அரசியல் ஆதாயத்திற்காக வெறுப்புணர்ச்சியை தூண்டும் செயலைத்தான் குறிக்கிறது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மகுவா மொயித்ரா, காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் ஆகியோரும் ரமேஷின் நியமனத்தை விமர்சித்துள்ளனர்.
- ராஜஸ்தானில் நவம்பர் 25-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது.
- ராஜஸ்தான் சட்டசபை தேர்தலில் போட்டியிடும் 2-வது கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது.
ஜெய்ப்பூர்:
மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலுலங்கானா, மிசோரம் ஆகிய 5 மாநில சட்டசபை தேர்தலுக்கான தேதிகளை தேர்தல் ஆணையம் சமீபத்தில் வெளியிட்டது.
அதன்படி, ராஜஸ்தானில் நவம்பர் 25-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 3-ம் தேதி நடைபெறுகிறது.
இந்த அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களில் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களுக்கான வேட்பாளர் பட்டியலை பா.ஜ.க. வெளியிட்டது.
அதன்படி, ராஜஸ்தான் தேர்தலுக்கு முதல் கட்டமாக 41 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை பா.ஜ.க. அறிவித்துள்ளது. இதில் 7 எம்.பி.க்கள் பெயரும் இடம்பெற்றது.
இந்நிலையில், ராஜஸ்தான் மாநில சட்டசபை தேர்தலில் போட்டியிடும் 89 பேர் அடங்கிய 2-வது கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக இன்று வெளியிட்டுள்ளது.
அதில் முன்னாள் முதல் மந்திரி வசுந்தர ராஜே ஜலர்பதான் தொகுதியிலும், சதீஷ் புனியா ஆம்பர் தொகுதியிலும், ராஜேந்திர ரதோட் தாராநகர் தொகுதியிலும், ஜோதி மிர்தா நகவ்ர் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.
- 200 தொகுதிகளை கொண்ட ராஜஸ்தானில் வருகிற 25-ந்தேதி சட்டசபை தேர்தல்
- நேற்று கடைசி கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பா.ஜனதா
200 தொகுதிகளை கொண்ட ராஜஸ்தான் மாநிலத்தில் வருகிற 25-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற இருக்கிறது. அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியை தோற்கடிக்கும் வகையில் பா.ஜனதா வியூகம் அமைத்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறது.
இன்று வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும். ஆனால், நேற்று மதியம் வரை 18 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பெயரை பா.ஜனதா அறிவிக்காமல் இருந்தது. இந்த நிலையில், நேற்று மாலை கடைசி கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.
உதைப்பூரில் உள்ள மாவ்லி தொகுதியில் தற்போதைய எம்.எல்.ஏ.-வுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. பத்திரிகையாளர் கோபால் சர்மா, தொழில் அதிபர் ரவி நய்யார் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கியது.
கடந்த 2-ந்தேதி 3-வது கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. இதில் முன்னாள் மந்திரி தவ் சிங் பாதியின் மறுமகள் பூனம் கன்வார் பாதிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. தற்போது அவருக்குப் பதிலாக அவரது, மகன் வேட்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.-வாக இருக்கும் கிரிராஜ் மலிங்கா பா.ஜனதா கட்சிக்கு தாவியுள்ளார். நேற்று கட்சியில் இணைந்த நிலையில், பா.ஜனதா அவருக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கியுள்ளது.
- பா.ஜனதா முதல்வர் வேட்பாளரை முன்னிறுத்தாமல் தேர்தலை எதிர்கொள்கிறது.
- எங்களது முகம் பிரதமர் மோடி, தாமரை என மத்திய மந்திரி தெரிவித்துள்ளார்.
