search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "BSP"

    • சில மாவட்டங்களில் கட்சிப் பொறுப்பாளர்கள் மாவட்ட அளவில் வேட்பாளர்களை அறிவித்தனர்.
    • நாகினாவில் சுரேந்திர பால் சிங், மொராதாபாத்தில் முகமது இர்பான் சைஃபி ஆகியோர் மாயாவதி தலைமையிலான கட்சி களமிறக்கியுள்ளது.

    மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 19ம் தேதி முதல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இந்நிலையில், உத்தரப் பிரதேசத்தில் உள்ள 80 தொகுதிகளில் 16 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை பகுஜன் சமாஜ் கட்சி இன்று அறிவித்துள்ளது.

    ஏற்கனவே, சில மாவட்டங்களில் கட்சிப் பொறுப்பாளர்கள் மாவட்ட அளவில் வேட்பாளர்களை அறிவித்தனர்.

    அதன்படி, சஹாரன்பூரில் மஜித் அலி, கைரானாவில் ஸ்ரீபால் சிங், முசாபர்நகரில் தாரா சிங் பிரஜாபதி, பிஜ்னூரில் விஜயேந்திர சிங், நாகினாவில் சுரேந்திர பால் சிங், மொராதாபாத்தில் முகமது இர்பான் சைஃபி ஆகியோர் மாயாவதி தலைமையிலான கட்சி களமிறக்கியுள்ளது.

    ராம்பூரில் இருந்து ஜிஷான் கான், சம்பாலில் இருந்து ஷவுலத் அலி, அம்ரோஹாவில் இருந்து மொஸாஹித் ஹுசைன், மீரட்டில் இருந்து தேவ்ரத் தியாகி மற்றும் பாக்பத்தில் இருந்து பிரவீன் பன்சால் ஆகியோரும் போட்டியிடுகின்றனர்.

    கட்சி வேட்பாளராக கவுதம் புத்த நகர் தொகுதியில் ராஜேந்திர சிங் சோலங்கியும், புலந்த்ஷாஹர் (எஸ்சி) தொகுதியில் கிரீஷ் சந்திர ஜாதவ், அயோன்லா தொகுதியில் அபித் அலி, பிலிபிட்டில் அனிஸ் அகமது கான் என்ற பூல் பாபு, ஷாஜஹான்பூரில் தோதாரம் வர்மா ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

    • போபால் தொகுதி எம்.பி பிரக்யா சிங் தாக்கூருக்கு வாய்ப்பு மீண்டும் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.
    • மகாத்மா காந்தியை கொலை செய்த நாதுராம் கோட்சே தான் உண்மையான தேசபக்தர் என்று பிரக்யா தாகூர் பாராட்டியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    பாராளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், பாஜக முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.

    அதன்படி, 195 இடங்களுக்கான வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. இதில், போபால் தொகுதி எம்.பி பிரக்யா சிங் தாக்கூருக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக பேசிய பிரக்யா சிங் தாக்கூர், "நான் இதற்கு முன்பும் எம்பி சீட் கேட்கவில்லை, இப்போதும் நான் கேட்கவில்லை. முந்தைய காலத்தில் நான் கூறிய சில வார்த்தைகள் பிரதமர் மோடிக்கு சங்கடத்தை ஏற்படுத்தியது. இது குறித்து நான் அவரிடம் மன்னிப்பு கேட்டும், அவர் என்னை மன்னிக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.

    மகாத்மா காந்தியை கொலை செய்த நாதுராம் கோட்சே தான் உண்மையான தேசபக்தர் என்று பிரக்யா தாகூர் பாராட்டியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும் இவர் மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    அதே போல், பாராளுமன்றத்தில், பகுஜன் சமாஜ் கட்சி எம்.பி டேனிஷ் அலியை தீவிரவாதி என குறிப்பிட்டு சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பாஜக எம்.பி ரமேஷ் பிதூரிக்கும் மக்களவை வேட்பாளருக்கான வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • முபாரக்பூர் தொகுதியில் (2012, 2017) இரண்டு முறை சட்டமனற உறுப்பினராக ஷா ஆலம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
    • ஷா ஆலம் பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்து விலகி, அகிலேஷ் யாதவ் முன்னிலையில் சமாஜ்வாதி கட்சியில் இணைந்தார்

    உத்தரபிரதேசத்தில் பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ.வாக இருந்த ஷா ஆலம் அக்கட்சியில் இருந்து விலகி, அகிலேஷ் யாதவ் முன்னிலையில் சமாஜ்வாதி கட்சியில் இணைந்தார்.

