என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    முதலாம் ஆண்டு நினைவுநாள் - ஆம்ஸ்ட்ராங் நினைவிடத்தில் தலைவர்கள் மரியாதை
    X

    முதலாம் ஆண்டு நினைவுநாள் - ஆம்ஸ்ட்ராங் நினைவிடத்தில் தலைவர்கள் மரியாதை

    • பொத்தூர் கிராமத்தில் உள்ள வள்ளலார் கோவிலில் இருந்து நினைவிடம் வரை ஊர்வலம் நடந்தது.
    • ஆம்ஸ்ட்ராங் நினைவிடத்தில் கட்சி தலைவர்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள்.

    சென்னை:

    பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில செயலாளராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஆண்டு கொலை செய்யப்பட்டார். அவருடைய முதலாம் ஆண்டு நினைவுநாள் இன்று அனுசரிக்கப்பட்டது.

    இதையொட்டி செங்குன்றம் அருகே உள்ள பொத்தூரில் உள்ள அவரது நினைவிடத்தில் அரசியல் கட்சி தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

    முதலாம் ஆண்டு நினைவஞ்சலி நினைவேந்தல் சங்கமமாக நடந்தது. தென்னிந்திய புத்தவிகார் தலைவரும் ஆம்ஸ்ட்ராங் மனைவியுமான பொற்கொடி தலைமையில் அமைதிப் பேரணி காலையில் நடந்தது. பொத்தூர் கிராமத்தில் உள்ள வள்ளலார் கோவிலில் இருந்து நினைவிடம் வரை ஊர்வலம் நடந்தது.

    இதில் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியின் தாயார் கமலா கவாய் மற்றும் புத்த பிட்சுகள் கலந்து கொண்டனர்.

    அதனை தொடர்ந்து ஆம்ஸ்ட்ராங் சிலை திறப்பு விழா நடந்தது. அதனை தொடர்ந்து நினைவேந்தல் மலர் வெளியிடப்பட்டது.

    தொடர்ந்து ஆம்ஸ்ட்ராங் நினைவிடத்தில் கட்சி தலைவர்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள். பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி., பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ், புரட்சி பாரத கட்சி தலைவர் ஜெகன் மூர்த்தி எம்.எல்.ஏ. மற்றும் முக்கிய பிரமுகர்கள் மரியாதை செலுத்தினர்.

    பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்த மைக்கேல் தாஸ், பகுஜன் பிரேம், வெங்கட், பாக்சர் திரு உள்ளிட்ட பலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

    நினைவேந்தல் நிகழ்ச்சி யில் தென்னிந்திய பவுத்த சங்கங்கள், அம்பேத்கர் அமைப்புகள், சமூக அமைப் புகள், எழுத்தாளர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×