200 தொகுதிளை கொண்ட ராஜஸ்தான் மாநிலத்தில் வருகிற 25-ந்தேதி சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இன்றுடன் வேட்புமனு தாக்கல் நிறைவு அடைகிறது. இதனால் பா.ஜனதா கடைசி கட்டமாக 18 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை நேற்று வெளியிட்டது. காங்கிரஸ் எம்.எல்.ஏ. கிரிராஜ் சிங் நேற்று பா.ஜனதாவில் இணைந்தார். உடனே அவருக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
பொதுவாக பா.ஜனதா கட்சி மாநிலத் தேர்தல்களில் முதலமைச்சர் வேட்பாளரை அறிவிப்பதில்லை. இந்த நடைமுறையைத்தான் ராஜஸ்தானிலும் கடைபிடிக்கிறது. ஏற்கனவே முதல்வராக இருந்த வசுந்தரா ராஜே சந்தியா ஓரங்கப்படுவதாக தெரிகிறது. இதனால் வேறு நபர்தான் முதல்வராக வாய்ப்புள்ளது.
இந்த நிலையில் முதல்வர் வேட்பாளர் குறித்து மத்திய மந்திரி கஜேந்திர சிங் ஷெகாவத் கூறுகையில் ''தற்போது பிரதமர் மோடி மற்றும் தாமரைதான் எங்கள் முகம் (தேர்தலில் முன்னிறுத்துவது). பின்னர் எம்.எல்.ஏ.-க்கள், கட்சியின் பாராளுமன்ற குழுவில் இடம் பிடித்துள்ளவர்கள் முதலமைச்சர் யார் என்பதை முடிவு செய்வார்கள். முதலமைச்சர் தேர்வு செய்யப்படும் நபர் யாராக இருந்தாலும் அவருடைய பதிக்காலம் முழுமை அடைவதை உறுதி செய்வோம்'' என்றார்.
- ராஜஸ்தானில் வருகிற 25-ந்தேதி சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது.
- ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸ்- பா.ஜனதா இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
200 தொகுதிகளை கொண்ட ராஜஸ்தான் மாநிலத்தில் வருகிற 25-ந்தேதி சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. தற்போது ஆட்சி செய்து வரும் காங்கிரஸ், ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள பல்வேறு நலத்திட்டங்களை செய்வதாக வாக்குறுதி அளித்துள்ளது. அதேவேளையில், பா.ஜனதா ஆட்சியை கைப்பற்ற தீவிரம் காட்டி வருகிறது.
இந்த நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தின் கஜானா திவாலாகுவதற்கான உத்தரவாதத்தை காங்கிரஸ் கொடுத்துள்ளதாக பா.ஜனதாவின் செய்தி தொடர்பாளர் ஷேசாத் பூனவாலா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பூனவாலா கூறியிருப்பதாவது:-
இமாச்சல பிரதேசத்தில் 200 யூனிட் வரை மின்சாரம் இலவசம் என காங்கிரஸ் வாக்குறுதி கொடுத்தது. பிரியங்கா காந்தி பணவீக்கத்தை கட்டுப்படுத்த மின்சார கட்டணம் குறையும் எனத் தெரிவித்திருந்தார். ஆனால், அவர்கள் ஆட்சிக்கு வந்தபிறகு டீசல் விலை 6 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. கர்நாடகாவில் வளர்ச்சி திட்டங்களுக்கு பணம் இல்லை என காங்கிரஸ் சொல்கிறது.
ராஜஸ்தான் மாநிலத்தை திவலாக்குவதற்கான உத்தரவாதத்தை காங்கிரஸ் கொடுத்துள்ளது. ராஜஸ்தான் கருவூலம் காலியாக்கப்பட்டுள்ளது. அரசு ஊழியர்களுக்கு சம்பளம், பென்சன் வழங்க மாநில அரசால் முடியவில்லை.
அதேவேளையில் பா.ஜனதா வளர்ச்சி, நல்லாட்சி, கட்டமைப்பு, சட்டம்-ஒழுங்கு முன்னேற்றம் ஆகியவை குறித்து உத்தரவாதம் அளித்துள்ளது.
இவ்வாறு பூனவாலா தெரிவித்துள்ளார்.
- ராஜஸ்தானில் ஐந்து ஆண்டுகளை வீணடித்து விட்டது.