    உத்தரபிரதேசத்தில் முபாரக்பூர் தொகுதியில் (2012, 2017) இரண்டு முறை சட்டமனற உறுப்பினராக ஷா ஆலம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

    2014 மற்றும் 2022 மக்களவை தேர்தல்களில் அசம்கர் தொகுதியில், முறையே சமாஜ்வாதி நிறுவனர் முலாயம் சிங் யாதவ் மற்றும் தர்மேந்திரா யாதவ்க்கு எதிராக ஷா ஆலம் போட்டியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • டேனிஷ் அலியை பாராளுமன்றத்தில் பாஜக உறுப்பினர் ரமேஷ் பிதுரி அவதூறாக பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
    • மஹுவா மொய்த்ராவுக்கு ஆதரவாக கழுத்தில் பதாகை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.

    கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்து டேனிஷ் அலி எம்.பி. தற்காலிகமாக நீக்கி பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.

    கடந்த செப்டம்பர் மாதத்தில், டேனிஷ் அலியை பாராளுமன்றத்தில் பாஜக உறுப்பினர் ரமேஷ் பிதுரி அவதூறாக பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இதுதொடர்பாக, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் நியாயம் கேட்டு டேனிஷ் அலி புகாரளித்தார். ரமேஷ் பிதுரியும் டேனிஷ் அலிக்கு எதிராக புகார் அளித்தார். தனக்கு நியாயம் கேட்டும் பாராளுன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டார்.

    இதைதொடர்ந்து, நேற்று திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா பதவியில் இருந்து நீக்கப்பட்டதை தொடர்ந்து, தன்னைப் போலவே அவரும் பாதிக்கப்பட்டுள்ளார் எனக் கூறி மொய்த்ராவுக்கு ஆதரவாக கழுத்தில் பதாகை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.

    இந்நிலையில், டேனிஷ் அலியை கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்வதாக பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி உத்தரவிட்டுள்ளார்.

    இதுதொடர்பாக பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கட்சியின் கொள்கைகள், சித்தாந்தம் மற்றும் ஒழுக்கத்திற்கு எதிரான அறிக்கைகள் அல்லது செயல்களுக்கு எதிராக நீங்கள் பலமுறை எச்சரிக்கப்பட்டீர்கள். ஆனால், அதையும் மீறி நீங்கள் தொடர்ந்து கட்சிக்கு எதிராக செயல்பட்டு வருகிறீர்கள்" என்று குறிப்பிட்டிருந்தது.

    இருப்பினும், தனது கட்சியின் குற்றச்சாட்டை மறுத்துள்ள டேனிஷ் அலி, "எந்தவிதமான கட்சி விரோதப் பணிகளையும் செய்யவில்லை. பகுஜன் சமாஜ் கட்சியை வலுப்படுத்த நான் விடாமுயற்சியுடன் முயற்சித்தேன். கட்சிக்கு எதிரான எந்த வேலையும் செய்யவில்லை. இதற்கு எனது அம்ரோஹா பகுதி மக்களே சாட்சி.

    பாஜக அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை நான் கண்டிப்பாக எதிர்த்துள்ளேன், அதைத் தொடருவேன். இதைச் செய்வது ஒரு குற்றம் என்றால், அதற்காக எந்த தண்டனையையும் சந்திக்க நான் தயாராக இருக்கிறேன்.

    தனக்கு எதிரான கட்சியின் முடிவு "துரதிர்ஷ்டவசமானது". அதே நேரத்தில், தனக்கு மக்களவைச் சீட்டு வழங்கியதற்காக மாயாவதிக்கு நன்றி" என்று கூறினார்.