- தலித், ஏழை மக்கள் பாதுகாப்பான நிலையில் இல்லை.
இந்தியாவின் ஐந்து மாநிலங்களில் சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதையடுத்து, அனைத்து கட்சியினரும் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர். அந்த வரிசையில், பிரதமர் நரேந்திர மோடி மத்திய பிரதேச மாநிலத்தை தொடர்ந்து இன்று (நவம்பர் 9) மாலை ராஜஸ்தான் மாநிலத்தின் உதய்பூரில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டார்.
அப்போது பேசிய அவர், "ராஜஸ்தானில் ஆட்சி செய்து வரும் காங்கிரஸ் அரசு தீவிரவாதிகளுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறது. முதலமைச்சர் அசோக் கெலோட் தலைமையிலான அரசு ராஜஸ்தான் மாநிலத்தை பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகம் நடக்கும் மாநிலங்கள் பட்டியலின் முதலிடத்திற்கு கொண்டுவந்துள்ளது."
"ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள தலித் மற்றும் ஏழை மக்கள் பாதுகாப்பான நிலையில் இல்லை. முதல்வர் இருக்கையில் யாரை அமர வைப்பது என்பதை முடிவு செய்வதிலேயே காங்கிரஸ் அரசாங்கம், ராஜஸ்தானில் ஐந்து ஆண்டுகளை வீணடித்து விட்டது."
"நவம்பர் 25-ம் தேதி நடைபெற இருக்கும் சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்றால் ராஜஸ்தானில் உள்ள குண்டர்கள் ராஜ்ஜியத்தை அடியோடு ஒழிப்போம்," என்று தெரிவித்தார்.
- ராஜஸ்தானில் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் கட்சியை அகற்ற பா.ஜனதா தீவிரம்.
- பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஒரேநாளில் ராஜஸ்தானில் பிரசாரம்.
ராஜஸ்தான், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. மிசோரமில் தேர்தல் நடைபெற்று முடிந்துவிட்டது. சத்தீஸ்கரில் முதல் கட்ட தேர்தல் நடந்து முடிந்த நிலையில் 17-ந்தேதி 2-ம் கட்ட தேர்தல் நடைபெற இருக்கிறது. ராஜஸ்தானில் வருகிற 25-ந்தேதி தேர்தல் நடக்கிறது.
ராஜஸ்தான், மத்திய பிரதேச மாநில சட்டசபை தேர்தலை கணக்கில் வைத்து பிரதமர் மோடி தீவிர தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார். இன்று சத்தீஸ்கர் மற்றும் மத்திய பிரதேச மாநிலங்களில் பிரசாரம் செய்தார்.
இந்த நிலையில் வருகிற 15-ந்தேதி மற்றும் 18-ந்தேதி ஆகிய இரண்டு நாட்கள் ராஜஸ்தானில் பிரசாரம் செய்ய இருக்கிறார். 15-ந்தேதி பார்மெர் மாவட்டத்தில் உள்ள பெய்டூ என்ற இடத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். 18-ந்தேதி பாரத்புர் மற்றும் நகாயுர் ஆகிய இடங்களில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேச இருக்கிறார்.
மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா, 16-ந்தேதி டோங்க் மாவட்டத்தில் உள்ள தியோலியில் நடைபெறும் பொதுக்கூட்டத்திலும், ராஜ்சாமண்ட் மாவட்டத்தில் உள்ள கும்பல்கார்ஹக், பிம் ஆகிய தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெறும் பொதுக்கூட்டங்களில் பேசுகிறார்.
நவம்பர் 18-ந்தேதி அஜ்மிர் மாவட்டத்தில் நடைபெறும் மூன்று பொதுக்கூட்டங்களில் பேசுகிறார். அதன்பின் நடைபெறும் ரோடுஷோவிலும் கலந்து கொள்கிறார்.
இருவரையும் தவிர்த்து ஜெய்ப்பூரில் நாளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கட்சி தொண்டர்களை சந்தித்து பேச இருக்கிறார். அத்துடன் பத்திரிகையாளர்களை சந்திக்கவும் இருக்கிறார்.
- தேசிய கட்சிகளான காங்கிரஸ், பா.ஜ.க. தீவிரமாக களம் இறங்கியுள்ளன
- காங்கிரசார் ஏதோ மன வியாதியில் உள்ளனர் என பிரதமர் மோடி விமர்சித்தார்
ராஜஸ்தான் மாநிலத்தில் தற்போது காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அசோக் கெலாட் தலைமையில் ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு நவம்பர் 25 அன்று அம்மாநில சட்டசபையில் உள்ள 200 இடங்களுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் முடிவுகள் டிசம்பர் 3 அன்று வெளியிடப்படும்.
இத்தேர்தலில் வெற்றி பெற தேசிய கட்சிகளான காங்கிரசும், பா.ஜ.க.வும் தீவிரமாக களமிறங்கி உள்ளன.
முன்னதாக, மத்திய பிரதேசத்தில் ஒரு பிரசார கூட்டத்தில் ராகுல் காந்தி, மக்கள் அனைவரும் சீனாவில் தயாரிக்கப்படும் மொபைல்களையே பயன்படுத்துகின்றனர் என்றும் இதனை மாற்றி மத்திய பிரதேசத்திலேயே மொபைல் தயாரிப்பை ஊக்குவித்து இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை அதிகரிப்பதையே காங்கிரஸ் விரும்புகிறது என்றும் அறிவித்திருந்தார்.
நேற்று இது குறித்து தனது பிரசாரத்தில் பிரதமர் மோடி பதிலளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
ஒரு காங்கிரஸ் தலைவர் (ராகுல் காந்தி) சீனாவில் தயாரிக்கப்படும் மொபைல் போன்களை மட்டுமே மக்கள் வைத்துள்ளதாக கூறுகிறார். அட அறிவில்லாதவர்களின் தலைவரே, எந்த உலகில் இருக்கிறீர்கள்? இந்தியாவின் வளர்ச்சியை மறைக்கும் அளவு எந்த வெளிநாட்டு கண்ணாடியை அணிந்து கொண்டு நிலைமையை பார்க்கிறீர்கள்? இந்தியாவின் சாதனைகளை புறக்கணிக்கும் அளவிற்கு ஏதோ மன வியாதியில் காங்கிரசார் உள்ளனர்.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை மறைமுகமாக "அறிவில்லாதவர்களின் தலைவன்" என விமர்சித்திருப்பதற்கு ராஜஸ்தான் காங்கிரஸ் தலைவர் அசோக் கெலாட் கருத்து தெரிவித்தார்.
அவர் இது குறித்து தெரிவித்ததாவது:
"இது வருந்தத்தக்க செயல். பிரதமர் பதவிக்கு என்று ஒரு மரியாதை (dignity) உள்ளது. பிரதமரை அதிகம் விமர்சிக்கும் போது, அப்பதவிக்கான மரியாதை குறைந்து விடும். ஆனால், அத்தகைய ஒரு மரியாதைக்குரிய பதவியை வகிக்கும் ஒருவரே (மோடி) இவ்வாறு பேச தொடங்கினால், அவரிடமிருந்து வேறு எதனை எதிர்பார்க்க முடியும்?"
இவ்வாறு அசோக் கெலாட் கருத்து தெரிவித்தார்.
சில தினங்களுக்கு முன் மகாராஷ்டிரா மாநிலத்தின் முக்கிய அரசியல் கட்சியான சிவசேனா (உத்தவ் தாக்கரே பிரிவு) தலைவர் சஞ்சய் ராவத், "அடுத்த வருட பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ராகுல் காந்தி பிரதமர் ஆக போவது உறுதி என்பதால் மோடி ராகுலை கண்டு அஞ்சுகிறார்" என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
- ராஜஸ்தானில் வருகிற 25-ந்தேதி சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது.
- காங்கிரஸ் மீண்டும் ஆட்சியை பிடிக்க தீவிரம்.