    • டேனிஷ் அலியை மத ரீதியாக ரமேஷ் பிதுரி தாக்கி பேசினார்
    • டோங்க் மாவட்டத்தில் 30 சதவீதம் இஸ்லாமியர்கள் வசிக்கின்றனர்

    இந்திய பாராளுமன்றத்தின் சிறப்பு கூட்டத்தொடர் கடந்த 18 தொடங்கி 21 வரை நடைபெற்றது.

    இத்தொடரில் 21 அன்று, பா.ஜ.க.வை சேர்ந்த தெற்கு டெல்லி பாராளுமன்ற உறுப்பினரான ரமேஷ் பிதுரி (62) அவையில் நடந்த விவாதத்தின் போது பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்த அம்ரோகா தொகுதி பாராளுமன்ற உறுப்பினரான கன்வர் டேனிஷ் அலி (48) என்பவரை மத ரீதியாக தாக்கி பேசினார். அனைத்து கட்சியை சேர்ந்த உறுப்பினர்களும் இதற்கு கண்டனம் தெரிவித்தனர். மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, ரமேஷ் பிதுரி மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    ஆளும் பா.ஜ.க., ரமேஷிடம் இந்த நிகழ்ச்சி குறித்து விளக்கம் கோரும் கடிதம் அனுப்பியிருந்தது; ஆனால், கட்சியை விட்டு நீக்கவில்லை.

    இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தில் நவம்பர் இறுதிக்குள் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளதால், அங்குள்ள டோங்க் மாவட்டத்திற்கு பா.ஜ.க. சார்பில் தேர்தல் பொறுப்பாளராக ரமேஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.

    இது குறித்து எதிர்கட்சியினர் கடும் விமர்சனம் வைத்துள்ளனர்.

    சமாஜ்வாதி கட்சியின் ஆதரவில் மாநிலங்களவை உறுப்பினரான மூத்த உச்ச நீதிமன்ற வழக்கறிஞரும், முன்னாள் காங்கிரஸ் எம்.பி.யுமான கபில் சிபல், தனது எக்ஸ் கணக்கில் தெரிவித்திருப்பதாவது:

    பா.ஜ.க. வெறுப்பு பேச்சிற்கு வெகுமானம் அளிக்கிறது. ரமேஷ், வெளியில் கூற முடியாத வார்த்தைகளால், டேனிஷ் அலியை மத ரீதியாக மக்களவையிலேயே தாக்கி பேசினார். அவருக்கு தேர்தல் பொறுப்பாளர் பதவி வழங்கியுள்ளார்கள். டோங்க் பகுதியில் இஸ்லாமிய மக்கள் தொகை சுமார் 30 சதவீதமாகும். இது அரசியல் ஆதாயத்திற்காக வெறுப்புணர்ச்சியை தூண்டும் செயலைத்தான் குறிக்கிறது.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மகுவா மொயித்ரா, காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் ஆகியோரும் ரமேஷின் நியமனத்தை விமர்சித்துள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பா.ஜ.க. வேட்பாளர் திரவுபதி முர்முவுக்கு மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி ஆதரவு தெரிவித்தது.
    • ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்கா களமிறங்கியுள்ளார்.

    புதுடெல்லி:

    ஜனாதிபதி தேர்தல் ஜூலை 18-ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூலை 21-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

    இந்த தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி சார்பில் திரவுபதி முர்மு ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார். எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்கா களமிறங்கியுள்ளார்.

    இதற்கிடையே, ஜனாதிபதி தேர்தலில் பா.ஜ.க. வேட்பாளர் திரவுபதி முர்மு நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

    ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர்கள் இருவரும் பல்வேறு கட்சித் தலைவர்களைச் சந்தித்து ஆதரவினை திரட்டி வருகின்றனர்.

    இந்நிலையில், பா.ஜ.க. வேட்பாளர் திரவுபதி முர்முவுக்கு ஆதரவு அளிப்பதாக பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் தெரிவித்துள்ளார்.