ராஜஸ்தான் மாநிலத்தில் வருகிற 25-ந்தேதி சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதி எம்.பி.யுமான ராகுல் காந்தி இன்று பல்வேறு இடங்களில் பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறார்.
சுருவில் உள்ள தாரா நகரில் நடைபெறும் தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசுவதற்காக புறப்பட்டார். அப்போது பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். பதில் அளித்த ராகுல் காந்தி "நாங்கள் ஒற்றுமைய உள்ளோம். ஒற்றுமையாக இருப்போம். ராஜஸ்தான் சட்டசபை தேர்தல் காங்கிரஸ் கட்சி அபார வெற்றி பெறும்" என்றார்.
ராகுல் காந்தியுடன் அம்மாநில முதல்வர் அசோக் கெலாட், ராஜஸ்தான் காங்கிரஸ் கமிட்டி தலைவர் கோவிந்த் சிங் தோதசரா, முன்னாள் துணை முதல்வர் சச்சின் பைலட் ஆகியோர் செல்கின்றனர்.
ராகுல் காந்தி ஹனுமான்கார்ஹ், ஸ்ரீகங்காநகர் ஆகிய மாவட்டங்களில் நடைபெறும் பேரணியில் கலந்த கொள்ள இருக்கிறார்.
ராஜஸ்தானில் பொதுவாக காங்கிரஸ், பா.ஜனதா கட்சிகள் மாறிமாறிதான் ஆட்சியை பிடித்துள்ளன. இந்த முறை தொடர்ந்து 2-வது முறையாக ஆட்சியை பிடிக்கும் முனைப்பில் காங்கிரஸ் உள்ளது.
- ராஜஸ்தானில் வரும் 25-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது.
- எதிர்க்கட்சியான பா.ஜ.க. ஆட்சியைப் பிடிக்க தீவிர முனைப்பு காட்டி வருகிறது.
திஸ்பூர்:
ராஜஸ்தானில் வரும் 25-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. ஆளும் கட்சியான காங்கிரஸ் ஆட்சியை தக்கவைக்க தீவிர பிரசாரம் மேற்கொண்டுள்ளது. எதிர்க்கட்சியான பா.ஜ.க. ஆட்சியைப் பிடிக்க தீவிர முனைப்பு காட்டி வருகிறது.
ராஜஸ்தான் மாநிலத்தில் பா.ஜ.க. நேற்று தேர்தல் அறிக்கையை வெளியிட்டது.
இதற்கிடையே, அசாம் மாநில கவர்னர் குலாப் சந்த் கடாரியா பா.ஜ.க.வுக்கு ஆதரவாக ராஜஸ்தானின் உதய்பூரில் பிரசாரம் செய்தார்.
இந்நிலையில், அசாம் கவர்னரை நீக்க வேண்டும் என ஆம் ஆத்மி மற்றும் திரிணாமுல் உள்ளிட்ட கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.
இதுதொடர்பாக, திரிணாமுல் காக்ங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் ரிபுன் போரா எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்ட செய்தியில், அசாம் கவர்னர் குலாப் சந்த் கடாரியா ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் பா.ஜ.க.வுக்காக பிரசாரம் செய்து வருகிறார். இது ஜனநாயகத்துக்கு விடுக்கப்பட்ட சவால். அவர்மீது இந்திய தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவேண்டும். அரசியல் சட்டத்தின் பாதுகாவலராக இருந்தும் அவர் பா.ஜ.க.வுக்காக பிரசாரம் செய்வது மிகவும் வெட்கக் கேடானது. அவரை உடனடியாக பதவியில் இருந்து நீக்கவேண்டும் என பதிவிட்டுள்ளார்.
ஆம் ஆத்மி கட்சியும் அசாம் கவர்னரை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
- சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்.
- 10 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.
ராஜஸ்தான் மாநிலத்தில் வருகிற 25-ந்தேதி சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. பிரசாரத்திற்கு இன்றுடன் இன்னும் மூன்று நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட்டது.
இந்த விழாவில், காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட், மாநில காங்கிரஸ் தலைவர் கோவிந்த் சிங் தோதசரா, சச்சின் பைலட் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.
தேர்தல் அறிக்கையில் "விவசாயிகளுக்கு 2 லட்சம் ரூபாய் வட்டியில்லா கடன் வழங்கப்படும். சுவாமிநாதன் அறிக்கையின்படி குறைந்தபட்ச ஆதார விலை வழங்கப்படும். காங்கிரஸ் 10 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கும். அதில் 4 லட்சம் வேலை அரசு செக்டாரில் ஏற்படுத்தப்படும்.
பஞ்சாயத்து அளவிலான ஆள்சேர்ப்பு திட்டம் கொண்டு வரப்படும். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்.
ராஜஸ்தானின் பொருளாதாரம் இந்த ஆண்டு இறுதியில் 15 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும். இதனை 2030-க்குள் 30 லட்சம் கோடி ரூபாயாக உயர்த்துவதே இலக்கு" உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம் பிடித்துள்ளனர்.
- ராஜஸ்தானில் வருகிற 25-ந்தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது.
- நாளை மறுதினத்துடன் பிரசாரம் முடிவடையும் நிலையில், தலைவர்கள் உச்சக்கட்ட பிரசாரம்.
ராஜஸ்தான் மாநிலம் வல்லாப்நகரில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் கலந்து கொண்டு ராகுல் காந்தி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
நாம் ஏழைகளுக்கு உதவும்போது, ஒவ்வொரு திட்டத்திலும் பா.ஜனதா கோடீஸ்வரர்களுக்கு உதவுகிறது. அவர்கள் ஒரு அணி. அதானி பிக்பாக்கெட் அடிக்கும்போது, மக்களின் கவனத்தை திசைதிருப்புவதுதான் மோடியின் வேலை.
சாதிவாரி கணக்கெடுப்பு நாட்டின் எக்ஸ்-ரே. அதை செய்ய வேண்டியது அவசியம். பழங்குடியினரிடன் உரிமையை காங்கிரஸ் கட்சி பாதுகாக்கும். பிரதமர் அவர் ஓபிசி என்று அழைத்துக் கொள்கிறார். ஆனால் நான் சாதிவாரி கணக்கெடுப்பு பற்றி பேசும்போது, அவர், இந்தியாவில் ஏழை என்ற ஒரே சாதிதான் உள்ளது என்கிறார்.
நாட்டில் ஏழை என்ற ஒரே சாதிதான் உள்ளது என்று பிரதமர் சொல்கிறார். ஆனால் அதானி, அம்பானி போன்ற கோடிஸ்வரர்கள் என்ற மற்றொரு சாதி அங்கே உள்ளது.
இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்தார்.
ராஜஸ்தானில் வருகிற 25-ந்தேதி சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. தேர்தல் பிரசாரம் முடிவடைய இன்னும் 3 நாட்களே இருக்கும் நிலையில், காங்கிரஸ் கட்சி இன்று தேர்தல் வாக்குறுதியை வெளியிட்டது. அதன் தேர்தல் வாக்குறுதியில் "விவசாயிகளுக்கு 2 லட்சம் ரூபாய் வட்டியில்லா கடன் வழங்கப்படும். சுவாமிநாதன் அறிக்கையின்படி குறைந்தபட்ச ஆதார விலை வழங்கப்படும். காங்கிரஸ் 10 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கும். அதில் 4 லட்சம் வேலை அரசு செக்டாரில் ஏற்படுத்தப்படும்.
பஞ்சாயத்து அளவிலான ஆள்சேர்ப்பு திட்டம் கொண்டு வரப்படும். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்.
ராஜஸ்தானின் பொருளாதாரம் இந்த ஆண்டு இறுதியில் 15 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும். இதனை 2030-க்குள் 30 லட்சம் கோடி ரூபாயாக உயர்த்துவதே இலக்கு" உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம் பிடித்துள்ளனர்.