    பகுஜன் சமாஜ் கட்சியின் மூத்த தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான ராம்வீர் உபாத்யாய் அக்கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யபட்டுள்ளார்.
    லக்னோ:

    உத்தரபிரதேசம் மாநிலத்தின் சிகந்த்ரா ராவ் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும் பகுஜன் சமாஜ் கட்சியின் மூத்த தலைவருமான ராம்வீர் உபாத்யாய் மீது கட்சி தலைமையிடத்தில், கட்சி விதிகளை மீறி செயல்பட்டதாக கூறி குற்றம் சாட்டப்பட்டது.

    இந்த புகாரின் அடிப்படையில் ராம்வீர் இன்று கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார். இது குறித்து பகுஜன் சமாஜ் கட்சியின் பொது செயலாளர் மேவலால் கவுதம் கூறுகையில், ‘மாநில சட்ட மன்றத்தில் கட்சியின் தலைமை கொறடா பொறுப்பில் இருந்து ராம்வீர் சஸ்பெண்ட் செய்யப்படுகிறார்.

    ஆக்ரா, பாதேக்பூர் சிக்ரி, அலிகிராக் ஆகிய பகுதிகளில் தேர்தல் பிரசாரத்தின்போது கட்சியின் வேட்பாளர்களுக்கு எதிராக பகிரங்கமாக செயல்பட்டுள்ளார். இதனால் உடனடியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது’ என தெரிவித்துள்ளார்.   
    டெல்லியில் இன்று காங்கிரஸ் தலைவர்களுடன் மாயாவதி சந்திக்க எந்த திட்டமும் இல்லை என பகுஜன் சமாஜ் கட்சி தெரிவித்துள்ளது.
    லக்னோ:

    இந்தியாவின் 17-வது பாராளுமன்றத்துக்கு புதிய உறுப்பினர்களை தேர்வு செய்வதற்காக 7 கட்டங்களாக தேர்தல் நடந்து முடிந்துள்ளது. நேற்று நடைபெற்ற இறுதிக்கட்ட வாக்குப்பதிவுக்கு பின்னர் வெளியான கருத்துக் கணிப்பு முடிவுகள் பாஜகவுக்கு சாதகமாக இருந்தன. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்கும் என கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.

    வரும் 23ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில், பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி டெல்லியில் இன்று காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர்  ராகுல் காந்தி ஆகியோரை சந்தித்து பேச உள்ளதாக தகவல்கள் வெளியாகின.

    ஆனால், டெல்லியில் இன்று மாயாவதி எதிர்க்கட்சி தலைவர்களை சந்திக்க மாட்டார் என பகுஜன் சமாஜ் கட்சி விளக்கம் அளித்துள்ளது. அவருக்கு டெல்லியில் இன்று எந்த நிகழ்ச்சியோ, சந்திப்புகளோ இல்லை என்றும், லக்னோவில்தான் இருப்பார் என்றும் அக்கட்சியின் மூத்த தலைவர் மிஷ்ரா கூறியுள்ளார்.



    எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் பணியில் ஆர்வம் காட்டி வரும் ஆந்திர மாநில முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு, புதுடெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, கம்யூனிஸ்ட் கட்சிகளின் தலைவர்கள் சுதாகர் ரெட்டி, டி ராஜா, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் மற்றும் சரத் யாதவ் ஆகியோரை சந்தித்து பேசினார். நேற்று முன்தினம் லக்னோவில் மாயாவதியை சந்தித்து பேசியது குறிப்பிடத்தக்கது.

    உ.பி. மாநிலத்தின் கன்னோஜ் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் பேசிய பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி, நமோ நமோ கோஷத்துக்கு விடை கொடுக்கும் தேர்தல் இது என தெரிவித்துள்ளார். #LokSabhaElections2019 #Mayawati #Namonamo #AkileshYadav
    லக்னோ:

    பாராளுமன்ற தேர்தல் கடந்த 11ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதுவரை 3 கட்ட தேர்தல் முடிந்துள்ளது. உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் 7 கட்டங்களாக பாராளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது.

    இந்நிலையில், உ.பி.யின் கன்னோஜ் பகுதியில் போட்டியிடும் அகிலேஷ் யாதவின் மனைவி டிம்பிள் யாதவுக்கு ஆதரவு திரட்ட பகுஜன் சமாஜ் மற்றும் சமாஜ்வாதி கூட்டணி சார்பில் தேர்தல் பிரசாரம் நடைபெற்றது. இதில் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி மற்றும் சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், ராஷ்ட்ரீய லோக் தளம் கட்சி தலைவர் அஜித் சிங் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



    அப்போது மாயாவதி பேசுகையில், இந்த பாராளுமன்ற தேர்தலுடன் நமோ நமோ கோஷம் விடைபெற்று விடும். மண்டல் கமிஷன் அறிக்கையை காங்கிரஸ் அமல்படுத்தவில்லை என ஆவேசமாக குறிப்பிட்டார்.

    இதேபோல், சமாஜ்வாதி தலைவரும் முன்னாள் முதல் மந்திரியுமான அகிலேஷ் யாதவ் பேசுகையில், சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் கூட்டணி நாட்டுக்கு புதிய பிரதமரை தரும் என தெரிவித்தார். #LokSabhaElections2019 #Mayawati #Namonamo #AkileshYadav
    பா.ஜ.க.வுக்கு தவறுதலாக வாக்களித்ததால் ஏற்பட்ட விரக்தியில், பகுஜன் சமாஜ் கட்சி தொண்டர் தனது விரலை துண்டித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. #LokSabhaElections2019 #BSPSupporter

    புதுடெல்லி:

    உத்தரபிரதேசம் மாநிலம் ஷிகர்பூரை அடுத்த அப்துல்லாபூர் ஹூல சேன் கிராமத்தைச் சேர்ந்தவர் பவன்குமார் (25).

    இவர் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியின் ஆதரவாளர்.

    நேற்று 2-ம் கட்ட பாராளுமன்ற தேர்தலில் பவன்குமாரின் ஊர் அடங்கிய புலந்த்சாகர் தொகுதிக்கு ஓட்டுப்பதிவு நடந்தது. இதில் ஓட்டு போட பவன்குமார் வாக்குச்சாவடி மையத்துக்கு சென்றார்.

    அப்போது சமாஜ்வாடி- பகுஜன் சமாஜ் கூட்டணி கட்சி வேட்பாளர் யோகேஷ் வர்மாவின் சின்னத்தை அழுத்துவதற்கு பதிலாக பா.ஜனதாவின் தாமரை சின்னத்தை அழுத்தி விட்டார்.

    பா.ஜனதா வேட்பாளரும், தற்போதைய அத்தொகுதி எம்.பி.யுமான போலாசிங்குக்கு ஓட்டு போட்டு விட்டார். தான் தவறாக பா.ஜனதாவுக்கு ஓட்டு போட்டதால் பவன்குமார் அதிர்ச்சியும், வெறுப்பும் அடைந்தார்.

    அவரது ஆத்திரம் திடீரென்று தாமரை சின்னத்தை அழுத்திய தனது கை விரல் மீது திரும்பியது.

    இதனால் கைவிரலை துண்டிக்க முடிவு செய்தார். உடனே கத்தியால் கை விரலை வெட்டி தண்டித்து கொண்டார்.

    அதன்பின் பவன்குமார் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் அவர் கூறும் போது, “தான் தவறுதலாக பா.ஜனதாவுக்கு ஓட்டு போட்டு விட்டேன். எனது தவறுக்கு தண்டனையாக கை விரலை துண்டித்து கொண்டேன்” என்று கூறி உள்ளார். #LokSabhaElections2019 #BSPSupporter

    பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளில் வங்கியில் அதிக பணத்தை கையிருப்பு வைத்து இருப்பது மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியாகும். #Loksabhaelections2019 #ElectionCommission
    புதுடெல்லி:

    பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் ஒவ்வொன்றும் கடந்த நிதியாண்டில் எவ்வளவு செலவு செய்தன? வங்கியில் எவ்வளவு கையிருப்பு வைத்துள்ளன என்ற தகவலை தலைமை தேர்தல் ஆணையத்திடம் தெரிவித்துள்ளன.

    வரவு-செலவு கணக்கு தகவலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

    அதன்படி வங்கியில் அதிக பணத்தை கையிருப்பு வைத்து இருப்பது மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியாகும். கடந்த ஆண்டு இந்த கட்சி 665 கோடி ரூபாயை கையிருப்பு வைத்து இருந்தது. இந்த ஆண்டு அந்த தொகை ரூ.670 கோடியாக உயர்ந்துள்ளது.

    அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி கட்சி 2-வது இடத்தில் உள்ளது. அந்த கட்சிக்கு வங்கிகளில் ரூ.471 கோடி கையிருப்பு உள்ளது. வங்கியில் அதிக பணத்தை கையிருப்பு வைத்திருக்கும் கட்சிகளில் முதல் 2 கட்சிகளும் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.


    காங்கிரஸ் கட்சி ரூ.196 கோடி கையிருப்புடன் 3-வது இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு காங்கிரஸ் கட்சி ரூ.136 கோடியே வைத்திருந்தது. ஒரே ஆண்டில் 60 கோடி ரூபாயை வங்கியில் காங்கிரஸ் கட்சி சேர்த்துள்ளது.

    சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி ரூ.107 கோடியுடன் 4-வது இடத்தில் இருக்கிறது. பாரதிய ஜனதா கட்சி ரூ.82 கோடி கையிருப்புடன் 5-வது இடத்தில் உள்ளது.

    மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, ஆம்ஆத்மி ஆகிய இரு கட்சிகளும் தலா ரூ.3 கோடியை வங்கிகளில் கையிருப்பு வைத்துள்ளன. #Loksabhaelections2019 #ElectionCommission
    பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவரான மாயாவதி ரபேல் ஊழலில் ரகசிய ஆவணங்களை மறைக்கும் காவலாளி என மோடியை சாடியுள்ளார்.#Mayawati #BSP #PMModi #BJP
    லக்னோ:

    உத்தரபிரதேசத்தில் பாஜகவை வீழ்த்த மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் மற்றும் அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாடி ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து பாராளுமன்ற தேர்தலில் களமிறங்கியுள்ளன.

    இந்நிலையில் பிரதமர் மோடி, பாராளுமன்ற தேர்தலையொட்டி இணையதள பயன்பாட்டளர்களை கவரும் முனைப்புடன் கடந்த வாரம் 'காவலாளி (சவுகிதார்) நரேந்திர மோடி ' என தனது டுவிட்டர் பக்கத்தில் பெயர் மாற்றம் செய்தார்.

    இதேபோல் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா மற்றும் மத்திய மந்திரிகள், பாஜகவை சேர்ந்த முதல் மந்திரிகள், மாநில மந்திரிகள் மற்றும் பல்லாயிரக்கணக்கான பாஜக பிரமுகர்களும் மோடியைப் பின்பற்றி தங்களது டுவிட்டர் கணக்குகளில் தங்களது பெயர்களுக்கு முன்னால் ‘காவலாளி’ (சவுகிதார்) என்ற அடைமொழியை இணைத்துள்ளனர்.



    இதையடுத்து பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவரான மாயாவதி, இதனை சுட்டிக்காட்டி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

    பிரதமர் மோடி மற்றும் அவரது மந்திரிகள் என அனைவரும் காவலாளி (சவுகிதார்) என தங்கள் பெயரினை மாற்றியுள்ளனர். இந்த காவலாளிகள் ரபேல் ஊழல் விவகாரத்தில் முக்கிய ஆவணங்கள் திருடப்பட்டதை மறந்துள்ளனர். இந்த ஆவணங்கள் தேர்தல் மற்றும் தங்கள் கட்சியின் பெயர் கெட்டு விடக்கூடாது என்பதற்காக மறைக்கப்பட்டுள்ளன.

    இது போன்ற காவலாளி நம் நாட்டிற்கு நிச்சயம் தேவையா? பாஜக தலைவர்கள் விரும்பும் எந்த பாணியில் வேண்டுமானலும் இருக்கலாம். ஆனால் பெயரை மாற்றியது போல், சட்டம் ஒழுங்கினை காக்கும் காவலாளியாக இருக்க வேண்டும். மக்கள் இதையே விரும்பி ஏற்பார்கள்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #Mayawati #BSP #PMModi #BJP
    ×